வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

காதல் சரி... கள்ளக்காதல் சரியா தவறா?

பல பகுத்தறிவுப்புலிகள், பெண் விடுதலைக்கு பாடுபடுபவர்கள்,
சாதியை ஒழிப்பவர்கள், முற்ப்போக்குவாதிகள்  என்று தங்களை கூறிக் கொள்பவர்கள்    காதல் தவறு இல்லை என்று சமீபகாலமாக கூறி வருகிறார்கள்.

ஆணோ பெண்ணோ 18 வயதை அடைந்துவிட்டால் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம்  அதை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்கின்றனர். 

எனக்கு ஒரு சந்தேகம் இதை அந்த போராளிகள் தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ஒருவன் ஏற்க்கனவே திருமணமான பெண்ணை துரத்தி துரத்தி 
காதலித்து அவள் சம்மதத்தையும் வாங்கி விடுகிறான். 
எனக்கு கணவனும் வேண்டாம் குழந்தையும் வேண்டாம் காதலன் தான் வேண்டும்  என்கிறாள் அந்தப்பெண்.இப்பொழுது அந்த பெண்ணின் கணவன் மற்றும் குழந்தைகள் கதி என்ன.? சம்பீபத்தில் இப்படி ஒரு செய்தியை படித்ததாக ஞாபகம். (இப்படி காதல்,கள்ளக்காதல் பற்றி பல கேள்விகளை நீங்களே கேட்டுப்பார்க்கலாம்)

சமூகப்போராளிகளே உங்கள் தீர்ப்பு என்ன?

காதல் சரி என்று பிரச்சாரம் செய்பவர்கள் கள்ளக்காதலுக்கும் நாளைக்கு பிரச்சாரம் செய்வார்களா?


நேற்று காதல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை இன்று அதற்க்கு ஆதரவு தெரிவிக்கிறீர்கள் .

கள்ளக்காதல் இன்று ஏற்றுக்கொள்ளப் படவில்லை நாளை ஆதரவு  தெரிவிப்பீர்களா?

ஆண்- ஆண் , பெண் - பெண் உறவு மக்களிடையே ஆதரவு இல்லாவிட்டாலும் அரசாங்கம் அங்கீகரித்து விட்டது. இதையும் நாளை ஆதரிப்பீர்களா?


மனிதர்கள் -மிருகங்கள் உறவையும் நீங்கள் நாளை  ஆதரிப்பீர்களா? 

நீங்கள் எந்த பாதையில் செல்கிறீர்கள் - மனித சமுதாயத்தை எப்படி வழி நடத்தி செல்கிறீர்கள்  என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் இது நடந்தே தீரும்.இவை எல்லாமே முன்னொரு காலத்தில் நடந்தவைதான்.இவை அனைத்திற்கும் தாங்கள் தயாரா?

  
என்னுடைய நிலைப்பாடு.............?

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

உயிர் வேறு ஆன்மா வேறா?

சமீபத்தில் சகோ சார்வாகன் தளத்தில்  ஆன்மா வேறு உயிர் வேறு என்ற பொருளில் விவாதம் நடந்தது. இது பற்றி என்னுடைய கருத்தை பதிவு செய்யவே இப்பதிவு.

உயிர் வேறு ஆன்மா வேறு என்று சிலர் நினைக்கின்றார்கள். எனக்கு அவ்வாறு தோன்றவில்லை. உயிர் என்பதும் ஆன்மா என்பதும் ஒன்றையே குறிப்பதாக நான் நினைக்கின்றேன்.

உயிர் என்பது இன்றைய மருத்துவ ,அறிவியல்,நடைமுறை  சொல். ஆன்மா என்பது பண்டைய அறிவியல் சொல்.

ஆன்மிகம் என்பது ஆன்மாவை (உயிர்) பற்றிய  படிப்பு,அறிவியல்,தேடல்.

ஆன்மிகம் என்பது தான் யார் (அதாவது உயிர் =ஆன்மா,இறைவன்  என்பது என்ன)  என்று அறிய முற்ப்படும் ஒரு தேடல். பக்தி வேறு..ஆன்மிகம் வேறு. பக்தி ஆன்மீகத்திற்கு வழி வகுக்கலாம்.

