வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 24 ஜனவரி, 2018

மொத்தமிழ் என்றால் என்ன?


என்னுடைய பொங்கல் வாழ்த்து கவிதையில் மொத்தமிழ் வாழ்க என்று எழுதியிருந்தேன். நண்பர் ஒருவர் முத்தமிழை தவறுதலாக மொத்தமிழ் என்று எழுதியுள்ளதாக கூறினார். தவறுதலாக அவ்வாறு எழுதவில்லை. தெரிந்தேதான் மொத்தமிழ் என்று எழுதினேன். முத்தமிழ் இயல், இசை, நாடகம் எனும் மூன்று தமிழைக் குறிக்கும். மொத்தமிழ் என்பது கிரந்த எழுத்துத் தமிழ் தவிர்த்து  அனைத்துத் தமிழையும் குறிக்கும்.

-----------------
இயற்கை வாழ்க
இறைவன் வாழ்க

உழவு வாழ்க
உழைப்போர் வாழ்க

மனிதம் வாழ்க
மக்கள் வாழ்க

மொழிகள் வாழ்க
மொத்தமிழ் வாழ்க

மகிழ்ச்சி பொங்க
மங்களம் தங்க

இயற்கைத் திருநாள்
இத்தமிழர் திருநாளில்
இராச.புரட்சிமணியின்
இனிய நல்வாழ்த்துக்கள். 🌞⛈🎋🌾🥥🥕🌽🍇🍊🍎🍛🍲🍚😊

சனி, 4 நவம்பர், 2017

கமல் இந்துத் தீவிரவாதம் என்று கூறியது சரியா?

ஒரு மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை அடையாளப்படுத்துவது சரியான செயல் அல்ல. அவர் கூறிய கருத்தில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் "இந்து தீவிரவாதம்"  என்று கூறியது தவறு. "இந்துத்துவா  தீவிரவாதம்" என்பதே சரி.

இந்து என்பது வேறு இந்துத்துவா என்பது வேறு. இந்து என்பது இந்து மதத்தை சார்ந்த அனைத்து மக்களை குறிக்கும் சொல்.  சட்டப்படி அது சீக்கியர்களையும், சமணர்களையும் குறிக்கும் சொல். இந்துத்துவா என்பது ஒரு கருத்தியல். அந்த  கருத்தியலை நிறைவேற்ற சிலர் வன்முறைகளிலும், தீவிரவாதத்திலும்  ஈடுபடுகின்றனர். இந்த வித்தியாசம் கமலுக்கு தெரிந்திருக்கும். அவர் பிழையாக இந்து தீவிரவாதம் என்று கூறி இருக்கலாம். அது பிழையாக இருப்பின் அதை கூறி வருத்தம் தெரிவிப்பது நன்றாக இருக்கும்.

காந்தியை கொன்றது இந்துத்துவா தீவிரவாதம். 
இன்று பல கொலைகளை கொண்டாடுவது இந்துத்துவா தீவிரவாதம். 
கமலை கொல்ல வேண்டும் என்பதுவும் இந்துத்துவா தீவிரவாதமே. 
ஏன் இந்தியை திணிப்பதுமே இந்துத்துவா தீவிரவாதத்தின் ஒரு அங்கமே. 

இந்துத் தீவிரவாதம், இசுலாமிய தீவிரவாதம், பௌத்த தீவிரவாதம் என்ற சொற்றோடர்களை அனைவரும் தவிர்க்க வேண்டும். தீவிரவாதத்திற்கு எது, யார் காரணமோ அதை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டும். தீவிரவாதத்தை பொதுமைப்படுத்தினால் அது மற்றவர்கள் மனதை புண்படுத்தும். மற்றவர்களையும் தீவிரவாதம் பக்கம் தள்ளும் வாய்ப்புண்டு என்பதை அனைவரும் புரிந்து இவற்றை தவிர்ப்போம். அதே நேரத்தில் தீவிரவாதங்களுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்துவோம்.

என்றும் மனிதமுடன் 
இராச.புரட்சிமணி 

புதன், 4 அக்டோபர், 2017

தமிழை சிதைப்பது சரியா?


நம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழை சிதைக்கின்றோம். பிற மொழி சொற்களை தமிழில் ஏற்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பிற மொழி எழுத்துக்களை தமிழில் ஏற்பது என்பது தமிழை சிதைக்கும் செயலாகும்.

பிற மொழி வார்த்தைகளை  தமிழில் எழுதும் பொழுது நாம்  '', '', 'க்ஷ', '' ,'ஸ்ரீ', ''  என்ற கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துகிறோம்.

சமசுகிருத, பிராகிருத வார்த்தைகளுக்கு ஏற்ற ஒலியோசை கிடைக்க நாம் அந்த எழுத்துக்களை பயன்படுத்துகிறோம். இது அவசியம் அற்றது. நீங்கள் ஆங்கிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் பிற மொழி எழுத்துக்களை அவர்கள் ஏற்பதில்லை. நாம்  கிரந்த எழுத்துக்களை எழுதி தமிழை சிதைக்க வேண்டாம் என்று அனைவரையும்  கேட்டுக்கொள்கிறேன்.

