வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

புட்டபர்த்தி சாய் பாபா ஏன் சந்நியாசி ஆனார்?



(நேயர் விருப்பம்: வாசகி சுந்தரி அவர்கள் புட்டபர்த்தி சாய் பாபா ஏன் சந்நியாசி ஆனார்? என்ற கேள்வி எழுப்பினார், அந்த கேள்விக்கான ஒரு சிறு அலசலே இது.நேற்று தவிர்க்க முடியாத காரனங்களால் பதிவிட முடியவில்லை. நேற்றைய பதிவை எதிர்பார்த்தவர்கள் மன்னிக்கவும்.)
.
சாய் பாபாவின் ஜாதகம்: விருசிக லக்னம், லக்னத்தில் சனி, சுக்கிரன், சூரியன் மற்றும் புதன்.  இரண்டில் கேது, மூன்றில் குரு, ஆறில் செவ்வாய்,எட்டில் ராகு மற்றும் சந்திரன். 

அவருடைய ஜாதகத்த பார்த்த  உடனே கண்ணுக்கு தெரிவது...அவருடைய லக்னத்தில் நான்கு கோள்கள் உள்ளது.
யாருடைய ஜாதகத்தில் நான்கு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட கோள்கள் ஒரே வீட்டில் உள்ளதோ  அவர்கள் சன்னியாசியாய் ஆவார் என்பது ஒரு விதி. அந்த விதி இவருக்கு சரியாக நடந்துள்ளது. (இவருக்கு மட்டும் அல்ல பெரும்பாலானோருக்கு இந்த விதி பொருந்தியுள்ளது. இந்த அமைப்புள்ளவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டுள்ளனர். .....இந்த அமைப்புள்ள சிலர் திருமணத்திற்கு பிறகு கூட சந்நியாச வாழ்க்கைக்கு மாறிவிடுவர்.)

யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும்? என்ற பதிவில் தியான அனுபவம் யாருக்கு ஏற்படும் என்று குறிப்பிடிருந்தேன்.  

அதில் சொல்லாத ஒரு விடயம் .  லக்னாதிபதியும், லக்னமும் ஐந்தாம் வீடு, ஐந்தாம் அதிபதி, கேது மற்றும் குரு இவர்களுடன் சம்பந்தம் பெற்றாலும் ஒருவருக்கு ஆன்மீக ஈடுபாடு ஏற்படலாம்.

கொஞ்சம் ஆழமாக சென்று பார்த்தால்... ...
விருசிக லக்னத்தில் பிறந்த சாய் பாபாவின் லக்னாதிபதி செவ்வாய்,  மேஷத்தில் கேதுவின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். ஐந்தாம் அதிபதியான  குரு, லக்னாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். இந்த தொடர்பும்  அவருக்கு ஆன்மீக மற்றும் சந்நியாச வாழ்க்கையை  அளித்திருக்கும். தங்கள் கருத்து?

சாய் பாபா பற்றிய மற்றொரு பதிவிற்கான  சுட்டி


வியாழன், 28 ஏப்ரல், 2011

யாருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்கை அமையும்? பகுதி-2

முந்தைய பதிவு முன்னோட்டம்...இது  கொஞ்சம் ஆழம்.
விட்டு கொடுத்து வாழ்வதிலும் சிக்கல் வரலாம். நான் மட்டும் தான் விட்டு கொடுக்கனுமா ஏன் அவள்/அவன் விட்டு கொடுக்க கூடாதா என்ற கேள்வி அடுத்து எழும். இரண்டு பேருமே விட்டு கொடுத்து போக வேண்டும். விட்டு கொடுப்பதிலே போட்டி வருவதுதான் நல்லது. உனக்காக நான் இத கூட செய்யா மாட்டேனா என்று ஒருவர் மாறி ஒருவர் விட்டு கொடுப்பதிலே தான் மகிழ்ச்சியே . 

இங்கே ஒருவர் மட்டும் விட்டு கொடுக்க மற்றவர் இப்படியே அவர் நம் வழிக்கு வந்து விடுவார் என்று நினைப்பது அரக்கத்தனம்.   அவர்களுக்கு எடுத்த சொல்ல வேண்டியது தான் அடுத்த வேலை. மனம் திறந்து பேசுங்கள். புரிய வைக்க முயலுங்கள். பேசினாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.("அதுல" கொஞ்சம் அகிம்சையும் முயற்சி பண்ணி பாக்கலாம்)  நீங்கள் விட்டு கொடுப்பது மற்றவர்க்கு தெரிய வேண்டும் அப்பொழுதுதான் அவர்களும்...நமக்காக இவ்வளவு விட்டு கொடுத்திருக்கார் ஏன் நாமும் விட்டு கொடுத்து போக கூடாது என்ற நல்லெண்ணம் வரும். 


ஜாதக ரீதியாக பார்த்தால் ஏழாம் வீடுதான் திருமணத்திற்கு ரொம்ப முக்கியம்.
ஏழாம் வீட்டில் எந்த கோள்களும் இல்லாமல் இருத்தலே நலம்.(அப்படின்னு தாங்க நினைக்கிறேன்). ஏழாம் வீட்டில் சுப கோள்கள்  இருந்தாலும் அதனாலயும் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. அப்படி கோள்கள் இருக்கிற பட்சத்தில் அது சுப கோள்களா இருந்தா கொஞ்சம் பரவாயில்லை .  சுபர்  பார்வை மிக நல்லது.
பாவிகள் அமர்ந்தால் கொஞ்சம் சிக்கல் அதிகம் தான்.

அதேபோல் ஏழாம் வீட்டு அதிபதியும் சுபராக இருத்தல் நலம். இது மகிழ்ச்சியான மணவாழ்க்கையும், அழகிய  துணையையும் தரும்.

உங்க லக்னத்துக்கு ஏழாம் வீடு பாவி வீடா இருந்தா கொஞ்சம் சிக்கல் தான்.

ஏழாம் வீட்டு அதிபதி சுபரின் நட்சத்திரத்தில் இருத்தல் நல்லது, பாவியின் நட்சத்திரத்தில் இருந்தால் கொஞ்சம் சிக்கல் வரும்...வரலாம்.

அதேபோல் சுக்கிரனும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சுபர் பார்வை நலம், பாவர் பார்வை சிக்கல் தரும். சுபர் சேர்க்கை நலம், பாவர் சேர்க்கை சிக்கல் தரும்.


ஏழாம் வீடு, ஏழாம் அதிபதி, சுக்கிரன் இவர்கள் இரண்டு தீய கோள்களுக்கு நடு வீட்டில் மாட்டினால்  சிக்கல் தான்.


அதிபதி மற்றும் சுக்கிரன் சுபர், நட்பு கோள்கள் நட்சத்திரத்தில் இருத்தல் மிக்க நன்று.
  இந்த கோள்கள் நவாம்சத்திலும் நல்ல நிலையில் இருத்த்தல் மிக்க நன்று.
(நடக்கிற தசை புத்திய பொறுத்து, கோள்சாரத்தை பொறுத்து இந்த விதிகள் வேலை செய்யும் அல்லது செய்யாமல் போகலாம்)

எது எப்படி இருந்தாலும் மனம் விட்டு பேசி, கடவுள் மேல பாரத்த போட்டுவிட்டு, விட்டு கொடுத்து யாரு போறாங்களோ அவங்களுக்கு  திருமண   வாழ்க்கை  மகிழ்ச்சியாக    அமையும்.

