வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 30 நவம்பர், 2011

பிரபஞ்சம் தோன்றியது எப்படி?

பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது வானம் அல்லது ஆகாயம் என்று ஒரு  பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் அதற்கு அடுத்து பிரபஞ்சத்தில் என்ன நிகழ்ந்தது என்று பார்ப்போம்.

நான் பல மத சமபந்தமான நூல்களை மேய்ந்த பொழுது அனைத்து நூல்களும் பிரபஞ்சத்தில் இரண்டாவது தோன்றியது நிலம் அல்லது பூமி என்றே கூறுகின்றது.  ஆனால் அறிவியலின் படியும் ஆன்மீக உள்ளுணர்வின் படியும் இதில் எனக்கு உடன்பாடில்லை. 

பிரபஞ்சத்தில் இரண்டாவது காற்றுதான் உருவாகியிருக்க வேண்டும்.(அந்த காற்று ஹைட்ரஜனாக இருக்கலாம்)  அந்த காற்றானது காலப்போக்கில் வெப்பமடைந்து சில இடங்களில்  நெருப்பு பிழம்பாக மாறியது. காலப்போக்கில் இந்த நெருப்பு பிழம்பே வெடித்து சிதறி இருக்கலாம். பிறகு சில காலம் கழித்து நீர்/மழை உண்டாகிறது(H2O- ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்தது தான் நீர்). 

இந்த மழையானது நெருப்பு பிழம்பின் மீது படும்போழுது அது குளிர்ந்து நிலம் உருவானது. (அதாவது  பூமி போன்றவை). இப்படி உருவான பிரபஞ்சமானது விரிந்து கொண்டே செல்கிறது. பிறகு சில காலத்திற்கு பிறகு அது சுருங்குகிறது.  அனைத்தும் அணுவை விட மிகச்சிறிய புள்ளியாக சுருங்கிறது. அழுத்தம் காரணமாக அது வெடித்து சிதறுகிறது. அந்த  வெடிப்புதான் பெரு  வெடிப்பு எனும் "big bang".

மீண்டும்  பிரபஞ்சம்  விரிவடைகிறது  பல  காலத்திற்கு  பிறகு  மீண்டும்  சுருங்குகிறது  மீண்டும்  பெரு  வெடிப்பு . இவ்வாறு  இது  ஒரு  தொடர்  நிகழ்வாகவே  நடந்து  வருகிறது . என்பது ஒருவகையான பிரபஞ்ச தோற்றத்தை பற்றிய கருத்து.

இதைத்தான் கீதையில் கண்ணபிரான் நான் பிரபஞ்சத்தை  உருவாக்கி  அழித்து மீண்டும் உருவாக்குகிறேன் என்று சொல்வதாக வைத்துள்ளனர்.  


இப்பொழுது இந்த கருத்தின் படி பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது ஆகாயம், இரண்டாவது காற்று, மூன்றாவது நெருப்பு, நான்காவது நீர், ஐந்தாவது நிலம்.  இதைத்தான் ஐம்புதங்கள் என்பர்.

இவை ஐந்தும் இல்லையேல் யாரும் இல்லை. இவை ஐந்துமே அனைத்திற்கும் முதலானது. அனைத்திற்கும் ஆதாரம் இதுவே. ஆதலால் தான் என்னவோ இதை தெய்வமாக வழி பட ஆரம்பித்தனர் பண்டைய மக்கள். 

இந்த பிரபஞ்சத்திற்கு, இயற்கை சக்திக்கு சிவம் என்று பெயரிட்டனர். அதுதான் இன்றைய முக்கியமான ஐந்து சிவன் ஆலயங்கள். 
அவற்றை பஞ்சபூத ஆலயங்கள் என்பர்

சிதம்பரம் எனும் திருச்சிற்றம்பலம் - ஆகாயம் 
 காலஹஸ்தி எனும் திருக்காளத்தி - காற்று
திருவண்ணாமலை- நெருப்பு 
திருவானைக்காவல் -  நீர் 
காஞ்சிபுர ம் எனும் திருக்காஞ்சிபுரம் - நிலம் 

இங்கே இந்த முதலில் உருவான எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற  ஐந்து இயற்க்கை சக்தியை  தான் மக்கள் சிவனாக வழிபடுகிறார்கள்.

எல்லாம் சிவமயம் என்பது இவற்றைத்தானோ? 

சனி, 5 நவம்பர், 2011

தமிழ் தமிழன் என்றால் ஏன் பலருக்கு எரிகிறது?


மிகவும் கசப்பான உண்மையை நான் இங்கே  சொல்லப்போகிறேன். இது பலருக்கும் தெரிந்திருக்கலாம். 

தமிழ் தமிழன் என்று சொன்னாலே தமிழ் நாட்டில் உள்ள சிலருக்கு அல்லது பலருக்கு ஏன் எரிகிறது என்ற சந்தேகம் நீண்ட நாட்களாகவே உள்ளது. இதற்கான காரணமாக நான் கருதுவதை இங்கே  எழுதுகிறேன். இது எந்த அளவுக்கு சரி அல்லது தவறு என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

௧. தமிழ்நாட்டில் வசிக்கும்  சிலபலர்   தன்னை தமிழன் என்றே  நினைப்பது இல்லை. 
(தமிழன்  என்றால்   என்ன அதை எப்படி வரையறை செய்வது? இனிமேல் தான் வரையறுக்கப்படவேண்டும் என நினைக்கின்றேன்.) 
 தமிழ் பேசும் அனைவரும் தமிழர்களா?  இதற்கு பதில் இல்லை என்று தமிழ் பேசும் பலரே  கூறுவார்கள். காரணம் அவர்களின் தாய் மொழி வேறு ஒன்றாக இருக்கும். அப்படி தாய் மொழி தமிழாகவே சிலருக்கு இருந்தாலும் அவர்கள் மூதாதையர்களின் மொழி வேறு ஒன்றாக இருக்கும். 

தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கு வழி வந்தவர்களும், மலையாள வழி வந்தவர்களும், கன்னட வழி வந்தவர்களும் தங்களை தமிழன் என்று சொல்லிக் கொள்வதில்லை.மேலும் தமிழ் மொழியை பற்றி பெருமைகள் பேசினால் இவர்களுக்கு எரிகிறது.தங்கள் மொழியை பற்றி பேசவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மைதான் இதற்கு காரணம். பாதுகாப்பின்மையாக கூட கருதலாம்.  இதற்கு விதிவிலக்காக  சிலபலர் உண்டு. (இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தமிழன் தமிழை  உயர்த்தி பேசுகிறானே தவிர மற்ற மொழிகளை தாழ்த்தி பேசவில்லை.) 

௨. கிருத்துவர்களும், இசுலாமியர்களும் தங்களை மதத்தின் பிரதிநிதியாக பார்க்கிறார்களே தவிர மொழியின் பிரதிநிதிகளாக பார்ப்பதில்லை. மதத்திற்கு  தரும் முக்கியத்துவத்தை தமிழுக்கு தருவதில்லை. இதற்கும் விதி விளக்குகள் உண்டு. (மதத்தை விட மொழிதான் பழமையானதும் போற்றத்தக்கதும் எனபதை இவர்கள் உணர வேண்டும். எப்பொழுது நினைத்தாலும் மதம் மாறலாம். ஆனால் மொழி மாற முடியாது.)

௩.பெரியார் தீண்டாமையை ஒழிக்கும் தன் பாதையில்  சில பல பிராமணர்களை நீங்கள் ஆரியர்கள் சமஸ்கிருதம்  தான் உங்கள் மொழி என்று  தமிழுக்கு எதிரியாக்கிவிட்டார்.  இதற்கு விதிவிலக்காக  சிலபலர் உண்டு.

௪ தமிழ் தமிழன் என்று தமிழர்களை தன் சுய நலத்திற்காகவும் குடும்ப நலத்திற்காகவும் சிலர் பயன் படுதிக்கொண்டதால் இன்று உண்மையாக தமிழ் தமிழன் என்பவனையும் சில பல  உண்மையான தமிழர்கள் சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.

௫. கடந்த பல வருடங்களாக பலரும்  ஆங்கில வழியில் கல்வி கற்று வருவதால் அவர்களுக்கு தமிழ் மொழியின் மீது பற்றில்லாமல் போய்விட்டது.  சிலர் தமிழில் அப்படி என்ன இருக்கிறது, நாம் ஆங்கிலத்தில் படித்து இன்று நன்றாகத்தானே இருக்கிறோம், பின்பு ஏன் இவர்கள் இன்னும் தமிழ் தமிழன் என்று கூப்பாடு போடுகிறார்கள் என்று நினைக்கிறார்கள்.  இதற்கு விதிவிலக்காக  சிலபலர் உண்டு.

இந்த சில காரனங்களால் தான் இன்று தமிழ் தமிழன் என்றால் பலருக்கும் எரிகிறது. 

நான் அனைவரும் ஜாதி மதம் போல் மொழி என்ற வட்டத்தில் அனைவரும் தங்களை அடைத்து கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. மாறாக மொழிக்கு முக்கியத்துவம்  கொடுங்கள் என்று தான் கூறுகிறேன். (ஜாதி மதம் என்ற வட்டமே தேவையற்றது என்றே நான் நினைக்கின்றேன்) 

ஆனால் மொழியை அவ்வாறு ஒதுக்க முடியாது ஒதுக்கவும்  கூடாது.
மனிதன் கண்டுபிடிப்பில் நான் மிகவும் உயர்ந்ததாகவும் சிறந்ததாகவும் கருதுவது மொழியைத்தான். மொழியின் பெயரால் சண்டை இடுங்கள் என்று நான் கூறவில்லை. அனைத்து மொழியையும் அன்போடு பாருங்கள் என்றுதான் கூறுகிறேன். அனைத்து மொழிகளையும் ஏற்றத்தாழ்வின்றி பார்க்க வேண்டும் 

தாஜ்மஹாலை முகமதியர்களின் சின்னமாக பார்க்காமல் எப்படி காதலின் சின்னமாக கொண்டாடுகிறோமோ அவ்வாறே தமிழின்  தொன்மையை நாம் பார்க்க வேண்டும். (இதற்கு சமஸ்கிருதம் விதிவிலக்கல்ல).

அதே நேரத்தில் அவர் அவர்களது தாய்மொழியை காப்பது தாய் தந்தையை காப்பது போல் அவர் அவர்களின் கடமை என்று உணர்ந்தால். மொழியின் பெயரால்  சண்டையும் வராது, அச்சமும் வராது, எரிச்சலும் வராது. 

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

பிரபஞ்சத்தில் முதலில் உருவானது எது?


பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது பற்றி பல கருத்துக்கள் நிலவுகின்றன. 
பெருவெடிப்பின் அதாவது "big bang"  மூலம் தான் பிரபஞ்சம் உருவானது என்று பெரும்பாலான அறிவியலாளர்கள் சொல்கின்றனர். இதில் பாதி உண்மையும் பாதி பொய்யும் உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

இன்றைய பிரபஞ்சம் பெருவெடிப்பின் மூலமாக உருவாகி இருந்தாலும் அதுவே முழு முதல் தொடக்கம் அல்ல. அது ஒரு தொடர்ச்சியான நிகழ்வே.  அதாவது பெருவெடிப்புக்கு முன்பே பிரபஞ்சம் தோன்றியிருக்க வேண்டும். 

அப்படி பெருவெடிப்புக்கு முன்பே பிரபஞ்சம் தோன்றி இருந்தால் முதலில் என்ன தோன்றியிருக்க வேண்டும் என்பதுதான் அடுத்த கேள்வி.

சென்ற பதிவில் பிரபஞ்சம் தோன்றும்பொழுது எந்த வண்ணத்தில் இருந்திருக்கும் என்று கேள்வி எழுப்பினேன். அதற்க்கான பதில் "கருப்புக்கும் நீலத்திற்கும் இடைப்பட்ட ஒரு வண்ணம்" அதை "நீலம்" என்றும் சொல்லலாம். . இப்பொழுது உங்களுக்கு தெரிய வந்திருக்கும் பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது எது என்று.
ஆம் அதுதான் வானம். 

இதை நீங்கள் உங்களின் அகத்தாய்வின்  மூலம் "காண" முடியும் ஆமாம் "காண" முடியும் என்றே நான் நினைக்கின்றேன்.  இது என்னுடைய கற்பனையா அல்லது உண்மையா என்பதை நீங்கள் அகத்தாய்வின் மூலம் மட்டுமே உணர முடியும்.

அகத்தாய்வில் இருப்பவர்களில் பலர்  முதன் முதலில் கிளிபச்சை நிறத்தை  காண்பதற்கான  வாய்ப்புகளே அதிகம். 
ஆதலால் சிலருக்கு கிளிப்பச்சை நிறம் தான் பிரபஞ்சத்தில் முதலில் 
 தோன்றி இருக்குமோ என்ற எண்ணம் வரலாம். அது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை. வள்ளலாரின் கூற்றுப்படி இந்த கிளிப்பச்சை நிறம் தான் ஆன்மாவை மறைத்திருக்கும் முதல் திரை.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

பிரபஞ்சம் உருவாவதற்கு முன் எப்படி இருந்தது?

உலகத்திலேயே விடைகான முடியாத மிகப்பெரிய கேள்விகளுள் ஒன்றாக  கருதப்படுவது பிரபஞ்சம் உருவாவதற்கு முன் எப்படி இருந்தது என்பது.  ஒரு பக்கம் பார்த்தல் இது ஒரு மிக சுலபமான கேள்வியாக தெரிகிறது.

பிரபஞ்சம்  உருவாவதற்கு முன் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு செல்வது என்பது மிகவும்  சுலபமான ஒன்று.ஒவ்வொரு உயிரினமும் அந்த நிலைக்கு  தினமும் செல்கின்றது என்று சொன்னால்  நம்புவீர்களா?
ஆனால் அதுதான் உண்மையாக இருக்குமோ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உருவாகின்றது.

அது என்ன நிலை?
நீங்கள் தினமும் தூங்குகின்றீர்கள் அல்லவா அந்த நிலை தான் பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு இருந்தது. (அல்லது இருந்திருக்க வேண்டும்).
அதவாது சிந்தனையற்ற ஒரு நிலை...வெளிச்சமும் அல்லாத இருளும் இல்லாத ஒரு நிலை.
அந்த நிலை எந்த வண்ணத்தில் இருந்தது என்று அறிய வேண்டுமா? இருளான ஒரு அறையில் உங்கள் கண்களை மூடி பாருங்கள் அந்த நிறத்தில் தான் உலகம் உருவாவதற்கு முன்பு இருந்தது.

