வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 12 ஜூன், 2011

எங்கே போனது மனிதம்?

ஒரு தமிழன் தாக்கப் பட்டால் தமிழன் மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமா?
ஒரு முஸ்லீம் தாக்கப்பட்டால் முஸ்லீம் மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமா?
ஒரு கிறிஸ்டியன் தாக்கப்பட்டால் கிறிஸ்டியன் மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமா?
ஒரு இந்து தாக்கப்பட்டால் இந்து மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமா?

ஒரு ஜாதிக்காரன், ஒரு இனத்துக்காரன், ஒரு மதத்துக்காரன் தாக்கப்பட்டால் அதை சார்ந்தவர்கள் மட்டுமே அதற்கு குரல் கொடுக்க வேண்டுமா? ஏன் மற்றவர்கள் அதற்கு குரல் கொடுப்பதில்லை?
நாம் அனைவரும் நம்மை ஒரு வட்டத்துக்கள் அடைத்துக்கொண்டது தான் காரணம்.
குறைந்த பட்சம் இவர்களாவது ஏதோ ஒரு காரணத்தினால் குரல் கொடுக்கிறார்கள்  என்று எண்ணி மகிழ்வதா அல்லது கோபப்படுவதா என்று தெரியவில்லை.

உண்மையில் நாம் இவர்களை நினைத்து பெருமைப்படுவதில் தவறில்லை. ஏன் எனில் இவர்களாவது அவர்களோடு ஏதோ ஒரு முறையில் சம்பந்தம் இருப்பவர்களுக்கு குரல் கொடுக்கிறார்கள். பெரும்பாலானோர் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன  என்று இருக்கிறார்கள். இவர்களை  விட அவர்கள் மேல். 

யோசிக்கத் தெரிந்த அனைவரும் முதலில் என் மதம், என் இனம், என் ஜாதி, என் மதம்  என்ற  வட்டத்திலிருந்து வெளியில் வர வேண்டும்.
அவர்கள் அடுத்த வட்டத்திற்கு செல்ல வேண்டும் அந்த வட்டம் நாம் அனைவரும் மனிதர்கள் என்று நினைக்கும் வட்டம் . முடிந்தால் நாம் அனைவரும் உயிர்கள்,இயற்கையின் அங்கம்  என்ற வட்டத்திற்குள்ளும்  செல்லலாம்.

இந்த வட்டத்திற்குள்  என்று மனிதன் செல்கின்றானோ  அன்றே மனதிலும் உலகிலும் அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கும். அதுவரை மனிதம் எங்கே போனது  என எங்கு தேடினும் கிடைக்காது.
ஆமாம் நீங்கள் எந்த வட்டத்திற்குள் இன்று இருக்கின்றீர்கள்?

8 கருத்துகள்:

  1. //நீங்கள் எந்த வட்டத்திற்குள் இன்று இருக்கின்றீர்கள்? //

    அதேதான் நானும் கேட்கிறேன்.

    கிண்டல் இல்லை, என் கேள்வியை நன்கு கவனிக்கவும்., அப்படியும் புரியவில்லை எனில்., சொல்லவும், காலையில் பல் விளக்கிய கையோடு அதனையும் விளக்க முயற்சிக்கிறேன்.

    ஹி ஹி ...

    பதிலளிநீக்கு
  2. ///நீங்கள் எந்த வட்டத்திற்குள் இன்று இருக்கின்றீர்கள்? //

    அதேதான் நானும் கேட்கிறேன்.

    கிண்டல் இல்லை, என் கேள்வியை நன்கு கவனிக்கவும்., அப்படியும் புரியவில்லை எனில்., சொல்லவும், காலையில் பல் விளக்கிய கையோடு அதனையும் விளக்க முயற்சிக்கிறேன்.

    ஹி ஹி ... //
    என் கேள்விக்கே மறு கேள்வியா ? :)
    உங்கள் விளக்கத்திற்காக காத்திருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  3. your thought is very good brother.....good post

    see my post in my blog "kadavulariviyal part1 and two"

    url: ezuthuru.blogspot.com

    i already explained this topic in two times please see and post comment

    again i reply your thought very good

    பதிலளிநீக்கு
  4. //கிருபா said...

    பதிவு நன்றாக இருந்தது

    இதையும் படியுங்ககள்


    கடவுளறிவியல் (ஆத்திகம்+நாத்திகம்+அரசியல்)

    கடவுளறிவியல் 2(ஆத்திகம்+நாத்திகம்+அரசியல்)
    //

    தங்களுடைய கருத்துக்கும் தங்களுடைய பதிவுகளை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி......

    பதிலளிநீக்கு
  5. புரட்சியாளரே இப்பதான் உங்கபேருக்கான அர்த்தத்தையே புரிஞ்சிக்கிட்டேன்.

    தங்களது சமுதாய சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. //

    சிவ.சி.மா. ஜானகிராமன் said...

    புரட்சியாளரே இப்பதான் உங்கபேருக்கான அர்த்தத்தையே புரிஞ்சிக்கிட்டேன்.

    தங்களது சமுதாய சிந்தனைக்கு வாழ்த்துக்கள்//

    அதுக்குள்ள கண்டுபிடித்து விட்டீர்களா :) (ஒட்டு போட மறந்துடாதிங்க......) தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சிவனடியரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒ இது தவறாக தெரிகிறதே.....
      இந்த ஒட்டு பதிவுலகம் சம்பந்தப்பட்டது அல்ல... நேரம் வரும்பொழுது சொல்கிறேன் இது பற்றி

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...