வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 23 மார்ச், 2012

இசுலாமியர்கள் தினமும் வணங்குவது சிவனையா?


இசுலாமியர்கள் தினமும் ஐந்து வேளை வணங்குகிறார்கள் அல்லது தொழுகை செய்கிறார்கள் என்று தெரியும். அப்படி தொழுகை செய்யும் பொழுது அவர்கள் மெக்காவில் உள்ள காபாவை நோக்கி தொழுகிறார்கள். அந்த காபாவில்  அப்படி என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தால் அங்கே இருப்பது  ஒரு சிவலிங்கம் என தெரியவருகிறது. இந்த சிவலிங்கத்தை அவர்கள் கருப்புக்கல் என்கின்றனர். இந்த கல்லை மிகவும் புனிதமாக இசுலாமியர்கள்  கருதுகிறார்கள்.


ஆபிரகாமிய   மதங்களின்  முன்னோடியாகவும் முக்கிய நபியாகவும் கருதப்படும்   ஆபிரகாம் தான் இந்த காபாவை கட்டினார்.  இக்கல்லை அல்லது சிவலிங்கத்தை நிறுவினார்.இந்த கல் ஒரு சிவலிங்கமாக இருக்ககூடும் என்று ரவி ஷங்கர் ஒரு முறை கூறியிருந்தார் அதை  சாகிர் நாயக் மறுத்தார் என நினைக்கின்றேன்.  இருப்பினும் திறந்த மனதுடன் இதை ஆராயும் பொழுது அது ஒரு சிவலிங்கமாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.

இந்த கல் வானிலிருந்து கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த கல்லைத்தான் காலம் காலமாக அங்குள்ள மக்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர்.  இந்த காபாவில் இந்த கல்லை தவிர்த்து 360 சிலைகளையும் அங்குள்ள மக்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர். முகமது நபியால் இங்குள்ள சிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. 

ஆனால் அவர் அந்த கல்லை மட்டும் ஒன்றும்  செய்யவில்லை. காரணம் அந்த கல் அவ்வளவு புனிதமாக கருதப்பட்டது. 

இன்றும் அந்த கல் இசுலாமியர்கள் செல்லும் ஹஜ் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அந்த கல்லை முகமது நபி முத்தமிட்டார் என்பதால் ஹஜ் அல்லது புனித யாத்திரை செல்லும் இசுலாமியர்களும் அந்த கல்லை முத்தமிட முயற்சிக்கின்றனர். கூட்ட நெரிசலால் முத்தமிட முடியாததால் தனது வலது கரத்தால் அக்கல்லை  தொட  முயற்சிக்கின்றனர். 

இசுலாமியத்தில் சிலை வழிபாடு கிடையாது. இந்த கல்லை அவர்கள் புனிதமாக கொண்டாலும் அதற்கு வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை என்கின்றனர் இசுலாமியர்கள்.

ஆனால் முகமது நபியோ இக்கல்லை "அல்லாவின் வலது கரம்" என்கிறார்.  இந்த ஒன்றே அவர் இக்கல்லிற்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்துள்ளார் என்பதை காட்டுகிறது. 

இக்கல்லை அவர் ஏன் அல்லாவின் வலது கரம் என்றார் ...அல்லாவின் வலது கரம் என்றால் சும்மாவா ?

மேலும் இன்றும் அக்கல்லை  ஹஜ் யாத்திரையில் முத்தமிட முடியாத இசுலாமியர்கள்  "In the name of God, God is Great, God is Great, God is Great and praise be to God". (இறைவனின் பெயரால் இறைவன் சிறந்தவன், இறைவன் சிறந்தவன்,இறைவன் சிறந்தவன் புகழனைத்தும் இறைவனுக்கே  )என்று கூறுகிறார்கள்.  இந்த கல்லுக்கு இசுலாமில் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதை இது  தெள்ள தெளிவாக காட்டுகிறது. 

இசுலாமில் சிலர் தீர்ப்பு நாளில் இந்த புனித கல்லுக்கு பார்க்க கண்ணும் பேச நாக்கும்  தோன்றி தன்னை பக்தியுடன்  முத்தமிட்டவர்களுக்கு சாதகமாகவும் காபாவை வலம் வரும்பொழுது வதந்திகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும்  சாட்சியம் கூறும் என்று நம்புகின்றனர்.
("the Stone will appear on the Day of Judgement (Qiyamah) with eyes to see and a tongue to speak, and give evidence in favor of all who kissed it in true devotion, but speak out against whoever indulged in gossip or profane conversations during his circumambulation of the Kaaba"..  Source:wikipedia).

இவர்கள் சொல்வது அம்மன் சிலைக்கு கண்ணும் நாக்கும் வைத்து இருக்கும் சில சிலைகளை ஞாபக படுத்துகிறது.

அவர்கள் வணங்குவது சிவனையோ அல்லது அம்மனையோ அல்லது அல்லாவையோ அல்லது பண்டைய அராபிய கடவுளோ அது இறைவனுக்கு  மட்டுமே தெரியும். இருப்பினும் இந்து மதத்தின் தாக்கம் அல்லது இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை எந்த அளவிற்கு  உள்ளது என்பதை நேரம் கிடைக்கும் பொழுது பார்ப்போம்.

நன்றி: http://en.wikipedia.org/wiki/Black_Stone

80 கருத்துகள்:

  1. நண்பர் புரட்சி மணி - அரைகுறையாக கேள்விப்பட்ட விஷயத்தை வைத்து, இஸ்லாத்திற்கு களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார். அதற்கான விளக்கம் இந்த இணைப்பை பார்த்து அறியலாம் .: http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/kallai_thottu_muthamiduvathu_en/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மர்மயோகி,
      இருக்கின்ற செய்தியைத்தான் தந்துள்ளேன்...இதில் எங்கே களங்கம் என்று எனக்கு விளக்குங்களேன். நீங்க கொடுத்த தொடுப்பில் நான் சொன்ன விடயத்திற்கு எந்த பதிலும் இல்லையே நண்பரே. இதில் குறிப்பிட்டுள்ள செய்திகளை கூறி அவரை ஒரு பதிவிட சொன்னால் நானும் மற்றவர்களும் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.
      தங்கள் வருகைக்கும் தொடுப்புக்கும் நன்றி
      .

      நீக்கு
    2. @மர்மயோகி,
      அரேபியாவில் அந்த ஒரு கல் மட்டும் இல்லை. பல கற்களும் இருந்துள்ளன அதை மக்கள் வழிபட்டும் வந்துள்ளனர்.
      இதைப்பற்றிய செய்தி குரானிலும் பைபிளிலும் உள்ளது.

      The Semiticcultures of the Middle East had a tradition of using unusual stones to mark places of worship, a phenomenon which is reflected in the Hebrew Bible as well as the Qur'an.[9] A "red stone" was associated with the deity of the south Arabian city of Ghaiman, and there was a "white stone" in the Kaaba of al-Abalat (near the city of Tabala, south of Mecca). Worship at that time period was often associated with stone reverence, mountains, special rock formations, or distinctive trees.
      http://en.wikipedia.org/wiki/Black_Stone

      இங்கு கல்லை அல்லது சிவலிங்கத்தை வழிபடுவதுபோல் அங்கும் கல்லை வழிபட்டுள்ளார்கள் என்பது தெரிய வருகிறதா?
      இதற்க்கு உங்கள் மற்றும் பிஜெ பதில் என்ன?
      இதன் மூலம் அரேபியாவில் இருந்த லிங்க அல்லது கல் வழிபாட்டின் மீதிதான் இசுலாமியர்கள் புனித கல்லாக கருதும் கருப்புக்கல்
      என்று சொல்வதற்கு வலுவான ஆதாரம் உள்ளது அல்லவா?

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  2. முற்றிலும் புதிய, அரிய செய்தியைத் தந்திருக்கிறீர்கள்.
    மர்மயோகிக்கு நீங்கள் தந்த பதில் சரியானதே.
    மர்மயோகியிடமிருந்து, ‘பதிலுக்குப் பதில்’ எதிர்பார்க்கலாம்தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் பரமசிவம் அவர்களே,
      இச்செய்தி உங்களுக்கு புதிதாக இருக்கும் பட்சத்தில் இன்னும் புதிய செய்திகள் உங்களுக்காக வரும் என நீங்கள் எதிர்பார்க்கலாம் அவரின் பதிலை பொறுத்திருந்து பார்ப்போம். :)

      நீக்கு
  3. //ஹஜருல் அஸ்வத் என்னும் கல்ன் சொர்க்கத்தின் கற்களில் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளனர். இந்தச் செய்தி பலவீனமானது என்ற போதும் ....//

    சில கேள்விகளுக்கு பலவீனமான ஹதீஸ்கள் என்ற பதில் வரும்போது எனக்குள் வரும் கேள்வி ஏன் இன்னும் அந்தப் பலவீனமான ஹதீஸுகளை வைத்து அவைகளையும் ஏன் நம்புகிறார்கள்; கேள்வி கேட்டால் பதில் சொல்ல வசதியாகவும் ஆகிவிடுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் தருமி ஐயா,
      பலவீனமானது என்று ஒதுக்கினால் எல்லாவற்றையும் ஒத்துக்க வேண்டி வரும். ஆதலால் தான் நிறைய மதங்கள் இவ்வழியை பின்பற்றுகின்றன என நினைக்கின்றேன்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      நீக்கு
    2. ஐய்யா, ஒரு நாட்டை நல்லாட்சி செய்த மன்னனின் வரலாற்றை மட்டும் எடுத்துக்கொண்டு கொடுங்கோல் ஆட்சி செய்த மன்னனின் வரலாற்றை அழித்து
      விடலாமா? தோற்றம் முதல் இன்று வரை நடந்தது, நடப்பவை, ந.போவது எல்லாம் பதிவாகின்றன அது எமக்கு அவசியமும் கூட.

      நீக்கு
    3. ஐய்யா, ஒரு தேசத்தை நல்லாட்சி செய்த மன்னனின் வரலாறு பதிவில் இருக்கிறது, அதே தேசத்தை கொடுங்கோல் ஆட்சி செய்த மன்னனின்
      வரலாற்றுப்பதிவுகள் நீக்கிப்பட்டு அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்லலாமா.

      நீக்கு
  4. நீங்க சொல்றதப் பார்த்தா சைவம், வைணவம், இஸ்லாம் என்ற மூன்றும் இந்து மதத்தின் பிரிவுகள் என்று எடுத்துக்கொள்ளலாமோ?
    ஏற்கனவே அவிய்ங்க இஸ்லாம் மதமல்ல என்றுதான் சொல்லி வருகிறார்கள். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராபின்,
      இந்த மதங்கள் மட்டும்தான இன்னும் நிறைய இருக்கு ...நேரம் கிடைக்கும்பொழுது எழுதுகிறேன் . நீங்கள் en karuththil வேறுபட வாய்ப்புகள் உண்டு. :)
      உண்மை எதுவாகினும் நாம் நட்புறவுடன் இருப்போம் :)

      நீக்கு
    2. போன வாரம் சமைத்த சட்டியில் தான் இன்றும் சமைத்தார்கள்அதற்காக போனவாரம் சமைக்கப்பட்ட உணவுக்கு இன்றைய உணவைப்பார்த்து சொல்ல
      முடியாது, நானும் நீயும் ஒரே தகுதியில் இருக்கிறோம் என்று. பலகோடி ஆண்டுகளை கடந்து விட்ட சட்டிக்கு (உலகம்) இன்றைய நாள் 1400
      வருடங்களுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டது. நாளை மறுமை நாள் தான்.

      நீக்கு
  5. அவர்கள் வணங்குவது சிவனை அல்ல....எங்க ஊரு முனியாண்டி சாமியை. அவர்தான் இந்த பிரபஞ்சத்தின் ஏக இறைவன்.

    நீங்களும் எங்க ஊரு முனியாண்டி சாமியை சிவனென்று கொண்டாடினால் மகிழ்ச்சியே.

    முன்னால் ஆண்டி...இந்த பரந்த உலகை முன்னால் ஆண்டவர்...
    முனி ஆண்டவர்....முனியாண்டியை நீங்கள் முனி ஈஸ்வரன் என்று சிவலிங்கமாக்கிவிட்டீர்கள்.

    யார் எந்தப் பெயரை வைத்து அழைத்தாலும், விழித்தாலும், தொழுதாலும் எங்க ஊரு முனியாண்டியே ஒரே ஏக இறைவன். அவரை மிஞ்சி இறைவன் என்ற பதமே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராவநேஷ்வரன்,
      உங்கள் கருத்து அருமை. :) அதுவே உண்மையாகவும் கூட இருக்கலாம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
    2. ஆண்டியை வணங்குபவரா நீங்கள், அப்போ ஏன் ட்ராபிக் சிக்னல்ல தட்டோட வார அவருக்கு ஒர்ருபா போடறீங்க தாராளமா பர்சையே போடலாமே.

      நீக்கு
  6. முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா?


    இசுலாமியர்கள் தினமும் வணங்குவது சிவலிங்கத்தையா? என்று பதிவுகளை காணுகிறோம்.

    இஸ்லாத்தின் மீது உள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக் கல்லை வணங்குகின்றனர் என இஸ்லாத்தின் எதிரிகளால் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

    மக்காவுக்கு செல்கின்ற முஸ்லிம்கள் அங்கே கஃபா எனும் இறை இல்லத்தில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டிருக்கும் ‘கருப்புக் கல்’ என்று சொல்லப்படக் கூடிய அந்தக் கல்லைத் தொட்டு முத்தமிடுகின்றனர்.

    இவ்வாறு தொட்டு முத்தமிடுவது என்பது அந்தக் கல்லிற்கு புனித சக்தி இருக்கிறது என்பதற்காகவோ அல்லது அந்தக் கல் முஸ்லிம்களின் தேவையை நிறைவேற்றுகின்றது என்பதற்காகவோ அல்ல!


    சொடுக்கி ………….
    மேலும் படிக்க... Read more.. முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா?
    .
    ……………படிக்கவும்.

    .
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மதீனாவில் அடக்கமாகியுள்ள முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் அடக்கஸ்தல்த்துக்கு முன் உள்ள 'க்ரில்' (GRILL) கதவைத் தொட்டால் அங்கு நிற்கும் காவலர் தடியால் அடித்து விரட்டுவர்.

      காரணம்: அவ்வாறு தொடும்போழ்து, மனதில் நாம் முஹம்மத்(ஸல்) அவர்களை வணங்கி விடும் எண்ணம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே.

      மேலும், அவ்வாறு தொடுமாறு அவர்கள் நமக்குக் கட்டளையிடவுமில்லை.

      ஆனால், மக்காவில் உள்ள கருப்புக் கல்லையும்; க-அபா என்னும் சதுர வடிவான கட்டிடத்தின் கற்களையும் முஹம்மத்(ஸல்) அவர்களும் தொட்டார்கள்; நாம் அவர்களைப் பின்பற்றி அவற்றை தொட அனுமதியும் வழங்கியுள்ளார்கள்.

      அதனாற்றான், அங்குள்ள காவலர்கள் அவ்வாறு தொடும்போழ்து தடுப்பதில்லை.

