வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 18 நவம்பர், 2012

சுவனப்பிரியனின் பெண்கல்வி முறையை பின்பற்றி உலத்தையே இசுலாமை ஏற்க செய்வோமா?



 சுவனப்பிரியன் என்பவர்   இசுலாமில் பெண்கல்விக்கு ஆதரவாக ஒரு பதிவு எழுதியுள்ளார். அதில் அவர்  தந்துள்ள முக்கியமான கருத்து.
//மூட்டைப் பூச்சிக்கு பயந்து கொண்டு வீட்டை கொளுத்துவோமா! மாட்டோம். எனவே வயதுக்கு வந்த பெண்கள் தனியே பெண்கள் மட்டுமே படிக்கக் கூடிய பள்ளி கல்லூரிகளில் சேர்ந்து தங்களின் கல்வி அறிவை பெருக்கிக் கொள்வார்களாக!//

அதற்க்கு நாகூர் மீரான் என்பவரின் பின்னூட்டம் 

// பெண்கள் வீதியில் விற்கப்படும் கருவாடு அல்ல..அவர்கள் வைரங்கள், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்..அவர்கள் பாதுகாப்புக்கு செய்யவேண்டிய அணைத்து வேலைகளும் செய்வது எமது கடமை..அதில் ஒன்று அவர்களுக்கு பாதுகாப்பான கல்வி வழங்குவது..தனியான பெண்கள் கல்லூரி அமைப்பது ..அதில் அணைத்து மத பெண்களுக்கும் இடமளித்து ஆண் பெண் கலப்பு எனும் சமுதாய ஒழுக்க கேடு ஏற்படாமல் தடை ஏற்படுத்துவது ...//

இனி என்னுடைய கருத்து .....
அருமையான  முடிவு 

இனி  வாகாபிச இசுலாமிய பெண்கள் பெண்களுக்காக பெண்களால் இயக்கப்படும் பேருந்தில்,ஆட்டோவில்   மட்டுமே செல்லட்டும் 

இனி  வாகாபிச இசுலாமிய பெண்கள் பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் நிறுவனத்திற்கு  மட்டுமே வேலைக்கு செல்லட்டும் 

பெண்களுக்கென சவூதி அரேபியாவில் ஒரு நகரம் கட்டுவது  போல தமிழகத்தில் வாகாபிச  இசுலாம்  உள்ள  ஊர்களில் பெண்களுக்காக ஒரு தெருவை ஏற்ப்படுத்துவோம் 

ஆம்  உரக்கச்சொல்வோம் 
(கீழே உள்ளவை UNMAIKAL என்பவர் கூறியது )
//• இஸ்லாத்தில் பெண்கள் வேலைக்கு செல்ல தடையில்லை.

• அப்படி வேலைக்கு சென்று சம்பாதித்தாலும் அதை குடும்பத்திற்கு செலவழிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு கிடையாது.

• இஸ்லாத்தில் பெண்கள் வெளியே செல்ல தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் கல்வி கற்க தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் விளையாட்டில் பங்குகொள்ள தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் கணவனை தேர்ந்தெடுக்க தடையில்லை//

கீழே உள்ளவை என்னுடைய கருத்து 

வாகாபிச இசுலாமிய பெண்கள் பெண்களுடனே மட்டுமே பேச வேண்டும் என்று மறக்காமல் சொல்லுவோம் 

வாகாபிச பெண்களுக்கு இசுலாமியர்கள் தரும் சுதத்திரந்தை பார்த்து பிற மதத்தில் உள்ள பெண்கள் உடனே இசுலாமில் சேரட்டும்.

பெண்கள் இல்லாமல் ஆண்கள் என்ன செய்வார்கள் எனவே உலக ஆண்கள் அனைவரும்  இசுலாமில் சேருவார்கள் .

பின்பு நாம் இறந்து பல கோடி  ஆண்டுகள் கழித்து, அல்லா  நம்மை எழுப்பி அனைவருக்கும் சுவனத்தில் மாளிகைகள் ,பட்டாடைகள் ,மது, பெண்கள் தந்து நம்மை மகிழ்விப்பார்.

உடனே வாகாபிச இசுலாமில் சேர்ந்திடுங்கள் இறந்து பல கோடி  ஆண்டுகள் கழித்து சுவனத்தை அடைந்திடுங்கள்.

பின்குறிப்பு : இந்த பதிவில் இசுலாம் என்பது வாகாபிச  இசுலாமையே குறிக்கும் என கூற காரணம் என்னவெனில்  சம்பந்தப்பட்ட பதிவை எழுதியவரும் அதை ஆதரிப்பவர்களும் வாகாபிய இசுலாமியர்களே.பெண்கல்விக்கு தடை விதித்த அமைப்பு எந்த பிரிவை சார்ந்தது என்று யாராவது  விளக்கினால் நன்றாக இருக்கும். நன்றி 

50 கருத்துகள்:

  1. //பின்பு நாம் இறந்து பல கோடி ஆண்டுகள் கழித்து, அல்லா நம்மை எழுப்பி அனைவருக்கும் சுவனத்தில் மாளிகைகள் ,பட்டாடைகள் ,மது, பெண்கள் தந்து நம்மை மகிழ்விப்பார்.//
    பெண்களுக்கு என்ன கொடுப்பார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராபின்,
      பெண்களுக்கு மாளிகைகள் ,பட்டாடைகள் ,மது, கணவன் (அதே பழைய கணவன்).

      நீங்க அடுத்த கேள்வி கேட்கணும் அப்ப கல்யாணம் ஆகாத பெண்களுக்கு?
      ஹா ஹா
      சிந்திக்க தெரிந்தவர்களுக்கு விடுதலை :)
      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
    2. உலகில் ஆண் பெண் என்ற பிரிவுக்கு காரணம் இனப்பெருக்கம் நிகழ வேண்டும் என்பதற்காக, எந்தக்கண்ணும் பார்த்திராத, எந்தக்காதும் கேட்டிராத கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு இன்பம் அங்கு உள்ளது. இன்பம் என்றால் செக்ஸ் இணைவு என்று மட்டுமே எண்ணுகிறீர்கள் அது தவறு நாம் உலகில் எண்ணும் இன்பத்தை விட பல மடங்கு உயர்ந்ததாக அது இருக்கும் ஏன் அதை எதிர்ப்பார்க்கிறோம், வாழ்க்கை அனுபவத்தின் பெறுபேறுகளில் இருந்து இவ்வுலக வாழ்வில் பிறப்பும் இறப்பும் என் நிகழ்கிறது என்று பல கோணங்களில் ஆய்ந்து எம் சிந்தனைக்கு இஸ்லாம் சொல்லும் வழி சிறந்ததாக படுகிறது வேறு எதுவும் சிந்தனைக்கு பொருத்தமாக தெரியவில்லை. நம்பாதவர்களுக்கு பிழையாக தெரிந்தால் உங்கள் வழியில் நீங்கள் இருங்கள்.எங்கள் தெரிவை கொச்சைப்படுத்தாமல் உங்களுக்கு அதையும் விட சிறப்பான ஒன்றை முடியும் என்றால் விளக்கங்களுடன் முன் வையுங்கள் அவ்வளவே. யாருடைய நம்பிக்கையையும் அரைகுறையாக சொல்லி விமர்சிக்க வேண்டாம்.

      நீக்கு
    3. வாங்க raheem majeed,
      இங்க நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள் என எனக்கு புரியவில்லை.
      மற்றவர்கள் செய்த விமர்சனத்துக்கு மறு விமர்சனமே இது.

      //உங்களுக்கு அதையும் விட சிறப்பான ஒன்றை முடியும் என்றால் விளக்கங்களுடன் முன் வையுங்கள் அவ்வளவே. யாருடைய நம்பிக்கையையும் அரைகுறையாக சொல்லி விமர்சிக்க வேண்டாம்.//

      நண்பா நான் சொல்வதெல்லாம் ஒழுக்கம் பற்றியே கல்வியே அவசியம். ஒழுக்கத்திற்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும். ஆணையும் பெண்ணையும் பிரித்து வைப்பதால் பிரச்சனை தீராது.
      என்ன சொல்கிறீர்கள்?

      நீக்கு
  2. ஆணுக்கு கட்டுப்பட்டு நடப்பவளே நல்லொழுக்கமுடையவள். கணவனை மதிக்காத மனைவியை படுக்கையை விட்டு விலக்கி, அடித்து கட்டுப்படுத்தலாம் குரான் 4:34

    சேர் வாழ் இதை விட்டுவிட்டீர்களே?
    கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுத்தால் அவள் விடியும் வரை சபிக்கப்பட்டவளாகிறாள். புஹாரி 3237

    குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டால் குழந்தைகள் மீது மனைவிக்கு எந்த உரிமையும் இல்லை. பால் கொடுத்தால் கூட அதற்கு விலை கொடுக்க வேண்டும். குரான் 2:233

    தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ஆன் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள் குரான் 3:14