சமஸ்கிருதம்  என்று எழுதாமல் சமசுகிருதம்  என்றே எழுதலாம்
மஹாத்மா என்று எழுதாமல் மகாத்மா என்றே எழுதலாம் 
ஜப்பான் என்று எழுதாமல் சப்பான் என்றே எழுதலாம் 
 ஸ்ரீ ரங்கம் என்று எழுதாமல் திருவரங்கம் என்றே எழுதலாம்
பக்ஷி என்று எழுதாமல் பட்சி என்றே எழுதலாம்
ஹரி என்று எழுதாமல் அரி  என்றே எழுதலாம்
ஆயிஷா என்று எழுதாமல் ஆயிசா என்றே எழுதலாம்

நன்றி 

புதன், 29 மார்ச், 2017

எங்கே என் தலைவன்? பகுதி 2

மக்கள் எப்படிப்பட்ட தலைவனை எதிர்பார்க்கின்றனர்?

ஒரு குறிப்பிட்ட விழுக்காடு மக்கள்  ஒரு நல்ல தலைவனை எதிர்பார்க்கிறார்கள். அதாவது அவன் நல்லவனாக இருக்கவேண்டும், உண்மையாக இருக்க வேண்டும், ஊழல் செய்யாதவனாக இருக்க வேண்டும், மக்கள் (தங்கள்) பிரச்சனைகளை  தீர்ப்பவனாக இருக்க வேண்டும், சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இன்று இப்படிப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது. அதே நேரத்தில் தவறு செய்பவர்களையும், ஊழல் செய்பவர்களையும், சாதி மத அரசியல் செய்பவர்களையும்  ஆதரிக்கும் மக்களும் இருக்கின்றனர். ஒரு நல்ல தலைவன் வரும்பொழுது இவர்களில் பலரும் நல்ல தலைவனுக்கு வாய்ப்பளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


இதை கருத்தில் கொண்டுதான் இப்பொழுது இருக்கும் சில தலைவர்களும்  கறை படிந்த தங்கள் கட்சியை சீர்திருத்தம் செய்வதாக தெரிகிறது. ஆனால் மக்கள் இவர்களை  ஏற்றுக்கொள்வார்களா எனபதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாம் என்ன செய்வது?

தாங்கள் எதிர்பார்க்கும்  தலைவன் இல்லாதபொழுது இருக்க்கின்ற ஒருவனை தலைவனாக ஏற்பது அல்லது அரசியலில் நம்பிக்கை இழப்பது என்பதுதான் மக்களின் முன்னே இருக்கும் இரு வாய்ப்புகள்.

இது இரண்டுமே நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல. வேறு என்னதான் செய்வது?

அது தானாகவே தலைவனாக முற்படுவது. ஆம் நல்லது செய்ய நினைப்பவன் ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டும்.


பணம் படைத்த, பிரபலாமான ஒருவனால்தான் ஒரு கட்சியை ஆரம்பித்து நடத்த முடியும். பிறருக்கு இது மிகவும் கடினம். பணம் படைத்த பிரபலமான ஒருவன் நல்லவனாக, நல்ல கொள்கைகளை உடையவனாக இருக்கும்  பட்சத்தில் அவனை  மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் அப்படிப்பட்டவன்  இங்கே யாரும் இருப்பதாக தெரியவில்லை. 

பணம் இல்லாத பிரபலமாகதவன் அமைதியாக இருந்துவிடலாமா?
கூடாது அவனும் அதற்கான முயற்சியில் இறங்கவேண்டும். இது சாதாரண விடயம் அல்ல. அதே நேரத்தில் வேறு வழியும் இல்லை.அப்படி ஒருவன் வந்தாலும் மக்களின் ஆதரவு இல்லை என்றால் அவன் கதியும் மக்கள் கதியும் கேள்விக்குறிதான். இங்கே மக்கள் தான் மாபெரும் சக்தி. அவர்கள் ஆதரித்தால் தான் மாற்றம் நிகழும்.


யாராவது ஒருவன் வருவான் என எதிர்பார்ப்பதை விட ஏன் நாமே அந்த முயற்சியை எடுக்க கூடாது?. நல்லவனாகவும் நல்ல கொள்கைகளையுடவன் யாராகினும் மக்கள் ஏற்பார்கள் என்றே எண்ணுகிறேன். 

நாம் நினைக்கும் மாற்றத்திற்காக ஏன் நாமே களம் காண கூடாது?
நல்லவன் வருவான் நல்லாட்சி தருவான் என்று கனவு காண்பதைவிட ஏன் அந்த நல்லவனாக நல்லாட்சி தருபவனாக  நாம் இருக்க கூடாது?

உண்மையான, ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை நம்மால் தர முடியாதா?

சாதி மத இன  வேறுபாடுகளை கடந்த ஒரு நல்லாட்சியை தரமுடியாதா?

முடியும் என்பவர்கள் களத்தில் குதித்து ஒரு கட்சியை ஆரம்பியுங்கள் அல்லது எம்மோடு  இணையுங்கள்.

செவ்வாய், 21 மார்ச், 2017

எங்கே என் தலைவன்?

