வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 9 மே, 2014

தாலிபானாகிறதா தமிழகம்? இந்து முசுலீம் கலவரம் வெடிக்கும் அபாயம்?


சில இசுலாமிய அமைப்புகளால் தமிழகம் தாலிபானாகி  வருகிறது. எதிர்காலத்தில் இது இந்து முசுலீம் கலவரத்திற்கு வித்துடுமோ என்ற அச்சம் ஏற்ப்படுகிறது.

-----------------------------
தமிழத்தின் வரலாற்றில் இதுவரை இந்து முசுலீம் கலவரம் ஏதும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அப்படி ஒன்று நிகழ்ந்துவிடுமோ என்று அச்சப்பட வேண்டியதாக உள்ளது.  ஒரு சில இசுலாமிய அமைப்புகள் இந்துக்களை கலவரத்திற்கு தயார் செய்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

தமிழகத்தை பொருத்தவரை எந்த ஒரு இந்து மத அமைப்பும் இசுலாமியர்கள் மீது தாக்குதல் தொடுத்ததாக எனக்கு தெரியவில்லை. ஆனால் சில இசுலாமிய அமைப்புகள் குண்டுவெடிப்புகளிலும், இந்து மத அமைப்பு தலைவர்களை கொலை செய்வதுமாக இருந்து வருகிறது.   அம்பு விட்டவர்களை பிடிக்காமல் அம்புகளை மட்டுமே காவல்துறை கைது செய்துள்ளது. ஓட்டுக்களுக்கு பயந்தோ என்னமோ  இந்து மத அமைப்பு தலைவர்களின் கொலைகளுக்கு காரணமாக இருந்தவர்களை  காவல்துறை இன்னும் கைது செய்யவில்லை.
---------------------------------------
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலின்பொழுது சில இசுலாமிய அமைப்புகள்  ஒட்டு கேட்ட வந்தவர்களை தடுத்துள்ளது, தாக்கியுள்ளது.  இதோ எதோ ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. இதன் மூலமாக இசுலாமிய அமைப்புகள் மதத்தை ஒரு பொருட்டாக எண்ணாத  மக்களுக்கு  மதவெறியை ஊட்டுகிறது என்றே சொல்ல வேண்டும்.

பாமக, மதிமுக,தேமுதிக கட்சிய சார்ந்தவர்கள் யாரும் தங்களை இந்துக்களாக அடையாளப்படுத்தவில்லை.  ஒட்டுமொத்த தமிழகமுமே அப்படித்தான்.ஆனால்  ஒட்டு கேட்டு வந்த அக்கட்சி தொண்டர்களுக்கு இசுலாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தது எப்படிப்பட்ட ஒரு விளைவை ஏற்படுத்தும் என்று இசுலாமிய அமைப்புகள் சிந்திக்கவில்லை. வெவ்வேறு ஜாதிகளாக தங்களை அடையாளப் படுத்தி கொள்ளும் தமிழர்களை  இவ்வாறான செய்கைகள் இந்துக்களாக  ஒன்றிணைக்கும் அபாயம் உள்ளது.

-------------------------------
சமீபத்தில் தரமணியில் தங்களுக்கு தனிசுடுகாடு வேண்டும் என  இசுலாமிய அமைப்புகளின் போராட்டத்தால் அப்பகுதியில் பத்தட்டம் நிலவியது
என படித்ததாக ஞாபகம்.
--------------------------------
ராமாநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சில இசுலாமிய கிராமங்களுக்கு வெளியாட்கள் யாரும் வரக்கூடாது என்று பதாகைகள் வைத்ததாக ஒரு செய்தி  வெளியானது. இதற்க்கு மறுப்பு தெரிவித்து ஜவஹருல்லா வெளியிட்டுள்ள கட்டுரையில் "பொதுவழியல்ல இது பெண்கள் நடமாடும் பகுதி" என்று ஒரு இடத்தில் எழுதப்பட்டுள்ளதாக ஒப்புக்கொள்கிறார். பெண்களை சிலர் கிண்டல் செய்வதால் அந்த குறுக்கு தெரு பெண்களுக்கான தெரு என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவ்வாறு எழுதப்பட்டது என்று அவர் கூறுகிறார். தனி பேருந்துகள் இருக்கும்பொழுது தனிதெரு இருக்க கூடாதா  என்று அவர் கேட்கிறார்.

எனக்கு தெரிந்து இந்தியாவில்  பெண்களுக்கு என்று தனி தெரு இருப்பது இங்கு மட்டுமே என்று நினைக்கின்றேன். தாலிபானில்  கூட இம்மாதிரி உண்டா என தெரியவில்லை.


http://www.dailypioneer.com/todays-newspaper/fatwas-ban-outsiders-entry-into-rameswaram-villages.html
http://twocircles.net/2013dec21/are_muslim_populated_villages_ramanathapuram_district_out_bounds_hindus.html#.U20yVIFdXIZ
---------------------------------------------------------------

இக்கட்டுரையின் மூலம் இசுலாமிய அமைப்புகளிடம் கேட்டுக்கொள்வது என்னவெனில் தயவு செய்து போராட்டங்களை அரசாங்கத்திற்கு எதிராக மட்டுமே நடத்துங்கள்,பொதுமக்களை பாதிக்காமல். உங்கள் நலனுக்கு அரசாங்கம் உள்ளது. உங்கள் குறைகளை அரசாங்கத்த்திடம் கூறி அதை தீர்க்க பாருங்கள். வீணாக மதம் என்ற உணர்வே இல்லாத இந்துக்களுக்கு மத்தியில் உங்கள் எதிர்ப்பை காட்டி அவர்களுக்கு மதவெறியை ஊட்டாதீர்கள். இதன் மூலம் பாதிக்கப்படப்போவது அப்பாவி பொது மக்கள் மட்டுமே. நீங்கள் அல்ல.
 இசுலாமியர்களுக்கு மதவெறியை ஊட்டாமல், மத சகிப்புத்தன்மையை கற்றுக்கொடுங்கள்.


Related Posts Plugin for WordPress, Blogger...