      இதன் மூலம் அறிவதென்னவென்றால், 'எண்ணம்' தான் வேறுபடுகின்றன ஒரே மாதிரியான 'தொடுதல்' என்னும் செயற்களில்.

      எனவே நபி(ஸல்) அவர்களின் வழிகளைத்தான் இரு இடங்களிலும் இரு வேறான முறைகளில் பின்பற்ற படுகின்றன என்பதைப் புரிந்து கொண்டால் தெளிவு பிறக்கும். //

      தெளிவு எங்கே பிறக்குது, குழப்பம்தான் வருது.
      முகமதுவின் கல்லறையின் கிரில்லை தொட்டால் வணங்கி விடும் எண்ணம் ஏற்பட்டுவிடுமாம் காபா கல்லை தொட்டால் அப்படி ஒன்றும் ஏற்படாதாம்.

      நீக்கு
    2. வாங்க வாஞ்சூர் ஐயா,
      தங்களின் மன நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.
      இருப்பினும் முதலில் மற்றவர்களை எதிரியாக கருதும் என்னத்தை கைவிடுங்கள்.
      நம் கருத்துக்கள் தான் வேறு வேறே தவிர நாம் எதிரிகள் அல்ல.
      பரிணாமத்தின் படி பார்த்தாலும் சரி, ஆதாம் ஏவாளின் கதைப்படி பார்த்தாலும் சரி நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள். அப்படி இருக்க சக மனிதனை எதிரியாக பார்ப்பது சரியானது அல்ல.
      நாம் அனைவரும் சகோதரர்கள் என்பதை மனதில் வையுங்கள்.

      நீங்கள் கொடுத்த சுட்டியில் பல விடயங்களுக்கு நீங்கள் விளக்கம் அளிக்க வில்லை.
      அ. அக்கல்லை நபி "அல்லாவின் வலது கரம்" என்று கூறினாரா இல்லையா? ஏன்?

      ௨.ஹஜ் யாத்திரையில் அக்கல்லை முத்தமிட முடியாத இசுலாமியர்கள் "In the name of God, God is Great, God is Great, God is Great and praise be to God". (இறைவனின் பெயரால் இறைவன் சிறந்தவன், இறைவன் சிறந்தவன்,இறைவன் சிறந்தவன் புகழனைத்தும் இறைவனுக்கே )என்று கூறுகிறார்கள் என்பது உண்மையா இல்லையா? இதற்கு தங்கள் விளக்கம் என்ன?

      ௩.இசுலாமில் சிலர் தீர்ப்பு நாளில் இந்த புனித கல்லுக்கு பார்க்க கண்ணும் பேச நாக்கும் தோன்றி தன்னை பக்தியுடன் முத்தமிட்டவர்களுக்கு சாதகமாகவும் காபாவை வலம் வரும்பொழுது வதந்திகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் சாட்சியம் கூறும் என்று நம்புகின்றனர். இது ஹதீஸில் இருக்கின்றது என்கிறார்களே இது உண்மையா இல்லையா? இதற்கு தங்கள் விளக்கம்.?

      வாஞ்சூர் ஐயா, இசுலாமிற்கு களங்கம் கர்ப்பிப்பத்து எனது நோக்கம் அல்ல...நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளை என்பதை அனைவருக்கும் புரிய வைப்பதே எண் நோக்கம். சும்மா கதை சொன்னா மட்டும் போதாது சகோதரத்துடன் அன்புடன் அனைவரும் வாழ வேண்டும் எனபதே எண் நோக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  7. காபாவைப் பற்றி மேலும் விபரங்கள் அறிய

    http://www.faithfreedom.org/Articles/skm30804.htm

    http://www.answering-islam.org/authors/toler/abraham_kaaba.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா ராபின்,
      நீங்கள் கொடுத்துள்ள சுட்டி மிகவும் அருமை. அதிலும் அந்த முதல் சுட்டி பல சிந்தனைகளை தூண்டுகிறது.
      பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  8. //ஆபிரகாமிய மதங்களின் முன்னோடியாக அல்லது முதல் நபியாக கருத்தப்படும் ஆபிரகாம்// muthal varikalileye ungalin ISLAMIYA arivu meicelikerathu!
    Muthal nabi "ibrahim(alai)" avargal ellai "adam"(alai) avargal than!
    Ungalidam oru kelvi
    "neengal house loan vanga MATTU HASPITOL'ku povingla......ellai bank'ku povingla?
    Thayavu seithu ISLAM enral ennavenru ISLAMIYARGALUDAN mattum kelungal WIKIPEDIA'vidam ellai!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ ஜாபார், :)
      அபிராகமை பிழையாக முதல் நபி என்று எழுதிவிட்டேன். அதை என் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி.
      தவறு விகிபிடியாவுடையது அல்ல. இசுலாம் என்னவென்று நீங்களே சொல்லாலம், அபாடியே நான் பதிவில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பற்றி தங்கள் விளக்கத்தை அளிக்கலாம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  9. அன்பர்கள் பரமசிவம், ராபின், ராவணன், ஜாபார் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி...மின்வெட்டு பிரச்சனையால் தங்களுக்கு நாளை பதில் அளிக்கின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  10. நண்பர், நீங்கள் மிக interesting தகவலை தந்திருக்கிங்க.கல்லை வணங்கும் இந்துக்கள் என்று கிண்டல் பண்ணும் தமிழ் பகுத்தறிவாளர்கள் வழக்கம் போல இதையெல்லாம் கண்டுக்க மாட்டாங்க.
    இந்து மதத்தின் பிரிவுகளா சைவம் வைணவம் இஸ்லாம் என்ற ரொபினின் கேள்வி, ராவணன் சொன்ன முனியாண்டி சாமியே பிரபஞ்சத்தின் ஏக இறைவன், தருமி ஐயா சொன்ன பலவீனமான ஹதீஸ்-பலமுள்ள ஹதீஸ் எல்லாமே நிறைய சிந்திக்க வைச்சுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உடனடி நரி அவர்களே :),
      அவர்கள் இன்னும் முழுமையான பகுத்தறிவாளர்கள் என்பதை நாம் தான் அறிவோமே. :)
      ஆம் அனைத்து பின்னூட்டங்களும் சிந்திக்க கூடியவைதான். அதேநேரத்தில் இசுலாம் சகோதரர்கள் கூறுபவற்றையும் நாம் கருத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  11. உங்கள் பதிவை, எவரும் தங்கள் சொந்தப் பதிவு போல் வெளியிட அனுமதிக்க வேண்டாம்.
    கருத்துகள் சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கம் இருந்தாலும், கருத்துகளைத் திருடுகிறவர்,தம் பெயரில் அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட்டுச் சம்பாதிக்கவும் புகழ் பெறவும் இது வழி வகுக்கும்.
    நல்லவராக இருக்கலாம்; ஏமாளியாக இருக்கக் கூடாது!
    கடவுள், படைப்பு போன்றவை பற்றிய உங்களின் அனைத்துப் பதிவுகளையும் பின்னர் தொகுத்து நீங்களே நூலாக வெளியிடலாமே?
    இப்படியொரு நோக்குடன்தான் நான்,கடவுள் பற்றி மட்டுமே பதிவுகள் வெளியிட்டு வருகிறேன்.[என் பதிவுகளை நீங்கள் படிக்க வேண்டும் என்ற உள் நோக்குடன் இதைச் சொல்லவில்லை]
    உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
    என் பதிவுகள் பல குறிப்பிட்ட ஒருவராலேயே திருடப்பட்டு, கூகிளுக்குப் புகார் அனுப்பி அவற்றை நீக்கச் செய்தேன் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா பரமசிவம் அவர்களே,
      தாங்கள் கூறும் கருத்துக்கள் சரி என்றே தோன்றுகிறது.
      உங்கள் பதிவுகளை பார்த்தேன் இன்னும் படிக்க வில்லை. பத்து நேர மின்வெட்டினால் ரொம்ப சிரமமாகவுள்ளது. நேரம் கிடைக்கும் பொழுது படிக்கின்றேன்.
      என் மீது அக்கறை கொண்டு இக்கருத்தினை முன் வைத்தமைக்கும் தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி. :)

      நீக்கு
  12. மக்காவில் உள்ள ஆலயமாகிய கஃபாவின் சுவரில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ள ஹஜருல் அஸ்வத்' என்னும் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் வணங்குவதில்லை. வணங்குமாறு இஸ்லாம் கூறவுமில்லை.
    ஆனால் இந்து சகோதரர்கள் லிங்கத்தை வணங்குகின்றனர்.
    இது தான் முக்கியமான வித்தியாசம்.
    ஒரு கல்லை வணங்குவது என்றால் அக்கல்லின் முன்னே நின்றவுடன் அதைப் பற்றி மரியாதை கலந்த பயம் தோன்ற வேண்டும்.
    துன்பங்களை நீக்கவும், இன்பங்களை வழங்கவும் அதற்குச் சக்தி இருப்பதாக நம்ப வேண்டும்.
    அதற்குரிய மரியாதையைத் தராவிட்டால் அந்தக் கல் நமக்கு ஏதேனும் தீங்கு செய்து விடும் என்று அச்சமிருக்க வேண்டும்.
    நமது பிரார்த்தனை அதற்கு விளங்கும்; விளங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றெல்லாம் நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கையுடன் செய்யும் மரியாதையே வணக்கம் எனப்படும்.
    கற்சிலைகளையோ, லிங்கத்தையோ, இன்ன பிற பொருட்களையோ வழிபடுவோர் இந்த நம்பிக்கையிலேயே வழிபட்டு வருகின்றனர். ஹஜ்ருல் அஸ்வத்' பற்றி இஸ்லாம் இப்படியெல்லாம் கூறுகிறதா? நிச்சயமாக இல்லை.
    அந்தக் கருப்புக் கல் நாம் பேசுவதைக் கேட்கும்; நமது பிரார்த்தனையை நிறைவேற்றும்; அதற்குரிய மரியாதையைச் செய்யத் தவறினால் அந்தக் கல் நம்மைத் தண்டிக்கும் என்றெல்லாம் இஸ்லாம் கூறவில்லை.
    அது தெய்வீக அம்சம் எதுவுமில்லாத கல் என்பதை இஸ்லாம் தெளிவாகக் கூறுகிறது.
    இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாவது ஆட்சியாளரும், நபிகள் நாயகத்தின் உற்ற தோழருமான உமர் (ரலி) அவர்கள் அந்தக் கல்லை முத்தமிட்டு விட்டு அதை நோக்கி 'நிச்சயமாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும், தீமையும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திரா விட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்'என்று கூறினார்கள். (புகாரி: 1597, 1605)
    அந்தக் கல் மீது தெய்வீக நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) ஊட்டியிருந்தால் அவர்களிடம் பாடம் கற்ற நபித் தோழர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்.
    இறைவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது என்று மிகத் தெளிவாக திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறி விட்ட பின், தமது மூதாதையர்களான இப்ராஹீம் (ஆப்ரஹாம்) இஸ்மாயீல் (இஸ்மவேல்) ஆகியோரின் சிலைகள் உட்பட அத்தனை சிலைகளையும் நபிகள் நாயகம் உடைத்தெறிந்த பின் சாதாரணக் கல்லுக்கு தெய்வீக அம்சம் உண்டென்று எப்படி கூறியிருக்க முடியும்?
    ஹஜருல் அஸ்வத்' என்னும் கல்லுக்கு எந்தவிதமான ஆற்றலோ, கடவுள் தன்மையோ இல்லையென்றால் பிறகு ஏன் அதைத் தொட்டு முத்தமிட வேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டால் அது நியாயமான கேள்வியே.
    அக்கல்லுக்கு கடவுள் தன்மை உள்ளது என்பது இஸ்லாத்தின் கொள்கை கிடையாது என்றாலும் அக்கல்லுக்கு வேறொரு சிறப்பு இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. அதன் காரணமாகவே அக்கல்லை முஸ்லிம்கள் முத்தமிடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள்.
    இஸ்லாமிய நம்பிக்கையின் படி இவ்வுலகம் அழிக்கப்பட்ட பின் கடவுள் விசாரணை நடத்தி நல்லவர்களைச் சொர்க்கத்திலும், கெட்டவர்களை நரகத்திலும் தள்ளுவார். அந்தச் சொர்க்கத்தை அடைவது தான் முஸ்லிம்களின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் போதனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உஸ்மான் அவர்களே :),
      //ஒரு கல்லை வணங்குவது என்றால் அக்கல்லின் முன்னே நின்றவுடன் அதைப் பற்றி மரியாதை கலந்த பயம் தோன்ற வேண்டும்.
      துன்பங்களை நீக்கவும், இன்பங்களை வழங்கவும் அதற்குச் சக்தி இருப்பதாக நம்ப வேண்டும்.
      அதற்குரிய மரியாதையைத் தராவிட்டால் அந்தக் கல் நமக்கு ஏதேனும் தீங்கு செய்து விடும் என்று அச்சமிருக்க வேண்டும்.
      நமது பிரார்த்தனை அதற்கு விளங்கும்; விளங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றெல்லாம் நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கையுடன் செய்யும் மரியாதையே வணக்கம் எனப்படும்.
      கற்சிலைகளையோ, லிங்கத்தையோ, இன்ன பிற பொருட்களையோ வழிபடுவோர் இந்த நம்பிக்கையிலேயே வழிபட்டு வருகின்றனர். ஹஜ்ருல் அஸ்வத்' பற்றி இஸ்லாம் இப்படியெல்லாம் கூறுகிறதா//

      இசுலாமில் சிலர் தீர்ப்பு நாளில் இந்த புனித கல்லுக்கு பார்க்க கண்ணும் பேச நாக்கும் தோன்றி தன்னை பக்தியுடன் முத்தமிட்டவர்களுக்கு சாதகமாகவும் காபாவை வலம் வரும்பொழுது வதந்திகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் சாட்சியம் கூறும் என்று நம்புகின்றனர்.
      ("the Stone will appear on the Day of Judgement (Qiyamah) with eyes to see and a tongue to speak, and give evidence in favor of all who kissed it in true devotion, but speak out against whoever indulged in gossip or profane conversations during his circumambulation of the Kaaba".. Source:wikipedia).
      இசுலாம் தானே பின்வருவனவற்றையும் கூறுகிறது ? இதைப்பற்றி சாற்றி ஆய்வு செய்யுங்கள்.