பிரபஞ்சம்  உருவாவதற்கு முன் எப்படி இருந்தது என்று பார்த்தாயிற்று அடுத்த பதிவில் பிரபஞ்சம் உருவாகும்  பொழுது  எந்த வண்ணத்தில் இருந்தது என்று பார்ப்போம்.
இதனுடன்  தொடர்புடைய  சில  பதிவுகள்  தங்கள்  பார்வைக்கு 

பிரபஞ்சம் உருவானது எப்படி? கடவுளாளா?


பிரபஞ்சம் உருவானது எப்படி? கடவுளாளா? பகுதி 2


செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

லோக்பால் தேவையா? அன்ன ஹசாரே செய்வது சரியா தவறா?

என் சந்தேங்கத்திற்கு விடை தெரிந்தால் தீர்த்து வைப்பீர்களா?

அன்ன ஹசாரே ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டத்தை முன் வைத்துள்ளார். இதற்க்கு மக்களின் ஆதரவு அமோகம். இல்லாமல்  போகுமா, ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று இன்று. நேற்று மாடுத்தீவன ஊழல், பீரங்கி ஊழல். அட ஆயிரக்கணக்கான  ஊழல்கள்.  இது மட்டுமா அரசாங்க அதிகாரிகள் தங்களது வேலையை   செய்யவே  லஞ்சம் கேட்க்கிறார்கள்.

மக்களுக்காக மக்களின் நலனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் சரி அரசாங்க அதிகாரிகளும் சரி ஊழல் செய்வதிலும் லஞ்சம் வாங்குவதிலேயும்  தான் குறியாக உள்ளனர். இவர்களால் தினம் தினம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்...பாதிக்கபடுகின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவும் இவர்கள் மேல் கோபத்தில் உள்ளது என்பதே உண்மை. ஆதலால் தான் மக்களின் ஒரு பகுதி   இன்று போராட்டத்தில் குதித்துள்ளது.

அன்ன ஹசாரே மற்றும் இந்த லோக்பால் மசோதா  மூலம் ஊழலை முற்றிலும்  ஒழித்து விட முடியும்  என ஒரு பகுதி மக்கள் நம்புகின்றனர்.  ஆனால் இது சாத்தியமா என்றால் எனக்கு சந்தேகமாக உள்ளது.
லோக்பால் மசோதாவில் பல நல்ல அம்சங்கள் உள்ளது. எனக்கு அதில் ரொம்ப பிடித்தது ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பது மட்டுமல்லாது  அவர்களது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட  வேண்டும் என்பதுதான்.

எத்தனையோ சிறப்பம்சங்கள் இருப்பினும் லோக்பலின் ஒரு அம்சத்தில் எனக்கு மிகப்பெரிய குறை இருப்பதாக உணர்கிறேன். நான் எந்த அம்சத்தில் குறை இருப்பதாக கருதுகிறேனோ அதுதான் லோக்பாலின் ஆணிவேரே.
அந்த ஒரு குறையினால் லோக்பால் தேவையா? என்ற சந்தேகமே என்னுள் எழுந்துள்ளது. என் சந்தேகத்தை நீங்கள் தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். இந்த சந்தேகங்கள்  சிறுபிள்ளைத்தனமானது  என்று கூட உங்களுக்கு தோன்றலாம். உங்கள் விடைய சரியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கருத்தினை ஏற்று நானும் இந்த போராட்டத்திற்கு என்னால் முடிந்த ஆதரவை தருவேன். (எப்பொழுதும் ஊழலுக்கு எதிராக மானசீக குரல் கொடுப்பவன் தான் நான்)

சரி..எந்த அம்சத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது என்றால் அது  லோக்பாலின் குழுவைபற்றியது தான் அந்த சந்தேகம்.

ஊழல் குற்றச்சாட்டை   விசாரிக்கப்போவது   யார் என்றால் ஒரு குழு. இந்த குழுவில் இருக்க போகிறவர்களும் மனிதர்கள் தான் மகான்கள் அல்ல.
உங்களுக்கே தெரியும் நாட்டில் எத்தனை உத்தமர்கள் உள்ளனர் என்று. இந்தியா முழுவுதும் லோக்பால் மசோதாவை கொண்டுவர எத்தனை உறுப்பினர்கள் வேண்டும் சற்று சிந்தித்து பாருங்கள். எனக்கு தெரிந்து ஒரு மாநிலத்திற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மிக மிக குறைந்த பட்சம் முன்னூற்று  ஐம்பதிற்கு மேற்ப்பட்ட உத்தம உறுப்பினர்கள் தேவை.

இத்தனை உத்தமர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் உத்தமர்கள் மட்டும்  தான் அந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று அறுதியிட்டு கூற முடியுமா?
இந்த உறுப்பினர்களின் சேர்க்கையில் அரசியல்வாதிகளின் மறைமுக தலையீடு இல்லாமல் இருக்கும் என்று கூற முடியுமா?
இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு  சம்பளம் உண்டா எவ்வளவு? இதை யார் கொடுப்பார்கள்? 
இலவசமாக எத்தனை நாள் அவர்கள் கடமையாற்ற  முடியும்?
இந்த உறுப்பினர்களும் ஊழலில் ஈடுபட மாட்டார்கள் என்று எதை வைத்து நம்புவது?

ஏற்க்கனவே சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் லஞ்சம் ஊழல் செய்கிறார்கள். இவர்களை கண்காணிக்க தண்டனை தர லோக்பால் கொண்டு வந்தால் நாளை லோக்பால் உறுப்பினர்களை யார் கண்காணிப்பது தண்டனை தரப்போவது யார்?

இருக்கின்ற சட்டங்களையே இன்னும் கடுமை படுத்த முடியாதா? ஒளிவு மறைவற்ற விசரானையை கொண்டுவர முடியாதா? புகார் தருபவர்களுக்கு  தைரியத்தையும்  பாதுகாப்பையும் அளிக்கும் சட்டத்தை கொண்டுவர முடியாதா?

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல பண்பை ஊட்டி வளர்க்க வேண்டும். எப்படியாவது சம்பாதித்தால்  போதும் என்ற மனநிலைதான் இன்று பெரும்பாலான மக்களிடம் உள்ளது. நல்லவனாக இருக்க வேண்டும், உண்மையை பேச வேண்டும். என்று என்னும் மக்கள் அரிதிலும் அரிது.

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையால் தான் அழிவு என்று எத்தனை தடவை சொன்னாலும் கதை என்று சொல்வதிலேய குறியாய் இருந்து கொண்டு கருத்தினை கோட்டை விட்டு விட்டோம். பகுத்தறிவு பேசியவர்கள் பணத்தை சுருட்டியதுதான்  மிச்சம். காவி கட்டியவனும் சளைத்தவன் இல்லை என்று இன்று சுருட்டிக்கொள்கிறான்.
ஒவ்வொரு மனிதனும் நேர்மையாக வாழவேண்டும். உண்மையை பேசவேண்டும்.
புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்
என்றார் வள்ளுவர்.
அதாவது உண்மை பேசினால் தான் உள்ளம் தூயமையாகுமாம். உண்மையும் உயிர்களிடத்தில் அன்பும் என்று வருகின்றதோ அன்றுதான் அனைத்திற்கும் முடிவு பிறக்கும். அதுவரை எந்த பாலும் ஒன்றும் செய்ய முடியாது.

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

சோதனைச்சாலையில் ஆன்மீக அனுபவங்களை பெற முடியுமா?

தியானத்தின் மூலம் மட்டும் தான் ஆன்மீக அனுபவத்தை பெற முடியுமா? வேறு வழிகள் கிடையாதா என்றால்  வேறு வழியும் உண்டு என்பதே பதில்.

உண்மையை சொல்லவேண்டுமானால் தியானத்தால் எதை எதையெல்லாம் சாதிக்க முடியுமோ அதை எல்லாம் வேறு வழிகளிலும் அடையலாம்.
என்னுடைய

மதுவிற்கும் தியானத்திற்கும் சம்பந்தம் உண்டா?


என்ற பதிவில் மதுவின் மூலம் அடையும் சில அனுபவங்களை தியானத்தின் மூலம் பெறலாம் என்று கூறியிருந்தேன்.அதுபோலவே பல ஆன்மீக அனுபவங்களையும்  தியானம் மூலம் மட்டும் அல்லாமல் சோதனை சாலையிலும்  பெறலாம் . ஆனால் அதற்கான இன்றைய அறிவியலின் வளச்சி போதாது.

மது அருந்தினால் எப்படி தீமை உண்டாகிறதோ அவ்வாறே சோதனை சாலை மூலம் அடையும் ஆன்மீக அனுபவங்களும் முதலில் தீமையையே உண்டாக்கும். அது முழுமையான அனுபவமாகவும் இருக்க முடியாது.  அறிவியலால் முழுமையான ஆன்மீகத்தை தர முடியாதா என்றால். தரமுடியலாம் ஆனால் அதற்க்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் நூற்றாண்டுகள் ஆகும் என்பது தெரியவில்லை.

எப்பொழுது அறிவியல் அகத்தவத்தினால் அடையமுடியும் அனுபவங்களை முழுமையாக சோதனைச்சாலையில் அடையவைக்கின்றதோ அதுவே அறிவியலின் உச்சம்.

அந்த உச்ச கட்ட அறிவியலால் ஞானத்தையும், பிறவாமையையும், மரணமில்லா பேரின்ப பெருவாழ்வையும் தர முடியும் என்று நினைக்கின்றேன். உண்மையில் அறிவியல் இதை நோக்கியே பயணிப்பதாக கருதுகின்றேன்.


நேற்று  வெறும்   அகம்  (ஆன்மீகம்). நாளை  அகமும்  புறமும் (ஆன்மீகமும் அறிவியலும்)  இணையலாம் ....இணையும்.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

இந்து, இஸ்லாம், கிருத்துவம் இவற்றிற்குள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?


இன்றைய நிலையில் மிகப்பெரிய மதங்களாக கருத்தப்படுவது இந்து, இஸ்லாம், கிருத்துவம். இவற்றிற்குள் பல ஒற்றுமைகள் உள்ளது. இங்கே நான் சொல்லப்போவது ஒரே ஒரு ஒற்றுமை.

அந்த ஒற்றுமை சொல்வது மிகப்பெரிய மிக சூட்சுமமான உண்மை. இது சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

அது என்ன ஒற்றுமை?
அதுதான் அ உ ம். இது அனைத்து மதங்களிலும் முக்கிய இடம் பெறுகின்றது. இது இல்லையேல் உலகமும் இல்லை உயிரும் இல்லை
என்பது சிலரின் கருத்து. இது இந்து மதத்தில் ஓம் என்று அழைக்கப்படுகின்றது.
இது இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தில் ஆமின் என்றழைக்கபடுகின்றது.

இந்த மதத்தில் ஓம் என்பது எதற்கும் முதிலில் உபயோகப்படுத்தப் படுகின்றது. இதேபோல் கிருத்துவம் மற்றும் இஸ்லாமில் ஆமின் என்பது எதற்கும் முடிவில் உபயோகப்படுத்தபடுகின்றது.

இந்த ஓம் என்பதன் முக்கியத்துவம் இந்து மதத்தில்  உள்ள பலருக்கு தெரியும் என்று நினைக்கிறேன். ஆனால் ஆமின் என்பது எப்படி ஏன் வந்தது என்பது இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தினருக்கு தெரியமா எனபது சந்தேகமே.

கிருத்துவம் மற்றும் இஸ்லாமில் உள்ள மிகப்பெரிய குறை என்னவெனில் அவர்கள் பைபிள் மற்றும் குரானை  தாண்டி சிந்திப்பதே இல்லை. அப்படி சிந்தித்தாலும் அதை தன் மதத்திற்கு மட்டும் எப்படி சாதகமாக்குவதே என்று சிந்திக்கின்றனர். இதை எப்படி மனித சமுதயாத்திற்கு சாதகமாக்குவது என்று சிந்திப்பதே இல்லை.


அ உ ம் என்பது மிகப்பெரிய ரகசியம் பொருந்திய உண்மையான  ஒற்றுமை. இதை ஏன் அனைத்து மதங்களும் பயன் படுத்த வேண்டும்?
அனைத்தின் மூலம் இதுதான் எனபதை அவர்களின் முன்னோர்கள் உணர்ந்திருந்தனர் என்பதையே காட்டுகின்றது.

மூலமே ஒன்றாக இருக்கும் பொழுது
நான் வேறு நீ வேறு என்பது எப்படி சாத்தியம்?
என் கடவுள் வேறு உன் கடவுள் வேறு என்பது மூடத்தனம் அல்லவா?
அனைத்து மக்களும் ஒருவனின் படைப்பே எனும் பொழுது....
என் சமூகம் உனக்கு முன்பாக  செல்லும் எனபது மூடத்தனத்தின் உச்சம் அல்லவா?

சிந்தியுங்கள் மக்களே...சிந்தியுங்கள்.

இது சம்பந்தமான இரு  பதிவுகள் உங்கள் பார்வைக்கு 

எல்லா மொழியின் முதல் எழுத்தும் அ என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்து, இஸ்லாம் இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?

 


திங்கள், 1 ஆகஸ்ட், 2011

இந்து, இஸ்லாம் இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?

இஸ்லாமுக்கும் இந்து மதம் என்று அழைக்கபடுகின்ற மதத்திற்கும் இப்படி ஒரு  மிகப்பெரிய  ஒற்றுமை இருக்கும் என்று யாரும் கனவிலும் நினைத்து பார்த்திருக்க முடியாது என்று நினைக்கின்றேன்.

இது  எத்தனை பேருக்கு தெரியும் என்பதும்  எனக்கு  தெரியாது. இந்த ஒற்றுமை எதை காட்டுகிறது என்றால்,உலகில் தற்போதுள்ள  அனைத்து மதங்களுக்கும் மூலம் பண்டைய இந்தியாவாகத் தான் இருக்கும் என்ற என் என்னத்தை உறுதி செய்வது போலவே உள்ளது.  இந்திய தத்துவங்களின் தாக்கத்திலிருந்து எந்த ஒரு மதமும் தப்பியதாக எனக்கு  தெரியவில்லை.

