வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வியாழன், 16 செப்டம்பர், 2010

எமனின் பாசக் கயிறு என்றால் என்ன?

ஒருவனுக்கு மரணம் இல்லா பெருவாழ்வைப் பற்றி தெரிந்த்திருந்தும் , தாய் தந்தை, மனைவி மக்கள் மேல் உள்ள பாசத்தினால் அவனால் அந்த வழியில் பயணிக்க முடியா நிலையில் மரணத்தை எய்துவான் எனின். இந்த மரணத்திற்கு எது காரணம்?. பாசம் தானே. பாசம் என்ற கயிறு தானே அவனை மரணம் இல்லா பெருவாழ்வை அடைய விடாமல் செய்தது, இப்போது புரிகிறதா பாசக்கயிறு என்றால் என்னவென்று.

அன்றாவது பலருக்கு மரணமில்லா பெருவாழ்வை பற்றி தெரிந்த்திருந்தது ஆனால் இன்றோ சிற்றின்ப ஆசையாலும் பண ஆசையாலும் அதைப்பற்றி அறிய கூட நேரம் ஒதுக்குவதில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...