வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 18 அக்டோபர், 2013

ஊடகங்கள் இசுலாமியத் தீவிரவாதம் என்றழைப்பது சரியா தவறா?

இசுலாமியத்  தீவிரவாதம் என்றழைப்பது  சரியா தவறா என்று உலகின் எந்த
மூலையில் விவாதம் நடந்தாலும்  அது சரியே என்று வாதிட்டு என்னால் வெல்ல முடியும். ஆனால் சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.

உலகில் உயிரோடு இருப்பவர்கள் முஸ்லிம்களாக மட்டுமே இருக்கவேண்டும்.
அப்படி முஸ்லிம் அல்லாதவர்கள் மதம் மாற்றப்பட வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்று குண்டு வைப்பவர்கள் தீவிரவாதிகள்,மதப் பிரச்சாரம்
செய்பவர்கள் மதவாதிகள். இப்படி செய்பவர்கள் வெகு சிலரே.

ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் இதனோடு எந்த விதத்திலும் தொடர்பு
கொள்ளாமல் அமைதியாக வாழ்கிறார்கள்,அமைதியை விரும்புகிறார்கள். ஊடகங்கள்
இசுலாமியத் தீவிரவாதம் எனும் பொழுது இந்த பெரும்பாலான முஸ்லிம்களையும்
இது கடுமையாக பாதிக்கும்.

என்னடா நம்ம மதத்தை தீவிரவாதம் என்கிறார்கள், நம்மையும் தீவிரவாதியை பார்ப்பது போல பார்க்கிறார்கள் என்று ஒருவனின் மனது  பல இன்னல்களுக்கு உள்ளாகும். ஒரு கட்டத்தில் ஏன் நான் தீவிரவாதி ஆக கூடாது என்று  எண்ண ஆரம்பிக்கலாம்.

எனவே இசுலாமியத்  தீவிரவாதம் என்ற சொல்லை இனி ஊடகங்களும், யாரும் பயன்படுத்துவதை கைவிட வேண்டும்.

முஸ்லீம்களில் சிலர் தீவிரவாதிகளாக இருப்பது உண்மை. இவர்களை, இவர்கள் செய்யும் செயலை எவ்வாறு  அழைப்பது என்ற கேள்வி எழுகிறது. குரானில் ஜிகாத் என்று கூறப்படும் ஒரு விடயத்தை மனதில் வைத்துத்தான் இவர்கள் கொடிய செயல்களில்  டுபடுகிறார்கள். எனவே இந்த மாதிரி குற்றங்களை, குற்றம் புரிபவர்களை ஜிகாத் தீவிரவாதம்,ஜிகாத் தீவிரவாதி என்று  அழைக்கலாம். அல்லது வேறு ஒரு சொல்லை
பயன்படுத்தாலாம்.

தயவு செய்து மதத்தோடு தீவிரவாதத்தை தொடர்பு படுத்தி ஒட்டுமொத்த சமுதாயத்தையும் துன்புறுத்த வேண்டாம் என்று ஊடகங்களை கேட்டுக்கொள்கிறேன்.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

காங்கிரசுக்கும், திராவிட கட்சிகளுக்கும் ஞானி சொம்பு தூக்காமல் திருந்துவாரா?


தன்னுடைய சமீபத்திய கட்டுரையில் ராமதாசும் மணியனும் எப்பொழுது திருந்துவார்கள்  என்று ஞானி கேள்வி எழுப்பியுள்ளார். எனக்கு என்ன சந்தேகம் எனில் இவர் காங்கிரசுக்கும் திராவிட கட்சிகளுக்கும், கம்யுநிச தோழர்களுக்கும் மறைமுகமாக சொம்பு தூக்காமல் திருந்துவாரா என்பதே.

ரமாதாசும் தமிழருவி மணியனும் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.ஞானி என்ன செய்கிறார் என்பதை முதலில் அவர் அறிகின்றாரா  என்பதே தெரியவில்லை.

சாதி ரீதியில் ராமதாசும் மத ரீதியில் மோடியும் வேண்டாம் என்கிறார் ஞானி. இது ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

சரி இவர்களுக்கு மாற்றாக அவர் யாரை வழிமொழிகிறார் என்பதே இங்கே சிக்கல்.

மத்தியில் இமாலய ஊழலில் திளைக்கும் காங்கிரசை இவர் ஆதரிக்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் தான் இவருடைய சிவப்பு சட்டை தோழர்களும் ஆட்சிக்கு வரமுடியும். இதனால் அவர் மோடியை எதிர்க்கிறாரா?

இல்லை தமது இடதுசாரி கட்சிகளுக்கு மூன்றாவது அணி அமைக்க முயல்கிறாரா என தெரியவில்லை.

ஆண்டவனுக்கு அடிமை என்பது மதங்களின் கூற்று. அரசாங்கத்திற்கு அடிமை என்பது இடதுசாரிகளின் மறைமுக கூற்று.
எனவே இடதுசாரிகளின் கொள்கைகளும் எனக்கு ஏற்ப்புடையது அல்ல.

தமிழகத்தில் சாதிக் கட்சி நடத்தும் ராமதாசு வேண்டாம் என்கிறார்.இவர் மட்டும்தான் இவர் கண்ணுக்கு தெரிவார். ஆனால் இன அரசியல் செய்த,செய்யும் திராவிட கட்சிகள் வேண்டும் என்று மறைமுகமாக கூறுகிறார்.

சாதி,மத கட்சிகள் வேண்டாம் என்பதே என்னுடைய நிலைப்பாடும். இவைகளுக்கு  மாற்றாக யாருக்கு ஒட்டு போடுவது என்பதையும் ஞானி கூறினால் பலருக்கு உதவியாக இருக்கும்.

ஒருவேளை எல்லா மக்களும் நோட்டா என்ற தோட்டாவை  மட்டும்  பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறாரோ என்னவோ.

நடைமுறையில் இருக்கும் எந்த சித்தாந்தமும் தற்போதைய உலக  சூழலுக்கு ஏற்ப்புடையதல்ல.

சரி வேறு எந்த சித்தாந்தம் தேவை என்பதை நான் சொல்லியா தெரியவேண்டும்.


திங்கள், 7 அக்டோபர், 2013

பெரியாரும் ராமதாசும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா?


பெரியாரின் செய்கையும் ராமதாசின் செய்கையும் ஒன்று போலவே தெரிகிறது.பெரியார் என்ன முட்டாள்தனத்தை செய்தாரோ அதேபோல ஒரு முட்டாள்தனத்தைத் தான் ராமதாசும் செய்கிறார்.

பெரியார் பார்பனர்கள் எனும் இனத்திற்கு எதிராக செயல்பட்டார்.
ராமதாசு தலித்துகளுக்கு எதிராக செயல்படுகிறார்.

இருவர் செய்கையிலும் சிலருக்கு நன்மை சிலருக்கு தீமை. இருவர் செய்கையையும் நான் ஆதரிக்கவில்லை.

பார்பனர்களிடம் தவறு இருந்திருந்தால் தவறு செய்யாத நல்ல பார்ப்பனர்களை அரவணைத்துக் கொண்டு அவர்களைக்கொண்டே பார்ப்பனர்களை திருத்த முயன்றிருக்க வேண்டும். மாறாக அவர் பார்ப்பன இனத்தையே அழிக்கும் எண்ணம்  கொண்டதாக தெரிகிறது.ஒட்டுமொத்த இனத்தையும் எதிரியாக சித்தரித்துள்ளார்.

இதேபோலத்தான் தலித்துகளில் சிலர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் ஒட்டுமொத்த தலித்துகளுமே தவறு செய்வதுபோல ஒரு பிம்பத்தை ராமதாசு ஏற்ப்படுத்துகிறார்.

எல்லா ஜாதிகளிலும் மதங்களிலும் தவறு செய்பவர்கள் இருக்கின்றார்கள் அதே நேரத்தில் எல்லா ஜாதிகளிலும் மதங்களிலும் தவறு செய்யாதவர்களும் உள்ளார்கள். எனவே  ஒட்டுமொத்த இனத்திற்கு, ஜாதிக்கு,மதத்திற்கு எதிராக மக்களை திரட்டுவது என்பது மகா முட்டாள்தனம். அது மனிதத்திற்கு எதிரானது.

தவறை திருத்துவதுதான் சீர்திருத்தமே தவிர தவறு தவறு செய்பவர்களின் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் எதிரியாக பார்ப்பது அல்ல. சீர்திருத்தவாதிகளாக விரும்புபவர்கள் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

தவறு செய்பவர்களை எப்படி மனிதர்களாக மாற்றுவது என்று ஆராய்வதே,  சிந்திப்பதே, அந்த வழியில் செயல்படுவதே உண்மையான மனிதம்.

ராமதாசை எதிர்மறையாக நான் பெரியாருடன் ஒப்பிட்டேன் ஆனால் அவரை நேர்மறையாக ஒப்பிட்டதே பல தலித்துகள்தான். பெரியாருக்கு அடுத்தபடியான நல்ல தலைவராக ராமதாசு சிலபலரால் பார்க்கப்பட்டுள்ளார் எனபது மறுக்க முடியாத உண்மை.

 தன்னுடைய  தவறை உணர்ந்து ராமதாசு தலித்துகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்காமல் தவறு செய்பவர்களுக்கு எதிராக மட்டும் மக்களை ஒன்றிணைத்து தவறு செய்பவர்களை திருத்துவார் எனில் அவரை மனிதம் போற்றும். இல்லையேல் சிலர் அவரை ஜாதி தலைவராகவும் பலர் ஜாதி வெறியராகவும் பார்ப்பர். முடிவு அவர் கையில்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

பகுத்தறிவுக் குருடர்கள் எங்கே?