புதன், 27 ஏப்ரல், 2011

யாருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்கை அமையும்?



இந்த காலத்துல பல பேருக்கு திருமணம் நடக்கிறதே குதிர கொம்பா இருக்கு. அப்படியே நடந்தாலும் அதில் பல பேருக்கு அந்த அளவுக்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை. ஏன் என்றால் திருமணம் எனபதே "அந்த" சுகத்த அனுபவிக்க தான் என்ற மன நிலை பல பேருக்கு இருக்கு. கொஞ்சம் நாள் "அந்த" சுகத்தினால் வண்டி நல்லா ஓடும்.  (சிலருக்கு முதல் நாளே ஏமாற்றம் தான்.."அது" அப்படி இருக்கும் "இது " இப்படி இருக்கும் என்ற அதீத கற்பனைகளால். ஏப்படி இருந்தாலும் பரவாயில்ல அப்படின்னு மனநில இருந்தா தான் எல்லோர்க்கும் நல்லது)

ஆனா அதுவே கொஞ்ச நாளைக்கு அப்புறம் இதுதானா? இவ்வளவு தானா? என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது.
இதே நேரத்தில் இருவருக்கும் உள்ள நல்ல கெட்ட பழக்கங்கள் இருவருக்கும் தெரியவர ஆரம்பிக்கின்றது.
ஒருவருக்கு உள்ள பழக்க வழக்கம் மற்றொருவருக்கு பிடிப்பதில்லை. அவள் தான் நமக்கு தகுந்த மாதிரி மாற வேண்டும் என்று இவனும், அவன் தான் நமக்கு தகுந்த மாதிரி மாற வேண்டும் என்று இவளும்  நினைக்கின்றனர்.

இரண்டு பெரும் விட்டுக்கொடுத்து போனால் தான் வண்டி ஓடும் இல்லாட்டி கொட சாஞ்சிடும். ஜாதகத்த மீறி மனதில் வைக்க வேண்டியது இந்த செய்தி தான். 

ஜாதக ரீதியா
யாருடைய ஜாதகத்தில் ஏழாம் அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெறுகிறானோ அவனுக்கு திருமணத்தின் மூலமும் மனைவி மூலமும் மகிழ்ச்சி பொங்கும். ஏழாம் அதிபதிக்கு சுபர் பார்வை இருத்தல் ரொம்ப நல்லது. அசுபர் பார்வை இருப்பின் கொஞ்சம் பிரச்னை ஏற்படலாம். 

ஏழாம் அதிபதி சுபர் சேர்க்கை, நட்பு ராசியில்  இருத்தல் நலம். ஏழாம் அதிபதி அசுபர் சேர்க்கை, பகை வீட்டில் இருத்தல் கொஞ்சம் சிக்கல் தரலாம். 

இதுவே ஏழாம் அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மாட்டிக்கொண்டால் மனைவிக்கு  சிக்கல் தான். அது அவர்களின் ஆட்சி உச்ச வீடுகளாக இருந்தால் பரவாயில்லை. 

ஜாதகத்துல ஆயிரெத்தெட்டு விஷயம் இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து வாழ ஆரம்பிசிங்கனா...
பரவாயில்லையே
  இவங்க...இவங்களுக்கு  ஏன் நல்லது செய்ய  கூடாதுன்னு கடவுள் நினைக்கலாம். 
 
யாரு விட்டு கொடுத்து வாழ்கிறார்களோ அவர்களுக்குத் தான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 
ஹும்
...இது எங்களுக்கு தெரியாதான்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது)

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

தேர்தல் ஆணையத்தின் அறிவீனம் என்ன? 2


தேர்தல்  ஆணையத்தின்  இந்த  அறிவீனத்தினை ஊடகங்களோ அல்லது சம்பந்த பட்ட கட்சியோ ஏன் என்று கேட்காதது வியப்பாகவே உள்ளது.
(ஒருவேளை நான்தான் சரியாக படிக்கவில்லையா? )

இந்த தேர்தலில் போட்டியிட்ட அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளே சில. அப்படி இருக்கும் பொழுது அவர்களின் சின்னத்தை ஏன் தேர்தல் ஆணையம் சுயேச்சைகளுக்கு வழங்கியது என்பது வியப்பாகவே உள்ளது.

நான் சொல்வது தே.மு. தி. க. வின் முரசு சின்னத்தை பற்றி. எனக்கு தெரிந்தே இந்த சின்னம் இரண்டு தொகுதிகளில் சுயேச்சைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  எத்தனையோ சின்னங்கள் இருக்கும் பொழுது இவர்கள் ஏன் மற்றொரு அங்கீகரிக்கப் பட்ட கட்சியின் சின்னத்தை சுயேச்சைகளுக்கு வழங்கவேண்டும்.
 
இதை சில எதிர் கட்சிக்காரர்கள் தவறாக பாயன்படுத்தியுள்ளனர்.  இதைப்பற்றி அந்த கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை. 
இது தெரியாமல் சிலர்  நான் தே.மு.தி.க. வுக்கு வாக்களிக்கிறேன் என்று சுயேச்சைகளுக்கு வாக்களித்தனர். 

இது தேர்தல் ஆணையத்தின் அறிவீனம் தானே மக்களே? சொல்லுங்கள். 

திங்கள், 25 ஏப்ரல், 2011

காற்று வந்ததால் கொடி அசைந்ததா? அல்லது கொடி அசைந்ததால் காற்று வந்ததா?

காற்று வந்ததால் கொடி அசைந்ததா? அல்லது கொடி அசைந்ததால் காற்று வந்ததா?
காலம் காலமாக இந்த கேள்வி இருக்கிறது, இதெற்கென்ன பதில் தெரியுமா?

காற்று வந்ததால் தான் கொடி அசைந்தது.
கொடி அசைவதினாலும் காற்று வரும். ஆனால் காற்றில்லாமல் கொடி அசையாது.

அறிவியல் பூர்வமாகவோ அல்லது ஆன்மீக பூர்வமாகவோ எப்படி பார்த்தாலும் முதலில் தோன்றியது காற்றுதான் மரம் அல்ல. மரம் இருந்தாலும் இல்லையென்றாலும் காற்று இருக்கும். (சரி இத விடுவோம்)

கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக காற்று உருவாகின்றது அல்லவா. இங்கே மரத்திற்கு எந்த வேலையும் இல்லை. அதே போல் மரம் இல்லாத பாலைவனத்திலும் புயல் வரும்.

ஆதலால் தான் சொல்கிறேன் காற்று வந்ததால் தான் கொடி அசைந்தது.
கொடி அசைவதினாலும் காற்று வரும். ஆனால் காற்றில்லாமல் கொடி அசையாது(அப்படித்தான் நினைக்கிறேன்)
என்ன நான் சொல்வது சரிதானே?

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

புட்டபர்த்தி சாய் பாபாவுக்கு மறு பிறவி உண்டா?

ஆன்மீகத்திற்கு செல்வதன் நோக்கமே மறுபிறவியை இல்லாமல் செய்வதற்குத்தான். பலராலும் தெய்வமாக பாவிக்கப்பட்ட சாய்பாபாவுக்கு மறுபிறவி உண்டா இல்லையா?

ஒருவனது உயிரானது அவனுடைய அனுமதியுடன் பூத உடலை விட்டு வெளியே வருமாயின், அவனுக்கு மறுபிறவி இல்லை என்பது ஒரு சிலரின் கருத்து. இந்த கருத்தின் படி பார்த்தால் இவருக்கு மறுபிறவி உண்டு என்றே தோன்றுகிறது. ஏன் எனில் இங்கே இவர் இறந்துள்ளார்.