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க Kiruththikan Yogaraja,
      //சேர் வாழ் இதை விட்டுவிட்டீர்களே?//
      அந்த பதிவில் இருந்ததை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்பினேன்.
      தங்கள் வருகைக்கும் வசனங்களுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
    2. 1.பொய் சொல்ல வேண்டாம் அடித்து துன்புருத்த் இஸ்லாம் சொல்லவில்லை.வார்த்தை மாற்றம் செய்ய வேண்டாம். பொதுவழக்கில் மூக்கில்லையின் மலமுண்பாள் என்பர் அப்படி பட்ட பெண்களை திருத்துவதற்கு இப்படி பட்ட சிறு புறக்கணிப்பு செய்வதில் என்ன தவறு 2.ஆணின் பாலியல் தன்மையையும் பெண்ணின் பாலியல் தன்மையையும் முதலில் அறிய வேண்டும். பொதுவாக ஆண் எண்ணத்தைக்கொண்டு உடன் உணர்ச்சி வசப்படுபவன் பெண் ஸ்பரிசம் தொடுகையை கொண்டு உணர்ச்சி மேலீடு அடைபவள், இருசாராரும் விட்டுக்கொடுத்து ஒரு கட்டத்தில் இனைதிடுவதே இயற்கை அதையும் மீறி மனைவி தொடர்ந்தும் வெறுப்பை காட்டும் அளவிற்கு வைராக்கியம் உடையவளாய் இருந்தால் வானவர்கள் சபிக்கின்றனர் என்ற காரணம் காட்டி ஒரு இஸ்லாமிய பெண் இறைவனுக்கு பயந்து சுமூகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த உபதேசம் சொல்கிறது இதில் என்ன தவறை காண்கிறீர். 3.விவாகரத்தானால் அக்குழந்தையின் முழுப்பராமரிப்பு சிலவும் தந்தையினுடையது பால் கொடுத்த பெறுமதியையும் அவன் அப்பெண்ணுக்கு கொடுக்க சொல்வதில் இருந்து விவாகரத்தான பெண் மீதான நலனின் பால் அக்கறை கொண்டே இவ்வாறு சொல்லப்படுகிறது தாயையும் சேயையும் பிரிக்க சொல்லவில்லை, பெண் பொருளாதார நிர்கதி ஆவது பெரும் ஆபத்து. 4.தங்கம், காசு, வாகனங்கள்,பங்களா,பல கிரவ்ன்ட் நிலங்கள் ஆண் குழந்தைகள் மனநிறைவை தருவது போல பெண்னினாலும் சுகம் பெருவதில்லையா, அவனவன் நிலை உயர்வுக்கு ஏற்ப தேவையுடையோர் பல மணம் கொண்டு சுகம் பெறலாம்,சின்ன வீடு கூடாது, பெரிய சுகமே பெண்ணிடம் தானே உள்ளது.

      நீக்கு
    3. //அவனவன் நிலை உயர்வுக்கு ஏற்ப தேவையுடையோர் பல மணம் கொண்டு சுகம் பெறலாம்,சின்ன வீடு கூடாது, பெரிய சுகமே பெண்ணிடம் தானே உள்ளது.//

      காசு இருக்கிறவன் பத்து பொண்டாட்டி கட்டிக்கிட்டா காசு இல்லாதவன் என்ன பண்றது?
      காசு இல்லாதவன் வாழ்ந்தா என்ன செத்தா என்ன
      நமக்கு காசு கொடுக்கத்தான் ஷேக்கு இருக்கான் இல்ல? :)

      ஒரு ஆணுக்கு பல பெண்களை அனுபவிக்க ஆசை உள்ளது போல பெண்ணுக்கும் ஆசை இருக்காதா?
      ஏன் அவளை மட்டும் அடிமைபடுத்த நினைக்குறீர்கள்?

      நீக்கு
  3. எனக்கும் சுவனம் வேண்டும்.

    எப்பூடி ...?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா,
      சுவனம் என்று ஒன்று இருக்கின்றதா? எனக்கு தெரிந்து முகமது நபியாலோ அல்லது அவருக்கு பின் வந்தவர்களாலோ மக்களை ஒழுங்குபடுத்தவும் போருக்கு ஊக்கப்படுத்தவும் சொன்னதுதான் சுவனம் என்பதே எனது புரிதல்.
      அப்படியே சுவனம் ஒன்று இருந்தாலும் (அவர்கள் கூறுவதுபோல இருக்க வாய்ப்பில்லை.நிர்வாண நிலை என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்) பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல்,ஏமாற்றாமல்,திருட்டு,கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவற்றில் ஈடுபடாமல் உண்மையாக வாழ்தலே போதுமானதாகத்தான் இருக்க வேண்டும்.அதைவிடுத்து வேறு ஏதாவது இருந்தால் அப்புறம் படைத்தவனுக்கு நாம் நரகத்தை காட்டுவோம்.
      நன்றி

      நீக்கு
  4. புரட்சிமணி,

    தனியா ஒரு பதிவே போட்டுட்டிங்களா, நான் சு.பி.சுவாமிகளுக்கு போட்ட பின்னூட்டம் இது,

    //சு.பி.சுவாமிகள்,

    பெண் கல்விக்கு குரல் கொடுத்திருப்பது நல்ல விடயம், பாராட்டுக்கள்.

    ஆனாலும் அதிலும் உங்கள் பழமைவாத நச்சுக்கருத்தினை புகுத்துகிறீர்கள், அதாவது ஆணும் ,பெண்ணும் ஒன்றாக கல்வி பயின்றாலே ஒழுக்க கேடுக்கு ஆளாவார்கள் என சொல்வது ஒட்டு மொத்தமாக அனைத்து பெண்களையும் , ஆண்களையும் இழிவுப்படுத்துவது அல்லவா.

    அப்படியானால் ஆண் ,பெண் ஒன்றாக கல்வி கற்கும் சூழலை விரும்புவர்கள் எல்லாம் ஒழுக்க கேட்டினை ஆதரிப்பவர்களா?


    ஒரு சில சம்பவங்கள் நடப்பதை வைத்து ஒட்டு மொத்தமாக சொல்வதை நீங்கள் ஆதரிப்பீர்களானால், குண்டு வெடிப்பு சம்பவங்களில் பெரும்பாலும் அடிபடும் மதம் என்பதால் திரைப்படங்களில் தீவிரவாதிகளை சித்தரிக்கும் போது எளிதில் புரிய வைக்க அப்படி செய்கிறோம் என திரைத்துறையினர் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?

    அப்போ மட்டும் எதிர்ப்பு?

    இஸ்லாமிய மாணவிக்கு கல்வி கற்றால் அபராதம் என நடந்த சம்பவத்தினையே ஒரு திரைப்படத்தில் காட்சிப்படுத்தினாலும் நீங்கள் எதிர்ப்பீர்கள், ஆனால் நடந்த சம்பவத்தினை தானே பதிவு செய்கிறார்கள் என ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் , இது என்ன வகையான நியாயம் ?
    5:58 AM //

    இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி முக்கியம்னு சொல்வதோடு நிறுத்தாமல் ,ஆணும் பெண்ணும் சேர்ந்து கல்வி கற்றால் ஒழுக்க கேடு விளையும் என அடித்து சொல்கிறார், அப்படியானால் உலகம் முழுக்க அவ்வாறு கல்வி கற்பவர்களை அவதூறு செய்வதாக தானே பொருள்.

    ஹி...ஹி இஸ்லாமிய ஆண்கள் கல்வி கற்க சென்றாலும் ஆண்கள் மட்டுமே படிக்கும் இடங்களுக்கு மட்டும் தான் செல்ல வேண்டும், ஆணும் ,பெண்ணும் சேர்ந்து படிக்கும் இடங்களில் படிக்க கூடாது என சொல்வாரா?


    இவர்கள் மட்டுமே கொண்டது அல்ல உலகம் என்ற யதார்த்தம் கூட புரியாதவராக மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வௌவால்,
      //ஹி...ஹி இஸ்லாமிய ஆண்கள் கல்வி கற்க சென்றாலும் ஆண்கள் மட்டுமே படிக்கும் இடங்களுக்கு மட்டும் தான் செல்ல வேண்டும், ஆணும் ,பெண்ணும் சேர்ந்து படிக்கும் இடங்களில் படிக்க கூடாது என சொல்வாரா?//
      இதான் வௌவால்.
      சரியாக சொன்னீர்கள். இது பற்றி முஸ்லிம்களுக்கு அறிவுரை சொல்ல,செயல்படுத்த அவருக்கு தைரியம் இருக்கின்றதா? இருக்கின்ற ஒரு சில இசுலாமிய கல்லூரிக்கும் மூடுவிழாதான் நடக்கும். அவர்கள் நல்ல கல்லூரிகளில் சேரவும் முடியாது
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  5. திரு வவ்வாலுக்கு சொன்ன பதிலே உங்களுக்கும்.

    பெங்களூரு: காதலனுடன் வந்து கொண்டிருந்த, பெங்களூரு பல்கலை, சட்டக் கல்லூரி மாணவி, எட்டு பேர் கும்பலால் கடத்தப்பட்டு, பல்கலை வளாகத்திலேயே கற்பழிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பல்கலையில், இரண்டாம் ஆண்டு சட்டப் படிப்பு படித்து வரும் மாணவி மணீஷா, 21, உண்மையான பெயரை போலீசார் வெளியிடவில்லை.

    நேபாளத்தை சேர்ந்த இவர், தன் காதலன் நிர்மல் குமாருடன், கடந்த சனியன்று இரவு, 9:30 மணியளவில், காரில் பல்கலை வளாகத்தில் உள்ள, விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பல்கலை நிர்வாக கட்டடம் அருகே, எட்டு பேர் கும்பல், அவர்களின் காரை வழி மறித்தது. காரிலிருந்து இறங்கிய நிர்மல் குமாரை தாக்கிய கும்பல், மாணவியை மிரட்டி, புதருக்குள் இழுத்து சென்றது. உடன், அப்பகுதியில் நின்றிருந்த, ஊர்காவல் படையினரிடம், நிர்மல் குமார் தகவல் தெரிவித்தார். அவர்கள், அடர்ந்த புதர் பகுதிக்குள், மாணவியை தேடத் துவங்கினர். ஒரு மணி நேரத்துக்கு பின், பல்கலை வளாக அடர்ந்த புதர் பகுதியிலிருந்து துணிகள் கிழிந்த நிலையில், மாணவி தனிமையில் வருவதை கண்டு திடுக்கிட்டனர்.

