வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 30 மார்ச், 2012

ஆபிரகாம் இந்துவா, சிவபக்தரா?


யூத, கிருத்துவ, இசுலாமிய மதங்களால் முக்கிய நபியாக கருதப்படும் ஆபிராகாம் ஒரு இந்துவாக இருந்திருக்கலாம் என தெரிய வருகிறது.

இன்று ஆபிரகாம் என்று அவரை அழைத்தாலும் அவர் பெயர் அப்ரம் என்றே பல மொழிகளில் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த அப்ரம் என்பது பிரம்மனின் பெயரை  குறிப்பதாக கூறுகிறார்கள். 

இவரின் மனைவியின் பெயர் சாரா, சராயு என்று கூறுகிறார்கள். இது பிரம்மனின் மனைவி பெயரான சரஸ்வதியை குறிப்பதாக கூறுகிறார்கள்.  சராயு என்று அயோத்தியில் ஒரு நதி இருந்துள்ளது. ஆபிரகாமின் மனைவியின் பெயர் இந்த நதியின் பெயரை ஒட்டி கூட அமைந்திருந்திருக்கலாம் என்பது எண் கணிப்பு. 

ஆபிரகாமின் ஒரு சகோதரரின் பெயர் ஹரன். இது சிவனை குறிக்கும் சொல்லாகும்.

அபிரகாமும் சாராவும் உர் என்ற ஊரில் வாழ்கிறார்கள். இந்த ஊரிலும் பண்டைய இந்து மதம் இருந்ததாக தெரிகிறது.  பிறகு இவர்கள்  கனான் (Kana‘ān) என்ற பகுதியில் குடியேறுகிறார்கள். இந்த கனான் என்பது கண்ணனின்  பெயரை குறிப்பதாக சிலர் கூறுகிறார்கள். (மேலும் உங்கள் பார்வைக்கு ....காந்தகார் என்று  ஆப்கானிஸ்தானில்   ஒரு இடம் உண்டு...இது காந்தாரியின் பெயரை குறிக்கின்றது , லாகூர் என்று பாகிஸ்தானில் ஒரு இடம் உண்டு இது ராமனின் மகன் லவனை குறிக்கின்றது. லவவூர் என்பது லாகூராக திரிந்துள்ளதாக தெரிகிறது) 

ஆபிராகமிற்கு குழ்ந்தை இல்லாததால் வேலைக்காரியை இவருக்கு இவர் மனைவி மணம் முடிக்கிறார். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு இஸ்மாயில் என்று பெயரிடுகின்றனர்..  இது தமிழில் ஈசனின் பெயரோடு ஒத்து வருகிறது. இதற்கு சமஸ்கிருதத்தில் உயர்ந்த சிவன் என்று பொருள் கூறுகிறார்கள்.

பிறகு சில காலங்கள் கழித்து இவரது மனைவிக்கு குழந்தை பிறக்கின்றது. அக்குழந்தைக்கு இவர் ஈசாக் - ஈசாக்கு என்று பெயரிடுகிறார். இதுவும் ஈசனின் பெயரை  அடிப்படையாக வைத்தே அமைந்துள்ளகாதாக தெரிகிறது.  இதற்கு சிவனின் நண்பன் என்று பொருள் தருவதாக கூறுகிறார்கள்.
தங்களுடைய குழந்தைகளுக்கு  ஈசனின் பெயரை இடுவதன் மூலம் இவர் ஒரு சிவ பக்தர் என்று கூறலாம் அல்லவா?

இவர்களின் பெயரில் சிவன், ஈசன் இருக்கும் பொழுது அவர்களின் மதத்தில் இல்லாமல் போகுமா?

ஆபிரகாமிய மதங்கள் எனப்படும் யூதம், கிருத்துவம், இசுலாம் ஆகியவற்றின் மூலம் இந்து மதமாகத்தான் தெரிகிறது.  ஈஸ்வரன், ஈசன், சிவன் என்ற சொற்களின் திரிபுகளை  இந்த மத நூல்களில் நம்மால்  காண முடிகிறது.

பல்வேறு நாடுகளில் பண்டைய இந்து மதமானது இருந்துள்ளதாக தெரிகிறது.

நேரம் கிடைக்கும் பொழுது விரிவாகவோ சுருக்கமாகவோ பார்ப்போம்.:)

வரலாறு காணாத மின்வெட்டினால் எந்த வேலையையும் சரிவர செய்ய இயலவில்லை.

