வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

சூரியனுக்கும் மறுபிறவிக்கும் சம்பந்தம் உண்டா?

ஜோதிடத்தில் மறுபிறவி இல்லாமைக்கு சில கோள் நிலைகள் உள்ளன. அது பெரும்பாலும் கேது குரு சம்பந்தப்பட்டது.ஆனால் நான் சூரியன் பற்றி எங்கேயும் படிக்க வில்லை.(படித்ததே கொஞ்சம் தான்...நீங்கள் படித்திருந்தால் சொல்லுங்கள் ).
இது எனக்கு ஆச்சர்யத்தை தருகிறது. ஏன் எனில் சூரியன் ஆன்மாவை குறிக்கின்றது. அவனே உடல் காரகனும் கூட.
மறுபிறவி ஆன்மா மற்றும் உடல் சம்பந்தப்பட்டது. ஆன்மா அழிவது அல்லது இறைவனுடைய ஆன்மாவோடு சேருவது அல்லது இறைவனடி சேர்வது எனபதே மறுபிறவி இன்மையை குறிப்பதாக படித்தடுன்னு. அப்படிப்பட்ட ஆன்மாவைக் குறிக்கும் சூரியன் பற்றி ஏன் எந்த குறிப்பும் இல்லை என்பது வியப்பே.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் சூரியன் பன்னிரெண்டில் இருந்தால் அவனுக்கும் மறுபிறவி இருக்காது எனபதே. ஏன் எனில் இந்த பாவமே மோட்சம் மற்றும் விரயத்தை குறிக்கின்றது. இங்கே இருக்கும் சூரியனானது மறுபிறவியை (குறைந்த பட்சம் பூமியில்) தராது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...