வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

மகாபாரதத்தில் அணுகுண்டு?


மகாபாரதத்தில் அணுகுண்டு பயன் படுத்தப்பட்டிருக்கலாம்  என்று சிலர் கூறுகிறார்கள். போர்க்காட்சிகளை விவரிக்கும் சில பாடல்கள் அணுகுண்டு வெடிப்பால் உண்டாகும் விளைவை விவரிப்பது போன்று உள்ளது என்கிறார்கள் அவர்கள்.

இதுபற்றி ஆங்கிலத்தில் படிக்க 

இதுபற்றி சில வரிகள்  கூறும் தமிழ்  கட்டுரை  படிக்க 

இரண்டையும் படித்து பார்த்து நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க.

மாகாபாரதம் உண்மையா பொய்யா  என்று இன்னும் தெரியவில்லை. மகாபாரதம் உண்மை நிகழ்வு என்று சிலபல இந்துக்களும், இல்லை அது ஒரு கற்பனைக்கதை என்று சிலபல பகுத்தறிவாள   இந்துக்களும் கூறுகின்றனர். 


காலம் செல்ல செல்ல மாகபாரதம் நிகழ்வுகளுடன் தொடர்புடைய சான்றுகள் கிடைத்த வண்ணம் உள்ளன.  இப்படி ஒரு நிகழ்வு நடந்து இருக்கலாம். ஆனால் என்ன... கதை வடிவில் எழுதும் பொழுது கொஞ்சம் மசாலா சேர்த்து எழுதி இருக்கலாம். 

இந்திய    பெருமை   பற்றி   படிக்கும்   பொழுது தமிழனை பற்றி படிக்காமல் இருக்க முடியுமா  தொல் தமிழனை பற்றி  ஒரு கட்டுரை படிக்க   


''proud of our Sanskrit-speaking ancestors of the Vedas; proud of our Tamil-speaking ancestors whose civilization is the oldest yet known''
-swami vivekananda 

சமஸ்கிருதம்    தமிழிலிருந்து   தமிழர்களால் வழிபாட்டிற்கு  உருவாக்கப்பட்டது  (தோன்றவில்லை )  என்று சிலர் கூறுவதுண்டு (சமஸ்கிருதத்தை ஏற்க்க செய்யும் சதியா இது? ) உண்மையை  ஆராய்ந்தால்  தான் தெரியும். 

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

அஜ்மால் கசாப் தூக்கு தண்டனையை ஏன் ரத்து செய்ய வேண்டும்?



பல குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் பொழுது மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய குரல் கொடுக்கும் பொழுது  ஏன் அஜ்மல் கசாப் தூக்கு  தண்டனையை  ரத்து  செய்யக்கூடாது? நாமெல்லாம் மனிதர்கள் தானே? காட்டு மிராண்டிகள் இல்லையே? 

உணர்ச்சிவசப்படாதீங்க   தோழர்களே, மேற்கூறியது நான் கூறியது அல்ல. இந்த தொனியில் ஒரு மனிதாபமுல்லவர்  பதிவிட்டுள்ளார். 

தூக்கு தண்டனை குற்றத்தை பொறுத்து அமையவேண்டும் என்ற கொள்கை கொண்டிருந்தவன்தான் நான். பேரறிவாளன் உட்பட மூன்று தமிழர்கள் தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் எழுந்த பொழுது.
மனதளவில் மிகவும் பாதிப்படைந்தேன். சரியான முடிவிற்கு என்னால் வரவில்லை.
அவர்கள் குற்றம் புரிந்திருக்கவில்லை குற்றத்திற்கு தன்னை அறியாமல் உடந்தையாக இருந்தார்கள் என்று சிலர் வாதிடும்பொழுதுதான்  இந்த உண்மையை நீதிமன்றத்தில்  உறுதிசெய்து அவர்களது தூக்கு தண்டனையை யாராவது தடுக்க வேண்டும் என்று  மனதளவில் ஒரு முடிவிற்கு வந்தேன். 

மீண்டும் சொல்கிறேன் அவர்கள் தங்களை அறியாமல் கொலைக்கு உடந்தையாக இருந்திருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக தூக்கு தண்டனை வழங்கக்கூடாது. 

அஜ்மல் கசாப் விடயம் முற்றிலும் வேறானது.  அவன் தான் செய்வது என்ன என்பதை தெரிந்தே பல இந்தியர்களை கொன்று குவித்தான். அவன் கொலை செய்தான் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் உண்டு. அதை அவனும் ஒப்புக்கொண்டான். அவன் இந்தியாவின் மீது போர் புரிந்ததாகத்தான் தீர்ப்பு கூறுகிறது. மேலும் இது அவர்களைப்பொறுத்த வரை புனிதப்போர். 

அவர்கள் வரும்பொழுதே தெரியும் அவர்கள் இங்கே இறப்பார்கள் என்று. அவர்கள் தற்கொலைப் படைகள்தான். இந்தப் புனித்தப்போரில் இறந்தால் சுவனத்தில் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றே அவர்கள் வந்திருப்பார்கள். அவன் புனிதப்போருக்கு செல்வதாக தன் தாயிடம் கூறி ஆசி கேட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

எனவே அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைப்பது எனபது அவனது உல்லாச வாழ்க்கைக்கு இந்தியா தடையாக இருக்கும் என்பதாகவே  நான் கருதுகிறேன். 

சட்டம் அனைவருக்கும் சமம் என்றாலும் நடைமுறையில் உண்மையில் அப்படி இல்லை.

ஜாதி ரீதியாக, மத ரீதியாக சில சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
மேலும் இந்தியருக்கு ஒரு சட்டம் வெளி நாட்டினருக்கு  ஒரு சட்டம் என்றே நமது சட்டம் உள்ளது.
பேரறிவாளன் உட்பட அந்த மூன்று பேர் இந்தியர்கள் தானே அப்படி இருக்க இவர்களை  அஜ்மல் கசாபினுடன்  ஒப்பிடுதல் முற்றிலும் தவறானது. ( சரி இதே தவறை ஒரு இந்தியன் செய்திருந்தால்? குற்றைத்தினை பொறுத்து அவனுக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்படவேண்டும். அது தூக்கா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். )

மேலும் நான் ஏற்க்கனவே குறிப்பிட்டதுபோல் குற்றத்திற்கு தன்னையறியாமல்  உடந்தையாய் இருந்ததற்கும் களத்தில் இறங்கி குற்றம் புரிந்த வெளி நாட்டவனுக்கும்  வித்தியாசம்  உண்டு.

தீர்ப்பு என்ன கூறுகிறது. கசாப் போர் குற்றம் புரிந்ததாக. மனிதாபிமானம் பற்றி பேசுபவர்களிடம் நான் கேட்கிறேன் கசாபிர்க்கு  தூக்கு என்பது காட்டு மிராண்டித்தனம் என்றால் நமது நாட்டின் எல்லையைக்கடந்து நம்மை தாக்க வரும் எதிரிகளை கொல்லாமல் விட்டுவிடலாமா? அல்லது நமது வீரர்களை பலி கொடுத்தாவது அவர்களை பிடித்து ஆயுள் தண்டை வழங்க வேண்டுமா? கொலை செய்ய வரும் எதிரிகளிடம் மனிதாபிமானம் பற்றி பேசி புரிய வைக்க முடியுமா?

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். கொலை என்பது வேறு போர் என்பது வேறு. 
இது நமது தேசத்தின் மீது நிகழ்த்தப்பட்ட போர்.  கொலைக்கும் போருக்குமான வித்தியாசத்தை புரிந்து கொண்டால் யாரும் கசாபிர்க்கு  வக்காலத்து வாங்க மாட்டார்கள் என நினைக்கின்றேன்.உங்கள் மனிதாபிமானத்தை நான் மெச்சுகிறேன்.அதே நேரத்தில் நீங்கள் இதையும் கருத்தில் கொள்ளுங்கள்.
மேலும் ஏதேனும் கருத்து இருந்தால் தெரியப்படுத்துங்கள் தெரிந்துகொள்வோம்.