தமிழகத்தில்  தலைவனுக்கான தேடல் இருப்பதாக இன்று பேசப்படுகிறது.சமீபத்திய விகடன் சர்வேயில் 44.4% இளைஞர்கள் இதில் இருப்பவர்கள் யாரும் எங்கள் தலைவர் இல்லை என்று கூறியுள்ளனர். இங்கே தலைவர்களுக்கா பஞ்சம்? அப்படி இருந்தும் ஏன் இந்த தேடல்? 

தமிழர்கள் பெரும்பாலும் அம்மா அல்லது கலைஞர் என்று வாக்களித்து வந்துள்ளனர். அம்மாவின் இறப்பும் கலைஞரின் ஓய்வும் தமிழகத்தில் தலைவனுக்கான  வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது.


ஒருசில பிரபலங்கள் தலைவருக்கான வெற்றிடம் தமிழகத்தில் இல்லை என்று கூறுகிறார்கள். அவர்கள் சிலரை ஆதரிப்பதால் அவ்வாறு கூறுகின்றனர்.  ஏன் இனில்  தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு கட்சி தலைவருக்கும் ஆதரவளிப்பவர்கள் உள்ளனர். இருப்பினும் பெரும்பாலான மக்கள் இன்று இருக்கும் எந்த தலைவரையும் ஆதரிக்க விரும்பவில்லை 

இன்று தமிழகத்தில் இருக்கும் எந்த ஒரு  தலைவர் பற்றி சிந்தித்தாலும் ஒரு சில நல்லவிடயங்கள் தோன்றினாலும் ஒரு சில கெட்ட விடயங்களும் கண் முன் வருகிறது. இதனால் தான் பெரும்பாலானவர்கள் வேறு தலைவரை தேடுகின்றனர்.

வாரிசு அரசியலை சிலர் எதிர்க்கின்றனர், திரைத்துறையினர் அரசியலுக்கு வருவதை சிலர் எதிர்க்கின்றனர்.  இவர்கள் தான் சுலபமாக அரசியலுக்கு வர முடிகிறது. 

இவர்களை தவிர யார் அரசியலுக்கு வரமுடியும்? மாபெரும் பணக்காரர்கள் அரசியலுக்கு வரமுடியும்.பிறரால் அரசியலுக்கு வரமுடியுமா என்றால் மிகவும் கடினம் என்றே சொல்லவேண்டும்.

ஏன் எனில் அரசியலுக்கு தேவை பணம். பணம் இல்லாமல் இங்கே எதுவும் நடக்காது.  அரசியல் என்பதே பணம் படைத்தோருக்கு என்றாகிவிட்டது.இதனால் தான் வசதியற்றவர்கள் அரசியலுக்கு வருவதில்லை.

யார் வேண்டுமானாலும் ஒரு கட்சியில் சேரலாம் ஆனால் ஒரு கட்சியை ஆரம்பித்து நடத்த வேண்டும் என்பது பிரபலங்கள் மற்றும் பணம் படைத்தவர்கள் தவிர்த்து பிறருக்கு மிக மிக கடினம். 

பணம் படைத்தவர்கள் கட்சி ஆரம்பித்தாலும் அவர்கள் பிரபலம் அல்லாத பட்சத்தில் அவர்கள் வெற்றி பெறுவது கடினம். அவர்கள் பிரபலங்களை விலைக்கு வாங்கும் பொழுது அவர்களுக்கும் வெற்றி சாத்தியமே.

மக்கள் எப்படிப்பட்ட தலைவனை எதிர்பார்க்கின்றனர்?
அப்படிப்பட்ட தலைவன் வர வாய்ப்புள்ளதா?

சனி, 12 நவம்பர், 2016

மோடி செய்தது சாதனையா? மோசடியா?


மோடி கருப்புப்  பணத்தை ஒழித்தார் என்று நினைக்கிறீர்களா? அவர் கருப்புப்  பணத்தை வைத்திருந்தவர்களை தப்பிக்க வைத்திருக்கிறார் என்பதே  மாபெரும் உண்மை.  அதைவிட ஒரு மாபெரும் உண்மை கீழே.

கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் உழைத்து சம்பாதிக்கவில்லை. ஊழல் செய்து, லஞ்சம் வாங்கி சம்பாதித்தனர். அரசாங்கத்தை ஏமாற்றி பதுக்கினர்.அவர்கள் பணத்தை பணமாக மட்டும் வைத்திருக்கவில்லை நகை, வீடு, நிலம் என மாற்றி விட்டனர். சிலப்பலர் வெளி நாட்டிற்கும் கொண்டு சேர்த்துவிட்டனர். இப்பொழுது பணத்தை செல்லாததாக மாற்றியதால் அவர்களுக்கு குறைந்த அளவே பாதிப்பு ஏற்படும். அரசியல்வாதிகளும் பெரு வியாபாரிகளும் தான் கருப்பு பணத்தை வைத்துள்ளனர்.

ஒருவன் தவறு செய்தால் என்ன செய்யவேண்டும்? தண்டனை தர வேண்டும் (திருந்தவாவது). இங்கே இவர்களுக்கு தண்டனை தரப்பட்டதா என்றால் இல்லை.

