வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

விஸ்வரூபம் சரி குரானில் திருத்தம் தேவையா? இல்லையா?

விசுவரூபம் படத்திற்கு தடை கோரும், துப்பாக்கி படத்தில் திருத்தம் கேட்ட எனதருமை இசுலாமிய சகோதரர்களே,
ஒரு திரைப்படம்  இசுலாமியர்கள் பற்றி மக்கள் மனதில் தவறான பாதிப்பை ஏற்ப்படுத்தும்,இசுலாமியர்களுக்கும் பிற மக்களுக்கும் பிரச்சனையை   உண்டாக்கும் என்று தடை  கோருகிறீர்களே   உங்கள் நல்லெண்ணத்தை நான் பாராட்டுகிறேன்.
ஆனால் நீங்கள் இறைநூலாக கருதும் குரானிலே பிற மத மக்களை பற்றி தவறான கருத்துக்கள் உள்ளதே. இது பற்றி என்றேனும் நீங்கள் கவலைப்பட்டதுண்டா? இந்த வசனங்களை நீங்கள் படித்ததே இல்லையா?இதில் திருத்தம் வேண்டும் என்று நீங்கள் கேட்டதுண்டா?
உங்களில் சிலர் இது பற்றி படிக்காமல் இருந்திருக்கலாம் அவர்களுக்காக சில வசனங்கள்.

5:82நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.

இந்த வசனத்தில் தெள்ளத்தெளிவாக  யூதர்களையும், இணைவைப்பவர்களையும் அதாவது இந்துக்களையும் பகைவராக பார்க்கும்படி குரான் கூறுகிறது. இது எந்த விதத்தில் நியாயம்? இதை நீங்கள் வரவேற்கிறீர்களா?

அல்லாவை வணங்குபவர்களை எதிரிகளாக பாருங்கள் என்று ஒரு நூலில் எழுதி இருந்தால் நீங்கள் சும்மா விட்டு விடுவீர்களா? பொழுதுபோக்கான திரைப்படத்தில் கூட உங்களை அவமதிக்கும் காட்சிகள் இருக்க கூடாது என்கிறீர்களே  ஆனால் இறைவேதம்  எனப்படும் குரானில் இப்படிப்பட்ட வசனங்கள்  இருக்கலாமா? சிந்தியுங்கள் எனதருமை சகோதரர்களே. 

மேற்கூறிய வசனத்தில் கிருத்துவர்கள் பற்றி நல்லபடியாக இருந்தாலும் பின்வரும் வசனம் அவர்களையும் நம்பவேண்டாம் என்கிறது அதையும் பாருங்கள்.

5:51முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

இதில் யூதர்களும் கிருத்துவர்களும் அநியாயக்காரர்கள் என்கிறது குரான். 

இப்படிப்பட்ட வசனங்களை  படிக்கும் ஒரு முஸ்லிம் மனதில் யூதர்களும்,கிருத்துவர்களும்,இந்துக்களும் முஸ்லிம்களுக்கு பகைவர்கள் என்ற எண்ணம் வருமா?  வராதா? சொல்லுங்கள் சகோதரர்களே.


கற்களை வணங்குபவர்கள்-இந்துக்கள்  சாத்தான்களின் நண்பர்களா?
சகோதரர்கள் நீங்கள் அல்லாவை வணங்குகிறீர்கள் அது உங்கள் விருப்பம். ஆனால் கற்களை வணங்குபவர்களை  சாத்தானின் நண்பர்கள் என்று கூறுவது எந்த விதத்தில் சரி?
அப்படிக்கூறும் இறைவேதம்  குரானின் வசனங்களை படியுங்கள்:
5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
4:76. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில்போர் செய்கிறார்கள்; ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.

சாத்தான்கள் என்று மட்டும் சொல்லவில்லை அவர்களுக்கு  எதிராக போர் புரியுங்கள் என்று வேறு இந்த வசனம்  கூறுகிறது. இதைபடிக்கும் முஸ்லிம் மக்கள் மனதில் இந்துக்களை பற்றி தவறான எண்ணமும் இந்துக்களுக்கு  எதிராக போர் புரியவேண்டும் என்ற எண்ணமும் வருமா? வராதா?  என்று நீங்களே சொல்லுங்கள்  சதோதரர்களே. 

போர் கொலை இது பற்றி கூறும் வசனங்கள்:
ஒரு இறைவேதத்தில்  ஏன் கொலைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என எனக்கு புரியவில்லை.

5:33அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.

9:5(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.


9:29வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

மேலே உள்ள வசனங்கள் அல்லாவை நம்பாதவர்களை கொல்ல சொல்கிறது என்றால் கீழே உள்ள வசனம் உங்கள் உயிர்களையும் கொடுக்க சொல்கிறது.


9:41நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.


முகமது நபி ஏதோதோ சொல்லி போர் புரிய சொன்னாலும் சிலர் மறுக்கின்றனர்.  எனவே அவர்களுக்கு நரக நெருப்புதான் கிடைக்கும் என்று பின்வரும் வசனத்தின் மூலம்  பயமுறுத்துகிறார்.

9:81(தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக(த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); “இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் “நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்).


அடைப்பு குறி என்பது அல்லா போட்டது அல்ல நமது மார்க்க அறிஞர்கள் போட்டதுதான். இதை நான் வரவேற்கிறேன்.ஆனால் பல பதிப்புகளில் 
இந்த பதிப்பில் உள்ளதுபோல தேவையான இடத்தில் அடைப்புக்குறி இல்லை. அடைப்புக்குறி இல்லாமல் படித்தால் தான் பின்வரும் வசனத்தின் வீரியத்தை நீங்கள் உணரமுடியும். 

47:4(முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.

இப்படி கொலை, போர் பற்றி ஒரு இறைவேதத்தில் இருந்தால்...அதை  இறைவேதம் என்று நம்புபவன் இந்தமாதிரி செயல்களில் ஈடுபடமாட்டான் என்று கூற இயலுமா?

பின்வரும் வசனம் பிற சமூகத்தினருடன் நட்புறவு கொள்ள வேண்டாம் என்கிறது.

60:13ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள்; ஏனெனில் மண்ணறை வாசிகளைப் பற்றி (எழுப்பப்பட மாட்டார்கள் என்று) நிராகரிப்போர் நம்பிக்கை இழந்தது போல், மறுமையைப் பற்றி, நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.

ஒரு திரைப்படம் மக்கள் மனதில் தவறான பிம்பத்தை ஏற்ப்படுத்தும் என்றால்.குரான் முஸ்லிம்கள் மனதில் தவறான பிம்பத்தை ஏற்ப்படுத்தாதா?
பல முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக மாற இந்த வசனங்கள் உதவியதா அலல்து வேறு காரணமா என இறைவனுக்கே தெரியும்.

புனிதப்போர்-ஜிஹாத்-அறப்போர்,தீவிரவாதம்   அல்லாவின் வியாபாரமா?

சகோதரர்களே அல்லா உங்களுடன் வியாபாரம் செய்கிறார். அதாவது நீங்கள் உங்கள் உயிர்களையும்,உடமைகளையும் கொண்டு போர் புரிந்தால்  அவர் சுவனம் தருவாராம். இந்த வசனத்தை மனதில் வைத்துத் தான் உலகெங்கிலும் பல இசுலாமியர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனரோ எனக்கு அச்சம்  ஏற்ப்படுகிறது சகோதரர்களே. 

