வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

திங்கள், 27 அக்டோபர், 2014

அம்மா பால் வருமா?

அம்மா உணவகம், குடிநீர், உப்பு, மருந்தகம்,சிமெண்ட் வரிசையில் அம்மா பால் வருமா என்பது என்னுடைய சந்தேகம்.வரவேண்டும் என்பதே பலரது விருப்பமாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

பால் கொள்முதல் விலையேற்றத்தினால் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். அதேநேரத்தில் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவார்கள். சில நேரங்களில் விலை ஏற்றம் என்பது தவிர்க்க இயலாதது. மேலும் இது காலத்தின் கட்டாயமாகவும் இருக்கின்றது.

கொள்முதல் விலையை ஐந்து ரூபாய்க்கு ஏற்றினால் அதே ஐந்து ரூபாய்க்கு பால் விலையையும் ஏற்றி இருக்க வேண்டும். பத்து ரூபாய் ஏற்றியது ஏன் என்று சிந்தித்தால்...ஊழியர்களின் சம்பளம், எரிபொருள்  மற்ற பிற செலவுகளை கணக்கில் கொண்டு உயர்த்தி இருப்பார்கள் என நினைக்கின்றேன்.

பால் என்பது குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் மிக மிக அத்தியாவசியமான உணவுப்பொருள். இதனால் சிரமப்பப்பட போவது நிச்சயமாக ஏழைகளே. ஏழைகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மட்டும் குறைந்த விலையில் பால் கிடைக்க அரசாங்கம் ஆவன செய்யவேண்டும். அம்மா பால் நிச்சயம் ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும். செய்யுமா அரசு? வருமா அம்மா பால்? அல்லது குறைந்த விலை ஆவின்பால்?

புதன், 8 அக்டோபர், 2014

கர்நாடக நீதிமன்றம் என்பதால் பிணை மறுக்கப்படலாம் என சுப்பிரமணியம் சுவாமி எதிர்பார்த்தது சரியா?

அம்மாவிற்கு பிணை கிடைக்காது என தான் எதிர்பார்த்ததாகவும் அதற்க்கு இரண்டு காரணங்களையும் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

முதல் காரணம்:

//லாலு பிரசாத் யாதவ், சுக்ராம், மதுகோடா, ஓம் பிரகாஷ் சவுதாலா போன்றவர்களின் ஊழல் வழக்கில், எலலாருக்கும் அவ்வளவு எளிதாக ஜாமின் கிடைத்து விடவில்லை. ஊழல் வழக்கை இப்படித்தான்,ரொம்பவும் சீரியஸாகவே கோர்ட் பார்க்கிறது.//

இரண்டாவது காரணம்

//கர்நாடகா உயர் நீதிமன்றமும், அங்கிருப்பவர்களும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருப்பவர்கள் என, பலரும் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். அதனால் தான், ஆரம்பத்தில் இருந்தே ஜெ., ஜாமின் அவ்வளவு எளிதல்ல என, நான் சொல்லி வந்தேன்//

முதல் காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் இரண்டாவது காரணம்?

//கர்நாடகா உயர் நீதிமன்றமும், அங்கிருப்பவர்களும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருப்பவர்கள்// என்று சுவாமி கூறுவதன் மூலம் அவர் இரண்டு செய்தியை மறைமுகமாக தருகிறார்.

ஒன்று. சில  நீதிமன்றங்கள் ஊழலுக்கு  எதிராக இல்லை.
இரண்டாவது: கர்நாடகா நீதிமன்றம் என்பதால்தான் அவருக்கு பிணை மறுக்கப்பட்டது...அல்லது மறுக்கப்படும் என்று அவர் எதிர்பார்த்தார்.


நீதிமன்றம் எங்கு இருந்தாலும் தீர்ப்பு ஒரேமாதிரியாக  வரும் என்றால்தான் நீதித்துறை ஒழுங்காக உள்ளது என அர்த்தம். மாநிலத்திற்கு மாநிலம் தீர்ப்பு வேறுபாடும் என்றால் அது சரியான நீதித்துறை அல்ல.

//கர்நாடகா உயர் நீதிமன்றமும், அங்கிருப்பவர்களும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருப்பவர்கள்//  என சுப்பிரமணியம் கூறுகிறார்..."இதேபோல கர்நாடகா அரசாங்கமும் , அங்கிருப்பவர்களும் அம்மாவிற்கு  எதிரான நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருப்பவர்கள்" என்பதை அனைவரும் அறிவர்.

இது  சந்தேகத்தை அதிகப் படுத்துகிறதா அல்லது  இது சுவாமியின் தவறான பேச்சா  அல்லது இது என்னுடைய தவறான புரிதலா எனபதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

அம்மா செய்தது குற்றம் என்றே நானும் நினைக்கின்றேன்.இருப்பினும் தீர்ப்பில் சந்தேகம் உள்ளதை மறுப்பதற்கில்லை. அம்மாவே தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டாள் அவர் அரசியல்வாதிகளுக்கு ஒரு முன் மாதிரியாக திகழ்வார். ஒருவேளை குற்றம் செய்யவில்லை எனில் அதை நிரூபித்தே ஆகவேண்டிய கடமை அவருக்கு உண்டு.

திங்கள், 6 அக்டோபர், 2014

அம்மாவிற்கு இழைக்கப்பட்டது ஏன் அநீதி?


சிந்திக்க தெரிந்த எவரும் அம்மாவிற்கு  நடந்ததை  நீதி என்ற சொல்ல மாட்டார்கள். ஆனால் நம் நாட்டில் மக்கள் சரியாக  சிந்திப்பதே இல்லையே என்ன செய்ய?