    மாணவி கூறுகையில், ""எட்டு பேர் கும்பல், என்னிடமிருந்த மொபைல் போனை பறித்ததோடு, என்னை கற்பழித்தது,'' என்றார். இதையடுத்து, நிர்மல்குமார், பெங்களூரு ஞானபாரதி போலீஸ் ஸ்ஷேனில் புகார் செய்தார்.
    -http://www.dinamalar.com/News_Detail.asp?Id=566543

    இது ஒரு சம்பவம் மட்டும் அல்ல. தினமும் பத்pரிக்கைகளில் நாம் படிப்பது. இதற்கு காரணம் காதல், ஆண் பெண் சேர்ந்து படித்தல். இதை மறுக்க முடியுமா? எல்லோரும் உத்தமர்களாக இருந்து விட முடியாது. இதில் பாதிக்கப்படுவது அதிகமாக பெண்கள் தான். ஆணும் பெண்ணும் தனியே படிப்பதால் அறிவு வளர்ச்சியில் என்ன குறைவு வந்து விடும் என்று நினைக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ.இரண்டு வருடங்களுக்கு முன்பு குமுதத்தில் ஒரு தகவல் படித்தோம்..ஒரு பெண்ணுக்கு பன்னிரண்டு ஆண் நண்பர்களாம்..!!! அப்பெண் கற்பமானதாம்..அதற்க்கு யார் காரணம் என்று அப்பெண்ணாலையே கூற முடிய வில்லையாம் !!! காரணம் அப்பெண் ஆண் நண்பர்கள் அனைவரிடமே சென்று வருவதாக இருந்திருக்கிறது !!! இதற்க்கெல்லாம் காரணம் இந்த ஒழுக்க கேடான சிஸ்டம் அல்லவா..???

      வழிதவருவது எங்கு இருந்தாலும் வழி தவறும் .அதை பற்றி நாம் கவலை படுவதற்கு இல்லை..ஆனால் ஒழுக்கமான ஒரு பெண் வழி தவறுவது நேரிட்டாலும் இந்த சிஸ்டத்தை எதிர்ப்பது நம் கடமை...(இங்கு எதிராக பேசுவோரின் உடன்பிறப்புக்காகவும் தான் நாம் பேசுகிறோம்)

      நன்றி !!!

      நீக்கு
    2. @சுவனப்பிரியன்
      @நாகூர் மீரான்

      பெண்களை பெண்களுக்கான பாடசாலைக்கு மட்டுமே அனுப்ப வேண்டும் என்கிறீர்கள் நீங்கள். நான் என்ன சொல்கிறேன் சில இடங்களில் பெண்களுக்கு மத்தியில் ஓரினச்சேர்க்கை அதிக்மாகிரதாம் எனவே பெண்களை வீட்டுக்குள்ளே வைத்து பூட்டிவிடலாம். இப்ப எந்த பிரச்சனையும் வராது சரியா?

      நீக்கு
    3. திரு.சுபி.சுவாமிகள்,

      //இது ஒரு சம்பவம் மட்டும் அல்ல. தினமும் பத்pரிக்கைகளில் நாம் படிப்பது. இதற்கு காரணம் காதல், ஆண் பெண் சேர்ந்து படித்தல். இதை மறுக்க முடியுமா? //

      அப்போ பத்திரிக்கை செய்திகளை முன்னுதாரணமாக கொண்டு இந்த கருத்தினை சொல்லி இருக்கிறீர்கள்,

      நானும் ஒரு பத்திரிக்கை செய்தியை முன்னுதாரணமாக காட்டுகிறேன், ஆனால் பாருங்க அதெல்லாம் பொய் நம்ப கூடாதுன்னு சொல்வீங்க :-))

      http://www.deccanchronicle.com/channels/nation/west/cops-will-seek-sleeper-cell-info-036

      //Police sources on Thursday said that apart from interrogating alleged terrorist Abu Jundal on the cases registered against him, the authorities would also make him spill the beans on the sleeper cells of the Lashkar-e-Tayyaba present in Mumbai.
      According to sources, Jundal had taken many youngsters from interior Maharashtra, trained them in Pakistan, and later sent them back to India. Jundal, who was in touch with them, can give investigators vital leads like names and aliases used by operatives of the sleeper cells.
      Jundal, who got indoctrinated into terrorism in 2004, was trained by the LeT in Pakistan. He had undergone the Daura-e-Aam (a 21-day course in handling arms) and Daura-e-Sufa (a 21-day religious course) in Pakistan. “As Jundal rose in the ranks of the LeT, he was assigned the task of roping in local Indian youth,” said a source.//

      இது ஒன்று மட்டுமில்லை ,இது போல நூறு செய்திகள் ஸ்லீப்பர் செல் பற்றி காட்ட முடியும், இது போன்ற ஸ்லீப்பர் செல்கள் உருவாக காரணமாக இருப்பது இஸ்லாம் அல்லவா ,அதனை மறுக்க முடியுமா?

      அப்படியானால் துப்பாக்கிப்படத்தில் ஸ்லீப்பர் செல்லை காட்சியகப்படுத்தியதை எதிர்க்கலாமா? கூடாது அல்லவா, பத்திரிக்கைகளில் வரும் செய்தியின் அடிப்படையில் ஒரு காட்சி என எடுத்துக்கொள்ள வேண்டாமோ?

      மேலும் கணவன் ,மனைவியும் வீட்டுக்கு திரும்பியபோது சில சமூக விரோதிகள் வழி மறித்து பாலியல் பலாத்காரம், வீட்டில் தனியாக இருந்த ஜெர்மானிய பெண்ணை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் என்றெல்லாம் கூட செய்திகள் வருகின்றதே படிப்பது இல்லையா?

      இதெல்லாம் சமூக விரோத செயல்கள் சட்டப்படி தண்டிக்க வேண்டும், அதற்கு முயற்சி செய்யாமல்,

      கணவன்,.மனைவி வெளியே சென்றால் பாலியல் பலாத்காரம் நடக்கும் என வெளியே செல்லக்கூடாது, அல்லது திருமணமே செய்ய கூடாது என்பீர்களா?

      இல்லை வீட்டில் தனியாக பெண்ணே இருக்க கூடாது என 24 மணி நேரமும் காவலுக்கு ஆண் துணை வைப்பீர்களா, எல்லாருக்கும் அது சாத்தியமா?

      அரபு நாடுகளில் பெண் தனியாக சென்றாலே பாலியல் பலாத்காரம் செய்யுமளவுக்கு நிலைமை இருக்கிறது, இதெல்லாம் பெண்களை அச்சுறுத்தி அடக்கி வைக்கவே என்பதை சிந்திக்க மாட்டீர்களா?

      நீக்கு
    4. வவ்வால் நண்பா,
      நீங்கள் எவ்வளவுதான் சொன்னாலும் அவர் புரிந்தாலும் புரியாத மாதிரியே நடிப்பார். வேற என்ன செய்ய...அவருக்கு சுவனம் வேண்டுமே.

      நீக்கு
  6. அருமையான பதிவு நண்பா.
    இஸ்லாமை முழுமையாக புரிந்து கொண்டு "இனி என்னுடைய கருத்துக்கள்" என்று ஒரு இஸ்லாமியராகவே மாறி கருத்துக்கள் வைத்தீர்களே அருமை.
    பெண்கள் வைரங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்று எல்லாம் அவர்கள் சொல்வது பெண்களை அடிமைகளாக பூட்டி வைத்திருப்பதிற்காகவே.புதுக்கோட்டை பி.ஆர். பட்டனத்தில் பூப்பெய்த பெண்ணை பள்ளிக்கு அனுப்பிய குடும்பத்திற்க்கு ஜமாஅத்தால் 15000 ரூபா அபகரிக்கபட்டது. பி.ஆர்.பட்டினத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஜமாஅத்தால் இதே கொடுமைகளை எல்லாம் அனுபவிக்கின்றனர். காபிர்களின் ஜ‌னநாயக நாட்டிலேயே இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்றால் இந்தியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தால் நிச்சியம் இன்னொரு ஆப்கானிஸ்தானே தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா,
      //பெண்கள் வைரங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்று எல்லாம் அவர்கள் சொல்வது பெண்களை அடிமைகளாக பூட்டி வைத்திருப்பதிற்காகவே//
      //காபிர்களின் ஜ‌னநாயக நாட்டிலேயே இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்றால் இந்தியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தால் நிச்சியம் இன்னொரு ஆப்கானிஸ்தானே தான்.//
      மிகவும் சரியான புரிதல் .
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. சகோ அருமையான பதிவு,
    இந்த மூமின் மத்வாதிகள் ஏதேனும் ஒரு மத்வாதியின் கருத்து செயல்,பிரச்சினை அனைவருக்கும் தெரிந்து விட்டது என்றால் உல்டா அடித்து மாற்று விளக்கம் சொல்வது போல் நடிப்பார்கள். ஆனால் அதே கருத்தை மறைமுகமாக் வலியுறுத்துவார்கள்.

    காஃபிர்கள் முன்னால் நல்லவர்களாக காட்டிக் கொள்கிறார்களாம்!!!.நன்றி
    ஒரு பெண்ணுக்கு ஆணுக்கு கிடைப்பது போல் சொத்தில் பாதி.
    முதல் மனைவியின் விருப்பம் இன்றியே ஆண் இன்னும் 3 திருமணம் செய்யலாம். எண்ணற்ற பாலியல் அடிமை வைக்க்லாம்.நினைத்தால் எளிதில் விவாக ரத்து செய்யலம்.ஜீவனாம்சம் கொடுக்க தேவையில்லை. கேட்டால் மஹர் என்பார்கள்.மஹர் என்பது நம்து பரிசப் பணம் போல் குறைவாகவே இருக்கும்.ஆனால் அரபு நாடுகளில் மஹர் இலட்சம்,கோடிகளில் இருக்கும்.


