வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

லோக்பால் தேவையா? அன்ன ஹசாரே செய்வது சரியா தவறா?

என் சந்தேங்கத்திற்கு விடை தெரிந்தால் தீர்த்து வைப்பீர்களா?

அன்ன ஹசாரே ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டத்தை முன் வைத்துள்ளார். இதற்க்கு மக்களின் ஆதரவு அமோகம். இல்லாமல்  போகுமா, ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று இன்று. நேற்று மாடுத்தீவன ஊழல், பீரங்கி ஊழல். அட ஆயிரக்கணக்கான  ஊழல்கள்.  இது மட்டுமா அரசாங்க அதிகாரிகள் தங்களது வேலையை   செய்யவே  லஞ்சம் கேட்க்கிறார்கள்.

மக்களுக்காக மக்களின் நலனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் சரி அரசாங்க அதிகாரிகளும் சரி ஊழல் செய்வதிலும் லஞ்சம் வாங்குவதிலேயும்  தான் குறியாக உள்ளனர். இவர்களால் தினம் தினம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்...பாதிக்கபடுகின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவும் இவர்கள் மேல் கோபத்தில் உள்ளது என்பதே உண்மை. ஆதலால் தான் மக்களின் ஒரு பகுதி   இன்று போராட்டத்தில் குதித்துள்ளது.

அன்ன ஹசாரே மற்றும் இந்த லோக்பால் மசோதா  மூலம் ஊழலை முற்றிலும்  ஒழித்து விட முடியும்  என ஒரு பகுதி மக்கள் நம்புகின்றனர்.  ஆனால் இது சாத்தியமா என்றால் எனக்கு சந்தேகமாக உள்ளது.
லோக்பால் மசோதாவில் பல நல்ல அம்சங்கள் உள்ளது. எனக்கு அதில் ரொம்ப பிடித்தது ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பது மட்டுமல்லாது  அவர்களது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட  வேண்டும் என்பதுதான்.

எத்தனையோ சிறப்பம்சங்கள் இருப்பினும் லோக்பலின் ஒரு அம்சத்தில் எனக்கு மிகப்பெரிய குறை இருப்பதாக உணர்கிறேன். நான் எந்த அம்சத்தில் குறை இருப்பதாக கருதுகிறேனோ அதுதான் லோக்பாலின் ஆணிவேரே.
அந்த ஒரு குறையினால் லோக்பால் தேவையா? என்ற சந்தேகமே என்னுள் எழுந்துள்ளது. என் சந்தேகத்தை நீங்கள் தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். இந்த சந்தேகங்கள்  சிறுபிள்ளைத்தனமானது  என்று கூட உங்களுக்கு தோன்றலாம். உங்கள் விடைய சரியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கருத்தினை ஏற்று நானும் இந்த போராட்டத்திற்கு என்னால் முடிந்த ஆதரவை தருவேன். (எப்பொழுதும் ஊழலுக்கு எதிராக மானசீக குரல் கொடுப்பவன் தான் நான்)

சரி..எந்த அம்சத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது என்றால் அது  லோக்பாலின் குழுவைபற்றியது தான் அந்த சந்தேகம்.

ஊழல் குற்றச்சாட்டை   விசாரிக்கப்போவது   யார் என்றால் ஒரு குழு. இந்த குழுவில் இருக்க போகிறவர்களும் மனிதர்கள் தான் மகான்கள் அல்ல.
உங்களுக்கே தெரியும் நாட்டில் எத்தனை உத்தமர்கள் உள்ளனர் என்று. இந்தியா முழுவுதும் லோக்பால் மசோதாவை கொண்டுவர எத்தனை உறுப்பினர்கள் வேண்டும் சற்று சிந்தித்து பாருங்கள். எனக்கு தெரிந்து ஒரு மாநிலத்திற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மிக மிக குறைந்த பட்சம் முன்னூற்று  ஐம்பதிற்கு மேற்ப்பட்ட உத்தம உறுப்பினர்கள் தேவை.

இத்தனை உத்தமர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் உத்தமர்கள் மட்டும்  தான் அந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று அறுதியிட்டு கூற முடியுமா?
இந்த உறுப்பினர்களின் சேர்க்கையில் அரசியல்வாதிகளின் மறைமுக தலையீடு இல்லாமல் இருக்கும் என்று கூற முடியுமா?
இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு  சம்பளம் உண்டா எவ்வளவு? இதை யார் கொடுப்பார்கள்? 
இலவசமாக எத்தனை நாள் அவர்கள் கடமையாற்ற  முடியும்?
இந்த உறுப்பினர்களும் ஊழலில் ஈடுபட மாட்டார்கள் என்று எதை வைத்து நம்புவது?