 பதுக்கிய பணம் செல்லாததாக மாறியதே அவர்களுக்கு தண்டனை என்று நினைக்காதீர்கள்.பதுக்கிய கருப்பு பணத்தையும் சிலபலர் வெள்ளையாக மாற்றிவிடுவர். வெள்ளையாக  மாற்றாதவர்களுக்கு நட்டம் மட்டுமே.  இந்த நட்டத்தை அவர்கள் விரைவில் இலாபமாக மாற்றிவிடுவர்.

இப்பொழுது சொல்லுங்கள் மோடி என்ன செய்துள்ளார். தவறு செய்தவர்களுக்கு தண்டனை தராமல் தப்பிக்க வைத்துவிட்டார். இப்படி தவறு செய்தவர்கள் குறைந்த பட்சம் 2% முதல் மிக மிக அதிக பட்சமாக 20%. இவர்கள் அனைவரையும் தப்பிக்க வைத்ததோடு குறைந்தபட்சம் 80% முதல் 98% மக்களுக்கு தண்டனை அளித்து விட்டார்.  (உண்மையில் தண்டிக்கப்படவேண்டியவர்கள் அந்த2% முதல்  20% தான்)

இன்று சாப்பாட்டிற்கு வழியில்லாமல், செலவுக்கு காசில்லாமல், மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க முடியாமல்,  கல்யாணம் பண்ண முடியாமல் எத்தனை பேர் படாத பாடு படுகிறார்கள் என்று உங்களுக்கே தெரியும்.

ஆனால் இந்த தண்டனை அளிக்கப்பட மக்களில் சிலர் என்ன நினைக்கிறார்கள் என்றால்  கருப்பு பணம் ஒழிந்தது. கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் ஒழிந்துவிட்டார்கள் என்று. அது உண்மையல்ல என்பது உங்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்.இவர்களை பாராட்ட வேண்டும். கருப்பு பணம் ஒழிந்தால் நாடு முன்னேறிவிடும் என்று நம்பிக்கையில் இவர்கள் படும் சிரமத்தை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.


கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் இத்துடன் திருந்துவார்களா என்றால் இல்லை. இருக்கும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவர். எதிர்காலத்திலும் இதே போலவே தொடருவர். ஏன் எனில் கருப்பு பணத்தால் அவர்கள் இழந்ததை விட அடைந்ததே அதிகம்.


 மோடி மக்களை நன்றாக  முட்டாளாக்கி விட்டார். தவறு செய்தவர்களை தப்பவிட்டுவிட்டு தவறு செய்யாதவர்களை தண்டித்ததோடு மட்டுமல்லாமல் இருவர் மனதிலும் நல்ல பெயரை வாங்கி விட்டார். தப்பித்தவனுக்குத்தான் தெரியும் அப்பாடா மோடி நம்மள விட்டுட்டாரு என்று. பொதுமக்கள் அப்பாடா கருப்பு பணத்தை மோடி ஒழித்துவிட்டார் என்று தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் ஏமாளியாக.

இப்பொழுது இருவர் ஓட்டுமே மோடிக்குத்தான்.  அதுமட்டுமல்லாமல் பல கோடி ரூபாய் பாஜகவிற்கு நன்கொடையாக போக வாய்ப்பிருக்கிறது.

உண்மையில் இந்த நடவடிக்கையின் மூலம் மோடி ஒழித்தது கருப்பு பணத்தை என்பதை விட கள்ள நோட்டுக்களை என்பதே சரி. இது அவர்களுக்கும் தெரியும் இந்த நடவடிக்கையால் முற்றிலும் ஒழிய போவது  கள்ள நோட்டுக்கள் என்பது  (அதுவும் சிலபல மாதங்களுக்கு)

கள்ள நோட்டுக்களை ஒழித்தோம் என்று கூறுவதை விட கருப்பு பணத்தை ஒழித்தோம் என்று கூறினால் தான் மக்களின் நன்மதிப்பை பெறமுடியும் என்பதால் தான் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டது என்று அவர்கள் விளம்பரப்படுத்தி கொள்கிறார்கள்.

 உண்மையை உரக்க கூறாமல் பொய்யுரைப்பது சரியா? அதோடு நிற்காமல் இவர்கள் நேர்மையோடு இல்லாமல் மக்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று கூறுவது ஏற்ப்புடையதா?

கருப்பு பணம் வைத்திருந்தவர்களை தப்ப வைத்ததும், கள்ளநோட்டுக்களை ஒழித்ததை விளம்பரப்படுத்தாமல் கருப்பு பணத்தை ஒழித்தோம், கருப்பு பணம் வைத்திருந்தவர்களை தண்டித்து விட்டோம் என்பதும் மோசடியா இல்லையா?


உங்களில் சிலர் இது கொஞ்சம் காலத்துக்குத்தான் அப்புறம் மக்களுக்கும் நாட்டிற்கும் நன்மை என்று நினைப்பீர்கள். அப்படி இருந்தால் இதை எழுத வேண்டிய அவசியமே எனக்கு இல்லை. நாட்டின் நலனிற்காக மக்களின் நலனிற்காக இந்த சிரமங்களை அனைவரும் பொறுத்துக்கொள்வோம் எனலாம். இவ்வளவு சிரமங்களுக்குப்பிறகும் பழைய குருடி கதவை திறடி என்பதை போல கள்ள நோட்டும் வரும், கருப்பு பணமும் பெருகும்,மக்களும் பாதிக்கப்படுவார்கள்  என்று தெரிந்தும் மோடி அரசு தன்னுடைய சுய நலத்திற்காக,ஓட்டுக்காக இவ்வாறு செய்து மக்களை முட்டாளாக்குவது சாதனையா  அல்லது   மோசடியா?

 உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

(சிலபல கருத்துக்களை நீளம் கருதி இப்பதிவில் தவிர்த்துள்ளேன்.)

மக்களுக்கு இது  நன்மையளிக்கும் செயல் என்பது ஒரு மாயை.உண்மையில் மக்களுக்கு பாதிப்பே. அடுத்த பதிவில் உங்கள் மாயை விலகும்....நீங்கள் விரும்பினால். இந்த நடவடிக்கையால் என்ன நன்மைகள் கிடைக்க உள்ளன என்று நீங்கள் கூறினால் கலந்துரையாட வாய்ப்பாக அமையும். 

குறை கூறுவது எளிது இதற்க்கு என்ன மாற்று உங்களிடம் உள்ளது என்று கேட்டால் மடை திறந்த வெள்ளம் போல் மாற்று வழியும் அதற்க்கு அடுத்த பதிவில் வரும்...நீங்கள் விரும்பினால் மட்டும். உங்களிடம் மாற்று வழி இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.


என்றும் மனிதமுடன் 
இராச.புரட்சிமணி 

திங்கள், 4 ஏப்ரல், 2016

மதவாதம் மற்றும் தேசியவாதம் என்னய்யா நடக்குது நாட்டுல?

உலகில், நாட்டில் நடப்பவை அச்சத்தையும் வருத்தத்தையும் தருகின்றது. ஒருபுறம் உலகெங்கும் இசுலாமின் பெயரால்  குண்டு வெடிப்புகள், போர்கள். மறுபுறம் இந்தியாவில் இந்துமதத்தின், நாட்டுப்பற்றின்  பெயரால் வெறுப்புகளை வன்முறைகளை தூண்டும்படியான பேச்சுகள், செயல்பாடுகள்.

மதாவதம் தவறு என்று இங்கே பலர் உணர்ந்துள்ளனர். அதேபோல தேசியவாதம் என்பதும் தவறு என்பதே என்னுடைய கருத்து. மதம் மற்றும் தேசியத்தின் உண்மையான நோக்கம் ஒற்றுமையாக வாழ்வதுதான். இவைகளால் ஒற்றுமைக்கு கேடு வரும்பொழுது ஒன்று அவற்றை சீர்திருத்த வேண்டும் அல்லது தூக்கி எறியவேண்டும்.


கழுத்தில் கத்தி வைத்தாலும் பாரத் மாதா கி ஜே சொல்லமாட்டேன் என்பதும், சட்டம் இல்லையென்றால் பாரத் மாதா கி ஜே சொல்லாதவர்களின் தலையை வெட்டுவேன் என்பதும், பாரத் மாதா கி ஜே சொல்லாதவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்பதும்  வெறுப்பையும், ஒற்றுமையின்மையையும் உருவாக்கும் பேச்சுக்களே. இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தால் அதற்காக வருந்தி மன்னிப்புக் கோரி இருக்கலாம். அவ்வாறு செய்யாத பட்சத்தில் இவர்கள்  தண்டண்டைக்குரியவர்களே.

தானாகவே வீடியோ தயாரித்து தேசத்திற்கு எதிராக, காஷ்மீர் பிரிவினைக்கு ஆதரவாக  குரல் எழுப்பியதாக குற்றம் சாட்டி தேச துரோக சட்டத்தில் கைது செய்வதும் காலம் காலமாக இந்தியாவிடமிருந்து காஷ்மீரை பிரிக்க என்னும் சக்திகளோடு கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதும்  அருவருக்கத்தக்க  தேசியவாதம்  அல்லாமல் வேறு என்ன?

ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் மனிதம்  இருக்கவேண்டும், ஒவ்வொரு தலைவனுக்குள்ளும் மனிதம் இருக்கவேண்டும், ஒவ்வொரு அரசாங்கமும் மனிதமோடு இருக்க வேண்டும். மனிதம் இல்லையென்றால் அங்கே அழிவுதான் இருக்கும்.

மனிதத்தை கட்டி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. இதை நாம் செய்யாவிடில் நாளைய தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறியே. மதவாதத்திற்கும்,தேசியவாதத்திற்கும் மற்றும் எந்த ஒரு பிரிவினை வாதத்திற்கும் உங்கள் நெஞ்சில் இடம் தராதீர்கள். இவற்றிற்கு எதிராக குரல் எழுப்புங்கள். சிந்தித்து செயல்படுங்கள்.

என்றும் மனிதமுடன்
இராச.புரட்சிமணி 

சனி, 8 ஆகஸ்ட், 2015

சமணம் என்பது ஏன் ஜைன மதம் அல்ல?