ஜாதி, மதம், இனம், மொழி, நாடு இவற்றை கடந்து மனிதம் (முடிந்தால் உயிர்கள்)  என்ற ஒரு புள்ளியில் நாம் அனைவரும் இணையவேண்டும் என்பதே எனது (மனித நேயம் விரும்பும் அனைவரது) ஆசை. அனைத்து நாட்டையும் ஒன்றாக இணைக்கும் பொழுது போர் என்பதே இருக்காது. (குறைந்த பட்சம் விரோதம் இல்லாமல் இருக்கும் பொழுது)அப்பொழுது போர் பொருட்டு எந்த உயிர்களும் கொல்லப்படாது. அதுவரை  போர் நடக்காமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு நாட்டின் கடமை.

மனிதேயம் ஓங்கி ஒலிக்கட்டும்.....மனித நேயம் காப்பதற்கு மட்டும்.... போரை ஊக்குவிப்பதற்கு அல்ல.

எல்லா உயிர்களுக்கும் மனம் இறங்குவதுபோல் எனது(பலரது) மனம் க்சாபிர்க்காகவும் மனம் இறங்குகிறது. ஆயிரம் தான் இருந்தாலும் அவனும் ஒரு மனிதன், ஒரு உயிர், அவனுக்கும் குடும்பம் உண்டு.அவன் இறப்பும் பலருக்கு துன்பம் தரும் என்பதை மறுப்பதற்கில்லை.  புனிதப்போரால் பல கோடி இந்தியர்கள் கொன்று  குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை தடுப்பது யார் கடமை. சிந்தித்து செயல் படுத்த வேண்டியவர்கள் சிந்திப்பார்களா...புனிதப்போரை தடை செய்வார்களா? 

என்றும் அன்புடனும் உண்மையுடனும்
இராச.புரட்சிமணி 

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

பதிவர் திருவிழாவில் இப்படி ஒரு பேச்சு -வாசிப்பு சரியா?


நேற்று நடந்து முடிந்த பதிவர் திருவிழா மாபெரும் வெற்றி திருவிழாவாக மாறியுள்ளது.இருப்பினும்  ஒருவரின் வாசிப்புதான் சரியா தவறா என்று எனக்கு சரியாக தெரியவில்லை. 

இது கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும் பெண்பால் பதிவர்கள், மென்மையான ஆண்பால் பதிவர்கள்  தவிர்க்க விரும்பினால் தவிர்த்து விடலாம்.

ஒருவர் கவிதை வாசிக்கின்றேன்  என்று இப்படி ஒரு கேவலமான கவிதையை வாசித்து  அதுவும் பல பெண்கள் கூடி இருந்த  இடத்தில் இதை வாசித்தது சரியா எனபதை நீங்களே சொல்லுங்கள்.

இதோ அவரின் கவிதை 

இயற்கையும் பெண்ணும் ஒன்றுதான்
இருவர்க்கும் எல்லாமே அழகு !

மேகம் மூடிய மலை  இயற்கைக்கழகு  
ஆடை மூடி மேனி பெண்ணுக்கழகு! 

இயற்கையையும்  பெண்ணையும் சுரண்டக்கூடாது 
அவ்வாறு செயின் அழிவு மாக்களுக்கும் மக்களுக்குமே!

இயற்கை  சீற்றம் கொண்டால் பேரழிவு 
பெண் சினம் கொண்டால் கலாச்சார சீரழிவு!

இயற்கையையும் பெண்ணையும்  பேணி காத்திடுவோம் 
இன்பமான வாழ்வை அடைந்திடுவோம்!

---------------------
இதைவிட ஆன்மீக கவிதைனு பின்னாடி சொல்றாரு பாருங்க....

பெட்டிக்காகவும்
புட்டிக்காகவும்
குட்டிக்காகவும்
 உழைக்கும் மனிதா
நீ
உன் தலையை 
அமுதச்  சட்டியாக்க உழைப்பது எப்போது?
----------
மண்ணோடு விளையாடுவதும்
பெண்ணோடு விளையாடுவதும்
விண்ணோடு விளையாடுவதும் 
விளையாட்டல்ல
உன்னோடு விளையாடுவதே  விளையாட்டு.

(மண்ணிலே,பெண்ணிலே, விண்ணிலே, உன்னிலே என்பதே சரி என நினைக்கின்றேன்)
------------------
பெண்ணோடு விளையாடினால் 
    சக்தி விரையமாகும் 
உன்னோடு விளையாடினால்
   சக்தி அமுதமாகும் 
எனவே தியானம் செய்வீர் 
பேரின்ப வாழ்வை அடைந்திடுவீர்.  (இப்படி  இருக்கணும் ஆனா படிச்சது 'திறம்பட வாழ்வீர்')
--------------
இது நல்ல கவிதையா? கெட்ட கவிதையா? அல்லது கவிதையே இல்லையா?
ஒரு பொது இடத்தில் பல பெண்கள் இருந்த இடத்தில் இதை வாசித்தது சரியா தவறா எனபதை நீங்களே சொல்லுங்கள். 

அவரிடம் இது பற்றி கேட்ட பொழுது 
"பெண்ணும், ஆன்மீகமும் மனித வாழ்க்கைக்கு  மிக முக்கியமானது. பலரும் பெண்ணில் திளைப்பதொடு விட்டுவிடுகிறார்கள். அவர்கள் தியானம் செய்ய  வேண்டும் என்று அறிவுறுத்து வதற்காகவே இவ்வாறு வாசித்தேன். இது சித்தர்கள் கவிதையின் தாக்கத்தால் எழுந்தது. அவர்களில் சிலர் பெண்கள் மேல் அதாவது சிற்றன்பத்தில்  வெறுப்பு வருமாறு எழுதி இருக்கிறார்கள்.  அவர்களின் நோக்கம் சிற்றின்பத்தை வெறுப்பது அல்ல மேலாக அதில் சிக்கிகொள்ளாமல் பேரின்பத்தை நோக்கி மனித வாழ்க்கை அமைய வேண்டும் என்பதுதான். அதுபோல் தான் என்னுடைய இந்த முதல் கவிதை வாசிப்பும். இந்த கவிதை தவறானது, இது வாசிக்கப்பட்ட இடம் தவறானது என்று எண்ணினால் அதற்காக என் மன வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன். மாறாக இது சரி என்றால் எல்லாப்  புகழும் சித்தர்களுக்கே " என்று கூறிவிட்டார்.

இப்பொழுது சொல்லுங்கள் இவர் செய்தது சரியா? தவறா? இதை முடிவு செய்து விட்டு மேற்கொண்டு படியுங்கள். 
--------------------------

சரி யார் அவர் என்று தெரிந்து கொள்ளவேண்டுமா?
அது வேறு யாரும் அல்ல 

நான் தான்
 :) :) ஹா ஹா ஹி ஹி 

பதிவர் திருவிழாவில் பல பேரை இத வாசிச்சு கொன்னாச்சு வராதவங்களும் அந்த துன்பத்த அனுபவிக்கனும் இல்ல அதுக்குத்தான் இந்த பதிவு :)

மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன் ....இக்கவிதை தவறாக இருப்பின் மன்னிக்கவும் :)
----------------
சரி  பதிவர் திருவிழா எப்படி இருந்தது?
அருமையோ அருமை.
மூத்த பதிவர்கள் உரை 
பதிவர்கள் சுய அறிமுகம்  (குறிப்புரை கேபிள் சங்கர், பட்டிக்காட்டான் ஜெய், அட்ராசக்க சிபி செந்தில்குமார், பிருந்தானமும் நொந்தகுமாரனும் ஜாக்கிசேகர்)
சாப்பாடு 
மூத்த பதிவர்களை இளைய பதிவர்களை கொண்டு மரியாதை செய்தல் 
தென்றல் சசிகலா அவர்களின் நூல் வெளியீடு  விழா
கவியரங்கம்
சிறப்பு விருந்தினர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் உரை
கவிஞர் சுரேகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது என
விழா சீரும் சிறப்புமாக இருந்தது.

பெயர் மட்டுமே, முகம் மட்டுமே  தெரிந்த மற்றும் பெயர் முகம் தெரியாத  பலரை பார்த்து பேச நேர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.. இருக்கின்றது. 

