வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

திங்கள், 30 ஜனவரி, 2012

முகமது நபி தூதரா? யோகியா?



இன்று காலை உறங்கிக்கொண்டிருக்கும்  பொழுது திடீரென்று  ஒரு சிந்தனை, ஒரு விழிப்பு.
குர்ஆனில் முனீர் என்ற சொல்லை பார்த்ததாக ஞாபகம்.  அந்த சொல்லை படிக்கும் பொழுதே பல சிந்தனைகள் எழுந்தது. இந்த முனீர் என்ற சொல் நமது முனிவர் என்ற சொல்லோடு ஒத்துப்போவதாகவே நான் உணந்தேன். 

இன்று காலை இந்த முனீர் என்ற சொல்லை நாம் தமிழ் வளர்த்ததாக கூறும் அகத்தியரோடு நான்  தூங்கும் பொழுது ஒப்புமை படுத்தி  பார்க்கிறேன்  என்னையறியாமல். (இத்துடன் விழிக்கிறேன் பிறகு சிந்தனைகள்)

அகத்தியரை தமிழர்கள் குள்ள முனி என்றும் குறு முனி என்றும் தான் கூறுவர்.

மேலும் தவம் செய்வோரை, தியானம் செய்வோரை முனி,முனிவர், சித்தன், யோகி என்று கூறுவதும் வழக்கம்..

அப்பொழுது முனீர் என்ற அரபு சொல்லும் முனிவர்களைத்தான் குறிக்கின்றதா என்றால். இல்லை.
அரபில் இந்த முனீருக்கு ஒளி என்று என்று விளக்கம் தருகிறார்கள்.

முனீருக்கும்  ஒளிக்கும் என்ன சம்பந்தம்?
ஹா ஹா ஹா 

"முனிவன் வேறு ஒளி வேறு அல்ல
ஒளியை கண்டவனே  முனியாவன்
பின்பு முனியே ஒளியாவான்"

முகமது நபி சிறு வயதிலே பெற்றோரை இழக்கின்றார். அனாதையாகின்றார்(அனாதியை அறிய? :) )

இருப்பத்தைந்து வயதில் திருமணம் நடக்கின்றது. 
ஒரு கட்டத்தில் வாழ்கையில் வெறுப்பு ஏற்ப்படுகின்றது.
 ஒரு கட்டத்தில் தியானம், தவத்தில் ஈடுபடுகின்றார்.  தன்னுடைய நாற்பதாவது வயதில் இறைவன் வெளிப்படுகிறார் அல்லது முதல் இறை தரிசனம் கிடைக்கின்றது.

 தியானத்தின் அல்லது தவத்தின்  மூலம் கிடைத்த இறை தரிசனத்தாலும் பிறகு கேப்ரியல் என்ற ஏஞ்சலின் உதவியாலும்(கடவுளின்  வார்த்தைகளை இந்த ஏஞ்சல் தான் நபிக்கு கூறுகின்றது பிறகு  அதுவே குரானகிறது என்பது வரலாறு. இது நடப்பதில் ரமலான் மதத்தில் அதனால் தான் ரம்ஜான்), தன்னுடைய  சிந்தனைகளாலும்  வளர்ந்த/வந்த  அறிவைத்தான் அவர் இறைவன் தந்த வேதமாக சொல்கிறார்.

ஏன் அவர் தன்னை யோகி, முனி  என்று கூறாமல் இறைத்தூதர் என்று கூறுகிறார் என்று நீங்கள் கேட்கலாம்.

கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. இது சற்று கொச்சையான பழ மொழி இருப்பினும் அது உண்மையை தெளிவு படுத்தும் என்பதால் கூறுகிறேன்.யாரையும் இழிவு படுத்துவது என் நோக்கமல்ல.

 "கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை" என்று சொல்வார்கள் இதன் உண்மையான பொருள் எனக்கு தெரியாவிடினும் இதை நான் பின்வருவனவற்றிற்கு பயன்படுத்துகிறேன்.