தமிழகத்தில் பலர்  சமணம் என்பது ஜைன (Jainism) மதத்தை குறிப்பதாகவே எழுதி வந்திருக்கின்றனர்..வருகின்றனர். ஆனால் இது ஒரு மாபெரும் வரலாற்றுப்பிழை. இந்தப்பிழையை சமணமும் தமிழும் என்ற நூல் எழுதிய  மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்களும் செய்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் 

//இந் நூலில் ஜைனர் என்னும் சொல்லுக்குப் பதிலாகச் சமணர் என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணம் இவ் வச்சகத்தில் வடமொழி அச்செழுத்துக்கள் அதிகம் இல்லாமையேயாம். ஜைன நண்பர்கள் இதனைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.//

தன்னுடைய பௌத்தமும் தமிழும் என்ற நூலில் 

//வடநாட்டிலிருந்து தென்னாட்டில் வந்த மதங்களைப் பண்டைப் பெரியோர் இரண்டு வகையாகப் பிரித்திருக்கின்றனர். அவை பிராமண மதம், சிரமண மதம் என்பன. பிராமணமதம் என்பது வைதீக மதம். சிரமண மதம் என்பது பௌத்த ஜைன மதங்களாகும். சிரமணம் என்னும் சொல் தமிழில் சமணம் என வழங்கும். சமணமதம் என்றால், ஜைனமதத்துக்குமட்டும் பெயராக இக்காலத்தில் பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. ஆனால், சமணம் என்னும் சொல், வைதீக மதத்தவரல்லாத பௌத்தர் ஜைனர் மதங்களுக்குப் பொதுப் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கிவந்தது.// என்று கூறுகிறார்.

இவர் கூறியதிலிருந்து இங்கே நாம்  நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் பௌத்த,ஜைன மதத்தை குறிக்க பயன்படுத்தப்பட்ட பொது சொல்தான் சமணம் எனபது. சமணம் எனபது தனி ஒரு மதம் அல்ல. அவர் சமணம் என்ற சொல்லை  "ஜை"  எனும்  வட மொழி அச்செழுத்துக்கள் இல்லாததால் தான் பயன்படுத்தியுள்ளார்.

மயிலை, சீனி. வேங்கடசாமி ஐயா செய்த தவறு என்னவெனில் 
முதல் தவறு : சமணம் எனபது பௌத்த ஜைன மதங்களை குறிக்க பயன்படும் பொது சொல் என்றுணர்ந்தும் ஜைன மதத்திற்கு சமணம் என்ற சொல்லை பயன்படுத்தியது.

இரண்டாம் தவறு: சமணம் என்ற சொல் ஆசீவக மதத்தையும் உள்ளடக்கியது என்பதை அறியாதது. ஆம் உண்மையில் சமணம் என்ற சொல் ஆசீவக மதத்தையும் குறிக்க பயன்படுத்தப்படும் ஒரு சொல்.

 ' சாவகர் அருகர் சமணர் ஆகும் ;
           ஆசீ வகரும் அத்தவத் தோரே ' -  என்று சேந்தன் திவாகரம் கூறுகிறது. 

 இந்த இடத்தில்  அவர் சமணம் என்பதற்கு ஜைனம் என்று பொருள் கொண்டு  ஆசீவக மதம் ஜைன மதத்தின் ஒரு பகுதியாக கொள்ளப்படுகிறது இது தவறு என்கிறார். 


ஆனால் சேந்தன் திவாகரம்  ஜைன மதம் என்றோ ஜைன மதத்தை குறிக்கும் ஆருகத மதம் என்றோ குறிப்பிடவில்லை. அது தெளிவாக சமணர் என்று குறிப்பிடுகிறது.  இந்த இடத்தில் நாம் எவ்வாறு பொருள் கொள்ளவேண்டும் எனில் ஆசீவக மதமும் சமண மதம் என்று புரிந்து கொள்ளவேண்டும். 
ஐயா அவர்கள் ஆசீவக மதமும் ஜைன மதம் என்று கூறியுள்ளதாக புரிந்து கொண்டார் இதுதான் அவர்  செய்யும் இரண்டாம் தவறு.


--------------------------------------------------------------------------------------------------
சமணம் என்ற சொல் ஜைனம், ஆசீவகம், பௌத்தம் என்ற மதங்களை குறிக்கும் என்றாலும் பெரும்பாலும்  சமணம் என்ற சொல்லை ஜைனம் அல்லது ஆசீவக மதத்தை  அல்லது இரண்டையும் குறிக்கவே பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

பௌத்தத்தை சமணம் என்று அதிகமாக அழைக்கவில்லை.


"உறி பிடித்து ஊத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்"
         "கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே"
        "குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங்"
        "சிந்தை திருகல் சமணர், தேரர், தவம் என்னும்" 
        "மண்டை கொண்டுழல் தேரர் 
         மாசுடை மேனிவன் சமணர் "

என்ற தேவார திருப்பதிகங்களில்  பௌத்த மதம் தனியாக சொல்லப்படுவதை காணலாம்.. 

இங்கே சமணம் எனபது உண்மையில் ஜைனர்களை குறிக்கின்றதா அல்லது ஆசீவகர்களை குறிக்கின்றதா அல்லது இருவரையும் குறிக்கின்றதா எனபது உண்மையில் இதை பாடியவருக்கு மட்டுமே தெரியும்.இருவரையும் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது என்றே நான் நினைக்கின்றேன். ( "கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே" என்ற இடத்தில் பௌத்தத்தை மட்டும் குறிக்கின்றதா என்பதிலும் எனக்கு சிறு குழப்பம் உண்டு.ஏன் எனில் பௌத்தமும் ஒரு சமண மதம்தானே?)