61:10ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

61:11. (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

இந்த வசனங்களின் வீர்யத்தை நீங்கள் உணர்வீர்கள் என நினைக்கின்றேன்.

61:12அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.  
சுவனத்த்தில் என்ன உள்ளது பார்த்தீர்களா ஆறு ஓடுமாம். பாலைவனத்தில் இருப்பவர்கள் ஆற்றின் மேல் ஆசைப்படலாம் 
என்பதில் நியாயம் உள்ளது.சரி ஆற்றின் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு? போதிய குடிநீர் கிடைப்பவர்களுக்கு?

பின்வரும் வசனத்தில் அல்லா தன்னுடைய வியாபாரத்தை உறுதிபடுத்துகிறார். அவர்களுக்காக முஸ்லிம்கள் எதிரிகளை (அதாவது யூதர்கள்,கிருத்துவர்கள்,இந்துக்கள் (இதில் நாத்திகவாதிகளும் அடக்கம்) ) கொன்றால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்கிறார். இதை நினைத்து இசுலாமியர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்  என்கிறது பின்வரும் வசனம்.
9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
இது நியாயமா தர்மமா?  சொல்லுங்கள் எனதருமை சோதரர்களே. இதை படிக்கும்  ஒரு முஸ்லிம் மனதில் பிற மதத்தினரை கொல்வது சரி என்ற  எண்ணம் உண்டாகும் இல்லையா? தற்கொலைப் படைகளை ஊக்குவிப்பது போலவே அல்லவா இந்த வசனங்கள்  உள்ளன.  இது தவறில்லையா எனது சகோதரர்களே. இதை திருத்த வேண்டாமா? 
மேலும் ஒரு வசனம் 
2:191(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
பின்வரும் வசனத்தில் பிற மதத்தவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்கிறது.
4:89(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.
இது எந்த விதத்தில் நியாயம் சகோதரர்களே? இதை நீங்கள் ஏற்க்கிறீர்களா? இதை படிக்கும் ஒரு முஸ்லிம் பிற மதத்தவரை எதிரியாகத்தானே பார்ப்பான்?

ஒருவனுக்கு நல்லது  செய்வதால் உனக்கு சுவனம் கிடைக்கும்,பிறர் மீது அன்பு செலுத்தினால் உனக்கு சுவனம் கிடைக்கும் என்று கூறினால் நியாயம். ஆனால் போர் புரிபவர்களுக்கு மட்டுமே என்று கூறி அனைவரையும் போர் புரிய வைப்பது எந்த விதத்தில் நியாயம் எனதருமை சகோதரர்களே? பின்வரும் வசனத்தை பாருங்கள்.
3:142உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?
இது பற்றி நான் என்ன சொல்ல? :(
எந்த ஒரு மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்ற வசனம் நன்றாகவே உள்ளது. ஆனால் குரான் வசனங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா இல்லையா என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகின்றேன்.  
என் புரிதலில்   சில வசனங்கள்  தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவே உள்ளது. இல்லை இந்த வசனங்களுக்கு வேறு அர்த்தம் என்றால் அந்த அர்த்தம் என்னவென்று நீங்கள் மக்களுக்கு சொல்லவேண்டாமா? ஒவ்வொரு குரானிலும்  விளக்கத்தை தரவேண்டாமா? போதிய திருத்தத்தை செய்யவேண்டாமா ? கூறுங்கள் எனதருமை சகோதரர்களே.
ஒரு திரைப்படத்தினால் பாதிப்பு ஏற்ப்படும் என்பது உண்மையானால்  குரானால் பாதிப்பு ஏற்படுமா இல்லையா? 
குரான் எனபது சாதரான புத்தகம் அல்ல. இதை நீங்கள் இறைவேதமாக நம்புகிறீர்கள். ஒவ்வொரு முறை தொழும்போழுதும் இதிலிருந்து வசனங்கள் படிக்கப்படுகின்றன  என அறிகிறேன்.  ஒவ்வொரு மனிதனும் இதை   இறைவேதமாக ஏற்க்கவேண்டும் என்று உங்களில் பலரும் பிரச்சாரம் கூட செய்கிறீர்கள்.
சமூக நல்லிணக்கத்தை திரைப்படம் கெடுக்கும் என்று தடை கேட்கிறீர்கள். குரான் வசனங்களும் சமூக  நல்லிணக்கத்தை கெடுப்பதாக  உள்ளது எனபதை நீங்கள் உணர்வீர்கள்  என நினைக்கின்றேன்.

இந்த பதிவை படிக்கும்பொழுது நிச்சயம் என் மீது உங்களுக்கு கோபம் வரும். ஆனால் நீங்கள் சிந்தித்து பாருங்கள் நானாக எதையும் கூறவில்லை. குரானில்  இருக்கும் சில வசனங்களைத்தான் எடுத்துக்காட்டியுள்ளேன்.  உங்களுக்கு கோபம் யார் மீது வரவேண்டுமெனில்  இந்த குரான் வசனங்களை தீவிரவாதத்திற்கு பயன்படுத்துபவர்கள் மீது வரவேண்டும்.இதை மேலும் பலர் தவறாக பயன்படுத்தாதவரு நீங்கள் சிந்தித்து செயல்படவேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம் .

போர் பற்றி கூறும் வசனங்களுக்கு என்ன விளக்கங்கள் மார்க்கபந்துகள் கூறுகின்றனர் என அறிவேன்.
போர் என்பது வரலாற்றில் பிற நாட்டின் மீதுதான் எடுக்கப்பட்டுள்ளன். ஆனால் குரான் வசனங்கள் என்ன கூறுகின்றன?
முஸ்லிம் அல்லாதவர்களை அல்லவா வெறுக்க சொல்கிறது, எதிரியாக பார்க்க சொல்கிறது,கொல்ல  சொல்கிறது?
எனவே இது மதத்தை அடிப்படையாக வைத்துத்தான் கூறப்படுகிறதே தவிர நாட்டினை அடிப்படையாக அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள் எனது சகோதரர்களே.(இது என்னுடைய புரிதல் இதற்க்கு சரியான விளக்கத்தை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.)

மற்றும் ஒரு விளக்கம் என்ன கூறலாம் எனில் இவைகள் அந்த காலத்தில் கூறிய வசனங்கள் இந்த காலத்திற்கு பொருந்தாது. அப்படி எனில் ஏன் இந்த வசனங்கள்?  இதை திருத்தலாம் அல்லவா?
குரான் என்பது வாழ்வியல் நூலா வரலாற்று நூலா? 
யூதர்களையும்,கிருத்துவர்களையும்,சிலை வணங்கிகளையும்,இணைவைப்பவர்களையும் எதிரியாக பாருங்கள்    என்ற வசனம் ஒவ்வொரு முறை குரான் படிக்கும் பொழுதும் ஒரு முஸ்லிமை எந்த மனநிலைக்கு உள்ளாக்கும் என்று சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.