சாதிக்கொரு சுடுகாடு ஏன் என்று பகுத்தறிவுக் கேள்வி எழுப்பிய பகுத்தறிவுவாதிகள் மதத்திற்க்கொரு சுடுகாடு கேட்கப் படும் பொழுதும், ஒதுக்கப்படும் பொழுதும் அதையொட்டி பிரச்சனை நடக்கும் பொழுதும் ஒன்றுமே,நடக்காதது போல் குருடர்களாகவும், செவிடர்களாகவும் இருப்பது ஏன்?

இந்துமதம் என்றால் மட்டும்தான் பகுத்தறிவு வேலை செய்யும் பிற மதங்கள் என்றால் மூளை மழுங்கிவிடுமோ.?
மதக்கலவரம் வரும்வரை காத்திருந்து அதைவைத்து ஒட்டு அறுவடை செய்ய பகுத்தறிவுவாத , கம்யூநிச, தலித்திய கட்சிகள் காத்திருப்பதாகவே தெரிகிறது.
ஜாதியை  ஒழிக்க பாடுபடுவதாக கூறும் இவர்கள் மதங்களுக்கு துணைபோவதன் மூலம் இவர்களின் உண்மையான முகத்திரை கிழிகிறது.

இவர்கள் அறியாமையில் இருந்தால் உண்மையில் மதங்களை ஒழிக்கவும் பாடுபடவேண்டும். செய்வார்களா?.

 

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

நம்மை நாமே படைத்துக் கொண்டோமோ? பதிவு 2

பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதில் இருந்து இப்பதிவை தொடங்குவோம்.

சூன்யம்    என்றும்  பரிபூரணம்       என்றும் அழைக்கப்படும்    ஒன்று    முதலில்  இருந்தது என்றும் சொல்லலாம்  அல்லது இல்லாமல் இருந்தது என்றும் சொல்லலாம்.

அந்த ஒன்றும் இல்லாத  அல்லது முழுமையான  ஒன்றுக்கு  ஆசை வருகிறது. அந்த ஆசையின் விளைவாக வானாகி, வாயுவாகி, நெருப்பாகி, நீராகி, மண்ணாகி, மனிதனாகி நிற்கிறோம்.

நாம் எந்த நிலையில் தொடங்கினோமோ    மீண்டும்    அந்த ஒன்றும் இல்லாத அல்லது  முழுமையான நிலையை அடைவதே நமது   இறுதி இலக்கு . நமது பிறப்பின் நோக்கமும் அதுதான். இடையிடையே சில இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றோம்  அவ்வளவே.

இதை புரிந்து கொண்டு பிறப்பறுக்க துணை புரிவதில் ஒன்று இன்று ஆன்மிகம் எனப்படுகிறது. நாளை இது அறிவியல் எனப்படும்.

துன்பப்படுவோம் என்று தெரிந்தே ஒரு செயலை நாம் செய்வோமா என்றால் செய்வோம் என்பது தான் உண்மை. ஏன் எனில் துன்பத்தில் இன்பமும் உண்டு...இன்பத்தில் துன்பமும் உண்டு.

ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொள்ள  விரும்புகிறாள்   , குழந்தை பிறக்கவில்லை என்றால் அதற்காக தவமாய் தவமிருக்கிறாள்...கருத்தரித்த  நாள் முதல் அவளுக்கு இன்பம் மற்றும் துன்பம். குழந்தையை சுமக்கிறாள், பெற்றெடுக்கிறாள்.   உயிரையே பணையம் வைப்பது போல் தான் இது.
பிறகு   அந்த குழந்தை வளர்க்க   எவ்வளவு சிரமப்படுகிறாள். அவளுக்கு இது  எல்லாம்  தெரியாதது  அல்ல  இருப்பினும்  விரும்பியே  இதை செய்கிறாள்.

சிலர் உண்டு ஏற்க்கனவே பார்த்த  படங்களை திரும்பி பார்ப்பார்கள். அது அவர்கள் மனதை பாரமாக்கும் , கண்ணீர் ததும்பும் ஆனால் மீண்டும் அந்த காட்சியை காண்பார்கள். அதிலும் அவர்களுக்கு ஒரு ஆனந்தம்.

அட  அது வெறும் சினிமாதானே இதற்க்கு ஏன் அழ வேண்டும்? அவர்கள் மகிழ்ச்சியாய் இருக்கும் பொழுது ஏன் நாமும் மகிழ்ச்சியாக இருக்க  வேண்டும்?. நகைச்சுவை  ஏற்ப்படுத்தினால்  ஏன் சிரிக்க வேண்டும்?

ஏன் எனில் அந்த சினிமாவோடு நாம் ஒன்றிவிடுகிறோம். சினிமா எனும் மாயையோடு ஐக்கியமாகிவிடுகிறோம்.

அதுபோலத்தான் சக்தி மிகுந்த நாம் பிறப்பெடுத்தாலும் இந்த உலக மாயையில் சிக்குண்டு இன்பப்படுகிறோம் துன்ப்படுகிறோம். நாம் யார் என்பதை  மாயையால் மறந்து விடுகிறோம். நாம் செல்ல வேண்டிய இடத்தை மறந்துவிட்டு  மாயையில், பிறவி சுழற்சியில் மாட்டிக் கொள்கிறோம்.

 நாம் மீண்டும் தொடக்கமான அந்த ஒன்றும் இல்லாத அல்லது முழுமையான் நிலையை அடையவேண்டும்.
எவ்வளவு சீக்கிரம் அடைகிறோமோ அவ்வளவு சீக்கிரம்  மாயையான இன்ப துன்பத்தில் இருந்து விடுதலை. இல்லை எனில் நாம் எதிலிருந்து வந்தோமோ அதுவே ஆட்டத்தை முடித்துக்கொள்வோம் என்று என்னும் வரை மாயை உலகம் உங்களுக்கு இன்பம் என்று நினைத்தால்  அப்படியே  இருந்து விடலாம்  :)

சென்ற பதிவில் நண்பர்கள் சிலர் பதிவு கொஞ்சம் புரிந்து கொஞ்சம் புரியாமல் உள்ளது என்றனர். முழுவதும் குழப்பிவிடலாம் என்று இந்த பதிவு :)

அடுத்த பதிவில் கொலை, கொள்ளை, வன்புணர்வுகளுக்கும்     ஒருவரின்  ஆசைக்கும் என்ன சம்பந்தம்  என்று அலசுவோம்.

பின்குறிப்பு: இந்த பதிவில் இருக்கும் கருத்துக்கள் அத்வைத சித்தாந்தத்தின்  தாக்கத்தாலும் எனது புரிதலாலும் ஏற்ப்பட்டவை.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

நம்மை நாமே படைத்துக் கொண்டோமோ?

நம்மை வேறு யாரும் படைக்கவில்லை நாம்தான் படைத்துக்கொண்டோம் என்றால் உங்களில் எத்தனை பேர் நம்புவீர்கள்  என தெரியவில்லை.
ஆனால் உண்மை இதுவாக இருக்க வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

என்னை நான் படைத்துக்கொண்டால்,அவ்வளவு சக்தி எனக்கு இருந்தால்  நான் ஏன் இவ்வளவு துன்பங்களை  அனுபவிக்கின்றேன்/அனுபவிக்கப்போகிறேன்   என்று நீங்கள் கேட்கலாம்.

அதற்க்கான பதிலும் உங்களிடம்தான் உள்ளது.
பிறப்பு என்பது துன்பத்தை தரும்  என்று உணர்ந்தே தான் நாம் பிறப்பெடுத்தோம்.  நான் அப்படி இல்லை என்று உங்களால் மறுக்க முடியாது.

உங்கள்  வாழ்வின் துயரத்திற்கு நீங்கள் தான் காரணம் என்று ஏற்றுக்கொள்கிறீர்களா? ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் இந்த கருத்தியலோடு நீங்கள் ஒத்துப்போகலாம். இல்லையென்றால் மறுப்பீர்கள்.

நீங்கள் சற்று ஆழமாக,பொறுமையாக   சிந்தித்து பாருங்கள். நீங்கள் எதை உங்களுக்கு பிடிக்கும் என்று செய்கிறீர்களோ/நினைக்கிறீர்களோ  அதனாலாயே உங்களுக்கு பிரச்சனையும் வரும்.

உங்களுக்கு இனிப்பு பிடிக்கும் நிறைய  உண்டால் பல வியாதிகள்.
வேலைக்கு சென்றால் உங்களது துன்பம் நீங்கிவிடும் என்று நினைக்கிறீர்கள்...ஆனால் அங்கேயும் துன்பம்.

பணம் நிறைய கிடைத்தால் இன்பம் என நினைக்கின்றீர்கள் ஆனால் உங்களின் பணத்தாலும் உங்களுக்கு துன்பம்.

காதலி கிடைத்தால், திருமணம் நடந்தால்  இன்பம் என நினைக்கின்றீர்கள் ஆனால் அதனாலும் துன்பம்.

குழந்தை பிறந்தால் இன்பம் என நினைக்கின்றீர்கள் பிறகு அதனாலும் துன்பம்.


எந்த ஒரு விடயத்தை எடுத்தாலும் இது உங்களுக்கு பொருந்தும்.

சிறு  வயதில் சீக்கிரம்  வளரவேண்டும்  என்று நினைப்பீர்கள்  வளர்ந்து விட்டால் குழந்தையாகவே இருந்திருக்க கூடாதா என்று நினைப்பீர்கள்.

வாலிபத்தில் ஆணவத்தில் திரிந்துவிட்டு வயதானவுடன்  தான் நடக்க,உபாதைகள் கழிக்க கூட பிறர் துணை தேவைப்படுகிறது....என்னே கொடுமை?

இன்பம் என்பது துன்பத்தில் தான் முடியும். இதனால் தான் புத்தன் ஆசையே அனைத்துக்கும் காரணம் என்றானோ?

ஆசைதான் நம் பிறப்புக்கு காரணம்.