 இரவு பகல் பாரமால் உழைத்த விழா குழுவினருக்கும் (புலவர் செ.இராமனுஜம், கவிஞர் மதுமதி,பட்டிக்காட்டான் ஜெய், வீடு திரும்பல் மோகன் குமார், மெட்ராஸ் பவன் சிவா, தோத்தவண்டா ஆரூர் மூனா செந்தில்,  அஞ்சா சிங்கம் செல்வின், பிலாசபி பிரபாகரன்,டீக்கடை சிராஜுதீன் மற்றும் எனக்கு பெயர் தெரியாத பலருக்கும்(பலரின்  பெயர்  எழுத  வில்லையே  என்று  யாரும்  தவறாக  எண்ணவேண்டாம்  எனக்கு  ஞாபகம்  இருந்த  அளவிற்கு   மட்டும்  எழுதி இருக்கிறேன் பதிவர் சந்திப்பிற்கு வருகை புரிந்து திருவிழாவை வெற்றியடைச்செய்த பதிவர்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் :)  தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்
இராச.புரட்சிமணி 



வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

மது ஒழிப்பு பற்றி பேசும் சகோதரர்கள் இதையும் சிந்திப்பார்களா ?


தங்களுடைய மார்க்கத்தை பிரச்சாரம் செய்துவந்த சகோதரர்கள்  இப்பொழுது மது ஒழிப்பை கையில் எடுத்திருக்கிறார்கள்.  ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையோ இது?  

ஒரு நண்பர் ஒரு பதிவில் அழகாக பின்னூட்டமிட்டிருந்தார் திருவள்ளுவர் தெளிவுரை கொடுத்து  மது வேண்டாம் என்பவர்கள் வள்ளுவர் கூறிய புலால் உண்ணாமையை ஏன் கடைபிடிப்பதில்லை  என்று.
அவர்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று. சிந்திப்பார்களா? 

வள்ளுவர் பொய் கூட பேசக்கூடாது என்று சொன்னார். அதை கேட்கிறார்களா?

மதம் வரும் பொழுது அங்கே மனிதம் அழிகிறது. பல மனிதர்களை கொன்றுதான் மதத்தையே பரப்புகிறார்கள் என்பது வேறு விடயம்.

இசுலாமிய மன்னர்களில் ரொம்ப நல்லவர்னு சொல்லக்கூடிய அக்பர் கூட பத்தாயிரம் இந்தியர்களை கொன்றதாக வரலாறு கூறுகிறது. அப்ப மத்தவங்க எத்தனை கோடி இந்தியர்களை கொன்று குவித்திருப்பார்கள் என்பதை நான் கூறத்தேவை இல்லை.  அந்த கொடூராத்தை மீண்டும் படிக்க, எழுத நான் அவ்வளவு கொடூரமானவன்  அல்ல. 

இசுலாம் மட்டும் அல்ல இசுலாமிற்கும் கிருத்துவர்களுக்கும் நடந்த சண்டைகள், பாகிஸ்தானில் இந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம் மற்றும் மதமாற்றம், கோத்ரா எரிப்பு, குஜராத் படுகொலை  (இப்படி  சொல்ல ஆயிரம் உதாரணங்கள் உண்டு)என மதமே மனிதத்தையும் மனிதர்களையும்  அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

மதங்களினால் சில நன்மைகள் உண்டு என்றாலும் அதனால் ஏற்ப்படும் இழப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் இப்படிப்பட்ட மதங்கள் தேவையா என்று சிந்தனை எழுவதை தவிர்க்க இயலவில்லை.


இசுலாமில் மதுவிற்கு தடை என்கிறார்கள். ஏன் எதற்கு அவ்வாறு கூறப்பட்டது  என்று ஆராய்ந்தால் தான் அதற்க்கான உண்மையான காரணம் தெரியவரும்.

வள்ளுவர் மதுவின் தீமையை வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி கூறி இருக்கிறார்.
முகமது நபி அவர்கள் மது அருந்தினால் பாவம் வந்து சேரும் என்று பூச்சாண்டி  காட்டுகிறார்.
உயிர்களை கொல்வதால், தின்பதால்  பாவம் வராதா? 
பூச்சாண்டி எப்பொழுது காட்டப்படும் தெரியுமா மக்கள் அறியாமையில் இருக்கும்பொழுது, சில விடயங்கள் சொன்னால் புரியாது எனும்பொழுது.

திருடினா சாமி கண்ண குத்திடும், நீ சாப்பிடலேன்னா பூச்சாண்டிக்கிட்ட புடிச்சி கொடுத்திடுவேன் என்று அறியாத குழந்தைகளிடம் கூறுவார்கள். அதுபோல் தான் அன்று அறியாமையில் இருந்த அரபியர்களுக்கு அல்லா  கூற  முகமது நபியால் அருளப்பட்டது தான் குரான் என்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் . அதனால் தான் அதில் நிறைய பூச்சாண்டி விடையங்கள் இருக்கும். 

கவனிக்க: வள்ளுவர் அனைத்து தீமைகளையும் வாழ்வியலோடு தொடர்பு படுத்தி இது செய்தால் இது விளையும் என்று கூறுவார். ஏன் அப்படி கூறினார்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் சிறப்பான சிந்திக்கும் ஆற்றலை பெற்றிருந்தார்கள் அவர்களிடம் எல்லாவற்றிற்கும் பூச்சாண்டி  காட்ட முடியாது என்பதால் தானே?.

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு அறியாமையில் இருந்த அரேபியர்களிடம் காட்டிய பூச்சாண்டியை  இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நம்ப வேண்டும் என்பதை அவர் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதுவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறப்பான சிந்திக்கும்  திறனை கொண்டிருந்த தமிழர்களின் சந்ததிகள்  சிந்திக்க வேண்டாமா?  

இசுலாமில் ஏன் மது மறுக்கப்படுகிறது?

முதலில் குடித்து விட்டு தொழுகைக்கு வரக்கூடாது என்றுதான் நபிகள் கூறுவார்கள். பிறகுதான் இவனுங்க திருந்தான் மாட்டானுங்க போல என்று மதுவிற்கு தடை விதிப்பார்.(அல்லா கூறியதாக ).   

சொர்க்கத்தில் 'wine'  வழங்கப்படும்  என்றுதான் இசுலாம் சொல்கிறது. அதில் ஆல்கஹால் அளவு பற்றி எல்லாம்  சொல்லவில்லை. ஏன் சொர்க்கத்தில்  மட்டும் 'wine'   வழங்கப்படும் என்று நபிகள் கூறினார் என்பதை அவரின் வரலாற்றோடு சிந்தித்து பார்த்தால் தான்  உண்மை புரியும். 

௦௦௦௦ஹலால் பீர் குடிக்கலாமாம்... யார் அந்த ஆல்கஹால் அளவை நிர்ணயித்தது அல்லாவா...? (இந்த கேள்வியும் ஒரு நண்பர் கேட்டதுதான்)

மதுவினால் தீமையே அதிகம் அதை மறுப்பதற்கில்லை அதே நேரத்தில் மனிதத்தை ஒழிக்கும் மதத்தை /மார்க்கத்தை (இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்)  பிரச்சாரம் செய்துகொண்டு மது ஒழிப்பு பற்றி பேசுவதுதான் வேதனை தருகிறது.


நபி அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும்.(அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: முஸ்லிம்)

இந்த கூற்றுப்படி பார்த்தால் மதமும்/மார்க்கமும் ஹராமாகும். இதை கடைபிடிப்பார்களா? 
(மதுவை விட மதமே அதிக போதை என்று ஒரு நண்பர் அருமையான பதிவை தந்திருந்தார்.)

இப்பதிவில் தவறான, கடுமையான கருத்துக்கள்  இருந்தால் தாராளமாக் தெரியப்படுத்தவும் அது நீக்கப்படும்.(வெளியே செல்வதால் உடனடியாக சாத்தியம் இல்லை)  இது ஒரு விழிப்புணர்வு பதிவேயன்றி வெறுப்புணர்வு பதிவல்ல. 