    ஆனால் பெண்ணால் எளிதாக தலாக் கொடுக்க முடியாது.

    சவுதியில் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமையோ,ஓட்டு உரிமையோ இல்லை அதை எதிர்த்தால் அண்ணன்களுக்கு பொட்டியை கட்டிவிடுவார்கள்.

    மூமின்கள் பெரும்பான்மை ஆனால் அப்படித்தான் ஆகும்.

    மதவாதி வைப்பதே சட்டம்!!!

    காஃபிர் நாடுகளில் வாழும் மூமின்கள் மூமின் நாடுகளை முன் மாதிரியாக காட்டுவது எப்படி எனில் ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை என இருக்கும்.

    இதில் காஃபிர் ஆத்திகர் ஒருவர் அனைத்து ஆத்திகர்களையும் ஒன்று திரட்டி நாத்திகரை எதிர்பாராம். ஹி ஹி

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாசின் காமெடிக்கு அளவேயில்லாமல் போய் விட்டது

      நீக்கு
    2. வாங்க சார்வாகன்,
      //ஒரு பெண்ணுக்கு ஆணுக்கு கிடைப்பது போல் சொத்தில் பாதி.
      முதல் மனைவியின் விருப்பம் இன்றியே ஆண் இன்னும் 3 திருமணம் செய்யலாம். எண்ணற்ற பாலியல் அடிமை வைக்க்லாம்.நினைத்தால் எளிதில் விவாக ரத்து செய்யலம்.ஜீவனாம்சம் கொடுக்க தேவையில்லை.//
      //பெண்ணால் எளிதாக தலாக் கொடுக்க முடியாது.//

      மேலதிக தகவலுக்கு மிக்க நன்றி


      //சவுதியில் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமையோ,ஓட்டு உரிமையோ இல்லை அதை எதிர்த்தால் அண்ணன்களுக்கு பொட்டியை கட்டிவிடுவார்கள்.//

      சவுதியில் முனிசிபல் தேர்தலுக்கு பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்க சமீபத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.


      //மதவாதி வைப்பதே சட்டம்!!!//
      மூட சட்டங்களை தொடர்ந்து எதிர்ப்போம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  9. தனித்தனியாக படிக்க வைப்பதால் ஒன்றும் நடக்காது என்று சுவனபிரிய சுவாமி கூறுகின்றார்.
    அண்டை நாடான மலேசியாவில் பெண்கள் தனியாக படிக்கின்றார்கள். பாடசாலை முடிந்ததும் அடிக்கின்ற கூத்து இருக்கே பெங்களூரில் உயர்வட்ட மக்கள் அடிப்பதை விட மோசமானது.
    ஒரு தடவை சுவனபிரியன் ஆசாமி மலேசியாவில் மலாய் இன பெண்கள் ஒழுக்கமாகவும் கட்டுப்பாடாகவும் இருபதாகவும் இந்திய பெண்கள் முறை தவறி நடந்து கர்ப்பமுருவதாகவும் கூறினார்.
    ஆனால் உண்மை வேறு, மலாய் அரச புள்ளி விபரங்களின் படி திருமணத்துக்கு முன் கர்ப்பமுருவது மலாய் இன பெண்களே என்று தெரிவித்துள்ளது அதிலும் மைனர் பெண்கள் கர்ப்பமுருவது மலாய் இன சிறுமிகளிடம் மிக அதிகமாக காணப்படுவதாக அவ்வறிக்கை கூறுகின்றது.
    தனியாக படிக்க வைசசாங்க இந்த மத வெறி மலாய் காரங்க? என்ன நடந்தது?
    சுவனபிரியன் சும்மா கதை எல்லாம் விடக்கூடாது? எல்லா நாட்டுகாரங்களும் இணையத்தில் இருக்காங்க. உங்க பொய் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆக்கி போடுவாங்க.
    நம்ம சிங்கப்பூரில் உள்ள மலாய் பெண்களை பற்றி கதைக்க தேவையில்லை. அதை விடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க Ethicalist E,
      அவர்கள் குரானை ஒழுங்காக படிக்கவில்லை என்பார் :)
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  10. ஓஹோ..புரட்சிமனியின் தளம் இதுதானா ?? இருக்கட்டும்...!!!

    வெட்டி ஒட்டுகிரீரே ...அதை ஒழுங்காக செய்திருக்க வேண்டாமா..??? அங்கு நாம் அணைத்து மத பெண்களுக்கும் என்று சொல்லியிருப்போமே அப்படி என்றால் பொதுவாக பெண் என்றுதானே பொருள் வரும் இதில் நீங்கள் இஸ்லாமை எதிர்த்து பதிவு வேற போட்டுவிட்டீர்..இஸ்லாமை எதிர்க்க வேண்டுமே என்ற உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறோம்...அதை சரியாக செய்ய வேண்டாமா..???

    நாம் வருத்தப்படுவது உங்களின் சகோதரிகளுக்கும் பொருந்தும் என்பது தெரியவில்லையோ..!!! எப்படி தெரியும் நாம் விபச்சாரத்தை எதிர்த்து பதிவு போட்டால் அதை ஆதரித்து பதிவு போடுவார் அல்லவா நீங்கள் !!! இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பு உங்களை எவ்வாறு கொண்டு செல்கறது பார்ப்பவர்களுக்கு தெரிகிறது..!!!

    அடுத்தமுறை சிறப்பாக முயற்சி செய்ய வாழ்த்துக்கள் !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீரான்,
      சாயம் கலைந்த கோவம் உங்களுக்கு கடுமையாக உள்ளது

      நீக்கு
    2. வாருங்கள் நாகூர் மீரான் அவர்களே,
      உங்கள் பின்னூட்டத்தை மற்றும் ஒருமுறை படித்துவிட்டு நீங்கள் இசுலாமிற்க்காக வருத்தப்படுகிறீர்களா அல்லது ஒட்டு மொத்த பெண்களுக்குமா என்று அல்லா மீது சத்தியம் செய்து சொல்லுங்கள்.

      ///////நாகூர் மீரான் said...
      சலாம் சகோ.சுவனப்பிரியன்

      நல்லதொரு பதிவு..எதனடிப்படையில் என்றால்

      //வயதுக்கு வந்த பெண்கள் தனியே பெண்கள் மட்டுமே படிக்கக் கூடிய பள்ளி கல்லூரிகளில் சேர்ந்து தங்களின் கல்வி அறிவை பெருக்கிக் கொள்வார்களாக!//

      பெண்களுக்கு கல்வி வேண்டும் என்று கூக்குரல் இடாமல் அது பெண்களுக்கான பாட சாலையில் அமைய வேண்டும் என்று வழி கூறியதற்கு ...ஆம் நாம் இரண்டு தினங்களுக்கு முன்பு கேள்வி பட்டோம்..நாமக்கல் மாவட்டத்தில் ஒரே வருடத்தில் 170 இஸ்லாமிய பெண்கள் வேற்று ஆணுக்காக மதம் மாற்றப்பட்டுள்ளார்கள்.. வேதனையான செய்தி..இதெல்லாம் எதுவால் நடந்தது பெண்களின் ஒழுக்கமின்மை என்றாலும் அதற்க்கு வாய்ப்பாக அமைந்தது கல்வி எனும் கேடயம்...

      இப்போதைய கல்வி சூழல் பெண்களின் ஒழுக்கத்திற்கு வேட்டு வைப்பதாகவே உள்ளது.. மிகவும் கனத்த இதயத்துடன் இதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்...

      முஸ்லிம் பெண்களை காதலித்து கற்பமாக்குவதர்க்கு என்றே ஆர் எஸ் எஸ் போன்ற சங்க்பரிவார கும்பல்கள் முனைப்பு காட்டுவதும் நாம் அறிந்த விடயமே..!!! அவர்கள் காதலித்து நடித்து அவர்கள் வேலை முடிந்ததும் துரத்தி விடப்படுவோர் கடைசியில் செல்லும் இடம் விபச்சாரம் ...இதற்க்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன

      இத்தகைய சூழலில் கற்பா..கல்வியா என்று வரும்போது நிச்சயம் கற்ப்பு ஒழுக்கத்தை தான் நாம் தேர்ந்தடுக்க வேண்டும்....

      ஆயினும் இந்நேரத்தில் ஒரு ஆண் மகனாகிய என்னுடைய கடமை எப்படி இருக்கவேண்டும் என்றால் .. பெண்கள் வீதியில் விற்கப்படும் கருவாடு அல்ல..அவர்கள் வைரங்கள், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்..அவர்கள் பாதுகாப்புக்கு செய்யவேண்டிய அணைத்து வேலைகளும் செய்வது எமது கடமை..அதில் ஒன்று அவர்களுக்கு பாதுகாப்பான கல்வி வழங்குவது..தனியான பெண்கள் கல்லூரி அமைப்பது ..அதில் அணைத்து மத பெண்களுக்கும் இடமளித்து ஆண் பெண் கலப்பு எனும் சமுதாய ஒழுக்க கேடு ஏற்படாமல் தடை ஏற்படுத்துவது ...

      இதைப்போல துளியும் அறிவில்லாத ஜமாஅத் நிர்வாகிகளை களைவது ...

      எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்லாமிய சிந்தனையை ஏற்படுத்துவது தான் நம் தலையாய கடமையாக உள்ளது..!!! இது ஒன்று ஏற்பட்டாலே 75 சதவித நம் கடமைகள் முடிந்து விடும்..