உங்களில் சிலர் கேட்கலாம். நான் முஸ்லிம்தான் ஆனால் நான் பிறரை எதிரியாக பார்க்கவில்லையே என்று.
இதற்க்கு காரணம் குரானின் இந்த வசனங்களை நீங்கள் இதுவரை படிக்காமல் இருந்திருக்கலாம். அல்லது இந்த வசனங்களுக்கு சரியான / தவறான   விளக்கங்கள் உங்களுக்கு அளிக்கபபட்டிருக்கலாம் . நமது தமிழ் சமூகத்தில் நிலவும் 
மத சகிப்புத்தன்மை உங்கள் மனதிலும் இருக்கலாம். இது நல்ல விடயமே. ஆனால் எதிர்கலாத்தில் மக்கள் இந்த குரான் வசனங்களை மனதில் கொண்டு பிற மத மக்களை வெறுக்க ஆரமபிக்கலாம்,பிற மத மக்களை கொன்றால்தான் சுவனம் என நம்பி தீவிரவாதத்தில் ஈடுபடலாம் அல்லவா? சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.

இப்படி நடக்க வாய்ப்புண்டா என்று நீங்கள் கேட்கலாம். பல தீவிரவாதிகளின் செயல்கள் இதற்க்கு வாய்ப்பு உண்டு என்றே நம்பசொல்கிறது.

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பேசிக்கொண்டது :
நாம் அல்லாவின் அடிமைகள்,இசுலாமை பரப்புவதற்காக அல்லா நம்மை அனுப்பியுள்ளார். சண்டையில் இறக்கவேண்டும்,இறந்தால் நமக்கு சுவனம். நாம் இறக்கும் விதம் எதிரிகளுக்கு பயத்தை உண்டாக்கவேண்டும் என்று பேசிக்கொண்டுள்ளனர்.
அவர்கள் பேசிக்கொண்டதன் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே:

 My friend, may Allah accept your deed. Balm has been put on the wounds of many people. Do not forget the prayer that we made you learn; wherever you sit recite the prayer three times.

"Tell  my  ‘Salaam’  to  the  rest  of  the  brothers.  Be strong  in your actions; in your actions instill strength.  You have left this world. Paradise is far better than this world. You must fulfil your promises, which are true promises. Pray for us too"


 "God willing, you know, what I mean is at this time the issue is between Islam and heresy. We are the slaves of God whom he has sent for expansion of the true faith. I mean, death as a martyr is a big thing. But the style of martyrdom should be such as to put fright in the
heart of the enemies and that is the style of martyrdom. What I mean is there is nothing to fear, the message of the martyr must be put
forward"

 ''Pray. It is time for prayer and keep your promise to Allah. All right!''

Fight in such a way, they should feel that Allah’s lion is after them.

My brother you have to be strong. Do not be afraid. God willing. If you are hit by a bullet, in that is your success. God is waiting for you.


படித்தீர்களா சகோதரர்களே,
 அல்லா  குரானில் எனக்காக உங்களது உயிர்களை கொடுத்து சண்டையிட்டால் அதில் இறந்தால் உங்களுக்கு சுவனம் என்கிறார். அதைத்தான் இந்த தீவிரவாதிகளும் செய்துள்ளனர்.அப்படித்தான் பேசிக்கொண்டுள்ளனர். எனவே குரான் வசனங்களும் (அதை தவறாக அல்லது புரிந்துகொள்ளுதல்) இதற்க்கு  ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் அல்லாவா? 

இந்த உண்மை உங்களுக்கு கசப்பாகத்தான் இருக்கும். இந்த தீவிரவாதிகளால் உயிரை இழந்தது இந்துக்களும்,யூதர்களும் மட்டுமல்ல இந்தியாவில் இருந்த அப்பாவி முஸ்லிம்களும் தான்.

குர்ஆனில்  இருக்கும் வசனங்களுக்கு ஏற்ப்பத்தான் சிலர் தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றனர் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும் என நினைக்கின்றேன்.

தீவிரவாதத்தால் முஸ்லிம் மக்களும் கொல்லப்படுகின்றனரே என்று நீங்கள் கேட்கலாம்.
உண்மைதான் ஷியா மக்கள் கொல்லப்படுவதற்கு குரானை நான் காரணம் காட்ட மாட்டேன் எனக்கு அதுபற்றி தெரியவில்லை. ஆனால் சூபி மக்கள் கொல்லப்படுவதற்கு சில குரான் வசனங்கள் காரணமாக இருக்கலாம்.
ஏன் எனில் இன்று வாகாபியம்  சூபிக்களின் தர்க்கா வழிபாடும் இணைவைத்தலே என்கிறது.குர்ஆனில்  சில வசனங்கள் இணைவைப்பவர்களை எதிரியாக பார்க்கவும்,கொல்லவும் சொல்கிறது . எனவே சில வசனங்கள் காரணமாக இருக்கலாம்.

குர்ஆனில் பல நல்ல கருத்துக்கள் உள்ளன என்பதை நான் ஏற்கிறேன். அதே நேரத்தில் சில வசனங்களால் மக்கள் மூளைசலவை செய்யப்பட்டு தீவிரவாதிகளாக மாற்றப்படுகிறார்கள் எனில் அந்த வசனத்திற்கு சரியான போதிய விளக்கமோ அல்லது அந்த வசனங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை இடைச்சொருகல் என்று கூறி நீக்குதல் என்பது மக்களை நல்வழிப்படுத்தும் எனபதே என் கருத்து.

இப்பதிவின் நோக்கம் குரானை இழிவுபடுத்தவேண்டும் எனபதல்ல மாறாக குர்ஆனில் உள்ள சில வசனங்கள்  தவறாக புரிந்து கொள்ளும் வகையில்  உள்ளன அதற்க்கு நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியே இந்த பதிவு .

ஒரு திரைப்படம் முஸ்லிம்களை  தீவிரவாதிகளாக காட்டினால் உங்கள் மனம் புண்படுவது போலத்தானே உங்கள் இறைவேதம் யூதர்களையும்,சிலை வணங்கிகளையும்(இந்துக்கள்,கிருத்துவர்கள்), இணை வைப்பவர்களையும் (இந்து,முஸ்லிம் சூபிக்கள்) எதிரிகள்,பகைவர்கள்,சாத்தான்கள் அவர்களை கொல்லுங்கள் என்பதும் அவர்கள் மனதை புண்படுத்தும்?. சிந்தித்து பாருங்கள் எனதருமை சகோதரர்களே. தேவையான திருத்தத்தை,விளக்கத்தை கொண்டுவர முயலுங்கள்.

இந்தப்பதிவு உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும்.இப்பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன். இந்த பதிவிற்கு மறுப்பை பதிவாக தந்தாள் அந்த பதிவை இதே தளத்தில் வெளியிடுகிறேன். என்றும் வாய்மையே வெல்லட்டும்.மனிதமே வெல்லட்டும். எல்லாம்வல்ல இறைவன் நம் அனைவர் மீதும் சாந்தியும்  அமைதியும் உண்மையில் உண்டாக்குவானாக. 


என்றும் அன்புடன் 
இராச.புரட்சிமணி 

வெள்ளி, 25 ஜனவரி, 2013

கமல் இசுலாம் எதிரியா? இந்து எதிரியா?


கமல் இசுலாம் எதிரியா? இந்து எதிரியா?
கமலை முஸ்லிம்கள் இசுலாம் எதிரியாக கூறுகின்றனர். ஒரு இந்து கூறினார் அன்பே சிவம் இந்துக்களுக்கு எதிரான படம் என்று. இதையொட்டி அரைத்தூக்கத்தில் என் மனதில் எழுந்த சிந்தனையே இந்த பதிவு.

கமலை இசுலாமின் எதிரியாக சித்தரித்து பலரும் இணையத்தில் எழுதி வருகின்றனர். ஆனால் அவர் ஒரு இசுலாமிய அனுதாபி என்பதை ஏன் யாரும் கூறவில்லை? ஆம் கமல் ஒரு இசுலாமிய அனுதாபி.