இசுலாமிய சகோதரர்களுக்கு சற்றே கடந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள் :). (மதமே வேண்டாம்னு சொல்லல , பரப்ப வேண்டாம்னு தான் சொல்றேன். (ஐ நா சொல்லுது ஆட்டுக்குட்டி சொல்லுதுன்னு சொல்லக்கூடாது) மதத்தை தாண்டி மனிதத்தை தழுவ வேண்டும் என்று தான் சொல்கிறேன் :) . மதம் மனிதத்திற்கு தடையாக இருக்கும்பொழுது அது தேவையா எனபதையும் சிந்தித்து அது மனிதத்தை பாதிக்காத அளவிற்கு  சீர்திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மனித இனம் சீரழிவதை யாராலும் தடுக்க முடியாது. அதற்கு நீங்கள் துணைபோக வேண்டுமா எனபதை சிந்தியுங்கள்.

தெரியதவர்களுக்காக:
என்னடா இப்படி ஒரு பதிவு என்று சிலர் நினைக்கலாம். சமீபத்தில் ஒரு இசுலாமிய ஐயா  இட்ட பதிவு, நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பை கெடுக்க சதி என்பது சிலரின் குற்றச்சாட்டு. இல்லை அது நல்ல நோக்கத்திற்காக என்பது பல இசுலாமிய சகோதரர்களின் வாதம். அதைத்தொடர்ந்து பல பதிவுகள் வந்தது அதுபோல் இதுவும் ஒரு பதிவு அவ்வளவே. 

மிக முக்கியம் 
வரும் ஞாயிறு அன்று  சென்னையில் பதிவர் திருவிழா நடக்கின்றது. அனைவரும் பங்கேற்கலாம். வர விருப்பமுள்ளவர்கள் பின்வரும் விழா குழுவினரை அழைத்து உங்களது வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள். 

மதுமதி(தூரிகையின் தூறல்)-98941 24021
      பால கணேஷ்(மின்னல் வரிகள்)-73058 36166
      ஜெயக்குமார்(பட்டிக்காட்டான்)-9094969686
      சிவக்குமார்(மெட்ராஸ்பவன்)9841611301

 பெண் பதிவர்களின் தொடர்புக்கு

      சசிகலா(தென்றல்)-99410 61575

 மின்னஞ்சல்

kavimadhumathi@gmail.com
pattikkattaan@gmail.com


இது  நாடு, மதம், ஜாதி, இனம்  கடந்த திருவிழா அனைவரும் பங்கேற்ற்று பயனடையுங்கள்.

வெள்ளி, 18 மே, 2012

இறைவன்களும் இறைத்தூதர்களும் இதுவரை சாதித்தது என்ன?



பல இறை அவதாரங்கள் நிகழ்ந்துள்ளது என்றும் பல இறைதூதர்களை இறைவன் அனுப்பியுள்ளான் என்றும் சில பல மதங்கள் கூறுகின்றன. இந்தஇறைவன்களும் இறைத்தூதர்களும் சாதித்தது என்ன
என்று சற்று திறந்த மனதுடன் சிந்தித்து பார்த்தால் இவர்கள் இறைவன்களும்  அல்ல இறைத்தூதர்களும் அல்ல என்ற முடிவிற்கு நம்மால் வரமுடிகிறது. அல்லது அவர்கள் போல நம்மாலும் இறைவனாகவும், இறைத்தூதர்களாகவும் வரமுடியும் என்ற அபரிமிதமான நம்பிக்கையை அளிக்கின்றது.

முதலில் இறைவன்கள்,இறைத்தூதர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்.
௧.இறைவனின் அவதாரங்கள் என்று கூறப்படுபவர்கள் சிலபல அரக்கர்களை கொன்றதாக
நாமறிவோம். அரக்கர்களை கொன்று மக்களுக்கு நன்மை செய்தனர்.
இன்று இந்த வேலையைத்தானே நமது காவல் துறையும் , நீதித்துறையும்  செய்கிறது.

௨ .நல்ல நீதிகளை, போதனைகளை கூறினர்.
 நம்மால் இவற்றை கூற முடியாதா? வள்ளுவர் கூறவில்லையா, ஒளவையார் கூறவில்லையா?

௩  . சமூகத்தில் மாற்றத்தை ஏற்ப்படுத்தினார்.
நல்ல சமூக சீர்திருத்தவாதிகள் சமூகத்தில் மாற்றங்களை  ஏற்ப்படுத்தவில்லையா?

உலகில் அடிமை முறையை எந்த இறைவனாவது இறைத்தூதராவது  எதிர்த்தார்களா?  ஒழித்தார்களா? . அதை முற்றிலும் ஒழித்தது யார் மனிதர்கள்  தானே?

உலக நாடுகள் போர் புரிய கூடாது என்று எந்த இறைவனாவது  இறைத்தூதராவது   எதிர்த்தார்களா?
மனிதர்கள் தானே அந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் சதி, பலதார மணம், குழந்தைத்திருமணம், தீண்டாமை,  இவற்றை எதிர்த்தது ஒழித்தது யார்? மனிதர்களே.
.
சமூக மாற்றத்தையும் நல்ல போதனையும் தந்தவர்கள் இறைதூதர்கள் என்றால் நல்ல காரியங்கள் பல செய்த இவர்களை என்னவென்று கூறுவது. இவர்களும்   இறைவன்கள்தானே இறைத்தூதர்கள் தானே.

பல உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்தை கண்டுபிடித்தது இறைவனோ இறைதூதர்களோ அல்ல மனிதர்களே.

நான் கூறுவது என்னவெனில் இதுவரை இது இறைவன் செய்தது, இது இறைதூதன் செய்தது என்று எவையெல்லாம் கூறப்படுகிறதோ,அது உண்மையாக செய்யப்பட்டிருப்பின் அவற்றை நம்மாலும் செய்ய முடியும். அதுமட்டுமல்ல இறைவன்களும் இறைதூதர்களும் செய்யாததையும் நம்மால் செய்யமுடியும்.

இறைவனும் இறைதூதர்களும் உண்மை என்று வாதிடுபவர்கள்
முதல் உலகப்போரின் போதோ , இரண்டாம் உலகப்போரின் போதோ, இஸ்ரேல் பாலஸ்தீன சண்டையின் போதோ, யூதர்கள் அழிக்கப்பட்ட போதோ, இலங்கையில் தமிழர்கள் அழிக்கபட்டபோதோ ஏன் இறைவன் வரவில்லை? ஏன் இறைத்தூதர்களை அனுப்பவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்வார்களா?

இதைவிட என்ன பெரிய கொடுமை நடக்கவேண்டும் அவன் வருவதற்கு?. இதுவரை அவன் என்ன
சாதித்து விட்டான் இனி இறைதூதர்களை அனுப்பக்கூடாது என்று முடிவெடுப்பதற்கு?

இன்றும் பட்டினியால் பலர் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள், சிசுக்கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது, நோயால் பலர் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள்,  நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.  
இறைவன் இறைவன் என்று சொல்லி அவன்பெயராலும் எத்தனை கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதை சிந்தித்து பார்க்க வேண்டாமா?

சற்று சிந்தித்து பாருங்கள் நான் சொல்ல வரும் உண்மை உங்களுக்கு புலப்படும்.
(உங்களில் பலருக்கு இந்த தெளிவு ஏற்க்கனவே இருக்கும் என்பது வேறு விடயம் :)  )

இவற்றை பலரும் ஒப்புக்கொண்டாலும் இறைவன்கள், இறைதூதர்கள் என்று
கூறப்படுபவர்கள் செய்த அற்புதங்களை மனிதனால் செய்ய முடியுமா என்ற எண்ணம் சிலபலருக்கும் வரலாம். சில சிந்திக்க  தெரிந்த மனிதர்கள் கூட இது கட்டுக்கதை தவறு என்று எண்ணலாம்.(அவற்றில் பல கதைகளும் கலந்து மனிதனுக்கு தீமைகள் விளைந்ததுதான் காரணமோ? )  அற்புதங்களை பற்றி அறிய பகுத்தறிவு போதாது. அதற்கு தேவை அகத்தறிவு.

ஆம் அகத்தறிவு உடையவனே தன்னை உணர்ந்தவன், இறைவனை உணர்ந்தவன், பிரபஞ்சத்தை உணர்ந்தவன்.இவனால் பல ஆன்மீக அற்புதங்களை நிகழ்த்த முடியும். யோகத்தினால் பெரும் அறிவைத்தான் நான் அகத்தறிவு என்கிறேன்.
(ஆன்மீக பாதையில் செல்லும் அனைவரும் மக்களுக்கு நன்மை தான் செய்வார்கள் என்பது ஒரு தவறான கருத்து. அரை குறையாக அறிந்துகொண்டு, புரிந்து கொண்டு  ஆன்மீக பாதையிலிருந்து விலகியவர்களால் வரும் பிரைச்சனை மிகவும் அதிகம்) .