ஆன்மாவை சிலர் மனதோடும்,நினைவுகளோடும் தொடர்பு  படுத்தி குழப்பிக்கொள்கின்றனர்.

ஆன்மா=உயிர் என்பதே பிரதானம். இதனோடு நெருங்கிய தொடர்பில் இருப்பது மனம்...பிறகு புத்திசாலித்தனம்.

உயிர் என்பதும் மனம் என்பதும் புத்திசாலித்தனம் என்பதும் வேறு வேறானாவை.

 உயிர்=ஆன்மா இல்லாமல் மனம் இல்லை. மனம் இல்லாமல் அறிவுக்கூர்மை இல்லை.

ஆன்மா=உயிர் இல்லாமல் உடல் இயக்கம் பெறுவதில்லை.

பிணத்திற்கு இந்த மூன்றும்(ஆன்மா =உயிர்,மனம்,அறிவு) இருக்காது.எதுவும் இருக்காது...

உடல் இல்லாமல் இந்த மூன்றும் பிறருக்கு தெரிவதில்லை.


அறிவியலில் சூரியன் இல்லாமல் எந்த கோள்களும் இயங்க முடியாது,எந்த உயிரும் உயிர் வாழ முடியாது. 


அதுபோலத்தான் ஆன்மா =உயிர் இல்லாமல் யாரும் எதுவும் உயிர் வாழ்வதில்லை.

சந்திரன் சூரியனை சார்ந்தே ஒளி அளிக்கின்றது. அதுபோலத்தான் மனமும் ஆன்மாவை சார்ந்தே உள்ளது.

புத்தி=அறிவுக்கூர்மை என்பது  மனதோடும் ஆன்மாவோடும்  தொடர்புடையது.


உயிர் வாழ் உயிரினங்களுக்கு உயிர் உள்ளது என்பதும், எல்லா உயிர்களுக்கும் ஆன்மா உள்ளது என்பதும் ஒருவகையில் ஒரே சொற்றொடரே.

====================================================
எந்த உயிர்களையும் துன்புறுத்தாமல் வாழவேண்டும் என்ற கருத்தியலைத்தான்  வள்ளலார் ஆன்ம நேய ஒருமைப்பாடு என்றார். உலகில் இதை மிஞ்சிய சித்தாந்தம்  ஏதும் இல்லை.
இந்திய மதங்களின் ஆணிவேரே இந்த கொள்கைதான்.
----------------------------------------------------------------------------------------------------------
உங்களின் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளை பிரிப்பது ஏன்?

ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்.
சித்திரையில் குழந்தை பிறந்தால் சூரியன் ஜோதிடப்படி உச்சத்தில் இருப்பான்.

சூரியன் உச்சத்தில் இருந்தால் சீக்கிரம் தலைமை பதவி கிடைக்கும் என்பது ஒரு ஜோதிட விதி. ஒரு குடும்பத்தின் தலைவன் என்பவன் கணவன்/அப்பா . ஆனால் குழந்தை சீக்கிரம் தலைமை பதவி அடைய வேண்டும் எனில் என்ன நடக்க வேண்டும் என்று நான் சொல்ல வேண்டுமா?

சித்திரையில் "முதல்" குழந்தை பிறந்தால்  அப்பனை காவு வாங்கிவிடுவான்.அப்பனுக்கு விரைவான முன்னேற்றத்தையும் அளித்து அப்புறம் தூக்கிடுவான். குழந்தை விரைவில் குடும்பத் தலைவனாகிவிடும். இதனால் தான்ஆடியில் புதுமண  தம்பதிகளை பிரித்து வைக்கிறார்கள்.
எல்லோருக்கும் இப்படி ஆகுமா என்றால் இல்லை என்பதே எனது பதில். 

மற்ற  அமைப்புகளை பொறுத்து  சிலருக்கு  உறவில்  தீத சிக்கல், பிரிய நேரிடுதல் போன்றவை நடக்கும்.

 நான் பார்த்த ஒரு ஜாதகத்தோடு இது பொருந்தியது.

Related Posts Plugin for WordPress, Blogger...