இந்தியாவில் தன்னை உணர்ந்த சிலர் தன்னை இறைவன் என்று கூறிக்கொண்டனர்.
சிவனாவதே சித்தர்களின் நோக்கம். அதாவது இறைவனாவது. 
இது தமிழ் சித்தர்களின் இந்திய யோகிகளின் நம்பிக்கை. இதுவே உண்மையும் என்று நினைக்கின்றேன்.

பின்பு இந்தியாவில் யோகம் கற்றுக்கொண்ட இயேசு தன்னை இறைவனின் பிள்ளை என்று கூறினார்.
இதுவும் உண்மையே .

இதற்குப்பின் வருகிற முகமது நபி தன்னை இறைத்தூதன் என்று கூறுகின்றார். இதுவும் உண்மையே.

தன்னை இறைவனாக உணர்ந்தவன், பிறகு இறைவனின் பிள்ளையாக உணர்கிறான், பிறகு இறைத் தூதனாக உணர்கிறான் ஏன்? 

இன்றும் இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் தன்னை இறைவன் என்றே உணர்கிறார்கள் அல்லது அப்படி கூறுகிறார்கள்.

ஏசுவும், நபியும் தங்களை இறைவன் என்று கூறாமைக்கு காரணம் மற்ற பகுதிகளில் இவர்களை ஏற்றுகொள்ள மாட்டார்கள்  என்று உணர்ந்திருக்கலாம். இந்தியாவில் சித்த யோக கலாச்சாரம் அனைவருக்கும் தெரியும்  என்பதால் இங்கே ஒருவனை இறைவன் எனும் பொழுது நம்புவார்கள்.
ஆனால் இதைப்பற்றி அவ்வளாக தெரியாதவர்கள் மத்தியில் தன்னை இறைவன் என்று சொல்வதை ஏற்க்க மாட்டார்கள் என்று அவர்கள்  யோசித்திருக்கலாம்.

தான் இறைத்தூதன் என்று முகமது  நபி சொன்னதையும் மக்கள் நிராகரிக்கவே  செய்தார்கள்.  இருப்பினும் சற்றேனும்  ஆன்ம  விழிப்படைந்தவன்  கூறுவதை யார் தான் ஏற்காமல் போவர்?.
அப்படித்தான் முதலில் அவரது மனைவியும், பிறகு மகனும்,பிறகு சுற்றத்தாரும்  அவரை இறைத்தூதராக நம்ப ஆரம்பிகின்றார்கள்.

அடுத்த பதிவும் முகமது நபியை பற்றித்தான். பின்வரும் இரண்டு பொருளை பற்றி எழுதலாம்  என்று எண்ணம். இறைவன் விரும்பினால் பாப்போம் 

நபியின் குரு யார்?
நபி வன்முறையாளரா? 

(குறிப்பு:நபியின் வரலாற்றை  விக்கிபீடியாவில் இருந்து படித்தேன்.  இந்த பதிவின் நோக்கம் நபியையும்  அல்லது இசுலாமையும்   குறை சொல்வதோ பெருமை படுத்துவதோ அல்ல. (அவன் இவன் என்று கூறுவதையும் குறைக்க வேண்டும்.முன்பு கோள்களை அப்படித்தான் கூறினேன் பிறகு திருத்திக்கொண்டேன்). எனக்குள்ள சிந்தனைகளை  பகிர்ந்துகொள்கிறேன்.  அவ்வளவே.
எழுதவேண்டும் என்ற அதீத உந்துதல் உள்ளிருந்து வந்து கொண்டே இருக்கின்றது. யாவும் நன்மைக்கே? :) ....எல்லாம் இறைவன் செயல் )

புதன், 25 ஜனவரி, 2012

ஞாநி- அணு உலைகளின் வரம் அதிகமாகிறதா சாபம் அதிகமாகிறதா?