அற்புதத்தை பொறுத்தவரை எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை. அவர்கள் செல்லும் யோக பாதையை பொறுத்து சக்திகள் வேறுபாடும்.(இதுவும் ஒரு குறிப்பிட்ட நிலை வரையே என நினைக்கின்றேன் அதற்கு பிறகு ஒருவனால் எல்லாம் செய்ய முடியும்.  அதே நேரத்தில் அவன் எல்லாமாகவும் மாறிவிடுவான்).

இது உண்மை என்று உணர ஒரு வினாடிதான் தேவை. ஆனால் அந்த ஒரு வினாடி அனைவருக்கும் கிடைப்பதில்லை அல்லது பலர் அந்த உண்மையை உணர எந்த முயற்சியையும் எடுப்பதில்லை.

புறத்தறிவு (அறிவியல்) மூலமும் பல விடயங்களை நம்மால் சாதிக்க முடியும்.  சாதிக்கிறோம். சாதிப்போம். ஆனால் புறத்தறிவை விட அகத்தறிவே மேலானது, சுலபமாக டையக்கூடியது. (தக்க வழிகாட்டியுடன். சரியான வழிகாட்டி இல்லாததால் இது இன்று பொய் என்ற அளவில் உள்ளது )

பிரபஞ்சத்தில் என்னென்ன உள்ளதோ அது நம்மிலும் உள்ளது. நம்மில் என்னென்ன உள்ளதோ அது பிரபஞ்சத்திலும் உள்ளது.இதைத்தான் அன்று அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர்.  உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களோடும், உயிர்களோடும் அனைத்து
உயிர்களுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. இதை பயன்படுத்திதான் உண்மையான
ஆன்மீகவாதிகள், சித்தர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர்.  இதை நாளை அறியவியல் நன்று விளக்கும்.

ஆம் சொந்தங்களே நம்மாலும் இறைவனாகவும்,  இறைதூதர்களாகவும் மாறமுடியும். அவர்கள் புரிந்த அற்புதங்களை நல்ல செயல்களை நாமும்   புரிய முடியும். அவர்கள் செய்யாத நல்ல விடயங்களையும் செய்ய வேண்டிய கடமை நமக்கு உண்டு.


குறிப்பு: மனிதர்களும் இறைவனாகவும் இறைதூதனாகவும் மாற முடியும் என்பது தான் என் நிலைப்பாடு. மற்றபடி இறைவன் அவதாரம் எடுத்தான், இறைதூதனை அனுப்பினான்,  இனி அனுப்ப மாட்டான்,கடைசியாக இறைவன் அவதரிப்பான் எனபதில் எனக்கு நம்பிக்கை
இல்லை. ஆன்மீகத்தின் படி பார்த்தாலும் இதுவரை பலர் இறைவனை உணர்ந்தார்கள் இனியும் பலர் இறைவனை உணர்வார்கள். (அதாவது இறைவன் என்றால் என்ன? அப்படி ஒன்னு இருக்கிறதா என்ற உண்மையை).
ஏற்கனவே இறைவன் இறைதூதன் என்று கூறப்படுவபவர்களும் ஓரளவிற்காவது இறைவனை உணர்ந்திருப்பார்கள் அல்லது அந்த பாதையில் ஓரளவிற்கு    பயணம் செய்திருப்பார்கள் எனபதை மறுப்பதற்கில்லை.  

தனக்கு மிஞ்சிய சக்தியை இறைவன் என்று வணங்குவதில் எந்த தவறும் இல்லை. மாறாக இதில் நன்மைகளே உண்டு. பிறருக்கு பிரச்சனை வராமல் இந்த வழிபாடு இருக்க வேண்டும்.   ஆனால் இவனே உண்மையான  இறைவன், இதுவே உண்மையான மதம், மார்க்கம்,  என்ற வார்த்தைகள் தான் உண்மையில் உண்மையற்றது. இறைவனுக்காக சண்டையிடுவதை
விட மிகப்பெரிய மடமை ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.  எல்லா
உயிர்களையும் தம்முயிர் போல் எண்ணி வாழாவிட்டாலும், பிற உயிர்களுக்கு முடிந்த வரை துன்பம் விளைவிக்காமல், உண்மையுடனும் , நேர்மையுடனும்   வாழவதே இறைவனுக்கு செய்யும் உண்மையான வழிபாடாகும்.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு வலைப்பூவிற்கு விடுமுறை. வந்தவுடன் இறைவனை பற்றிய, இயற்கையை பற்றிய உண்மையை தொடர்ந்து ஆய்வோம்.

என்னுடைய கருத்துக்கள் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக  நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். எதிர்காலத்திலும் அனைவரின் மனம் புண்படாத கருத்துக்களையே எழுதுவேன். இப்பதிவில் ஏதேனும் குறைகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள்.

 மதத்தை ஒதுக்கிவிட்டு பார்த்தாலும் ஒதுக்காமல் பார்த்தாலும் நமது மூலம்
ஒன்றே. நாம் மனிதர்கள் மனதில் அன்பையும், நல்ல சிந்தனையையும்  மட்டும் வளர்ப்போம்.

என்பதிவை படித்த, படிக்கும், ஆதரவு அளித்த, அளிக்கும் சொந்தங்கள்  அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் :)


வியாழன், 26 ஏப்ரல், 2012

இசுலாமிய பெண்மணியின் மிரட்டல்களுக்கு பதில் சொல்வோமா?



சமீபத்தில் ஒரு இசுலாமிய பெண்மணி சில மிரட்டல்களை விடுத்திருந்தார். அதற்கடுத்து பெண்களை அடிமைபடுத்தும் இசுலாம் என்ற தலைப்பில் இசுலாமில் பெண்கள் அடிமையில்லை என்ற அழகிய பதிவை தந்திருந்தார். அவர் பதிவில் கூறியிருந்தது யாவும் உண்மை என்பதை குரான் வசனங்கள்  மூலமும் ஹதீஸ் ஆதாரங்கள் மூலமும் விளக்கியிருந்தார். இவையாவும் இசுலாமிய நூல்களில்  இருக்கின்றது என்பதில் எந்த மாற்று கருத்தும்  இருக்க முடியாது. அப்புறம் ஏன் இந்த பதிவு என்று நீங்கள் கேட்கலாம். இவையாவையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தந்தது இசுலாம் என்று அந்த பெண்மணி கூறுகிறார். ஆனால் இந்த உரிமைகளை  முதலில் தந்தது இசுலாம் அல்ல இசுலாமிற்கு முன்பே இவை யாவும் அரேபியாவில் இருந்தது. இதை தந்தது இந்து மதம்,இந்திய சிந்தனை  (சரிவிடுங்க இத பத்தி அப்புறம் பார்ப்போம்)  அல்லது சிலையை வழிபட்டவர்கள் வழங்கியது என்ற உண்மையை கூறுவதே இப்பதிவின் நோக்கம். 

அந்த பதிவில் திருமண சம்மதம், மறுமண உரிமை ஆகியவற்றை இசுலாமே தந்ததாக கூறுகிறார். ஆனால் உண்மையில் பெண்களுக்கு விரும்பியவர்களுக்கு திருமணம் செய்யும் உரிமையும், மறுமண உரிமையும் இசுலாமுக்கு முன்பே அரேபியாவில் இருந்தது. 

அதற்கு மறுக்க முடியாத உதரணமாக கதீஜா என்ற பெண்மணியை குறிப்பிடலாம். இந்த கதீஜா என்பவரின் மூன்றாவது கணவர் தான் முகமது நபி அவர்கள். இவர் தான் முகமது நபியை மணமுடிக்க முடிவு செய்கிறார். அவருக்கு ஏற்க்கனவே இரண்டாவது திருமணம் நடந்தது என்பதன் மூலம் மறுமண உரிமை இசுலாமிற்கு முன்பே அரேபியாவில் இருந்தது தெரியவருகிறது.   