சரி இசுலாமுக்கும் இந்திய மதத்திற்கும் அப்படி என்ன ஒற்றுமை இருக்கின்றது?

என்னைப்பொருத்த வரை இசுலாமின் ஆணி வேறே இந்து மதம் தான்.
இசுலாமியர்கள் ஐந்து வேலை தொழுகை செய்வார்கள் என்பது பலருக்கும் தெரியும் என நினைக்கின்றேன். இந்த ஐந்து வேலை தொழுகை எனபது இந்து மத கோயில்களில் செய்யப்படும் ஆறு கால பூஜையை ஒட்டியே அமைந்துள்ளது.

அதாவது இந்து கோயில்களில் ஒரு நாளைக்கு ஆறு வேளை பூஜை செய்வார்கள். இப்படி செய்ய காரணம்  ஆறுவேளையும்(அல்லது நாள் முழுவதும் ) இறைவனை நினைக்க வேண்டும் அவன் மேல் பக்தி செலுத்த வேண்டும் என்பதற்காக இருக்கலாம். இதைப்போலத்தான் இசுலாமியர்களும் ஐந்து வேளை தொழுகை செய்கின்றனர்.

இந்த ஐந்து வேளை தொழுகைக்கும் ஆணி வேர் இந்திய கோயில்களில் செய்யப்படும் ஆறுகால பூ செய் ,(பூசை,பூஜை) ஆகத்தான் இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.  இது ஏதேச்சையாக அமைந்ததா அல்லது இந்து மதத்தின் தாக்கம் தான் இதுவா என்பதெல்லாம் எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே வெளிச்சம்.

நீங்கள் இப்பொழுது கேட்கலாம் ஏன் இசுலாமியர்கள்  ஐந்து  வேளை மட்டும் தொழுகை செய்கிறார்கள் ஏன் அவர்கள் ஆறாவது வேளை தொழுகை செய்வதில்லை என்று.

ஆறு வேளை தொழுகை செய்வது முக்கியம் என்று நபிக்கும் நன்றாக தெரிந்தே இருக்கின்றது. நபி அவர்களும் அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டும் தினமும் ஆறு வேளை தொழுகை செய்வார்கள். இருப்பினும் அவர் ஏன் அதை அனைத்து இசுலாமிய  மக்களுக்கும் பொதுவாக வைக்க வில்லை  எனபது தெரியவில்லை.

இந்து மதத்திலும் ஆறு கால பூ செய், இசுலாமியத்திலும் ஆறு கால தொழுகை இது பக்தி மார்க்கத்துக்கு மட்டுமா என்று கூட தோன்றலாம். உண்மையில் இது ஆன்மீக, யோக  மார்க்கத்துக்கும் பொருந்தும்.

வடலூர் வள்ளலார் அவர்களும்  ஒருவன் ஆறுவேளை தியானம் செய்யவேண்டும் என்றே குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆறுவேளை என்பது ஒருவேளை சீக்கிரம் ஆன்ம முன்னேற்றத்தை அளிக்கவள்ளதாக இருக்கலாம்.

இப்படி இந்து, இசுலாமிய மதங்கள் மிக ஒற்றுமையான கொள்கைகளை கொண்டுள்ள பொழுது (சில )இசுலாமிய இந்து மக்கள் தங்களுக்குள்  வெறுப்புடன் இருப்பது அறிவீனம் இல்லையா?

இறைவன் ஒருவனே என்று கூறிக்கொண்டு அவன் என் மதத்தை சார்ந்தவன் என்பது எவ்வளவு  மோசமான செயல்?.
இறைவன்  அனைத்து  உயிர்களுக்கும் பொதுவானவன். அவன் என்னுடைய  மதத்தை தழுவினால் மட்டும் தான் நன்மை செய்வான் எனபது சரியா? 

ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்றுணர்ந்த பின்னும்

என் குலமே உயர்ந்தது என்பது எப்படி சரியாகும்?
 
சிந்தியுங்கள் மக்களே..... சிறப்பாக வாழுங்கள்



புதன், 27 ஜூலை, 2011

சிவனுக்கும் இயேசுவின் சிலுவைக்கும் என்ன சம்பந்தம்?

கிருத்துவர்களை ஏன் நீங்கள் சிலுவையை வழிபடுகிறீர்கள் என்று கேட்டால். ஏசு  மக்களின் பாவத்தை கழுவுவதற்காக சிலுவையை ஏற்றுக்கொண்டார். சிலுவையில் அவர் ரத்தம் படிந்ததால் அது புனிதமாயிற்று என்று கூறுவார்கள். (ஒரு சிலர்.) இந்த காரணம் ஒரு விதத்தில் சரியென்றாலும் எனக்கு இதையும் தாண்டி இதில் ஒரு சூட்சுமம் இருப்பதாகவே உணர்கிறேன்.

கிருத்துவர்கள் ஞான ஸ்நானம் எடுக்கும் பொழுதும், பிரத்யேக வழிபாட்டிற்கு  பிறகும் நெற்றியில்  இந்த சிலுவை குறியை பாதிரியார்கள்  மக்களுக்கு இடுவார்கள். அவர் சிலுவையில் அறையப்பட்டார் சரி அதற்க்கு ஏன் நெற்றியில் அந்த சிலுவை குறியை இட வேண்டும்?

 இங்கு தான் சூட்சுமமே உள்ளது. இதை இப்பொழுது அவர்கள் ஒரு சம்பிரதாயமாக உபயோகித்தாலும் இதன் உண்மையான காரணம் சிவனுக்கு மூன்றாவது கண் எனப்படும் நெற்றிக் கண்ணை திறப்பதற்காகவே   இதை செய்கிறார்கள். நெற்றிக்கண்ணின் மூலம் தான் ஒருவன் உண்மயான ஞானத்தை, இறை தரிசனத்தை பெற முடியும்.


ஞான ஸ்நானம் என்பதே ஒருவன்  ஞான பாதைக்கு தயாராகி விட்டான் என்பதை உலகிற்கு உணர்த்த தான். இதில் வேதனை என்னவென்றால் இது ஒரு சம்பிரதாயமாகவே இருக்கிறதே தவிர அவர்களை பாதிரியார்கள் அடுத்த கட்டத்திற்கு  கொண்டு செல்வதில்லை.அதற்க்கு காரணம் அவர்களின் அறியாமை தான்.  அடுத்த கட்டம் எனபது தியானம் செய்வதாகும். இந்த தியானம் யோகம் இவற்றை இந்துக்களுடையது என்று சொல்லி பாதிரியார்கள்  செய்ய அனுமதிப்பதில்லை.

நெற்றிக்கண் திறக்கும்  பொழுதோ அல்லது எப்பொழது மூச்சானது  மூக்கு வழியாக வராமல் நின்று போகிறதோ  அப்பொழுது அந்த உச்ச கட்டடத்தில்  இந்த சிலுவையை நெற்றியில்   காண முடியும்.

 எவன் ஒருவனுக்கு மூக்குக்கு கீழே மூசச்சு வருவதில்லையோ அவனே உண்மையான தீர்க்க தரிசி என்று ஏசு கூறியிருக்கிறார். எப்பொழுது ஒருவனுக்கு மூச்சுக்காற்று  மூக்கு வழியாக  வராது எனில் அது எப்பொழது சுழுமுனை வழியாக செயல்படுகிறதோ அப்பொழுது.

ஏசு ஒரு யோகி என்று சொல்வதற்கு இந்த ஒரு சான்று மட்டுமே போதுமானது.

சிவனுக்குள்ளது  போல் நெற்றிக்கண் திறப்பதற்காகவே நெற்றியில் சிலுவை இடப்படுகிறது எனபதே என் கருத்து.

ஞாயிறு, 24 ஜூலை, 2011

இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா?

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் குத்துங்க எசமான் குத்துங்க. இப்படி ஒரு வசனம் ஒரு திரைப்படத்தில் வரும்.
அந்த வசனம் பாலியல் ஒழுக்கம்  சம்பந்தப்பட்டது. இங்கே நான் சொல்லப்போவது....................சம்பந்தப்பட்டது.

பெண்கள் ஏன் நகை அணிகிறார்கள். தங்களை  அழகாக காட்ட. உண்மையில்  நகை ஒரு கவர்ச்சி பொருள். நகை அணியும்பொழுது அவர்கள் இன்னும் அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்கள். இதற்காகத்தான் அவர்கள் நகைகள் உபயோகிக்கிறார்கள் என நான் நினைக்கின்றேன். தன்னுடைய வசதியை காட்டுவதற்காகவும் பலர் நகை அணிகின்றனர். நகை அணிவதை ஒரு கௌரவமாகவே பலர் நினைக்கின்றனர்.

நகைகளை அணிவதும் அணியாமல் இருப்பதும் அவர் அவர்களது சொந்த பிரச்னை. இதைப்பற்றி நான் எழுதுகிறேன் என்று நீங்கள் கேட்கலாம்.

இன்று காலையில் ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன் ஒரு பெண்ணின் ஏழரை பவுன் தாலி சங்கிலியை இரு திருடர்கள் பறித்துக்கொண்டு போய்விட்டனர். அதுமட்டுமா பறிக்கும்போது அவரது கழுத்தில் வேறு பயங்கர காயம் ஏற்ப்பட்டு விட்டதாம்.

இதை கேட்டவுடன் முதலில் எனக்கு அந்த திருடர்கள் மீதுதான் கோபம் வந்தது. இப்படிப்பட்டவர்களின் இரு கைகளையும்  துண்டிக்க வேண்டும். சில பகுதிகளில் இன்னும் திருடர்கள் நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இதே பகுதியில் ஒரு நான்கு வருடத்திற்கு முன்பு  இதே போல் ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன். இவையாவும் எனக்கு ஏதோ ஒரு முறையில் தெரிந்தவர்களுக்கு நேர்ந்ததால் எனக்கு தெரிந்த செய்திகள். எனக்கு தெரியாமல் எத்தனை திருட்டு நடந்ததோ தெரியவில்லை.

திருடர்களிடமிருந்து காத்துக்கொள்ள நாம் தானே ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும்.  பெண்கள் அதிகமாக நகை அணிவதால் அவர்கள் உயிருக்கே உலை போன கதைகள் நாம் செய்தித்தாளில் படிக்கிறோம்.

இப்படி இருக்கம் பட்சத்தில்
பெண்கள் நகை அணிந்து தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.
துணையுடன் சென்றாலும் திருட்டு சம்பவம் நடப்பதாக  தெரியும் இடங்களில் இரவு நேரங்களில் உலாவுவதை தவிர்த்தல் நல்லது.
வீட்டிற்குள் எவ்வளவு வேண்டுமானாலும் நகை அணிந்து அழகாய் இருங்கள் அது தவறில்லை.
பொதுவாக நகைகளின் மேல் உள்ள மோகத்தை குறைப்பது நல்லது. மூலதனமாக வேண்டுமானால் அதை அதிகமாக உபயோகியுங்கள்.
நகையினால் வரும்  அற்ப கௌரவம் எதற்கு? நடத்தையால் வரும் கௌரவம் தானே அழகு?


நான் கேள்விப்பட்ட இரண்டு சம்பவங்களும் காலை நேரத்தில் தான் நடந்தது. குற்றம் அதிகமாக நடுக்கும் இடத்தில் நீங்கள் வாசிப்பீர்கள் எனில் அதிகாலை நேரத்திலும் கவனம் தேவை.

இப்படிப்பட்ட இடங்களில் இன்னும் காவலை  அதிப்படுத்துவார்கள் என நம்புகிறேன். இருப்பினும் நம்மை காப்பாற்றி கொள்ள முதல் வேலையே நாம் தான் செய்ய  வேண்டும்.

திருடர்களை திட்டாமல் பெண்களை குறை சொல்வதை சிலர் கையாலாகாத தனமாக கூட நினைக்கலாம்.
திருடர்களை களைய  வேண்டும் அதுதான் முக்கியம். அதே நேரத்தில் திருட நாம் அவர்களுக்கு வாய்ப்பும் தந்துவிட கூடாது. இது ரொம்ப முக்கியம்.

பெண்களே புன்னகை இருக்க
பொன் நகை ஏன்?
பொன் நகை போனால்
புன்னகையும் சேர்ந்தல்லவோ  போய்விடுகிறது?


சிந்தியுங்கள்....சிறப்பாக வாழுங்கள்






வியாழன், 21 ஜூலை, 2011

ஆண் பெண் நாகரீகம் எங்கே போகும்?

முப்பது வயதிற்கு கீழ் உள்ளவர்களும் இளகிய மனம் உள்ள ஆண்களும் பெண்களும் இதை படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

முதலில் ஆணும் பெண்ணும் பார்த்துக்கொள்வதால்  என்ன தவறு என்றனர்.

பிறகு ஆணும் பெண்ணும் ஒன்றாக படிப்பதால்  என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வதால் என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும் நட்பாக இருந்தால் என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும் ஒன்றாக வெளியில் சென்று வந்தால் என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும்  தொட்டுக்கொண்டு பேசுவதால் என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும்  உரசிக்கொண்டு பேசுவதால் என்ன தவறு என்றனர்

பிறகு  ஆணும் பெண்ணும் காதலித்தால் என்ன தவறு என்கின்றனர்

பிறகு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்   உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்(என்கின்றனர்)

பிறகு ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் உடல் உறவு கொள்வதால் என்ன  தவறு  என்பர் (என்கின்றனர்)

பிறகு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு பின் வேறு ஒருவருடன்  உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்

பிறகு ஆணும் பெண்ணும்  யார் யாருடன்   உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்

பிறகு ஆணும் பெண்ணும் எது எதனுடன் உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்

இப்படித்தான் போகப்போகிறது ஆண் பெண் நாகரீக கலாச்சாரம்.

திங்கள், 18 ஜூலை, 2011

ஆன்மீகத்திற்கு திருமணம் தடையா?

எனக்கு தெரிந்து சிறந்த ஆன்மீகவாதிகளாக கருதப்படும் யாரும் திருமண பந்தத்தில்  இருந்துகொண்டு ஆன்மீக முன்னேற்றம் அடைந்ததாக தெரியவில்லை.

இங்கே நான் ஆன்மீகம் என்பது அகத்தவம் அல்லது அகத்தாய்வு செய்து தான் யார் என்ற இரகசியத்தை உணர்ந்து யோகத்தின் மூலம்   இறையடி சேர்தலாகும்.