பௌத்த மதத்தை சமணம் என்று சொல்லியதுண்டா என்றால் பெரும்பாலான இடங்களில் சொல்லவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் 

"துவருறு விரிதுகி லுடையரு மமணரும்" என்ற தேவார திருப்பதிக பாடல் இங்கு சமணர் என்று கூறி பௌத்தர்களை கூறுகிறது.
இதற்கு உரை எழுதியவர்கள்
  //துவர் ஏற்றிய விரிந்த ஆடையினை உடுத்தும் போர்த்தும் திரியும் புத்தரும் சமணரும்// என்று கூறுகிறார்கள்.


இப்பதிவின் மூலம் நான் சொல்ல நினைத்தது என்னவெனில் 

1.சமணம்  என்ற சொல் வட இந்தியாவை பொறுத்தவரை வைதீக (பார்ப்பன) மதம் அல்லாத பிற மதங்களை குறிக்க பயன்படுத்திய சொல் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.இதற்க்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.  ஒன்று சமண என்பதற்கு தேடுபவர் என்ற பொருள் பாளி மொழியில் உள்ளதாகவும். இவர்கள் யாவரும் தவம் மூலம் உண்மையை கண்டறிய முயல்வதால் இவர்களை குறிக்க  சமண என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்றும்  இவர்கள் கடுமையான நடைமுறைகளை மேற்க்கொள்வதால் இவர்களை சிராவண-சிராமண  என்ற சொல்லால் குறித்தனர் என்றும் சொல்லப்படுகிறது. ஜைன, ஆசீவக, பௌத்த மற்றும் வேறு சில மதங்களை சிராமண மதங்கள் என்று அழைத்துள்ளனர். 


2. தமிழகத்தை பொருத்தவரை சமணம் என்ற சொல் ஜைன மற்றும் ஆசீவகமதத்தை  குறிக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் பௌத்தத்தையும் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

3. சமணம் என்ற சொல்லை ஜைனத்துக்கு  மட்டுமே எடுத்துகொண்டு பல ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. உண்மையில் அந்த இடத்தில் சமணம் என்ற சொல் ஜைன, ஆசீவக, பௌத்த மதங்களில் எதை குறிக்கின்றது என்று  தமிழ் அறிஞர்கள் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

4. ஜைன (சைன )மதத்தையோ அல்லது ஆசீவக மதத்தையோ தனியாக  குறிக்க சமணம் என்ற சொல்லை தவிர்க்க வேண்டும் 

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

இவர்கள் ஏன் போலி மது ஒழிப்பு போராளிகள்?

எந்த அரசியல் கட்சி தலைவராவது  தன்னுடைய தொண்டர்களை பார்த்து மது அருந்தாதீர்கள் என்று கூறியது உண்டா? மது அருந்துவதின் பாதகங்களை எடுத்துரைத்தது உண்டா? மதுவிற்கு அடிமையாக உள்ளவர்களை எப்படி மீட்பது என்று சிந்தித்து சொன்னதுண்டா?  இதை எதையும் செய்யாமல் போராட்டம் நடத்துபவரை போலி மது ஒழிப்பு போராளிகள் என்றுதானே சொல்லவேண்டும்?

எனக்கு தெரிந்து ஒரு சில அரசியல் தலைவர்கள் உண்மையாகவே மது ஒழிப்பிற்காக குரல் கொடுத்து வருகின்றனர். அதில் முக்கியாமானவர் மருத்துவர் ஐயா அவர்கள். இவர் அவப்பொழுது  போராட்டங்களும் அறிக்கைகளும் விட்டு வருகின்றார். அடுத்ததாக வைகோ அவர்களை சொல்லலாம். இவர் மது விலக்கை வலியுறுத்தி நடைபயணம் செய்துள்ளார்.  நடை பயணத்திற்கு பிறகு இவர் இதில் எந்த அளவு அக்கறை காட்டினர் என்பது தெரியவில்லை.(இப்பொழுது நடத்தும் போராட்டங்கள் தவிர்த்து). 

மது விலக்கு வேண்டிய இந்த தலைவர்கள் தங்கள் தொண்டர்களுக்கு தன்னுடைய கருத்தை எடுத்து கூறி இருக்கின்றனரா? குடிக்கின்ற எத்தனை பேரை இவர்கள் திருத்தியுள்ளனர்? முதலில் ஒருவன் ஏன் குடிக்கின்றான் என்ற உளவியல் காரணம் இவர்களுக்கு தெரியுமா? மது கிடைக்காவிட்டால் ஒருவனின் மனநிலை என்னவாகும் என்று இவர்களுக்கு தெரியுமா?மதுவால் அடிமை பட்டுள்ளவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது எப்படி என்ற திட்டத்தை முன் வைத்துள்ளனரா?