      //ஹஜருல் அஸ்வத்' என்னும் கல்லுக்கு எந்தவிதமான ஆற்றலோ, கடவுள் தன்மையோ இல்லையென்றால் பிறகு ஏன் அதைத் தொட்டு முத்தமிட வேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டால் அது நியாயமான கேள்வியே.//
      சரியாக சொல்கிறீர்கள்
      //அக்கல்லுக்கு வேறொரு சிறப்பு இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. அதன் காரணமாகவே அக்கல்லை முஸ்லிம்கள் முத்தமிடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள்.//
      அது என்ன நம்பிக்கை அனபரே நான் முன்பு கூறியாதா அல்லது வேறு ஏதாவதா?
      சிந்திக்கும் நீங்கள் பல உணமைகளை அறிய இறைவின் உங்கள்ளுக்கு வழி காட்டுவன்.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  13. ஹஜருல் அஸ்வத்' என்னும் கல் சொர்க்கத்தின் கற்களில் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.- இந்தச் செய்தி பலவீனமானது என்ற போதும் முஸ்லிம்கள் அதை சொர்க்கத்தில் இருந்து வந்த பொருள் என்று நம்புகிறார்கள். அதற்கு கடவுள் தன்மை இருப்பதாக நம்பவில்லை
    மனிதர்கள் எந்த சொர்க்கத்தை அடைவதை இறுதி இலக்காகக் கொள்ள வேண்டுமோ அந்த சொர்க்கத்தின் பொருள் ஒன்று இவ்வுலகில் காணக் கிடைக்கிறது என்றால் அதைக் காண்பதற்கும், தொடுவதற்கும் ஆவல் பிறக்கும்.
    இக்கல்லைத் தவிர சொர்க்கத்துப் பொருள் எதுவும் இவ்வுலகில் கிடையாது. இவ்வுலகிலேயே காணக் கிடைக்கும் ஒரே சொர்க்கத்துப் பொருள் என்ற அடிப்படையில் தான் முஸ்லிம்களை அதைத் தொட்டு முத்தமிடுகின்றனர். கடவுள் தன்மை அதற்கு உண்டு என்பதற்காக இல்லை.
    இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கிற ஒரு நிகழ்ச்சியை முன்னுதாரணமாகக் கூறலாம்.
    ஆம்ஸ்ட்ராங்' தலைமையில் சென்ற குழுவினர் சந்திரனிலிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்தனர். அது சாதாரண மண் தான் என்றாலும் அயல் கிரகத்திலிருந்து அது கொண்டு வரப்பட்டதால் பல நாடுகளுக்கும் அது அனுப்பி வைக்கப்பட்டது. சென்னைக்கும் கூட அம்மண் வந்து சேர்ந்தது.
    அது மண் என்று தெரிந்தும் அதைப் போய் பார்த்தவர்கள், தொட்டு முகர்ந்தவர்கள் அனேகம் பேர். இவ்வாறு செய்ததால் அம்மண்ணை அவர்கள் வணங்கினார்கள் என்று கருத முடியாது.
    அது போலவே தான் அந்தக் கல் சொர்க்கத்திருந்து வந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதை முஸ்லிம் கள் தொட்டுப் பார்க்கின்றனர். இதைத் தவிர எந்த விதமான நம்பிக்கையும் முஸ்லிம்களின் உள்ளத்தில் இல்லை.
    மேலும் ஹஜ்ஜுப் பயணம் செல்பவர்கள் அந்தக் கல்லைத் தொட வேண்டும் என்பது கட்டாயமும் அல்ல. அதைத் தொடாமலே ஹஜ் நிறைவேறி விடும். எந்த முஸ்லிமாவது அந்தக் கருப்புக்கல்லிடம் பிரார்த்தனை செய்தால் அது நன்மை, தீமை செய்ய சக்தி பெற்றது என்று கருதினால், நமது பிரார்த்தனையை அது செவியுறும், நமது வருகையை அறிந்து கொள்ளும் என்று நம்பினால் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறி விடுவான்.
    ஆனால் லிங்கம் கடவுளின் அம்சம் என்பது இந்து சகோதரர்களின் நம்பிக்கை. அது அவர்களால் வழிபாடு செய்யப்படுகிறது. அதற்கு அபிஷேகமும் நடத்தப்படுகிறது. எனவே கறுப்புக் கல்லை முத்தமிடுவதும், லிங்கத்தைக் கடவுளாகக் கருதி வழிபாடு நடத்துவதும் ஒன்றாக முடியாது.
    மேலும், லிங்கம் சொர்க்கத்திலிருந்து வந்ததாக இந்துக்கள் நம்புவதாக நமக்குத் தெரியவில்லை. அப்படி நம்பினால் உலகம் முழுவதற்கும் ஒரே இடத்தில் ஒரே ஒரு லிங்கம் தான் இருக்க வேண்டும். ஆனால் ஊர்கள் தோறும் லிங்கங்கள் உள்ளன. எனவே, அந்த இந்து சகோதரர் தவறான தகவலைக் கூறுகிறார். ஹஜருல் அஸ்வத்' சொர்க்கத்தின் பொருள் என்று முஸ்லிம்கள் நம்புவதால் ஊர்கள் தோறும் ஹஜருல் அஸ்வத் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து
    25.01.2011. 11:44

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உஸ்மான் அவர்களே,
      அரேபியாவில் அந்த ஒரு கல் மட்டும் இல்லை. பல கற்களும் இருந்துள்ளன அதை மக்கள் வழிபட்டும் வந்துள்ளனர்.
      இதைப்பற்றிய செய்தி குரானிலும் பைபிளிலும் உள்ளது.

      The Semiticcultures of the Middle East had a tradition of using unusual stones to mark places of worship, a phenomenon which is reflected in the Hebrew Bible as well as the Qur'an.[9] A "red stone" was associated with the deity of the south Arabian city of Ghaiman, and there was a "white stone" in the Kaaba of al-Abalat (near the city of Tabala, south of Mecca). Worship at that time period was often associated with stone reverence, mountains, special rock formations, or distinctive trees.
      http://en.wikipedia.org/wiki/Black_Stone

      இங்கு கல்லை அல்லது சிவலிங்கத்தை வழிபடுவதுபோல் அங்கும் கல்லை வழிபட்டுள்ளார்கள் என்பது தெரிய வருகிறதா?
      இதற்க்கு உங்கள் மற்றும் பிஜெ பதில் என்ன? இதன் மூலம் அரேபியாவில் இருந்த லிங்க அல்லது கல் வழிபாட்டின் மீதிதான் இசுலாமியர்கள் புனித கல்லாக கருதும் கருப்புக்கல்
      என்று சொல்வதற்கு வலுவான ஆதாரம் உள்ளது அல்லாவா?

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  14. ஹஜருல் அஸ்வத்' என்னும் கல் சொர்க்கத்தின் கற்களில் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.- இந்தச் செய்தி பலவீனமானது என்ற போதும் முஸ்லிம்கள் அதை சொர்க்கத்தில் இருந்து வந்த பொருள் என்று நம்புகிறார்கள். அதற்கு கடவுள் தன்மை இருப்பதாக நம்பவில்லை
    மனிதர்கள் எந்த சொர்க்கத்தை அடைவதை இறுதி இலக்காகக் கொள்ள வேண்டுமோ அந்த சொர்க்கத்தின் பொருள் ஒன்று இவ்வுலகில் காணக் கிடைக்கிறது என்றால் அதைக் காண்பதற்கும், தொடுவதற்கும் ஆவல் பிறக்கும்.
    இக்கல்லைத் தவிர சொர்க்கத்துப் பொருள் எதுவும் இவ்வுலகில் கிடையாது. இவ்வுலகிலேயே காணக் கிடைக்கும் ஒரே சொர்க்கத்துப் பொருள் என்ற அடிப்படையில் தான் முஸ்லிம்களை அதைத் தொட்டு முத்தமிடுகின்றனர். கடவுள் தன்மை அதற்கு உண்டு என்பதற்காக இல்லை.
    இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கிற ஒரு நிகழ்ச்சியை முன்னுதாரணமாகக் கூறலாம்.
    ஆம்ஸ்ட்ராங்' தலைமையில் சென்ற குழுவினர் சந்திரனிலிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்தனர். அது சாதாரண மண் தான் என்றாலும் அயல் கிரகத்திலிருந்து அது கொண்டு வரப்பட்டதால் பல நாடுகளுக்கும் அது அனுப்பி வைக்கப்பட்டது. சென்னைக்கும் கூட அம்மண் வந்து சேர்ந்தது.
    அது மண் என்று தெரிந்தும் அதைப் போய் பார்த்தவர்கள், தொட்டு முகர்ந்தவர்கள் அனேகம் பேர். இவ்வாறு செய்ததால் அம்மண்ணை அவர்கள் வணங்கினார்கள் என்று கருத முடியாது.
    அது போலவே தான் அந்தக் கல் சொர்க்கத்திருந்து வந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதை முஸ்லிம் கள் தொட்டுப் பார்க்கின்றனர். இதைத் தவிர எந்த விதமான நம்பிக்கையும் முஸ்லிம்களின் உள்ளத்தில் இல்லை.
    மேலும் ஹஜ்ஜுப் பயணம் செல்பவர்கள் அந்தக் கல்லைத் தொட வேண்டும் என்பது கட்டாயமும் அல்ல. அதைத் தொடாமலே ஹஜ் நிறைவேறி விடும். எந்த முஸ்லிமாவது அந்தக் கருப்புக்கல்லிடம் பிரார்த்தனை செய்தால் அது நன்மை, தீமை செய்ய சக்தி பெற்றது என்று கருதினால், நமது பிரார்த்தனையை அது செவியுறும், நமது வருகையை அறிந்து கொள்ளும் என்று நம்பினால் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறி விடுவான்.
    ஆனால் லிங்கம் கடவுளின் அம்சம் என்பது இந்து சகோதரர்களின் நம்பிக்கை. அது அவர்களால் வழிபாடு செய்யப்படுகிறது. அதற்கு அபிஷேகமும் நடத்தப்படுகிறது. எனவே கறுப்புக் கல்லை முத்தமிடுவதும், லிங்கத்தைக் கடவுளாகக் கருதி வழிபாடு நடத்துவதும் ஒன்றாக முடியாது.
    மேலும், லிங்கம் சொர்க்கத்திலிருந்து வந்ததாக இந்துக்கள் நம்புவதாக நமக்குத் தெரியவில்லை. அப்படி நம்பினால் உலகம் முழுவதற்கும் ஒரே இடத்தில் ஒரே ஒரு லிங்கம் தான் இருக்க வேண்டும். ஆனால் ஊர்கள் தோறும் லிங்கங்கள் உள்ளன. எனவே, அந்த இந்து சகோதரர் தவறான தகவலைக் கூறுகிறார். ஹஜருல் அஸ்வத்' சொர்க்கத்தின் பொருள் என்று முஸ்லிம்கள் நம்புவதால் ஊர்கள் தோறும் ஹஜருல் அஸ்வத் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து
    25.01.2011. 11:44

    பதிலளிநீக்கு
  15. ஹஜருல் அஸ்வத்' என்னும் கல் சொர்க்கத்தின் கற்களில் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.- இந்தச் செய்தி பலவீனமானது என்ற போதும் முஸ்லிம்கள் அதை சொர்க்கத்தில் இருந்து வந்த பொருள் என்று நம்புகிறார்கள். அதற்கு கடவுள் தன்மை இருப்பதாக நம்பவில்லை
    மனிதர்கள் எந்த சொர்க்கத்தை அடைவதை இறுதி இலக்காகக் கொள்ள வேண்டுமோ அந்த சொர்க்கத்தின் பொருள் ஒன்று இவ்வுலகில் காணக் கிடைக்கிறது என்றால் அதைக் காண்பதற்கும், தொடுவதற்கும் ஆவல் பிறக்கும்.
    இக்கல்லைத் தவிர சொர்க்கத்துப் பொருள் எதுவும் இவ்வுலகில் கிடையாது. இவ்வுலகிலேயே காணக் கிடைக்கும் ஒரே சொர்க்கத்துப் பொருள் என்ற அடிப்படையில் தான் முஸ்லிம்களை அதைத் தொட்டு முத்தமிடுகின்றனர். கடவுள் தன்மை அதற்கு உண்டு என்பதற்காக இல்லை.
    இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கிற ஒரு நிகழ்ச்சியை முன்னுதாரணமாகக் கூறலாம்.
    ஆம்ஸ்ட்ராங்' தலைமையில் சென்ற குழுவினர் சந்திரனிலிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்தனர். அது சாதாரண மண் தான் என்றாலும் அயல் கிரகத்திலிருந்து அது கொண்டு வரப்பட்டதால் பல நாடுகளுக்கும் அது அனுப்பி வைக்கப்பட்டது. சென்னைக்கும் கூட அம்மண் வந்து சேர்ந்தது.
    அது மண் என்று தெரிந்தும் அதைப் போய் பார்த்தவர்கள், தொட்டு முகர்ந்தவர்கள் அனேகம் பேர். இவ்வாறு செய்ததால் அம்மண்ணை அவர்கள் வணங்கினார்கள் என்று கருத முடியாது.
    அது போலவே தான் அந்தக் கல் சொர்க்கத்திருந்து வந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதை முஸ்லிம் கள் தொட்டுப் பார்க்கின்றனர். இதைத் தவிர எந்த விதமான நம்பிக்கையும் முஸ்லிம்களின் உள்ளத்தில் இல்லை.
    மேலும் ஹஜ்ஜுப் பயணம் செல்பவர்கள் அந்தக் கல்லைத் தொட வேண்டும் என்பது கட்டாயமும் அல்ல. அதைத் தொடாமலே ஹஜ் நிறைவேறி விடும். எந்த முஸ்லிமாவது அந்தக் கருப்புக்கல்லிடம் பிரார்த்தனை செய்தால் அது நன்மை, தீமை செய்ய சக்தி பெற்றது என்று கருதினால், நமது பிரார்த்தனையை அது செவியுறும், நமது வருகையை அறிந்து கொள்ளும் என்று நம்பினால் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறி விடுவான்.
    ஆனால் லிங்கம் கடவுளின் அம்சம் என்பது இந்து சகோதரர்களின் நம்பிக்கை. அது அவர்களால் வழிபாடு செய்யப்படுகிறது. அதற்கு அபிஷேகமும் நடத்தப்படுகிறது. எனவே கறுப்புக் கல்லை முத்தமிடுவதும், லிங்கத்தைக் கடவுளாகக் கருதி வழிபாடு நடத்துவதும் ஒன்றாக முடியாது.
    மேலும், லிங்கம் சொர்க்கத்திலிருந்து வந்ததாக இந்துக்கள் நம்புவதாக நமக்குத் தெரியவில்லை. அப்படி நம்பினால் உலகம் முழுவதற்கும் ஒரே இடத்தில் ஒரே ஒரு லிங்கம் தான் இருக்க வேண்டும். ஆனால் ஊர்கள் தோறும் லிங்கங்கள் உள்ளன. எனவே, அந்த இந்து சகோதரர் தவறான தகவலைக் கூறுகிறார். ஹஜருல் அஸ்வத்' சொர்க்கத்தின் பொருள் என்று முஸ்லிம்கள் நம்புவதால் ஊர்கள் தோறும் ஹஜருல் அஸ்வத் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து
    25.01.2011. 11:44

    பதிலளிநீக்கு
  16. // R.Puratchimani Mar 23, 2012 09:57 AM said...

    வாங்க வாஞ்சூர் ஐயா,

    தங்களின் மன நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.//

    சரியான புரிதலாக இருக்கும் பட்சத்தில் புரிதலுக்கு மகிழ்வு.

    //இருப்பினும் முதலில் மற்றவர்களை எதிரியாக கருதும் என்னத்தை கைவிடுங்கள்.//

    அவரவர் மன நிலைக்கு தக்கவாறு அவரவர் கொள்ளும் மனநிலையை நான் தடுக்கமுடியாது.