1.சிறு வயதில் பொதிகை தொலைகாட்சி என நினைக்கின்றேன் அதில் குரானை தான் படித்ததாக சிலாகித்து கூறி இருந்தார். இவர் கீதையை பற்றி இப்படி கூறியதாக எனக்கு தெரியவில்லை.

2.உன்னைப்போல் ஒருவன் இசுலாமியர்களுக்கு எதிரான படம் என்று சில முஸ்லிம்கள் கூறுகின்றனர். உண்மையில் அந்த படத்தில் கமல் ஒரு முஸ்லிம். அவர் அதை மறைமுகமாக கூறியிருப்பார்.அதை புரிந்துகொள்ளும் 
சக்தி நமது மக்களிடம் இல்லை. அந்தப் படத்தில்  அவர் தனது மனைவியுடன் பேசும்பொழுது "இன்ஷா அல்லா" வேலை என்று கூறுவார். அரபி மொழியிலோ உருது மொழியிலோ  கூட சில வசனங்கள்பேசுவார். கர்ப்பிணிப்பெண் கருவருக்கப் பட்டதை பற்றி அந்த படத்தில் பேசுவார் உண்மையில் அது குஜராத் கலவரத்தின் போது   முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்தான்.  இந்த படத்தில் கமல் வெளிப்படையாக தன்னை முஸ்லிம் என்று கூறியிருக்க வேண்டும். மறைமுகமாக கூறப்போயி அது பலருக்கும் புரியாமல் போய்விட்டது.

3.ஹேராம் -படத்தில்  முஸ்லிம் ஷாருக்கானை நல்லவனாகவும்,படத்தில் இந்துவாகிய தன்னை கெட்டவனாகவும் தான் காட்டி இருப்பார்.

3. அன்பே சிவம் இந்து மதத்தை ஆதரிக்கும்  படம் என்று ஒரு முஸ்லிம் எழுதிருந்தார். நேற்று ஒருவர் அன்பே சிவம் இந்து மதத்திற்கு எதிரான படம் என்றார். சிந்தித்து பார்த்தால் அந்த படத்தில் வரும் வில்லன்  ஒரு சைவ இந்து.சிவபக்தன். ஒவ்வொரு முறை தவறு செய்ய முடிவு எடுத்த பின்பும் "தென்னாடுடைய சிவனே போற்றி" என்று கூறுவார். கமலை மருத்துவமனையில் கொல்ல முயற்சிக்கும் காட்சியிலும் இப்படித்தான்.
எப்படிடா ஒரு சிவ பக்தனை கெட்டவனாக காட்டலாம் என்று எந்த இந்துவும் கேட்டமாதிரி தெரியவில்லை.

அதுமட்டுமல்ல அந்த படத்தில் தேவையே இல்லாமல் அந்த கெட்டவன்   படையாட்சி என்ற சாதியை சார்ந்தவனாக காட்டப்ப்பட்டிருப்பான். பாபா திரைப்படத்தை எதிர்த்த பா.மா.க  இந்த படத்தை எதிர்த்த மாதிரி தெரியவில்லை.

4. தசாவதாரம் திரைப்படத்திலும் சிவபக்தர்களை கெட்டவர்களாக காட்டியிருப்பார்.

5. விசுவரூபம் திரைப்படம் தலைப்பே அரபி மொழியை குறிப்பது போல இருக்கும். இது முஸ்லிம் ஆதரவு. தமிழ் மொழியை வட மொழியிடமிருந்து  காப்பாற்றிய பகுத்தறிவாதிகள், தமிழ் மொழியை அரபி மொழி அழிப்பதை, அழிக்கப்போவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். 
சமஸ்கிருதத்தில் பூஜை செய்யகூடாது என சொல்லத் தெரிந்தவர்களுக்கு, அரபி மொழியில் தொழுகை அழைப்பு கூடாது என சொல்லத்தெரியவில்லை.

தமிழ் மொழியில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால் அதற்க்கு சலுகை என்று கூறி  தமிழ் வளர்க்கும் அதிபுத்திசாலிகளுக்கு தமிழ் மொழியில் பெயர் வைத்து  சலுகை பெற்று  தமிழ் வளருங்கள் முஸ்லிம்களே என  கூற அறிவில்லாதது ஏனோ? ( அதேபோல கிருத்துவ மதத்திலும் தமிழ் பெயர்கள் குறைந்து வருகிறது. இந்து மத மக்களிடமும் ஒருசில அந்நிய மொழி பெயர்கள் வளர்கிறது என்பதை மறுப்பதற்கில்லை )

 விசுவரூபம் படமும் இசுலாமியர்கள் ஆதரவு படமாகத்தான் கமல் எடுத்திருப்பார். ஆனால் என்ன அதை  இசுலாமிய அமைப்பு தலைவர்கள் சரியாக புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன். 


ஒரு மதத்தை,அந்த மக்களை  புண்படுத்துகிறது என தடை செய்ய ஆரம்பித்தால் ஒரு மத புத்தகத்தையே தடை செய்யலாம்.
மத பிரச்சாரங்களை தடை செய்யலாம்.
 பெரியார் இந்து மதத்திற்கு எதிராக எழுதிய எழுத்துக்களை கூட தடை செய்யலாம். 
 நாங்கள் போராட்டம் செய்வோம் என்று சிலர்  மிரட்டினால் தான் அரசாங்கம் இவற்றை செய்யும் என நினைக்கின்றேன்.
எம்மதமும் சம்மதம்,பகுத்தறிவு,நாத்திகம்,மத சகிப்புத்தன்மை  என்று  வாழும்  தமிழ் இந்து மக்களுக்கு இது தெரியாது..புரியாது. விசுவரூபம் பட எதிர்ப்பை பார்த்து,எதிர்காலத்தில் இந்த மாதிரி நிகழ்வுகளை பார்த்து  இந்துக்களும்  மத சகிப்புத்தன்மையை விட்டால் அது தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்.

என்னைப்பொருத்தவரை இதுநாள் வரை நான் கமலை இசுலாம் அனுதாபியாகத்தான் பார்க்கிறேன். அதே நேரத்தில் இந்து மத எதிரியாக அவரை  பார்க்கவில்லை என்பதையும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.
எனது கவலை எல்லாம் இசுலாமியர்களுக்கு மத சகிப்புத்தன்மை குறைந்துவருவதுபோல தெரிகிறது.
இதற்க்கு இசுலாமிய சகோதரர்களை குறை சொல்வதைவிட நமது திராவிட அரசியல்வாதிகளையே நான் குறை கூறுவேன்.

ஒசாமா பின்லேடனையும்,அஜ்மல் கசாபையும்,தாலிபான்கள் செயல்களையும்  சில முஸ்லிம்கள் ஆதரிப்பதாக சிலர் கூறுகின்றனர். அவர்களுக்கு மதவெறி அதிகமாகிறதா என என்னைக்கேட்டால் அதற்க்கு விடையாக நான் முகமது நபி
 வார்த்தைகளைத்தான் விடையாக கொடுப்பேன். 

ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்).

குறிப்பு:இந்த பதிவு கமலுக்கோ ,இந்துக்களுக்கோ,முஸ்லிம்களுக்கோ  ஆதரவானதும் அல்ல  எதிரானதும் அல்ல. நான் உண்மையாக நினைப்பவற்றை பகிர்ந்துள்ளேன் அவ்வளவே. 
தவறுகளை சுட்டிகாட்டினால் திருத்திக்கொள்கிறேன்.