ஒருவன் எப்பொழுது இருக்கிறான் என்பதை பொருத்தும் அவனுக்கு மறுபிறவி உண்டா இல்லையா என்று சொல்லலாம்.

உத்திராயனத்தில் இறப்பவர்கள் என்னை வந்து அடைவர் என கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார். சித்திரை மாதம் உத்திராயனத்தை சேர்ந்த்தது. இந்த விதிப்படி பார்த்தல் இவருக்கு மறுபிறவி கிடையாது.

எவன் ஒருவன் சனி திசை முழுவதும் வாழ்கிறானோ அவனுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஒரு விதி.
இந்த விதிப்படியும் அவருக்கு மறுபிறவி கிடையாது.

ஒருவன் இறக்கும் பொழுது விழிப்புணர்வுடன் இருந்தாலும் அவனுக்கு மறுபிறவி இல்லை என்பது சிலர் கருத்து. இவர் எந்த நிலையில் இறந்தார் என்பது இறைவனுக்கே தெரியும்.


சாய் பாபா பிறந்தது விருசிக லக்னம். பன்னிரெண்டாம் வீட்டுக்கு சுக்கிரன் அதிபதி. அவர் இறந்த லக்னம் ரிஷபம். இதற்க்கு அதிபதியும் சுக்கிரனே. இவர் இறந்ததின் கூட்டு தேதி ஆறு இதுவும் சுக்கிரனுக்கு உரியதே.
இவர் சுக்கிரன் கோளுக்கு சென்று இருப்பாரோ என்று எனக்கு ஒரு எண்ணம்.

இவருக்கு மறுபிறவி இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம் அது அவர் செய்த பாவ புண்ணியத்தை வைத்தும் முடிவாகலாம்.
எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம்.

சனி, 23 ஏப்ரல், 2011

யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும் ?

இன்றைய நிலையில் பல பேர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டுள்ளனர். அனைவருக்கும் ஆன்மீக அனுபவம் ஏற்படுமா?.யாருக்கு ஏற்படும் என்று சுட்டிக்காட்டுவதே இந்த பதிவின் நோக்கம்.


முதலில் யாரால் ஆன்மீக அனுபவம் ஏற்ப்படும் என்று பார்ப்போம்.

ஒன்று. ஆன்மீகத்திற்கு முக்கியமான கோள் கேது - ஏன் எனில் இவனே குண்டலினிக்கு காரகன்.

இரண்டு. ஐந்தாம் வீடு.- ஏன் எனில் இந்த வீடே தியானத்தை குறிக்கும்.
மூன்று. ஐந்தாம் வீட்டின் அதிபதி.
நான்கு. குரு - இவன் சிவனை குறிப்பவன். ஆன்மீகத்திற்கு முக்கியமானவன்.(சிவனின்றி ஏது தியானம்)
ஐந்து - ஐந்தாம் வீட்டில் அமர்ந்த கோள்கள் மற்றும் அதிபதியுடன் சேர்ந்த கோள்கள்.

இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம்.
ஆன்மீகத்திற்கு உகந்த சில முக்கிய கோள் நிலைகள் கீழே:

௧.லக்னத்தில் குரு இருப்பத்து மிக சிறப்பு. ஏன் எனில் இங்கே இருக்கும் குரு ஐந்தாம் வீட்டை பார்க்கிறான் மற்றும் குருவிற்குரிய ஒன்பதாம் வீட்டை பார்கிறான். அதுமட்டுமல்ல அவன் ஐந்து, ஒன்பது மற்றும் பதினொன்றாம் வீடுகளில் இருப்பதும் சிறப்பே ஆகும். ஏன் எனில் இங்கிருந்தும் அவன் ஐந்தாம் வீட்டை பார்க்கிறான். இங்கே இருக்கும் குரு கேது மற்றும் ஐந்தாம் வீட்டு அதிபதியை பார்த்தல் இன்னும் நலம்.

௨. கேது ஐந்தாம் வீட்டில் இருத்தல், ஐந்தாம் வீட்டு அதிபதியின் நட்சத்திரத்தில் இருத்தல் அல்லது குருவின் நட்சத்திரத்தில் இருத்தல், ஐந்தாம் வீடு அதிபதியுடன் இணைந்த்திருத்தல், குருவின் பார்வை பெற்றிருத்தல்.

௩. ஐந்தாம் அதிபதி- குரு, கேது ஆகியவைகளுடன், சேர்க்கை அல்லது பார்வை அல்லது நட்சத்திர தொடர்பு கொண்டிருத்தல்.
(இன்னும் நிறைய சொல்லலாம்)

சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில்
யாருடைய ஜாதகத்தில் கேது,ஐந்தாம் வீடு, ஐந்தாம் வீட்டின் அதிபதி மற்றும் குரு - இவர்களுக்குள் சம்பந்தம் இருக்கிறதோ இவர்களுக்கு "தியான"ஆன்மீக அனுபவம் ஏற்ப்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
இங்கே சம்பந்தம் என்பது இணைவு, பார்வை, நட்சத்திர அமர்வு ஆகியவற்றை குறிக்கும். (பரிவர்த்தனை கூட இருக்கலாம்...வேறு ஏதேனும் சம்பந்தம் இருந்தாலும் சேர்த்துக்குங்க)

இதுவே என்னுடைய "குட்டி" ஆய்வின் முடிவு.

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

நியூட்டன்- பூனை கதை, நியூட்டன் முட்டாளா?

காலம் காலமாக ஒரு பூனை கதை சொல்லி நியூட்டன் முட்டாள் தனமாக செயல் பட்டார் என்று கூறுவார்கள். அந்த கதைப்படி அவர் முட்டாளா?

பெரும்பலோனருக்கு இந்த கதை தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

கதையின் சுருக்கம் என்னவெனில் "பெரிய பூனை வந்து போக ஒரு ஓட்டை கதவில் இருக்கும், அதற்கு ஒரு குட்டி பிறந்தவுடன் அதுவும் வந்து போக அதற்கு அருகே ஒரு சிறிய ஓட்டையை நியூட்டன் போட்டார். பெரிய பூனை வந்து போகும் பெரிய ஓட்டை வழியே சின்ன பூனையும் வராதா அவர் இந்த இடத்தில் முட்டாள் தனமாக செயல் பட்டார்" என கதை முடியும்.

உணமையிலேயே அவர் அறிவாளி தான் என்பதை அந்த கதை சொல்பவரும் ஏற்றுக்கொள்வார், இருப்பினும் எவ்வளவு பெரிய அறிவாளியும் முட்டாள் தனமாக நடந்து கொள்வான் என்பதற்காக சொல்லப்படும் கதை.

அந்த கதை உண்மையோ பொய்யோ தெரியாது. அந்த கதைப்படி அவர் முட்டாளாகவும் செயல் பட்டிருக்கலாம். அப்புறம் ஏன் இந்த பதிவு ஏன்று நீங்கள் கேட்கலாம். எனகென்னவோ அவர் செய்தது புத்திசாலித்தனமாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது.
எப்படி?

என்னைப்பொருத்த வரை நியூட்டன் ஓட்டையை எங்கே போட்டார், ஏற்க்கனவே ஓட்டை எங்கே இருந்தது என்பதை பொறுத்துதான் அவர் எப்படி செயல் பட்டார் என்பதை முடிவு செய்ய முடியும்.