உலக அளவில் தற்பொழுது 435 அணு உலைகள் இயங்கிகொண்டிருக்கின்றன.மேலும்  63 அணு உலைகள் தற்பொழுது தயாராகிக் கொண்டிருக்கின்றன. 
தற்பொழுது அதிகபட்சமாக 
அமெரிக்காவில் 104  அணு உலைகளும் 
பிரான்சில்  58
ஜப்பானில் 50
ரஷியாவில் 33
சீனாவில் 22
கொரியாவில் 21 
இந்தியாவில் 20 அணு  உலைகளும் இயங்கிகொண்டிருக்கின்றன.

இதுமட்டுமல்லாமல்   மேலும் அதிகபட்சமாக
சீனா 28
ரஷியா 10
இந்தியா 6
அணு உலைகளையும் கட்டிகொண்டிருப்பதாக ஐரோப்பா நியூகிளியர் சொசைட்டி தெரிவிக்கின்றது.

ஒரு விபத்து அப்பொழுது வாழும் உயிர்களை மட்டும் பலி வாங்கினால், பாதித்தால் பரவாயில்லை. ஆனால் அணுஉலை விபத்துகள் காலம் காலமாக சந்ததிகளையும் பாதிக்கும் ஆதலால் அணு உலைகளை மூட வேண்டும் என்பது  ஞாநி  அவர்களின்  வாதம். 

எனக்கு என்ன சந்தேகம் என்றால் அணு உலைகள் இவ்வளவு பயங்கரமானது என்று தெரிந்தும் ஏன் இத்தனை நாடுகள் அதை பயன்படுத்துகின்றன. 

ஜப்பான் சுனாமிக்கும், நில நடுக்கத்திற்கும்  பெயர் போனது.....அவர்கள் ஏன் இத்தனை அணு உலைகளை   கட்டி வம்பை விலை கொடுத்து வாங்குகின்றனர். அவர்கள் மீதி உள்ள உலைகளை மூடி விடுவார்களா?

ரஷியாவில் மிக பயங்கரமான அணு உலை விபத்து நடந்த பிறது அது ஏன் இன்னும் பத்து அணு உலைகளை கட்டி கொண்டிருக்கின்றது.?
அவர்களுக்கு மக்களின் மீது அக்கறை இல்லையா?

பதிலை காலம் தான் சொல்ல வேண்டும்.  ஞாநி  அவர்களின் பதில் இதற்கு என்ன என்று தெரியவில்லை.

குறிப்பு: இந்த பதிவு அணுஉலைகளுக்கு ஆதரவாகவும் அல்ல எதிராகவும் அல்ல. ஒரு ஆரோக்யமான சிந்தனைக்கு,  இது வித்திட வேண்டும் என்பதே ஏன் ஆவல்.


ஞாநி: சிறந்த சிந்தனையாளர். இவர் எழுத்துக்கள் படிப்பவரின் சிந்தனையை தூண்டும்.
நான் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு காலத்தில் இவர் எழுத்துக்களை தொடர்ந்து  படித்தேன்.இப்பொழுது மீண்டும் படிக்க ஆரம்பித்துள்ளேன்.  என்னை சித்திக்க வைத்த  ஞாநி  அவர்களுக்கு அடியேனின் கோடான கோடி நன்றி. 

இருப்பதைந்து ஆண்டுகளாக  ஞாநி அவர்கள்  அணு உலைகளுக்கு எதிராக எழுதி வருகிறார்.. தான் எழுதியதை ஒரு புத்தகமாக அவர் வெளியுட்டுள்ளார் அதற்க்கான சுட்டி . 



ஞாநி அவர்களின் வாதத்தை வலு சேர்க்கும் விதத்தில் 2022 வாக்கில் அனைத்து அனு உலைகளையும் மூடப்போவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. அறிவித்ததை நடைமுறைப்படுத்துவார்களா என்பதை    பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

கூடங்குளம் போராட்டம் தேவையா?



அணுமின் நிலையத்திற்கு எதிராக கூடங்குளம் மக்கள் போராடுகிறார்கள் இது நியாயமானதா என்ற சந்தேகம் என் மனதில் பல நாட்களாகவே உண்டு. அந்த கேள்விகளை இப்பொழுது இறக்கி வைக்கிறேன்.