பிற்சேர்க்கை: விசுவரூபம் திரைப்படத்தை இசுலாமிய அமைப்புகளுக்கு காட்ட வேண்டும் என்று சட்டப்படி எந்த அவசியமும் இல்லாதபொழுது அவர் முஸ்லிம் அமைப்புகளின் உணர்வுகளை மதித்து படம் காட்டி இருக்கிறார் எனும்பொழுது கமல் முஸ்லிம் மக்களுடன் நட்புறவை பேணவே விரும்புகிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

மிலாடி  நபி கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு  எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


என்றும் அன்புடன் 
இராச.புரட்சிமணி 

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

முகமது நபி உண்மையில் அருளிய மார்க்கம் என்ன?


இசுலாம் என்பது மதம் அல்ல  அது மார்க்கம் என்று கூறும்  மார்க்க சகோக்களே 
  உண்மையில் அதன் பொருளை  நீங்கள்  அறிந்திருந்தால் இசுலாம் மட்டுமே இறைவனை அடையும் ஒரே வழி என்று கூறுவீர்களா என்பது சந்தேகமே. ஏதோ எனக்கு புரிந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

முகமது நபி இறைவனை அடைய இசுலாமியர்களுக்கு  மூன்று மார்க்கங்களை அதாவது வழிகளை  அளித்துள்ளார்.(இதை மூன்று வழியாகவும் பார்க்கலாம் அல்லது இறைவனை அடையும் 3 படி நிலைகளாகவும் பார்க்கலாம்.)
 அவை இசுலாம், ஈமான்,  இஹ்சான்.

சரி இசுலாம் என்பது என்ன?
முகமது நபியே சொலிகிறார்....
 "இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் "ஹஜ்' செய்வதும் ஆகும்'' 

.இது ஒரு அடிப்படை நிலை  அவ்வளவுதான். சரி அடுத்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் ? அவர்கள் ஈமான் கொள்ள வேண்டும்.

சரி ஈமான் என்பது என்ன?

 "அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்'' 

அதாவது குரான் எனும் ஒரு வேதத்தை மட்டுமே ஏற்காமல்,கிருத்துவம்,யூதம் ஆகியவற்றில் உள்ள வேதத்தையும்,அவர்களின் தூதர்களையும் ஏற்க்க வேண்டும்.

ஆனால்  இசுலாமை ஏற்காமலும்,ஈமான் கொள்ளாமலும் யூதர்களும், கிருத்துவர்களும் இருக்கலாம் என்று குரான் கூறுகிறது.

2:62ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

 இசுலாம் என்பது அடிப்படை ஈமான் என்பது இரண்டாம் நிலை.
சரி அடுத்த நிலை? அதுதான் இஹ்ஸான்.

“(இஹ்ஸான் என்பது) அல்லாஹுவை அவனைப் பார்ப்பது போன்று நீ வணங்குவதாக இருக்கும், அப்படி (அகப்பார்வையினால்) நீ அவனைப் பார்ப்பவனாக ஆகியிருக்கவில்லையானால், அவன் உன்னை நிச்சயமாக பார்த்தவனாகவே இருக்கின்றான்.


இங்கே கூறப்படுவது என்னவெனில் தியானம். உண்மையில் பார்ப்பனன் என்பதன் பொருளும் இதுவே. பார்ப்பனன் என்பதற்கு சிலர் தன்னை பார்ப்பவனை பார்ப்பவன் என்று கூறுகிறார்கள். தன்னை பார்க்கும் இறைவனை தான் பார்த்தல். இந்த நிலைதான் இஹ்சான் நிலை. இதைத்தான் சுபிக்கள் செய்கின்றனர்.
வாகாபிய சகோக்களே,
இது  பற்றி நீங்கள் இதுவரை பதிவு எழுதியுள்ளீர்களா?
இஹ்சான்  நிலையை அடைய நீங்கள் முயற்சி செய்துள்ளீர்களா?
சுபிக்கள் இந்த நிலையை அடைய முயல்வதை தடுப்பது மடமை என்று உங்களுக்கு தோன்றவில்லையா?

இறைவனை பார்த்தலே வணங்குதல். நீ பார்க்க முயற்சி செய். நீ பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதே அந்த ஹதீஸின் பொருள்.இதைத்தான் வள்ளலார் இறைவழிபாடு,ஒளிவழிபாடு என்கிறார்.

யூதர்களும்,கிருத்துவர்களும் இசுலாமை ஏற்காமல் நன்மை பெறலாம் என்றேன்.  சிலை வணங்கிகளுக்கு  அப்படி ஏதும் இல்லையா என்றால் நிச்சயம் உண்டு.

முகமது நபியும் ஒரு சிலை வணங்கியாக இருந்தவர்தான் என்பதை யாரும் மறக்க கூடாது. அவர் வஹி எனும் இறை தரிசனம் பெற காரணம் அவர் தியானம் செய்ததுதான். அவர் அடிக்கடி ஹிரா மலையில் தியானம் செய்துள்ளார். எனவே இங்கே இசுலாமை ஏற்க்க வேண்டும் என்று சிலை வணங்கிகளுக்கு (இந்துக்களுக்கு) எந்த அவசியமும் இல்லை. எது முக்கியம் எனில் தியானம் செய்தல்.


இசுலாமியர்கள் இசுலாம் எனும் அடிப்படையிலே நின்று விடாமல், அவர்கள் ஈமான் கொண்டவர்களாக மாறவேண்டும். தற்பொழுது ஈமான் கொண்டவர்கள் இஹ்சான் நிலையை அடைய வேண்டும். 

பிறரை எதிரியாக பாருங்கள், வெட்டுங்கள், குத்துங்கள் என்ற வசனங்களை புறந்தள்ளிவிட்டு, இசுலாமை நாம் காப்பாற்ற வேண்டும் அதற்க்கு பிரச்சாரம்  செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் விட்டுவிட்டு நாம் எப்படி இஹ்சான் நிலையை அடையலாம் என்று சிந்தியுங்கள். அதை நோக்கி செல்லுங்கள். 

யூதர்களையும்,கிருத்துவர்களையும்,இந்துக்களையும் மதம் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்பதை குரான் மூலமாகவும் ஹதீஸின் துணை கொண்டும் விளக்கியுள்ளேன் என்று நம்புகிறேன். மேலும் இசுலாமியர்கள் அடையவேண்டிய உயர்நிலை இஹ்சான் எனும் தியான நிலை என்பதும் விளங்கும் என்று நம்புகிறேன்.

 இடைச்சொருகல் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மார்க்கத்தை காலத்திற்கு ஏற்றவாறு சீர்திருத்தி கொள்வதே நல்லது.முன்னுக்குப்பின் முரணான பல விடயங்களை ஆராய்ந்தாலே உங்களுக்கு உண்மை புரியும்.

வஹி என்பது முகமதுவிற்கு மட்டுமே அளிக்கப்பட்டதல்ல ஒவ்வொரு மனிதனும் அவர் கண்டதை காணலாம். உணர்ந்ததை உணரலாம்.  இஹ்சான் எனும் உயர் நிலையை அடைய  முயலுங்கள்.

