வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 26 மே, 2013

ஜாதிப் பெருமை பேசக்கூடாது என்பவர்கள் சந்தேகம் தீர்ப்பார்களா ?


 ஜாதிப்  பெருமை பேசுவது தவறு என்று சமீபத்தில் பலர்  எழுதுவதை  பேசுவதை காண  நேர்ந்தது.  இதுல எனக்கு ஒரு சந்தேகம். ஜாதிப்  பெருமை பேசக்கூடாது என்பவர்கள்  என்னுடைய சந்தேகத்தை தீர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

ஜாதிப்  பெருமை பேசக்கூடாது சரி

மொழிப்  பெருமை பேசலாமா?
தமிழ் மொழியே சிறந்த மொழி என்று  மாநாடு நடத்துகிறோம்,   செம்மொழி மாநாடு நடத்தினோம், தமிழன்னைக்கு சிலை கூட வைக்கப் போகிறோம்.

இனப் பெருமை பேசலாமா?
தமிழன் வீரப்பரம்பரையை சேர்ந்தவன்  என்று சிலர் எழுதவதை பேசுவதை  கேட்டுள்ளேன்.

நாட்டுப்  பெருமை பேசலாமா?
பாரத நாடு பழம்பெரும் நாடு என்று கூறிக்கொள்கிறோம்.

மதப்பெருமை பேசலாமா?

குடும்பப்  பெருமை பேசலாமா?

தலைவர்கள் பெருமை பேசலாமா?

தாய்தந்தை  பெருமை பேசலாமா?

பிள்ளைகள் பெருமை பேசலாமா?


உங்களின் விளக்கத்தை நான் எதிர்பார்க்கிறேன். இப்பதிவின் நோக்கம் சிந்தனையை  தூண்டுவதும் அதற்க்கான விளக்கத்தை பெறுவதும் மட்டுமே.

வெள்ளி, 17 மே, 2013

தாழ்த்தப்பட்டவர்கள் ஏன் ஒழிக்கப்படவேண்டும்?


தாழ்த்தப்பட்டவர்கள் நிச்சயம் ஒழிக்கப்படவேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. தாழ்த்தப்பட்டவர்கள் என்று அழைக்கப்டுபவர்களை ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. தாழத்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை முதலில் நீக்க வேண்டும் பிறகு தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் இல்லாதவாறு அனைவரும் உயர்த்தப்படவேண்டும்,சமமாக மதிக்கப்படவேண்டும் என்று கூறுகிறேன். 

தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை தமிழ் அகராதியிலிருந்து நீக்க வேண்டும்.  தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தை மக்கள் மனதில் எந்த மாதிரி விளைவுகளை ஏற்ப்படுத்துகிறது என்பதை நாம் உணரவில்லை என நினைக்கின்றேன்.

ஒரு சில மக்கள் தாழ்த்தப்பட்டார்களா இல்லையா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. ஆனால் ஒரு சில மக்களை நீங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பது அவர்கள் மனதில் எந்த மாதிரி எண்ணத்தை ஏற்ப்படுத்தும் என்பதை நாம் சிந்திக்காதது நம் மடமை என்றே நினைக்கின்றேன்.

ஒருவனை நீ தாழ்த்தப்பட்டவன் எனும்பொழுது அவனுக்கு இரண்டு விதமான எண்ணங்கள் உருவாகாலாம். 

ஒன்று: நம்மை இழிவானவர்கள் என்று பிறர் கருதுகின்றனர் என்ற எண்ணம் வரலாம்.
இரண்டு:நம்மை சிலர் தாழ்த்திவிட்டார்கள் என்று சிலர் மேல் அவர்களுக்கு கோபம் வரலாம்.

இது இரண்டுமே சமுதாய நலனிற்கும் தனிப்பட்ட முறையில் அவர்களின் நலனிற்கும் நல்லதல்ல என்றே நான் நினைக்கின்றேன்.

தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒரு சமுதாயத்தை பிரித்து காட்டும்பொழுது பிற சமுதாயத்தை சார்ந்தவன் மனதில் இரண்டு விதமான எண்ணங்களை ஏற்ப்படுத்தலாம்.

ஒன்று: அச்சமுதாய மக்கள் நம்மை விட கீழானவர்கள். அவர்களை விட நாம் உயர்ந்தவர்கள்.

இரண்டு: அச்சமுதாய மக்களை சிலர் தாழ்த்திவிட்டார்கள் என்று சிலர் பரிதாபப்படலாம் 

முதலாம் நினைப்பு மிகவும் தவறானது. இரண்டாவது நினைப்பு சில நல்ல விளைவுகளையும் சில தீய விளைவுகளையும் ஏற்ப்படுத்தும்.

எப்படிப்  பார்த்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்பது உளவியல் ரீதியாக தவறான என்னத்தை ஏற்ப்படுத்துவதாகவே நான் உணர்கிறேன்.

எனவே தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தைக்கு பதிலாக   பட்டியல் வகுப்பினர் என்று மட்டுமே கூறுவது சரியாக இருக்கும்.இதுவும் சில காலத்திற்கு மட்டும்....சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருக்கும்வரை மட்டுமே. 

தலீத் என்ற வார்த்தையில் எனக்கு உடன்பாடில்லை. ஏன் எனில் இதுவும் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பொருளையே தருகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் என்பது உளவியல் ரீதியாக ஏற்ப்படுத்தும் பாதிப்புகளை மனதில் கொண்டு அனைவரும் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை கைவிடும்படி மிகவும்  பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.  மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவியுங்கள் 


என்றும் மனிதத்துடன் 
இராச.புரட்சிமணி 
Related Posts Plugin for WordPress, Blogger...