அதேபோல் திருமணம் புரியாமல் அகத்தவம் செய்தவர்கள் அனைவரும் இறையடி சேர்ந்தார்கள் என்றும் சொல்வதற்கில்லை.

புத்தர் திருமண வாழ்வை உதறி தள்ளியவர்.
ஏசுநாதர் திருமணம்  செய்து கொண்டு வாழ்ந்ததாக  தெரியவில்லை.
வள்ளலார், ராகவேந்திரர் இவர்கள் திருமண பந்தத்தில் நீடிக்கவில்லை.

இப்படி ஏராளமான உதாரணங்கள் சொல்லலாம்.
நான் இவர்கள் மட்டும் தான் உண்மையான ஆன்மீகவாதிகள்  என்று சொல்லவில்லை. இதை ஒரு உதாரணத்திற்காக மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.
இவர்கள் நமக்கு ஆன்மீக வாதிகளாக அறிமுகப்படுத்தப்படுள்ளனர் அல்லது சந்தைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சொல்லலாம். சந்தைப்படுத்தபடாத எண்ணற்ற ஆன்மீகவாதிகள் இவர்களை விட சிறந்த சிந்தனைகளை வாழ்வியலை கொண்டவர்களாக கூட இருந்திருக்கலாம்.

சில சித்தர்கள் சிற்றின்பத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களும் நிலையான திருமண வாழ்வை கொண்டிருக்கவில்லை.

சில ரிஷிகள் திருமண பந்தத்தில் இருந்துள்ளனர் என்று சில செய்திகள் கிடைத்தாலும் அவர்களுக்குள்ளான உறவுமுறை எப்படி  இருந்தது, அவர்கள் யோகத்தின் மூலம் இறையடி சேர்ந்தார்களா என்று (எனக்கு) தெரியவில்லை.

திருமணம் ஏன்  அகத்தவம் புரிய  தடையாக உள்ளது?

அகத்தவம் எனக்கு தெரிந்து கடுமையான (ஒரு விதத்தில் இனிமையான) பாதை. எப்படி ஒருவன் காதலிக்கும் பொழுது அந்த பெண்ணின் நினைப்பாகவே பித்துப் பிடித்தவன் போல் இருக்கின்றானோ அதைப்போலவே அகத்தவம் புரிபவனும் இறை சிந்தனை  மட்டுமே கொண்டவனாக இருப்பான். 

ஒரு பெண், குடும்பம்  தரும் இன்பத்தை விட இறைசிந்தனை அல்லது அந்த பயணம் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதால் அவன் மற்றவற்றை துச்சமாக மதிக்க ஆரம்பித்து விடுவான்.

திருமணத்தின்  மூலம் பற்று ஏற்ப்படுகிறது. மனைவி மீது பற்று, குழந்தைகள் மீது பற்று பிறகு பேரகுழந்தைகள் மீது பற்று.

மனைவி  என்று வந்தவுடனே சில கடமைகளும் கூடவே வந்துவிடுகிறது. அவளுக்கென்று நேரம் ஒதுக்க வேண்டும். பிறகு அவளுக்கென்று  சம்பாதிக்க வேண்டும். இந்த இரண்டு கடமைகள் செய்வதற்கே ஒருவனின் நேரம் போதுமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். பிறகு எங்கே  அகத்தவம் புரிவது?

அந்த பெண்ணை விட்டு விட்டு இவன் மட்டும் அகத்தவம் புரிகிறேன் என்று எந்நேரமும் கண்ணை மூடிக்கொண்டு இருந்தால் அந்த பெண்ணின் நிலை?

சரி மனைவியையும் அகத்தாய்வு  புரிய வைத்தால் என்ன என்று தோன்றலாம். ஆனால் அப்படிப்பட்ட மனைவி கிடைப்பதற்கு  வரம் வாங்கி வந்திருந்தாள் மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது.

அப்படியும் ஒருவனுக்கு அகத்தவம் செய்வதற்கு ஏற்றார் போல மனைவி அமைந்து விட்டால் அவன் கொடுத்து வைத்தவன் தான். இருப்பினும் அவர்கள் பிள்ளை பெற்றுக்கொண்டு அகத்தாய்வை  தொடர முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.

 சரி பிள்ளையே பெறாமல் இருந்தால் என்ன என்று தோன்றினாலும் அவர்கள் சமுதாயத்தின் ஏளனமான பேச்சுக்கும், பார்வைக்கும் ஆளாக நேரிடும். இதனாலோ என்னவோ அன்று திருமணம் செய்து கொண்ட ரிஷிகள் கூட காட்டிலே தான் வாழ்ந்துள்ளனர். அவர்கள் சமூகத்தோடு வாழ்ந்ததாக தெரியவில்லை.

இதை அனைத்தும் சமாளிக்கும் திறன் கொண்ட தம்பதிகளால் மட்டுமே அகத்தவத்தின்  மூலம் இறையடி சேர முடியும்.

ஆக ஆன்மீக பயணத்திற்கு திருமண வாழ்வு தடையா என்றால் பொதுவாக பார்க்கும் பொழுது தடை என்று தான் தோன்றுகிறது. அரிதினும் அரிதாக சில தம்பதிகளுக்கு மட்டும் திருமணம் தடையாகாமல் வரமாகலாம்.
தடையை வரமாக்கி அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன்.

புதன், 6 ஜூலை, 2011

மதுவிற்கும் தியானத்திற்கும் சம்பந்தம் உண்டா?

மது அருந்தியவர்கள் எங்கோ பறப்பதுபோல் உள்ளது என்று கூறுவதை  கேள்வி பட்டிருப்பீர்கள். அதுபோல் தியானம் செய்பவர்களும் உணர்ந்திருப்பார்கள். மதுவினால் அடையும் இந்த அளவான உற்சாகத்தை தான் ராஜ போதை என்பர்.

உண்மையில் தியானம் மூலம் அடையும் உற்சாக அமைதி  நிலையை ஓரளவிற்கு மதுவினாலும் அடையலாம்.  மதுவிற்கும் தியானத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால் அளவோடு இருக்கும் வரை தான் மது ஓரளவிற்கு உற்சாக அமைதி நிலையை தரும் அளவுக்கு மிஞ்சினால் அது தன்னிலை மறக்க செய்து கெடுத்து விடும்.

மேலும் மதுவானது உடலில் தீங்கையே வரவழைக்கும் ஆனால் தியானமோ நன்மையை வாரி வழங்கும்.

மது நரம்பு தளர்ச்சியை  வரவைக்கும், ஆண்மை குறைவை ஏற்படுத்தும், மூளையை  மழுங்கச்செய்யும் ஆனால் தியானமோ உடலையும் உள்ளத்தையும் மகிழ்ச்சியாக  வைத்திருக்க உதவும். அறிவை விசாலமாக்கும்.  ஆண்மையை அதிகப்படுத்தும் தியானங்களும் உண்டு.

ஆதலால் உடலை சீரழிக்கும் மதுவை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டு(அல்லது அளவோடு வைத்துக்கொண்டு) தியானம் செய்யுங்கள். தியானத்திற்கு நீங்கள் அதிகம் செலவு செய்ய தேவை இல்லை, சைடிஷ் தேவை இல்லை. நினைத்த நேரத்திற்க்கெல்லாம் இன்பம் அனுபவிக்கலாம்.
 ஆதலால் தியானம் செய்வீர் திறம்பட வாழ்வீர். வாழ்க வளமுடன் நலமுடன்.

திங்கள், 4 ஜூலை, 2011

பிரபஞ்சம் உருவானது எப்படி? கடவுளாளா? பகுதி 2

'எங்கு  தொடங்கி  எங்கு முடிக்க' என்று சிற்றின்பத்தை பற்றி ஒரு பாடல் உண்டு. அதுபோல் இந்த கட்டுரையை எங்க ஆரம்பித்து எப்படி முடிப்பது என்றே எனக்கு தெரியவில்லை.
சென்ற பதிவில் ஆன்மிகம் என்ற அகத்தாய்வு  எனபது நேற்றைய அறிவியல், இன்றைய அறிவியலுக்கும் நேற்றைய அறிவியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, அறிவியல்  புறத்தை  பார்க்கின்றது , ஆன்மிகம்  என்கிற அகத்தாய்வு அகத்தை பார்க்கின்றது  என்று பார்த்தோம். சென்ற பதிவிற்கான  வழிகாட்டி.

அன்றைய அறிவியலான அகத்தாய்வில் கண்டறியப்பட்ட பிரபஞ்ச ரகசியங்களில் சில வேதங்களிலும், புராணங்களிலும் ,யோக நூல்களிலும் மற்றும் வேறு   சில நூல்களிலும் ஆங்காங்கே உள்ளதை காண முடிகின்றது.

இன்றைய அறிவியல் வளர வளர சிலர் இப்படிப்பட்ட பண்டைய நூல்களுடன் அறிவியலை சம்பந்த்தப்படுத்தி அறிவியல் வேறு விதமாக உள்ளது இந்த நூல்களில்  சொல்வது வேறு விதமாக உள்ளது என்று கேள்வி    எழுப்புகின்றனர்.

உண்மையில்  இந்த அறிவியலாளர்கள்  அபிரகாமிய மதங்களுடன்  (அதாவது  இஸ்லாம்  மற்றும் கிறிஸ்த்துவம் ) மட்டுமே    அறிவியல்  ஆய்வுகளை  ஒப்பிட்டு பார்த்து  இந்த முடிவுக்கு  வருகின்றனர். (ஆபிரகாமிய மதங்கள் தவறு என்ற கூறவில்லை அவைகளும் இந்தியாவிலிருந்தே சென்றிருக்கும் என்பதற்கான சாத்திய கூறுகள் நிறைய உள்ளன. என்ன அங்கே அகத்தாய்வு உண்மைகள் மிக சொற்ப அளவே உள்ளதாக நினைக்கின்றேன்.இந்திய புராணங்களிலும் அறிவியலுக்கு முரணான செய்திகள் சில உள்ளது என்பதை  மறுக்க இயலாது.)

ஆனால்  அவர்களுக்கு  இந்திய நூல்களில் உள்ள பிரபஞ்ச ரகசியத்தை  பற்றி தெரியவில்லை. வெகு சில அறிவியலாளர்களே பண்டைய இந்திய  நூல்களை பற்றி "கொஞ்சம்" ஆய்வு செய்து அறிவியல் உண்மைகளோடு ஒப்பிட்டு பார்த்துள்ளனர். ஒப்பிட்டு பார்த்த அவர்கள் திகைத்து போய்விட்டனர். ஏன் எனில் இன்றைய அறிவியல் சிந்தித்து கூட பார்க்க முடியாத அளவில் இந்திய நூல்களில்  கால அளவுகள் உள்ளது.

பிரபஞ்சம் உருவாகி 13.7 பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன என்பது இன்றைய அறிவியலாளர்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று . இந்திய புராணத்தில் இந்த 13.7 பில்லியன் ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட    பிரம்மனின்   வெறும்  ஒன்றரை   நாட்கள்  தான். 

பிரம்மனின் ஒரு பகல்  பொழுது  4.32  பில்லியன் ஆண்டுகளுக்கு   சமம் (இதை  ஒரு கல்பம்  என்று சொல்வார்கள் ). இரவு  பொழுது மற்றும்  ஒரு 4.32  பில்லியன் ஆண்டுகள். ஆக   பிரம்மனின் ஒரு நாள்  என்பது 8.64 பில்லியன் ஆண்டுகளுக்கு   சமம். (இங்கே பிரம்மன்  உண்மையா பொய்யா என்ற சர்ச்சை தேவை இல்லை).

இதேபோல்  இந்தியர்கள்  311,040 பில்லியன் ஆண்டுகள்  அதாவது 311 ட்ரில்லியன்   ஆண்டுள்  பற்றி பேசியுள்ளதாக  அறிவியல் அறிஞர்கள்  ஒப்புக்கொண்டுள்ளனர். அது  மட்டுமல்ல    1/1,000,0000 நொடிகள்     பற்றியும்  பேசியுள்ளதாக கூறுகின்றனர்.

இவை  அனைத்தையும்  அவர்கள் அந்த  காலத்தில்  அகத்தாய்வு செய்தே  கணக்கிட்டுள்ளதாக   தெரிகிறது.

 புறத்தாய்வு செய்திருக்க  வாய்ப்புகள்  உள்ளது என்று சொல்லும்  அளவுக்கு  எந்த  ஒரு குறிப்புகளும்  இதுவரை  கிடைக்க  வில்லை.

தொடரும்................


புதன், 29 ஜூன், 2011

இவர்கள் பகுத்தறிவாளர்களா?


கல்லை செதுக்கி
அதற்கு சாமி என்று பெயரிட்டு
மாலை அணிவித்து வணங்கினால்
அது மூட நம்பிக்கை முட்டாள் தனம் என்பார்கள் பகுத்தறிவாளர்கள் (எ) நாத்திகவாதிகள்.

ஆனால் அவர்களோ
கல்லை செதுக்கி
அதற்கு பெரியார் என பெயரிட்டு
மாலை இட்டு வணங்கி  மரியாதை செய்வர்
இவர்களின் பகுத்தறிவை  என்ன சொல்ல?

குறிப்பு: பகுத்தறிவாளர்களின் மத்தியிலும் மூடத்தனம்  உண்டு என்பதை  சுட்டி காட்டுவதற்கே இதை எழுதியுள்ளேன். எனக்கும் பகுத்தறிவில் நம்பிக்கை உண்டு. தமிழகத்தில் பெயருக்கு பெண்ணால் ஜாதி இடம் பெறுவதில்லை. இது பெரியாரின் சாதனை தான். சிந்திக்கத் தெரிந்தவர்கள்  சிந்திக்கட்டும்.


திங்கள், 27 ஜூன், 2011

பிரபஞ்சம் உருவானது எப்படி? கடவுளாளா?

பிரபஞ்சம்  எப்படி உருவானது என்பது பற்றி பல கருத்துக்கள் உள்ளது. இன்னும் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இங்கே நான் என்ன புதிதாக சொல்ல போகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் என்ன செய்யப்போகிறேன் எனில் இங்கே அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் ஒரு பாலம் அமைக்கப்போகிறேன். அதுமட்டுமல்ல இந்த பாலத்தின் மூலம் எனக்கு தெரிந்த, நான் உணர்ந்த, பிரபஞ்ச ரகசியத்தை நான் உங்களுக்கு சொல்ல போகிறேன்.