உன் பிறப்புக்கு காரணம் உன் பெற்றோர்கள் ஆசை மட்டும் அல்ல உன் ஆசையும் தான். உன் குழந்தையின் பிறப்புக்கு காரணம் உன் ஆசை மட்டும் அல்ல அவன் ஆசையும் தான்.

நான்,நீ, நாம், அவன், அவள், அது என எல்லாவற்றின் மூலமும் ஒன்று என்று புரியும்பொழுது,உணரும்பொழுது  நம்மை படைத்தது நாமே என்பதும் புரியலாம்,உணரலாம். எனக்கும்தான்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

காதல் சரி... கள்ளக்காதல் சரியா தவறா?

பல பகுத்தறிவுப்புலிகள், பெண் விடுதலைக்கு பாடுபடுபவர்கள்,
சாதியை ஒழிப்பவர்கள், முற்ப்போக்குவாதிகள்  என்று தங்களை கூறிக் கொள்பவர்கள்    காதல் தவறு இல்லை என்று சமீபகாலமாக கூறி வருகிறார்கள்.

ஆணோ பெண்ணோ 18 வயதை அடைந்துவிட்டால் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம்  அதை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்கின்றனர். 

எனக்கு ஒரு சந்தேகம் இதை அந்த போராளிகள் தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ஒருவன் ஏற்க்கனவே திருமணமான பெண்ணை துரத்தி துரத்தி 
காதலித்து அவள் சம்மதத்தையும் வாங்கி விடுகிறான். 
எனக்கு கணவனும் வேண்டாம் குழந்தையும் வேண்டாம் காதலன் தான் வேண்டும்  என்கிறாள் அந்தப்பெண்.இப்பொழுது அந்த பெண்ணின் கணவன் மற்றும் குழந்தைகள் கதி என்ன.? சம்பீபத்தில் இப்படி ஒரு செய்தியை படித்ததாக ஞாபகம். (இப்படி காதல்,கள்ளக்காதல் பற்றி பல கேள்விகளை நீங்களே கேட்டுப்பார்க்கலாம்)

சமூகப்போராளிகளே உங்கள் தீர்ப்பு என்ன?

காதல் சரி என்று பிரச்சாரம் செய்பவர்கள் கள்ளக்காதலுக்கும் நாளைக்கு பிரச்சாரம் செய்வார்களா?


நேற்று காதல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை இன்று அதற்க்கு ஆதரவு தெரிவிக்கிறீர்கள் .

கள்ளக்காதல் இன்று ஏற்றுக்கொள்ளப் படவில்லை நாளை ஆதரவு  தெரிவிப்பீர்களா?

ஆண்- ஆண் , பெண் - பெண் உறவு மக்களிடையே ஆதரவு இல்லாவிட்டாலும் அரசாங்கம் அங்கீகரித்து விட்டது. இதையும் நாளை ஆதரிப்பீர்களா?


மனிதர்கள் -மிருகங்கள் உறவையும் நீங்கள் நாளை  ஆதரிப்பீர்களா? 

நீங்கள் எந்த பாதையில் செல்கிறீர்கள் - மனித சமுதாயத்தை எப்படி வழி நடத்தி செல்கிறீர்கள்  என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் இது நடந்தே தீரும்.இவை எல்லாமே முன்னொரு காலத்தில் நடந்தவைதான்.இவை அனைத்திற்கும் தாங்கள் தயாரா?

  
என்னுடைய நிலைப்பாடு.............?

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

உயிர் வேறு ஆன்மா வேறா?

சமீபத்தில் சகோ சார்வாகன் தளத்தில்  ஆன்மா வேறு உயிர் வேறு என்ற பொருளில் விவாதம் நடந்தது. இது பற்றி என்னுடைய கருத்தை பதிவு செய்யவே இப்பதிவு.

உயிர் வேறு ஆன்மா வேறு என்று சிலர் நினைக்கின்றார்கள். எனக்கு அவ்வாறு தோன்றவில்லை. உயிர் என்பதும் ஆன்மா என்பதும் ஒன்றையே குறிப்பதாக நான் நினைக்கின்றேன்.

உயிர் என்பது இன்றைய மருத்துவ ,அறிவியல்,நடைமுறை  சொல். ஆன்மா என்பது பண்டைய அறிவியல் சொல்.

ஆன்மிகம் என்பது ஆன்மாவை (உயிர்) பற்றிய  படிப்பு,அறிவியல்,தேடல்.

ஆன்மிகம் என்பது தான் யார் (அதாவது உயிர் =ஆன்மா,இறைவன்  என்பது என்ன)  என்று அறிய முற்ப்படும் ஒரு தேடல். பக்தி வேறு..ஆன்மிகம் வேறு. பக்தி ஆன்மீகத்திற்கு வழி வகுக்கலாம்.

ஆன்மாவை சிலர் மனதோடும்,நினைவுகளோடும் தொடர்பு  படுத்தி குழப்பிக்கொள்கின்றனர்.

ஆன்மா=உயிர் என்பதே பிரதானம். இதனோடு நெருங்கிய தொடர்பில் இருப்பது மனம்...பிறகு புத்திசாலித்தனம்.

உயிர் என்பதும் மனம் என்பதும் புத்திசாலித்தனம் என்பதும் வேறு வேறானாவை.

 உயிர்=ஆன்மா இல்லாமல் மனம் இல்லை. மனம் இல்லாமல் அறிவுக்கூர்மை இல்லை.

ஆன்மா=உயிர் இல்லாமல் உடல் இயக்கம் பெறுவதில்லை.

பிணத்திற்கு இந்த மூன்றும்(ஆன்மா =உயிர்,மனம்,அறிவு) இருக்காது.எதுவும் இருக்காது...

உடல் இல்லாமல் இந்த மூன்றும் பிறருக்கு தெரிவதில்லை.


அறிவியலில் சூரியன் இல்லாமல் எந்த கோள்களும் இயங்க முடியாது,எந்த உயிரும் உயிர் வாழ முடியாது. 


அதுபோலத்தான் ஆன்மா =உயிர் இல்லாமல் யாரும் எதுவும் உயிர் வாழ்வதில்லை.

சந்திரன் சூரியனை சார்ந்தே ஒளி அளிக்கின்றது. அதுபோலத்தான் மனமும் ஆன்மாவை சார்ந்தே உள்ளது.

புத்தி=அறிவுக்கூர்மை என்பது  மனதோடும் ஆன்மாவோடும்  தொடர்புடையது.


உயிர் வாழ் உயிரினங்களுக்கு உயிர் உள்ளது என்பதும், எல்லா உயிர்களுக்கும் ஆன்மா உள்ளது என்பதும் ஒருவகையில் ஒரே சொற்றொடரே.

====================================================
எந்த உயிர்களையும் துன்புறுத்தாமல் வாழவேண்டும் என்ற கருத்தியலைத்தான்  வள்ளலார் ஆன்ம நேய ஒருமைப்பாடு என்றார். உலகில் இதை மிஞ்சிய சித்தாந்தம்  ஏதும் இல்லை.
இந்திய மதங்களின் ஆணிவேரே இந்த கொள்கைதான்.
----------------------------------------------------------------------------------------------------------
உங்களின் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளை பிரிப்பது ஏன்?

ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்.
சித்திரையில் குழந்தை பிறந்தால் சூரியன் ஜோதிடப்படி உச்சத்தில் இருப்பான்.

சூரியன் உச்சத்தில் இருந்தால் சீக்கிரம் தலைமை பதவி கிடைக்கும் என்பது ஒரு ஜோதிட விதி. ஒரு குடும்பத்தின் தலைவன் என்பவன் கணவன்/அப்பா . ஆனால் குழந்தை சீக்கிரம் தலைமை பதவி அடைய வேண்டும் எனில் என்ன நடக்க வேண்டும் என்று நான் சொல்ல வேண்டுமா?

சித்திரையில் "முதல்" குழந்தை பிறந்தால்  அப்பனை காவு வாங்கிவிடுவான்.அப்பனுக்கு விரைவான முன்னேற்றத்தையும் அளித்து அப்புறம் தூக்கிடுவான். குழந்தை விரைவில் குடும்பத் தலைவனாகிவிடும். இதனால் தான்ஆடியில் புதுமண  தம்பதிகளை பிரித்து வைக்கிறார்கள்.
எல்லோருக்கும் இப்படி ஆகுமா என்றால் இல்லை என்பதே எனது பதில். 

மற்ற  அமைப்புகளை பொறுத்து  சிலருக்கு  உறவில்  தீத சிக்கல், பிரிய நேரிடுதல் போன்றவை நடக்கும்.

 நான் பார்த்த ஒரு ஜாதகத்தோடு இது பொருந்தியது.

சனி, 27 ஜூலை, 2013

ஏன் இந்த ஆரிய திராவிட, இந்து இசுலாம், தலீத் சாதி இந்து அரசியல்?


நம்மில் பல பிரிவுகளை உண்டாக்கி நம்மை நாம் அழித்துக்கொண்டிருக்கின்றோம் என்பது கூட தெரியாத தலைவர்களையும் மக்களையும் எண்ணி எமக்கு வேதனையே மிஞ்சுகிறது.

ஆரிய  -திராவிட அரசியல் செய்து  பிராமணர்களின் மனதை புண்ணாக்கி விட்டோம், இன்றும் இது தொடர்கிறது .

இந்து- இசுலாம் அரசியல் செய்து இந்தியாவை உடைத்து விட்டோம், இப்பொழுது இது வேறு உருவம் எடுக்கின்றது.இந்து இசுலாம் மக்கள் மனதில் நஞ்சை விதைக்க ஆரம்பித்து விட்டோம்.

தலீத் -சாதி இந்து அரசியல் செய்து இப்பொழுது இரு சமுதாயத்தினர் மனதிலும்  புண்ணை விதைக்கின்றோம்.