கூடங்குளம் மக்களுக்கு இருக்கும் பயம் மரணபயம், தன் சந்ததிகளின் ஆரோக்யமான வாழ்க்கையை பற்றிய  பயம். இது நியாயமான பயம். உலகில் உள்ள அனைத்து மக்களும் உயிருக்கும்,சந்ததிகளுக்கும் வரும் ஆபத்தை எதிர்க்கவே செய்வார்கள்.

இவர்களின் இந்த பயத்திற்கு காரணம் ஜப்பானில் ஏற்பட்ட ஒரு விபத்து மற்றும் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று அந்த மக்களுக்கு விளக்கியது அவர்களுக்கு பீதியை,பயத்தை உருவாக்கிவிட்டது. 

எந்த ஒரு விபத்தையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஓரளவிற்கு தடுக்க  முடியும். சில நேரங்களில் முன்னெச்சரிக்கையையும் மீறி விபத்துகள் நடந்து விடுகிறது.

சாலை விபத்துகள்  நடக்கின்றது என்பதற்காக நாம் சாலையை பயன்படுத்தாமல் விட்டு விடுகின்றோமா? 
மின்சார விபத்துக்கள்  நடக்கின்றது என்பதற்காக நாம் மின்சாரத்தை   பயன்படுத்தாமல் விட்டு விடுகின்றோமா ?
சமையல் எரிவாயுவினால் விபத்துகள்  நடக்கின்றது என்பதற்காக நாம் சமையல் ரிவாயுவை   பயன்படுத்தாமல் விட்டு விடுகின்றோமா ?

இதை கூடங்குளம் மக்கள் சிந்திக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இப்போராட்டத்தை கை விட வேண்டும்.

ஒருவேளை நிச்சயமாக அணுமின் நிலையத்தால் விபத்துக்கள் ஏற்படும் என்று உணர்ந்தால் இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கும் அணுமின் நிலையங்களை  மூட அங்கிருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், சேர்ந்து போராட வேண்டும். அது போராட்டத்திற்கு வலு சேர்க்கும். அல்லது அவர்கள் அளிக்கும் தைரியம்  இவர்களை சாந்தப்படுத்தலாம்.  அதே நேரத்தில் மத்திய அரசிடம் பேசி நிறைய சலுகைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். 

செவ்வாய், 17 ஜனவரி, 2012

தமிழர் திருநாள்- முசுலிம்களும், கிருத்தவர்களும் தமிழர்கள் இல்லையா?


தமிழர் திருநாள், உழவர் திருநாள்  எனும் பொங்கல் பண்டிகை உண்மையிலேயே அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகின்றதா  என்று எனக்கு தெரியவில்லை. குறிப்பாக முசுலிம்களும், கிருத்தவர்களும் எனக்கு தெரிந்து கொண்டாடுவதில்லை (தெரியப்படுத்தினால் மகிழ்வேன்). 

ஏன் அவர்கள் தமிழர்கள் இல்லையா? மதம் எவ்வாறு தமிழர்களிடையே ஒரு பிளவை உண்டாக்கியுள்ளது என்பதை அவர் அவர்களது சுய சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

தமிழர் திருநாளை இந்துக்களே பெருமளவில் கொண்டாடுகின்றனர் என்பது இதன் மூலம் விளங்குகின்றது.