ஏற்க்கனவே சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் லஞ்சம் ஊழல் செய்கிறார்கள். இவர்களை கண்காணிக்க தண்டனை தர லோக்பால் கொண்டு வந்தால் நாளை லோக்பால் உறுப்பினர்களை யார் கண்காணிப்பது தண்டனை தரப்போவது யார்?

இருக்கின்ற சட்டங்களையே இன்னும் கடுமை படுத்த முடியாதா? ஒளிவு மறைவற்ற விசரானையை கொண்டுவர முடியாதா? புகார் தருபவர்களுக்கு  தைரியத்தையும்  பாதுகாப்பையும் அளிக்கும் சட்டத்தை கொண்டுவர முடியாதா?

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல பண்பை ஊட்டி வளர்க்க வேண்டும். எப்படியாவது சம்பாதித்தால்  போதும் என்ற மனநிலைதான் இன்று பெரும்பாலான மக்களிடம் உள்ளது. நல்லவனாக இருக்க வேண்டும், உண்மையை பேச வேண்டும். என்று என்னும் மக்கள் அரிதிலும் அரிது.

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையால் தான் அழிவு என்று எத்தனை தடவை சொன்னாலும் கதை என்று சொல்வதிலேய குறியாய் இருந்து கொண்டு கருத்தினை கோட்டை விட்டு விட்டோம். பகுத்தறிவு பேசியவர்கள் பணத்தை சுருட்டியதுதான்  மிச்சம். காவி கட்டியவனும் சளைத்தவன் இல்லை என்று இன்று சுருட்டிக்கொள்கிறான்.
ஒவ்வொரு மனிதனும் நேர்மையாக வாழவேண்டும். உண்மையை பேசவேண்டும்.
புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்
என்றார் வள்ளுவர்.
அதாவது உண்மை பேசினால் தான் உள்ளம் தூயமையாகுமாம். உண்மையும் உயிர்களிடத்தில் அன்பும் என்று வருகின்றதோ அன்றுதான் அனைத்திற்கும் முடிவு பிறக்கும். அதுவரை எந்த பாலும் ஒன்றும் செய்ய முடியாது.

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

சோதனைச்சாலையில் ஆன்மீக அனுபவங்களை பெற முடியுமா?

தியானத்தின் மூலம் மட்டும் தான் ஆன்மீக அனுபவத்தை பெற முடியுமா? வேறு வழிகள் கிடையாதா என்றால்  வேறு வழியும் உண்டு என்பதே பதில்.

உண்மையை சொல்லவேண்டுமானால் தியானத்தால் எதை எதையெல்லாம் சாதிக்க முடியுமோ அதை எல்லாம் வேறு வழிகளிலும் அடையலாம்.
என்னுடைய

மதுவிற்கும் தியானத்திற்கும் சம்பந்தம் உண்டா?


என்ற பதிவில் மதுவின் மூலம் அடையும் சில அனுபவங்களை தியானத்தின் மூலம் பெறலாம் என்று கூறியிருந்தேன்.அதுபோலவே பல ஆன்மீக அனுபவங்களையும்  தியானம் மூலம் மட்டும் அல்லாமல் சோதனை சாலையிலும்  பெறலாம் . ஆனால் அதற்கான இன்றைய அறிவியலின் வளச்சி போதாது.

மது அருந்தினால் எப்படி தீமை உண்டாகிறதோ அவ்வாறே சோதனை சாலை மூலம் அடையும் ஆன்மீக அனுபவங்களும் முதலில் தீமையையே உண்டாக்கும். அது முழுமையான அனுபவமாகவும் இருக்க முடியாது.  அறிவியலால் முழுமையான ஆன்மீகத்தை தர முடியாதா என்றால். தரமுடியலாம் ஆனால் அதற்க்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் நூற்றாண்டுகள் ஆகும் என்பது தெரியவில்லை.

எப்பொழுது அறிவியல் அகத்தவத்தினால் அடையமுடியும் அனுபவங்களை முழுமையாக சோதனைச்சாலையில் அடையவைக்கின்றதோ அதுவே அறிவியலின் உச்சம்.

அந்த உச்ச கட்ட அறிவியலால் ஞானத்தையும், பிறவாமையையும், மரணமில்லா பேரின்ப பெருவாழ்வையும் தர முடியும் என்று நினைக்கின்றேன். உண்மையில் அறிவியல் இதை நோக்கியே பயணிப்பதாக கருதுகின்றேன்.