அடுத்து என்ன செய்யலாம்?
கவுண்டர்-உடையார் -படையாட்சி-கள்ளர்-மறவர்-தேவர்-பிள்ளை அரசியல் செய்வோமா?
தேவேந்திர குல வேளாளர்-பள்ளர்- பறையர்-அருந்ததியர் அரசியல் செய்வோமா?
சொல்லுங்கள் என் சொந்தங்களே எந்த மாதிரி அரசியல் அடுத்தது நாம் செய்யலாம்?
நம்மை நாமே அழித்துக்கொள்வோம் வாருங்கள்.

நாம் செய்யும் தவறு என்ன தெரியுமா?
ஒன்று: ஒரு சமுதாயத்தை சார்ந்தவன் தவறு செய்யும் பொழுது  ஒட்டு மொத்த சமுதாயத்தையும் நாம் தவறாக பார்க்கிறோம்.

இரண்டு:ஒரு சமுதாயத்தை சார்ந்தவன் தவறு செய்யும் பொழுது  அச்சமூகத்தை சார்ந்த பலரும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது.

இதை மாற்றி மாற்றி நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.
இது ஒரு கொடிய குற்றம். இதுவே பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது.
எல்லா ஜாதி மதங்களிலும் நல்லவர்களும்  உள்ளனர் கெட்டவர்களும் உள்ளனர்  என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.


ஜாதி,மதங்கள் இருக்கும் வரை அதனால் நமக்கு பிரச்சனை இருக்கும்.
கேட்டால்  என் ஜாதிக்காக நான் போராட கூடாதா? என்று கேட்பார்கள். 
என் மதத்திற்காக நான் போராட கூடாதா? என்று கேட்பார்கள்.

இன்று ஜாதியை ஒழிக்கிறேன் பேர்வழிகள் சில மதங்களை ஆதரித்தும் சில மதங்களை எதிர்த்துமே செயல்படுகிறார்கள்.

ஜாதிக்கொரு சுடுகாட்டை எதிர்க்க தெரிந்தவர்களுக்கு மதத்திற்கு ஒரு சுடுகாடு ஏன்? என்ற பகுத்தறிவு கேள்வி எழாமல் போனது ஏன்?

ஜாதி கலப்பு திருமணம் பற்றி பேசுபவர்கள், மதங்களுக்குள் கலப்பு மணம் பற்றி பேச மறுப்பது ஏன்?

ஜாதியை விட மிகவும் கொடுமையான மதத்தை இவர்கள் எப்படி ஆதரிக்கின்றார்கள் என எனக்கு தெரியவில்லை.

ஜாதியை விட மதம் பன்மடங்கு கொடுமையானது என்ற தொலை நோக்கு பார்வை நம்மிடம் இல்லை .காரல் மார்க்ஸ் பெயரால் கட்சி  நடுத்துபவர்களுக்கு கூட இது தெரியாமல் போன மாயம் என்ன?

ஜாதியையும் மதத்தையும் ஒழிப்போம் என்று கூற இங்கே எந்த தலைவருக்கும் மனதில்லை. ஏன் என்றால் அப்படி கூறினால் அரசியல் செய்யமுடியாதே.

ஜாதியையும் மதத்தையும் காட்டாமல் இட ஒதுக்கீட்டிற்கு சரியான முறையை கண்டுபிடிக்க வேண்டும்.முடியாததில்லை... முயற்சிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

ஒவ்வொரு ஜாதி,மத  மக்களுக்காகவும் போராட நினைக்கும் தலைவர்களின்  எண்ணம் நல்லதுதான். ஆனால் ஒரு ஜாதி,மத  மக்கள் நலுனுக்கான போராட்டத்தில் பிற ஜாதி,மத மக்களை நாம் எதிரியாக்கி விடுகிறோம்  
என்பதை இவர்கள் மறந்துவிடக்  கூடாது.

நம் சமுதாய நலனும் பேண வேண்டும் அதை பிற   சமூதாயத்தவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர்களையும் இதில் ஈடுபடுத்தி செயலாற்ற வேண்டும். இது முடியாததல்ல முடியும்.

இதைவிட சிறப்பான வழி அனைவரயும் மனிதனாக பார்ப்பதுதான்.
மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கவேண்டுமே தவிர ஒருவனது ஜாதி மதத்தை பார்க்க கூடாது என்ற புரிதலை ஏற்ப்படுத்த வேண்டும்.என் ஜாதி,என் இனம்,என் மதம் என்று பாராமல் அனைவரயும் மக்கள் என்ற பொதுப் பார்வையில் பார்த்து  திட்டங்களை நாம் வகுக்க வேண்டும,.  ஜாதி மதங்கள்  இருந்ததற்கான தடம் கூட தெரியாமல்  இவற்றை அழித்தொழிக்க வேண்டும்.

ஜாதியை நேசிப்பவர்களும்,மதத்தை நேசிப்பவர்களும்,அறியாமையில் இருப்பவர்களும்  இதற்க்கு முட்டு கட்டை போடுவார்கள் தான். அவர்களுக்கு புரிய வைக்க வேண்டியது நமது கடமை.புரிதலே மனிதத்தின் ஆணிவேர்.

எல்லா ஜாதி மதங்களிலும் ஏழைகளும் உள்ளனர் பணக்காரர்களும் உள்ளனர். எல்லா ஜாதி மதங்களிலும் நல்லவர்களும்  உள்ளனர் கெட்டவர்களும் உள்ளனர்.  அனைத்து ஜாதி மத ஏழை மக்களுக்காகவும் நாம் பாடுபடவேண்டும்.அனைத்து ஜாதி மத நல்லவர்களையும் நாம் கெட்டவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.கெட்டவர்களை சீர்திருத்த வேண்டும்.  இதை செய்தால் இந்தியா,உலகம்  அமைதியாக இருக்கும் இல்லையேல்.................

ஞாயிறு, 2 ஜூன், 2013

எந்த ஜாதி உயர்ந்த ஜாதி?

 
எந்த ஜாதி உயர்ந்த ஜாதி என்பதை  ஒரு குட்டிக் கதையின் மூலம் விளக்கலாம் என  நினைக்கின்றேன்.இந்த கதையை எங்கோ எப்பொழுதோ படித்தது. அதை இங்கு பயன்படுத்துகிறேன். அந்தக் கதையை எழுதியவருக்கு நன்றி.

ஒரு  நாள் மனிதனின் உறுப்புகளுக்குள் சண்டை வந்தது. யார் உயர்ந்தவன் என்பதே அந்த சண்டை. 

இதயம்- நான் துடிப்பதை நிறுத்தி விட்டால் மனிதன் இறந்துவிடுவான் எனவே நானே உயர்ந்தவன் என்றது.

மூளை - நானே பல உறுப்புகளுக்கு கட்டளையிடுகிறேன் நான் செயலிழந்தால் மனிதன் பிணத்திற்கு ஒப்பானவன் எனவே  நானே உயர்ந்தவன் என்றது.

இவ்வாறே கண், காது, மூக்கு, வாய், கை, கால் என பல உறுப்புகளும் தங்கள் செயல்பாட்டை வைத்து நானே உயர்ந்தவன் என்று கூறிக்கொண்டன.ஒரு சில உறப்புகள் ஒரு சில உறுப்பின் பயன்பாட்டை அங்கீகரித்து ஏற்று கொண்டன. 

கடைசியில்  மலப்புழை  மலத்தை வெளியேற்ற மட்டுமே பயன்படுகிறது எனவே அதுவே தாழ்ந்தது என்று பிற உறுப்புகள் முடிவு செய்துவிட்டன.

இதனால் சினம் கொண்ட மலப்புழை மலத்தை வெளியேற்ற  அனுமதியாமல் இறுக்கி மூடிக்கொண்டது.

மலத்தை வெளியேற்ற  முடியாததால் உடல் உப்பி மனிதன் வெடித்து சிதற அனைத்து உறுப்புகளும் அழிந்துபோயின.

இப்ப சொல்லுங்க எந்த உறுப்பு உயர்ந்த உறுப்பு, சிறந்த உறுப்பு?
 எந்த உறுப்பு தாழ்ந்த உறுப்பு?

மனித உறுப்புகளைப் போல் தான் நாமும் உயர்வு தாழ்வு பேசிக்கொண்டு நம்மை நாமே அழித்துக்கொல்கிறோம்.

அந்த காலத்தில் ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு தொழிலை செய்து மனித  குலம் தழைக்க உதவிக் கொண்டன.

 இதில் இந்த தொழிலை செய்தவன் உயர்ந்தவன் என்றோ இந்த தொழிலை செய்தவன் தாழ்ந்தவன் என்றோ கூறிக்கொள்ளுதல் சரியா?

 தொழிலை  வைத்து ஒரு ஜாதி உயர்ந்தது ஒரு ஜாதி தாழ்ந்தது என்பது அறிவுடமையாகாது.
 

என்றும் மனிதமுடன்
இராச.புரட்சிமணி 


ஞாயிறு, 26 மே, 2013

ஜாதிப் பெருமை பேசக்கூடாது என்பவர்கள் சந்தேகம் தீர்ப்பார்களா ?


 ஜாதிப்  பெருமை பேசுவது தவறு என்று சமீபத்தில் பலர்  எழுதுவதை  பேசுவதை காண  நேர்ந்தது.  இதுல எனக்கு ஒரு சந்தேகம். ஜாதிப்  பெருமை பேசக்கூடாது என்பவர்கள்  என்னுடைய சந்தேகத்தை தீர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

ஜாதிப்  பெருமை பேசக்கூடாது சரி

மொழிப்  பெருமை பேசலாமா?
தமிழ் மொழியே சிறந்த மொழி என்று  மாநாடு நடத்துகிறோம்,   செம்மொழி மாநாடு நடத்தினோம், தமிழன்னைக்கு சிலை கூட வைக்கப் போகிறோம்.

இனப் பெருமை பேசலாமா?
தமிழன் வீரப்பரம்பரையை சேர்ந்தவன்  என்று சிலர் எழுதவதை பேசுவதை  கேட்டுள்ளேன்.