குறிப்பு: இப்பதிவின் நோக்கம் இந்து, யூத, கிருத்துவ, இசுலாமிய மதத்தை களங்கப்படுத்துவது அல்ல.
இவ்வாறு ஆய்வுகள் நடகின்றது, இப்படி இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் ஆய்வு செய்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறுவதே என் நோக்கம். இது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம். 

மீண்டும் கூறுகிறேன் பரிணாமத்தின் படி பார்த்தாலூம், ஆதாம் ஏவாள் கதைப்படி பார்த்தாலும் நாம் அனைவரும் சொந்தங்களே. மதத்தின் படி பார்த்தாலும் எல்லா மதங்களுக்கும்  மூலம் ஒன்றுதான். நமக்குள் மதத்தின் பெயரால் பூசல் கொள்வது சரியானது அல்ல. நம் அனைவரின் மூலம் ஒன்றுதான் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு அன்போடு பழகுதலே இறைவனுக்கு செய்யும் மிக சிறந்த வழிபாடாகும்.


மேலும் படிக்க: http://www.hermetics.org/Abraham2.html

வெள்ளி, 23 மார்ச், 2012

இசுலாமியர்கள் தினமும் வணங்குவது சிவனையா?


இசுலாமியர்கள் தினமும் ஐந்து வேளை வணங்குகிறார்கள் அல்லது தொழுகை செய்கிறார்கள் என்று தெரியும். அப்படி தொழுகை செய்யும் பொழுது அவர்கள் மெக்காவில் உள்ள காபாவை நோக்கி தொழுகிறார்கள். அந்த காபாவில்  அப்படி என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தால் அங்கே இருப்பது  ஒரு சிவலிங்கம் என தெரியவருகிறது. இந்த சிவலிங்கத்தை அவர்கள் கருப்புக்கல் என்கின்றனர். இந்த கல்லை மிகவும் புனிதமாக இசுலாமியர்கள்  கருதுகிறார்கள்.


ஆபிரகாமிய   மதங்களின்  முன்னோடியாகவும் முக்கிய நபியாகவும் கருதப்படும்   ஆபிரகாம் தான் இந்த காபாவை கட்டினார்.  இக்கல்லை அல்லது சிவலிங்கத்தை நிறுவினார்.இந்த கல் ஒரு சிவலிங்கமாக இருக்ககூடும் என்று ரவி ஷங்கர் ஒரு முறை கூறியிருந்தார் அதை  சாகிர் நாயக் மறுத்தார் என நினைக்கின்றேன்.  இருப்பினும் திறந்த மனதுடன் இதை ஆராயும் பொழுது அது ஒரு சிவலிங்கமாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.

இந்த கல் வானிலிருந்து கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த கல்லைத்தான் காலம் காலமாக அங்குள்ள மக்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர்.  இந்த காபாவில் இந்த கல்லை தவிர்த்து 360 சிலைகளையும் அங்குள்ள மக்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர். முகமது நபியால் இங்குள்ள சிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. 

ஆனால் அவர் அந்த கல்லை மட்டும் ஒன்றும்  செய்யவில்லை. காரணம் அந்த கல் அவ்வளவு புனிதமாக கருதப்பட்டது. 

இன்றும் அந்த கல் இசுலாமியர்கள் செல்லும் ஹஜ் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அந்த கல்லை முகமது நபி முத்தமிட்டார் என்பதால் ஹஜ் அல்லது புனித யாத்திரை செல்லும் இசுலாமியர்களும் அந்த கல்லை முத்தமிட முயற்சிக்கின்றனர். கூட்ட நெரிசலால் முத்தமிட முடியாததால் தனது வலது கரத்தால் அக்கல்லை  தொட  முயற்சிக்கின்றனர். 

இசுலாமியத்தில் சிலை வழிபாடு கிடையாது. இந்த கல்லை அவர்கள் புனிதமாக கொண்டாலும் அதற்கு வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை என்கின்றனர் இசுலாமியர்கள்.

ஆனால் முகமது நபியோ இக்கல்லை "அல்லாவின் வலது கரம்" என்கிறார்.  இந்த ஒன்றே அவர் இக்கல்லிற்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்துள்ளார் என்பதை காட்டுகிறது. 

இக்கல்லை அவர் ஏன் அல்லாவின் வலது கரம் என்றார் ...அல்லாவின் வலது கரம் என்றால் சும்மாவா ?