தமிழன் செய்யும் அனைத்தையும் அது பார்ப்பானின் திணிப்பு என்று கூறும் திராவிடவாதிகள் ஏன் இந்துக்களால் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் எனும் பொங்கல் பண்டிகையை தானும் கொண்டாடுகின்றனர். இதையும் இந்து பண்டிகை என்று சொல்லி ஒதுக்க வேண்டியது தானே?
(உடனே இது உழைப்பவர்கள் திருநாள்னு என் கிட்ட சொல்லகூடாது....சூரியனுக்கு  ஏன் பொங்கல் படைக்கிறீர்கள்  என்று நான் கேட்பேன்). ஆக இதை தன்னை திராவிடவாதிகள் என்று கூறுபவர்களின்  சுய சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

பொங்கல் பண்டிகையை நான் இந்துக்களின் பண்டிகையாக பார்க்கவில்லை. தமிழர் திருநாளை நான் இயற்கையின் பண்டிகையாக,உழவர்களின் பண்டிகையாக, தமிழர்களின் பண்டிகையாகவே பார்க்கின்றேன்.  மத பேதத்தை விடுத்து உழவர் திருநாளை, தமிழர் திருநாளை, இயற்க்கைக்கு நன்றி செலுத்தும்   இத்திருநாளை அனைவரும் கொண்டாடவேண்டும் எனபதே என் ஆசை. 

காணும் பொங்கலான இன்று நான் பலரை "காண"  வெளியே கிளம்புவதால் இதை படிப்பவர்கள் அனைவருக்கும் காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன். 

செவ்வாய், 10 ஜனவரி, 2012

இனி பண்ருட்டி பலாப்பழம் , முந்திரி கிடைக்காது தெரியுமா?


பண்ருட்டி என்றால் பலாப்பழம் என்று பலரும் கூறுவார்கள். அதற்க்கு அடுத்த படியாக முந்திரியும் பண்ருட்டியின் சிறப்புதான். ஆனால் இவை இரண்டும் இனி இங்கே கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.

தானே  புயலால் பண்ருட்டி மற்றும் அதன் சுற்று  வட்டாரத்தில் உள்ள முந்திரி மரங்கள் மற்றும் பலா மரங்கள் வேரோடு விழுந்துவிட்டன. விழுந்த மரங்கள் ஐம்பது சதவீதம் முதல் எழுபது சதவீதம் வரை இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. மிஞ்சியிருக்கும் மரங்களிலும் கிளைகள் இல்லாமல் மொட்டையாகவே இருக்கின்றது.

புதிதாக செடி வைத்து உண்டாக்கினால் அவை வளர்ந்து பலன் கொடுக்க  மிக குறைந்த பட்சமாக ஐந்து முதல் பத்து ஆண்டுகள் ஆகும். அதுவரை இங்குள்ள மக்களின்  கதி? :(

பெரும்பாலான மக்கள் முந்திரி, பலாவை நம்பியே இந்த பகுதியில் வாழ்ந்து வந்தனர். இதுதான்  அவர்களுக்கு சோறு போட்டது.  எந்த ஒரு நல்ல காரியம் ஆனாலும் அது முந்திரி விளைச்சலுக்கு பிறகு தான் இங்கு நடக்கும்.  முந்திரி பலாவில் வரும் பணத்தை வைத்து தான் தன் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்வார்கள், படிக்க பணம் கட்டுவார்கள். இனி இவர்கள் என்ன செய்யப்போகிறார்களோ தெரியவில்லை. 


முந்தரி  கொட்டை  உடைத்து, முந்திரி பயிர் உரித்துதான் இங்குள்ள பெண்கள் தங்கள் குடும்பத்தை நடத்தி வந்தனர் இனி அவர்களுக்கு அந்த வருவாய் கிடைக்கப்போவதில்லை. 

தமிழக அரசு முந்திரி பலாவிற்கு ஹெக்டேருக்கு ஒன்பதாயிரம் ரூபாய் அளிப்பதாக கூறியுள்ளது. இப்பணம் விழுந்த மரங்களை  அப்புறப்படுத்த தரும் கூலிக்கு கூட போதாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. 

யாருக்கு சில மரங்கள் தப்பிபிழைத்துள்ளதோ  அவர்கள் கொள்ளை இலாபம் ஈட்டுவார்கள் என்றே நினைக்கின்றேன். முந்திரி மற்றும் பலாவின் விலை இனி விண்ணைத்தொட போகிறது.  

