வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வியாழன், 21 ஏப்ரல், 2011

அன்ன ஹசாரே-வுக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்?

அன்ன ஹசாரே-வுக்கும் அஜித்துக்கும் ஒரு சம்பந்தம் உள்ளது. சற்று சிந்திந்தால் உங்களுக்கே தெரியவரும். 
என்ன கண்டுபிடித்து விட்டீர்களா?

சிட்டிசன் படத்தில் அஜித் ஊழலுக்கு எதிராக போராடுவார். அன்ன ஹசாரே உண்மையிலேயே போராடுகின்றார்.

 அது மட்டும் அல்ல அஜித்  படத்தில் வைத்த கோரிக்கையும் அன்ன ஹசாரே உண்மையில் வைத்த கோரிக்கையும் ஒன்றுதான்.
அது என்ன கோரிக்கை?

ஊழல் செய்தவர்களை தண்டிப்பதோடு மட்டுமல்லாது அவர்கள் சம்பாதித்த சொத்துக்களையும் கையகப்படுத்த வேண்டும் என்பதே அது .

அது மட்டும் அல்ல படத்தில் ஊழல் செய்தவர்களின் சொந்தங்களுக்கும் தண்டனை தர வேண்டும் என்று கூறுவார்.

இதையும் வரப்போகும் சட்டம் ஏற்றுக்கொண்டாள் நன்றாக இருக்கும். ஊழல் செய்ய ஒவ்வொருவனும் பயந்து நடந்குவான்.

ஒருவன் ஏன் ஊழல் செய்கிறான்? தானும் தன சொந்தங்களும் வசதியாக இருக்க வேண்டும் என்பதால் தானே. ஊழல் செய்தால் அனைவருக்கும் தண்டனை எனும்போது எவனாவது ஊழல் செய்யா முன் வருவானா?

(சிட்டிசன் படத்தின் மூலம் சிறந்த கருத்தை முன் மொழிந்த இயக்குனர் சரவண சுப்பையாவுக்கும், தயாரிப்பளருக்கும், தல அஜித்துக்கும் இந்த வலைப்பூவின் மூலம்  சிறப்பு வாழ்த்துக்கள் . அதேபோல் இந்த லோக் பால் சட்டம் சிறப்பாக வர அந்த குழுவுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...