நேற்று  வெறும்   அகம்  (ஆன்மீகம்). நாளை  அகமும்  புறமும் (ஆன்மீகமும் அறிவியலும்)  இணையலாம் ....இணையும்.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

இந்து, இஸ்லாம், கிருத்துவம் இவற்றிற்குள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?


இன்றைய நிலையில் மிகப்பெரிய மதங்களாக கருத்தப்படுவது இந்து, இஸ்லாம், கிருத்துவம். இவற்றிற்குள் பல ஒற்றுமைகள் உள்ளது. இங்கே நான் சொல்லப்போவது ஒரே ஒரு ஒற்றுமை.

அந்த ஒற்றுமை சொல்வது மிகப்பெரிய மிக சூட்சுமமான உண்மை. இது சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

அது என்ன ஒற்றுமை?
அதுதான் அ உ ம். இது அனைத்து மதங்களிலும் முக்கிய இடம் பெறுகின்றது. இது இல்லையேல் உலகமும் இல்லை உயிரும் இல்லை
என்பது சிலரின் கருத்து. இது இந்து மதத்தில் ஓம் என்று அழைக்கப்படுகின்றது.
இது இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தில் ஆமின் என்றழைக்கபடுகின்றது.

இந்த மதத்தில் ஓம் என்பது எதற்கும் முதிலில் உபயோகப்படுத்தப் படுகின்றது. இதேபோல் கிருத்துவம் மற்றும் இஸ்லாமில் ஆமின் என்பது எதற்கும் முடிவில் உபயோகப்படுத்தபடுகின்றது.

இந்த ஓம் என்பதன் முக்கியத்துவம் இந்து மதத்தில்  உள்ள பலருக்கு தெரியும் என்று நினைக்கிறேன். ஆனால் ஆமின் என்பது எப்படி ஏன் வந்தது என்பது இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தினருக்கு தெரியமா எனபது சந்தேகமே.

கிருத்துவம் மற்றும் இஸ்லாமில் உள்ள மிகப்பெரிய குறை என்னவெனில் அவர்கள் பைபிள் மற்றும் குரானை  தாண்டி சிந்திப்பதே இல்லை. அப்படி சிந்தித்தாலும் அதை தன் மதத்திற்கு மட்டும் எப்படி சாதகமாக்குவதே என்று சிந்திக்கின்றனர். இதை எப்படி மனித சமுதயாத்திற்கு சாதகமாக்குவது என்று சிந்திப்பதே இல்லை.


அ உ ம் என்பது மிகப்பெரிய ரகசியம் பொருந்திய உண்மையான  ஒற்றுமை. இதை ஏன் அனைத்து மதங்களும் பயன் படுத்த வேண்டும்?
அனைத்தின் மூலம் இதுதான் எனபதை அவர்களின் முன்னோர்கள் உணர்ந்திருந்தனர் என்பதையே காட்டுகின்றது.

மூலமே ஒன்றாக இருக்கும் பொழுது
நான் வேறு நீ வேறு என்பது எப்படி சாத்தியம்?
என் கடவுள் வேறு உன் கடவுள் வேறு என்பது மூடத்தனம் அல்லவா?
அனைத்து மக்களும் ஒருவனின் படைப்பே எனும் பொழுது....
என் சமூகம் உனக்கு முன்பாக  செல்லும் எனபது மூடத்தனத்தின் உச்சம் அல்லவா?

சிந்தியுங்கள் மக்களே...சிந்தியுங்கள்.

இது சம்பந்தமான இரு  பதிவுகள் உங்கள் பார்வைக்கு 

எல்லா மொழியின் முதல் எழுத்தும் அ என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்து, இஸ்லாம் இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?

 


திங்கள், 1 ஆகஸ்ட், 2011

இந்து, இஸ்லாம் இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?

இஸ்லாமுக்கும் இந்து மதம் என்று அழைக்கபடுகின்ற மதத்திற்கும் இப்படி ஒரு  மிகப்பெரிய  ஒற்றுமை இருக்கும் என்று யாரும் கனவிலும் நினைத்து பார்த்திருக்க முடியாது என்று நினைக்கின்றேன்.