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் பகை இருக்கின்றது என்பதை இங்கே பலரும் அறிவர். அப்படி இருக்க வழக்கை  எப்படி அங்கு மாற்றலாம்? இந்த வழக்கை கர்நாடகத்திற்கு மாற்றியது மிகப்பெரும் அநீதி. இரு மாநிலகளுக்குள் பிரச்சனை இருக்கும் பொழுது தொடர்ந்து அங்கேயே வழக்கை நடத்தியது போல முட்டாள்தனம் ஏதுமில்லை.

இந்திய அரசியல்வாதிகளின் வழக்கை பாக்கிஸ்தான் நீதிமன்றம் விசாரிக்கலாமா? அப்படி விசாரிக்கும் பட்சத்தில் நீதியை எதிர்ப்பார்க்க முடியுமா? அம்மாவிற்கு நடந்ததும் இதுவே. நீதி வென்றது என்பதெல்லாம்  சுத்த அபத்தம்.
---------------------------------------------------------------------
அம்மா செய்தது தவறு என்றுதான் மக்கள் அவரை 96 தேர்தலில் தண்டித்தார்கள்.
எனவே அம்மா தவறு செய்யவில்லை என்று  நான்  வாதிடவில்லை. அதேநேரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது என்று ஏற்பதற்கும் இல்லை.
--------------------------------------------------
நீதிபதி குன்கா அவருக்கு எப்படி தண்டனையை அதிகப்படுத்தலாம் என்றுதான் சிந்தித்துள்ளாரே தவிர, தண்டனையை எப்படி குறைக்கலாம் என்று சிந்திக்கவே  இல்லை. நீதிபதியானவர் நீதி வழங்கும்பொழுது தண்டனையை அதிகரிப்பதற்க்கான காரணிகளையும், குறைப்பதற்கான காரணிகளையும் அலசி ஆராய்ந்து நீதி வழங்க வேண்டும். ஆனால் குன்காவின் நீதித் தராசு ஒருபக்கம்  சாய்ந்துள்ளது.
-----
தண்டனை கொடுப்பதின் முக்கிய நோக்கம் குற்றவாளியை திருத்துவதுதான், பழிவாங்குவதல்ல.
96இல் மக்கள் கொடுத்த தண்டனைக்கு பிறகு தன்னை திருத்திக்கொண்டு நல்லாட்சி புரிகிறார். எனவே திருந்திய ஒருவருக்கு அதீத தண்டனை தேவையற்றது. முதலமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவே தெரிகிறது.


அம்மா திருந்தி நல்லாட்சி புரிவதையும், அவரது வயதையும், உடல்நிலையை யும் கருத்தில் கொண்டு அவருக்கு குறைந்தபட்ச தண்டனை  வழங்கவேண்டும். அந்த தண்டனையும் அவரது நல்லாட்சியை பாதிக்காதவாறு இருக்கவேண்டும். இதுவே நேர்மையான தீர்ப்பாக இருக்க முடியும். மாற்று கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

இதுபற்றி நான் ஆங்கிலத்தில் எழுதியது கீழே:

Is Cunhas verdict to Jaya legally wrong?

In any case a judge hast to see two things before awarding punishment.
One is aggravating circumstances/factors and another one is mitigating circumstances or factors.Aggravating circumstances/factors gives reason for severe punishment. Mitigating circumstances or factors gives reason for leniency or why punishment to be reduced.
The judgment by Cunha clearly shows he has given more importance to aggravating factors and null importance to mitigating circumstances/factors.
According to Cunha the following are Aggravating factors:
1*  Corruption is a serious crime
2*     The manner in which assets accumulated ( According to sinha “these firms were constituted only to siphon off the unlawful resources accumulated by A-1” (A-1:Jayalalitha)
3*     A-1 is occupying a high position in the Government of State of Tamil Nadu.
By considering Serving CM is an aggravating factor Judge Cunha gives us reason to think that “Nobody is equal in front of Law” and not “All are equal before the eyes of law”.
Why no mitigating factors considered?

Good Conduct:
In this Judgement Cunha rejected an important mitigating factor. He says “The good conduct of the accused also may not be a circumstance mitigating the gravity of the offence".  All over the world good conduct of accused is considered as a mitigating factor in all the cases. Even in this case her good conduct should have been considered by Cunha as a mitigating factor. The very purpose of punishment is to reform the accused. In this case Jayalalitha has already reformed herself.  She did not do anything bad after 1996 and her conduct is good. She was also administrating well and brought several schemes for the well being of the poor.
When occupying high position in government can be considered as an aggravating factor, why good conduct while occupying high position in government cannot be considered as a mitigating factor?

Age:  
Age is another mitigating factor considered before awarding sentence. In this case Cunha failed to consider Jayalalitha’s age which is 66 now.
One of the reason why Cunha did not consider mitigating factors is he and current judges thinks corruption is a serious crime. Corruption is a serious crime no doubt about that. But this should not be a sole reason to avoid mitigating factors in providing verdict.
Keeping in mind Jayalalitha’s good conduct, age, welfare schemes she brought to the well being of the poor Judges should show leniency towards her.

I would like to reiterate again that the purpose of sentence/punishment is to reform the person. In this case Jayalalitha has already reformed herself and shows good conduct for the past 18 years. Given all these factors in mind Judges should reduce her punishment in a way which will not affect her political career and people of the state,who democratically elected her as CM. .
http://puratchimani.blogspot.in/2014/10/is-cunhas-verdict-to-jaya-is-legally.html

Related Posts Plugin for WordPress, Blogger...