நாட்டுப்  பெருமை பேசலாமா?
பாரத நாடு பழம்பெரும் நாடு என்று கூறிக்கொள்கிறோம்.

மதப்பெருமை பேசலாமா?

குடும்பப்  பெருமை பேசலாமா?

தலைவர்கள் பெருமை பேசலாமா?

தாய்தந்தை  பெருமை பேசலாமா?

பிள்ளைகள் பெருமை பேசலாமா?


உங்களின் விளக்கத்தை நான் எதிர்பார்க்கிறேன். இப்பதிவின் நோக்கம் சிந்தனையை  தூண்டுவதும் அதற்க்கான விளக்கத்தை பெறுவதும் மட்டுமே.

வெள்ளி, 17 மே, 2013

தாழ்த்தப்பட்டவர்கள் ஏன் ஒழிக்கப்படவேண்டும்?


தாழ்த்தப்பட்டவர்கள் நிச்சயம் ஒழிக்கப்படவேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. தாழ்த்தப்பட்டவர்கள் என்று அழைக்கப்டுபவர்களை ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. தாழத்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை முதலில் நீக்க வேண்டும் பிறகு தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் இல்லாதவாறு அனைவரும் உயர்த்தப்படவேண்டும்,சமமாக மதிக்கப்படவேண்டும் என்று கூறுகிறேன். 

தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை தமிழ் அகராதியிலிருந்து நீக்க வேண்டும்.  தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தை மக்கள் மனதில் எந்த மாதிரி விளைவுகளை ஏற்ப்படுத்துகிறது என்பதை நாம் உணரவில்லை என நினைக்கின்றேன்.

ஒரு சில மக்கள் தாழ்த்தப்பட்டார்களா இல்லையா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. ஆனால் ஒரு சில மக்களை நீங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பது அவர்கள் மனதில் எந்த மாதிரி எண்ணத்தை ஏற்ப்படுத்தும் என்பதை நாம் சிந்திக்காதது நம் மடமை என்றே நினைக்கின்றேன்.

ஒருவனை நீ தாழ்த்தப்பட்டவன் எனும்பொழுது அவனுக்கு இரண்டு விதமான எண்ணங்கள் உருவாகாலாம். 

ஒன்று: நம்மை இழிவானவர்கள் என்று பிறர் கருதுகின்றனர் என்ற எண்ணம் வரலாம்.
இரண்டு:நம்மை சிலர் தாழ்த்திவிட்டார்கள் என்று சிலர் மேல் அவர்களுக்கு கோபம் வரலாம்.

இது இரண்டுமே சமுதாய நலனிற்கும் தனிப்பட்ட முறையில் அவர்களின் நலனிற்கும் நல்லதல்ல என்றே நான் நினைக்கின்றேன்.

தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒரு சமுதாயத்தை பிரித்து காட்டும்பொழுது பிற சமுதாயத்தை சார்ந்தவன் மனதில் இரண்டு விதமான எண்ணங்களை ஏற்ப்படுத்தலாம்.

ஒன்று: அச்சமுதாய மக்கள் நம்மை விட கீழானவர்கள். அவர்களை விட நாம் உயர்ந்தவர்கள்.

இரண்டு: அச்சமுதாய மக்களை சிலர் தாழ்த்திவிட்டார்கள் என்று சிலர் பரிதாபப்படலாம் 

முதலாம் நினைப்பு மிகவும் தவறானது. இரண்டாவது நினைப்பு சில நல்ல விளைவுகளையும் சில தீய விளைவுகளையும் ஏற்ப்படுத்தும்.

எப்படிப்  பார்த்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்பது உளவியல் ரீதியாக தவறான என்னத்தை ஏற்ப்படுத்துவதாகவே நான் உணர்கிறேன்.

எனவே தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தைக்கு பதிலாக   பட்டியல் வகுப்பினர் என்று மட்டுமே கூறுவது சரியாக இருக்கும்.இதுவும் சில காலத்திற்கு மட்டும்....சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருக்கும்வரை மட்டுமே. 

தலீத் என்ற வார்த்தையில் எனக்கு உடன்பாடில்லை. ஏன் எனில் இதுவும் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பொருளையே தருகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் என்பது உளவியல் ரீதியாக ஏற்ப்படுத்தும் பாதிப்புகளை மனதில் கொண்டு அனைவரும் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை கைவிடும்படி மிகவும்  பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.  மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவியுங்கள் 


என்றும் மனிதத்துடன் 
இராச.புரட்சிமணி 

செவ்வாய், 12 மார்ச், 2013

ஈழப்பிரச்சனையில் இந்தியாவிற்கு என்ன தண்டனை? இனி போராட்டம் எப்படி இருக்க வேண்டும்?



 இந்தியா ஈழப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு தெளிவான சிந்தனை இல்லை  என்றே நான் கூறுவேன். இந்தியா  நடந்த போரில் இலங்கைக்கு உதவியது என்பது உண்மையானால் இலங்கையுடன் சேர்ந்து இந்தியாவும் போர்க் குற்றத்திற்கான  தண்டனையை பெற வேண்டும் அல்லவா? அதுதானே முறை?

கொலை செய்தவனை விட கொலை செய்ய தூண்டியவனுக்கு  அதிக தண்டனை என்று கூறுவார்கள் அப்படி பார்க்கையில் இந்தியாவிற்கும்தானே தண்டனை தரவேண்டும்?

உண்மையில் இந்தியாவிற்கு தண்டனை தரவேண்டும். ஆனால் இந்தியா என்ன தவறு செய்தது? நாட்டு மக்கள் என்ன தவறு செய்தார்கள்? தவறை செய்ததெல்லாம் இந்தியாவை ஆண்டவர்கள் செய்தது.  

எனவே இந்தியாவிற்கு தண்டனை என நான் கூறுவது அப்பொழுது ஆட்சியில் இருந்த தலைவர்களுக்கு தண்டனை தரப்படவேண்டும் என்றே கூறுகிறேன்.

இந்த கருத்தை வழிமொழிய தமிழகத்தில் ஒரே ஒரு அரசியல் கட்சிக்காவது துணிவுண்டா?

இலங்கையை குற்றம் சொல்லும் அரசியல்கட்சிகள் ஏன் இந்திய தலைவர்களை குற்றம் சொல்ல தயங்குகின்றன? 

போராட்டம் செய்தால் உணமையாக போராடவேண்டும். மனிதத்திற்காக போராடவேண்டும்.  அதை விடுத்து ஒருபுறம் இந்திய அரசு போருக்கு உதவியது என்று கூறிக்கொண்டு மறுபுறம் இந்திய அரசு இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது என்னைப்பொருத்தவரை முட்டாள்தனம். 

மனிதத்திற்கு முன்பு நாடோ,மொழியோ,இனமோ எதுவும் முக்கியமல்ல. மனிதகுலத்திற்கு எது  நல்லதோ அது மட்டுமே முக்கியம்.

என்னைப் பொருத்தவரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு தண்டனை தரவேண்டும் அதேபோல இலங்கையை ஆட்சி செய்த ராஜபக்சேவுக்கும் தண்டனை தரவேண்டும். அதுமட்டுமா தமிழகத்தில் ஆட்சிபீடத்தில் இருந்து கொண்டு நாடகம் ஆடிய தலைவர்களுக்கும் தண்டனை தரப்பட வேண்டும் அல்லவா?

இந்த தண்டனையை வேறொரு அமைப்பு தரவேண்டும் என்று எதிர்பார்த்தாலும் மறுபுறம் மக்களான  நாமே இத்தண்டனையை தரவேண்டும்.  அரசியலில் உள்ளவர்களை அரசியலில் தனிமைப்படுத்தவேண்டும்.....அவர்கள் தவறை உணர்ந்து கதறி அழும் வரை....பிராயச்சித்தம் தேடும்வரை.

முதலில் ராஜபக்சேவுக்கு தண்டனை வாங்கித்தர முயல்வோம். 

சரி இப்பொழுது என்ன செய்யலாம்?
மாணவர்கள் போராட்டம் சூடுபிடித்து விட்டது. உண்ணாவிரதம் அடையாள உண்ணாவிரதமாக இருக்கவேண்டுமே  ஒழிய சாகும்வரை உண்ணாவிரதம் என்பது ஏற்ப்புடையதல்ல.  அப்படியே உண்ணாவிரதம் இருந்தாலும் தமிழகத்தில் இருக்க கூடாது. டெல்லியில் பாராளுமன்றத்திற்கு  முன்பு இருக்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தும் பொழுது அது ஒட்டுமொத்த இந்தியாவையும் சென்றடையும். 

காங்கிரஸ் அரசு இலங்கைக்கு உடந்தையாய் இருந்திருந்தாலும்  ஒட்டுமொத்த இந்தியர்களின் ஓட்டுக்கு,கேள்விக்கு பயந்து இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும்படி அழுத்தத்தை ஏற்ப்படுத்த வேண்டும். இது நடக்க  ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நம்மால் முடிந்தவரை விரைவில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவேண்டும். அனைத்து ஊடகங்களின் உதவியை நாடுங்கள்.....உங்களை தேடிவரும்படி செய்யுங்கள். 

எனவே மாணவர்களே உங்களுக்கு உண்மையில் போராடவேண்டும் என்ற அக்கறை இருந்தால் பாராளுமன்றத்திற்கு முன்பும்,ஐநா சபை முன்பும், ஒவ்வொரு நாட்டு தூதரகத்தின் முன்பும் போராட்டம் நடத்துங்கள்.ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டனை தரவேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கு சம உரிமை,நல்வாழ்வு கிடைக்க துரிதமாக நடவடிக்கை கிடைக்க வேண்டும் என்று போராடுங்கள். விழிப்புணர்வை ஏற்ப்படுத்துங்கள். இதுவே எனக்கு தோன்றும் சிறு எண்ணம்.....சிந்தித்து செயல்படுங்கள்.....உங்கள் கருத்தையும் கூறுங்கள்.....