முக்கனியான பலா இனி தமிழனுக்கு எட்டாக்கனிதான்.


சனி, 7 ஜனவரி, 2012

சனி பகவானின் அருள் பெற என்ன செய்ய வேண்டும்?


சூரியக்கதிர்  எப்படி நம்மீது, புவி மீது படுகிறதோ அவ்வாறே சனியின் கதிர் வீச்சும்  நம்மீது படுகிறது.

சனி பகவான் இல்லையேல் நாம் இல்லை. நாம் உலகில் நிம்மதியாக அமைதியாக  வாழ முடியாது. அப்படி இருக்க ஏன் அவரை கண்டு பயப்பட வேண்டும்.
 ஆயுளை நீட்டிக்கும் சக்தி சனிபகவானுக்கு அதிகம் உண்டு அப்படிப்பட்ட சனிபகவானை பார்த்து மக்கள் பயப்பட தேவையில்லை. 

சனி பகவானின் அருளைப்பெற சில வழிகள்:
௧. உண்மை நேர்மை இவற்றை பின்பற்ற வேண்டும்
௨. உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற பேதம் பார்க்க கூடாது
௩. நிற பேதம் பார்க்க கூடாது.(கருப்பா அசிங்கமா என்ற வார்த்தைகளை மறந்து விடுதல் நன்று. சனியனே, சனியன் பிடித்தவேனே என்ற வார்த்தைகளையும் தவிர்ப்பது மிக நன்று )
௪ . ஏழை எளியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும்,விதவைகளுக்கும்   உங்களால் முடிந்த  உதவிகளை செய்யுங்கள். கண்டிப்பாக இவர்களை பார்த்து முகம் சுழித்தல் கூடாது. 
௫. சனிக்கிழமை தோறும் அல்லது மாதத்திற்கு ஒரு சனிக்கிழமையாவது  நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது மிக நன்று. 
௬. உணவில் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்வதும் நன்று 
௭ . இனிப்பால் ஆன எள்ளுரண்டை சாப்பிடலாம் - குழந்தைகளுக்கு கொடுங்கள் 
௮ . பாதங்களை  தூய்மையாக வைத்து கொள்ளுதல் அவசியம் 
௯. சனிக்கிழமைகளில் நீல நிற ஆடை அணியலாம் 
௧௦.வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் வழிபடுதல் நன்று.  இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அனுமன் மற்றும் விநாயகரை வணங்கலாம் என்று சொல்கிறார்கள். 
௧௧. வயதில் மூத்தவர்களுக்கும் , வயதானவர்களுக்கும்   மரியாதை  தருதல்  நன்று (பெற்றோரை தவிக்க விட்டால் ஆப்புதான் )
௧௨. துப்புறவு தொழிலாளர்களையும் , சாக்கடை சுத்தம் செய்பவர்களையும் (அட எந்த தொழில் செய்பவர்களையும்) தாழ்வாக என்ன கூடாது. 
௧௩.நேரம் கிடைக்கும் பொழுது நெற்றி வேர்வை நிலத்தில் படும்படி உடல்  அழுக்காகும் படி   வேலை செய்வது (உபயம்:முருகேசன் சார்)அல்லது விளையாடுவது நல்லது. 

இவற்றை எப்பொழுதும் கடைபிடிக்க வேண்டும் . சனி திசை நடக்கும் பொழுதும் ஏழரை சனி நடக்கும் பொழுதும் இதை கடை பிடிப்பதும் நன்மையை தரும். 

உண்மையாக,  நேர்மையாக, தவறு செய்யாமல்  நடந்து கொள்பவர்களுக்கு சனி பகவான் நன்மையே செய்வார். தவறு செய்பவர்களுக்கு கண்டிப்பாக சனிபகவானால் தண்டனை  கிடைக்கும். ஆக முடிந்த வரை நல்லவனாக வாழ்வதே சனி பகவானின் அருளைப்பெற ஒரே வழி. 
Related Posts Plugin for WordPress, Blogger...