முதலில் ஆன்மிகம்  மற்றும் அறிவியல்  என்றால் என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆன்மிகம் என்பது நேற்றைய அறிவியல் அவ்வளவுதான்.

ஆன்மிகம் என்பது அகத்தாய்வு செய்தல்.  அறிவியல் என்பது புறத்தாய்வு செய்தல்.

இங்கே ஆன்மிகம் என்ற வார்த்தை கூட சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆதலால் அகத்தாய்வு செய்தல் என்ற வார்த்தையை  இங்கே வைத்து கொள்வோம்.

அறிவியல் எனபது என்ன என்று உங்களுக்கு நன்றாக தெரியும். புறபொருள்களில் ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருவது தான் அறிவியல். அதாவது  வெளியில் இருக்கும்  சூரியன், சந்திரன், நட்சத்திரம், சூரிய குடும்பம், பால் வெளி இங்கே  விண்கலம் அனுப்பி அல்லது தொலை நோக்கி கருவியால் பார்த்து  ஆராய்ச்சி செய்வார்கள்.(நிலம், கடல் இவையும் இந்த ஆராய்ச்சிக்கு உதவுகிறது)  இது அறிவியல் மூலமாக புறத்தாய்வு செய்து உலகம் எப்படி தோன்றியது என்ற முடிவுக்கு வருதல்.


அது என்ன அகத்தாய்வு? ஏன் அதை செய்ய வேண்டும்?
தவம் தியானம் இதைத்தான் அகத்தாய்வு  என்கிறோம்.  இங்கே நாம் கண்களை மூடி ஆராய்ச்சி செய்கிறோம். அதாவது நமது பார்வையை உள் செலுத்தி ஆய்வு செய்கிறோம். அறிவியலில் பார்வையை வெளியில் செலுத்தி ஆய்வு செய்கிறோம்.

அதாவது  உடல் எனும் மெய்யை அல்லது மெய்யின் மூலம்  ஆய்வு செய்து பிரபஞ்ச ரகசியத்தை, ஞானத்தை  பெறுவதால் அகத்தாய்வு செய்பவர்களை  மெய்ஞானி என்கிறோம். விண்ணில் பார்வையை செலுத்தி விண்ணை பற்றிய ஞானம் பெறுதலால் அறிவியலாளர்களை விஞ்ஞானி என்கிறோம்.

அட பிரபஞ்சம் என்பது வெளியில் தானே உள்ளது அதை அறிவியல் முறையில் வெளியில் ஆய்வு செய்வதுதானே சிறந்தது என்று சிலர் கேட்கலாம். அவர்கள் கேள்வி நியாமானது தான். ஆனால் அவர்களுக்கு உடலை பற்றி அந்த அளவுக்கு தெரிந்திருக்காது என நினைக்கின்றேன்.

இந்த பிரபஞ்சத்தில் என்னென்ன உள்ளதோ  அது மனிதனின் உடலிலும்  உள்ளது.  இந்த உலகம் எப்படி பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றால் ஆனதோ அதேபோல் நமது உடலும் இதனால் தான் ஆனது. அதுமட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து பொருளுக்கும் நமக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும்.
வானத்தில் உள்ள சூரியனும் சந்திரனும் கூட நமது உடம்பில் உள்ளதாக மெய்ஞானிகள்   கூறுவர். அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது என்பது அவர்கள் கூற்று.

அகத்தாய்வு பற்றி படித்தவர்களுக்கு நன்று தெரியும் மனிதன் எவ்வளவு சக்தி வாய்ந்தவனாக மாறமுடியும் என்று.
ஒரு கடவுளால் எதுவெல்லாம் முடியும் என்று நினைக்கிறீர்களோ அதுவெல்லாம் மனிதனாலும் முடியும். (போலி சாமியார்களை மனதில் வைத்து குழப்பிக்கொள்ளதீர்கள்).
நீங்கள் என்ன நினைத்தாலும் அதை கூறும் சக்தியை ஒரு மனிதானால் பெற முடியும். நினைத்த நேரத்தில் ஓரிடத்தில் மழை பொழிய வைக்க முடியும். பறக்க முடியும், எங்கிருந்தும் எதையும் யாரையும் பார்க்க முடியும், உடலை  மலை போல் ஆக்க முடியும், உடலை அணு போலவும் மாற்ற முடியும், உயிரற்ற  உடலை தன்னுடலாக மாற்றிக்கொள்ள முடியும். (இவற்றை உண்மையான மெய் ஞானிகள் ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை, இவையாவும் ஒரு கழிவுப்பொருள் போலத்தான்) 

பிரபஞ்சம் முழவதும் சுற்றி வரவும் முடியும்.   பிரபஞ்சத்தை சுற்றி வர தெரிந்தவர்களுக்கு பிரபஞ்சம் எப்படி உருவானது யார் உருவாக்கினார்கள் என்று தெரியாதா என்ன.

உண்மையை சொல்ல வேண்டுமானால் நீங்களும் பிரபஞ்ச ரகசியத்தை அறியலாம். விஞ்ஞானியாக அல்ல மெய்ஞானியாக

தொடரும்.........................

திங்கள், 20 ஜூன், 2011

எல்லா மொழியின் முதல் எழுத்தும் அ என்பது உங்களுக்கு தெரியுமா?

உலகில் உள்ள அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அ தான் என்பது  உங்களுக்கு  தெரியுமா?   ( மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கலாம்).  அது தமிழானாலும் சரி... ஆங்கிலம் ஆனாலும் சரி...அரபியானாலும்  சரி. இது ஏன்? எப்படி சாத்தியம் என்று கேட்டால் எனக்கு பதில் தெரியாது. தெரிந்தவற்றை சொல்ல முயல்கிறேன்.


 நமது வள்ளுவரின் முதல் குறள் என்ன சொல்கிறது
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

இதற்கு பொருள்

'' மு.வ : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
நன்றி:தினமலர் "

ஆனால் இந்த குறளுக்கு உண்மையான பொருள் எப்படி இருக்க வேண்டும் எனில்

 "எப்படி  அனைத்து மொழிகளின் எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றதோ அதுபோல் உலகமானது கடவுளிலிருந்தே தொடங்கியது".

அதாவது மற்ற அறிஞர்கள்  கூறியது போல் அல்லாமல் எழுத்துக்களுக்கு பதில் மொழி என்று இருக்க வேண்டும் எனபதே என் கருத்து.

(வள்ளுவர் தமிழ் எழுத்துக்களுக்கு மற்றும் இதை சொல்லி இருக்க வாய்ப்பு  இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது அவர் அனைத்து மொழிகளுக்கும் தான் இதை கூறி இருக்க வேண்டும்)
எனக்கு தெரிந்து அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் தான் ஆரம்பிக்கின்றது.

ஏன் அனைத்து மொழிகளும்  அகரத்தில் ஆரம்பிக்க வேண்டும்? தெரியவில்லை....ஒரு வேலை இதுவும் கடவுளின் செயலா?

ஒருவேளை வள்ளுவர் மொழியைக் காட்டி கடவுளை நிரூபிக்கின்றாரா?
வள்ளுவர் கடவுள் என்று எதை குறிப்பிடுகிறார்  என்பது ஆய்வுக்குரிய ஒன்று ஆனால் கடவுளிலிருந்தே உலகம் தோன்றியது என்ற கூற்றில் அவர் உறுதியாக உள்ளார்.

உலகத்தில் முதலில் ஒரு வார்த்தை தோன்றியது  என்று வேதங்களும் கூறகிறது பைபிளும்  கூறுகிறது...
அது என்ன எழுத்து?
ஓம் எனும் எழுத்துதான் அது.

சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
இருக்கின்றது...உண்மையில் அது ஓம் அல்ல
அது "அ உ ம்"  என்ற வார்த்தை தான்.அதாவது அகரம் உகரம் மகரம் என்பார்கள் இதை.
அடிக்கடி சொல்ல சொல்ல அது "ஓம்" என  மாறும்.

ஆக உலகில் முதலில் எழுந்த  ஒலி  அகரம் ஆதலால் தான் அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் ஆரம்பிக்கின்றது.


இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஓம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள்  என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
ஆனால் அதுதான் உண்மை.

ஒவ்வொரு மனிதனின்  மூச்சு காற்றும்  ஓம்  என்று தான் சொல்லும்....உன்னித்து கவனித்து பாருங்கள். ஓம் நின்றால் உயிர் இல்லை உலகும்  இல்லை.



ஆக உலகில் முதலில் எழுந்த  ஒலி  அகரம் ஆதலால் தான் அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் ஆரம்பிக்கின்றது. அது மட்டுமல்ல அந்த அ உ ம - ஓம் ஒலியினால் தான் இவ்வுலகமே இயங்குகின்றது. 
 

புதன், 15 ஜூன், 2011

முற்பிறவி என்றால் மூன்றாவது பிறவியா?

முற்பிறவி என்றால் முந்தைய பிறவி என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அது மூன்றாவது பிறவியையும் குறிக்கும். (என்னோட அகராதியில :) )

ஜோதிடத்தில் முக்கியமான மூன்று வீடுகள் உள்ளன. அவை ஒன்று ஐந்து  மற்றும் ஒன்பதாம் வீடுகள். இவற்றை திரிகோணம் என்பர். இவற்றை லட்சுமி வீடுகள் என்றும் சொல்வர் சிலர்.  என்னைப்பொருத்த வரை இந்த மூன்று வீடுகளும் ஒருவனுக்கு நன்றாக அமைந்தாலே அவனது வாழ்வும் சிறப்பாக அமையும்.

இந்த மூன்று வீட்டின் அதிபதிகள் தான் ஒருவனுக்கு நன்மைகளை வாரி வழங்குபவர்கள். இவர்களை யோகாதிபதி என்பர். அதாவது ஒரு லக்னத்து யார் சுபர் என்றால் அவர்கள் இந்த மூன்று வீட்டின் அதிபதிகளாகத்தன் இருப்பார். 

ஜோதிடத்தில் லக்னம் எனபது இப்பிறவியை காட்டுகின்றது. ஐந்தாம் இடம் இதற்க்கு முன்பு எடுத்த பிறவியை காட்டுகின்றது. அப்ப அந்த ஒன்பதாம் இடம்? அது ஒருவனின்  மூன்றாவது பிறவியை காட்டுகின்றது. அதாவது சென்ற பிறவிக்கு முந்தைய பிறவி. சொல்ல முடியாது அது ஒருவனின் அனைத்து பிறவிகளையும் கூட சொல்லலாம்.

முற் பிறவியில் செய்த புண்ணியம் தான் இப்பிறவியில் நமக்கு ஏற்ப்படும் இன்ப துன்பங்களுக்கு காரணம் என்று கூறுவர். ஐந்து   ஒன்பதாம் வீடுகள் கெட்டிருந்தால் நீங்கள் முற்பிறவிகளில் பாவம் செய்துள்ளீர்கள் என்று பொருள். 

இதற்க்கு முந்தைய ஜென்மத்தில் ஒருவன் செய்த பாவம் புண்ணியத்தை பொறுத்தே அவனுக்கு குழந்தை பிறக்கும் என்று ஜோதிடம் சொல்கிறது. ஆதலால் தான் குழந்தை பாக்கியத்திற்கு ஐந்தாம் இடத்தை சொல்கின்றனர்.
சென்ற பிறவிக்கு முன்பிறவியில் செய்த பாவம் புண்ணியமும் ஒருவனுக்கு குழந்தை உண்டா இல்லையா என்பதை  தீர்மானிக்கின்றது என நினைக்கின்றேன். ஆதலால் தான் ஒன்பதாம் இடத்தை பாக்கிய ஸ்தானம்    என்று சொனார்கள். அதாவது ஒருவனுக்கு கிடைக்கப் போகும் சகல சௌபாக்கியங்களும் இந்த வீட்டை பொறுத்தே அமையும்.
தந்தை, குரு, அதிஷ்டம் , பரம்பரை சொத்து இவற்றை  ஒன்பதாம் வீடு குறிக்கின்றது.

அது மட்டும் அல்ல ஐந்தாம் வீடு கெட்டிருந்தாலும் அவர்களுக்கு ஒன்பதாம் வீடு நன்றாக இருந்தால் அவர்களுக்கும் குழந்தை பிறக்கும். (அந்த வீட்டு அதிபதிகளின் நிலை ரொம்ப முக்கியம்.)

ஆதலால் தான் நம் பெரியோர்கள் முற்பிறவியில் செய்த பலனால் குழந்தை செல்வம் என்று கூறியுள்ளனர். இந்த முற்பிறவியை ஐந்தாம் வீடு மற்றும் அதற்கு முந்தைய பிறவியை ஒன்பதாம் வீடு குறிக்கின்றன.
ஆதலால் முற்பிறவி எனபது மூன்றாவது பிறவியையும் தானே குறிக்கின்றது?
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது முந்தைய அனைத்து பிறவியையும் குறிக்கும் வார்த்தை தான்.

ஒருவனுக்கு மிகுந்த நன்மையை செய்யக்கூடிய திசை எது என்றால் அது ஒன்பதாம் அதிபதியின் திசை தான்.
 
குழந்தை இல்லாதவர்கள் இதை படித்து விட்டு நொந்து கொள்ள வேண்டாம். குழந்தை இல்லாததும் ஒருவிதத்தில் நன்மையே....... உங்கள் ஆன்மீக (தவ)  பயணத்திற்கு.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவம் உங்களுக்கு கை கொடுக்கும் முயற்சி செய்யுங்கள். அல்லது ஒரு  குழந்தையை தத்தெடுத்து வளருங்கள்.

முடிந்த வரை இப்பிறவியில்  நன்மை செய்யுங்கள்....நன்மை இப்பிறவியிலும் கிடைக்கலாம்....அடுத்த பிறவியிலும் கிடைக்கலாம்.... ஏன் பிறவியே இல்லாமலும் போகலாம்.
வாழ்க வளமுடன்....நலமுடன்....

ஞாயிறு, 12 ஜூன், 2011

எங்கே போனது மனிதம்?

ஒரு தமிழன் தாக்கப் பட்டால் தமிழன் மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமா?
ஒரு முஸ்லீம் தாக்கப்பட்டால் முஸ்லீம் மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமா?
ஒரு கிறிஸ்டியன் தாக்கப்பட்டால் கிறிஸ்டியன் மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமா?
ஒரு இந்து தாக்கப்பட்டால் இந்து மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமா?