    //நம் கருத்துக்கள் தான் வேறு வேறே தவிர நாம் எதிரிகள் அல்ல. பரிணாமத்தின் படி பார்த்தாலும் சரி, ஆதாம் ஏவாளின் கதைப்படி பார்த்தாலும் சரி நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள். அப்படி இருக்க சக மனிதனை எதிரியாக பார்ப்பது சரியானது அல்ல.

    நாம் அனைவரும் சகோதரர்கள் என்பதை மனதில் வையுங்கள். //

    மகிழ்ச்சி.

    //நீங்கள் கொடுத்த சுட்டியில் பல விடயங்களுக்கு நீங்கள் விளக்கம் அளிக்க வில்லை.

    அ. அக்கல்லை நபி "அல்லாவின் வலது கரம்" என்று கூறினாரா இல்லையா? ஏன் ? //

    அப்படியொன்றும் கூறவில்லை. அப்படி கூறியவர்களிடம் "அல்லாவின் இடது கரம்" எது என்று கேட்டுச்சொல்லுங்கள்.


    // ௨.ஹஜ் யாத்திரையில் அக்கல்லை முத்தமிட முடியாத இசுலாமியர்கள் "In the name of God, God is Great, God is Great, God is Great and praise be to God". (இறைவனின் பெயரால் இறைவன் சிறந்தவன், இறைவன் சிறந்தவன்,இறைவன் சிறந்தவன் புகழனைத்தும் இறைவனுக்கே ) என்று கூறுகிறார்கள் என்பது உண்மையா இல்லையா? இதற்கு தங்கள் விளக்கம் என்ன? //

    "In the name of God, God is Great, God is Great, God is Great and praise be to God". (இறைவனின் பெயரால் இறைவன் சிறந்தவன், இறைவன் சிறந்தவன்,இறைவன் சிறந்தவன் புகழனைத்தும் இறைவனுக்கே )

    என்று முஸ்லீம்கள் எந்த சூழ்நிலைகளிலும் எங்கும் கூறுவது வழக்கம்.

    // ௩.இசுலாமில் சிலர் தீர்ப்பு நாளில் இந்த புனித கல்லுக்கு பார்க்க கண்ணும் பேச நாக்கும் தோன்றி தன்னை பக்தியுடன் முத்தமிட்டவர்களுக்கு சாதகமாகவும் காபாவை வலம் வரும்பொழுது வதந்திகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் சாட்சியம் கூறும் என்று நம்புகின்றனர். இது ஹதீஸில் இருக்கின்றது என்கிறார்களே இது உண்மையா இல்லையா? இதற்கு தங்கள் விளக்கம்.? //

    இது தவறு. இவ்வாறு கூறப்பட்டிருப்பதாக கூறுபவர்களிடமே விளக்கம் கேட்டு தெரிவியுங்கள்.


    // வாஞ்சூர் ஐயா, இசுலாமிற்கு களங்கம் கர்ப்பிப்பத்து எனது நோக்கம் அல்ல.. //

    உண்மையாகவா ? அப்படியே இருக்கட்டும்.

    இஸ்லாத்திற்கு களங்கம் கற்பிக்க ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடங்கி இன்றுவரை தொடர்கிறது.

    இது ஒரு தூண்டுகோலாக இஸ்லாம் வளர்வதற்கும் இஸ்லாமியர்கள் புத்துணர்வுடன் இருப்பதற்கும் உதவுகிறது.

    புரட்சிமணியின் “இசுலாமியர்கள் தினமும் வணங்குவது சிவனையா? “ பதிவே
    என் “முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா? “

    பதிவுக்கு உரமாகிவிட்டது.

    புரட்சிமணிக்கு வாழ்த்துகள்.

    //.நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளை என்பதை அனைவருக்கும் புரிய வைப்பதே எண் நோக்கம்.//

    மகிழ்ச்சி.

    // சும்மா கதை சொன்னா மட்டும் போதாது //

    சும்மா கதை சொல்ல‌ முயற்ச்சிக்க வேண்டாம்.

    சகோதரத்துடன் அன்புடன் அனைவரும் வாழ வேண்டும் எனபதே எண் நோக்கம்.

    மகிழ்ச்சி.

    //தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி //

    “இசுலாமியர்கள் தினமும் வணங்குவது சிவனையா? “ பதிவின் மூலம் தவறானதை பதிப்பித்து எனது “முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா? “

    பதிவின் வாயிலாக‌ உண்மைகள் மூலம் திரிப்புகளை உடைத்தெறிய வாய்ப்புக்கு வழிவகுத்துத்தற்கு மகிழ்ச்சியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாஞ்சூர் ஐயா,
      தங்கள் புரிதலுக்கும் பதிலுக்கும் மிக்க நன்றி.
      ஆரோகியமான விவாதங்கள் உண்மையை விளங்க வைக்கும். வாய்மையே வெல்லும். :)
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  17. நல்ல பதிவு

    கல்லை வணங்கவில்லை ஆனால் தொடுவார்கள்,முத்தமிடுவார்கள்.

    அது ஏன் செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு வழக்கம் போல் இதுவும் தெரியாது!.முகம்து செய்தால் நாங்களும் செய்கிறொம் அவ்வளவுதான் அப்பீல் கிடையாது!!!!!
    அப்படியே பழகி விட்டார்கள்!
    xxxxxxxxxxxx
    1603. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்து, முதலாவது தவாஃபில் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவார்கள். ஏழு சுற்றுக்களில் முதல் மூன்று சுற்றில் (தோள்களைக் குலுக்கி) வேகமாக ஓடுவார்கள்.
    Volume :2 Book :25
    Xxxxxxxxxxxx

    A smmaal change or correction

    1605. அஸ்லம் அறிவித்தார்.
    உமர்(ரலி) ஹஜருல் அஸ்வதை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ கல்தான்; உன்னால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பதை நானறிவேன்; நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' எனக் கூறிவிட்டு அதை முத்தமிட்டார். பிறகு 'நாம் ஏன் இப்போது தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்? நாம் அன்று செய்தது நம்முடைய பலத்தை முஷ்ரிகீன்களுக்குக் காட்டுவதற்காகத்தானே. ஆனால் இன்று அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். பிறகு ஏன் செய்ய வேண்டும்?' எனக் கூறிவிட்டு, 'எனினும், இதை நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள். அதனைவிட்டுவிட நாம் விரும்பவில்லை' எனக் கூறினார்கள்.
    Volume :2 Book :25

    இருந்தாலும் நிங்கள் தெளிவாக் சிந்திக்கிறீர்கள் சகோ!!!!
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ சார்வாகன்,
      புதிய செய்தியை தந்துள்ளீர்கள்,
      தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  18. பக்கம் 1.

    மக்கா (காஃபா)வில் உள்ள ஹஜருல் அஸ்வத்’ கல்லைத் தொட்டு முத்தமிடுவது ஏன்?

    கேள்வி : மக்கா (காஃபா)வில் உள்ள ஹஜருல் அஸ்வத்’ கல்லைத் தொட்டு முத்தமிடுகிறீர்களே! மேலும் இது சொர்க்கத்திலிருந்து வந்த கல் என்று கூறுகிறீர்கள். இந்து சகோதரர்களும் லிங்கம் என்னும் கல் சொர்க்கத்திருந்து வந்தது எனக் கூறுகிறார்கள்.

    பதில் : மக்காவில் உள்ள ஆலயமாகிய கஃபாவின் சுவரில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ள ஹஜருல் அஸ்வத்’ என்னும் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் வணங்குவதில்லை. வணங்குமாறு இஸ்லாம் கூறவுமில்லை.

    ஆனால் இந்து சகோதரர்கள் லிங்கத்தை வணங்குகின்றனர். இது தான் முக்கியமான வித்தியாசம்.

    ஒரு கல்லை வணங்குவது என்றால் அக்கல்லின் முன்னே நின்றவுடன் அதைப் பற்றி மரியாதை கலந்த பயம் தோன்ற வேண்டும்.

    துன்பங்களை நீக்கவும், இன்பங்களை வழங்கவும் அதற்குச் சக்தி இருப்பதாக நம்ப வேண்டும்.

    அதற்குரிய மரியாதையைத் தராவிட்டால் அந்தக் கல் நமக்கு ஏதேனும் தீங்கு செய்து விடும் என்று அச்சமிருக்க வேண்டும்.
    நமது பிரார்த்தனை அதற்கு விளங்கும்; விளங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றெல்லாம் நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கையுடன் செய்யும் மரியாதையே வணக்கம் எனப்படும்.

    கற்சிலைகளையோ, லிங்கத்தையோ, இன்ன பிற பொருட்களையோ வழிபடுவோர் இந்த நம்பிக்கையிலேயே வழிபட்டு வருகின்றனர்.

    ஹஜ்ருல் அஸ்வத்’ பற்றி இஸ்லாம் இப்படியெல்லாம் கூறுகிறதா?
    நிச்சயமாக இல்லை. அந்தக் கருப்புக் கல் நாம் பேசுவதைக் கேட்கும்; நமது பிரார்த்தனையை நிறைவேற்றும்; அதற்குரிய மரியாதையைச் செய்யத் தவறினால் அந்தக் கல் நம்மைத் தண்டிக்கும் என்றெல்லாம் இஸ்லாம் கூறவில்லை.

    அது தெய்வீக அம்சம் எதுவுமில்லாத கல் என்பதை இஸ்லாம் தெளிவாகக் கூறுகிறது.

    இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாவது ஆட்சியாளரும், நபிகள் நாயகத்தின் உற்ற தோழருமான உமர் (ரலி) அவர்கள் அந்தக் கல்லை முத்தமிட்டு விட்டு அதை நோக்கி

    ‘நிச்சயமாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும், தீமையும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திரா விட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்’என்று கூறினார்கள். (புகாரி: 1597, 1605)

    அந்தக் கல் மீது தெய்வீக நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) ஊட்டியிருந்தால் அவர்களிடம் பாடம் கற்ற நபித் தோழர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்.

    இறைவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது என்று மிகத் தெளிவாக திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறி விட்ட பின், தமது மூதாதையர்களான இப்ராஹீம் (ஆப்ரஹாம்) இஸ்மாயீல் (இஸ்மவேல்) ஆகியோரின் சிலைகள் உட்பட அத்தனை சிலைகளையும் நபிகள் நாயகம் உடைத்தெறிந்த பின் சாதாரணக் கல்லுக்கு தெய்வீக அம்சம் உண்டென்று எப்படி கூறியிருக்க முடியும்?

    ஹஜருல் அஸ்வத்’ என்னும் கல்லுக்கு எந்தவிதமான ஆற்றலோ, கடவுள் தன்மையோ இல்லையென்றால் பிறகு ஏன் அதைத் தொட்டு முத்தமிட வேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டால் அது நியாயமான கேள்வியே.

    அக்கல்லுக்கு கடவுள் தன்மை உள்ளது என்பது இஸ்லாத்தின் கொள்கை கிடையாது என்றாலும் அக்கல்லுக்கு வேறொரு சிறப்பு இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது.

    அதன் காரணமாகவே அக்கல்லை முஸ்லிம்கள் முத்தமிடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள்.

    இஸ்லாமிய நம்பிக்கையின் படி இவ்வுலகம் அழிக்கப்பட்ட பின் கடவுள் விசாரணை நடத்தி நல்லவர்களைச் சொர்க்கத்திலும், கெட்டவர்களை நரகத்திலும் தள்ளுவார். அந்தச் சொர்க்கத்தை அடைவது தான் முஸ்லிம்களின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் போதனை.

    ஹஜருல் அஸ்வத்’ என்னும் கல் சொர்க்கத்தின் கற்களில் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

    மனிதர்கள் எந்த சொர்க்கத்தை அடைவதை இறுதி இலக்காகக் கொள்ள வேண்டுமோ அந்த சொர்க்கத்தின் பொருள் ஒன்று இவ்வுலகில் காணக் கிடைக்கிறது என்றால் அதைக் காண்பதற்கும், தொடுவதற்கும் ஆவல் பிறக்கும். இக்கல்லைத் தவிர சொர்க்கத்துப் பொருள் எதுவும் இவ்வுலகில் கிடையாது.

    தொடர்கிறது ....

    பதிலளிநீக்கு
  19. பக்கம் 2.

    இவ்வுலகிலேயே காணக் கிடைக்கும் ஒரே சொர்க்கத்துப் பொருள் என்ற அடிப்படையில் தான் முஸ்லிம்களை அதைத் தொட்டு முத்தமிடுகின்றனர். கடவுள் தன்மை அதற்கு உண்டு என்பதற்காக இல்லை.

    இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நமெல்லாம் அறிந்து வைத்திருக்கிற ஒரு நிகழ்ச்சியை முன்னுதாரணமாகக் கூறலாம்.

    ஆம்ஸ்ட்ராங்’ தலைமையில் சென்ற குழுவினர் சந்திரனிலிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்தனர். அது சாதாரண மண் தான் என்றாலும் அயல் கிரகத்திலிருந்து அது கொண்டு வரப்பட்டதால் பல நாடுகளுக்கும் அது அனுப்பி வைக்கப்பட்டது. சென்னைக்கும் கூட அம்மண் வந்து சேர்ந்தது.

    அது மண் என்று தெரிந்தும் அதைப் போய் பார்த்தவர்கள், தொட்டு முகர்ந்தவர்கள் அனேகம் பேர்.

    இவ்வாறு செய்ததால் அம்மண்ணை அவர்கள் வணங்கினார்கள் என்று கருத முடியாது.

    அது போலவே தான் அந்தக் கல் சொர்க்கத்திருந்து வந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதை முஸ்லிம்கள் தொட்டுப் பார்க்கின்றனர்.

    இதைத் தவிர எந்த விதமான நம்பிக்கையும் முஸ்லிம்களின் உள்ளத்தில் இல்லை. மேலும் ஹஜ்ஜுப் பயணம் செல்பவர்கள் அந்தக் கல்லைத் தொட வேண்டும் என்பது கட்டாயமும் அல்ல.
    அதைத் தொடாமலே ஹஜ் நிறைவேறி விடும்.

    எந்த முஸ்லிமாவது அந்தக் கருப்புக்கல்லிடம் பிரார்த்தனை செய்தால்

    அது நன்மை, தீமை செய்ய சக்தி பெற்றது என்று கருதினால்,

    நமது பிரார்த்தனையை அது செவியுறும், நமது வருகையை அறிந்து கொள்ளும் என்று நம்பினால் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறி விடுவான்.


    ஆனால் லிங்கம் கடவுளின் அம்சம் என்பது இந்து சகோதரர்களின் நம்பிக்கை.

    அது அவர்களால் வழிபாடு செய்யப்படுகிறது.

    அதற்கு அபிஷேகமும் நடத்தப்படுகிறது.

    எனவே கறுப்புக் கல்லை முத்தமிடுவதும், லிங்கத்தைக் கடவுளாகக் கருதி வழிபாடு நடத்துவதும் ஒன்றாக முடியாது.

    மேலும், லிங்கம் சொர்க்கத்திலிருந்து வந்ததாக இந்துக்கள் நம்புவதாக நமக்குத் தெரியவில்லை.