      நன்றியுடன்
      நாகூர் மீரான்//////

      நீக்கு
    3. @நாகூர் மீரான்
      //நாம் வருத்தப்படுவது உங்களின் சகோதரிகளுக்கும் பொருந்தும் என்பது தெரியவில்லையோ..!!! எப்படி தெரியும் நாம் விபச்சாரத்தை எதிர்த்து பதிவு போட்டால் அதை ஆதரித்து பதிவு போடுவார் அல்லவா நீங்கள் !!! இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பு உங்களை எவ்வாறு கொண்டு செல்கறது பார்ப்பவர்களுக்கு தெரிகிறது..!!!//

      ஏதாவது மயக்கத்தில் இருக்கிறீர்களா? நான் எங்கே விபச்சாரத்திற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளேன்? காட்டுங்களேன் பார்ப்போம்.

      நீக்கு
    4. நான் சொல்லல..புரட்சிமணி ரொம்ப கருத்தா பேசுவாப்புல !!!

      முதலில் அந்த பதிவு சம்பந்தமாக பேசிவிட்டு பின்பு பொதுவான பெண்கள் பிரச்சனையாக கருதி ஆண் பெண் கலப்பு ஏற்படாமல் இருக்க தீர்வு சொல்லப்பட்டு இருக்கும்...அதைகூட பிரிந்து கொள்ள இயலவில்லையோ..!!!

      //ஏதாவது மயக்கத்தில் இருக்கிறீர்களா? நான் எங்கே விபச்சாரத்திற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளேன்? காட்டுங்களேன் பார்ப்போம்.//

      வரலாறை புரட்டி பாருங்கள்.எல்லாம் உங்கள் சகாக்களே.!!!

      மற்றபடி நமக்கு இதெல்லாம் தேவை இல்லாதது..நம்மை இழுத்ததால் விளக்கம் அளிக்க வேண்டியது நம் கடமை..கடமை முடிந்தது...

      நன்றி !!!

      நீக்கு
    5. திரு.மீரான்,

      //தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ஆன் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள் குரான் 3:14//
      திரு.யோகராஜா வின் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியும?

      பெண்களை மதிக்காத எந்த சமூகமும் வளர்ச்சியடைந்தது இல்லை. அதற்கு உதாரணமே உங்களின் சமூகம்.

      UNMAIKAL - னு ஒரு பெரிய எழுத்தாளர், ஆன அவரோட வலைப்பூவில் எழுதுவதை விட, சு.பி யின் பின்னூட்டங்களில் தான் தன் திறமையைக் காட்டுகிறார்.

      நீக்கு
    6. @நாகூர் மீரான்
      //வரலாறை புரட்டி பாருங்கள்.எல்லாம் உங்கள் சகாக்களே.!!!//
      இது மூடத்தனம் அல்லவா? அவர்கள் செய்தால் அதற்க்கு நான் எப்படி பொறுப்பாவேன். உங்கள் சகோக்கள் தவறு செய்தால் நீங்கள் செய்ததாக கொள்ளலாமா?
      சிந்தித்து பேசுங்கள்.
      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு

  11. பின்னூட்டம் இட்ட இடப்போகும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. கொஞ்சம் வேலை இருப்பதால் பிறகு உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் அளிக்கிறேன்.
    இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
    நன்றி

    பதிலளிநீக்கு
  12. திரு.மீரான்,

    //தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ஆன் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள் குரான் 3:14//
    திரு.யோகராஜா வின் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா?

    பெண்களை மதிக்காத எந்த சமூகமும் வளர்ச்சியடைந்தது இல்லை. அதற்கு உதாரணமே உங்களின் சமூகம்.

    UNMAIKAL - னு ஒரு பெரிய எழுத்தாளர், ஆன அவரோட வலைப்பூவில் எழுதுவதை விட, சு.பி யின் பின்னூட்டங்களில் தான் தன் திறமையைக் காட்டுகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட மாட்டீங்க போல !!!

      //தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ஆன் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள் குரான் 3:14//

      யார் இப்படி தப்பு தப்பா உங்களுக்கு சொல்லி தந்தது..சார்வாகன் சார் நீங்க தானா ??அந்த வசனத்தின் உண்மையான மொழி பெயர்ப்பை நான் தருகிறேன்..நீங்க எங்க இருந்து எடுத்தீங்கன்னு காட்ட முடியுமா ??

      பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.(அல்குர்ஆன்: 3:14)

      அடுத்தமுறை சிறப்பாக முயற்சி செய்ய வாழ்த்துக்கள் !!!

      நன்றி !!!

      நீக்கு
    2. உங்களுக்கு தகுந்தார்போல விளக்கத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

      உங்கள் கூற்று உண்மையென்றால், மத்தியக் கிழக்கு நாடுகளிலும், ஆப்கானிலும் பெண்களுக்கு சம உரிமை கொடுத்து பெண்களை மதிப்பீர்களாக.

      பி.கு: நான் பின்னூட்டமிட்டது யோகராஜா வின் பின்னூட்டத்தை வைத்து, எதுக்கு ஐயா, இப்போ சர்வாகனை இழுக்கிறீர்கள்.

      நீக்கு
  13. ஆஹா பெண் சுதந்திரத்தின் மீது இவர்களுக்கு எவ்வளவு அக்கறை ? புல்லரிக்கிறது ,

    சொல்வதை எல்லாம் தவறாகவே புரிந்து கொண்டு விளக்கம் கொடுக்கும் கூட்டம்

    எல்லோரும் ஒருமுறை சமுதாயத்தில் நடக்கும் தீமைகளை தங்கள் வீட்டாருக்கு நடப்பது போல் கொஞ்சம் கற்பனை செய்து விளக்கம் கொடுத்தீர்களானால் நன்றாக இருக்கும் ,
    நம் வீட்டுப் பெண் சகமானவருடன் படிக்கும் பொழுது சமுதாயதிர்கேதிரான தீமைகள் ஏற்ப்பட்டால் பொறுமையாக இருப்பீர்களா ?

    பெண்கள் பெண்கலுடன் தனித்திருக்கும் போது அதிகமான தவறுகள் நேர வாய்ப்பு மிகக் குறைவு , நீங்கள் எடுத்துக் காட்டும் உதாரணங்கள் மிகக் குறைவாகவே நடக்கும் குற்றங்கள் , ஆனால் ஆண்களால் பெண்களுக்கேர்ப்படும் பாதிப்புகள் மிக அதிகம் , பெண்களுடன் பெண்கள் கல்விபயில்வதால் உங்களுக்கீன்ன தீமை வந்துவிடப் போகிறது ? ஆனால் பெண்களை போகப்பொருளாய் பார்ப்பவர்களால் தான் இதை எதிர்க்க மனம் வருகிறது . அன்னியப் பெண்களை தவறாகப் பார்க்கும் நிலைமை ஆண்களுடன் இருக்கும் போதுதான் மட்டுமே ஏற்ப்படும் , பெண்கள் பெண்களுடன் இருக்கும் போதல்ல ,
    //சுவனம் என்று ஒன்று இருக்கின்றதா? எனக்கு தெரிந்து முகமது நபியாலோ அல்லது அவருக்கு பின் வந்தவர்களாலோ போருக்கு ஊக்கப்படுத்த சொன்னதுதான் சுவனம் என்பதே எனது புரிதல்.
    அப்படியே சுவனம் ஒன்று இருந்தாலும் பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல்,ஏமாற்றாமல்,திருட்டு,கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவற்றில் ஈடுபடாமல் உண்மையாக வாழ்தலே போதுமானதாகத்தான் இருக்க வேண்டும்.அதைவிடுத்து வேறு ஏதாவது இருந்தால் அப்புறம் படைத்தவனுக்கு நாம் நரகத்தை காட்டுவோம்.
    கவனிக்க:திருட்டு,கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவை அல்லாவால் தடை செய்யப்பட்ட மாதிரி தெரியல.
    நன்றி///
    நாட்டில் இந்த செயல்களை அதிகமதிகம் செய்து கொண்டிருப்பவர்கள் யாரென்று செய்தித் தாளைப் படித்தால் தெரியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க rajamohamed,
      //எல்லோரும் ஒருமுறை சமுதாயத்தில் நடக்கும் தீமைகளை தங்கள் வீட்டாருக்கு நடப்பது போல் கொஞ்சம் கற்பனை செய்து விளக்கம் கொடுத்தீர்களானால் நன்றாக இருக்கும் ,
      நம் வீட்டுப் பெண் சகமானவருடன் படிக்கும் பொழுது சமுதாயதிர்கேதிரான தீமைகள் ஏற்ப்பட்டால் பொறுமையாக இருப்பீர்களா ?//

      அதுக்குத்தான் சொல்கிறேன் பெண்களை வீட்டுக்குள்ளே வைத்து பூட்டிவிட்டால் எந்த பிரச்சனையும் வராது என்று.அதை ஏன் ஏற்க்க மறுக்கிறீர்கள்.

      //பெண்கள் பெண்கலுடன் தனித்திருக்கும் போது அதிகமான தவறுகள் நேர வாய்ப்பு மிகக் குறைவு , நீங்கள் எடுத்துக் காட்டும் உதாரணங்கள் மிகக் குறைவாகவே நடக்கும் குற்றங்கள்//

      ஆண் பெண் கல்லூரிகளில் காதலிப்பதும் முதலில் குறைவாகத்தான் இருந்தது. இன்று அதிகமாகிவிட்டது.
      இதேபோல பெண்கள் ஓரினச்சேர்க்கை இன்று மேலை நாடுகளில் அதிமாகிறது. இந்தியாவில் கூட gay marriage அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
      நாளை ஆண் இல்லாமல் பெண்களுக்குள் மட்டுமே பழகும் கட்டாயத்தை ஏற்ப்படுத்தும் பொழுது இது இன்னும் அதிகமாகும்.
      சிந்தித்து பாருங்கள் நண்பரே


      //நாட்டில் இந்த செயல்களை அதிகமதிகம் செய்து கொண்டிருப்பவர்கள் யாரென்று செய்தித் தாளைப் படித்தால் தெரியும்//
      யார் செய்கிறார்கள் என்று நான் கூறவில்லை மதபுத்தகத்தில் அது பற்றி இல்லை என்று கூறினேன். இதுபற்றி நான் பேச விரும்பவில்லை ஆதலால் தான் உங்கள் பின்னூட்டத்திற்கு முன்பே அதை நீக்கிவிட்டேன்.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  14. Great Blog my friend, congratulations!
    Follow me here:
    http://leyendas-de-oriente.blogspot.com/

    பதிலளிநீக்கு
  15. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்..