என்றும் அன்புடன் 
இராச.புரட்சிமணி 

இதை எழுத உதவிய பதிவு: http://onameen.blogspot.in/2011/08/blog-post_27.html
இஹ்சான் நிலையுடன் (மறைமுக) தொடர்புடைய பதிவு: http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2013/01/blog-post.html

புதன், 9 ஜனவரி, 2013

இந்த முஸ்லிம் வெறியனை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?


காவல்துறை அகற்றப்பட்டால் நாங்கள் 25 கோடி முஸ்லிம்கள் 15 நிமிடத்தில் 100 கோடி இந்துக்களை கொன்றுவிடுவோம் என்று கூறிய இந்த முஸ்லிம் வெறியனை பதிவுலகில்  யாரும் கண்டித்த மாதிரி  எனக்கு தெரியவில்லை. 

இவனது பேச்சை சில  பல முஸ்லிம்கள் வழிமொழியமாட்டார்கள் என எனக்கு தெரியும் . ஆனால் சில  முஸ்லிம்கள் இதை வழிமொழிகிறார்கள் எனபது வேதனையான செய்தி.

நமது திராவிட,பகுத்தறிவு,கம்யுனிஸ்டு,தலித் தலைவர்கள் இதை ரசித்தார்களா என தெரியவில்லை. அவன் கூறிய அந்த 100 கோடி இந்துக்களில் தான் இவர்களும் உள்ளனனர் என்பதை அறிய இன்னும் கொஞ்சம் காலம் தான் இவர்களுக்கு தேவைப்படப் போகிறது.

பார்பனீயத்தை விட பல மடங்கு அபாயகரமானது இந்த வாகாபிய இசுலாமியம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளும்பொழுது நிலைமை கை மீறியிருக்கும். வாகாபியம் பிற மத மக்களுக்கு  மட்டுமல்ல பல பிரிவு முஸ்லிம்களுக்கும் கூட அச்சுறுத்தல் தான்.

100 கோடி இந்துக்களை கொல்ல வேண்டும்,  கடந்த ஆயிரம் ஆண்டுகளில் கொல்லப்பட்ட இந்துக்களை விட நிறைய இந்துக்களை நாம் கொல்வோம்  என்று கூறிய அக்பருதீன் ஒவைசி ஒன்னும் சாதாரண ஆள் அல்ல.
ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்,முஸ்லிம் மக்களின் பிரதிநிதி. அவரின் கட்சி மஜ்லிஸ் இ இத்தேஹதுல் முஸ்லிமீன். அவரை(னை) உடனடியாக கைது செய்யாமல் அரசு காலம் கடத்தியது. தமிழ் படத்தில் வருவது போல உடம்பு சரியில்லை என்று மருத்துவமனையில் படுத்துக்கொண்டான். இன்று இவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

இவன் இப்படி பேசியது திசம்பர் 24 அன்று. ஆனால் கைது செய்யப்படுவதோ இன்றுதான். சமுதாய வலைத்தளத்தில் கருத்து சொன்ன இரண்டு பெண்களை உடனடியாக கைது செய்ததது (அதில் ஒரு முஸ்லிம் பெண் ,ஒரு இந்துப்பெண்), கார்த்தி சிதம்பரம் அதிக சொத்து சேர்த்துள்ளார் என்று கூறியதற்கு நள்ளிரவில் ஒருவரை கைது செய்தது அரசு.  இந்த இந்தியாவில் என்ன நடக்கின்றது?

சில முஸ்லிம்கள் உடனடியாக கேட்பது குஜராஜ் கலவரம் மட்டும் சரியா என்று. உண்மையில் அது நியாயம் இல்லைதான்.  அது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்.அதில் ஈடுபட்டவர்கள் கடுமையான தண்டனைக்குஉள்ளாக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த மாதிரி பேச்சு, சிந்தனை சரியா என்று சிந்தியுங்கள்.

இசுலாம் மதத்திற்காகவும்,நபிக்காகவும் உயிரை கொடுக்கலாம் என்ற மூளைச்சலவையை தயவு செய்து ஏற்காதீர்கள்.

இன்று பல ஹதீசுகளை இடைச்செருகல் என்று  கூறுகிறார்கள். அதுபோல யூதர்களையும், சிலை வணங்கிகளையும் பற்றிய 
5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்;
கருத்துக்களும் இடைச்செருகலாக இருக்கலாம் அல்லவா?  அப்படியே இல்லை என்றாலும். இந்த கருத்துக்கள் அந்த காலத்திற்கு மட்டுமே அவர் கூறினார் இந்த காலத்திற்கு அல்ல என்று ஒதுக்கி தள்ளுதல் தான் நியாயம் இல்லையா?

மனித குலத்திற்கு விரோதமான எந்த கருத்தையும் எக்காலத்திற்கும் பொருந்தும்படி எந்த இறைதூதணும் கூறி இருக்க முடியாது. அப்படி கூறி இருந்தால் அவர் இறைதூதானே அல்ல என்பதை மனதில் வையுங்கள்.

நான் முகமது நபியை பற்றி படித்த வரை அவர் யோக வழியில் சென்றுள்ளார் என்பது நன்கு விளங்குகிறது. ஆனால் அவர்  கூறியதாக கூறப்படும் சில கருத்துக்களை என்னால் ஏற்க்க இயலவில்லை. அவைகள்  இடைச்செருகலாக இருக்க வாய்ப்புள்ளது. 

மனித குலத்திற்கு நன்மை பயக்க கூடிய கருத்துக்களை எடுத்துக்கொண்டு பிற கருத்துக்களை நீக்கினால் தான் மனிதகுலம் செழிக்கும். எனவே எல்லாவற்றையும் இறைவேதம் என்று ஏற்காமல் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த பதிவு நல்ல முஸ்லிம்கள் மனதை எந்தவிதத்திலும் புண்படுத்தாது என்று நம்புகிறேன்.  அக்பருதீன் ஒவைசி பேச்சை கண்டித்த சில முஸ்லிம் சகோதரர்களை நான் பாராட்டுகிறேன். இதை கண்டிக்காத போலி மதச் சார்பின்மை வாதிகளுக்கு என் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

முகமது நபி உண்மையில் தந்த மார்க்கம் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். 

இதை எழுத உதவிய கட்டுரைகள்:
http://www.4tamilmedia.com/newses/india/10861-2013-01-03-08-25-22
http://indianfusion.aglasem.com/akbaruddin-owaisi-hate-speech-video/

பதிவிட்டவுடன் படித்தது:

விஷுவ ஹிந்து பரிஷத்(VHP) தலைவர் பிரவீன் தொகடியா.
ஹைதராபாத் சார்மினார் அருகே உள்ள பாக்கியலட்சுமி கோவில் விவகாரம்தொடர்பாக டிசம்பர் 7 நடந்த பொதுக்கூட்டத்தில் இவர் பேசியது:
"பாக்கியலட்சுமி கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதிக்காவிட்டால், ஹைதராபாத்தை அய்யோத்தியாக மாற்ற வேண்டிய நிலை வரும். இங்குள்ள முஸ்லிம்களுக்கு மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவோம் "

இப்படி கூறிய  இந்து மத வெறி பிடித்தவனுக்கும் கடும் கண்டனங்கள்.இவனையும் அரசு உடனடியாக கைது செய்யட்டும்.

செவ்வாய், 8 ஜனவரி, 2013

வன்புணர்வுகளுக்கு உண்மையில் என்ன காரணம்? அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?


இந்த பதிவு சிலருக்கு முட்டாள்தனமாக இருக்கலாம். இருப்பினும் சொல்லவேண்டியது என் கடமை.

