வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வியாழன், 31 மார்ச், 2011

(இ)லக்னம் என்றால் என்ன?


ஆன்மாவுக்கும் அது பூமியில் எடுக்கும் புது பிறவிக்கும் இணைப்பு ஏற்படுகின்ற முதல் தருணமே லக்னம். இதை நான் சொல்லவில்லை...கீழே பாருங்க
Lagna (Sanskrit '', 'ascendant'.) Lagna is the first moment of contact between the soul and its new life on earth in Jyotisha.The Essentials of Vedic Astrology'', by Komilla Sutton, The Wessex Astrologer Ltd, England, 1999, p.96.

(மொழி பெயர்ப்பில் தவறு இருப்பின் தயவு செய்து திருத்துங்கள்.)

இந்த இணைப்பை ஏற்படுத்துபவன் குரு. ஆதலால் தான் அவனை லக்ன காரகன் என்கின்றனர் என்று நினைக்கின்றேன். (அதுமட்டுமல்ல  அவரே புத்திர காரகன் எனப்படுகின்றார். காரணம் அவரால் தான் உயிர்கள் உருவாகின்றது. ஒருவருக்கு குழந்தை பிறக்க வேண்டும் எனில் குரு பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஒரு வேலை இவர் வலிமையுடன் இல்லாவிடில் அணிதாவது அதிபதி அல்லது ஒன்பதாவது அதிபதிஆவது வலிமையுடன் இருக்க வேண்டும்)

இப்பொழுது லக்னத்தில் குரு இருந்தால் "காரகோ பாவ நாஸ்தி" (இப்படி ஏதோ சொல்வாங்களே) விதிப்படி அவன் இந்த இணைப்பை கடைசி இணைப்பாக்க
வேண்டும் என்பது என் கருத்து. ஆதலால் தான் லக்னத்தில் இருக்கும் குரு இந்த பிறவியே கடைசி பிறவியாக செய்து, பிறவிப்பிணியிலிருந்து விடுவிப்பான் என்று முந்தைய பதிவில் கூறி இருந்தேன்.(குறைந்த பட்சம் பூமியுடனான தொடர்பையாவது துண்டிக்கனும்) தங்களுடைய கருத்து?


லக்னத்தில் குரு இருப்பது நல்லது என்றாலும் அவர் தனித்து இருத்தலே மிக மிக முக்கியம்.

(லக்னம் அன்றைய தினத்தின் சூரிய உதயத்தையும் ஒருவர் பிறந்த நேரத்தையும்  வைத்து கணக்கிடப்படுகிறது. லக்னம் ஒருவரின் உயிரை, தலையை குறிக்கும்.எந்த வீடு லஞாமாக உள்ளதோ அந்த வீட்டின் அதிபர் வலிமையுடன் இருத்தல் மிக மிக அவசியம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...