ஒரு ஜாதிக்காரன், ஒரு இனத்துக்காரன், ஒரு மதத்துக்காரன் தாக்கப்பட்டால் அதை சார்ந்தவர்கள் மட்டுமே அதற்கு குரல் கொடுக்க வேண்டுமா? ஏன் மற்றவர்கள் அதற்கு குரல் கொடுப்பதில்லை?
நாம் அனைவரும் நம்மை ஒரு வட்டத்துக்கள் அடைத்துக்கொண்டது தான் காரணம்.
குறைந்த பட்சம் இவர்களாவது ஏதோ ஒரு காரணத்தினால் குரல் கொடுக்கிறார்கள்  என்று எண்ணி மகிழ்வதா அல்லது கோபப்படுவதா என்று தெரியவில்லை.

உண்மையில் நாம் இவர்களை நினைத்து பெருமைப்படுவதில் தவறில்லை. ஏன் எனில் இவர்களாவது அவர்களோடு ஏதோ ஒரு முறையில் சம்பந்தம் இருப்பவர்களுக்கு குரல் கொடுக்கிறார்கள். பெரும்பாலானோர் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன  என்று இருக்கிறார்கள். இவர்களை  விட அவர்கள் மேல். 

யோசிக்கத் தெரிந்த அனைவரும் முதலில் என் மதம், என் இனம், என் ஜாதி, என் மதம்  என்ற  வட்டத்திலிருந்து வெளியில் வர வேண்டும்.
அவர்கள் அடுத்த வட்டத்திற்கு செல்ல வேண்டும் அந்த வட்டம் நாம் அனைவரும் மனிதர்கள் என்று நினைக்கும் வட்டம் . முடிந்தால் நாம் அனைவரும் உயிர்கள்,இயற்கையின் அங்கம்  என்ற வட்டத்திற்குள்ளும்  செல்லலாம்.

இந்த வட்டத்திற்குள்  என்று மனிதன் செல்கின்றானோ  அன்றே மனதிலும் உலகிலும் அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கும். அதுவரை மனிதம் எங்கே போனது  என எங்கு தேடினும் கிடைக்காது.
ஆமாம் நீங்கள் எந்த வட்டத்திற்குள் இன்று இருக்கின்றீர்கள்?

சுவிஸ்ல இன்னுமா பணம் இருக்கும்?

எனக்கு ஒரு சந்தேகம். இதுக்கு பதில் தெரிந்தால் யாராவது சொல்லுங்கள். கிட்டத்தட்ட ஒரு நான்கு ஐந்து ஆண்டுகளாகவே சுவிஸ்ல இருக்கிற பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரணும், அதை நாட்டுடமையாக்கணும்  அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. எனக்கு என்ன சந்தேகம்னா இன்னுமா அந்த பணம் சுவிஸ்ல இருக்கும்?.

இத்தன வருடத்தில அதை வேறு வங்கிக்கு மாற்றி இருக்க முடியாதா? (சுவிஸ் மாதிரி  வேறு சில வங்கிகளும் இருப்பதாக தகவல்).

அல்லது வேறு நாட்டில் வசிக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கு மாற்றி இருக்க முடியாதா? (நிறைய  பண்க்காரர்களோட உறவினர்கள் வெளிநாட்டிலே செட்டில் ஆகி இருக்காங்க).

அல்லது இவர்களே வெளி நாடு சென்று அதை ஜாலியாக செலவு செய்திருக்கலாம் அல்லது அங்கேயே ஏதாவது சொத்துகித்து வாங்கி இருக்கலாம் ...அட தப்பு பண்றவங்களுக்கு இதைவிட இன்னும் என்னன்னமோ ஐடியா வரும்.
 நம்ம அரசாங்கம் ஒரு முடிவு எடுக்குமுன்னே சுவிஸ் பணம் கரைஞ்சிடும்னு நினைக்கிறேன். இப்ப சொல்லுங்கள் அந்த பணம் இன்னும் சுவிஸ்ல அப்படியே  இருக்கும்னு  நினைக்கிறீங்க?

திங்கள், 6 ஜூன், 2011

தன காரகன் குருவா சுக்கிரனா?

ஜோதிடத்தில் குருவை தன காரகன் என்று சொல்கிறார்கள். தனம் என்றால் செல்வம் அப்படி என்றால் காசு பணம் தானே. இதற்க்கு காரகன் குரு என்பது சரியா. எனக்கு தெரிந்த வரையிலும் கேள்விப்பட்ட வரையிலும் சுக்கிர திசை அல்லது புத்தியில் தான் அதிகமாக பணம் வருகிறது. மேலும் சுக்கிர பலம் உள்ளவர்களுக்கும் அதிகமாக பணம் வரும். அப்படி இருக்க குருவுக்கு ஏன் தன காரகன் என்று பெயர் வைத்தார்கள் என்று எனக்கு புரியவில்லை.

மேலும் காலபுருஷ தத்துவப்படி இரண்டாம்  வீடான ரிஷபத்திற்கு  சுக்கிர பகவான் தான்  அதிபதி. இங்கே சந்திரன் உச்சம் அடைகிறார். நான் கேள்விப்பட்ட அல்லது படித்த வரையில் ஒருவனின் ஜாதகத்தில்  சுக்கிர பகவானும் சந்திரபகவானும் நன்றாக இருந்தால் வசதியான வாழ்க்கை கிடைக்கும். குரு பகவானும் முக்கியமே ஏன் எனில் இவர் தங்கத்திற்கு காரகன் என்கிறார்கள். ஒருவேளை தங்கத்துக்கு மட்டும் தான் குரு பகவான்  காரகனோ?. பணத்திற்கு சுக்கிர பகவன் தான் காரகனோ?. இவருக்குரிய தெய்வம் இருக்கும் திருப்பதிக்கு  தானே செல்வம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது.

என் கேள்வி சரியா...உங்களுக்கு பதில் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.


ஞாயிறு, 5 ஜூன், 2011

உடல் இளைக்க பெருக்க என்ன செய்ய வேண்டும்?

சிலருக்கு உடல் பருமனாக உள்ளதே என்று கவலை. சிலருக்கு உடல் சிறியதாக உள்ளதே என்று கவலை.

இவர்களுக்கு நான் ஒரு சூத்திரத்தை சொல்ல போகிறேன். அதை பின் பற்றினால் நினைத்தது நடக்கும்.

இளைக்க சூத்திரம்: புளிப்பு தன்மையுள்ள பொருட்களை அதிகமாக உண்ணுங்கள். உடல் இளைக்கும்.

வேறு என்ன வழிகள்:
௧. சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் அருந்துங்கள்.
௨. உடற் பயிற்சி நடை பயற்சி செய்வதாக இருந்தால் சாப்பிட்ட பின்பு சில மணி நேரங்கள் கழித்து செய்யுங்கள்.
௩.சாப்பிடும் பொழுது பசி இருக்கும் பொழுதே நிறுத்திக் கொள்ளுங்கள். (இது ரொம்ப முக்கியம்).
௪. சாப்பிட்டு விட்டு உறங்கவோ உட்காரவோ செய்யாதீர்கள்...சிறிது நடத்தல் நலம்


பெருக்க சூத்திரம்: இனிப்பு தன்மையுள்ள பொருட்களை நிறைய உண்ணுங்கள். உடல் பெருக்கும்.

வேறு என்ன வழிகள்:
௧.உடற் பயிற்சி நடை பயிற்சிக்கு பிறகு உணவருந்துங்கள்.
௨. பசியெடுத்த பின்பு உண்ணுங்கள்.
௩. சாப்பிட்டுவிட்டு உறங்குங்கள் (உடல் பெருக்கும்.. ஆனால்  நீண்ட ஆயுளுக்கு நல்லதல்ல)

இருவருக்கும் பொது: நிறைய நீர் அருந்துங்கள்.

ஏதோ நான் நினைத்ததையும் ஏற்கனவே படித்தையும் எழுதியுள்ளேன். உங்களுக்கு சரி வந்தால் செய்யுங்கள். எதையும் அளவுக்கு மீறி உண்டால்  நஞ்சு என்பதையும் மனதில் வையுங்கள்.

சனி, 4 ஜூன், 2011

ரஜினிக்கு ஆன்மீக ஈடுபாடு ஏற்பட காரணம் என்ன?



 இன்று காலை பாபா திரைப்படத்தின் சில காட்சிகளை ஏதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அதில் பெயர் போடும் போதே கேமரா ஒரு ஜாதகத்தை சில நிமிடம் காட்டுகின்றது. அது யாருடைய ஜாதகம் என்று பார்த்தால்...அது ரஜினியுடையது மாதிரியே இருந்தது. அவருடைய உண்மையான ஜாதகத்திலும் படத்திலும்...சிம்ம லக்னம்...கன்னியில் கேது மற்றும் சனி பகவான். மற்றவற்றை சரியாக கவனிக்க முடியவில்லை.

அவருக்கு ஆன்மீக  ஈடுபாடு ஏற்பட  காரணமாய் நான் நினைக்கும் சில காரணங்களை தந்துள்ளேன்.



௧. தியான வீடான  ஐந்தாம் வீட்டு அதிபதியான குருபகவான்  ஏழில்  இருந்து லக்னத்தை பார்க்கிறார்.இதனால் அவருக்கு தியானத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டிருக்கலாம்.

௨. தியானத்திற்கு அதிபதியான குருபகவான் ராகுபகவானின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார், ராகுவோ குருவின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். ஆதலால் இங்கே ராகுவானவர் குருவின் பலனை கொடுப்பார். அந்த விதத்தில் பார்த்தல் தியான அதிபதி சொந்த நட்சத்திரத்தில் அமர்ந்ததாக கொள்ள வேண்டும். இப்படி பார்க்கும் பொழுது அவருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்ப்படிருக்க வாய்ப்புகள் உண்டு. ராகுவின் உப நட்சதிராதிபதி குரு என்பது இன்னும் ஒரு முக்கிய காரணம்.

 ௩. குண்டலினி காரகனான கேதுபகவானின் உப நட்சத்திராதிபதியும்  குரு பகவானே.

௪. அதுமட்டுமல்ல ஆன்மீக முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்  ஒன்று, ஐந்து, ஒன்பதாம் வீடுகளின் உப நட்சதிராதிபதியும்  தியான வீட்டு அதிபதி குருபகவானே.


மேற்கூறிய காரணங்களால் அவருக்கு  ஆன்மீக ஈடுபாடு மட்டும் அல்ல அவருக்கு ஆன்மீக அனுபவமும்  ஏற்ப்பட்டிருக்க  வாய்ப்புகள் உண்டு.
 ஆன்மீக ஜோதிடம் சம்பந்தமான முந்தைய பதிவுகளுக்கான சுட்டி என்கிற வழிகாட்டி கீழே:

உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படுமா?

விவேகானந்தர் ஏன் ஆன்மீகவாதியாகி இளமையில் இறந்தார்...



புட்டபர்த்தி சாய் பாபா ஏன் சந்நியாசி ஆனார்?



யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும் ?

சனி, 28 மே, 2011

எந்த தானியங்களை என்று சாப்பிட வேண்டும்?



ஒவ்வொரு கோளும் ஒரு தானியத்தை குறிப்பதாக சொல்கின்றனர்.

சூரியன்- கோதுமை
சந்திரன்- நெல்
செவ்வாய்- துவரை
புதன்- பச்சைப்பயிறு
வியாழன் - கடலை 
வெள்ளி - மொச்சை 
சனி- எள்ளு
ராகு- உளுந்து
கேது- கொள்ளு
 உங்கள் ஜாதகத்தில் எந்த கோள் வலிமையாக இருந்தாலும் வலிமையற்று இருந்தாலும், இந்த தானியங்களை நீங்கள் உண்ணும் பொழுது அந்த கோள்களினால் உங்களுக்கு நன்மையே கிடைக்கும் ....தீமை  குறையும் என்று கூறுகின்றனர்.
 இந்த தானியங்களை அதற்குறிய   நாட்களில் உண்ணுவது இன்னும் சிறப்பான பலன்களை தரும் என்பது என் எண்ணம்.


செவ்வாய், 24 மே, 2011

உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படுமா?


ஜாதகத்தில் உங்களைக் குறிப்பது லக்னாதிபதி. ஆன்மீகத்தில் ஈடுபாட்டை  உண்டாக்கும் சக்தியும் ஞானத்தை அளிக்கவல்ல சக்தியும் கேது பகவானுக்கு உண்டு. 

கேதுவுக்கும் லக்னாதிபதிக்கும் உங்கள் ஜாதகத்தில் தொடர்பு இருந்தால் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்ப்படும். 

லக்னத்தில் அல்லது லக்னாதிபதி அமர்ந்த வீட்டுக்கு அல்லது பத்தாம் அதிபதி அமர்ந்த வீட்டுக்கு  ஒன்று, ஐந்து அல்லது ஒன்பதாம் வீடுகளில் கேது பகவான் இருந்தால் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு  உண்டாகும். 


லக்னாதிபதி அல்லது பத்துக்குடையவன் அமர்ந்த வீட்டிற்கு இரண்டில் கேது பகவான் இருந்தாலும்  ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டாகும். 

 வக்கிரம் பெற்ற லக்னாதிபதி அல்லது வக்கிரம் பெற்ற பத்தாம் வீட்டுக்காரர் இவர்களுக்கு பன்னிரெண்டில் கேது பகவான் இருந்தாலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும்.
இவற்றை நான் சொல்லவில்லை சப்த ரிஷி நாடி எனும்  புத்தகத்தில் பார்த்தேன் அதை சற்று உல்டா செய்து இங்கே கொடுத்துள்ளேன். இது உண்மை போலத்தான் தோன்றுகிறது.
நன்றி: சப்தரிஷி  நாடி  

இது சம்பந்தமான  மற்றும் ஒரு பதிவிற்கான சுட்டி


தி.மு.க வின் தோல்விக்கும் அ.தி.மு.க வின் வெற்றிக்கும் ஒரே காரணம் தான்...அது என்ன?



தேர்தல் முடிவைப் பற்றி பல ஊடகங்களும் பல காரணங்களைக் கூறுகின்றன. 
மின் வெட்டு, குடும்ப அரசியல், பல துறைகளில் குடும்ப ஆதிக்கம்,விலை வாசி உயர்வு, மக்கள் இலவசங்களை விரும்ப வில்லை, ஈழத்தமிழருக்கு செய்த துரோகம், ஜாதி அரசியலை மக்கள் விரும்ப வில்லை, என்று பலரும் பல காரணங்களை கூறுகின்றனர். 