ஒருவேளை பெரிய பூனை வருவதற்கான ஓட்டை சற்று உயரத்தில் இருந்தது என்று வைத்து கொள்வோம். சிறிய கால்களை உடைய பூனை உயரத்தில் இருக்கும் ஓட்டையில் நுழைய சிரமப்படும் இல்லையா?

சிறிய பூனை சுலபமாக சென்று வர அவர் கீழே சின்ன ஓட்டை போட்டிருக்கலாம் என எனக்கு தோன்றுகிறது. இந்த கோணத்தில் பார்த்தால் அவர் புத்திசாலி தானே?

வியாழன், 21 ஏப்ரல், 2011

அன்ன ஹசாரே-வுக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்?

அன்ன ஹசாரே-வுக்கும் அஜித்துக்கும் ஒரு சம்பந்தம் உள்ளது. சற்று சிந்திந்தால் உங்களுக்கே தெரியவரும். 
என்ன கண்டுபிடித்து விட்டீர்களா?

சிட்டிசன் படத்தில் அஜித் ஊழலுக்கு எதிராக போராடுவார். அன்ன ஹசாரே உண்மையிலேயே போராடுகின்றார்.

 அது மட்டும் அல்ல அஜித்  படத்தில் வைத்த கோரிக்கையும் அன்ன ஹசாரே உண்மையில் வைத்த கோரிக்கையும் ஒன்றுதான்.
அது என்ன கோரிக்கை?

ஊழல் செய்தவர்களை தண்டிப்பதோடு மட்டுமல்லாது அவர்கள் சம்பாதித்த சொத்துக்களையும் கையகப்படுத்த வேண்டும் என்பதே அது .

அது மட்டும் அல்ல படத்தில் ஊழல் செய்தவர்களின் சொந்தங்களுக்கும் தண்டனை தர வேண்டும் என்று கூறுவார்.

இதையும் வரப்போகும் சட்டம் ஏற்றுக்கொண்டாள் நன்றாக இருக்கும். ஊழல் செய்ய ஒவ்வொருவனும் பயந்து நடந்குவான்.

ஒருவன் ஏன் ஊழல் செய்கிறான்? தானும் தன சொந்தங்களும் வசதியாக இருக்க வேண்டும் என்பதால் தானே. ஊழல் செய்தால் அனைவருக்கும் தண்டனை எனும்போது எவனாவது ஊழல் செய்யா முன் வருவானா?

(சிட்டிசன் படத்தின் மூலம் சிறந்த கருத்தை முன் மொழிந்த இயக்குனர் சரவண சுப்பையாவுக்கும், தயாரிப்பளருக்கும், தல அஜித்துக்கும் இந்த வலைப்பூவின் மூலம்  சிறப்பு வாழ்த்துக்கள் . அதேபோல் இந்த லோக் பால் சட்டம் சிறப்பாக வர அந்த குழுவுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.)

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

மனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன?-பாகம் - 3

குழந்தை பிறப்பது மனிதன் நினைத்தால் தான் நடக்கும், உயிரையும் மனிதனால் உருவாக்க முடியும் என்று சென்றைய பதிவுகளில் பார்த்தோம். (முந்தைய பதிவிற்கான வழிகாட்டி).இந்த பதிவில்

பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா? என்பதை நிர்ணயிப்பது யார் என்பது பற்றி பார்ப்போம்.

குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஆண்டவான் தான் தீர்மானிக்கிறான் என்பது பெரும்பாலானோரின் கருத்து. இறைவனை நம்புபவ்ரின் கருத்து.

எக்ஸ், ஒய் குரோமோசோம்கள் என்பது அறிவியலாளர்களின் கருத்து. மற்றும் பகுத்தறிவாளர்கள் , நாத்திகர்கள் என்று சொல்பவரின் கருத்து.

மேலோட்டமாக பார்த்தால் இருவர் சொல்வதுமே சரிதான். ஆனால் சற்று ஆழ்ந்து சென்றால் இங்கே இருவர் சொல்வதுமே தவறுதான் என்று தெரியவரும்.

ஒரு குழந்தை ஆணாக பிறக்க வேண்டுமா இல்லை பெண்ணாக பிறக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் சக்தி மனிதனிடம் உள்ளது. (உண்மையில் மனிதனே தீர்மானிகின்றான்). ஆனால் அவன் அதை அறிவதில்லை, உண்மையில் அவன் அறிந்திருந்தாலும் நாட்டில் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம்.
அவன் "அந்த" நேரத்தில் "எங்கே" "எந்த நிலையில்" இயங்குகிறான் என்பதை பொறுத்தே ஒருவனுக்கு ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பது முடிவாகிறது. ( இதை நான் சொல்லவில்லை ஒரு சித்தர் சொன்னது. அனுபவ பூர்வமாக சிலரும் சொல்வது).
ஆக இங்கே இந்த வாதத்தில் பங்கு பெற்ற இருவருமே தோற்க்கின்றனர்
தொடர்ந்தது யார் தோற்கிறார்கள் என்பதை பார்ப்போம்.......


வியாழன், 14 ஏப்ரல், 2011

தேர்தல் ஆணையத்தின் அறிவீனம் என்ன?

இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தேர்தல் ஆணையத்தின் அறிவீனத்தை எடுத்துரைக்க மறந்ததேனோ?

இந்திய அளவிலான ஊடகங்கள் தமிழகத்தை கேவலமாக பார்க்கின்றன , இங்கே அறிவிக்கப்பட்டுள்ள
இலவசத்திட்டங்களால்.

இன்று ஓட்டுக்கு காசு கொடுப்பதை தடுக்கும் தேர்தல் ஆணையம் ஏன் ஓட்டுக்கு வண்ணத்தொலைக்காட்சி, நிலம், இலவசமாக கொடுக்கப்படும் என்று கடந்த தேர்தலில் அறிவித்ததை தடுக்க வில்லை.
ஏழை எளிய மக்களுக்கு சிலவற்றை இலவசமாக தருவதில் தவறில்லை. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
இவற்றை தருவோம் ஆதலால் எங்களை தேர்ந்தெடுங்கள் என்பது எவ்வளவு பெரிய குற்றம். இது
ஜனநாயகத்தை கேளிக்குத்தாக்கும் செயல் அல்லவா? ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கும் இந்த மாதிரி அறிவிப்புக்கும் என்ன வித்தியாசம்?

முதலில் தேர்தல் ஆணையம் தேர்தல் நேரத்தில் இலவசத்திட்டங்களை அறிவிக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வரவேண்டும். இதை செய்யாத வரையில் தேர்தல் ஆணையம் அறிவீனமாகவே செயல்படுகிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் முதலில் சிறப்பான நடவடிக்கை எடுத்தது என்றாலும் அது கடைசி இரண்டு , மூன்று நாட்களில் கோட்டை விட்டு விட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இருப்பினும் வரலாறுகாணாத வகையில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல் பட்டது என்பதை மறுக்க இயலாது (வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாத இடைவெளி......இது சில சந்தேகங்களை தருகிறது)

உடனடியாக தேர்தல் ஆணையம் தேர்தல் நேரத்தில் இலவசத்திட்டங்களை அறிவிக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வரவேண்டும்.


செவ்வாய், 12 ஏப்ரல், 2011

யாருக்கு ஒட்டு போட வேண்டும்?