எனக்கு தெரிந்து இவ்வாறான செயல்களில் இவர்கள் ஈடுபடவில்லை என்றே நினைக்கின்றேன். இவர்களிடம் இதற்கான திட்டங்கள் இருக்கலாம். ஆனால் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. இதுவரை திட்டங்கள் இல்லை எனில் இனி சிந்தித்து திட்டங்களை வகுக்க வேண்டும்.செயல்படுத்த வேண்டும். இவர்களை தவிர்த்து இன்று தமிழகத்தில் நடக்கும் மது ஒழிப்பு போராட்டங்களில் பல போலியானது. பலர் இதை அரசியலாக்கவே முற்படுகின்றனர்.

மதுவிலக்கு பற்றி பேச திமுகவிற்கு எந்த அருகதையும் கிடையாது. அம்மாவின் ஆட்சியில் குறை சொல்ல ஏதுமில்லை என்பதால் மது விலக்கு என்று நாடகம் ஆடுகின்றனர். இதர உதிரி கட்சிகளும் அரசியல் லாபத்திற்காகவே  போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

ஐயா சசி பெருமாள் அவர்களின்  மரணம் வேதனையானது. அவர் கோபுரத்தில் ஏறி இருக்க கூடாது. அவரை தூண்டிவிட்டவர்கள்  மீது ஏன் எந்த வழக்கும் போடவில்லை?

மது விலக்கு போராட்டம் என்று வன்முறையில் இறங்காமல் அமைதியான முறையில் போராடவேண்டும். இவ்விடயத்தில் போராட்டத்தை விட விழிப்புணர்வே அவசியம். கட்சிக்காரகர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும்.

திரைப்படங்களில் வரும் மது, புகைபிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும். 

படிப்படியாகத்தான் மது விலக்கை அமுல் படுத்த வேண்டும். நிச்சயம் மதுவிலக்கு சாத்தியம். எப்படி என்பதை மற்றும் ஒரு பதிவில் பார்க்கலாம். 

வியாழன், 30 ஜூலை, 2015

கலாம் மற்றும் யாக்குபின் வாழ்க்கை நமக்கு சொல்வது என்ன?

இருவருமே பிறப்பால் இசுலாமியர்....
இருவருமே நன்கு கல்வி கற்றவர் ...
இருவருமே குரானை படித்தவர்கள் தான்....
கலாம் அனைத்து மக்களையும் நேசித்தார்....
யாக்குப் மக்களை கொன்றான் ...
கலாம் மதத்ததை கடந்தவர்...யாக்குப் மதத்தால் மரணித்தவன்
மதத்தை கடந்தால் மகானாகலாம் என்று கலாம் வாழ்க்கை சொல்கிறது
மதவெறி பழிவாங்கும் வெறி கொண்டு மக்களை கொன்றால் கொல்லப்படலாம் என்று யாக்குப் வாழ்க்கை சொல்கிறது

கலாமின் வாழ்க்கையும் யாக்குபின் வாழ்க்கையும் நிச்சயம் படிப்பினைதான்...இதை சரியாக புரிந்து கொண்டால் நீங்களும் மகானாகலாம் தவறாக புரிந்து தவறாக நடந்தால் கொல்லப்படலாம்.

கலாமின் மரணம் எனக்கு வருத்தத்தை தரவில்லை .....
அவர் கடைசி மூச்சு உள்ளவரை மக்களுக்காக உழைத்து கொண்டிருந்தார் என்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.வருத்தமும் கொஞ்சம் உண்டு...இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் உயிரோடு இருந்திருக்கலாமே என்று.

யாக்குபின் மரணம் எனக்கு சற்று வருத்தத்தை தந்தது இந்தியா நீதி தவறி விட்டதோ என்று...
--------------------------------------------------

கலாம் பற்றிய சில எதிர்மறை விமர்சனங்களை  படிக்க நேரிட்டது...அவை அர்த்தமற்றவை....அவர்களில் ஒரு சிலர் அடுத்த யாகூபாக கூட மாறலாம் எனபது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
அவர்களுக்கு அவர்கள் வழியிலேயே எனக்கு பதில் சொல்ல தெரியும். என்னுடைய கருத்துக்கள் பிற நல்ல இசுலாமியர்கள் மனதையும் புண்படுத்தும் என்பதால் என்னுடைய  எதிர்வாதத்தை இங்கு தவிர்க்கிறேன்.

 கலாம் கூடங்குளம் குழுவினரை சந்தித்து தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டிருக்கலாம். மற்றபடி அவர் கூடங்குளம்  விடயத்தில் தவறு செய்தார் என்பதற்கில்லை.

யாக்குப் பற்றி சில நேர்மறை விமர்சனங்களை படிக்க நேர்ந்தது...அவற்றில் பாதி அர்த்தமற்றவை....பாதி அர்த்தம் உள்ளவை.
யக்குப் நிரபராதி அல்ல ...அவர் விசாரணைக்கு ஒத்துழைத்தும் மரணதண்டனை அளித்தது என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

இனி ஒரு யாக்குப்  இந்த மண்ணில் பிறக்க கூடாது...யாரும் யாக்குபாக மாறக்கூடாது
இனி பல கலாம்கள் பிறக்க வேண்டும்...பலரும் கலாம்களாக மாற வேண்டும்
அதற்க்கு எல்லாம் வல்ல இறைவன்,கடவுள், இயற்கை துணை நிற்கட்டும்.

என்றும் மனிதத்துடன்
இராச.புரட்சிமணி 
Related Posts Plugin for WordPress, Blogger...