    அப்படி நம்பினால் உலகம் முழுவதற்கும் ஒரே இடத்தில் ஒரே ஒரு லிங்கம் தான் இருக்க வேண்டும்.

    ஆனால் ஊர்கள் தோறும் லிங்கங்கள் உள்ளன. எனவே, அந்த இந்து சகோதரர் தவறான தகவலைக் கூறுகிறார்.

    ஹஜருல் அஸ்வத்’ சொர்க்கத்தின் பொருள் என்று முஸ்லிம்கள் நம்புவதால் ஊர்கள் தோறும் ஹஜருல் அஸ்வத் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  20. காபாக் கல்லை முத்தமிடுவது, சுற்றி வருவது எல்லாம் அராபிய பாகநிசத்தைப் பின்பற்றியவர்கள் செய்து வந்தது. முகமதுவும் தம் மூதாதையரின் பழக்கத்தின்படி நடந்திருக்கிறார். அல்லாவே ஒரு பாகன் கடவுள்தான்.
    முகமதின் கல்லறையின் கிரில்லை தொட்டால் வணங்கி விடும் எண்ணம் ஏற்படும் என்று வாஞ்சூர் பாயே சொல்கிறார். அப்படி என்றால் காபாக் கல்லை தொடுவதையும் முத்தமிடுவதையும் வணக்கத்திற்கு ஒப்பாகத்தானே பார்க்கமுடியும்.

    பதிலளிநீக்கு
  21. அரேபியாவில் அந்த ஒரு கல் மட்டும் இல்லை. பல கற்களும் இருந்துள்ளன அதை மக்கள் வழிபட்டும் வந்துள்ளனர்.
    இதைப்பற்றிய செய்தி குரானிலும் பைபிளிலும் உள்ளது.

    The Semiticcultures of the Middle East had a tradition of using unusual stones to mark places of worship, a phenomenon which is reflected in the Hebrew Bible as well as the Qur'an.[9] A "red stone" was associated with the deity of the south Arabian city of Ghaiman, and there was a "white stone" in the Kaaba of al-Abalat (near the city of Tabala, south of Mecca). Worship at that time period was often associated with stone reverence, mountains, special rock formations, or distinctive trees.
    http://en.wikipedia.org/wiki/Black_Stone

    இங்கு கல்லை அல்லது சிவலிங்கத்தை வழிபடுவதுபோல் அங்கும் கல்லை வழிபட்டுள்ளார்கள் என்பது தெரிய வருகிறதா?
    இதற்க்கு உங்கள் பதில் என்ன?
    இதன் மூலம் அரேபியாவில் இருந்த லிங்க அல்லது கல் வழிபாட்டின் மீதிதான் இசுலாமியர்கள் புனித கல்லாக கருதும் கருப்புக்கல்
    என்று சொல்வதற்கு வலுவான ஆதாரம் உள்ளது அல்லவா?

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //R.PuratchimaniMar 24, 2012 01:21 AM
      அரேபியாவில் அந்த ஒரு கல் மட்டும் இல்லை. பல கற்களும் இருந்துள்ளன அதை மக்கள் வழிபட்டும் வந்துள்ளனர்.
      இதைப்பற்றிய செய்தி குரானிலும் பைபிளிலும் உள்ளது. //

      எந்த அத்தியாயம், எத்தனையாவது வசனம் என்ற ஆதாரத்தைக் குறிப்பிடாமல் சும்மா விக்கிபீடியாவை சுட்டியுள்ளது சரி அல்ல.

      முற்றிலும் தவறான புரிந்துணர்வில் எழுதப்பட்ட பதிவு என்பதைத் தவிர சொல்வதற்கு ஏதுமில்லை

      என்றும் அன்புடன்,
      அ. ஹாஜாமைதீன்.

      நீக்கு
    2. வாருங்கள் சகோ அ. ஹாஜாமைதீன், :)
      நான் ஏற்க்கனவே இருக்கும் செய்த்யைத்தான் தந்துள்ளேன்...மேலும் உங்களின் கவனத்திற்காக
      // Jeremiah 8:2
      They will be exposed to the sun and the moon and all the stars of the heavens, which they have loved and served and which they have followed and consulted and worshiped. They will not be gathered up or buried, but will be like refuse lying on the ground.//
      இது கூறுவது என்ன.. தரையில் பதிக்கப்பட்டிருக்கும் லிங்கம் போன்ற ஒரு கல்லைத்தானே. இவ்வாறுதானே கருப்புக்கல்லும் பதிக்கபட்டிருந்தது?

      //Acts 19:35
      The city clerk quieted the crowd and said: “Men of Ephesus, doesn’t all the world know that the city of Ephesus is the guardian of the temple of the great Artemis and of her image, which fell from heaven?//

      இது கூறுவது என்ன...வானத்தில் இருந்து விழுந்த ஒரு ஒரு பெண்ணின் உருவத்தை வணங்குவதாக கூறுகின்றது அல்லவா? வானத்தில் இருந்து விழுந்த கல்லாக அந்த கருப்புக்கல்லை தவிர வேறு ஒன்றும் இருப்பதாக இதுவரை தெரியவில்லை அல்லவா?

      http://ivarfjeld.wordpress.com/2010/03/07/bible-studies-42-muslims-worship-a-black-stone-in-mecca-fallen-from-the-moon/

      குரான் வசனம் 53-19. "நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும் ,உஸ்ஸாவையும் கண்டீர்களா?"
      இதில் கூறப்படும் லாத் எனும் தெய்வத்தை கல்லாகத்தான் வழிபட்டு வந்துள்ளனர்.


      சகோ மேலும் குரானின் மேல் அட்டையில் ஒரு படம் இருக்கும் அல்லவா அது என்ன என்று தெரியுமா....காபாவில் தற்போது இருக்கும் கருப்பு கல்லின் உருவம் தான் அது என்று கூறுகிறார்கள். ஆதி காலத்தில் அது வெறும் கல் உருவமாகத்தான் இருந்தது...பிறகு அது உடையும் நிலையில் இருந்ததால் அதை சுற்றி இரும்பால் பிடிக்கும்படி செய்துள்ளார்கள். அதை நீங்கள் பின்வரும் சுட்டியில் பார்க்கலாம்.
      http://ivarfjeld.wordpress.com/2010/03/09/the-qur%E2%80%99an-the-book-of-the-black-stone-worshipers/

      சகோ நான் இருக்கும் செய்தியைத்தான் தருகிறேன்.இசுலாமியர்களின் மனதை புண்படுத்துவது எண் நோக்கம் அல்ல. நீங்கள் திறந்த மனதுடன் வரலாற்று பக்கங்களை புரட்டினால் பல உண்மைகள் விளங்கும்.தவறாக தெரிவதை தொடர்ந்து சுட்டி காட்டுங்கள். உண்மையை அறிய சேர்ந்தே முயல்வோம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
      என்றும் அன்புடன் உங்கள் அன்பு சகோதரன்
      இராச.புரட்சிமணி

      நீக்கு
    3. சகோ ஒரு சிறு திருத்தம்,
      ////Acts 19:35
      The city clerk quieted the crowd and said: “Men of Ephesus, doesn’t all the world know that the city of Ephesus is the guardian of the temple of the great Artemis and of her image, which fell from heaven?//

      இது கூறுவது என்ன...வானத்தில் இருந்து விழுந்த ஒரு ஒரு பெண்ணின் உருவத்தை வணங்குவதாக கூறுகின்றது அல்லவா? வானத்தில் இருந்து விழுந்த கல்லாக அந்த கருப்புக்கல்லை தவிர வேறு ஒன்றும் இருப்பதாக இதுவரை தெரியவில்லை அல்லவா?//

      இந்த வசனம் காபா கல்லை குறிக்கவில்லை. கிரேக்கத்தில் (greek) உள்ள ஒரு நகரத்திலும் சொர்க்கத்தில் இருந்து ஒரு கல் அல்லது சிலை விழுந்து அதை ஒரு கோயிலில் வைத்திருப்பதாக கூறுகிறது.
      இதன் மூலம் காபா கல் மட்டுமே சொர்க்கத்தில் இருந்து விழுந்த கல் அல்ல இன்னொரு கல்லும் விழுந்துள்ளதாக தெரிகிறது. இதில் எந்த கல் முதலில் விழுந்தது, யாருக்கு முதலில் இந்த நம்பிக்கை ஏற்ப்பட்டது?:) நீங்கள் ஆய்வு செய்தால் உங்களுக்கு பல உண்மைகள் தெரியவரலாம்.
      என்றும் அன்புடன்
      உங்கள் அன்பு சகோதரன்
      இராச.புரட்சிமணி

      நீக்கு
    4. //நான் ஏற்க்கனவே இருக்கும் செய்த்யைத்தான் தந்துள்ளேன்...மேலும் உங்களின் கவனத்திற்காக
      Jeremiah 8:2 //

      இசுலாமியர்கள் தினமும் வணங்குவது சிவனையா?
      என்ற அபத்தமான தலைப்பில் கருத்தை பதிவு செய்துவிட்டு, ஆதாரமாக பைபிளின் ஒரு வசனத்தை கான்பிக்கின்றீர்களே இது உங்களுக்கே நியாயமா தெரிகிறதா???

      எந்த பதிவு எழுதினாலும் அதற்குரிய சான்றுகளையும், ஆதார சுட்டிகளையும் சமர்பிக்க வேண்டியது ஒரு பதிவரின் கடமை, குறிப்பாக மதங்களை குறித்து எழுதும் போது அதன் அடிப்படைகளில் இருந்து ஆதாரங்களை அறியத் தருவது தான் சிறந்தது, ஆனால் தங்களது பதிவை மீண்டும் படித்து பாருங்கள்......

      எவ்வித ஆதாரமுமின்றி மனம் போன போக்கில் எழுதியுள்ளீர்கள், வணங்குவது அல்லது வணங்குதல் என்ற வார்த்தைக்குரிய சரியான தமிழ் அர்தத்தை தயவு செய்து விளக்கமாக கூறுங்களேன் சகோ.

      என்றும் அன்புடன்,
      அ.ஹாஜாமைதீன்.

      நீக்கு
    5. வாங்க சகோ அ. ஹாஜாமைதீன்,
      உங்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
      தலைப்பு அபத்தமாக இருக்கலாம் அதை நான் மறுக்கவில்லை.
      (சகோ, இப்பதிவின் தலைப்பு இசுலாமியர்களின் மனதை புண்படுத்தும் என்று நீங்கள் நினைத்தால் இந்த பதிவிற்கு சரியாக நினைக்கும் தலைப்பை பரிந்துரை செய்யுங்கள் கண்டிப்பாக அதையே நான் தலைப்பாக இட்டுவிடுகிறேன். எனக்கு உங்கள் அன்பும் ஆதரவும்தான் முக்கியம் தலைப்பு அல்ல சகோ.)
      என்னுடைய பதிவில் இசுலாமியர்கள் கல்லுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்றுதான் கூறியுள்ளேன்.அதுதான் பதிவின் கருப்பொருள். இதை நான் மனம் போன போக்கிலே எழுதவில்லை. தகுந்த ஆதாரத்தோடுதான் எழுதியுள்ளேன். அதற்க்கான ஆதாரம் பின்வரும் சுட்டி. இதை சற்று படித்து விட்டு பிறகு என்னுடைய பதிவையும் படியுங்கள். அதில் தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள் சகோ. நான் உண்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
      http://en.wikipedia.org/wiki/Black_Stone
      நீங்கள் இதை ஆதாரமாக ஏற்க்க முடியாது என்று கூறுகிறீர்கள். இனிமேல் உங்களுக்காக விக்கிபீடியா தவிர்த்து இருக்கும் ஆதாரங்களை வைத்தே எழுத முயல்கிறேன்.
      சகோ,தொடர்ந்து தவறாக நினைப்பதை அன்போடு சுட்டி காட்டுங்கள்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)
      என்றும் அன்புடன் உங்கள் அன்பு சகோதரன்
      இராச.புரட்சிமணி

      நீக்கு
    6. //தலைப்பு அபத்தமாக இருக்கலாம் அதை நான் மறுக்கவில்லை.//

      சகோ இராச புரட்சிமணி அவர்களுக்கு
      தலைப்பு மட்டுமல்ல... நுனி முதல் அடிவரை....
      மொத்தமும் இந்த ரகம்தான், அபத்தமாக இருக்கிறது என்பதை தாங்கள் புரிந்து கொண்டால் மிகவும் நல்லது சகோ.

      தேனீயைப் போல.... பல வழிகளிலும் படித்ததை சேகரித்து பதிவாக இடுவதில் எந்த தவறும் இல்லை
      சகோ, தங்களது ஆர்வத்தை பாராட்டுகிறேன், ஆனால் எடுத்துக் கொண்ட கருப்பொருளின் உண்மை நிலை என்ன? அதன் கோட்பாடு என்ன? என்பதை ஆராய்ந்து எழுதவேண்டாமா?

      //எனக்கு உங்கள் அன்பும் ஆதரவும்தான் முக்கியம் தலைப்பு அல்ல சகோ.)//

      தங்களது பாசத்திற்கு மிக்க நன்றி சகோ,

      என்றும் அன்புடன்,
      அ.ஹாஜாமைதீன்.

      நீக்கு
    7. //என்னுடைய பதிவில் இசுலாமியர்கள் கல்லுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்றுதான் கூறியுள்ளேன்.அதுதான் பதிவின் கருப்பொருள். //

      சகோ, தாங்கள் இஸ்லாத்தையும் தெரிந்து கொள்ளவில்லை, இஸ்லாமியர்களையும் புரிந்து கொள்ளவில்லை,

      இஸ்லாமியர்கள் கல்லுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதாக கூறுவதற்கு முன், அதற்கு என்ன காரணம் என்பதை ஆய்ந்து உணரவில்லை என்பதை உங்கள் பதிவே தெளிவு படுத்துகிறது.....

      கஅபாவின் புணர்நிர்மாணத்தின் போது, நபிகள் நாயகம் அவர்கள் தங்களது கரத்தால், அந்த கல்லை
      பதித்திருக்காவிட்டால்....
      கஅபாவில் உள்ள அந்த கருப்புக் கல்லை நபிகள் நாயகம் அவர்கள் தொட்டு முத்தமிட்டு இருக்காவிட்டால்..... இன்று எந்த முஸ்லிமும் போட்டி போட்டுக் கொண்டு தொடவும், முத்தமிடவும் முயற்ச்சிக்க மாட்டார்கள், இங்கு கல்லுக்கு முக்கியத்துவம் இல்லை, நபியவர்களின் செயலுக்குத்தான் என்பதை தாங்கள் விளங்கிக் கொள்ளவில்லை.

      ஒரு இந்து சகோதரராக தங்களது கோணத்தில் இஸ்லாமியர்களின் செயல் கருப்புக் கல்லை வணங்குவது போல தோன்றுகிறது, ஆனால் இஸ்லாமியர்கள் யாரும் அந்த கருப்புக் கல்லிடம் சென்று பிரார்த்தனை செய்வதில்லை, அதனிடம் தங்களது தேவைகளையோ, உதவியையோ, யாரும் கோருவதில்லை, முஸ்லிம்கள் அதை ஒரு கல்லாகதான் கான்கிறார்கள்.