இந்த கதீஜா ஒரு மிகப்பெரிய செல்வந்தர். இவர் வியாபாரமும் செய்துவந்துள்ளார். இதன் மூலம் பெண்களுக்கு சொத்துரிமையும் மேலும் பல உரிமைகளும் இசுலாமிற்கு முன்பே அராபியாவில் இருந்தது என்பதை  இது காட்டுகிறது. ஆனால் இன்று சவூதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை கூட கிடையாது என்பது வருத்தமான விடயம். 

அந்தபதிவில் பெண்கல்வியையும்  இசுலாமே 1400 வருடங்களுக்கு முன்பு தந்தது என்று கூறுகிறார். இசுலாமுக்கு முன்பே அங்கு பெண் கல்வி இருந்ததாகத்தான் தெரிகிறது . கதிஜா கல்வி கற்றிருந்தார்களா   என்று தெரியவில்லை. இருப்பினும் அவர் மிகப்பெரிய அளவில் வணிகம் செய்து வந்ததால்  அவரும் கல்வி கற்றிருக்கலாம் என்றே தோன்றுகிறது.


இசுலாமின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவராக கருத்தப்படுபவர் உமர்.இவர் முகமது நபியை கொல்ல நினைத்தவர். இவரின் சகோதரி இசுலாமிற்கு மாறியதை அறிந்து கோபம் கொள்ளும் அவர் சகோதரிய அடித்து விட்டு, குற்றத்தை உணர்ந்து பிறகு நீ ஓதி கொண்டிருப்பதை என்னிடம் காட்டு என்கிறார். அவரின் சகோதரி குரானின் ஒரு அத்தியாத்தின் வசனங்கள்  அடங்கிய தாளை அவரிடம் தருகிறார்.  ("asked his sister to give him what she was reciting. She gave him the paper on which was written the verses of the chapter Ta-Ha." அதை படித்து அதில் மயங்கும் உமர் இசுலாமிற்கு மாறினார் என்று வரலாறு கூறுகிறது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அந்த பெண் ஓதிக்கொண்டிருந்தார் என்பது, அவர் தாளை படித்து கொண்டிருந்தார் என்ற பொருள் தருகிறது. அவர் கல்வி கற்றிருந்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை அதே நேரத்தில் அவர் கல்வி கற்றிருக்கவும் வாய்ப்புகள் உண்டு என்பதை மறுப்பதற்க்கில்லை.

சில காலங்களுக்கு முன்புவரை இந்தியாவில் நிலவி வந்த உடன்கட்டை ஏறுதல், விதவை  திருமணத்தை எதிர்த்தல் போன்ற தீய விடயங்கள் பண்டைய அரேபியாவில் இருந்ததாக தெரியவில்லை. அராபிய இந்து மதத்தை, இந்திய சிந்தனையை ஏற்று கொண்ட நாடு என்பதை பிறகு பார்ப்போம். இந்தியாவில் இந்த தீய விடயங்கள் எப்பொழுது ஏன் வந்தது என்பதையும் நாம் ஆய்வு செய்யவேண்டும்.

 பண்டைய இந்தியாவில்  பல பெண்கள் அரசர்களை எதிர்த்து போர் புரிந்ததாகவும் வரலாறு உண்டு. 

அந்த காலத்தில் பெண்கள் சகல உரிமைகளோடுதான் இருந்துள்ளனர். தமிழகத்திலும் ஒளவையார் என்ற புலவர் செய்யுள்கள் பல  இயற்றி உள்ளார் என்பதை நாம் அறிவோம்.  பல பெண் பால் புலவர்கள் ஒளவையார் என்ற புனைப்பெயரில் இருந்ததாகவும் படித்த ஞாபகம். 

இன்றும் பெண்களை மையாமாக வைத்து திரைப்படங்கள் வருவதில்லை. ஆனால் அன்றே மணிமேகலை என்ற பெண்ணை மையமாக கொண்டு காப்பியம் படைத்தவன் தமிழன். அந்த பெண்ணிற்கு மதம் மாறும் உரிமையும், சந்நியாச வாழ்வை ஏற்கும் உரிமையும் இருந்தது.  இந்தியாவை, தமிழகத்தை பொறுத்த வரை பெண்கள் அடிமை பட காரணம் ஆணாதிக்கம் என்பதைவிட அந்நிய படை எடுப்புகள் தான் காரணம் என்று நினைக்கின்றேன். 

ஏற்க்கனவே இருந்த உரிமைகளைத்தான் இசுலாம் அங்கீகரிக்கின்றது என்பதன் மூலம் இசுலாமை நான் களங்கப்படுத்துவதாக சகோதரர்கள் என்ன வேண்டாம். உண்மையை நேர்மையான இசுலாமியர்கள்  ஏற்றுக்கொள்வார்கள் என்றே எண்ணுகிறேன். 
இசுலாம் பெண்களுக்கு வழங்கும் இந்த உரிமைகள் போற்றத்தகுந்தது என்பதில்  யாருக்கும் எந்த மாற்று கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது. 

இப்பதிவில் தவறு இருப்பின், இது இசுலாமியத்தை தவறாக விமர்சனம் செய்வது போல் இருந்ததாலும் சகோதரர்கள் சுட்டிகாட்டுங்கள்.  இப்பதிவில் இருக்கும் விடயங்கள் பெரும்பாலும் இசுலாமியர்கள் அறிந்திருப்பார்கள் என்பதால் தான் நிறைய ஆதாரங்கள் தரவில்லை. எதற்கு ஆதாரம் வேண்டும் என்று  கேட்டால் கண்டிப்பாக தருகிறேன். மீண்டும் கூற விரும்புகிறேன் இப்பதிவின் நோக்கம் நான் உண்மையாக நினைப்பவற்றை கூறுவதுதானே தவிர இசுலாமை விமர்சிப்பது அல்ல.

அனைத்து பெண்களுக்கும் (ஆண்களுக்கும்)  நான் கூற விரும்புவது ஒன்றுதான் உங்கள் குழந்தைகளுக்கு மதத்தை ஊற்றி வளர்க்காமல் மனிதத்தை ஊற்றி வளருங்கள். நீங்கள் மதத்தை ஊட்டி வளர்த்தால்  உங்கள் குழந்தை மதவாதியாக, மனிதவெடிகுண்டாக மாறலாம். நீங்கள் மனிதத்தை ஊற்றி வளர்த்தால் உங்கள் குழந்தை மனிதநேயம் உள்ளவராக, மகாத்மாவாக வரலாம் .  முடிவு உங்கள் கையில். 

வியாழன், 19 ஏப்ரல், 2012

இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?



இருப்பதிலேயே மிகவும் சுலபமானதும் சிக்கலானதும் இதற்க்கான பதில்தான். இந்து மதம் என்றால் என்ன அதற்க்கான இலக்கணத்தை வகுப்போமா?

நான் படித்த வரை சிந்து நதிக்கு அப்பால் இருந்தவர்கள் இப்பால் இருந்தவர்களை :) , சிந்து நதியோரம் வசித்தவர்களை ,  அன்றைய அகண்ட பாரதத்தை சேர்ந்தவர்களை இந்து என்று அழைத்தனர். அதாவது ஆரம்பத்தில்  இந்து என்பது மதம் சார்ந்த பெயர் அல்ல. இந்து என்று ஒரு மதமும் அன்று இல்லை. அது நிலப்பரப்பையும் இங்குள்ள  மக்களையும்  குறிக்கும் சொல்லாகத்தான் இருந்து வந்துள்ளது. இது ஒரு வாதம். அனைவருக்கும் தெரிந்த மற்றும் பெரும்பாலானோர் ஒப்புக்கொண்ட வாதம். 

சமஸ்கிருத சொல்லான சிந்து பெர்சியாவில்  இந்து என்று உருமாற்றம் கொண்டது என்பது சிலரின் கருத்து.  அன்றைய அராபியர்கள் அல்-ஹிந்த் என்றே அன்றைய அகண்ட பாரதத்தின்  பகுதியினையும், இங்குள்ள மக்களையும் குறிப்பிட்டுள்ளனர். அராபிய அல்-ஹிந்த் ஐரோப்பிய மொழியில் இந்து என்று உருமாறியது என்பது சிலரின் கருத்து.(மூலம்)
இந்த கருத்துக்களின் அடிப்படையில் தான் மேற்கூறிய  வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த வாதத்தின்படி அன்றைய அகண்ட பாரதத்தில் வாழ்ந்த அனைவரும் இந்துக்கள்.
இந்தியாவில் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் அவன் வெளி நாட்டவரால் இந்து என்றே அறியப்படான்.