இன்று தமிழகத்தில் தேர்தல் நாள். இங்கே நான் பரப்புரை செய்யவில்லை. யாருக்கு ஒட்டு போட வேண்டும் என்ற எண்ணங்களை மட்டுமே முன் வைக்கின்றேன்.

தற்பொழுது தமிழத்தின் பெரும்பாலான இடங்களில் மூன்று மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. யாரால் தங்கு தடையற்ற மின்சாரம் வழங்க முடியும் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.

தற்பொழுது வரலாறு காணாத விலைவாசி உயர்வு. யாரால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியுமோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.

யாரின் ஆட்சி உங்களுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களோ அவர்களுக்கு வாகளியுங்கள்.

யார் வந்தால் உங்களுக்கும் மக்களுக்கும் நல்லது செய்வார்கள் என்று தோன்றுகிறதோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.

யார் வந்தால் தரமான கல்வியும், வேலை வாய்ப்பும், தொழில் முனைவோருக்கு ஊக்கமும் கிடைக்குமோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.


தயவு செய்து 49O வை உபயோகப்படுத்தாதீர். (ஒட்டுபோடாமல் இருப்பதும் அதை செய்வதும் ஒன்றுதான்)

"ஓட்டுப்போட வேண்டும் என்பது முக்கியம்.
அதைவிட முக்கியம் யாருக்கு போடுகிறோம் என்பது."

ஆதலால் சிந்தித்து, சுய நலம், பொது நலம் இரண்டையும் கருத்தில் கொண்டு பொதுநலத்திற்கு சற்று அதிக முக்கியத்துவம் தந்து வாக்களியுங்கள்.

மறந்தும் இருந்து விடாதீர், இருந்தும் மறந்து விடாதீர், காலை எட்டு மணி ஆகிவிட்டதா? இப்போதே கிளம்புங்கள்.சிந்திந்து வாக்களிப்பர்.
வாழ்க ஜனநாயகம்.

கேது எங்கே எப்படி மோட்சம் வழங்குவான்?

பொதுவாக சொல்லப்படுவது கேது 12ல் இருந்தால் மறுபிறவி இல்லை. 12 என்பது மோட்சத்தை குறிக்கும் வீடு அதனால் அது சரி .

அதே நேரத்தில் கேது 5-ல் இருந்தாலும் மறுபிறவி இல்லை என்று சொல்லப்படுகின்றதே அது ஏன்?

ஐந்தாம் வீடு பூர்வ புண்யத்தை குறிப்பது. அதில் கேது இருப்பதால், பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனாக இந்த ஜென்மத்தில் அவன் மோட்சத்தை அளிக்கலாம்.(இந்த ஜென்மத்தில் பாவங்கள் செய்ய வில்லை எனில். அதே நேரத்தில் பன்னிரெண்டாம் வீடும் அதன் தலைவனும் நன்றாக இருத்தல் இன்னும் அந்த வாய்ப்பை அதிகரிக்கலாம்).

ஐந்தாம் வீடு அறிவைக்குறிப்பது. கேது இவனை கடவுள் யார் என்பதை ஆய்ந்தறிய செய்து அதன் மூலமும் மோட்சம் வழங்கலாம்.

அது மட்டும் அல்ல ஐந்தாம் வீடு தியானத்தைக்குறிக்கும். இந்த வீட்டில் கேது அமர்வதினால் அவன் தியானத்தின் மூலம் மோட்சம் அடைய வைக்கலாம்.(குரு பார்வை இன்னும் இந்த பலனை அதிகரிக்கலாம்).

உச்சம் பெற்ற கேது ஒருவனின் ஜாதகத்தில் இருந்தாலும் அவன் மோட்சத்தை அளிக்கவல்லவன் என்பது சிலரின் கருத்து.

திங்கள், 11 ஏப்ரல், 2011

ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்படுகின்றதா ? யார் கொடுக்கிறார்கள்?


இல்லை என்று சொன்னால் அது சுத்தப்பொய்யாகி விடும். தேர்தல் ஆணையம் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும். கொடுப்பவர் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
ஒட்டு இயந்திரந்தில் தங்களது கட்சியின் சின்னம் எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை காட்டி பிரச்சாரம் செய்வது போல் வந்து, எல்லைக்குட்பட்ட ஓட்டுச்சாவடியில் வாக்களிக்கும் உரிமை உள்ளதா என்பதை கேட்டுத்தெரிந்து கொண்டு பணம் கொடுப்பதாக கேள்வி.
எவ்வளவு என்பது இடத்துக்கு இடம் வித்தியாசப்படுகின்றது. கிராமம் சார்ந்த பகுதிகளில் ரூபாய் இருநூறு கொடுப்பதாக கேள்வி.
யார் கொடுக்கிறார்கள்?
நல்ல கேள்வியா இருக்கே யாரிடம் பணம் இருக்கின்றது யார் கொடுப்பார்கள் என்பது ஊரறிந்த செய்தியாச்சே.


ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

கடவுள் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு கடவுள் மரணத்தை நோக்கி என்ற பதிவை காண நேர்ந்தது.
அதற்க்கான வழிகாட்டி. அந்த பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டத்தை கீழே கொடுத்துள்ளேன்.
தங்களுடைய இந்த பதிவு அருமை. சிந்தனையை தூண்டுவதாக உள்ளது. சில உண்மைகள் பொதிந்துள்ளது. ஆனாலும் ஆங்காங்கே சில தவறுகள் உள்ளது. இதை சுட்டி காட்டுவது என் கடமை என் நினைக்கின்றேன்.

//மேற்கூறிய அவதார புருஷர்களின் இறுதி வாழ்க்கை என்ன ஆனது என்று எங்கையுமே குறிப்பிடப் படவில்லை//
இது தவறு. கிருஷ்ணனின் இறப்பு பற்றிய் குறிப்பு உள்ளது. இராமனின் இறப்பு பற்றிய குறிப்பு இருக்கா என தெரியவில்லை. தேடிப்பார்த்தால் கிடைக்கலாம். நமக்கு ஒன்று தெரியாது என்பதால் அது யாருக்குமே தெரியாது எனபது சரியல்ல.

//ஒருவரை கடவுள் என்று நம்புவதற்கு அவரிடம் 4 நிபந்தனைகள் இருக்க வேண்டும். அவர் ஒருவராக இருக்க வேண்டும்.கடவுள் தேவையற்றவராக இருக்க வேண்டும். 3. அவர் யாரையும் பெற்றிருக்கக்கூடாது! யாராலும் பெறப்பட்டவராக இருக்கக்கூடாது. 4. அவரைப்போன்று எவறுமே இல்லை!//

கடவுள் அப்படித்தான் இருக்க வேண்டும் அல்லது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல நீங்கள்(நாம்) யார்?
அவர் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது உங்களது ஆசையாக இருக்கலாம் ஆனால் அவர் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வது ஏற்ப்புடையது அல்ல. அவன் எப்படியும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.