      படைத்தவனை வணங்கு, படைப்பினங்களை வணங்காதே, என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படை.

      என்றும் அன்புடன்,
      அ.ஹாஜாமைதீன்.

      நீக்கு
    8. //தகுந்த ஆதாரத்தோடுதான் எழுதியுள்ளேன். அதற்க்கான ஆதாரம் பின்வரும் சுட்டி. இதை சற்று படித்து விட்டு பிறகு என்னுடைய பதிவையும் படியுங்கள். அதில் தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள் சகோ. நான் உண்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
      http://en.wikipedia.org/wiki/Black_Stone //

      விக்கிபீடியாவை ஆதாரமாக சுட்டிய தாங்கள், கீழே உள்ள இந்த ஒரு பாராவை மட்டும் பதிவிடாமல் தவிர்த்து விட்டது உண்மையிலேயே ஆச்சரியமாக உள்ளது.

      Islam strictly prohibits idolatry. Muslims believe that the Stone's role in hajj is simply representative and symbolic in nature, not related to belief in the stone itself as having any special power. A hadith records that, when the second Caliph Umar ibn al-Khattab (580-644) came to kiss the Stone, he said in front of all assembled: "No doubt, I know that you are a stone and can neither harm anyone nor benefit anyone. Had I not seen Allah's Messenger [Muhammad] kissing you, I would not have kissed you."[22] Most Muslims follow the example of Umar: they pay their respects to the Stone in a spirit of trust in Muhammad, not with any inherent belief in the Stone. This, however, does not indicate their disrespect to the Black Stone, but their belief that harm and benefit are in the hands of God, and nothing else.
      (http://en.wikipedia.org/wiki/Black_Stone )

      மேலே உள்ள இந்த பாராவே, தங்களது பதிவு கற்பனையானது என்பதை உள்ளங்கை நெல்லிக் கனியாக நிரூபிப்பதை ஏனோ தாங்கள் உணரவில்லை, முக்கியமாக இரண்டாம் கலீபா உமர் அவர்களின் கூற்றை கவனித்தீர்களா? இன்றைய முஸ்லிம்களின் நிலையும் அதுதான் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்

      என்றும் அன்புடன்,
      அ.ஹாஜாமைதீன்.

      நீக்கு
    9. //நீங்கள் இதை ஆதாரமாக ஏற்க்க முடியாது என்று கூறுகிறீர்கள். இனிமேல் உங்களுக்காக விக்கிபீடியா தவிர்த்து இருக்கும் ஆதாரங்களை வைத்தே எழுத முயல்கிறேன்.//

      குறிப்பாக மதங்களை குறித்து எழுதும் போது அதன்அடிப்படைகளில் இருந்து ஆதாரங்களை அறியத் தருவது தான் சிறந்தது,

      என்று எழுதினேனே தவிர, விக்கிபீடியாவை ஆதாரமாக ஏற்க இயலாது என நான் கூறவில்லை.....

      என்றும் அன்புடன்,
      அ.ஹாஜாமைதீன்.

      நீக்கு
    10. வாங்க என் அன்பு சகோ அ. ஹாஜாமைதீன் :) ,

      கீழே உள்ளதை பாருங்கள்
      //அந்த கல்லை முகமது நபி முத்தமிட்டார் என்பதால் ஹஜ் அல்லது புனித யாத்திரை செல்லும் இசுலாமியர்களும் அந்த கல்லை முத்தமிட முயற்சிக்கின்றனர். கூட்ட நெரிசலால் முத்தமிட முடியாததால் தனது வலது கரத்தால் அக்கல்லை தொட முயற்சிக்கின்றனர்.

      இசுலாமியத்தில் சிலை வழிபாடு கிடையாது. இந்த கல்லை அவர்கள் புனிதமாக கொண்டாலும் அதற்கு வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை என்கின்றனர் இசுலாமியர்கள்.///

      இசுலாமியர்கள் அந்த கல்லை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை இந்த வரிகளின் மூலம் தெளிவாக கூறியுள்ளேன் சகோ. :) என்னுடைய பதிவை பற்றிய உங்கள் விமர்சனங்களை மனதில் நிறுத்துகிறேன். பின்னூட்டம் சிறியதாக இருப்பதால் தவறாக என்ன வேண்டாம். இப்பதிவை பற்றிய தங்களது தொடர் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி சகோ. பதிவும் நமது பின்னூட்ட கலந்துரையாடலும் படிப்பவர்களுக்கு நல்ல விளக்கத்தை தரும் என்று எண்ணுகிறேன். நீங்கள் கூறிய ஆலோசனைகளை மனதில் நிறுத்தி இனி பதிவை எழுதுகிறேன் சகோ.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)
      என்றும் அன்புடன் உங்கள் அன்பு சகோதரன்
      இராச.புரட்சிமணி

      நீக்கு
    11. // கீழே உள்ளதை பாருங்கள்
      அந்த கல்லை முகமது நபி முத்தமிட்டார் என்பதால் ஹஜ் அல்லது புனித யாத்திரை செல்லும் இசுலாமியர்களும் அந்த கல்லை முத்தமிட முயற்சிக்கின்றனர். கூட்ட நெரிசலால் முத்தமிட முடியாததால் தனது வலது கரத்தால் அக்கல்லை தொட முயற்சிக்கின்றனர்.

      இசுலாமியத்தில் சிலை வழிபாடு கிடையாது. இந்த கல்லை அவர்கள் புனிதமாக கொண்டாலும் அதற்கு வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை என்கின்றனர் இசுலாமியர்கள்.

      இசுலாமியர்கள் அந்த கல்லை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை இந்த வரிகளின் மூலம் தெளிவாக கூறியுள்ளேன் சகோ. :) //

      சகோதரரே! இஸ்லாமியர்கள் அந்த கல்லைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் குறித்து கூறும் போது அந்த வாக்கியத்தை முடிக்காமல்....

      //ஆனால் முகமது நபியோ இக்கல்லை "அல்லாவின் வலது கரம்" என்கிறார். இந்த ஒன்றே அவர் இக்கல்லிற்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்துள்ளார் என்பதை காட்டுகிறது.

      இக்கல்லை அவர் ஏன் அல்லாவின் வலது கரம் என்றார் ...அல்லாவின் வலது கரம் என்றால் சும்மாவா ?//
      என்று எழுதியுள்ளீர்கள், அதாவது......

      இந்த கல்லுக்கு வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை என இசுலாமியர்கள் நம்புகிறார்கள்....

      ஆனால் முகமது நபியோ இக்கல்லை "அல்லாவின் வலது கரம்" என்கிறார்.

      என்ன சகோதரரே, தங்களது பதிவில் ஏன்? இப்படி ஒரு முரன்பாடு???

      இஸ்லாமியர்கள் ஒரு விதமாகவும், நபிகள் நாயகம்
      வேறு விதமாகவும் இந்த கல்லைக் குறித்து என்னுவதாக கூறுகிறது தங்களது பதிவு! ஆனால் உண்மை நிலை அப்படியா சகோ?

      என்றும் அன்புடன்,
      அ.ஹாஜாமைதீன்.

      நீக்கு
    12. பகுதி : 2
      (A hadith records that, when the second Caliph Umar ibn al-Khattab (580-644) came to kiss the Stone, he said in front of all assembled: "No doubt, I know that you are a stone and can neither harm anyone nor benefit anyone. Had I not seen Allah's Messenger [Muhammad] kissing you, I would not have kissed you."[22] Most Muslims follow the example of Umar:(http://en.wikipedia.org/wiki/Black_Stone )

      விக்கீபீடியாவில் இந்த குறிப்பிட்ட
      பாராவில் இரண்டாம் கலீபா உமர் (ரலி)அவர்கள் அந்த கருப்புக் கல்லைப் பார்த்துக் கூறிய வரலாற்று சிறப்பு மிக்க வார்த்தைகளை தங்களது பதிவில் குறிப்பிடாமல் ஏன் மறைத்தீர்கள் சகோ???

      இதற்கு ஆதாரமாக, ஒரு ஹதீஸை தங்களது பார்வைக்கு சமர்பிக்கின்றேன்.

      உமர்(ரலி) ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, 'நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார். அறிவிப்பாளர்: ஆபிஸ் இப்னு ரபீஆ. நூல்: புகாரி, பாகம் 2, அத்தியாயம் 25, எண் 1597

      சரி சகோதரரே,
      நபிகள் நாயகம் இக்கல்லை "அல்லாஹ்வின் வலது கரம்" என்று சொன்னதாக பதிவிட்டீர்கள் அல்லவா,
      அந்த ஹதீஸ் ஆதாரத்தை அறியத்தாருங்கள்....


      // பதிவும் நமது பின்னூட்ட கலந்துரையாடலும் படிப்பவர்களுக்கு நல்ல விளக்கத்தை தரும் என்று எண்ணுகிறேன். //

      நிச்சயமாக, தவறான கருத்துக்களை களைய உதவும் என நம்புகின்றேன்.

      என்றும் அன்புடன்,
      அ.ஹாஜாமைதீன்.

      நீக்கு
    13. வாங்க சகோ அ. ஹாஜாமைதீன் :),

      //இஸ்லாமியர்கள் ஒரு விதமாகவும், நபிகள் நாயகம்
      வேறு விதமாகவும் இந்த கல்லைக் குறித்து என்னுவதாக கூறுகிறது தங்களது பதிவு! ஆனால் உண்மை நிலை அப்படியா சகோ? //

      அந்த கல்லை முகமது நபி அல்லாவின் வலது கரம் என்றார் என்கிறார்கள்.மேலும் அந்த கல் தீர்ப்பு நாளில் பேசும் என்று ஹதீஸ் கூறுகிறது.

      //bn `Abbas (may Allah be pleased with him) further related that the Prophet (peace and blessings be upon him) said: “By Allah, Allah will bring it forth on the Day of Judgment, and it will have two eyes with which it will see and a tongue with which it will speak, and it will testify in favor of those who touched it in sincerity.” (At-Tirmidhi, Sunan)//

      சகோ உண்மை நிலை என்னவென்று நீங்களே சிந்தியுங்கள்.
      என்றும் அன்புடன் உங்கள் அன்பு சகோதரன்.
      இராச.புரட்சிமணி

      நீக்கு
    14. வாங்க சகோ அ. ஹாஜாமைதீன் :),

      //விக்கீபீடியாவில் இந்த குறிப்பிட்ட
      பாராவில் இரண்டாம் கலீபா உமர் (ரலி)அவர்கள் அந்த கருப்புக் கல்லைப் பார்த்துக் கூறிய வரலாற்று சிறப்பு மிக்க வார்த்தைகளை தங்களது பதிவில் குறிப்பிடாமல் ஏன் மறைத்தீர்கள் சகோ???//
      சகோ மறைக்கவில்லை. சேர்க்கவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். தாங்கள் அந்த ஹதீஸை கூரியமிக்கு நன்றி.

      நமது சகோதரர் சார்வாகன் இதனுடன் தொடர்புடைய ஹதீஸை பின்னூட்டத்தில் கூறியுள்ளார்.நீங்கள் பார்த்திருப்பீர்கள் என எண்ணுகிறேன் இருப்பினும் அது உங்கள் கவனத்திற்கு...


      1605. அஸ்லம் அறிவித்தார்.
      உமர்(ரலி) ஹஜருல் அஸ்வதை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ கல்தான்; உன்னால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பதை நானறிவேன்; நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' எனக் கூறிவிட்டு அதை முத்தமிட்டார். பிறகு 'நாம் ஏன் இப்போது தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்? நாம் அன்று செய்தது நம்முடைய பலத்தை முஷ்ரிகீன்களுக்குக் காட்டுவதற்காகத்தானே. ஆனால் இன்று அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். பிறகு ஏன் செய்ய வேண்டும்?' எனக் கூறிவிட்டு, 'எனினும், இதை நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள். அதனைவிட்டுவிட நாம் விரும்பவில்லை' எனக் கூறினார்கள்.

      Volume :2 Book :25

      //சரி சகோதரரே,
      நபிகள் நாயகம் இக்கல்லை "அல்லாஹ்வின் வலது கரம்" என்று சொன்னதாக பதிவிட்டீர்கள் அல்லவா,
      அந்த ஹதீஸ் ஆதாரத்தை அறியத்தாருங்கள்....//

      //"The Black Stone is the right hand of Allah Most High." Ibn Qutayba in Ta' wil Mukhtalif al-Hadith (1972 ed. p. 215=1995 ed. p. 198, 262) said that it was a saying of Ibn 'Abbas and relates a saying of 'A'isha that the Black Stone is the depository of the covenant of human souls with Allah on the Day of Promise (alastu bi rabbikum). He interprets the Black Stone as representing the place where one declares one's pledge of fidelity to the Sovereign. Ibn Hajar in Fath al-Bari (1959 ed. 3:463 #1520) cites al-Khattabi's and al-Muhibb al-Tabari's similar interpretations. Al-Qurtubi said in al-Asna fi Sharh Asma' Allah al-Husna (2:90-91): "It means that the Black Stone has the standing (manzila) of the Right Hand of Allah. metaphorically speaking."//

      http://www.livingislam.org/fiqhi/fiqha_e54.html
      மேற்கூறிய ஹதீஸ்கள் கருப்புக்கல்லை அல்லாவின் வலது கரம் என்றே குறிப்பிடுகின்றன. இதில் முகமது நபி சொன்னதாக இல்லையே என்று நீங்கள் என்னை கேள்வி கேட்கலாம். அது அல்லாவின் வலது கரம் என்று அவர்களுக்கு யார் சொன்னது என்று நான் திருப்பி கேட்பேன். :)

      கீழே பாருங்கள் ஒரு இசுலாமிய அறிஞர் முகமது நபிதான் அதற்கு அல்லாவின் வலது கரம் என்று பெயரிட்டார் என்று கூறுகிறார். மேலும் அந்த கல்லை பற்றிய நம்பிக்கையை கூறுகிறார்.
      //The Indian Islamic scholar Muhammad Hamidullah summed up the meaning of the Black Stone:
      [T]he Prophet has named the (Black Stone) the 'right hand of God' (yamin-Allah), and for purpose. In fact one poses there one's hand to conclude the pact, and God obtains there our pact of allegiance and submission. In the qur'anic terminology, God is the king, and ... in (his) realm there is a metropolis (Umm al-Qurra) and in the metropolis naturally a palace (Bait-Allah, home of God). If a subject wants to testify to his loyalty, he has to go to the royal palace and conclude personally the pact of allegiance. The right hand of the invisible God must be visible symbolically. And that is the al-Hajar al-Aswad, the Black Stone in the Ka'bah.//

      Shenk, David W. (2006). Journeys of the Muslim nation and the Christian church: exploring the mission of two communities. Uzima Publishing House. p. 161. ISBN 9789966855213
      ஏதோ ஒரு இசுலாமிய அறிஞர் கூறுவதையும் சில ஹதீசுகள் கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீங்கள் கூறாலாம். அது உங்கள் உரிமை. ஆனால் ஹதீஸில் அந்த கல் அல்லாவின் வலது கரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.


      தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)
      என்றும் அன்புடன் உங்கள் அன்பு சகோதரன்
      இராச.புரட்சிமணி

      நீக்கு
  22. எவ்வளவுதான் கத்தினாலும் கதறினாலும் மக்காவில் முஹமதியர்கள் வழிபடுவது எங்க ஊரு முனியாண்டி சாமியைத்தான்.

    முனியாண்டி சாமி இல்லையென்றால் மக்கா சுக்கா வறுவலாக மாறியிருக்கும், மதினா புதினா சட்னியாக மாறியிருக்கும்.

    ஆப்கானிஸ்தான், இராக்கைப் பார்த்தாவது இந்த முஹமதியர்கள் திருந்தட்டும்.

    மக்கா சுக்கா வறுவலாக ஆகாமல் இருக்க சவுதி, அமெரிக்காவிடம் கைகட்டி, வாய்பொத்தி, அனைத்தையும் மூடிக்கொண்டு உள்ளது.

    ஏக இறைவன் என்பது எங்கள் முனியாண்டி சாமி மட்டுமே. அவரைத் தவிர எந்த இறைவனும் எந்த அண்டங்களிலும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராவணன் ஐயா,
      முனியாண்டி விலாசில் சாப்பிடுபவர்கள் சொர்க்கத்துக்கு அனுப்பபடுவார்கள் தானே :)
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
    2. சகோ ராவணன் அவர்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளது, சிறப்பில்லா பதிவுக்கு, ஒரு சிரிப்பு பின்னூட்டம்.

      என்றும் அன்புடன்,
      அ.ஹாஜாமைதீன்.

      நீக்கு
  23. வண்க்கம் சகோ

    சரி முகமது தொட்டார் முதத‌மிட்டார்,இவர்களும் செய்யாமல் இருந்தால் ஆச்சர்யம்.வழக்கம் போல் ஏன் என்றே தெரியாமல் செய்வது புதிதா என்ன!!!!!

    ஆதம் முதல் இவர்கள் ஆள் என்று அடித்துக் கூறுபவர்கள்.ஆதமில் இருந்து முந்தைய தூதர்கள் எவ்ரேனும் இப்படி செய்தார்களா என தகவல் தருவார்களா!!!!!!

    இந்த் கல்லை பற்றி குரானில் ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா!!!!!!!

    சவுதி அரேபியா ஏற்படுவது முன் தர்கா வழிபாடு(?) உலக் முழுதும் பரவலாக
    இருந்தது,சவுதியில் வஹாபிகள் ஆட்சி ஏற்பட்டதும் தர்கா வழிபாடு(?) இணை வைப்பது ஆயிற்று.

    ஆனால் அவர்கள் வணங்குவதில்லை மரியாதை செலுத்துகிறோம் என்றே இன்னும் கூறுவதை இப்பிரிவினர் ஏற்பது இல்லை.

    இப்போது இன்னொரு பிரிவு வந்து சவுதி ஆட்சியை பிடித்தால் இவர்களும் அவர்கள் சொல்லும் வண்ணம் [அல்லது வேறு பிரச்சாரகர்] கல்லை தொடுவது,முத்த‌மிடுவது இணைவைப்பது எனவும் கூறலாம்.

    மத பிரிவுகளின் போட்டியில் ஒருவரை ஒருவர் முந்த துடிப்பது இயல்புதானே!!!!!!!

    நாளை நடப்பதை யார் அறிவார்?

    மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது.இதற்கு எதுவும் விதி விலக்கு அல்ல!!

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ சார்வாகன்,
      உங்கள் கேள்விகள் நியாயமானதே அதை சிந்திக்க தெரிந்தவர்கள் சிந்திப்பார்கள்.
      முகமது நபி அவர்கள் இறந்தவுடனே அங்கு அரசியல் ஆரம்பம் ஆகிவிட்டது. ஆதலால் தான் இசுலாம் ஷியா, சுன்னி என்று இரண்டாக உடைந்தது.
      இன்றளவும் அவர்களுக்குள் சண்டை இருந்து வருகிறது. (அவர்கள்) அனைவரும் மனிதர்கள் என்று உணர்ந்து மதத்தை தாண்டி எப்பொழுது சிந்திக்கிறார்களோ அப்பொழுதுதான் இதுவும் மதச்சண்டையும் முடிவுக்கு வரும்.
      //மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது.இதற்கு எதுவும் விதி விலக்கு அல்ல!!//
      நல்லதே நடக்கும் என்று நம்புவோம்

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)

      நீக்கு
  24. நல்ல பதிவு. பல நாளாக எழுத நினைத்து விட்டதை சிறுபதிலாகவும் பின் முழு பதிவாக போட உள்ளேன்.

    எபிரேய மொழி யூத மதத்தின் பழைய ஏற்பாட்டில் இறைவன் பெயர் என்பதில் மிக முக்கியமானவை, எல்சடை, எல்லோ ஹிம் மற்றும் YHWH.

    பைபிளியல் ஆயவாளர்கள் கூறும் உண்மை- மேலே உள்ள ஒரு சொல்லுக்குக் கூட உண்மையான பொருள் - வேர்சொல் தெரியாது, இவை ஊகத்தில் தான் தரப்படுகிறது.

    எல் எனும் சொல் அனைத்து செமித்திய மொழிகளிலும் சிறு மாற்றத்தோடு பயன் படுகிறது.

    இல், இலு, எல், அல் என- எம்மொழியென்பதோ நேர்மையான பொருளொ தெரியாது.


    பழைய ஏற்பாட்டில் -எல்சடை 35 முறை, எல்லோஹிம்௨500 முறை YHWH- 6500 முறை சொல்லப்படுகிறது.

    எல்லோஹிம்- என்பது பன்மைச் சொல், செமித்திய மொழியில் பல அடிப்படையில் சமஸ்க்ருத மொழி இலக்கணத்தை பின் பற்றும்.
    ஹி என்பது பெண்பால் விகுதி.
    எல் என்பது செமித்திய மொழியின் வேரில் இல்லை, தமிழ் மூலம் எனவும் ,எல் என்பது எல்லை இல்லாதவன், எழும்புதல் இல்லாதவன் எனவும் பொருள் படும்படியானது என்பர் தமிழ் அறிஞர்கள்.

    எல்லோஹிம்- என்பது பன்மையில் அம்மையப்பர் எனக் குறிக்கும். எல்லோஹிம்- என்பது எபிரேயத்திலுர்ந்து அரபி சென்ற போது அல் அஹ்தும் என்றும் அல்லாஹ் என்றும் ஆனது. இதன் பொருள் அம்மையப்பர் ஆகும்.

    அதே போல YHWH என பழைய ஏற்பாட்டில் உள்ள சொல்லை, 10 கற்பனைகளில் ஒன்றான என் பெயரை வீணில் சொல்லவேண்ட என்னும் கற்பனை சொல்லும் மூட நம்பிக்கையால், எஜமானரே என்னும் பொருள் படும் அடனாய்(Adanoi) எனப் படிப்பர்.

    கிறிஸ்துவ மொழி பெயர்ப்பாளர்கள் சூழ்ச்சியில் YHWH போய் அடனாய் என்பதை வைத்து ஆங்கிலத்தில் லார்ட்-LORD எனவும் தமிழில் கர்த்தர் என்று மொழி பெயர்ப்பது பெரும் பித்தலாட்டம்.
    YHWH என்பதற்கான மூல எபிரேய எழுத்துக்கழை சற்றே மாற்றீ அடுக்கினால் சிவலிங்கம் வரும், அப்பெயரின் ரகசியமே அது என்பார்- தியசாபிகல் சொசைட்டி நிறுவனர் ப்ளவட்ஸ்கி தன் நூலில் The Secret Doctrine.

    தேவப்ரியா சாலமன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் தேவப்ரியா சாலமன் அவர்களே,
      உங்கள் பின்னூட்டம் மிகவும் அருமை. இந்த பின்னூட்டம் என்னுடைய முந்தைய சிந்தனைக்கு உரமாக அமையும் என்று சொன்னால் அது மிகையாகாது.
      நீங்கள் கூறிய விளக்கங்களுடன் நான் ஒரு பதிவை வெளியிடுகிறேன். தொடர்ந்து உங்களது கருத்தை தாருங்கள். நீங்கள் ஏற்க்கனவே இது பற்றி எழுதியிருந்தாலும் அதையும் தாருங்கள்.
      தங்கள் வருகைக்கும் தக்க நேரத்தில் சிறந்த உண்மையை கூறியமைக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  25. //இருக்கின்ற செய்தியைத்தான் தந்துள்ளேன்...இதில் எங்கே களங்கம் என்று எனக்கு விளக்குங்களேன். நீங்க கொடுத்த தொடுப்பில் நான் சொன்ன விடயத்திற்கு எந்த பதிலும் இல்லையே நண்பரே. இதில் குறிப்பிட்டுள்ள செய்திகளை கூறி அவரை ஒரு பதிவிட சொன்னால் நானும் மற்றவர்களும் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.//
    இதில் விதண்டாவாதம் தான் தெரிகிறது..
    அந்த கல்லை முஸ்லிம்கள் வணங்கவில்லை என்பதை தெளிவாக பீ ஜே அவர்கள் விளக்கியுள்ளார்..இருந்தும் உங்களுக்கு எந்த பதிலும் இல்லை எனபது ஏன் எனபது புரியவில்லை...அதை லிங்கம் என்று ஒப்புக்கொள்ள வேண்டுமா? உங்கள் ஹிந்து மதம் இந்தியாவைத்தாண்டி எங்கே இருக்கிறது?

    //இங்கு கல்லை அல்லது சிவலிங்கத்தை வழிபடுவதுபோல் அங்கும் கல்லை வழிபட்டுள்ளார்கள் என்பது தெரிய வருகிறதா?
    இதற்க்கு உங்கள் மற்றும் பிஜெ பதில் என்ன?//

    சிறுபிள்ளை தனமான கேள்வி...நபிகள் நாயகம் வருகைக்கு முன்பும், நபிகள் நாயகம் மக்காவில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்பும் சிலை வணக்கம் இருந்தது உண்மைதான்..அதை ஒழிக்க தான் நபிகள் நாயகம் பாடுபட்டு வெற்றி கண்டார்கள்..இப்படி வேண்டும் என்றே கிறுக்குத்தனமாக கேள்வி கேட்டு குழப்புவது வேடிக்கையாக உள்ளது.. சிவலிங்கம் எனபது இங்குள்ள முட்டாள்கள் வணங்குவது....அதை இந்தியாவைத்தவிர உலகில் வேறு எந்த பகுதியிலும் வணங்கப்படுவதாக கூறுவது படு அபத்தம்...

    பதிலளிநீக்கு
  26. வாருங்கள் மர்மயோகி அவர்களே,
    // இதில் விதண்டாவாதம் தான் தெரிகிறது..//
    என்னுடைய பதில் விதண்டாவாதம் போல் இருந்தால் மன்னிக்கவும். அதை நான் செய்யவும் இல்லை. அது என் நோக்கமும் அல்ல.

    //அந்த கல்லை முஸ்லிம்கள் வணங்கவில்லை என்பதை தெளிவாக பீ ஜே அவர்கள் விளக்கியுள்ளார்..இருந்தும் உங்களுக்கு எந்த பதிலும் இல்லை எனபது ஏன் எனபது புரியவில்லை... //

    நானும் அந்த கல்லை இசுலாமியர்கள் வணங்குகிறார்கள் என்று கூறவில்லையே நண்பரே.அந்த கல்லுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்றுதான் கூறுகிறேன். எந்த பதிலும் இல்லை என்று கூற காரணம்..அல்லாவின் வலது கரம், அந்த கல்லை பார்த்து அவர்கள் கூறும் வசனம், முத்தமிட காரணம், தீர்ப்பு நாளில் அந்த கல் பேசும் என்ற விடயங்களுக்கு பதில் இல்லை என்பதைத்தான் கூறினேன் சகோ. நீங்களே சொல்லுங்கள் இதற்கு அதில் பதில் உள்ளதா?

    //அதை லிங்கம் என்று ஒப்புக்கொள்ள வேண்டுமா? உங்கள் ஹிந்து மதம் இந்தியாவைத்தாண்டி எங்கே இருக்கிறது?//
    நான் அப்படி சொல்லவில்லை. சூரியனையும், சந்திரனையும், கல்லையும், சிலையையும் வணங்குவது இந்து மதம் என்றால் அராபியியாவில் இருந்ததும் இந்து மதம்தான். இந்தியாவைத்தாண்டி இந்து மதம் எங்கு உள்ளதா? என்ன கேள்வி சகோ? துபாயில் கூட இந்து மத கோயில் இருக்கே.முடிந்தால் இது பற்றி ஒரு பதிவிடுகிறேன்.
    ///////
    //இங்கு கல்லை அல்லது சிவலிங்கத்தை வழிபடுவதுபோல் அங்கும் கல்லை வழிபட்டுள்ளார்கள் என்பது தெரிய வருகிறதா?
    இதற்க்கு உங்கள் மற்றும் பிஜெ பதில் என்ன?//

    சிறுபிள்ளை தனமான கேள்வி...நபிகள் நாயகம் வருகைக்கு முன்பும், நபிகள் நாயகம் மக்காவில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்பும் சிலை வணக்கம் இருந்தது உண்மைதான்..அதை ஒழிக்க தான் நபிகள் நாயகம் பாடுபட்டு வெற்றி கண்டார்கள்..இப்படி வேண்டும் என்றே கிறுக்குத்தனமாக கேள்வி கேட்டு குழப்புவது வேடிக்கையாக உள்ளது.. /////
    உண்மைதான் நபிகள் நாயகம் சிலை வழிபாட்டை ஒழித்தார்...ஆனால் ஏன் அந்த கல்லை மட்டும் ஒன்றும் செய்யவில்லை?. அந்த கல் சொர்க்கத்தில் இருந்து கிடைத்தது என்று எந்த வேத புத்தகத்தில் உள்ளது?

    //சிவலிங்கம் எனபது இங்குள்ள முட்டாள்கள் வணங்குவது....அதை இந்தியாவைத்தவிர உலகில் வேறு எந்த பகுதியிலும் வணங்கப்படுவதாக கூறுவது படு அபத்தம்...//

    மற்றவர்களை விமர்சிக்கும் பொழுது நாவடக்கம் முக்கியம் நண்பரே.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  27. உபநிஷத்தில் ஒரு கதை ‘பிப்பல’ மரத்தில இரண்டு பட்சிகள்.(பறவைகள்) ஒன்று பழத்தை சாப்பிட்டு ஆடிப்பாடி இருக்கிறது. மற்றொன்று சாப்பிடாமல் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒன்று ஜீவன், மற்றொன்று ஆத்மா என்பதே அது. இந்த ஜீவன் நகர்ந்து நகர்ந்து ஆத்மாவை பார்க்க ஆரம்பித்த போதில் மறைந்து அதுவே ஆத்மாவாக மாறிவிடுகிறது (அத்வைதம்)

    ஹீப்ரு மதத்தில் வருகிற இன்னொரு கதை. Tree of knowledge இதில் ஆடம்,ஈவ் எனறு மாறியிருக்கலாம் என்று ஆடம் பழத்தை சாப்பிடாதே என்று ஈவிடம் சொல்வது
    .
    ஜீ என்பது ஈ என்று ஆவது மொழிக்கு மொழிக்கு மாறும் இலக்கண விதிகளில்ஒன்று. ஜமுனா யமுனா என்று ஆனது மாதிரி. யோகீந்தர் என்பது ஜோகீந்தர் என்று ஆவது. ஆத்மா-ஜீவன் என்பது ஆடம்-ஈவ் ஆனது மாதிரி ‘பிப்பலம்’ ஆப்பிள் எனறானது என்கிறார்கள்.எங்கோயோ படித்தேன்.

