வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 24 ஜனவரி, 2018

மொத்தமிழ் என்றால் என்ன?


என்னுடைய பொங்கல் வாழ்த்து கவிதையில் மொத்தமிழ் வாழ்க என்று எழுதியிருந்தேன். நண்பர் ஒருவர் முத்தமிழை தவறுதலாக மொத்தமிழ் என்று எழுதியுள்ளதாக கூறினார். தவறுதலாக அவ்வாறு எழுதவில்லை. தெரிந்தேதான் மொத்தமிழ் என்று எழுதினேன். முத்தமிழ் இயல், இசை, நாடகம் எனும் மூன்று தமிழைக் குறிக்கும். மொத்தமிழ் என்பது கிரந்த எழுத்துத் தமிழ் தவிர்த்து  அனைத்துத் தமிழையும் குறிக்கும்.

-----------------
இயற்கை வாழ்க
இறைவன் வாழ்க

உழவு வாழ்க
உழைப்போர் வாழ்க

மனிதம் வாழ்க
மக்கள் வாழ்க

மொழிகள் வாழ்க
மொத்தமிழ் வாழ்க

மகிழ்ச்சி பொங்க
மங்களம் தங்க

இயற்கைத் திருநாள்
இத்தமிழர் திருநாளில்
இராச.புரட்சிமணியின்
இனிய நல்வாழ்த்துக்கள். 🌞⛈🎋🌾🥥🥕🌽🍇🍊🍎🍛🍲🍚😊

Related Posts Plugin for WordPress, Blogger...