மாணவர்கள் மட்டும்தான் போராடவேண்டும் என்றும்  அல்ல பொதுமக்களும் போராடலாம். எங்கோ நடந்ததற்கு இங்கு ஏன் போராடாவேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம், இனி எங்கும் இதுபோல் நடக்ககூடாது என்பதை புரியவைக்க வேண்டும் எனபதை மனதில் வையுங்கள்.  போராட  அனைவரும் சாலையில் இறங்க வேண்டுமென்பது அல்ல...உங்களது கருத்தை முடிந்தவரை முடிந்த இடங்களில் பதிவு செய்யுங்கள்....இப்பிரச்சனையை உங்களால் முடிந்த சில பேருக்காவது கொண்டு சொல்ல முயலுங்கள்.

  சரி நான் என்ன செய்யப்போகிறேன் என்றால் இந்த பதிவை எழுதுவது மட்டுமே என்னால் இப்பொழுது இரவு இரண்டு மணிக்கு முடிந்தது....

நாம் போராடுவது இன்று  தமிழர்களுக்காக என்றாலும் இனி நாம் தமிழினத்தையும் தாண்டி  மனிதத்தை முன்னிறுத்தி போராடவேண்டும் எனபதையும் மனதில் வையுங்கள். 

என்றும் மனிதத்துடன் 
இராச.புரட்சிமணி 

சனி, 9 மார்ச், 2013

ஏன் இந்த முஸ்லீமுக்கு இவ்வளவு பாராட்டு?


பலரும்  இந்த முஸ்லீமை பாராட்டுகின்றனர். அவர் அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்?

சில  முஸ்லிம்கள் அச்சத்திலும்,சில முஸ்லிம்கள் ஆதரித்தும்,பல முஸ்லிம்கள் ஒன்றும் அறியாமலும் இருக்கின்ற பொழுது பாகிஸ்தான் ராணுவத்தினர்  இரண்டு இந்திய ராணுவ வீரர்களின் தலையை துண்டித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தான் பிரதமர் அஜ்மீர் தர்காவிற்கு (இன்று) வரும் பொழுது வரவேற்ப்பு தரமாட்டேன் என்று தைரியமாக கூறியுள்ளார் அஜ்மீர் தர்காவின் தலைமை பொறுப்பில் உள்ள  திவான் சையத் ஜைனுல் அபெதீன் அலி கான்.

இவருக்குத்தான் இப்பொழுது பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றனர். 

ராணுவ வீரரின்  தலையை இந்தியாவிடம் ஒப்படைத்திருக்க வேண்டும், இந்தியர்களிடமும்,சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடமும் பாகிஸ்தான் பிரதம மந்திரி மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும், அதை செய்யாததால் அவரை நான் வரவேற்க போவதில்லை என்று சுபி வழியை பின்பற்றும் திவான் தெரிவித்துள்ளார்.  

திவான் தான் பிற நாட்டு தலைவர்களை வரவேற்ப்பது  வழக்கம். இவரின் இந்த முடிவு இசுலாம்  என்று சொல்லி இந்திய முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது என்பதை பாக்கிஸ்தானிற்கு உணர்த்தும் என்று நம்புகிறேன்.

இவர் இப்படி பேசியது  பொதுமக்கள் மத்தியில் இவருக்கு நற்பெயரை வாங்கிதந்துள்ளது. அமைதியாக இருக்கும் பல நல்ல முஸ்லிம்களின் குரலாகவே இதை பலரும் பார்க்கின்றனர். 

முஸ்லிம்கள் பலரும் தங்கள் மனிதநேய,மதச் சார்பற்ற  கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க வேண்டும்.மதத்தையே கட்டிக்கொண்டு அழாமல் மனித நேயத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

திவான் சையத் ஜைனுல் அபெதீன் அலி கான் அவர்களின் இந்த செயல் அவரின் தனிப்பட்ட எதிர்ப்பாக இருந்தாலும் இது பாரட்டுக்குரியது. நமது  பாராட்டையும் அவருக்கு  பதிவு செய்வோம்.

என்று மனிதத்துடன் 
இராச.புரட்சிமணி 


வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

ஐயதராபாத்தில் குண்டு வைத்தது ஹிந்துத்துவா தீவிரவாதிகளா?


சிந்திக்கவும் என்ற வலைப்பதிவு ஐயதராபாத்தில் குண்டுவைத்தது ஹிந்துத்துவா தீவிரவாதிகளாக கூட இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.எனக்கும் அப்படி ஒரு சந்தேகம் எழுந்தது அதை பின்னூட்டமாக இட்டுள்ளேன்.
அந்த பின்னூட்டம் கீழே 

///
மிகவும் சரியான பதிவு. குண்டு வைத்தது மோடியாக கூட இருக்கலாம். அஜ்மல் கசாபும், அப்சலும் ஒன்றும் அறியாதவர்கள். இவர்களை தூண்டிவிட்ட காவி  தீவிரவாதிகளை உடனே அரசு கைது செய்யட்டும். 

வங்காள தேசத்தில் வலைப்பதிவரை கொன்றதும் இந்த காவித்தீவிரவாதமாக இருக்கலாம். 
பாகிஸ்தானில் கொத்து கொத்தாக ஷியா,சுபி முஸ்லிம்களை கொல்வதும், ஏன் தாலிபான் அமைப்பு கூட காவிதீவிரவாதிகளின் சதி செயலாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுவதை விர்க்க முடியவில்லை. 

எனக்கு சில சமயம் ஒசாமா கூட காவி தீவிரவாதியோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. 

நான் இதுபற்றி எழுதவேண்டாம் என்று இருந்தேன்...என்னை எழுதவைத்து விட்டீர்கள்.///


உண்மையில் இந்த சம்பவம் பற்றி நான் எழுதவிரும்பவில்லை. ஆனால் சில கிறுக்குத்தனமான பதிவுகளை வாசித்தால் எழுதாமல் இருக்க முடியவில்லை.

மாலேகான்,சம்ஜோதா ரயில்,மக்கா மஸ்ஜித்,அஜ்மீர் தர்கா  இந்த நான்கு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணம் சில ஹிந்துத்துவாவாதிகள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு நடந்த சமயத்திலே எனக்கு இதில் இசுலாமிய அமைப்புகளுக்கு  பங்கு இருக்க வாய்ப்பு இல்லை என்று பொறி தட்டியது.  ஏன் எனில் இந்த நான்கு இடங்களுமே முஸ்லிம்களோடு தொடர்புடைய பகுதிகள்.

நல்லவேளையாக காவல்துறையும் உண்மையை கண்டறிந்து விட்டது.இந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை கூட தரலாம்.

இது ஒருபுறம் இருக்க இந்த சம்பவங்களை வைத்துக்கொண்டு அனைத்து குண்டுவெடிப்புகளுக்கும் காரணம்  ஹிந்துத்துவாவாதிகள் என்று ஒருசாரார் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.உண்மையில் உண்மை வேறுவிதமாக இருக்க.

ஐதராபாத் குண்டுவெடிப்பு என்பது அங்குள்ள சாய்பாபா கோயிலில் முதலில் வெடிக்க செய்வதாக திட்டமிடப்பட்டு இறுதியில் இடம் சற்று மாற்றுப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றன. 

இந்த குண்டுவெடிப்பை பொருத்தவரை எந்த அமைப்பையும் குற்றம் சொல்ல நான் விரும்பவில்லை. காவல்துறை ஆராய்ந்து முடிவை சொல்லட்டும் அதுவரை கிறுக்குத்தனமாக யாரும் எழுத வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.

குற்றம் செய்தவன் எந்த மதமாக இருந்தாலும் அவனுக்கு கடமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும். 

இந்த பதிவை எழுத காரணம் இந்து,இசுலாமிய வாதிகள்  அல்ல. போலி பகுத்தறிவுவாதிகள் தான்  இப்பதிவிற்கு காரணம்.

இதுபற்றி உணர்ச்சிவசப்பட்டு பதிவு எழுதாத இரண்டு மத மக்களுக்கும் எனது நன்றிகள். 

அடுத்த பதிவு பகுத்தறிவு குருடர்களை பற்றியதாக இருக்கலாம்...............

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

விஸ்வரூபம் சரி குரானில் திருத்தம் தேவையா? இல்லையா?

விசுவரூபம் படத்திற்கு தடை கோரும், துப்பாக்கி படத்தில் திருத்தம் கேட்ட எனதருமை இசுலாமிய சகோதரர்களே,
ஒரு திரைப்படம்  இசுலாமியர்கள் பற்றி மக்கள் மனதில் தவறான பாதிப்பை ஏற்ப்படுத்தும்,இசுலாமியர்களுக்கும் பிற மக்களுக்கும் பிரச்சனையை   உண்டாக்கும் என்று தடை  கோருகிறீர்களே   உங்கள் நல்லெண்ணத்தை நான் பாராட்டுகிறேன்.
ஆனால் நீங்கள் இறைநூலாக கருதும் குரானிலே பிற மத மக்களை பற்றி தவறான கருத்துக்கள் உள்ளதே. இது பற்றி என்றேனும் நீங்கள் கவலைப்பட்டதுண்டா? இந்த வசனங்களை நீங்கள் படித்ததே இல்லையா?இதில் திருத்தம் வேண்டும் என்று நீங்கள் கேட்டதுண்டா?
உங்களில் சிலர் இது பற்றி படிக்காமல் இருந்திருக்கலாம் அவர்களுக்காக சில வசனங்கள்.

5:82நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.

இந்த வசனத்தில் தெள்ளத்தெளிவாக  யூதர்களையும், இணைவைப்பவர்களையும் அதாவது இந்துக்களையும் பகைவராக பார்க்கும்படி குரான் கூறுகிறது. இது எந்த விதத்தில் நியாயம்? இதை நீங்கள் வரவேற்கிறீர்களா?