    எப்படி தியானம்(தியான்) சைனாவுக்கு போய் ‘சான்’ எனறு மாறி அங்கிருந்து ஜப்பானுக்கு போய் ஸென் என்றானது மாதிரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உபநிஷத்தில் ஒரு கதை ‘பிப்பல’ மரத்தில இரண்டு பட்சிகள்.(பறவைகள்) ஒன்று பழத்தை சாப்பிட்டு ஆடிப்பாடி இருக்கிறது. மற்றொன்று சாப்பிடாமல் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒன்று ஜீவன், மற்றொன்று ஆத்மா என்பதே அது. இந்த ஜீவன் நகர்ந்து நகர்ந்து ஆத்மாவை பார்க்க ஆரம்பித்த போதில் மறைந்து அதுவே ஆத்மாவாக மாறிவிடுகிறது (அத்வைதம்)//

      இந்த கதையில் மிகப்பெரிய ஆன்மீக ரகசியம் பொதிந்துள்ளது. இதை கூறியமைக்கும் தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  28. காபாவில் பொறுத்த பட்டுள்ள கல் இறைவனின் வலது கை என்று முஹமத் நபி எப்போது சொன்னார்கள் எந்த ஹதீஸில் இடம் பெற்று இருக்கிறது என்று ஆதாரம் கூறவும். விக்கிபீடியா மற்ற எந்த தளதியும் மேற்கோள் காட்ட வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ mubarak kuwait :)

      //"The Black Stone is the right hand of Allah Most High." Ibn Qutayba in Ta' wil Mukhtalif al-Hadith (1972 ed. p. 215=1995 ed. p. 198, 262) said that it was a saying of Ibn 'Abbas and relates a saying of 'A'isha that the Black Stone is the depository of the covenant of human souls with Allah on the Day of Promise (alastu bi rabbikum). He interprets the Black Stone as representing the place where one declares one's pledge of fidelity to the Sovereign. Ibn Hajar in Fath al-Bari (1959 ed. 3:463 #1520) cites al-Khattabi's and al-Muhibb al-Tabari's similar interpretations. Al-Qurtubi said in al-Asna fi Sharh Asma' Allah al-Husna (2:90-91): "It means that the Black Stone has the standing (manzila) of the Right Hand of Allah. metaphorically speaking."//

      http://www.livingislam.org/fiqhi/fiqha_e54.html
      மேற்கூறிய ஹதீஸ்கள் கருப்புக்கல்லை அல்லாவின் வலது கரம் என்றே குறிப்பிடுகின்றன.

      மேலும் விவரங்களுக்கு சகோ ஹாஜமைதினுக்கு இட்ட பின்னூடத்தை பார்வை கேட்டுக்கொள்கிறேன்

      தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)

      நீக்கு
  29. உங்கள் பதிவு மிகவும் அருமை கீழே விவாதங்களும் அருமையாக உள்ளன இவ்வாறு சமயங்களை பற்றி எழும் கேள்விகளுக்கு விடய புத்தகங்களில் தேடமுடியதுள்ளது இப்படி மற்று கருத்துடைய புத்தகங்கள் கண்ணுக்கு தென்பட வில்லை உங்கள் ப்ளாக்ஐ பார்த்தது அதிஷ்டம் (அதிஷ்டம் என்று ஒரு வெங்காயமும் இல்ல எண்டு கிளிச்சிடதீங்க பழக்க தோஷம் )

    சிவன் விஸ்ணு முருகன் பிள்ளையார் எல்லாம் நமது தெய்வங்கள் இல்லை நமது தெய்வங்கள் மாரியாத்தா செல்லாத்த வைரவர் போன்ற கிராமியத் தெய்வங்கள்தான் ஆரியர்கள் சமயத்தினூடாக இப்பொழுதும் நம்மை மறை முகமாக ஆட்சி செய்கிறார்கள் என்று யாரோ சொல்ல கேட்டிருக்கின்றேன் ...நான் கேட்டது உண்மையா ? இதை பற்றியும் ஒரு பதிவு இடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா வாங்க :)
      உங்க பாராட்டுக்கு நன்றி, பின்நூட்டவாதிகள் சார்பாகவும் நன்றி :)

      //சிவன் விஸ்ணு முருகன் பிள்ளையார் எல்லாம் நமது தெய்வங்கள் இல்லை நமது தெய்வங்கள் மாரியாத்தா செல்லாத்த வைரவர் போன்ற கிராமியத் தெய்வங்கள்தான் ஆரியர்கள் சமயத்தினூடாக இப்பொழுதும் நம்மை மறை முகமாக ஆட்சி செய்கிறார்கள் என்று யாரோ சொல்ல கேட்டிருக்கின்றேன் ...நான் கேட்டது உண்மையா ? //

      குறிஞ்சி நிலத்துக்கு இறைவனா ஏன் முருகன சொல்றாங்க, மருத் நிலத்துக்கு இறைவனா ஏன் திருமாலா சொல்றாங்க, பாலை நிலத்துக்கு கொற்றவை (நம்ம மாரியாத்தா) ஏன் சொல்றாங்க இப்படி தனி தனியா இருக்கிறப்ப எப்படி முருகன் ஆரியன் ஆனான்னு நீங்க கேட்கணும்.
      இது எல்லாமே ஆரியன் செய்த சதினா தமிழ் நாட்டுல தமிழனால எழுதப்பட்ட இலக்கியம் எதுன்னு கேட்கணும்.


      பாசு ஒன்னு தெரிஞ்சிக்குங்க அல்லாவும் ஏசுவும் கூட நம்ம தெய்வம்தான் எப்படின்னு பதிவுல சொல்றேன் :)

      //இதை பற்றியும் ஒரு பதிவு இடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்//
      கண்டிப்பாக அடுத்த பதிவு இது சம்பந்தமாக போட முயற்சி செய்கிறேன்.

      அட...இப்பதான் உங்களது வலைதளத்த பார்த்தேன்...நீங்க தெளிவா இருக்கிற மாதிரி தெரியுது இருந்தாலும் என்ன எழுத சொல்றிங்களே :)
      தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  30. சிவனை வணங்க முஸ்லிம்கள் முட்டாள்கள் அல்லர். அல்லாஹ் சுபானஹுத்தஆலா(பரிசுத்தமானவன்) வை பற்றிய வியாக்கியானம் முற்றிலும் வேறு,
    சிவனின் அளவுகோல் வேறு. சிவன் பலதார மணம் கொண்ட பிள்ளைகள் உடையவர். தோற்றப்பாட்டில் மனித வடிவில் உள்ள நபர்களை போன்றவர்.
    நீங்கள் முதன் முதலில் அராபியர்களால் ஹிந்துக்கள் என்று பெயர்சூடி அழைக்கப்பட்டவர்களில் சிவனை கடவுள் என்று எண்ணி வணங்கும் ஒரு
    பிரிவினர்.அர்த்தம் இல்லாமல் படைப்பினத்தோற்றங்களை எல்லாம் முஸ்லிம்கள் புலன்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனையால் உணர்ந்து வணங்கும்
    அல்லாஹு த்தஆலாவுடன் இணைத்து பேச வேண்டாம். நாங்கள் அடிப்படையில் மாறுபடுவதே அதில் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் பரிசுத்தம் ஆனவன் என்று கூறும் போதே..... அங்கு ஒரு ஆண் உருவம் தெரிகிறது.. அது மாத்திரம் அல்ல. நபிகள் (ஸல்) அவர்கள் இறைவனை குறுகிய நேரத்தில் சென்று பார்த்தார் என்றும் அந்நாளை.. இஸ்லாமியர் முக்கிய நாளாக கொண்டாடுகிறார்கள்... உருவமில்லாமல் எப்படி பார்ப்பது, கதைப்பது, எனக்கு புரியவில்லை
      அந்த கல் முக்கியமில்லை என்றால் நீங்கள் வணங்கும் இடத்தில் ஏன் வைத்திருக்கிங்கள் நூதனசாலையில் வைத்திருக்கலாமே... இன்னும் நிறைய பேருக்கு அதை பார்த்து தெரிந்து கொள்ள முடியுமே?

      நீக்கு
    2. நீங்கள் பரிசுத்தம் ஆனவன் என்று கூறும் போதே..... அங்கு ஒரு ஆண் உருவம் தெரிகிறது.. அது மாத்திரம் அல்ல. நபிகள் (ஸல்) அவர்கள் இறைவனை குறுகிய நேரத்தில் சென்று பார்த்தார் என்றும் அந்நாளை.. இஸ்லாமியர் முக்கிய நாளாக கொண்டாடுகிறார்கள்... உருவமில்லாமல் எப்படி பார்ப்பது, கதைப்பது, எனக்கு புரியவில்லை
      அந்த கல் முக்கியமில்லை என்றால் நீங்கள் வணங்கும் இடத்தில் ஏன் வைத்திருக்கிங்கள் நூதனசாலையில் வைத்திருக்கலாமே... இன்னும் நிறைய பேருக்கு அதை பார்த்து தெரிந்து கொள்ள முடியுமே?

      நீக்கு
  31. நானும் அந்த கல்லை இசுலாமியர்கள் வணங்குகிறார்கள் என்று கூறவில்லையே நண்பரே.அந்த கல்லுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்றுதான் கூறுகிறேன். எந்த பதிலும் இல்லை என்று கூற காரணம்..அல்லாவின் வலது கரம், அந்த கல்லை பார்த்து அவர்கள் கூறும் வசனம், முத்தமிட காரணம், தீர்ப்பு நாளில் அந்த கல் பேசும் என்ற விடயங்களுக்கு பதில் இல்லை என்பதைத்தான் கூறினேன் சகோ. நீங்களே சொல்லுங்கள் இதற்கு அதில் பதில் உள்ளதா?
    மாதா,பிதா குரு தெய்வம் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு பக்கத்து வீட்டுக்காரனுக்கு முக்கியத்துவம் கொடுப்பீரா, இல்லை. அதற்காக
    ஒரு ஹலோ சொன்னாலும் அவருக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர் என கேட்கலாமா. மறுமை நாளில், உலகில் நீ உனது கண், காது தோல்களால்......
    செய்த பாவங்களுக்கு உனக்கு எதிராக அவை சாட்சி சொல்லும் என இருக்கும் போது, இந்தக்கள்(முஸ்லிமின் நம்பிக்கை) நற்சாட்சி சொல்லாதா.

    பதிலளிநீக்கு
  32. அரபி மொழியில் அல்லாஹ் எனும் சொல் அல்லாஹ்வை மட்டுமே குறிக்கும், அல்லாஹ் எனும்போது அங்கே ஆண்பால் பெண்பால் அது அவை என்ற
    எதுவுமே அதில் சம்பந்தப்படாது, நிற்க தமிழ் மொழியில்அல்லாஹ்வை குறிக்க தனியான வார்த்தை பிரயோகம் கிடையாது அதுதான் காரணம். நபி அவர்கள்
    மிஹ்ராஜ் சென்ற போது இறைவனை பார்த்தார்கள் என்று நீங்கள் எங்கு பார்த்தீர்கள், அது கல் என்ற படியால் தான் அங்கே இருக்கிறது இல்லையேல் உடைக்கப்பட்ட 360 சிலைகளுடன் அதுவும் உடைக்கப்பட்டிருக்கும், அந்த கல்லில் எந்த அதிசயங்களும் இல்லை அதில் இறைசக்தி உண்டு எனில்
    நபியவர்கள் கட்டாயம் சொல்லி இருப்பார் இஸ்லாத்தின் தனிச்சிறப்பே ஓரிறைக்கொள்கை அதில் கல்லுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் அது
    உங்கள் நிலை, நானோ அதன் தெளிவு நிலையில் உச்சத்தில் இருக்கிறேன் அதை நீங்களும் ஆய்து அறியணும் அல்லாஹ் உங்களுக்கு கிருபை
    செய்வானாக மேலும் அங்கே பெரும் கட்டிட தூண்களும் உள்ளன, பல்லாயிரம் ஆண்டுகள் வற்றாத நீரூற்றும் உண்டு, மேலும் மியூசியத்தில் ஏன் வைக்க
    வேண்டும், அது பாதுகாப்பான இடத்தில் தான் உள்ளது. நீங்கள் தான் ஆயிரக்கணக்கான சிலைகள் செய்து வைத்துள்ளீர்களே அந்த கல் எதற்கு.

    பதிலளிநீக்கு
  33. அல்லாஹ் சுபானஹுத்தஆலா சூன்யமானவான் (வெறுமை) கிடையாது அவனுக்கு உருவம் உண்டு ஆனால் புறக்கண்ணால் அவனைப்பார்க்கும் ஆற்றல் எந்தப்படைப்பினங்களுக்கும் இவ்வுலகில் வழங்கப்படவில்லை.அதற்கு பல காரணங்களை சிந்தித்து உணர்ந்து கொள்ளலாம் ஏனெனில் மனிதன் சுயநலக்காரன் இறைவனுடன் எமக்குள் உள்ள தொடர்பாடல் போல தொடர்பு கொள்ள முடியுமான நிலைமை ஏற்பட்டால் இறைவனையும் வியாபாரப்பொருள் ஆக்கி விடுவான் மனிதன். இறைவன் முளுப்பிரபஞ்சத்தையும் சரியான திட்டமிடலுடன் தான் படைத்து உள்ளான். எனவே அவனின் மறைந்த நிலையே சரியானது என்பது எனது நிலை.

    பதிலளிநீக்கு
  34. அல்லாஹ் சுபானஹுத்தஆலா சூன்யமானவான் (வெறுமை) கிடையாது அவனுக்கு உருவம் உண்டு ஆனால் புறக்கண்ணால் அவனைப்பார்க்கும் ஆற்றல் எந்தப்படைப்பினங்களுக்கும் இவ்வுலகில் வழங்கப்படவில்லை.அதற்கு பல காரணங்களை சிந்தித்து உணர்ந்து கொள்ளலாம் ஏனெனில் மனிதன் சுயநலக்காரன் இறைவனுடன் எமக்குள் உள்ள தொடர்பாடல் போல தொடர்பு கொள்ள முடியுமான நிலைமை ஏற்பட்டால் இறைவனையும் வியாபாரப்பொருள் ஆக்கி விடுவான் மனிதன். இறைவன் முளுப்பிரபஞ்சத்தையும் சரியான திட்டமிடலுடன் தான் படைத்து உள்ளான். எனவே அவனின் மறைந்த நிலையே சரியானது என்பது எனது நிலை.

    பதிலளிநீக்கு
  35. //சிவலிங்கம் என்பது இங்குள்ள முட்டாள்கள் வணங்குவது//
    இப்படி கூறும் முஸ்லிம்கள் முட்டாள்கள்...

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...