    இந்த பின்னுட்டம் ரொம்ப பெரிய பின்னுட்டமாக இருக்கும்..இது வேறு ஒரு கட்டுரைக்கான பதிலாக எழுதப்பட்டதுதான்..இருந்தாலும் பொதுவாக இப்போ இதை படிக்கிறவங்களும் படிச்சு கொஞ்சம் புரிஞ்சு மாறினாங்கனா மகிழ்ச்சிதான்..இனி பின்னுட்டம் ஆரம்பம்..

    பதிலளிநீக்கு
  16. என்னோட பெயர் யாசர் அரபாத்..தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு முஸ்லிம்தான். எனக்கு பொதுவா இலங்கை தமிழன், முஸ்லிம் தமிழன் அப்படினு பிரிச்சுபாக்குற வழக்ககம் கிடையாது.. இலங்கையைப் பற்றிய வரலாறு
    பெரிய அளவில் எனக்கு தெரியாது...கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுகிட்டு வரேன்..அந்த வகையில் இந்த பதிவை(முந்தைய வேறு ஒரு வலைப்பு உடைய பதிவு) படிக்கும் போது சில விசயங்களை என்னால் யுகிக்க முடியுது.

    1. இலங்கை தமிழர் முஸ்லிம் தமிழர்கள் இடையே ஒரு பிரிவினை இருக்கிற விசயம் தெரியுது.
    2. இலங்கை தமிழர்களில் ஒரு சாரார் வலைப்பக்கங்கள் மூலமா முஸ்லிம் பதிவர்களை அவமானப்படுத்த முயற்சிப்பதும், அதற்கு பதில் நடவடிக்கையாக முஸ்லிம் பதிவர்கள் எதிர் அவமானப்படுத்த முயற்சிப்பதும் கண்கூடாக தெரியுது.
    3. இன்னும் சொல்லப்போனால் இது சமூகம் சார்ந்த பிரிவினையா இல்லை தனிமனித பிரிவினையானு சண்டையானு யோசிக்கவும் வைக்குது.
    4.பெரும்பான்மையான பின்னுட்டங்களில் முஸ்லிம் பதிவர்கள் அவர்களுக்கு ஆதரவாக உள்ளவற்றை கொண்டாடுவதும், எதிர்ப்பவர்களை கிண்டல்செய்வதும், அதே போல் முஸ்லிம் பதிவர்களுக்கு எதிரானவர்கள் அவர்களுக்கு ஆதரவாக உள்ள
    பின்னுட்டங்களுக்கு ஆதரவாகவும், எதிர் முஸ்லிம் பதிவர்களை ஏதோ ஒரு வகையில் கிண்டல் செய்வதன் மூலமாக மகிழ்ச்சி அடைவதும் இங்கே பார்க்க முடிகிறது,
    5. முக்கியமான ஒரு விசயம் என்னவென்றால், கடவுளை உள்ளே இழுத்தும், நபியை முடிந்தஅளவு கேலி செய்வதும் நிறைய பார்க்க முடிகிறது். அதேபோல் முஸ்லிம் பதிவர்களும் மாற்று மதத்தை மதிக்கா தன்மையும்
    தெரிகிறது.
    6.இதுல மாற்றுமத சகோதரர்களின் மிகப்பெரிய குற்றச்சாட்டு என்னனா, ஏன் அல்லாஹ்வின் பெயரால் அப்பாவி மக்களை கொல்றீங்க..இதுதான் உங்க மார்க்கம் சொல்லிக்கொடுக்குது..இஸ்லாமை பரப்புவதற்காக மற்றவர்களை ஏன் கொலை செய்றீங்க,
    அதனாலதான் எங்களுக்கு இஸ்லாம் மேல் வெறுப்பும், இஸ்லாம் சொல்கிற கடவுளான அல்லாஹ்வின் மீது வெறுப்பும் அதன் தொடர்ச்சியாக அல்லாஹ்வை தாழ்த்திபேசுவதும், நபியை கிண்டல் செய்வதின் மூலமாக முஸ்லிம் மக்களை கோபபடுத்த முயற்சிப்பதும்
    நாங்க செய்றோம்.இந்த மாதிரி இல்லனா நாங்க ஏன் தேவைஇல்லாம இப்படி பேசப்போறோம்..அவசியமேஇல்லயே..
    7. இதன் தொடர்ச்சியாக, முஸ்லிம் மக்களிடமும், மூடநம்பிக்கை இருக்கு, மோசடி இருக்கு, முக்கியமான ஒருவிசயம், முஸ்லிம் பெண்களும் மிகப்பெரிய அளவில் விபச்சாரம் செய்றாங்க..பிரான்ஸ்ல வந்து பாருங்க..முஸ்லிம் பெண்கள் செய்யாத அட்டுழியங்களா..
    அப்படினு சொல்லி நீங்க முதல்ல அதை சரிசெய்யுங்க அப்புறம் வந்து புனிதம் பற்றி எல்லாம் பேசுலாம்னு ஒரு வாதம் வைக்கிறாங்க.
    8. அப்புறம் உலக அளவில் முஸ்லிம் தீவிரவாதிகள் செய்யும் அட்டுழியம் அப்படின கொடுரமான புகைப்படங்கள் மூலமா இதுதான் இஸ்லாம்..பாருங்க அப்படினு ஒரு சில் செய்திகள்..
    9. இதற்க பதில் பின்னுட்டம் போடும் போது முஸ்லிம் பதிவர்கள் இல்ல இப்படி எல்லாம் கிடையாதுனு அதற்கு பதில் பதிவுகள் மூலமா எதிர்வாதம் தராங்க. இப்படிளே பின்னுட்டம் வளர்ந்து முடிந்தஅளவு ஒருவரை யொருவர் அவமானபடுத்தும் முயற்சி.

    இப்ப என்னோட பதில் அனைவருக்குமாக..முஸ்லிம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பதிவர்களுக்கும் பொதுவாக..

    முதல்ல ஒண்ண தெரிஞ்சுக்கனும்.. முஸ்லிமுடைய அடையாளமா முஸ்லிம் பெயர்இருப்பதாலும், ஐந்து வேளை தொழுவதாலும், இன்ன பிற செயல்களை செய்வதால் அவன் முஸ்லிம் ஆகிவிட முடியாது.. அவனுக்கு படைத்த இறைவனிடத்தில் எந்த மதிப்பும் இல்லை.
    அல்லாஹ்வுடைய உதவியும் அவனக்கு இல்லை..இந்த உலகத்தில் எல்லா மனிதர்களை போல அவனும் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு சராசரி மனிதன் அவ்ளோதான்..

    உதாரணத்துக்கு எட்டுவிதமான மனிதர்களை கொண்டு சின்ன விளக்கம்..

    நபர்1: இவர் பிறப்பால் முஸ்லிம் கிடையாது..இவருடைய வாழ்க்கை சராசரி மனித வாழ்க்கை..அல்லாஹ்வை கடவுளாக ஏற்காமல், வேறு ஒன்றை கடவுளாக நினைத்தும் வழிபட்டும், அந்த கடவுள் மூலமாகவே தனக்கு இன்பம் துன்பம் வருவதாக எண்ணிக்கொண்டு
    வாழ்பவர்.வாழ்ந்து ஒருநாள் இறப்பவர்..இவர் இறைவனுடைய அருளை பெறுவதும் இல்லை.இந்த உலகை வாழ்க்கைக்கு பின் இறைவன் முன்னிலையில் அவருடைய நன்மை தீமை பொறுத்து இறைவனுடைய தீர்ப்பு உண்டு.

    நபர்2: இவர் பிறப்பால் முஸ்லிமாக இருப்பவர். இவருடைய வாழ்க்கை குரானையும் நபியின் வாழ்க்கையை பின்பற்றியும், தொழுகையை படைத்த இறைவனுக்காக மட்டுமே அர்பணித்து, பொறுமையை கடைபிடித்து, தனக்கு வரும் இன்பமும் துன்பமும்
    அல்லாஹ்வின் நாட்டப்படியே நடப்பதாக முழுமையாக நம்பி, அதனை பொருந்தி இறைவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்து, மதுவையும் விபச்சாரத்தையும் வட்டியையும் இன்ன பிற மானக்கேடான விசயங்களை விட்டு நீங்கியும், மனிதர்களுக்கு எந்த இடையுறையும்
    எந்த வகையிலும் செய்யாமலும் வாழ்ந்து மறைந்தவர். இவருக்கு நிச்சயமாக இறைவனுடைய அருள் உண்டு. மறுமை வாழ்வில் இறைவனுடைய திருப்பொருத்தத்தை அடைபவராகவும் இருப்பார்

    பதிலளிநீக்கு
  17. நபர்3: ஒரு ஆண். இவர் பிறப்பால் முஸ்லிம் கிடையாது..இஸ்லாம் அல்லாத மதத்தில் பிறந்து வளர்கிறார். ஆனால், அவருடைய வாழ்க்கையின் ஏதோ ஒரு கால கட்டத்தில் படைத்த இறைவன் ஒருவனான அல்லாஹ்வை அறிந்து, அதன்மூலமாக முஸ்லிமாக மாறி
    தான் இதுவரை செய்த சிறிய பெரிய பாவங்களுக்காக மன்னிப்பு இறைவனிடம் மனமுருகி கேட்டு அதன் பின் அந்த பாவங்களில்இருந்தும், இன்னபிற மானக்கேடான விசயங்களில் இருந்தும் தன்னை விலக்கிக்கொண்டு, வாழ்ந்து இறப்பவர். இவருக்கும் நிச்சயமாக அல்லாஹ்வின்
    அருளை அடைந்தவர். மறுமை வாழ்க்கையில் சொர்க்கத்தில் இருப்பதற்கான தகுதியை பெற்றவராகிறார்.