அல்லாவை வணங்குபவர்களை எதிரிகளாக பாருங்கள் என்று ஒரு நூலில் எழுதி இருந்தால் நீங்கள் சும்மா விட்டு விடுவீர்களா? பொழுதுபோக்கான திரைப்படத்தில் கூட உங்களை அவமதிக்கும் காட்சிகள் இருக்க கூடாது என்கிறீர்களே  ஆனால் இறைவேதம்  எனப்படும் குரானில் இப்படிப்பட்ட வசனங்கள்  இருக்கலாமா? சிந்தியுங்கள் எனதருமை சகோதரர்களே. 

மேற்கூறிய வசனத்தில் கிருத்துவர்கள் பற்றி நல்லபடியாக இருந்தாலும் பின்வரும் வசனம் அவர்களையும் நம்பவேண்டாம் என்கிறது அதையும் பாருங்கள்.

5:51முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

இதில் யூதர்களும் கிருத்துவர்களும் அநியாயக்காரர்கள் என்கிறது குரான். 

இப்படிப்பட்ட வசனங்களை  படிக்கும் ஒரு முஸ்லிம் மனதில் யூதர்களும்,கிருத்துவர்களும்,இந்துக்களும் முஸ்லிம்களுக்கு பகைவர்கள் என்ற எண்ணம் வருமா?  வராதா? சொல்லுங்கள் சகோதரர்களே.


கற்களை வணங்குபவர்கள்-இந்துக்கள்  சாத்தான்களின் நண்பர்களா?
சகோதரர்கள் நீங்கள் அல்லாவை வணங்குகிறீர்கள் அது உங்கள் விருப்பம். ஆனால் கற்களை வணங்குபவர்களை  சாத்தானின் நண்பர்கள் என்று கூறுவது எந்த விதத்தில் சரி?
அப்படிக்கூறும் இறைவேதம்  குரானின் வசனங்களை படியுங்கள்:
5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
4:76. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில்போர் செய்கிறார்கள்; ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.

சாத்தான்கள் என்று மட்டும் சொல்லவில்லை அவர்களுக்கு  எதிராக போர் புரியுங்கள் என்று வேறு இந்த வசனம்  கூறுகிறது. இதைபடிக்கும் முஸ்லிம் மக்கள் மனதில் இந்துக்களை பற்றி தவறான எண்ணமும் இந்துக்களுக்கு  எதிராக போர் புரியவேண்டும் என்ற எண்ணமும் வருமா? வராதா?  என்று நீங்களே சொல்லுங்கள்  சதோதரர்களே. 

போர் கொலை இது பற்றி கூறும் வசனங்கள்:
ஒரு இறைவேதத்தில்  ஏன் கொலைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என எனக்கு புரியவில்லை.

5:33அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.

9:5(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.


9:29வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

மேலே உள்ள வசனங்கள் அல்லாவை நம்பாதவர்களை கொல்ல சொல்கிறது என்றால் கீழே உள்ள வசனம் உங்கள் உயிர்களையும் கொடுக்க சொல்கிறது.


9:41நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.


முகமது நபி ஏதோதோ சொல்லி போர் புரிய சொன்னாலும் சிலர் மறுக்கின்றனர்.  எனவே அவர்களுக்கு நரக நெருப்புதான் கிடைக்கும் என்று பின்வரும் வசனத்தின் மூலம்  பயமுறுத்துகிறார்.

9:81(தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக(த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); “இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் “நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்).


அடைப்பு குறி என்பது அல்லா போட்டது அல்ல நமது மார்க்க அறிஞர்கள் போட்டதுதான். இதை நான் வரவேற்கிறேன்.ஆனால் பல பதிப்புகளில் 
இந்த பதிப்பில் உள்ளதுபோல தேவையான இடத்தில் அடைப்புக்குறி இல்லை. அடைப்புக்குறி இல்லாமல் படித்தால் தான் பின்வரும் வசனத்தின் வீரியத்தை நீங்கள் உணரமுடியும். 

47:4(முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.

இப்படி கொலை, போர் பற்றி ஒரு இறைவேதத்தில் இருந்தால்...அதை  இறைவேதம் என்று நம்புபவன் இந்தமாதிரி செயல்களில் ஈடுபடமாட்டான் என்று கூற இயலுமா?

பின்வரும் வசனம் பிற சமூகத்தினருடன் நட்புறவு கொள்ள வேண்டாம் என்கிறது.

60:13ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள்; ஏனெனில் மண்ணறை வாசிகளைப் பற்றி (எழுப்பப்பட மாட்டார்கள் என்று) நிராகரிப்போர் நம்பிக்கை இழந்தது போல், மறுமையைப் பற்றி, நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.

ஒரு திரைப்படம் மக்கள் மனதில் தவறான பிம்பத்தை ஏற்ப்படுத்தும் என்றால்.குரான் முஸ்லிம்கள் மனதில் தவறான பிம்பத்தை ஏற்ப்படுத்தாதா?
பல முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக மாற இந்த வசனங்கள் உதவியதா அலல்து வேறு காரணமா என இறைவனுக்கே தெரியும்.

புனிதப்போர்-ஜிஹாத்-அறப்போர்,தீவிரவாதம்   அல்லாவின் வியாபாரமா?

சகோதரர்களே அல்லா உங்களுடன் வியாபாரம் செய்கிறார். அதாவது நீங்கள் உங்கள் உயிர்களையும்,உடமைகளையும் கொண்டு போர் புரிந்தால்  அவர் சுவனம் தருவாராம். இந்த வசனத்தை மனதில் வைத்துத் தான் உலகெங்கிலும் பல இசுலாமியர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனரோ எனக்கு அச்சம்  ஏற்ப்படுகிறது சகோதரர்களே. 

61:10ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

61:11. (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

இந்த வசனங்களின் வீர்யத்தை நீங்கள் உணர்வீர்கள் என நினைக்கின்றேன்.

61:12அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.  
சுவனத்த்தில் என்ன உள்ளது பார்த்தீர்களா ஆறு ஓடுமாம். பாலைவனத்தில் இருப்பவர்கள் ஆற்றின் மேல் ஆசைப்படலாம் 
என்பதில் நியாயம் உள்ளது.சரி ஆற்றின் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு? போதிய குடிநீர் கிடைப்பவர்களுக்கு?

பின்வரும் வசனத்தில் அல்லா தன்னுடைய வியாபாரத்தை உறுதிபடுத்துகிறார். அவர்களுக்காக முஸ்லிம்கள் எதிரிகளை (அதாவது யூதர்கள்,கிருத்துவர்கள்,இந்துக்கள் (இதில் நாத்திகவாதிகளும் அடக்கம்) ) கொன்றால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்கிறார். இதை நினைத்து இசுலாமியர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்  என்கிறது பின்வரும் வசனம்.
9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
இது நியாயமா தர்மமா?  சொல்லுங்கள் எனதருமை சோதரர்களே. இதை படிக்கும்  ஒரு முஸ்லிம் மனதில் பிற மதத்தினரை கொல்வது சரி என்ற  எண்ணம் உண்டாகும் இல்லையா? தற்கொலைப் படைகளை ஊக்குவிப்பது போலவே அல்லவா இந்த வசனங்கள்  உள்ளன.  இது தவறில்லையா எனது சகோதரர்களே. இதை திருத்த வேண்டாமா? 
மேலும் ஒரு வசனம் 
2:191(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
பின்வரும் வசனத்தில் பிற மதத்தவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்கிறது.
4:89(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.
இது எந்த விதத்தில் நியாயம் சகோதரர்களே? இதை நீங்கள் ஏற்க்கிறீர்களா? இதை படிக்கும் ஒரு முஸ்லிம் பிற மதத்தவரை எதிரியாகத்தானே பார்ப்பான்?

ஒருவனுக்கு நல்லது  செய்வதால் உனக்கு சுவனம் கிடைக்கும்,பிறர் மீது அன்பு செலுத்தினால் உனக்கு சுவனம் கிடைக்கும் என்று கூறினால் நியாயம். ஆனால் போர் புரிபவர்களுக்கு மட்டுமே என்று கூறி அனைவரையும் போர் புரிய வைப்பது எந்த விதத்தில் நியாயம் எனதருமை சகோதரர்களே? பின்வரும் வசனத்தை பாருங்கள்.
3:142உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?
இது பற்றி நான் என்ன சொல்ல? :(
எந்த ஒரு மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்ற வசனம் நன்றாகவே உள்ளது. ஆனால் குரான் வசனங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா இல்லையா என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகின்றேன்.  
என் புரிதலில்   சில வசனங்கள்  தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவே உள்ளது. இல்லை இந்த வசனங்களுக்கு வேறு அர்த்தம் என்றால் அந்த அர்த்தம் என்னவென்று நீங்கள் மக்களுக்கு சொல்லவேண்டாமா? ஒவ்வொரு குரானிலும்  விளக்கத்தை தரவேண்டாமா? போதிய திருத்தத்தை செய்யவேண்டாமா ? கூறுங்கள் எனதருமை சகோதரர்களே.
ஒரு திரைப்படத்தினால் பாதிப்பு ஏற்ப்படும் என்பது உண்மையானால்  குரானால் பாதிப்பு ஏற்படுமா இல்லையா? 
குரான் எனபது சாதரான புத்தகம் அல்ல. இதை நீங்கள் இறைவேதமாக நம்புகிறீர்கள். ஒவ்வொரு முறை தொழும்போழுதும் இதிலிருந்து வசனங்கள் படிக்கப்படுகின்றன  என அறிகிறேன்.  ஒவ்வொரு மனிதனும் இதை   இறைவேதமாக ஏற்க்கவேண்டும் என்று உங்களில் பலரும் பிரச்சாரம் கூட செய்கிறீர்கள்.
சமூக நல்லிணக்கத்தை திரைப்படம் கெடுக்கும் என்று தடை கேட்கிறீர்கள். குரான் வசனங்களும் சமூக  நல்லிணக்கத்தை கெடுப்பதாக  உள்ளது எனபதை நீங்கள் உணர்வீர்கள்  என நினைக்கின்றேன்.