வன்புணர்வுகள் சமீபகாலமாக அதிகரிப்பதாக தெரிந்தாலும் அது உண்மையல்ல. ஊடகத்துறை வளர்ச்சி பெற்றுள்ளதால் நமக்கு அவ்வாறு தெரிகின்றது.

காலம் காலமாக வன்புணர்வுகள் என்பது நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இதற்க்கு என்ன காரணம் என்று பார்த்தால் மனிதர்கள் மிருகங்கள் என்ற ஒரு விடைதான் கிடைக்கும். மிருகத்திலிருந்து பரிணமித்த மனிதர்களுக்கு இன்னும் மிருகக்குணம் குறையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். (இல்லை இறைவன் நம்மை படைத்து சோதனை செய்கிறான்,இறுதி நாளில் தீர்ப்பு, தண்டனை உண்டு  என்று உளறினால் கற்பழிப்புகள் என்ன மாதிரி சோதனை என்று  விளக்குங்கள்)

உணவு,உறைவிடம் இவைகள் மனிதனுக்கு அடிப்படைத்  தேவைகள்.மனிதனுக்கு மட்டுமல்ல மிருகத்திற்கும் இவை அடிப்படைத்தேவைதான்.( மனிதனுக்கு இதனுடன் உடை என்பதும்  அவசியமாகிறது.) மனிதனுக்கும் மிருகத்திற்கும் மற்றும் ஒரு அடிப்படை தேவை உள்ளது. அது உடல் உறவு.

உணவுப்பசியையும் உடல்பசியையும் கட்டுப்படுத்துவது சாதாரண மனிதர்களுக்கு சாத்தியமில்லை. எனவே இவைகள் மனித வாழ்வில் அதி முக்கியத்துவம் பெறுகின்றன. மனிதன் தன்னுடைய வாழ்வை இது இரண்டிற்காகத்தான் வாழ்கிறான். 


ஒருவன்  உணவுக்காக என்ன செய்வான்?
உழைத்து சம்பாதித்து உணவு பெற்றுக்கொள்வான். இதைத்தான் நாம் இன்றைய சூழ்நிலையில் வரவேற்கிறோம்.
அல்லது
திருடுவான். இது ஒழுங்கீனமான செயல்.  இது தண்டனைக்குரிய குற்றமாகும்.
அல்லது
பிச்சை எடுப்பான். உழைக்காமல் பிச்சையெடுப்பது என்பதை நாம் வரவேற்க கூடாது.


உணவுப்பசிக்கு மனிதர்கள் என்ன செய்கிறார்களோ அதுபோலத்தான் உடல் பசிக்காகவும் செய்கிறார்கள்.

சிலர்  ஒழுக்கத்துடன் இருந்து காலாகாலத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.

சிலர் ஒழுக்கத்துடன் இருக்க முடியாமல் சிறு வயதில் காதல் என்ற திருட்டில் ஈடுபடுகின்றனர். (இந்த திருட்டை நாம் அங்கீகரிக்க ஆரம்பித்துவிட்டோம்.)
அல்லது

சிலர்  தகாத உறவில் ஈடுபடுன்றனர். (கள்ளக்காதல்)இதை சட்டம் தண்டிக்கிறதா என தெரியவில்லை. இருப்பினும் இதை நாம் வரவேற்க கூடாது. (நாளைய சமுதாயம் இதையும் அங்கீகரிக்கும் என்பது வேறு விடயம்)


சிலர் வன்புணர்வில் ஈடுபடுன்றனர். பசிக்கு சிலர் வழிப்பறிகளில் ஈடுபடு- வதைப்போலத்தான் இதுவும். திருட்டும் வழிப்பறியும்  ஒன்றல்ல. இருப்பினும் ஒரு விதத்தில் இதற்க்கான அடிப்படை காரணம் ஒன்றுதான்.

பசிக்கு ஒரு சிறுவன் திருடினால் மன்னிப்பதைபோல இன்று காதல் திருட்டை சில நேரங்களில் சிலர் ஏற்கிறார்கள் சில நேரங்களில் சிலர் எதிர்க்கின்றனர்.

உடல்பசி வன்புணர்வுக்கு வழிவகுக்குமா என்றால் அதற்க்கு வாய்ப்புகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
உடல்பசியை சிலர் சுய இன்பம் மூலம் போக்கி கொள்கின்றனர். சிலர் மஞ்சள் பத்திரிகை, நீலப்படம் என்பவை மூலம் தீர்த்து கொள்கின்றனர்.(சிலருக்கு இவை வடிகால், சிலருக்கு இவைகளால் பிரச்சனையும் உண்டு )


சிலருக்கு காதலிக்க பெண் கிடைக்கிறாள் அதனால் சிலர் தங்களது உடல் தேவைகளை அவர்கள் மூலம் தீர்த்து கொள்கின்றனர். இவ்வாறு சிலர் கடற்க்கரையிலும், பூங்காக்களிலும்,தோப்புகளிலும்  காம லீலைகளில் ஈடுபடும்பொழுது காதலிக்க பெண் கிடைக்காதவன் என்ன செய்வான்?
பெண்ணுக்கு வலை விர்ரிக்கிறான் ,பெண்ணை இடிக்கிறான், கையை பிடித்து இழுக்கிறான், கற்பழிக்க முயற்சி செய்கிறான். கற்பழிக்கிறான்.

இப்பொழுதெல்லாம் ஒரு பெண் ஒரு ஆண் கூட மட்டும்தான் சுற்றுகிறாள் என்று சொல்வதற்கில்லை சில பெண்கள் பல ஆண்களுடன் சுற்றுகின்றனர். (பசங்கள் அதுக்கு மேல )இதை பார்க்கும் ஒருவன் அவர்களிடம் மட்டும் போகிறாய் என்னிடம் வரமாட்டாயா என்று  கேட்கமாட்டான் என்று சொல்லமுடியுமா?
சில இளைஞர்கள் பாலியல் குற்றங்களில்  ஈடுபட  இவைகளும் காரணிகளாக இருக்கலாம் என்றுதான்  கூறுகிறேனே தவிர வன்புணர்வை நான் ஆதரிப்பதாக யாரும் எண்ணவேண்டாம்.


ஒரு மனிதனின் உணவு,உடை, உறைவிட தேவைகளை நிறைவேற்றுவது எப்படி அரசாங்கத்தின் கடமையோ அவ்வாறே ஒரு மனிதனின் உடலுறவு தேவைக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அனைவருக்கும் குறிப்பிட்ட காலத்தில் திருமணம் நடைபெறுமாறு அரசாங்கம் பார்த்துக்கொள வேண்டும்.

இதுவரை நாம் இளைஞர்கள் பார்வையில் வன்புணர்வை அலசினோம்.


உடல்தேவைக்கு மனைவி இருந்தாலும் சிலர் தகாத உறவுகளிலும்,வன்புணர்விலும்  ஈடுபடத்தான் செய்கின்றனர்.
இவர்களை கொலை கொள்ளை செய்பவர்களோடு ஒப்பிடலாம். அதாவது தேவைக்கு  அதிகமான பணம் இருந்தாலும் அதீத ஆசையால் ஊழல், கொள்ளைகளில் ஈடுபடுபவனும் உடல் தேவைக்கு மனைவி இருந்தும் தகாத உறவில், வன்புணர்வில் ஈடுபடுபவன் மனநிலையும் ஒன்றுதான்.இருப்பினும் கொடுமைகளின், குற்றங்களின் வீரியம் வேறு என்பதை மறுப்பதற்கில்லை.