இங்கே இருந்த அனைத்து மதங்களையும் அவன் இந்து மதம் என்று அழைத்துள்ளான். இந்த நிலபரப்பை சார்ந்த அனைவரின் மதங்களும் இந்து மதம் என்று பெயர் பெற்றது  இப்படித்தான்.

சமண புத்த மதங்கள் உருவாக பல காரணங்கள் இருந்தாலும்  வேதங்களும், பிராமணர்களும் ஒரு காரணம். வேதம் வேதம் என்று அதையே கட்டி கொண்டு மனிதத்திற்கு  முக்கியத்துவம் தராமல் இருந்ததால் ஆன்மீகத்திற்கு, மனிதத்திற்கு, உயிர்களுக்கு  முக்கியத்துவம் தரும் சமணமும், புத்தமும் பிறந்தது. 

இன்றைய இசுலாமிய, கிருத்தவ மதவாதிகளும் அன்றைய  பிராமண மதவாதிகள்  போல மனிதத்திற்கு முக்கியத்துவம் தராமல் தங்களுடைய மத புத்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர்.

அன்றைய இந்துக்களை மூன்று வகையாக பிரிக்கலாம் (பிரிக்கிறேன்  :) )

1.  வேதங்களுக்கு, உபநிடதங்களுக்கு, மனுவிற்கு  மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தவர்கள் பிராமணர்கள்.
2. வேதங்களுக்கு எதிராக கிளம்பியவர்கள் சமண, புத்த மதத்தினர் 
3. வேதங்களுக்கு முக்கியத்துவம் தராதவர்களும் , அதற்கு எதிராக கிளம்பாதவர்களும் இவர்களுக்கு  இடையே வாழ்ந்து வந்துள்ளனர்.  இவர்கள் பிராமணர் அல்லாத இதர வர்ணங்களையும், புத்த சமண மதத்தை சாராதவர்களும் ஆவர்.

இந்து என்ற சொல்லானது முதலில் இவர்கள் மூவரையும் குறிக்க பயன்பட்டது.

பிறகு வேதத்திற்கு எதிராக இருந்தவர்களை சமணம்,புத்தம் என்று தனியாக  குறிப்பிட ஆரம்பித்தனர். அதனால் மீதம் இருந்த இரண்டு  பிரிவினரும் தொடர்ந்து இந்துக்கள் என்றே அழைக்கப்பட்டனர் ...அழைக்கப்படுகின்றனர்.

தொடரும்......................
தமிழர்களின் நிலையையும் , இந்து மதத்திற்கு இலக்கணத்தையும் அடுத்த பதிவில் காண்போம் 

புதன், 4 ஏப்ரல், 2012

சமணமே உன்னை என்னவென்று சொல்ல?


உலக உயிர்களுக்கு   துன்பம் விளைவிக்க கூடாது என்று கூறும் உன்னத மதம் சமணம். பல மனிதர்கள் ஆடு, மாடு,கோழி.பன்றி,மீன் என்று சாப்பிடும் பொழுது வெங்காயத்தையும், பூண்டையும் கூட சாப்பிடகூடாது என்று கூறும் மதம் சமணம். (வெங்காயம், பூண்டு போன்றவற்றை பிடுங்குவதன் மூலம் அது கொல்லப்படுகிறது ஆதலால் அதை உண்ணக்கூடாது என்று கூறுகிறார்கள். )

இன்றுவரை காட்டுமிராண்டியாக வாழும் மனிதனை கிருத்து பிறப்பதற்கு கிட்டத்தட்ட அறுநூறு முதல் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி மனிதனை  தெய்வமாக்க முயற்சி செய்த மதம் சமணம். 

ஒரு காலத்தில் மாட்டுகறியை உண்ட  பிராமணர்களை சைவம் பக்கம் திரும்ப வைத்தது சமணம். 

இன்றும் மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் மக்கள் அடித்து கொண்டு சாகும் பொழுது பல ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து உயிர்களையும்  தம்முயிர் போல் கருதி  துன்பம் விளைவிக்க கூடாது என்று கூறிய மதத்தை என்னவென்று புகழ்வது?

மனிதர்களை கொன்று மதத்தை வளர்த்த மதங்கள் இன்று நம்மிடையே இருக்க, மனிதனை இறைவனாக்க  முயன்ற மதம் செல்வாக்கு இழந்தது ஏனோ? 

ஒரு இறைவனா பல பல இறைவனா  என்று இன்றும்  அடித்து கொள்ளும் பொழுது இறைவனை பொருட்படுத்தாத மதத்தை என்னவென்று புகழ்வது?

நல்ல கொள்கைகள் பல தந்த சமண மத துறவி மகாவீர் அவர்களின் பிறந்த நாளை உயிர்கள் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கொண்டாடவேண்டாமா? குறைந்த பட்சம் அவரை மனதில் வைத்து பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் வாழ முயற்சி செய்வோம். உயிர்களை நேசிக்க மதம் ஒரு தடை என்றால் நாம் மனிதர்களா மிருகங்களா?

குறிப்பு: இப்பதிவானது நான் ஏற்க்கனவே படித்த, கேள்வி பட்ட விடயங்களை  வைத்து எழுதியது. இதில் எதற்கு ஆதாரம் வேண்டும் என்றால் அதற்கு மட்டும் ஆதாரத்தை தேடி தருகிறேன்.
மேலும் படிக்க :http://en.wikipedia.org/wiki/Jainism

வெள்ளி, 30 மார்ச், 2012

ஆபிரகாம் இந்துவா, சிவபக்தரா?


யூத, கிருத்துவ, இசுலாமிய மதங்களால் முக்கிய நபியாக கருதப்படும் ஆபிராகாம் ஒரு இந்துவாக இருந்திருக்கலாம் என தெரிய வருகிறது.

இன்று ஆபிரகாம் என்று அவரை அழைத்தாலும் அவர் பெயர் அப்ரம் என்றே பல மொழிகளில் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த அப்ரம் என்பது பிரம்மனின் பெயரை  குறிப்பதாக கூறுகிறார்கள். 

இவரின் மனைவியின் பெயர் சாரா, சராயு என்று கூறுகிறார்கள். இது பிரம்மனின் மனைவி பெயரான சரஸ்வதியை குறிப்பதாக கூறுகிறார்கள்.  சராயு என்று அயோத்தியில் ஒரு நதி இருந்துள்ளது. ஆபிரகாமின் மனைவியின் பெயர் இந்த நதியின் பெயரை ஒட்டி கூட அமைந்திருந்திருக்கலாம் என்பது எண் கணிப்பு. 

ஆபிரகாமின் ஒரு சகோதரரின் பெயர் ஹரன். இது சிவனை குறிக்கும் சொல்லாகும்.

அபிரகாமும் சாராவும் உர் என்ற ஊரில் வாழ்கிறார்கள். இந்த ஊரிலும் பண்டைய இந்து மதம் இருந்ததாக தெரிகிறது.  பிறகு இவர்கள்  கனான் (Kana‘ān) என்ற பகுதியில் குடியேறுகிறார்கள். இந்த கனான் என்பது கண்ணனின்  பெயரை குறிப்பதாக சிலர் கூறுகிறார்கள். (மேலும் உங்கள் பார்வைக்கு ....காந்தகார் என்று  ஆப்கானிஸ்தானில்   ஒரு இடம் உண்டு...இது காந்தாரியின் பெயரை குறிக்கின்றது , லாகூர் என்று பாகிஸ்தானில் ஒரு இடம் உண்டு இது ராமனின் மகன் லவனை குறிக்கின்றது. லவவூர் என்பது லாகூராக திரிந்துள்ளதாக தெரிகிறது) 

ஆபிராகமிற்கு குழ்ந்தை இல்லாததால் வேலைக்காரியை இவருக்கு இவர் மனைவி மணம் முடிக்கிறார். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு இஸ்மாயில் என்று பெயரிடுகின்றனர்..  இது தமிழில் ஈசனின் பெயரோடு ஒத்து வருகிறது. இதற்கு சமஸ்கிருதத்தில் உயர்ந்த சிவன் என்று பொருள் கூறுகிறார்கள்.