மேலும் இன்றும் அக்கல்லை  ஹஜ் யாத்திரையில் முத்தமிட முடியாத இசுலாமியர்கள்  "In the name of God, God is Great, God is Great, God is Great and praise be to God". (இறைவனின் பெயரால் இறைவன் சிறந்தவன், இறைவன் சிறந்தவன்,இறைவன் சிறந்தவன் புகழனைத்தும் இறைவனுக்கே  )என்று கூறுகிறார்கள்.  இந்த கல்லுக்கு இசுலாமில் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதை இது  தெள்ள தெளிவாக காட்டுகிறது. 

இசுலாமில் சிலர் தீர்ப்பு நாளில் இந்த புனித கல்லுக்கு பார்க்க கண்ணும் பேச நாக்கும்  தோன்றி தன்னை பக்தியுடன்  முத்தமிட்டவர்களுக்கு சாதகமாகவும் காபாவை வலம் வரும்பொழுது வதந்திகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும்  சாட்சியம் கூறும் என்று நம்புகின்றனர்.
("the Stone will appear on the Day of Judgement (Qiyamah) with eyes to see and a tongue to speak, and give evidence in favor of all who kissed it in true devotion, but speak out against whoever indulged in gossip or profane conversations during his circumambulation of the Kaaba"..  Source:wikipedia).

இவர்கள் சொல்வது அம்மன் சிலைக்கு கண்ணும் நாக்கும் வைத்து இருக்கும் சில சிலைகளை ஞாபக படுத்துகிறது.

அவர்கள் வணங்குவது சிவனையோ அல்லது அம்மனையோ அல்லது அல்லாவையோ அல்லது பண்டைய அராபிய கடவுளோ அது இறைவனுக்கு  மட்டுமே தெரியும். இருப்பினும் இந்து மதத்தின் தாக்கம் அல்லது இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை எந்த அளவிற்கு  உள்ளது என்பதை நேரம் கிடைக்கும் பொழுது பார்ப்போம்.

நன்றி: http://en.wikipedia.org/wiki/Black_Stone

வெள்ளி, 16 மார்ச், 2012

உங்களின் உண்மையான பிறந்த நாள் எப்பொழுது தெரியுமா?



பெரும்பாலோர் தங்களது ஆங்கில தேதியை மையமாக கொண்டு பிறந்த நாள் கொண்டாடுகின்றனர்.
ஆனால் இது முற்றிலும் தவறானது. இது வெறும் நினைவாகவோ அல்லது வயதை கணக்கில் வைத்து கொள்வதற்கோ  பயன்படலாம்.

ஆனால் உண்மையில் நீங்கள் இயற்கையோடு இணைந்து  உங்கள் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் எனில் நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தையும் , நீங்கள் பிறந்த அன்று சந்திரன் நின்ற நட்சத்திரத்தையும் கணக்கில் கொள்ள  வேண்டும். 

இவ்வாறு நீங்கள் பிறந்த நாளை கணக்கில் கொள்ளும் பொழுது, சூரியனும் சந்திரனும் நீங்கள் பிறந்த நிலையில் எவ்வாறு இருந்ததோ அதே நிலையில் இருக்கும். 

அதாவது இன்று ஒரு குழந்தை பிறக்கிறது எனில் அதன் விபரம்: ஆங்கில மாதப்படி பிப்ரவரி இருபது. தமிழ் மாதப்படி மாசி மாதம், எட்டாம் தேதி, திருவோணம் நட்சத்திரம்.

நீங்கள் இந்த குழந்தைக்கு ஆங்கில தேதிப்படி  அடுத்த வருடம் பிப்ரவரி இருபதாம் தேதி பிறந்த நாள் கொண்டாடினால் அது இயற்கையோடு எந்த வித இணைப்பையும் ஏற்ப்படுத்தாது. சூரியனின் நிலை ஓரளவிற்கு பிறந்த நாளோடு ஒத்துப்போகும். ஆனால் சந்திரன் முற்றிலும் வேறு இடத்தில் இருக்கும்.

அப்பொழுது மாசி மாதம் எட்டாம் தேதி பிறந்த நாள் கொண்டாடலாமா என்றால்...அதுவும் கூடாது.
ஏன் எனில் சூரியனின் நிலை சரியாக இருந்தாலும் சந்திரன் வேறு நிலையில் இருக்கும்.

இந்த குழந்தைக்கு இயற்கையோடு இணைந்து நீங்கள் பிறந்த  நாள் கொண்டாடவேண்டும் எனில் அடுத்த வருடம் மாசி மாதம் திருவோணம்  நட்சத்திரத்தில் பிறந்த நாள் கொண்டாடவேண்டும். 