இது  எத்தனை பேருக்கு தெரியும் என்பதும்  எனக்கு  தெரியாது. இந்த ஒற்றுமை எதை காட்டுகிறது என்றால்,உலகில் தற்போதுள்ள  அனைத்து மதங்களுக்கும் மூலம் பண்டைய இந்தியாவாகத் தான் இருக்கும் என்ற என் என்னத்தை உறுதி செய்வது போலவே உள்ளது.  இந்திய தத்துவங்களின் தாக்கத்திலிருந்து எந்த ஒரு மதமும் தப்பியதாக எனக்கு  தெரியவில்லை.

சரி இசுலாமுக்கும் இந்திய மதத்திற்கும் அப்படி என்ன ஒற்றுமை இருக்கின்றது?

என்னைப்பொருத்த வரை இசுலாமின் ஆணி வேறே இந்து மதம் தான்.
இசுலாமியர்கள் ஐந்து வேலை தொழுகை செய்வார்கள் என்பது பலருக்கும் தெரியும் என நினைக்கின்றேன். இந்த ஐந்து வேலை தொழுகை எனபது இந்து மத கோயில்களில் செய்யப்படும் ஆறு கால பூஜையை ஒட்டியே அமைந்துள்ளது.

அதாவது இந்து கோயில்களில் ஒரு நாளைக்கு ஆறு வேளை பூஜை செய்வார்கள். இப்படி செய்ய காரணம்  ஆறுவேளையும்(அல்லது நாள் முழுவதும் ) இறைவனை நினைக்க வேண்டும் அவன் மேல் பக்தி செலுத்த வேண்டும் என்பதற்காக இருக்கலாம். இதைப்போலத்தான் இசுலாமியர்களும் ஐந்து வேளை தொழுகை செய்கின்றனர்.

இந்த ஐந்து வேளை தொழுகைக்கும் ஆணி வேர் இந்திய கோயில்களில் செய்யப்படும் ஆறுகால பூ செய் ,(பூசை,பூஜை) ஆகத்தான் இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.  இது ஏதேச்சையாக அமைந்ததா அல்லது இந்து மதத்தின் தாக்கம் தான் இதுவா என்பதெல்லாம் எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே வெளிச்சம்.

நீங்கள் இப்பொழுது கேட்கலாம் ஏன் இசுலாமியர்கள்  ஐந்து  வேளை மட்டும் தொழுகை செய்கிறார்கள் ஏன் அவர்கள் ஆறாவது வேளை தொழுகை செய்வதில்லை என்று.

ஆறு வேளை தொழுகை செய்வது முக்கியம் என்று நபிக்கும் நன்றாக தெரிந்தே இருக்கின்றது. நபி அவர்களும் அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டும் தினமும் ஆறு வேளை தொழுகை செய்வார்கள். இருப்பினும் அவர் ஏன் அதை அனைத்து இசுலாமிய  மக்களுக்கும் பொதுவாக வைக்க வில்லை  எனபது தெரியவில்லை.

இந்து மதத்திலும் ஆறு கால பூ செய், இசுலாமியத்திலும் ஆறு கால தொழுகை இது பக்தி மார்க்கத்துக்கு மட்டுமா என்று கூட தோன்றலாம். உண்மையில் இது ஆன்மீக, யோக  மார்க்கத்துக்கும் பொருந்தும்.

வடலூர் வள்ளலார் அவர்களும்  ஒருவன் ஆறுவேளை தியானம் செய்யவேண்டும் என்றே குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆறுவேளை என்பது ஒருவேளை சீக்கிரம் ஆன்ம முன்னேற்றத்தை அளிக்கவள்ளதாக இருக்கலாம்.

இப்படி இந்து, இசுலாமிய மதங்கள் மிக ஒற்றுமையான கொள்கைகளை கொண்டுள்ள பொழுது (சில )இசுலாமிய இந்து மக்கள் தங்களுக்குள்  வெறுப்புடன் இருப்பது அறிவீனம் இல்லையா?

இறைவன் ஒருவனே என்று கூறிக்கொண்டு அவன் என் மதத்தை சார்ந்தவன் என்பது எவ்வளவு  மோசமான செயல்?.
இறைவன்  அனைத்து  உயிர்களுக்கும் பொதுவானவன். அவன் என்னுடைய  மதத்தை தழுவினால் மட்டும் தான் நன்மை செய்வான் எனபது சரியா? 

ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்றுணர்ந்த பின்னும்

என் குலமே உயர்ந்தது என்பது எப்படி சரியாகும்?
 
சிந்தியுங்கள் மக்களே..... சிறப்பாக வாழுங்கள்



Related Posts Plugin for WordPress, Blogger...