வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 25 மார்ச், 2014

தமிழக ஜிகாதிகள் சிரியாவில்?

இன்றைய் இந்து நாளிதழில் வந்துள்ள செய்தி  மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றது. தமிழத்தை சேர்ந்த இருவர் ஜிகாதிகளாக சிரியாவில் பயிற்சி பெறுகிறார்கள் என்பதுதான் அந்த செய்தி. அதுமட்டுமல்லாமல் ஜிகாதி அமைப்புகள் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியிலிருந்து ஆள் சேர்ப்பதாகவும் அது தெரிவிக்கின்றது.ஜிகாதிகளின்  தொடர்பு தலை நகரத்தோடு மட்டுமல்லாமல் கடலூர் வரை சென்றுள்ளது என்பது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

மதத்தின் பெயரால் மூளை சலவை செய்யப்பட்டு இவர்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர். மதப்பிரச்சாரம் செய்வதாக கூறிக்கொண்டு ஜிகாதிகளுக்கு சிலர் ஆள் பிடிக்கின்றனர். வலையுலகிலும் சிலர் ஜிகாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது நமக்கு தெரிந்ததே.


இதற்க்கு எதிராக ஏன் யாருமே குரல் கொடுப்பதில்லை? ஏன் யாரும் இதை தடுத்து  நிறுத்த முன்வரவில்லை?
ஏற்க்கனவே  சிலர் முஸ்லிம் தீவிரவாதிகள் என்கின்றனர் இதில் நாமும் குரல் எழுப்பினால் அவர்களை புண்படுத்தும் என்று நினைக்கிறார்களா? பயமா?அல்லது நமக்கு யாரும் ஒட்டு போட மாட்டார்கள் என்று நினைக்கிறார்களா என தெரியவில்லை.


எல்லா மதத்திலும் மத வெறியர்கள் உள்ளனர். இதை எல்லா மதத்தினரும் ஒத்து கொள்ள வேண்டும்.
இந்து மதத்தில் மத வெறியர்கள் தலை தூக்கும் பொழுது அவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள் தண்டிக்கப்படுகிறார்கள் . ஆனால் சில முஸ்லீம்கள் தண்டிக்கப்ப்படும்போழுது இது சதி என்று அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.

முஸ்லீம்கள்  தங்கள் மதத்தில்  ஜிகாதிகள் உள்ளனர் என்பதை ஒத்துக்கொண்டு அவர்களை எப்படி நல்வழிப்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும். ஜிகாதிகள் தண்டிக்கப்படும்பொழுது அதை வரவேற்க முடியவில்லை என்றாலும் அது அது பார்ப்பன யூத சதி என்று உண்மையை மறைக்க முயல வேண்டாம்.

அந்த மதத்தில் இல்லையா? இதை அவர்கள் செய்யவில்லையா என்று பேசுவது உங்கள் மக்களின் தலையில் நீங்களே  மண் அள்ளிப்போடுவதாகத்தான் அர்த்தம்.

இப்பதிவின் நோக்கம் இதுபற்றி விளம்பரம் கொடுப்பதல்ல...முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதே இப்பதிவின் நோக்கம். இப்பதிவு உங்கள் மனதை புண்படுத்தினால் என்னை மன்னிக்கவும்.நாளை உங்கள் மகன் ஜிகாதியாக மாறாமல் இருக்கவேண்டும் அதற்காக சிந்தியுங்கள்...செயல்படுங்கள்.

இதைபடிப்பவர்களில் ஒரு சிலர் என் மகன் ஜிகாதி ஆனால் எனக்கு பெருமைதான் என்று கூட நினைக்கலாம் உங்கள்  இனத்தை நீங்களே  அழிக்க நினைத்தால் அதற்க்கு பிறர் என்ன செய்ய இயலும்? ஜிகாதிகளுக்கு சுவனம் என்பது வெறும் கட்டு கதை என்பதை குரானையும் ஹதீசுகளையும்  நன்றாக படித்து பார்த்தலே புரியும். படித்து புரியவில்லை என்றால் ஜிகாத் பற்றிய உண்மையை  உணர்ந்த ஒருசில முஸ்லிம்கள் எழுதியவை இணையத்தில் உள்ளன அதை தேடிப் படிக்கவும். சுவனப்பிரியர்கள் ஜிகாத் ஒழிப்பாளர்களாக மாறவேண்டும். சிந்திப்பார்களா?