இந்த நாளில் சூரியனும் சந்திரனும் பிறந்த ஆண்டு/நாளில் எவ்வாறு இருந்ததோ அதே நிலையில் இருக்கும். இதே போல தான் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் மற்றும் அந்த மாதத்தில் சந்திரன் அந்த நட்சத்திரத்திற்கு வரும் நாள் என பிறந்த நாள் கொண்டாடலாம்.

இதுவே இயற்கையோடு இணைந்து பிறந்த நாள் கொண்டாடுதலாகும்.

சனி, 10 மார்ச், 2012

யார் நேர்மையானவன்? பகுத்தறிவாதியா? கம்யுனிஸ்ட்டா?


இது முழுக்க முழுக்க மதத்தை கருத்தில் கொண்டு எழுதப்படும் பதிவு.
மதங்களை விமர்சிக்கும் பொழுது யார் நேர்மையாளராக உள்ளார் என்பதே என் தேடல்.

பகுத்தறிவாதிகள் இந்து மதத்தை தவிர பிற மதங்களை விமர்சிப்பதாக தெரியவில்லை.


அந்த காலத்தில் பிராமணிய ஆதிக்கம் அதிகம் இருந்ததால் அவர்கள் அவ்வழியை தேர்ந்தெடுத்தார்கள். அது சரியானதே.

ஆனால் இன்றும் பெரியார் தளங்கள் அதே இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கின்றன. ஏன் இவர்களுக்கு மற்ற மதங்களில் உள்ள குறைகள் தெரியவில்லை. அதை படிப்பதில்லையா? இல்லை அதற்க்கான நேரம் இன்னும் வரவில்லை என்கிறார்களா? அல்லது பிற மதங்கள் பகுத்தறிவானது என்று ஏற்றுக்கொள்கிறார்களா?


மதத்தை உண்மையாக எதிர்ப்பவனாக  இருந்தால் அவன் அனைத்து மதங்களையும் எதிர்க்க வேண்டும் ஆனால் ஒரு மதத்தை மட்டும் எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்பதை உண்மையான பகுத்தறிவாளர்கள் உணரவேண்டும்.

இந்து மதத்தை மட்டுமே விமர்சிப்பவர்கள் சுயநலவாதிகளாக இருப்பர்களோ என எண்ணுகிறேன். அவர்கள் சுயநலவாதிகள் அல்ல என்பதை பிற மத புத்தகங்களையும், வழக்கங்களையும் விமர்சித்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும்.

கம்யுனிஸ்ட்டுகள் இந்து மதத்தை மட்டுமலாமல் ஓரளவிற்கு பிற மதங்களையும் விமர்சிக்கின்றனர்.குறிப்பாக வினவு தளம்.


 ஆதலால் இந்த தேடலின் முடிவில் தன்னை பகுத்தறிவாளன் என்று கூறுபவனை விட கம்யுனிஸ்ட் என்று கூறுபவன் ஓரளவிற்கு மத விமர்சனத்தில் நேர்மையாக இருப்பதாக தெரிகிறது.


மீண்டும் சொல்கிறேன் இது மதத்தை மட்டுமே அளவுகோலாக கொண்டு எழுதப்பட்ட பதிவு. மற்றபடி எனக்கு சில பகுத்தறிவாளர்கள் சிந்தனையும் பிடிக்கும், சில கம்யுனிஸ்ட் சிந்தனைகளில் மாற்று கருத்தும் உண்டு.

பகுத்தறிவாளர்கள் பிற மதங்களை விமர்சிக்காததன் காரணத்தை கூறினால் (அல்லது விமர்சித்து இருந்தால் அந்த சுட்டிகள்  தந்தால் ) அதை நானும் பிறரும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

வெள்ளி, 9 மார்ச், 2012

மதங்கள் உருவாக உண்மையான காரணம் என்ன தெரியுமா?


உலகில் முதன் முறையாக  உங்களுக்கு ஒரு சின்ன அல்லது பெரிய   உண்மையை சொல்லப்போகிறேன்.  இதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உரிமை. இப்பதிவின் நோக்கம் யாரயும் புண்படுத்த வேண்டும் என்பது அல்ல. நான் உண்மையாக நினைப்பதை பகிர்ந்து கொள்வது மட்டுமே.

என்னைப்பொருத்த வரை மதங்கள் உருவாக ஒரு மிக முக்கிய  காரணம் ஆர்வக்கோளாறு :).
ஆமாங்க ஆர்வக்கோளாறு தான் காரணம்.