    நபர்4: ஒரு ஆண். இவர் பிறப்பால் முஸ்லிம். ஆனால் இவருடைய வாழ்க்கை குரானையும் நபியின் வாழ்க்கையை பின்பற்றியும் இல்லை.. ஏதோ கடமைக்காகவும், மற்றவர்கள் தன்னை தவறாக நினைப்பார்கள் என்பதற்காகவும் தொழுகையில் இருப்பார். தொழுகையிலே
    அசட்டையாக இருப்பார். நேரம் கிடைக்கும்போது மட்டுமே தொழுவார். நபியின் சொன்னவற்றில் தனக்கு இலகுவான மற்றும் பிடித்த இந்த உலகத்திற்கு பொருந்தக்கூடிய விசயங்களை மட்டுமே பின்பற்றுவார். மது வட்டி போன்ற விசயங்கள் தவறு என் தெர்ந்தும்
    இதல்லாம் ஒரு விசயமா அப்படினு அதுபோன்ற மானக்கேடானவற்றை சாதரணமாக செய்துகொண்டிருப்பார். ஆனால் தான் ஒரு முஸ்லிம். யாராவது முஸ்லிமை பற்றி தவறாக பேசினால் உடனே மூக்கின் மீது கோபம் வரும். பதிலடி திறம்படி கொடுப்பார். இதே போன்று
    வாழ்ந்து இறப்பையும் ஒருநாள் சந்தித்துவிட்டு உலகம் விட்டு செல்வார்.. இவருக்கும் படைத்த அல்லாஹ்வின் அருள் சிறிதும் இல்லை நண்பர்களே..இவருடைய அந்த மறுமை வாழ்க்கையும் நிச்சயம் அபாயமானது...இவருக்கும், முஸ்லிம் அல்லாத ஒருவருக்கும் இறைவனிடத்தில்
    ஒரு வித்தியாசமும் இல்லை..இதனை நன்கு புரிந்து வைத்துக்கொள்ளுங்கள்

    இந்த நான்கு ஆண்களைப்போல் தான் பெண்களும்..அப்படியே உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம்..

    இப்போ இதலிருந்து என்ன சொல்லவரேனு தெரியனும் இல்லயா...

    பதிலளிநீக்கு
  18. 1. முஸ்லிம் மீது வெறுப்பில் இருப்பவர்கள், நீங்கள் ரொம்ப முயற்சி செய்து முஸ்லிம்களை அவமானப்படுத்தி மகிழ்ச்சி அடைய வேண்டிய அவசியமில்லை. ஏன்னா, படைத்த இறைவனே சொல்லிவிட்டான், முஸ்லிமாக இருந்து ஆனால் முஸ்லிமாக
    வாழாதவர்களை இறைவனே இந்த உலகத்தில் கேவலப்படுத்திவிடுவான்..மறுமையிலும் மிகப்பபெரிய நஷ்டத்தை சந்திக்க தயாராகஇருக்கிறார்கள். நீங்க ரொம்ப மெனக்கெட்டு அவர்களை அவமானபடுத்தி உங்க நேரங்களை வீணடிக்க வேண்டாம்.
    2. விபசாரத்திலும் இன்ன பிற கேவலமான செயல்களில் ஈடுபடும் ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி முஸ்லிமாக இருந்தாலும் சரி, முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலும் சரி இறைவனிடத்தில் இருவரும் ஒன்று. இறப்பிற்கு பின் அதற்குரிய தண்டனையை
    இரண்டு நபர்களுக்கும் அல்லாஹ் அளிப்பான்..உண்மையான முஸ்லிமுடைய கடமை இவையல்லாம் இஸ்லாத்தில் அனுமதிஇல்லை என இரு சாராருக்கும் சொல்வது மட்டுமே..கேட்பதும் கேட்காததும் அவரவர் விருப்பம்.அதற்கான கூலியும் அவர்களுக்கு கிடைக்கும்.

    3. இஸ்லாத்தை வெறுப்பவர்கள் செய்யும் இன்னொர் காரியம் அல்லாஹ்வையும் நபியையும் கிண்டல் செய்து அதன் மூலமாக மகிழ்ச்சி அடைபவர்கள்.. இஸ்லாத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை அல்லாஹ்வை திட்டுபவர்களை கொல்லுங்கள், பதிலுக்கு
    இன்னும் கேவலமாக திட்டுங்கள் அப்படினு எங்கேயும் கிடையாது..நீங்க என்ன சாதாரண குட்டிப் பசங்க..நமக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த சமூக மக்கள் கேட்காத இழிவாக பேசாத இறைவனைப்பற்றி கிண்டல் செய்யாத செயல்களா?.. இதை அல்லாஹ்வே
    குரானில் ஓரிடத்தில் சொல்லிக்காட்டுகிறான் இவ்வாறு. ”மக்கள் அவர்களிடம் வந்த நபியை பார்த்து என்ன நபியே நீங்க சொல்ற இறைவன் தான் எங்களை யெல்லாம் படைச்சானா..? அவன்தான் இறந்த பிறகு எங்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புவானா? அப்போ, இந்த
    மக்கிப்போன எலும்புக்கும் அவன்தான் உயிர்கொடுப்பானா? அதெப்படி கொடுப்பான் கொஞ்சம் சொல்லுங்கனு ரொம்ப கிண்டல் பண்ணி கேட்கிறாங்க.. அதற்கு இறைவன் இவ்வாறு பதில் கொடுக்கிறான்...இந்த எலும்புக்கு முதலில் யார் உயிர் கொடுத்தானோ அவனேதான்
    அது மக்கிய நிலையிம் திரும்பவும் உயிர் கொடுப்பான்” அப்படினு. இதை படிச்ச பிறகாவது நீங்க பண்ற கிண்டல் எல்லாம் ரொம்ப சாதாரணம்னு தெரிஞ்சுக்கோங்க..அதனால இப்படி கிண்டல் பண்ணியும் உங்க நேரத்தை வீணாக்க வேண்டாம். அல்லாஹ் யாரிடத்தும் தேவையற்றவன்


    4.இந்த உலகத்தில் மொத்த மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் இருக்கிறது..எத்தனையோ நாடுகள் தங்களை இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டுள்ளன..இஸ்லாமிய நாடு என்ற ஒரே காரணத்தால் அவைகள் பெரும் பணக்கார
    நாடுகளாக இல்லை.. வட ஆப்பிரிக்காவில் எத்தனையோ வறுமையில் வாடக்கூடிய நாடுகள் உள்ளன..ஏன் உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடாக உள்ள இந்தோனேஷியாவில் வராத புகம்பா இல்லை சுனாமியா இல்லை வெள்ளப்பெருக்கா....மக்கள் நாள்தோறும்
    பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். ஏன் அல்லாஹ் இந்த உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாட்டிற்கு உதவிசெய்வதில்லை.நல்ல கேள்விதானே.. அல்லாஹ்விடத்தில் முஸ்லிம் முஸ்லிம் அல்லாதவர் என்ற பாகுபாடே இல்லை சகோதரர்களே..அனைவருமே
    அல்லாஹ்வின் படைப்பினங்களே...அவர்களி்ல் சிறந்தவர்கள் அறிவுடையவர்கள் யார் என்றால் இறைவனை சிந்தித்து இறைவன் சொன்ன வழிமுறைப்படி வாழ்ந்து மறுமை வாழ்க்கையிலே நரகதத்தில் இருந்து பாதுகாப்பு பெற்று சொர்க்கத்தை அடைபவர்களே..
    அது நீ்ங்களாக இருந்தாலும் நானாக இருந்தாலும் ஒருநாள் இறக்கப்போகிறோம்.. இறந்தபின் தெரிந்துவிடும் எது உண்மை எது பொய் என்று.. ரொம்ப நாள் இல்லை சில அறுபதோ எழுபதோ என்பதோ வயதில் பார்த்துவிடுவோம்.. அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி
    யில் நடத்துவானாக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க யாசர் அரபாத்,
      முதலில் நான் உங்களை பாராட்டுகிறேன். உங்கள் கருத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க நீங்கள் அழாக,பொறுமையாக முயற்சி எடுத்துள்ளீர்கள்.
      இதை நான் வரவேற்கிறேன்.
      இசுலாமிய சகோதரர்களை குறை சொல்லவேண்டும் என்று நமக்கு ஆசையில்லை.அவர்கள் சில தவறுகள் செய்யும்பொழுது அதை விமர்சிக்கிறோம் அவ்வளவே.
      எப்படி பிற மதத்தில் மத உள்ள தவறுகளை அவர்கள் ஒப்புக்கொண்டு சீர்திருத்த முயற்சிக்கிறார்களோ அவ்வாறு நமது இசுலாமிய சகோதரர்கள் அவர்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு அதை சீர்திருத்த முயற்சிகள் எடுப்பதில்லை என்பதே எமது வருத்தம்.