இந்த பதிவை படிக்கும்பொழுது நிச்சயம் என் மீது உங்களுக்கு கோபம் வரும். ஆனால் நீங்கள் சிந்தித்து பாருங்கள் நானாக எதையும் கூறவில்லை. குரானில்  இருக்கும் சில வசனங்களைத்தான் எடுத்துக்காட்டியுள்ளேன்.  உங்களுக்கு கோபம் யார் மீது வரவேண்டுமெனில்  இந்த குரான் வசனங்களை தீவிரவாதத்திற்கு பயன்படுத்துபவர்கள் மீது வரவேண்டும்.இதை மேலும் பலர் தவறாக பயன்படுத்தாதவரு நீங்கள் சிந்தித்து செயல்படவேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம் .

போர் பற்றி கூறும் வசனங்களுக்கு என்ன விளக்கங்கள் மார்க்கபந்துகள் கூறுகின்றனர் என அறிவேன்.
போர் என்பது வரலாற்றில் பிற நாட்டின் மீதுதான் எடுக்கப்பட்டுள்ளன். ஆனால் குரான் வசனங்கள் என்ன கூறுகின்றன?
முஸ்லிம் அல்லாதவர்களை அல்லவா வெறுக்க சொல்கிறது, எதிரியாக பார்க்க சொல்கிறது,கொல்ல  சொல்கிறது?
எனவே இது மதத்தை அடிப்படையாக வைத்துத்தான் கூறப்படுகிறதே தவிர நாட்டினை அடிப்படையாக அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள் எனது சகோதரர்களே.(இது என்னுடைய புரிதல் இதற்க்கு சரியான விளக்கத்தை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.)

மற்றும் ஒரு விளக்கம் என்ன கூறலாம் எனில் இவைகள் அந்த காலத்தில் கூறிய வசனங்கள் இந்த காலத்திற்கு பொருந்தாது. அப்படி எனில் ஏன் இந்த வசனங்கள்?  இதை திருத்தலாம் அல்லவா?
குரான் என்பது வாழ்வியல் நூலா வரலாற்று நூலா? 
யூதர்களையும்,கிருத்துவர்களையும்,சிலை வணங்கிகளையும்,இணைவைப்பவர்களையும் எதிரியாக பாருங்கள்    என்ற வசனம் ஒவ்வொரு முறை குரான் படிக்கும் பொழுதும் ஒரு முஸ்லிமை எந்த மனநிலைக்கு உள்ளாக்கும் என்று சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.

உங்களில் சிலர் கேட்கலாம். நான் முஸ்லிம்தான் ஆனால் நான் பிறரை எதிரியாக பார்க்கவில்லையே என்று.
இதற்க்கு காரணம் குரானின் இந்த வசனங்களை நீங்கள் இதுவரை படிக்காமல் இருந்திருக்கலாம். அல்லது இந்த வசனங்களுக்கு சரியான / தவறான   விளக்கங்கள் உங்களுக்கு அளிக்கபபட்டிருக்கலாம் . நமது தமிழ் சமூகத்தில் நிலவும் 
மத சகிப்புத்தன்மை உங்கள் மனதிலும் இருக்கலாம். இது நல்ல விடயமே. ஆனால் எதிர்கலாத்தில் மக்கள் இந்த குரான் வசனங்களை மனதில் கொண்டு பிற மத மக்களை வெறுக்க ஆரமபிக்கலாம்,பிற மத மக்களை கொன்றால்தான் சுவனம் என நம்பி தீவிரவாதத்தில் ஈடுபடலாம் அல்லவா? சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.

இப்படி நடக்க வாய்ப்புண்டா என்று நீங்கள் கேட்கலாம். பல தீவிரவாதிகளின் செயல்கள் இதற்க்கு வாய்ப்பு உண்டு என்றே நம்பசொல்கிறது.

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பேசிக்கொண்டது :
நாம் அல்லாவின் அடிமைகள்,இசுலாமை பரப்புவதற்காக அல்லா நம்மை அனுப்பியுள்ளார். சண்டையில் இறக்கவேண்டும்,இறந்தால் நமக்கு சுவனம். நாம் இறக்கும் விதம் எதிரிகளுக்கு பயத்தை உண்டாக்கவேண்டும் என்று பேசிக்கொண்டுள்ளனர்.
அவர்கள் பேசிக்கொண்டதன் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே:

 My friend, may Allah accept your deed. Balm has been put on the wounds of many people. Do not forget the prayer that we made you learn; wherever you sit recite the prayer three times.

"Tell  my  ‘Salaam’  to  the  rest  of  the  brothers.  Be strong  in your actions; in your actions instill strength.  You have left this world. Paradise is far better than this world. You must fulfil your promises, which are true promises. Pray for us too"


 "God willing, you know, what I mean is at this time the issue is between Islam and heresy. We are the slaves of God whom he has sent for expansion of the true faith. I mean, death as a martyr is a big thing. But the style of martyrdom should be such as to put fright in the
heart of the enemies and that is the style of martyrdom. What I mean is there is nothing to fear, the message of the martyr must be put
forward"

 ''Pray. It is time for prayer and keep your promise to Allah. All right!''

Fight in such a way, they should feel that Allah’s lion is after them.

My brother you have to be strong. Do not be afraid. God willing. If you are hit by a bullet, in that is your success. God is waiting for you.


படித்தீர்களா சகோதரர்களே,
 அல்லா  குரானில் எனக்காக உங்களது உயிர்களை கொடுத்து சண்டையிட்டால் அதில் இறந்தால் உங்களுக்கு சுவனம் என்கிறார். அதைத்தான் இந்த தீவிரவாதிகளும் செய்துள்ளனர்.அப்படித்தான் பேசிக்கொண்டுள்ளனர். எனவே குரான் வசனங்களும் (அதை தவறாக அல்லது புரிந்துகொள்ளுதல்) இதற்க்கு  ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் அல்லாவா? 

இந்த உண்மை உங்களுக்கு கசப்பாகத்தான் இருக்கும். இந்த தீவிரவாதிகளால் உயிரை இழந்தது இந்துக்களும்,யூதர்களும் மட்டுமல்ல இந்தியாவில் இருந்த அப்பாவி முஸ்லிம்களும் தான்.

குர்ஆனில்  இருக்கும் வசனங்களுக்கு ஏற்ப்பத்தான் சிலர் தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றனர் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும் என நினைக்கின்றேன்.

தீவிரவாதத்தால் முஸ்லிம் மக்களும் கொல்லப்படுகின்றனரே என்று நீங்கள் கேட்கலாம்.
உண்மைதான் ஷியா மக்கள் கொல்லப்படுவதற்கு குரானை நான் காரணம் காட்ட மாட்டேன் எனக்கு அதுபற்றி தெரியவில்லை. ஆனால் சூபி மக்கள் கொல்லப்படுவதற்கு சில குரான் வசனங்கள் காரணமாக இருக்கலாம்.
ஏன் எனில் இன்று வாகாபியம்  சூபிக்களின் தர்க்கா வழிபாடும் இணைவைத்தலே என்கிறது.குர்ஆனில்  சில வசனங்கள் இணைவைப்பவர்களை எதிரியாக பார்க்கவும்,கொல்லவும் சொல்கிறது . எனவே சில வசனங்கள் காரணமாக இருக்கலாம்.

குர்ஆனில் பல நல்ல கருத்துக்கள் உள்ளன என்பதை நான் ஏற்கிறேன். அதே நேரத்தில் சில வசனங்களால் மக்கள் மூளைசலவை செய்யப்பட்டு தீவிரவாதிகளாக மாற்றப்படுகிறார்கள் எனில் அந்த வசனத்திற்கு சரியான போதிய விளக்கமோ அல்லது அந்த வசனங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை இடைச்சொருகல் என்று கூறி நீக்குதல் என்பது மக்களை நல்வழிப்படுத்தும் எனபதே என் கருத்து.

இப்பதிவின் நோக்கம் குரானை இழிவுபடுத்தவேண்டும் எனபதல்ல மாறாக குர்ஆனில் உள்ள சில வசனங்கள்  தவறாக புரிந்து கொள்ளும் வகையில்  உள்ளன அதற்க்கு நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியே இந்த பதிவு .

ஒரு திரைப்படம் முஸ்லிம்களை  தீவிரவாதிகளாக காட்டினால் உங்கள் மனம் புண்படுவது போலத்தானே உங்கள் இறைவேதம் யூதர்களையும்,சிலை வணங்கிகளையும்(இந்துக்கள்,கிருத்துவர்கள்), இணை வைப்பவர்களையும் (இந்து,முஸ்லிம் சூபிக்கள்) எதிரிகள்,பகைவர்கள்,சாத்தான்கள் அவர்களை கொல்லுங்கள் என்பதும் அவர்கள் மனதை புண்படுத்தும்?. சிந்தித்து பாருங்கள் எனதருமை சகோதரர்களே. தேவையான திருத்தத்தை,விளக்கத்தை கொண்டுவர முயலுங்கள்.

இந்தப்பதிவு உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும்.இப்பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன். இந்த பதிவிற்கு மறுப்பை பதிவாக தந்தாள் அந்த பதிவை இதே தளத்தில் வெளியிடுகிறேன். என்றும் வாய்மையே வெல்லட்டும்.மனிதமே வெல்லட்டும். எல்லாம்வல்ல இறைவன் நம் அனைவர் மீதும் சாந்தியும்  அமைதியும் உண்மையில் உண்டாக்குவானாக. 


என்றும் அன்புடன் 
இராச.புரட்சிமணி 
Related Posts Plugin for WordPress, Blogger...