சிலர் அன்ன ஹசாரேயின்  உண்ணா   விரதமும் ஒரு காரணம் என்றனர். இதெல்லாம் படித்தால் எனக்கு சிரிப்பு தான் வருகின்றது. அவர்கள் சொன்ன காரணங்களை ஆய்வு செய்து பார்த்தால் அந்த காரணிகளின் தாக்கம்  குறைவே. 

எல்லா காரணங்களும் ஏதோ ஒரு விதத்தில் இந்த தேர்தல் முடிவுக்கு காரணமாய் இருந்தாலும் தி.மு.க வின் படு தோல்விக்கும் அ.தி.மு.க வின் மகத்தான வெற்றிக்கும் ஒரே காரணம் அ.தி.மு.க, தே. மு. தி.க கூட்டணிதான்.

ஒருவேளை அ.தி.மு.க வும்  தே. மு. தி.க வும் தனித்து நின்றிருந்தால் கண்டிப்பாக தி.மு.க தான் வென்றிருக்கும். மேலே சொன்ன அனைத்து காரணத்தினால் எழுந்த அதிருப்தி ஓட்டுக்கள் இரண்டாக பிரிந்து அது தி.மு.க வுக்கு வெற்றியை பெற்று தந்திருக்கும். ஒவ்வொரு    தொகுதியிலும்    தி. மு.க கூட்டணி பெற்ற   ஓட்டுக்கள் மற்றும் வெற்றி வித்தியாச ஓட்டுக்கள் இதைத் தெள்ள தெளிவாக காட்டுகின்றன. 

ஆக தி.மு.க வின் படு தோல்விக்கும் அ.தி.மு.க வின் மகத்தான வெற்றிக்கும் ஒரே காரணம் அ.தி.மு.க, தே. மு. தி.க கூட்டணிதான்.
 

ஞாயிறு, 15 மே, 2011

ஜெ பதவியேற்கும் நேரம் நல்ல நேரமா? அரசின் செயல்பாடு எப்படி இருக்கும்?


ஜெ அவர்கள் பதினாறாம் தேதி பன்னிரண்டு மணிக்கு பதவி ஏற்கிறார் . இது நல்ல நேரமா? அரசின் செயல்பாடு எப்படி இருக்கும்?

ஜெ அவர்கள் சிம்ம லக்னத்தில் பதவி ஏற்கிறார், இந்த அரசும் அன்றே பதவி ஏற்பதாக கொள்ள வேண்டும். 
சிம்ம லக்கினம் அரசாங்கம்  அதிகாரத்திற்கு பெயர் போனது. அந்த விதத்தில் இது அருமையான லக்னம்.
எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் லக்னம் வலுப்பெற வேண்டும். அந்த விதத்தில் குரு பகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்திற்கு கிடைப்பது அருமையிலும் அருமை.
அடுத்ததாக லக்னாதிபதி பத்தில் இருக்கின்றார். பத்து என்பது தொழில், பணிகளை குறிக்கும். இங்கே லக்னாதிபதி இருப்பதால் அரசாங்க பணிகள் சிறப்பாக நடைபெறும் என்று சொல்லலாம். கண்ணும் கருத்துமாக வேலைகள் நடக்கும் என்றும் சொல்லலாம்.

ஆறாம் அதிபதி சனி  இரண்டாம்  வீட்டில்  இருப்பதால் கஜானா   காலி. கடன் வாங்கியே அரசாங்கத்தை  நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம். தேர்தல் வாக்குறுதிகளை  நிறைவேற்றுவதில் சற்று சிரமம் ஏற்படலாம். வெளித்தொடர்புகளால்  கடைசி நேரத்தில் நன்மை கிடைக்கலாம். வார்த்தைகளால்  பலரை  வருத்தெடுக்கலாம்.

செல்வுக்காரன் சந்திரன் மூன்றாம் வீட்டில், அரசின் தைரியம்  ஏற்ற இறக்கமுடன் காணப்படும். சுப கோள்களின் பார்வை ஒன்பதாம் வீட்டில் இருந்து கிடைப்பதால் சற்று ஆறுதல் தான். 

குருவும் நான்காம் அதிபதி சுக்கிரனும் அவர்களுக்குள் கேந்திரத்தில் இருப்பதால் வலிமையான தைரியம் பொருந்தியா அரசாக இருக்கும். கூடவே அவர்களுக்கு தேவையானதை தந்திரத்தனமாக அடைய வைக்கலாம். இது மக்களுக்கு நல்லதா அல்லது அரசாங்கத்துக்கு மட்டுமே நல்லாதா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

சரி மக்கள் எப்படி இருப்பாங்கனு கேட்பது தெரியுது. 
ஐந்தில் ராகு இருப்பது கொஞ்சம் சரியில்லை என்று சொன்னாலும் , அவர் லாப வீட்டில்  இருக்கும்  கேதுவின் நட்சத்திரத்தில் இருப்பதால் நன்மையே . மேலும் அதிபதியான  குரு பாக்கிய வீட்டில் இருப்பதால் சகல பாக்கியங்களும் வந்து சேரும் .( அப்புறம் எவ்வளவு இலவசம் வரப்போகுது மிக்சி, மின் ஆட்டுக்கல், மின் விசிறி, மடிக்கணினி இத்யாதி இத்யாதி.) 
குருவின் பார்வை ஐந்தாம் வீட்டில் படுவதால் மக்களுக்கு கூடுதல் நன்மையே.  
எந்த ஜாதி எந்த மதத்துக்கு நன்மை தீமைனு சொல்ல முடியுமான்னு நீங்க கேட்பது தெரியுது.

ஐந்து மற்றும் பதினொன்றில் ராகு கேது இருப்பதால் இஸ்லாம் மற்றும் கிருஸ்த்துவ மதத்தினருக்கு லாபம் நிறைய கிடைக்கலாம்.   தலித் இனத்தவருக்கு நிறைய குடும்ப உபயோக பொருட்கள் கிடைக்கும் .(இரண்டில் சனி அதான்.)

மற்ற  இனத்தவருக்கு கல்வி, புதிய வேலைவாய்ப்பு, தொழில் தொடங்க ஊக்கம் இவற்றின் மூலம் நன்மை கிடைக்கும். ஆன்மீகவாதிகளுக்கும்  இது சற்று அனுகூல அரசாகவே அமையும்.

அப்படி இப்படி சில சமாச்சாரங்கள் இருந்தாலும் இவ்வாட்சி நல்லாட்சியாக இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.  அப்புறம் எல்லாம் இறைவன் செயல். 


சனி, 14 மே, 2011

ஓ...இதுதான் அமைதிப் புரட்சியா?


பெரும்பாலான கருத்து கணிப்புக்களை பொய்யாக்கி அ.தி.மு. க. தனிப்பெரும்பான்மையுடன்  ஆட்சி அமைக்கபோகின்றது.
இது யாரும் எதிர் பார்க்காத வெற்றி. இத்தேர்தலில் யாருக்கும் எந்த ஒரு அலையும் வீசவில்லை என்று ஊடகங்கள் கூறியிருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகளோ சுனாமி வந்ததுபோல் அல்லவா உள்ளது.

கலர் டிவி, வீடு, பணம் கிடைத்தும்  மற்றும் மேலும் இலவசங்கள் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கிடைக்கும் என்று தெரிந்தும் மக்கள் அ.தி.மு.கவுக்கு வாக்களித்துள்ளனர். 

இதற்கு  என்ன காரணம்?
அலைக்கற்றை ஊழல்....அ.தி.மு.க + தே.மு. தி.க கூட்டணி.
கருணாநிதி  குடும்பத்தின் ஆதிக்க ஆட்சி... மின் வெட்டு , ஈழத் துரோகம் இத்யாதி இத்யாதி.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 77 இடங்களை கைப்பற்றியது...ஆனால் இந்த தேர்தலில் தோல்வி அடைந்த தி.மு.க  கூட்டணி வெறும் 31 இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது. 

இது கடந்த அ.தி. மு.க ஆட்சி தற்போதைய தி.மு. க ஆட்சியைவிட சிறப்பாக நடந்துள்ளதாகவே காட்டுகின்றது. 
மேலும் கடந்த தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிட்டு ஓட்டுக்களை பிரித்தது. இல்லையென்றால் அ.தி.மு. கவே    வெற்றி பெற்றிருக்கும் என்று தோன்றுகின்றது.

இதில் கவனிக்கப் பட கூடிய செய்தி என்னவெனில் ஐந்து ஆண்டுகள் முதல்வரான கருணாநிதி ஒரு முறை கூட தான் செய்த ஆட்சியால் அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியவில்லை. 

இதை விட பேரிடியாக தி.மு.க இம்முறை பிரதான எதிர்க்கட்சியாகும் வாய்ப்பையும் இழந்துள்ளது.

மக்களுக்கு எவ்வளவு தான் இலவசங்கள் கிடைத்தாலும் அதற்கும் மிஞ்சிய நல்லாட்சியை அவர்கள் எதிர் பார்க்கின்றனர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 

மக்கள் இலவசங்களால் தி.மு.க. வுக்கு  வாக்களிப்பார்கள் என்று தி.மு.க வினர் ஆர்ப்பரித்தனர் , இதே செய்திகளை ஊடங்களிலும் பரப்பினர்.மேலும் பணமும் பட்டுவாடா செய்தனர்.  ஆனால் மக்களோ அனைத்தையும் பெற்றுக்கொண்டு அமைதியாக அதி.மு.க கூட்டணிக்கு வாக்களித்து விட்டனர். 
ஓ...இதுதான் அமைதிப் புரட்சியா?

சனி, 7 மே, 2011

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்றால் என்ன?


காலம் காலமாக இந்த பழமொழி வழக்கத்தில் உள்ளது. இதன் பொருள் என்ன?
நல்லவை ஆவதும் பெண்ணாலே கேட்டது அழிவதும் பெண்ணாலே என்று சொல்கிறார்கள்...

எனக்கு  தெரிந்த  ஒரு ஜோதிடர்  என்ன சொல்றார்...
மிருகமா இருக்கிற மனுஷன் மனுஷனா “ஆவதும் பெண்ணாலே”
மனுஷனுக்குள்ள இருக்கிற மிருகம் “அழிவதும் பெண்ணாலே”

அவர் ரொம்ப நல்ல விதமாக ஒரே பக்கமா  சிந்தனை செய்திருக்கின்றார்.

நான் என்ன சொல்கிறேன்...
ஒருவன் உருவாவதும் பெண்ணாலே ....அழிவதும் பெண்ணாலே!
ஒரு குடும்பம்  உருவாவதும் பெண்ணாலே.. ...அழிவதும் பெண்ணாலே!!
ஒரு சமுதாயம்,கலாச்சாரம், பண்பாடு   உருவாவதும் பெண்ணாலே.. ..அழிவதும் பெண்ணாலே!!!

இது பெண்ணுக்கு மட்டுமே பொருந்துவது இல்லை. ஆணுக்கும் தான்.
ஆவதும் ஆணாலே...அழிவதும் ஆணாலே. என்றும்   சொல்லலாம் .
இருந்த   போதிலும்  ஒரு  சமுதாயம்,கலாச்சாரம், பண்பாடு உருவாக பெண்ணின் பங்களிப்பு ஆணை விட சற்று கூடதலாகவே உள்ளதாக  நான் உணர்கிறேன.


எந்த  ஒரு   கலாசாரத்தையும்  பண்பாட்டையும்  கட்டிக்  காக்க   கூடிய  சக்தி  பெண்ணுக்கு சற்று  அதிகமாகவே  உள்ளது . (அவளுக்கு மட்டுமே உள்ளது என்று கூடசொல்லலாம்)

ஆங்கிலத்தில்  பெண்களை "weaker" செக்ஸ் என்று சொல்வார்கள். அது உடல் ரீதியாக வேண்டும் என்றால் பொருந்தலாம். உள்ளத்து ரீதியாக  பார்த்தல்  ஆணே "weaker" செக்ஸ் . especially in sex.  

ஒரு பெண் சற்று ஜாடை காட்டினால் போதும்  ஒன்பது ஆண்கள் அவனது குடும்ப அழிவிற்கு காரணமாக ஆகிவிடுவார். 

இதுவே ஒரு ஆண் சற்று ஜாடை காட்டினால் ஒன்பது பெண்கள் அவர்களது குடும்ப அழிவிற்கு காரணமாக ஆகிவிடுவார் என்று சொல்ல முடியாது. (இன்று சில நகரங்களில் சில பெண்களும் அப்படி மாறிக்கொண்டு வருகிறார்கள் என்பது வருத்தமளிக்கும் செய்தி).

குடும்பம், கலாச்சாரம், பண்பாடு எல்லாமே பெண்ணை மையமாகவே வைத்து அமைந்துள்ளது.
அவளால் தான் மிருகம் மனிதனாவான்....மனிதன் மிருகமாவான்...(.சில நேரங்களில் தத்துவ ஞானியாக ஆவதும்  உண்டு).
நல்லது ஆவதும் பெண்ணாலே
கெட்டது அழிவதும் பெண்ணாலே !
 என்பதற்கு  இலக்கணமாக  எந்த  பெண்  இருக்கின்றாளோ  அப்படிப்பட்ட    பெண்களே தெய்வம்...(உங்கள் குல சாமி அவள் தான்)....அவள் இருக்கும்  வரை தான் இந்த பூமியில் அனைவரும் அமைதியாக வாழ முடியும்.

வாழ்க்கை எப்ப எப்படி இருக்கும் ? 2


சென்ற பதிவில் ஜாதகத்தை மூன்றாக பிரித்து, அது எந்தெந்த பருவத்தை குறிக்கும் என்று சொல்லி அதன் மூலம் எப்படி பலன் காண்பது என்று பார்த்தோம்.

அதில் ஒரு பகுதயில் எந்த கோள்கலுமே இல்லையெனில் என்ன செய்வது? இதற்க்கான விடையை பராசரர் சொல்லவில்லை.

என்னுடைய சிந்தனை ஜோதிடப்படி அந்தப்பகுதியில்தீய கோள்களின் பார்வை அதிகமாக விழுகின்றதா  அல்லது நல்ல கோள்களின் பார்வை அதிகமாக விழுகின்றதா என்று பாருங்கள்.  