பிறகு சில காலங்கள் கழித்து இவரது மனைவிக்கு குழந்தை பிறக்கின்றது. அக்குழந்தைக்கு இவர் ஈசாக் - ஈசாக்கு என்று பெயரிடுகிறார். இதுவும் ஈசனின் பெயரை  அடிப்படையாக வைத்தே அமைந்துள்ளகாதாக தெரிகிறது.  இதற்கு சிவனின் நண்பன் என்று பொருள் தருவதாக கூறுகிறார்கள்.
தங்களுடைய குழந்தைகளுக்கு  ஈசனின் பெயரை இடுவதன் மூலம் இவர் ஒரு சிவ பக்தர் என்று கூறலாம் அல்லவா?

இவர்களின் பெயரில் சிவன், ஈசன் இருக்கும் பொழுது அவர்களின் மதத்தில் இல்லாமல் போகுமா?

ஆபிரகாமிய மதங்கள் எனப்படும் யூதம், கிருத்துவம், இசுலாம் ஆகியவற்றின் மூலம் இந்து மதமாகத்தான் தெரிகிறது.  ஈஸ்வரன், ஈசன், சிவன் என்ற சொற்களின் திரிபுகளை  இந்த மத நூல்களில் நம்மால்  காண முடிகிறது.

பல்வேறு நாடுகளில் பண்டைய இந்து மதமானது இருந்துள்ளதாக தெரிகிறது.

நேரம் கிடைக்கும் பொழுது விரிவாகவோ சுருக்கமாகவோ பார்ப்போம்.:)

வரலாறு காணாத மின்வெட்டினால் எந்த வேலையையும் சரிவர செய்ய இயலவில்லை.

குறிப்பு: இப்பதிவின் நோக்கம் இந்து, யூத, கிருத்துவ, இசுலாமிய மதத்தை களங்கப்படுத்துவது அல்ல.
இவ்வாறு ஆய்வுகள் நடகின்றது, இப்படி இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் ஆய்வு செய்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறுவதே என் நோக்கம். இது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம். 

மீண்டும் கூறுகிறேன் பரிணாமத்தின் படி பார்த்தாலூம், ஆதாம் ஏவாள் கதைப்படி பார்த்தாலும் நாம் அனைவரும் சொந்தங்களே. மதத்தின் படி பார்த்தாலும் எல்லா மதங்களுக்கும்  மூலம் ஒன்றுதான். நமக்குள் மதத்தின் பெயரால் பூசல் கொள்வது சரியானது அல்ல. நம் அனைவரின் மூலம் ஒன்றுதான் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு அன்போடு பழகுதலே இறைவனுக்கு செய்யும் மிக சிறந்த வழிபாடாகும்.


மேலும் படிக்க: http://www.hermetics.org/Abraham2.html

வெள்ளி, 23 மார்ச், 2012

இசுலாமியர்கள் தினமும் வணங்குவது சிவனையா?


இசுலாமியர்கள் தினமும் ஐந்து வேளை வணங்குகிறார்கள் அல்லது தொழுகை செய்கிறார்கள் என்று தெரியும். அப்படி தொழுகை செய்யும் பொழுது அவர்கள் மெக்காவில் உள்ள காபாவை நோக்கி தொழுகிறார்கள். அந்த காபாவில்  அப்படி என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தால் அங்கே இருப்பது  ஒரு சிவலிங்கம் என தெரியவருகிறது. இந்த சிவலிங்கத்தை அவர்கள் கருப்புக்கல் என்கின்றனர். இந்த கல்லை மிகவும் புனிதமாக இசுலாமியர்கள்  கருதுகிறார்கள்.


ஆபிரகாமிய   மதங்களின்  முன்னோடியாகவும் முக்கிய நபியாகவும் கருதப்படும்   ஆபிரகாம் தான் இந்த காபாவை கட்டினார்.  இக்கல்லை அல்லது சிவலிங்கத்தை நிறுவினார்.இந்த கல் ஒரு சிவலிங்கமாக இருக்ககூடும் என்று ரவி ஷங்கர் ஒரு முறை கூறியிருந்தார் அதை  சாகிர் நாயக் மறுத்தார் என நினைக்கின்றேன்.  இருப்பினும் திறந்த மனதுடன் இதை ஆராயும் பொழுது அது ஒரு சிவலிங்கமாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.

இந்த கல் வானிலிருந்து கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த கல்லைத்தான் காலம் காலமாக அங்குள்ள மக்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர்.  இந்த காபாவில் இந்த கல்லை தவிர்த்து 360 சிலைகளையும் அங்குள்ள மக்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர். முகமது நபியால் இங்குள்ள சிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. 

ஆனால் அவர் அந்த கல்லை மட்டும் ஒன்றும்  செய்யவில்லை. காரணம் அந்த கல் அவ்வளவு புனிதமாக கருதப்பட்டது. 

இன்றும் அந்த கல் இசுலாமியர்கள் செல்லும் ஹஜ் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அந்த கல்லை முகமது நபி முத்தமிட்டார் என்பதால் ஹஜ் அல்லது புனித யாத்திரை செல்லும் இசுலாமியர்களும் அந்த கல்லை முத்தமிட முயற்சிக்கின்றனர். கூட்ட நெரிசலால் முத்தமிட முடியாததால் தனது வலது கரத்தால் அக்கல்லை  தொட  முயற்சிக்கின்றனர். 

இசுலாமியத்தில் சிலை வழிபாடு கிடையாது. இந்த கல்லை அவர்கள் புனிதமாக கொண்டாலும் அதற்கு வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை என்கின்றனர் இசுலாமியர்கள்.

ஆனால் முகமது நபியோ இக்கல்லை "அல்லாவின் வலது கரம்" என்கிறார்.  இந்த ஒன்றே அவர் இக்கல்லிற்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்துள்ளார் என்பதை காட்டுகிறது. 

இக்கல்லை அவர் ஏன் அல்லாவின் வலது கரம் என்றார் ...அல்லாவின் வலது கரம் என்றால் சும்மாவா ?

மேலும் இன்றும் அக்கல்லை  ஹஜ் யாத்திரையில் முத்தமிட முடியாத இசுலாமியர்கள்  "In the name of God, God is Great, God is Great, God is Great and praise be to God". (இறைவனின் பெயரால் இறைவன் சிறந்தவன், இறைவன் சிறந்தவன்,இறைவன் சிறந்தவன் புகழனைத்தும் இறைவனுக்கே  )என்று கூறுகிறார்கள்.  இந்த கல்லுக்கு இசுலாமில் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதை இது  தெள்ள தெளிவாக காட்டுகிறது. 

இசுலாமில் சிலர் தீர்ப்பு நாளில் இந்த புனித கல்லுக்கு பார்க்க கண்ணும் பேச நாக்கும்  தோன்றி தன்னை பக்தியுடன்  முத்தமிட்டவர்களுக்கு சாதகமாகவும் காபாவை வலம் வரும்பொழுது வதந்திகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும்  சாட்சியம் கூறும் என்று நம்புகின்றனர்.
("the Stone will appear on the Day of Judgement (Qiyamah) with eyes to see and a tongue to speak, and give evidence in favor of all who kissed it in true devotion, but speak out against whoever indulged in gossip or profane conversations during his circumambulation of the Kaaba"..  Source:wikipedia).

இவர்கள் சொல்வது அம்மன் சிலைக்கு கண்ணும் நாக்கும் வைத்து இருக்கும் சில சிலைகளை ஞாபக படுத்துகிறது.

அவர்கள் வணங்குவது சிவனையோ அல்லது அம்மனையோ அல்லது அல்லாவையோ அல்லது பண்டைய அராபிய கடவுளோ அது இறைவனுக்கு  மட்டுமே தெரியும். இருப்பினும் இந்து மதத்தின் தாக்கம் அல்லது இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை எந்த அளவிற்கு  உள்ளது என்பதை நேரம் கிடைக்கும் பொழுது பார்ப்போம்.

நன்றி: http://en.wikipedia.org/wiki/Black_Stone

Related Posts Plugin for WordPress, Blogger...