வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

சனி, 7 மே, 2011

வாழ்க்கை எப்ப எப்படி இருக்கும் ? 2


சென்ற பதிவில் ஜாதகத்தை மூன்றாக பிரித்து, அது எந்தெந்த பருவத்தை குறிக்கும் என்று சொல்லி அதன் மூலம் எப்படி பலன் காண்பது என்று பார்த்தோம்.

அதில் ஒரு பகுதயில் எந்த கோள்கலுமே இல்லையெனில் என்ன செய்வது? இதற்க்கான விடையை பராசரர் சொல்லவில்லை.

என்னுடைய சிந்தனை ஜோதிடப்படி அந்தப்பகுதியில்தீய கோள்களின் பார்வை அதிகமாக விழுகின்றதா  அல்லது நல்ல கோள்களின் பார்வை அதிகமாக விழுகின்றதா என்று பாருங்கள்.  

தீமை தரும்  கோள்களின் பார்வை அதிகமாக விழுந்தால்  அந்தப்பருவத்தில் தீமைகள்  அதிகமாக இருக்கும்.

நல்ல கோள்களின் பார்வை அதிகமாக  விழுந்தால் நல்லது...அந்தப்பருவம் இன்பம் மிகுந்ததாக இருக்கும்.

தீமை மற்றும் நல்லது செய்யும் கோள்களின்  பார்வை  சரி சமமாக இருப்பின்..இன்பம் துன்பம் இரண்டும் சரி சமமாக இருக்கும்.

(இது வெறும் சிந்தனை ஜோதிடமே...உங்களுக்கு இதுபற்றி ஏதேனும் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்...அனைவருக்கும்  பயனுள்ளதாக இருக்கும்...பாசு உங்களையும் தான் கேட்கிறேன்)

(இந்த கேள்வி எனக்கும் ஏற்பட்டது இருப்பினும் யோகி என்ற பெயரில் உள்ளவர் கேட்டதால்...இது அனைவருக்கும் தெரியட்டும் என்ற எண்ணத்தில் பதிவிட்டுவிட்டேன்...நன்றி யோகி .)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...