ரஜ்னிஷ் ஓஷோ இறக்கவில்லை என்பதற்கான குறிப்புகள் உள்ளது. (இதை ஆய்ந்து பார்க்க வேண்டும்)
மேலும் மனிதன் இறக்கமால் இருக்க முடியும் என்று நம்பும் அளவுக்கு குறிப்புகள் உள்ளன. (இதைப்பற்றி தனிப்பதிவே போட வேண்டும்).
நான் கடவுள் என்று சொல்லும் திருட்டு சாமியார்கள் இருக்கின்றனர் என்பது உண்மை. போலிச்சாமியியாரின் முகத்திரையை கிழியுங்கள். அதே நேரத்தில். "நான் கடவுள்" என்று சொல்வதன் அர்த்தம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
(ஜாஹிரின் பேச்சுக்களை நீங்கள் நிச்சயம் கேட்டுரிப்பீர்கள் என நம்புகிறேன். )
கடவுள் இப்படித்தான் இருப்பார் என்பது பிறர் சொல்லி படித்து தெரிந்து கொண்டவன் வாதம்.
கடவுள் எப்படியும் இருப்பார் என்பது அனுபவித்தவன் வாதம் அல்லது கூறும் உண்மை.
அனுபவிப்பவுருக்கும் படிப்பவருக்கும் வித்தியாசம் இருக்கும் என்பதை நீங்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வீர்கள்.
அதே வித்தியாசம் தான் கடவுளைப்பற்றி படிப்பவருக்கும் அனுபவிப்பவருக்கும் உள்ளது.


கடவுள் பற்றி நான் சில பதிவுகளை எழுதியுள்ளேன் அதற்க்கான வழிகாட்டி கீழே.
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/04/2.html
நீங்கள் என்னுடைய பின்னூடத்தை சரியான முறையில் எடுத்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
உங்களுக்கு விருப்பம் நேரம் இருந்தால் தங்களுடைய கருத்தையும் தெரிவிக்கலாம்.
தங்களுடைய எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
இராசா. புரட்சிமணி

சனி, 9 ஏப்ரல், 2011

"Link" என்கிற சுட்டிக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

இணையத்தில் ஒரு தளத்திலிருந்து ஒரு தளம் அல்லது ஒரு பக்கம் செல்ல "Link" கொடுக்கப்படுகின்றது. அதற்கு இணையான தமிழ்ச்சொல்லாக சுட்டி என்ற வார்த்தை புழக்கத்தில் உள்ளது. இதுவே தமிழ்ப் பெயர் தானே பின்பு ஏன் இணையான தமிழ்ச் சொல் என்று நீங்கள் கேட்கலாம்.

சுட்டிக்கு அர்த்தம் அதாவது காரணப்பெயர் என்ன என்று எனக்கு புரியவில்லை. (தெரிந்தால் சொல்லுங்கள்) ஆதலால் இதற்கு இணையான தமிழ்ச்சொல் என்னவாக இருக்கும் என்று நினைத்த போது "வழிகாட்டி" என்பதே சரியாக இருக்கும் என்று எனக்கு தோன்றியாது. மற்றொரு தளத்திற்கு அல்லது பக்கத்திற்கு செல்லும் வழியைக் காட்டுவாதால் இது வழிகாட்டி.

உங்களின் கருத்து என்ன சுட்டி என்ற வார்த்தையை விட "வழிகாட்டி" என்பது நன்றாக, பொருள் நிறைந்ததாக உள்ளதா?

மனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன?-பாகம் - 2

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடவுளைப்பற்றி யாரும் கவலைப்படாத காலம் முன்பு இருந்தது என்று சொன்னால் இன்றுள்ள மக்கள் அதை நம்ப மறுப்பார்கள். ஆனால் சில குறிப்புகள் கூறுகின்றன.

என்று கடவுள் இருக்கிறார் என்ற வாதம் எழுந்ததோ அன்றே அவர் இல்லை என்ற வாதமும் எழுந்திருக்க வேண்டும்.

அந்த வாதத்திற்கான முடிவு இதுவரை எட்டப்படவில்லை . அதை எட்டுவதற்கானஒரு முயற்சியே இது.

அனைவரது சந்தேகங்களையும் தீர்த்து இந்த வாதத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் வந்து விட்டது.(இதை முடிவுக்கு கொண்டு வருவதால் கிடைக்கும் நன்மை என்ன என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்)
இதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் உங்களின் பங்களிப்பு இல்லாமல் அது சாத்தியமாகாது. ஆதலால் உங்களின் கேள்விகளையும் பதில்களையும் தாருங்கள். (உலகத்தில் உள்ள அனைவரது வாதங்களையும் முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம் நமது வாதத்தையாவது முடிவுக்கு கொண்டு வருவோம்- கவுண்டமணி சொல்றமாதிரி பின்னாடி வர சந்ததிகள் இத பாத்து தெரிஞ்சிக்கட்டும்.)

உயிரை உருவாக்குவது யார்?
காலம் காலமாக மதவாதிகளின் முக்கிய வாதமாக இருப்பது உயிரை உருவாக்குவது கடவுளே,குழந்தையை உருவாக்குவது கடவுளே,மனிதனை உருவாக்குவது கடவுளே, மிருகத்தை உருவாக்குவது கடவுளே என்பதுதான். இதற்கு இணையான வாதத்தை அறிவியலாளர்களால் பல காலமாக வைக்க முடியவில்லை. ஆனால் இன்றோ அதற்க்கு இணையான வாதத்தை அவர்கள் முன் வைத்துள்ளனர்.
(உங்களுக்கு தெரியாதது இல்ல)
ஆம் இன்று அறிவியலாளர்கள் நிரூபித்து விட்டனர். உயிரை மனிதனால் உருவாக்க முடியும் என்று.

மனிதன் "க்ளோனிங்" முறையில் "டோலி" என்ற ஆட்டுக்குட்டியை உருவாக்கி சாதனைப் படைத்தான். இணையான வாதத்தை வைத்துள்ளான் என்று ஒரு தரப்பு கூறினாலும். இது இணையான வாதமா?
"டோலி" என்பது "போலி " அல்லவா? என்பது மற்றும் ஒரு தரப்பினரின் கேள்வி.
முதல் பாகத்திற்கான வழிகாட்டி.
வாதம் தொடரும்......

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

நடிகர்களின் ஆதரவு அல்லது கருத்து தேவையா?

நம் மக்கள் கெட்டு விட்டனர் . அவர்களை கெடுத்ததில் திரைத்துரையினருக்கும் ஊடகங்களுகுக்கும் முக்கிய பங்கு உண்டு.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சில நடிகர்களுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர். ஆய்ந்து அறிய முற்படும் எழுத்தாளர்களும், ஊடகங்களும் கூட நடிகனின் கருத்தை அறிய ஆவல் படுகின்றனர் என்பதை விட ஆணை என்ன என்பது போல் எதிர்ப்பர்க்கின்றனர். திரைத்துறையை பற்றிய அவர்களின் கருத்தை கேட்பதில் தவறில்லை. ஆனால் அரசியலில், சமூகம் சம்பந்தம்மாக அவர்களின் கருத்து தேவையா? (அவர்களுக்கு தகுதி இருக்கா என்று பார்க்க வேண்டாமா?)

எதோ எம்.ஜி.ஆர்-ம், என்.டி. ஆர்- ம் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து நல்லது செய்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மக்களும் ஊடங்களும் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்கள் என்று நினைப்பது தவறு. மேலும் அவர்களின் அரசியல் சம்பந்தமான, முக்கிய பிரச்சனைகளின் சம்பந்தமான கருத்து என்ன என்று அறிய முற்படுவது முட்டாள் தனமாக தெரிகிறது.