      என்னைப்பொருத்த வரை குர்ஆனில் உள்ள சில வசனங்களை சில முஸ்லிம்கள் தவறாக புரிந்துகொள்வதே பிரச்னைக்கு வழி வகுக்கின்றது. அவ்வாறு பிறர் குரானை தவறாக புரிந்துகொள்ளாத விதத்தில் அதற்க்கு போதிய விளக்கங்கள் அளிக்கவேண்டும் என்பதே எமது கோரிக்கை.
      சில முஸ்லிம்கள் அல்லாவிற்காக,இசுலாமிற்காக கொலை செய்கின்றனர் என்றால் அதற்க்கு என்ன காரணம் என்று பார்த்தால் குர்ஆனில் உள்ள வசனங்களை அவர்கள் அவ்வாறு புரிந்துகொள்கின்றனர் என்பதே ஆகும். எனவே சர்ச்சைக்குரிய அந்த வசனங்களை நீக்க வேண்டும் அல்லது தெளிவான விளக்கங்களை ஒவ்வொரு குரானிலும் சேர்க்கவேண்டும். இதை நீங்கள் ஏற்ப்பீர்கள் என நம்புகிறேன்.

      மேலும் அல்லா சுவனத்திற்கு செல்ல மது உண்ணாமை,வட்டி வாங்காமை,விபச்சாரம் செய்யாமை ஆகியவற்றை வலியுறுத்துகிறாரே தவிர திருடாமையையோ, கொல்லாமையையோ அல்ல. எனவே இவற்றையும் சுவனத்திற்கு செல்லும் தடையாக சேர்க்க மார்க்க அறிஞர்கள் போதிக்க வேண்டும்.

      நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால் பிரச்சனைக்குரிய குரான் வசனங்களை நீக்குதல் அல்லது அதற்க்கு சரியான விளக்கத்தை ஒவ்வொரு குரானிலும் சேர்த்தலே ஆகும்.

      தங்கள் கருத்துக்களை கூறுங்கள்
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
    2. தங்கள் பாராட்டுக்கு நன்றி..

      நீங்க சொல்றதுல ஒரு விசயம் செய்ய முடியும்..அது குரானுடைய வசனங்களை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு சரியாக புரிய வைப்பது..இன்னொரு விசயம் நிச்சயமா செய்ய முடியாது..அது குரானுடைய வசனங்களை மாற்றுவது..அப்படி மாற்றக்கூடிய வசதி இருந்தால் கடந்த எத்தனையோ நுாற்றாண்டுகளில் எவ்வளவோ நம்முடைய வசதிக்கு ஏற்ப மாற்றியிருக்க முடியும்..அதுவும்இல்லாம இது பிரபஞ்சத்தை உருவாக்கிய கடவுளால் நமது நேர்வழிக்காக அனுப்பப்பட்ட குறைகளற்ற வகையில் உள்ளதுனு நம்பினால் ஒழிய அல்லாஹ்வை கடவுளாக ஏற்பது சரி.அப்படிஇல்லனா எதுக்கு அல்லாஹ்வை கடவுளாக நம்பவேண்டும்..உப்புக்கு சப்பாணியா கடவுள்..

      இன்னொரு விசயம் நண்பரே..அல்லாஹ்தான் என்னைப் படைத்தவன் அதுவும் ஒரு காரணத்தோடு அப்படினு ஏற்பது அவ்வளவு எளிதான காரியம் இல்ல..முஸ்லிமா பிறந்ததால், முஸ்லிம்கள் ரொம்ப சுலபமா அல்லாஹ்வை கடவுளாக ஏற்றுக்கொண்டனர்..ஆனால் குரானையும் நபி வழிமுறைகளையும் பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறி..

      உங்ககிட்ட ஒரு கேள்வி.. நீங்க கடவுளை நம்பாதவர்னு நான் நினைக்கிறேன்..கண்டிப்பா அறிவியலை நம்பக்கூடியரா இருக்கணும்..இல்ல அறிவியலையும் நம்புகிறவன் இல்லனு சொல்லிடாதிங்க... அதனால் இறப்பை கண்டிப்பா நம்வீங்க..ஒரு வேளை உங்க உடல்ல இருந்து உயிர் போகும்போது இறைவனை உணர்ந்தால்(கண்டிப்பா உணரனும்) என்ன செய்வீங்க..திரும்பி இந்த உலகத்துக்கு வரமுடியாது..நீங்க சொல்லலாம்..சரி நான் போய் கடவுளை பார்த்து பேசிக்கிறேனு அல்லாஹ்வாக இருந்தாலும் கூட..ஆனா அல்லாஹ் மறுமை வாழ்க்கையில் ரெண்டு விசயம் பத்தி கூறுகிறான். ஒண்ணு சொர்க்கம், இன்னொன்னு நரகம்..சொர்க்கம் கிடைக்குதோ இல்லையோ.. நரகத்தினுடைய வேதனை கிடைச்சா..என்ன செய்ய முடியும்..சரி அப்படினாலும் ஏத்துகிறேனு சொன்னிங்கனா..நீங்களே ஒரு சுய பரிசோதனை செய்து பாருங்க..ஒரு சின்ன மெழுகுவர்த்தி ஏற்றி வைச்சு, உங்க கை விரலை வைச்சு practice பண்ணி பாருங்க.முடிஞ்சுதுனா continue பண்ணுங்க...அதுக்காக இந்த வேதனைக்கு பயந்துதான் கடவுளை ஏற்கனும் அப்படிங்கிறது அர்த்தம் இல்ல..
      உதாரணம் 1:
      ஒரு ஆள் அரவமற்ற மனிதனே இல்லாத கடற்கரை என நினைத்து நாம் போகும் போது அந்த மணலில் மனிதனுடைய கால் தடம் தெரிந்தால் நம் அறிவுக்கு எட்டும் இங்கே மனிதன் இருக்கிறான் என்று.. ஆனால் அவன் எங்கிருந்து வந்தான் என்பது அறிவுக்கு எட்டாத விசயம் அந்த நேரத்தில்..அது போல்தான் இறைவனை உணர்தலும்..

      உதாரணம் 2:
      நம்மோட அறிவை ஒரு மகா சமுத்திரத்திற்கு ஒப்பிட்டு, அதிலிருந்து ஒரு துளி அளவு சிந்தனை செய்தாலே கடவுள் இல்லை என்கிற முடிவுக்கு வந்து விடலாம்..என்ன சிந்தனை.. எல்லாவற்றையும் படைத்தவன் இறைவன் என்றால், இறைவனைப் படைத்தது யார்?அவ்ளோதான் கடவுள் என்கிற கோட்பாடே முடிந்தது..ஆனா, அதே சமுத்திரத்திற்கு ஒப்பான அறிவில் ஒரு சில துளி அளவு சிந்தை செய்தால்தான் இறையை உணர முடியும்..

      நீக்கு
    3. வாங்க யாசர் அரபாத்,

      //நீங்க சொல்றதுல ஒரு விசயம் செய்ய முடியும்..அது குரானுடைய வசனங்களை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு சரியாக புரிய வைப்பது.//
      புரிந்து கொண்டவர்களை தேடிபிடித்து புரிய வைப்பது ஒருவகை. இனிமேல் வசனங்களை தவறாக புரிந்து கொள்ளாதவாறு குரானில் விளக்கங்களை தரவேண்டும் என்பது ஒருவகை. இரண்டு வகையிலும் நாம் செயலாற்ற வேண்டும்.

      //உங்ககிட்ட ஒரு கேள்வி.. நீங்க கடவுளை நம்பாதவர்னு நான் நினைக்கிறேன்.//
      என்னையும் மிஞ்சிய சக்தி ஒன்று உள்ளது என்பதில் எனக்கு அசைக்க முடியா நம்பிக்கை உண்டு.
      பிற உயிர்களுக்கு முடிந்தவரை துன்பம் விளைவிக்காமல் உண்மையுடன் வாழவேண்டும் என்பதே என் கொள்கை மற்றபடி மத நூல்களில் உள்ளவற்றை இறை வேதங்களாக நான் ஏற்ப்பதில்லை. அதில் உள்ள நல்ல கருத்துக்களுக்கு என்னுடைய ஆதரவு உண்டு.
      எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு தியானத்தில் நம்பிக்கை உண்டு. இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் இறைதூதனாக முடியும் என்ற நம்பிக்கை உண்டு.
      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      உங்கள் கருத்துக்களை கூறுங்கள்
      பிறகு சந்திப்போம் ...மின்சாரம் நிற்கப்போகிறது :)

      நீக்கு
  19. ஜாதி ,,மதம் என்று ஒழிகின்றதோ அன்று தான் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் ..அதுவரை பெண்கள் அடிமைகள்தான் ..அதுவரை குரான்ல இருக்கு ..கீதைல இருக்கு ,,பைபிள இருக்கு என்று கதை விட்டுட்டு இருப்பான் ..

    பதிலளிநீக்கு
  20. சவுதியில் தனது சொந்த ஐந்து வயது மகளை கற்பழித்து கொலை செய்த இஸ்லாமிய மத போதகருக்கு 50000 டொலர் குருதிப்பணம் செலுத்துமாறு இஸ்லாமிய நீதிமன்றம் உத்தரவிட்டு அதை செலுத்தியபின் விடுதலை செய்துள்ளது. சென்ற மாதம் அப்பாவி சிறுமி ரிசானா பால் பருக்கும்போது குழந்தை புரையேறி இறந்த விபத்தை கொலை என்று தீர்த்து அச்சிறுமி வாளால் வெட்டப்பட்டு படுகொலை செய்யபட்டாள். இது தான் காட்டுமிராண்டி ஸரியா சட்டம். இஸ்லாம் மதம் அன்பை போதிகிறதாம். போங்கடா உங்கள் மதமும் ஸரியா காட்டுமிராண்டி சட்டமும்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...