வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வியாழன், 30 ஜூலை, 2015

கலாம் மற்றும் யாக்குபின் வாழ்க்கை நமக்கு சொல்வது என்ன?

இருவருமே பிறப்பால் இசுலாமியர்....
இருவருமே நன்கு கல்வி கற்றவர் ...
இருவருமே குரானை படித்தவர்கள் தான்....
கலாம் அனைத்து மக்களையும் நேசித்தார்....
யாக்குப் மக்களை கொன்றான் ...
கலாம் மதத்ததை கடந்தவர்...யாக்குப் மதத்தால் மரணித்தவன்
மதத்தை கடந்தால் மகானாகலாம் என்று கலாம் வாழ்க்கை சொல்கிறது
மதவெறி பழிவாங்கும் வெறி கொண்டு மக்களை கொன்றால் கொல்லப்படலாம் என்று யாக்குப் வாழ்க்கை சொல்கிறது

கலாமின் வாழ்க்கையும் யாக்குபின் வாழ்க்கையும் நிச்சயம் படிப்பினைதான்...இதை சரியாக புரிந்து கொண்டால் நீங்களும் மகானாகலாம் தவறாக புரிந்து தவறாக நடந்தால் கொல்லப்படலாம்.

கலாமின் மரணம் எனக்கு வருத்தத்தை தரவில்லை .....
அவர் கடைசி மூச்சு உள்ளவரை மக்களுக்காக உழைத்து கொண்டிருந்தார் என்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.வருத்தமும் கொஞ்சம் உண்டு...இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் உயிரோடு இருந்திருக்கலாமே என்று.

யாக்குபின் மரணம் எனக்கு சற்று வருத்தத்தை தந்தது இந்தியா நீதி தவறி விட்டதோ என்று...
--------------------------------------------------

கலாம் பற்றிய சில எதிர்மறை விமர்சனங்களை  படிக்க நேரிட்டது...அவை அர்த்தமற்றவை....அவர்களில் ஒரு சிலர் அடுத்த யாகூபாக கூட மாறலாம் எனபது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
அவர்களுக்கு அவர்கள் வழியிலேயே எனக்கு பதில் சொல்ல தெரியும். என்னுடைய கருத்துக்கள் பிற நல்ல இசுலாமியர்கள் மனதையும் புண்படுத்தும் என்பதால் என்னுடைய  எதிர்வாதத்தை இங்கு தவிர்க்கிறேன்.

 கலாம் கூடங்குளம் குழுவினரை சந்தித்து தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டிருக்கலாம். மற்றபடி அவர் கூடங்குளம்  விடயத்தில் தவறு செய்தார் என்பதற்கில்லை.

யாக்குப் பற்றி சில நேர்மறை விமர்சனங்களை படிக்க நேர்ந்தது...அவற்றில் பாதி அர்த்தமற்றவை....பாதி அர்த்தம் உள்ளவை.
யக்குப் நிரபராதி அல்ல ...அவர் விசாரணைக்கு ஒத்துழைத்தும் மரணதண்டனை அளித்தது என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

இனி ஒரு யாக்குப்  இந்த மண்ணில் பிறக்க கூடாது...யாரும் யாக்குபாக மாறக்கூடாது
இனி பல கலாம்கள் பிறக்க வேண்டும்...பலரும் கலாம்களாக மாற வேண்டும்
அதற்க்கு எல்லாம் வல்ல இறைவன்,கடவுள், இயற்கை துணை நிற்கட்டும்.

என்றும் மனிதத்துடன்
இராச.புரட்சிமணி 

வெள்ளி, 17 ஜூலை, 2015

பாகுபலி படம் மெய்யாலுமே நல்லா இருக்கா?

எல்லோரும் ஆகா ஓகோ என்றதால் இப்படத்திற்கு நேற்று சென்றேன். இல்லாவிட்டாலும் சென்று இருப்பேன் சில நாட்கள் கழித்து. படம் எப்படி இருக்கு என்றால் முதல் பாதியில் பாதி செம மொக்கை என்பேன்.  அதற்க்கு பிறகு கொஞ்சம் பரவாயில்லை. இரண்டாம் பாதி நன்றாகவே உள்ளது. மொத்தத்தில் பார்க்கலாம்.