ஒரு நடிகன் தானே முன்வந்து அவனின் கருத்தை தெரிவிப்பதில் தவறில்லை, அது சரியாக இருப்பின் அது சுலபமாக மக்களை சென்றடையலாம் - அவனை அந்த கருத்திற்காக கொண்டாடுவதிலும் தவறில்லை, ஆனால் ஊடகங்கள் தானாக சென்று நடிகர்களின் கருத்தை எதிர்ப்பார்ப்பது தவறு. மேலும் நடிகர்களில் முட்டாள்களும் உச்ச நிலையில் உள்ளனர் , அறிவாளிகளும் உச்ச நிலையில் உள்ளனர். யார் அறிவாளி யார் முட்டாள் என்று இந்த ஊடகங்களுக்கு தெரியாதா?. இவர்கள் விற்பனைக்காக, கவர்ச்சிக்காகவே நடிகர்களின் கருத்தை அறிய முற்ப்படுகின்றனர்.

இயக்குனர் அமீர் அவர்கள் ஒரு தடவை சொன்னார் நீங்கள் தலைவர்களை திரைத்துறையில் தேடாதீர்கள் ஏன் எனில் யாருக்கும் அந்த தகுதி இல்லை என்று.
அஜித் அவர்கள் சொல்லவில்லை? ஏன் நடிகர்களின் நிலையை அறிய முயல்கிறீர்கள், அவர்களை அரசியலில் ஈடுபடுத்தாதீர்கள் என்று.

(இன்று தினமலரில் ஒரு செய்தி அமீர்கான் ஊழலுக்காக உண்ணாவிரதம் இருப்பவருக்கு ஆதரவு. நமது நடிகர்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள் அதற்கானா என்னுடைய பதில் தான் இது. நான் சொல்வது சரியா? நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?)

வியாழன், 7 ஏப்ரல், 2011

பேரின்பம் என்றால் என்ன?

காலம் காலமாக பேரின்பம் என்பது பெரிதாக நினைக்கப்படுகிறது. நினைக்கப்படுகிறது என்பதை விட அதுவே உண்மையும் கூட.
ஆனால் அதை அடைந்தவர் அனுபவித்தவர் சிலர்.

பேரின்பத்திற்கு பலரும் பல பொருள் கொள்ளலாம் ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை, சித்தர்களை பொறுத்தவரை ஒரு பொருள் தான்.

பெரிதாக சொல்லவேண்டும் என்றால் சிவனை அல்லது இறைவனை கண்டு அவன் அழகிலே ஆடலிலே மயங்கி கிடத்தலே பேரின்பமாகும். சிவனின் அல்லது பிரபஞ்சத்தின் நடனத்தை கண்டு களிக்கலாம். (இது மட்டுமல்ல சொல்லமுடியாத அல்லது சொல்லத்தெரியாத அனுபவங்கள் பல கிடைக்கும் பேரின்பத்திலே. கடைசியில் மரணம் இல்லா பெரு வாழ்வும் கிடைக்கும் )

சின்னதாக சொல்ல வேண்டும் என்றால் ஒளியைக் கண்டு அதனுள் மூழ்கி அல்லது மூழ்கடிக்கப்பட்டு இருத்தல்.

பேரின்பத்தில் எந்தவிதமான அனுபவம் கிடைக்கும் என்று ஏற்கனவே சிலவற்றை சுட்டி காட்டியுள்ளேன் அதற்கான வழிகாட்டி கீழே.

சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்க்கும் என்ன தொடர்பு? வேறுபாடு?

ஆன்மீக பயணத்தில் எல்லாருக்கும் எல்லாமே கிடைக்குமா?

புதன், 6 ஏப்ரல், 2011

விஜயகாந்த் வேட்பாளரை அடித்தது ஏன்?

விஜயகாந்த் வேட்பாளரை அடித்தார் என்பது நிறைய பேருக்கு தெரியும் ஆனால் அவர் ஏன் அடித்தார் என்பது ஒரு புதிராகவே இருந்தது. அந்த புதிருக்கான விடை இதோ.


பெரும்பாலான ஊடங்களில் வந்த செய்தி என்னவெனில் அவர் வேட்பாளரின் பெயரை மாற்றி சொன்னார், அதைதிருத்த முயன்றதால் அவருக்கு அடி விழுந்தது என்று. இது உண்மையே.

அதே நேரத்தில் அந்த வேட்பாளர் விஜயகாந்த் வேட்டியின் நுனியை பிடித்து இழுத்து இதை சொல்ல முற்ப்பட்டிருக்கிறார். எங்கே வேட்டி அவிழ்ந்து விடுமோ என்ற ஆத்திரத்தில், ஏன் இதை செய்தாய் வேட்டி அவிழ்ந்தால் என்ன ஆவது என்று அவர் வேட்பாளரை அடித்தார்.

(இது சில தே.மு.தி.க. வினர் மத்தியில் இருக்கும் செவி வழி செய்தி....இது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம் உங்கள் கருத்து என்ன?)

பார்க்காமலே காதலிப்பவர்கள் யார்?

உடனே நமக்கு அஜித், தேவயாணி ஞாபகம் வரலாம். ஆனா நாட்டில் பல பேரு இப்படி இருப்பாங்க. இதுக்கு காரணம் சுக்கிரன்.

சுக்கிரன் பன்னிரெண்டில் இருந்தால் அவர்கள் பார்க்காமலே காதலிப்பார்கள்.
ஓரிருமுறை பார்த்து விட்டு பல காலம் காதலிப்பர். கோள்களின் மற்ற நிலைகளை பொறுத்து அவர்கள் காதல் தோல்வி அடைய வாய்புகள் உண்டு. காதல் சொன்னா தானே வெற்றி பெரும், இவர்கள் சொல்லாமலே கூட விட்டுவிடலாம்.
காதல் மற்றும் "அந்த" மாதிரி கற்பனைகளில் கில்லாடிகள்.
இவர்களுக்கு நகைகள் மேல் அதிக ஆர்வம் இல்லாமல் போகலாம். ஆடம்பர வாழ்விலும் பற்றில்லாமல் போகலாம்.

இவர்களுக்கு சுக்கிலம் மற்று சுரோணிதம் நிறைய விரயமாக வாய்ப்புகள் உண்டு. விரயம் என்பதால் சுயமாகவும் வெளியேற்ற வாய்ப்புகள் உண்டு. அதே நேரத்தில் இவர்கள் அந்த சுகம் அடிக்கடி அனுபவிக்க வாய்புகள் உண்டு. இந்த மாதிரி பெண்கள் அதிகமாக உச்ச நிலையை அடைய வாய்ப்புகள் உண்டு.

மற்ற கோள் நிலைகளைபொருத்து, திசை புத்தியை பொறுத்து இவர்கள்
அந்த மாதிரி செயல்களில் பிறருடன் ஈடுபட வாய்ப்புகள் உண்டு,
துணையை இழக்கவும் நேரிடலாம் அல்லது இவை நடக்காமலும் போகலாம்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

மனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன?


மனிதனால் ஒரு செயல் முடியாது என்றால் உடனே அது கடவுளால் தான் முடியும் என்பான்.

எல்லாமே விதிப்படி தான் நடக்கும் என்பர் சிலர்.
பிறப்பையும் இறப்பையும் மாத்த முடியாது ஆனால் நாம் வாழும் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும் என்பர் சிலர்.

இதில் யார் சொல்வது உண்மை? நான் சொல்கிறேன் (ஏற்கனவே சில சித்தர்கள் சொல்லிவிட்டார்கள்...இங்கே நான் என்பது ஒரு விவாதத்திற்காக மட்டுமே) இரண்டு பேர் சொல்வதும் பொய்.

