வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 27 மார்ச், 2011

சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்க்கும் என்ன தொடர்பு? வேறுபாடு?


சிற்றின்பத்திலும் ஐம்பொறிகளுக்கும் இன்பம் (அதான் கண்ணு, காது, வாய், மூக்கு, மெய்) பேரின்பத்திலும் ஐம்பொறிகளுக்கும் இன்பம்.

சிற்றின்பத்திலும் காணலாம்,தொடலாம்(தொடு உணர்ச்சி), முகரலாம், கேட்கலாம், உண்ணலாம் பேரின்பத்திலும் இவை நடைபெறும்.

என்ன வேறுபாடு?

சிற்றின்பத்தில் ஒவ்வொரு தடவையும் கடைசியில் சுக்கிலம் வெளிப்படும்.... பேரின்பத்தில் ஒரே ஒரு தடவை முதலில் வெளிப்படும்.

சிற்றின்பம் சில மணித்துளிகள் அல்லது நேரங்கள் .....பேரின்பத்தில் பல மணி நேரங்களும், நாட்களும், மாதங்களும், ஏன் வருடங்களும் சாத்தியமாகலாம்.

சிற்றின்பத்தில் இருவர் ஒருவராக முயற்சி பேரின்பத்தில் ....ஒருவன் ஒன்னும் இல்லாமல் போக முயற்சி.(அதான்பா இறையாதல் )

சிற்றின்பம் அளவுக்கு மிஞ்சினால் வெளியில சங்கு வான வேடிக்கை....பேரின்ப பயணத்தில் உள்ளுக்குள்ள சங்கு வான வேடிக்கை.
சிற்றின்பம் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு...பேரின்பம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம்.

அமிர்தம் கிடைத்தால் பிறகு என்ன? மரணம் இல்லா பெருவாழ்வுதான்.


6 கருத்துகள்:

  1. புரட்சி மணி அவர்களே,
    என் ஸ்டைல்ல ஒரு கொட்டேஷன்:
    சிற்றின்பம் ரயில்ல குருட்டு பிச்சைக்காரன் பாடற பாட்டு.

    பேரின்பம் எஸ்.பி பாடற பாட்டு

    பதிலளிநீக்கு
  2. //சித்தூர்.எஸ்.முருகேசன் said...
    புரட்சி மணி அவர்களே,
    என் ஸ்டைல்ல ஒரு கொட்டேஷன்:
    சிற்றின்பம் ரயில்ல குருட்டு பிச்சைக்காரன் பாடற பாட்டு.

    பேரின்பம் எஸ்.பி பாடற பாட்டு///

    தங்கள் வருகைக்கு நன்றி பாசு,
    பாசு உங்களுக்கு ரெண்டுத்துலயும் அனுபவம் இருக்கு, அப்ப நீங்க சொன்னா கரெக்டு தான்

    பதிலளிநீக்கு
  3. //தனி காட்டு ராஜா said...
    Good post ////

    தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜா

    பதிலளிநீக்கு
  4. சிற்றின்பம் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு...பேரின்பம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம்......
    வாழ்த்துக்கள்.....வித்தியாசமான முயற்சியில் ஒவ்வொரு பதிவிலும் நல்ல கருத்தை புகுத்துகிறீர்கள்....
    உங்கள் rajeshnedveera
    www.maayaulagam-4u.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. //மாய உலகம் said...

    சிற்றின்பம் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு...பேரின்பம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம்......
    வாழ்த்துக்கள்.....வித்தியாசமான முயற்சியில் ஒவ்வொரு பதிவிலும் நல்ல கருத்தை புகுத்துகிறீர்கள்....
    உங்கள் rajeshnedveera
    www.maayaulagam-4u.blogspot.com
    //
    தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ராஜேஷ்.

    பதிலளிநீக்கு
  6. சிற்றின்பம் 9 ,பேரின்பம் 0 !

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...