படம் பார்க்காதவர்கள் இனி படிக்க விரும்பினால் படியுங்கள். 


படத்தின் முதல் காட்சியை இயக்குனர் இப்படி கோட்டை விடுவார் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. பிரம்மாண்டமான அருவி அருமை. சிவகாமி ஆற்றில் அடித்து செல்லப்படுகிறாளா  அல்லது நடக்கிறாளா என்று  தெரியாத மாதிரி ஒரு இயக்கம். ஏன் இப்படி? இந்த காட்சி மனதில் ஒரு படபடப்பை உருவாக்க வேண்டாமா? 

காப்பாற்ற  வருபவர் குழந்தையை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த பெண்ணை காப்பாற்ற முயலாலதும் நன்றாகவே இல்லை.

இருபத்து ஐந்து வரை மலையேறி ஏறி கீழே விழுகிறார் நாயகன். ஆனால் மிகப்பெரும் சிவலிங்கத்தை அசால்ட்டாக தூக்குகிறார். 
பிறந்த குழந்தையாய் இருக்கும் பொழுதே சிவகாமியின் விரலை பலமாக பிடிப்பதால் தான் பாகுபலி என்று பெயர் பெறுகிறார். அவரால் ஏன் இதற்க்கு முன் மலை ஏற முடியவில்லை என்பதற்கு எந்த காரணமும் கூறப்படவில்லை. 
மலை ஏறுவதற்கு உந்து சக்தியாக ஒரு பெண்ணை தேடி நாயகன் செல்வதாக காட்சி படுத்தியுள்ளார்கள்.  இப்படி சிலபல காட்சிகள் சிறுபிள்ளைத்தனமாக சினிமாத்தனமாக உள்ளது.

அடிமை கட்டப்பா இருபத்து ஐந்து ஆண்டுகள் தேவசேனாவை காப்பாற்ற முயலாமல் திடீரென் ஒருநாள் விடுவிக்க நினைப்பது எல்லாம் கதையோடு பொருந்தாதவை.

நாயகன் உடைத்து கொண்டு குதிரையில் வருவதும், வில்லன் நாயகனை காணும் பொழுது தீப்பிழம்பு ஏற்படுவதும், மரம் பற்றி எரியும் காட்சியும் இவரின் மகதீரா படத்தை நினைவு படுத்துகிறது.

பல்லனின் சிலை நிறுவும் காட்சியில் உயிர் இல்லாமல் கலைஞர்கள் ஆடுவதும் பாடுவதும் பிறகு பாகுகுபலியின்  பெயரை கேட்டதும் ஆடல் பாடல் களை கட்டுவதும் அருமை. இதை இன்னும் கொஞ்சம் கூட அமர்க்களப்படுத்தி இருக்கலாம்.

அவந்திகாவை நூற்றுக்கணக்கான எதிரிகளிடமிருந்து பனிமலையை சறுக்கி காப்பாற்றுவதும் பிறகு பாறையை ஓடாமாக பிளந்து சறுக்குவதும் கண் கொள்ளா காட்சி. இவ்வாறு சிலபல காட்சிகள் அருமை.

பாகுபலி போரில் கையாளும் உக்திகள்  அருமை. 
நடிப்பை பொருத்தவரை அனைவரும் அருமை. 

நான் படித்த  வரை அருவி காட்சி, படத்திற்கு அமைக்கப்பட்ட செட், போர்க்காட்சிகளை பற்றி பலரும் புகழ்ந்துள்ளனர்.
இவையாவும் அருமை என்றாலும் இதுவரை நாம் காணாதது என்றெல்லாம் கூற முடியாது.  


படத்தின் பலம் காட்சியமைப்புகளும் சண்டைக்காட்சிகளும்.
முதல் பாதி என்னடா இது என்ற முணுக வைத்தாலும் இரண்டாம் பாதி சற்று விறு விறுப்பாக செல்வதால் படம் தப்பிக்கின்றது. 

நடைமுறையில் சாத்தியமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் உலகத்தரம் என்று கொண்டாடி இருக்கலாம். 

Related Posts Plugin for WordPress, Blogger...