இப்படிப்பட்டவர்கள் செய்யும்  குற்றங்களையும் சரி இளைஞர்கள் செய்யும் குற்றங்களையும் சரி தடுக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியும்.

மனிதத்தை பற்றிய கல்வியும் அதில் ஒழுக்கத்தின் அவசியத்தையும் மக்களுக்கு எடுத்து கூற வேண்டும்.பிறந்ததிலிருந்து இவற்றை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும்.

ஒழுக்கம் தவறுவது குற்றம் என்பது ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இன்று  காதல் எனும் ஒழுங்கீனத்தை நாம் ஆதரிக்க ஆரம்பித்துவிட்டோம். தமிழ் நாட்டில் சில அரசியல் கட்சிகள் கடற்கரையில் காதலிப்பவர்களுக்கு (? :) )குடை கொடுத்தாலும் கொடுப்பார்கள் போல. (ஒரு ஆணும் பெண்ணும் ஊர் சுற்றாமல் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யலாம் என்பதே என்னுடைய நிலைப்பாடு)

நாளை கள்ளக்காதலையும் சிலர் ஆதரிப்பார்கள்.

ஆண் ஆண்,பெண் பெண் உறவு ஒழுங்கீனத்தையும் பல நாடுகள் அங்கீகரிக்க  ஆரம்பித்துவிட்டன.
மனிதன் மிருகம் உறவை  கூட இந்த மானிட சமூகம் நாளை அங்கீகரிக்கும். இவற்றை எல்லாம் இப்பொழுதே தடுத்து நிறுத்துவதுதான் சரி. அதற்க்கான முயற்சியை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு சிறு வயது முதலே உண்மை,நேர்மை,ஒழுக்கம்,மனித நேயம் போன்றவற்றை பின்பற்றும்படி கலை,கல்வியை அமைக்க வேண்டும்.

என்னதான் ஒழுக்கம் என்று சொல்லி கொடுத்தாலும் ஒருவனால் உடல்  பசியினால் எத்தனை வருடங்கள் தான்  காலத்தை ஓட்ட முடியும்?

எனவே திருமண வயதை அரசாங்கம் குறைக்க வேண்டும்.தற்ப்பொழுதைய சூழ்நிலையில் 16 என்பது சரியான வயதாக இருக்கும் என எண்ணுகிறேன்.  இது பிற்போக்குத் தனமான பழமைவாத சிந்தனையாகத்தான் தோன்றும். ஆனால் இதனால்  இளைஞர்கள் செய்யும்  பாலியல் குற்றங்கள் குறையும்.(வன்புணர்ச்சி குற்றங்களில் ஈடுபட்டுள்ள சிறுவர்களில் பலரின் வயது 16 முதல் 18 வரை என்பதை நினைவில் வைக்க வேண்டும் .)  இன்று இது சாத்தியமா என்றால் அதுவும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. (ஆனால் கிராமப்புறங்களில், இவை சாத்தியம்.)

இன்றைய வாழ்க்கைமுறை பொருளாதாரத்தை மையாமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது. ஒருவன் தன்னிச்சையாக சம்பாதித்து சொத்து சேர்க்காமல் (அல்லது பாட்டன் சொத்து இல்லாமல்) கல்யாணம் என்பது சாத்தியமல்ல.
கூட்டு குடும்பமாக வாழும்பொழுது இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம். யாருக்கு இது சாத்தியமோ அவர்கள் இதை செயல்படுத்தலாம்.


பெண்ணின் ஆடை வன்புணர்வுக்கு காரணமா?: பெண்ணின் ஆடை ஈர்ப்பை   தூண்டலாமேயோழிய அது வன்புணர்வுக்கு காரணம் அல்ல.இருப்பினும் ஆபாசமான உடைகளை தவிர்த்தல் நல்லது.மூன்று வயது குழந்தை  முதல் அறுபது வயது கிழவி வரை கற்ப்பழிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு எந்த ஆடை கொடுப்பது?  காம கொடூரர்களுக்கு ஆடை ஒரு தடை அல்ல.

சினிமா காரணமா?
இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சியை அதிலும் பாடல் அலைவரிசைகளை பார்த்தால் அதில் பெரும்பாலான பாடல்கள் பாலியல் உணர்ச்சியை தூண்டுவதாகவே உள்ளன. மிட்நைட் மசாலா விருப்பம் உள்ளவர்கள் பார்க்கட்டும் ஏன் அந்த மாதிரி பாடல்களை பகல் பொழுதில் போட வேண்டும்,சிறுவர்கள் மனதில் நஞ்சை விதைக்க வேண்டும்?

ஆடை ,சினிமா இவற்றால் வன்புணர்வுகள் அதிகரிக்கின்றன என்பதை நான் ஏற்கவில்லை. அவனவனுக்கு ஒரு பெண் இருந்தால் அவன் ஏன் இந்த மாதிரி செயல்களில் ஈடுபட போகிறான்?. அப்படி இருந்தும் ஈடுபடுபவர்கள் மிருகங்கள். 

பெண்களுக்கு தனியாக பேருந்துகள், பள்ளிகள்?
இது தவறில்லை. ஆனால்  இவைகள் வன்புணர்வை குறைக்காது. தவறு செய்ய வேண்டும் என்று முடிவு செய்த பிறகு யாராலும்,எதனாலும் தடுக்க முடியாது.  பெண்-பெண் உறவும் அதிகரித்து வரும் வேளையில் இதுவும் சரியான தீர்வல்ல. 


உடனடித்தீர்வு:
காதலர்கள் பூங்காக்களிலும்,கடற்க்கரைகளிலும்  காமலீலைகளில் ஈடுபடுவதை தடை செய்யவேண்டும். 
பெண்கள் குறைவான ஆள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தனியாக செல்வதை தவிர்த்தல் நல்லது.
வீட்டிலும் தனியாக இருக்கும்பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. 
வன்புணர்வை ஒரு விபத்தாக பார்க்கும்படி சமுதாயத்தை மாற்றவேண்டும்.



என்ன தண்டனை?
குற்றத்தின் கொடுமையையும், குற்றவாளியின்  வயதையும், சந்தர்ப்ப சூழ்நிலையையும் பொறுத்து  கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படவேண்டும்.


நிரந்தரத் தீர்வு ?
மனிதத்தை,ஒழுக்கத்தை  பற்றிய கல்வி.புறக் கட்டுப்பாட்டை விட அகக் கட்டுப்பாடே நீடித்த தீர்வு தரும்.
குறிப்பிட்ட காலத்தில் அனைவருக்கும் திருமணம்  நடைபெறுமாறு பார்த்துகொள்ளுதல்.


இதை செய்யாத பட்சத்தில் முதலில் காதல் திருமணங்கள் அதிகரிக்கும்,பிறகு கள்ளக் காதல் உறவுகள்-திருமணங்கள் அதிகரிக்கும்பிறகு ஆண் -ஆண், பெண்-பெண் திருமணங்கள் அதிகரிக்கும், பிறகு மனிதன்-மிருக உறவுகள் அதிகரிக்கும், பிறகு மனித இனம் சின்னப்பட்டு சீரழிந்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற புதிய  கருத்தை முன்மொழியும். 


Related Posts Plugin for WordPress, Blogger...