மதங்களை  உருவாக்கியவர்கள் அனைவரும் இறைவனை கண்டவர்கள், உணர்ந்தவர்கள், இறை வெளிப்பாடு பெற்றவர்கள். ஆனால்  இறைவனை கண்டவர்கள், உணர்ந்தவர்கள், இறை வெளிப்பாடு பெற்றவர்கள் அனைவரும் மதங்களை உருவாக்கவில்லை. ஏன்?

மதங்களை உருவாக்கியவர்கள் மத்தியில் ஒரு ஒற்றுமை உண்டு. அந்த ஓற்றுமை என்னவெனில் இவர்கள் பெரும்பாலும் தங்களது சுய முயற்சியினால் இறை தரிசனம் பெறுகிறார்கள். கண்டவுடன், ஏதோ உலகத்திலேயே இவர்தான் ஏதோ சாதித்து விட்டதாகவும், இறைவன் இவருக்கு மட்டுமே காட்சி தந்ததாவும் நினைத்து கொண்டு கருத்து சொல்ல கிளம்பிவிடுகின்றனர்.

ஒன்று இருந்திதிருந்தால் அவர்களுக்கு இந்த ஆர்வக்கோளாறு வந்திருக்காது. அந்த ஒன்று தான் "குரு".  

இன்று உள்ள மதத்தை  நிறுவிய பலருக்கும் சொல்லிக்கொள்ளும்படி குரு யாரும் இல்லை. குரு யாரும் இல்லாததால் இவர்கள் கண்டதை,உணர்ந்ததை  பெரிதாக நினைத்துவிட்டனர்(அது உண்மையில் பெரிது என்பது வேறு :) ). குரு இருந்திருந்தால் மண்டையில் ஒரு தட்டு தட்டி இதெல்லாம் ஒரு பெரிய விடயமே இல்லை என்று கூறி இருப்பார். :)

ஆதலால் தான் பெரும்பாலும் குரு முகமாக தியானத்தை கற்கும் யாரும் மதத்தை உருவாக்குவதில்லை. குருவில்லாமல் தியானத்தை கற்று இறை தரிசனம் பெறுபவர்களே பெரும்பாலும் மதத்தை உருவாக்குகின்றனர். 


ஆக, குருவில்லாமல் இறை தரிசனம் கிடைக்கும்  பொழுது, சில உண்மைகள் விளங்கும் பொழுது, ஆர்வம் மிகுதியாகி, ஆர்வ கோளாறால் மதங்கள் உருவாகிறது என்பதை நீங்களும் ஏற்ப்பீர்கள் என எண்ணுகிறேன்.. 

இது கிருத்துவர்கள் சதியா? இசுலாமியர்கள் சதியா?இந்துக்கள் சதியா? அல்லது வேறு சதியா?


எனக்கு ஒன்னும் புரியல..என்னுடையா தளத்தை யாரோ சுட்டு விட்டார்கள். இது கிருத்துவர்கள் சதியா? அல்லது இசுலாமியர்கள் சதியா? அல்லது வேறு சதியா? என எனக்கு தெரியவில்லை.

கிருத்துவம் மற்றும் இசுலாம் ஆகியவற்றை விமர்சித்து  சில பதிவுகள் தான் இட்டுள்ளேன் அதற்கே இவ்வளவு பெரிய சதியா?

நான் கிருத்துவம், இசுலாம், இந்து மத ஒற்றுமைகளை பற்றி எழுதியவற்றை இவர்கள் படிக்கவில்லையா?

அல்லது அதற்கு தண்டனையாகத்தான் என் தளப்பெயரை திருடிவ்ட்டார்களோ?

ஆமாங்க முதலில் .com போட்டு தளத்தை திறந்தாள், என்னுடைய தளத்தை காணவில்லை. அது கிருத்துவ தளத்திற்கு செல்கிறது.  இங்கே போய்  பாருங்க 

ரொம்ப சிரமமா போச்சு....
பிறகு ஏதேதோ செய்து பார்க்க .in போட்டு  பார்க்க என்னுடைய தளம் வருகிறது.

இது யார் செய்த சதி..எதற்கு செய்த சதி என்று ஒன்றும்  புரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் யாராவது சொல்லுங்கள் நண்பர்களே.
போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் .in இட்டு என்னுடைய தளத்தை திறக்க முயலுங்கள்.
நன்றி

பிற்சேர்க்கை: இப்பொழுது சில நேரங்களில்  .in கூட வேறு தளத்திற்கு இட்டு செல்கிறது :( 
Related Posts Plugin for WordPress, Blogger...