சுட்டி 1
சுட்டி 2

புதன், 19 மார்ச், 2014

என்னது? தீண்டாமைக்கு காரணம் திராவிடர்களா?

நமது திராவிடவாதிகள் தீண்டாமைக்கு காரணம் ஆரியர்கள் எனப்படும் பார்பனர்கள் தான் என எங்கும் முழக்கமிடுவதை  நாம் அறிவோம்  ஆனால் தீண்டாமைக்கு காரணம் திராவிடர்கள்தான் என்று ஸ்டான்லி ரைஸ் என்ற அறிஞர் கூறியுள்ளார்.

அவர் என்ன கூறினார்   எனில் பறையர்கள்தான் இந்த நிலப்பகுதியின் பூர்வகுடிகள். வந்தேறிகளாக வந்த திராவிடர்கள் இவர்களை வென்று சிறுமைபடுத்திவிட்டார்கள் அல்லது அடிமையக்கி  விட்டார்கள் .இதற்க்கு பிறகு ஆரியர்கள் வருகிறார்கள். அவர்கள் திராவிடர்களை வென்று சிறுமைபடுத்தி விட்டார்கள். இருப்பினும் அசுத்தத்தை சுத்தம் செய்யும் வேலைகளை அனைவரும் பூர்வகுடிகளான பறையர்கள் மேல்   திணித்து விட்டார்கள். தீண்டாமை எனபது  அடிமைபப்டுத்தப்பட்ட இனம்  மற்றும் அசுத்தம் சம்பந்தப்பட்ட தொழில்களால்தான் வந்தது என்றார் ஸ்டான்லி ரைஸ்.

ஆனால்  அம்பேத்கர் இது தவறான கருத்து என்று கூறிவிட்டார். அம்பேத்கரை  பொருத்தவரை ஆரியர் திராவிடர் என்ற இன பாகுபாடையும் அவர் ஏற்கவில்லை.அனைவரும் ஒரே இனத்தை சார்ந்தவர்கள் என்பதே அவரின் வாதம்.

இதை நான் இங்கு பதிய காரணம் இப்படியும் ஒரு வாதம் இருந்தது என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே.இதை வைத்து புதிய வெறுப்பை வளர்க்க வேண்டும் என்பது  எனது நோக்கம் அல்ல. அனைவரும் உண்மை எப்படியும் இருக்கலாம் என்றுணர்ந்து வெறுப்பை விட வேண்டும் எனபதே எனது நோக்கம். நடந்தது ஏதோ நடந்தது. அதை ஏற்றுக்கொண்டு இனி எப்படி ஒற்றுமையாக,அமைதியாக,மகிழ்ச்சியாக வாழ்வது என்பதில் மட்டுமே அனைவரது கவனமும் இருக்க வேண்டும்.

என்னைபொருத்தவரை மேலே கூறியது முழுமையான உண்மையும்  அல்ல அதே நேரத்தில் அது முற்றிலும் தவறான கருத்தும் அல்ல.

ஸ்டான்லி ரைஸ் மற்றும்  அம்பேத்கர்  இருவர் கூறுவதிலும்
கொஞ்சம்  உண்மையும் உள்ளது  கொஞ்சம் தவறும் உள்ளது.

என்னுடைய கருத்தை மற்று ஒரு நாளில் பதிவு செய்கிறேன்.
அல்லது எப்பவும் போல அப்படியே விட்டாலும் விட்டுடலாம் :)

இது தொடர்பான சுட்டி 
Related Posts Plugin for WordPress, Blogger...