விவாதத்திற்கு குழந்தை பிறப்பை எடுத்துக்கொள்வோம்.
குழந்தை என்பது ஆண்டவனின் அருளால் தான் பிறக்கின்றது என்பர் பலர். இது உண்மையா?
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்தால் கரு உருவாகலாம் அல்லது உருவாகாமல் போகலாம். கரு உருவானால் எந்த பிரச்சனையும் இல்லை. கரு உருவாக வில்லையெனில், அந்த தம்பதியர் போன ஜென்மத்தில் பாவம் செய்துள்ளனர் ஆதலால் தான் குழந்தை பிறக்கவில்லை என்பர் பலர்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஜோதிட ரீதியாக குழந்தை பிறக்கும் என்று இருந்தாலும் அவர்கள் அதற்கான முயற்சியை எடுக்க வில்லை அல்லது கருத்தடை உபயோகிக்கின்றனர் எனில் அவர்களுக்கு கடவுள் எப்படி குழந்தையை தருவார்?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நான்கு முதல் பத்து குழந்தை வரை பெற்றுக்கொண்டனர். ஆனால் இன்று ஒன்று அல்லது இரண்டு போதும் என்று நிறுத்திக்கொண்டான். இங்கே கடவுளின் பங்கு என்ன?

இதிலிருந்து என்ன தெரிகின்றது மனிதன் நினைத்தால் தான் சில நடக்க வேண்டியவைகள் நடக்கும் இல்லையேல் நடக்காது.
(தொடரும்....)

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

கோப்பை வந்தும் முழு மகிழ்ச்சி வரவில்லையே ஏன்?

இந்தியா கிரிக்கெட் எனும் மட்டைப்பந்தாட்டத்தில் உலகக் கோப்பை வென்றும் பெரும்பாலானோருக்கு முழு மகிழ்ச்சி இல்லை. நூறாவது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்த்த சச்சின் அதை அடிக்கவில்லை. இது ஒரு சிறு குறை என்றாலும் அவரை குறை சொல்ல முடியாது.
ஏன் எனில் மட்டைப்பந்து என்பது ஒரு குழுவின் ஆட்டம். அதில் ஒரு தனி நபரே அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக ஆட வேண்டும் என்று எதிர்பார்த்தல் தவறு. மற்ற ஆட்டங்களில் அவர் சிறப்பாக விளையாடினார் மேலும் அவரால் தான் காலிறுதி அரையிறுதி போட்டிகளில் வெல்ல முடிந்தது. மேலும் இந்த உலககோப்பையில் அவர் எடுத்த மொத்த ஓட்டங்கள் அவருக்கு இரண்டாம் இடத்தை பெற்று தந்தது.
ஆதலால் அவரின்றி இந்த உலககோப்பையை வென்று இருப்பதும் கடினமே. இருப்பினும் அவர் இறுதி ஆட்டத்தில் சதம் அடித்திருந்தால் அது இரட்டிப்பு மழிச்சியாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் இந்தியா வென்றது.. அதுவே அவருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சி. சச்சினின் சாதனை தொடர வாழ்த்துக்கள்.

சனி, 2 ஏப்ரல், 2011

எல்லோருக்கும் ஞானம் கிடைக்குமா? அதை கொடுப்பது யார்?

ஆம் இப்புவியில் பல ஆண்டுகள் வாழும் அனைவருக்கும் நிச்சயம் ஞானம் கிடைக்கும்.

இந்த ஞானம் பெற யாரும் எதுவும் செய்ய வேண்டாம். அது கிடைக்க வேண்டிய நேரத்துல தானா கிடைக்கும்.

இந்த ஞானம் பெரும்பாலும் துன்பத்தாலும், துரோகத்தாலும், விரக்தியினாலும், அலுப்பினாலும் ஒரு வித அனுபவத்தாலும் வரும் என்று சொல்லலாம். (இங்கே ஞானம் என்பது ஒரு புரிதலை , படிப்பினையை குறிக்கும். உனக்கெல்லாம் பட்டாதான்டா தெரியும் என்று சொல்வார்களே அதையும் குறிக்கும் ).ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு பெரும் பிரச்சனையை குறிக்கலாம்.
இந்த ஞானத்தை கொடுப்பவன் கேது. யாருக்கு எதனால் ஞானம் வரும் என்பதை ஓரளவுக்கு கணிக்க முடியும்.

ஞான காரகன் கேது எந்த வீட்டில் இருக்கின்றானோ அந்த வீட்டை பொறுத்துதான் பெரும்பாலும் அவனுக்கு ஞானம் கிடைக்கும். அவன் இருக்கும் வீடு சம்பந்தமாகவே பெரும்பாலும் ஞானம் கிடைக்கும். ஆம் ஒன்று முதல் பண்ணிரண்டு வரை அவன் எங்கே இருந்தாலும் ஞானத்தை அளிப்பான். ஒரு வீடு எது எதைக்குறிக்கிறதோ அதில் ஒன்றின் மூலமாக இந்த ஞானம் வரும்)

உதாரணத்திற்கு ஒருவனுக்கு இரண்டில் கேது எனில் அவனுக்கு குடும்பத்தின் மூலமாக ஞானம் கிடைக்கலாம்(சிலருக்கு அளவுக்கு அதிகமாக குடும்பம் பெருகி வரும்- சிலருக்கு குடுபமே இல்லாமல் போய் ஞானம் வரும்), செல்வத்தின் மூலமாக கிடைக்கலாம். ஏழில் கேது எனில் திருமணம் மூலம் -திருமணம் ஆனபின்பு துணையினால் - அல்லது நண்பர்களினால். இப்படி அந்த வீட்டில் சம்பந்தப்பட்ட எதன் மூலமாக வேண்டுமானாலும் ஞான காரகன் கேது ஞானத்தை கொடுப்பான்.

(குறிப்பு: எப்பொருள் எனத்தொடங்கும் குறளை மனதில் வையுங்கள்)

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

சூரியனுக்கும் மறுபிறவிக்கும் சம்பந்தம் உண்டா?

ஜோதிடத்தில் மறுபிறவி இல்லாமைக்கு சில கோள் நிலைகள் உள்ளன. அது பெரும்பாலும் கேது குரு சம்பந்தப்பட்டது.ஆனால் நான் சூரியன் பற்றி எங்கேயும் படிக்க வில்லை.(படித்ததே கொஞ்சம் தான்...நீங்கள் படித்திருந்தால் சொல்லுங்கள் ).
இது எனக்கு ஆச்சர்யத்தை தருகிறது. ஏன் எனில் சூரியன் ஆன்மாவை குறிக்கின்றது. அவனே உடல் காரகனும் கூட.
மறுபிறவி ஆன்மா மற்றும் உடல் சம்பந்தப்பட்டது. ஆன்மா அழிவது அல்லது இறைவனுடைய ஆன்மாவோடு சேருவது அல்லது இறைவனடி சேர்வது எனபதே மறுபிறவி இன்மையை குறிப்பதாக படித்தடுன்னு. அப்படிப்பட்ட ஆன்மாவைக் குறிக்கும் சூரியன் பற்றி ஏன் எந்த குறிப்பும் இல்லை என்பது வியப்பே.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் சூரியன் பன்னிரெண்டில் இருந்தால் அவனுக்கும் மறுபிறவி இருக்காது எனபதே. ஏன் எனில் இந்த பாவமே மோட்சம் மற்றும் விரயத்தை குறிக்கின்றது. இங்கே இருக்கும் சூரியனானது மறுபிறவியை (குறைந்த பட்சம் பூமியில்) தராது.
Related Posts Plugin for WordPress, Blogger...