தீமை தரும்  கோள்களின் பார்வை அதிகமாக விழுந்தால்  அந்தப்பருவத்தில் தீமைகள்  அதிகமாக இருக்கும்.

நல்ல கோள்களின் பார்வை அதிகமாக  விழுந்தால் நல்லது...அந்தப்பருவம் இன்பம் மிகுந்ததாக இருக்கும்.

தீமை மற்றும் நல்லது செய்யும் கோள்களின்  பார்வை  சரி சமமாக இருப்பின்..இன்பம் துன்பம் இரண்டும் சரி சமமாக இருக்கும்.

(இது வெறும் சிந்தனை ஜோதிடமே...உங்களுக்கு இதுபற்றி ஏதேனும் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்...அனைவருக்கும்  பயனுள்ளதாக இருக்கும்...பாசு உங்களையும் தான் கேட்கிறேன்)

(இந்த கேள்வி எனக்கும் ஏற்பட்டது இருப்பினும் யோகி என்ற பெயரில் உள்ளவர் கேட்டதால்...இது அனைவருக்கும் தெரியட்டும் என்ற எண்ணத்தில் பதிவிட்டுவிட்டேன்...நன்றி யோகி .)




வெள்ளி, 6 மே, 2011

வாழ்க்கை எப்ப எப்படி இருக்கும்?


உங்கள் ஜாதகத்தை மூன்றாக பிரியுங்கள். 1-4 வீடுகள்  ஒரு  பகுதி, 5-8வீடுகள்  ஒரு  பகுதி, 9-12 வீடுகள்  ஒரு  பகுதி என்று. 


1-4 குழந்தை பருவத்தைக் குறிக்கும்
5-8- வாலிப பருவத்தைக் குறிக்கும் 
9-12- முதுமை   பருவத்தைக்  குறிக்கும் . 

இதில் எந்த பகுதியில் நல்ல கோள்களை விட அதிக தீய கோள்கள் உள்ளதோ அந்த பருவத்தில் வாழ்க்கையில் சிக்கல் அதிகமாக இருக்கும், நல்ல கோள்கள் எந்த பகுதியில் தீய கோள்களை விட அதிகமாக  உள்ளதோ அந்த பருவம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தீய கோள்களும் நல்ல கோள்களும் ஒரு பகுதியில் சமமாக இருப்பின்...இன்ப துன்பமும் சமமாக இருக்கும். 

 இதை சொல்றது நான் இல்லை, பராசர மகரிஷி சொன்னதா சொல்றாங்க...இது
பொருந்துதா இல்லையானு நீங்க தான் சொல்லணும். 
(இன்னைக்கு மூளை சரியா ஒத்துழைக்க வில்லை , அதனால் தான் இந்த குட்டி சூத்திரம்)

வியாழன், 5 மே, 2011

ஆன்மீகத்திற்கு குரு அவசியமா?


குருவருள் இருந்தால் தான் திருவருள் கிடைக்கும் என்று சொல்வார்கள் அது உண்மையா? 

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்கிறார்கள். தாய்  ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து, செத்துப் பிழைத்து குழந்தையை பெற்று,  பாலூட்டி, சீராட்டி, ஈ, எறும்பு கடிக்காமல், நல்ல உணவு ஊட்டி அன்போடு வளர்க்கிறாள். 

தந்தை அக்குழந்தைக்கு பாதுகாப்பாய் இருந்து,  அறிவு புகட்டி வளர்க்கின்றார்.

அடுத்தது குருவானவர் அக்குழந்தைக்கு ஏற்ற சகல கல்வியையும், கலைகளையும் கற்று தருகிறார். குழந்தையின் ஆன்ம வளர்ச்சியை பொறுத்து அவனுக்கு தெய்வத்தை அடையும் வழியையும் காட்டுகின்றார்.(இது அந்த காலத்துல).
இந்த காலத்தில் ஒவ்வொரு கல்விக்கும் அல்லது  பாடத்திற்கும் ஒரு குரு. 
அந்த காலத்தில் அ ஆ கற்று கொடுத்த குருவே ஆன்மீக குருவாக இருந்திருக்கலாம் ஆனால் இந்த காலத்தில் இதற்க்கு என்று தனியாக ஒரு குரு தேவைப்படுகிறார்.

அன்று பெரும்பாலானோர் ஒன்றிரண்டு குருக்களுக்கு மேல் தாண்டாமல் ஆண்டவனை அடையும் பாதையில் சென்றார்கள்.

 இன்றோ தொழில் நுட்ப  வளர்ச்சியாலும், ஆன்மிகம் சம்பந்தமான நூல்கள் சுலபமாக கிடைப்பதாலும் ஒருவன் குரு இல்லாமலே ஆன்மீகத்தில் நுழைந்து விடுகிறான்.

பல புத்தகங்கள் படித்து தானாகவே யோகம் செய்தாலும் அனைவராலும் ஆன்மீகத்தில் தொடர்ந்து பயணிக்க முடியுமா என்று சொல்ல முடியாது.
இதுவே ஒரு நல்ல ஆன்மீக குரு மூலம் காற்றுக்கொண்டால் அவருடன் சேர்ந்தே பிறவிப் பெருங்கடலை சுலபமாக கடந்து விடலாம்.

ஆனால் எல்லோருக்குமே நல்ல குரு அமையும் பாக்கியம்  கிடைப்பதில்லை. ஜோதிட ரீதியாக பார்க்கையில் ஒன்பதாம் வீடு குருவைக் காட்டுகின்றது. யாருக்கு ஒன்பதாம் வீடும், சொந்தக்காரனும் நன்றாக உள்ளனரோ அவர்களுக்கு நல்ல குரு கிடைக்க வாய்ப்புகள் மிக அதிகம் .  
இந்த குரு ஆன்மீக குருவாக இருப்பார் என்று அறுதியிட்டு கூற  முடியாது.

இந்த ஒன்பதாம் வீடு மற்றும் அதிபதிக்கும் யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்ப்படும்? பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள  , குரு, கேது, ஐந்தாம் வீடு மற்றும் புட்டபர்த்தி  சாய் பாபா ஏன்  சந்நியாசி ஆனார் ? என்ற பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள லக்னம்,லக்னாதிபதி இவர்களுக்குள் நல்ல தொடர்பு இருந்தால்  "அந்த ஒன்பதாம் வீட்டு  குரு"  ஒரு  நல்ல ஆன்மீக குருவாக வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

என்னைப்பொருத்த வரை(இன்றைய நிலையில்) ஐந்தாம் வீடு அதன் அதிபதி,கேது, குரு இவர்களே  ஒருவனுக்கு தியானம் அல்லது குண்டலினி மூலம் ஆன்மீக முன்னேற்றத்தை அளிக்கவள்ளவர்கள்.  ஒன்பதாம் வீட்டு குரு இவர்களுடன் சம்பந்தம் கொள்ளவில்லை எனில் அவர் வெறும்  சமயம்  அல்லது - மற்றும் ஆன்ம கோட்பாட்டினை எடுத்துரைக்கும் குருவாக மட்டுமே அமைந்துவிட வாய்புகள் உண்டு. 

மகர கடகத்தில் கேது ராகு இருந்தாலும் ஒருவன் குரு இல்லாமலே ஆன்மீகத்தில் பயணம் செய்வான் என்றும் படித்ததுண்டு. இதுவும் உண்மையாகவே தெரிகிறது. 

ஆன்மீக குரு கிடைக்காததும் ஒரு விதத்தில் நல்லதே. (ஒரு சிலருக்கு மட்டுமே இது பொருந்தும்). யாருக்கு ஆன்மீக குரு கிடப்பதில்லையோ அவர்களே புவியில் பலரது ஆன்ம எழுச்சிக்கு காரணமாய் இருந்திருக்கிறார்கள். 

உதாரனத்திற்க்கு வள்ளலார் மற்றும் புத்தர். இவர்களுக்கு நல்ல குரு கிடைத்திருந்தால் அவர்கள் மட்டுமே ஆன்ம எழுச்சி அடைந்திருப்பார். கிடைக்காத காரணத்தினாலே  தான் அவர்கள் பலரது ஆன்ம எழுச்சிக்கு காரணமாய் இருந்திருக்கிறார்கள்.  

 ஆதலால்  ஆன்மீக குருவை தேடிக் கொண்டு இருக்காதீர்கள்.
உங்கள் கண்ணுக்கு பட்டால் அவர் வழியில் செல்லுங்கள் "விழிப்புணர்வுடன்". இது மிக சுலபமான பாதை. (நல்ல பாதையாக மற்றும் நல்ல குருவாக  இருப்பின்).

ஆன்மீக குரு கிடைக்கவில்லையா....நல்லது...நாளை நீங்கள் பலருக்கு வழிகாட்டியாக இருக்கலாம்...சுயமாக முயன்று பாருங்கள். இது மிகவும் கடினமான பதை.

குருவின் மூலமோ அல்லது இல்லாமலோ முயன்று பாருங்கள், முக்தி அடையுங்கள்.

(குறிப்பு: இப்பதிவில் உள்ளது யாவும் என் சொந்த கருத்துக்களே ஆகையால் "எப்பொருள்" எனத் தொடங்கும் குறளை மனதில் வையுங்கள்).


புதன், 4 மே, 2011

தேர்தல் ஆணையத்தின் அறிவீனம் என்ன ? பகுதி 3


 தேர்தல் ஆணையம் எப்படி இப்படி ஒரு முட்டாள் தனமான முடிவெடுத்தது என்பது  பெரும் வியப்பை தருகிறது.

தேர்தலோ ஏப்ரல் 13 ம் தேதியே முடிவடைந்து விட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் தபால் ஓட்டுக்கு மட்டும் மே 12 ம் தேதி வரை கெடு வழங்கியுள்ளது.

தேர்தல் வேலையில் வெளி தொகுதிகளில் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு தபால் மூலமாக ஒட்டு போட தேர்தல் ஆணையம் வழி வகை செய்வது வழக்கம்.  இம்முறை  மே 12 ம் தேதி வரை ஒட்டு போட அவர்களுக்கு நாட்கள் ஒதுக்கியுள்ளது.  ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது ஆயிரம் முதல் இரண்டாயிரம் அஞ்சல் ஓட்டுக்கள் இருக்க வாய்ப்புகள் உண்டு.

என்னுடைய முதல் கேள்வி...ஏன் இவர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தை வேட்பாளர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டால் என்ன செய்வது என்பது பற்றி தேர்தல் ஆணையம் சிந்தித்ததா?

இந்த ஒரு மாத இடைவெளியில் வேட்பாளர்கள் அரசு ஊழியர்களை "தனியாக" கவனிப்பதாக செய்தி  வெளியாகி உள்ளதே இதை பற்றி தேர்தல் ஆணையத்திற்கு தெரியுமா?

இவர்களின் ஓட்டுக்கு சிலர் ஏஜென்ட் போல ஓட்டுக்கு பேரத்தில் இறங்கியுள்ளனரே இது  தேர்தல் ஆணையத்திற்கு தெரியுமா?

என்ன தெரிந்து என்ன பயன் 
வாக்களிக்க அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுத்தது தேர்தல் ஆணையத்தின் அறிவீனமே. 

முந்தைய பதிவிற்கான சுட்டி.



திங்கள், 2 மே, 2011

விவேகானந்தர் ஏன் ஆன்மீகவாதியாகி இளமையில் இறந்தார்?


விவேகானந்தர் காவி உடை அணியாமல் இருந்திருந்தால் அவரை இந்து மத துறவி என்று யாரும் கூற இயலாது. அவரது பெரும்பாலான கருத்துக்கள் அனைத்து மதத்தினராலும் ஏற்றுக்கொளும்படியாக உள்ளது. மதத்தை தாண்டி சீர்திருத்தவாதிகளின் நன் மதிப்பையும் பெற்றவர் அவர்.



"ஒரு  விதைவையின்   கண்ணீரைத்  துடைக்க  முடியாத , ஓர்  அனாதையின்  வயிற்றில்  ஒரு  கவளம்  சோற்றை  இட  முடியாத  கடவுளடித்திலோ,சமயத்திலோ  எனக்குக்  கொஞ்சம்  கூட  நம்பிக்கை  கிடையாது"  என்று  அவர்  கூறியுள்ளார். இதை வைத்து அவர் நாத்திகவாதி என்று கூட சொல்லலாம்.ஆனால்  உண்மையில்  அவர் ஒரு ஆன்மீகவாதியே.

அவரின் ஜாதகம்:  தனுசு லக்னம், லக்னத்தில் சூரியன், இரண்டில் சுக்கிரன் மற்றும் புதன், ஐந்தில் செவ்வாய் ஆட்சி,  ஆறில் கேது, பத்தில் சந்திரன் மற்றும் சனி, பதினொன்றில் குரு.
இவருக்கு ஆன்மீக ஈடுபாடு ஏற்ப்பட, தியானத்தில் மூழ்க காரணம்  பதினொன்றில் இருக்கும் குருபகவான் ஐந்தில் ஆட்சி பெற்று இருக்கும் தியான அதிபதியை பார்ப்பதுதான். அதுமட்டுமல்லாமல் லக்னாதிபதியான குரு ஐந்தாம் அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். .  (இதுவே என் கருத்து).

இவர் ஏன் இளமையில் இறந்தார் ?
இவர் இறக்கவில்லை. இவரே விரும்பித்தான் உடலை விட்டார். அதாவது மகா சமாதி அடைந்தார். 

இவரே நெருங்கியவர்களிடம் நான் நாற்பது வயது வரை வாழ மாட்டேன் என்று கூறியுள்ளதாக சில குறிப்புகள் உள்ளது. (இது அவரின்  தீர்க்க தரிசனத்தை காட்டுகின்றது) அதுபடியே அவர் நாற்ப்பது வயது பூர்த்தியாவதற்கு முன் பூத உடலை நீத்தார். அதாவது மகா சமாதி அடைந்தார் .

ஏன் அவர் நீண்ட காலம் வாழ்ந்திருக்க கூடாது என்ற கேள்வி எழலாம். எனக்கு தெரிந்து பிறவியின் உண்மையை, நோக்கத்தை உணர்ந்த எவரும் இந்த பூமியில் பூத உடலுடன் வாழ விரும்ப மாட்டார். 
Related Posts Plugin for WordPress, Blogger...