வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஜோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோதிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜூன், 2011

முற்பிறவி என்றால் மூன்றாவது பிறவியா?

முற்பிறவி என்றால் முந்தைய பிறவி என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அது மூன்றாவது பிறவியையும் குறிக்கும். (என்னோட அகராதியில :) )

ஜோதிடத்தில் முக்கியமான மூன்று வீடுகள் உள்ளன. அவை ஒன்று ஐந்து  மற்றும் ஒன்பதாம் வீடுகள். இவற்றை திரிகோணம் என்பர். இவற்றை லட்சுமி வீடுகள் என்றும் சொல்வர் சிலர்.  என்னைப்பொருத்த வரை இந்த மூன்று வீடுகளும் ஒருவனுக்கு நன்றாக அமைந்தாலே அவனது வாழ்வும் சிறப்பாக அமையும்.

இந்த மூன்று வீட்டின் அதிபதிகள் தான் ஒருவனுக்கு நன்மைகளை வாரி வழங்குபவர்கள். இவர்களை யோகாதிபதி என்பர். அதாவது ஒரு லக்னத்து யார் சுபர் என்றால் அவர்கள் இந்த மூன்று வீட்டின் அதிபதிகளாகத்தன் இருப்பார். 

ஜோதிடத்தில் லக்னம் எனபது இப்பிறவியை காட்டுகின்றது. ஐந்தாம் இடம் இதற்க்கு முன்பு எடுத்த பிறவியை காட்டுகின்றது. அப்ப அந்த ஒன்பதாம் இடம்? அது ஒருவனின்  மூன்றாவது பிறவியை காட்டுகின்றது. அதாவது சென்ற பிறவிக்கு முந்தைய பிறவி. சொல்ல முடியாது அது ஒருவனின் அனைத்து பிறவிகளையும் கூட சொல்லலாம்.

முற் பிறவியில் செய்த புண்ணியம் தான் இப்பிறவியில் நமக்கு ஏற்ப்படும் இன்ப துன்பங்களுக்கு காரணம் என்று கூறுவர். ஐந்து   ஒன்பதாம் வீடுகள் கெட்டிருந்தால் நீங்கள் முற்பிறவிகளில் பாவம் செய்துள்ளீர்கள் என்று பொருள். 

இதற்க்கு முந்தைய ஜென்மத்தில் ஒருவன் செய்த பாவம் புண்ணியத்தை பொறுத்தே அவனுக்கு குழந்தை பிறக்கும் என்று ஜோதிடம் சொல்கிறது. ஆதலால் தான் குழந்தை பாக்கியத்திற்கு ஐந்தாம் இடத்தை சொல்கின்றனர்.
சென்ற பிறவிக்கு முன்பிறவியில் செய்த பாவம் புண்ணியமும் ஒருவனுக்கு குழந்தை உண்டா இல்லையா என்பதை  தீர்மானிக்கின்றது என நினைக்கின்றேன். ஆதலால் தான் ஒன்பதாம் இடத்தை பாக்கிய ஸ்தானம்    என்று சொனார்கள். அதாவது ஒருவனுக்கு கிடைக்கப் போகும் சகல சௌபாக்கியங்களும் இந்த வீட்டை பொறுத்தே அமையும்.
தந்தை, குரு, அதிஷ்டம் , பரம்பரை சொத்து இவற்றை  ஒன்பதாம் வீடு குறிக்கின்றது.

அது மட்டும் அல்ல ஐந்தாம் வீடு கெட்டிருந்தாலும் அவர்களுக்கு ஒன்பதாம் வீடு நன்றாக இருந்தால் அவர்களுக்கும் குழந்தை பிறக்கும். (அந்த வீட்டு அதிபதிகளின் நிலை ரொம்ப முக்கியம்.)

ஆதலால் தான் நம் பெரியோர்கள் முற்பிறவியில் செய்த பலனால் குழந்தை செல்வம் என்று கூறியுள்ளனர். இந்த முற்பிறவியை ஐந்தாம் வீடு மற்றும் அதற்கு முந்தைய பிறவியை ஒன்பதாம் வீடு குறிக்கின்றன.
ஆதலால் முற்பிறவி எனபது மூன்றாவது பிறவியையும் தானே குறிக்கின்றது?
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது முந்தைய அனைத்து பிறவியையும் குறிக்கும் வார்த்தை தான்.

ஒருவனுக்கு மிகுந்த நன்மையை செய்யக்கூடிய திசை எது என்றால் அது ஒன்பதாம் அதிபதியின் திசை தான்.
 
குழந்தை இல்லாதவர்கள் இதை படித்து விட்டு நொந்து கொள்ள வேண்டாம். குழந்தை இல்லாததும் ஒருவிதத்தில் நன்மையே....... உங்கள் ஆன்மீக (தவ)  பயணத்திற்கு.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவம் உங்களுக்கு கை கொடுக்கும் முயற்சி செய்யுங்கள். அல்லது ஒரு  குழந்தையை தத்தெடுத்து வளருங்கள்.

முடிந்த வரை இப்பிறவியில்  நன்மை செய்யுங்கள்....நன்மை இப்பிறவியிலும் கிடைக்கலாம்....அடுத்த பிறவியிலும் கிடைக்கலாம்.... ஏன் பிறவியே இல்லாமலும் போகலாம்.
வாழ்க வளமுடன்....நலமுடன்....

சனி, 28 மே, 2011

எந்த தானியங்களை என்று சாப்பிட வேண்டும்?



ஒவ்வொரு கோளும் ஒரு தானியத்தை குறிப்பதாக சொல்கின்றனர்.

சூரியன்- கோதுமை
சந்திரன்- நெல்
செவ்வாய்- துவரை
புதன்- பச்சைப்பயிறு
வியாழன் - கடலை 
வெள்ளி - மொச்சை 
சனி- எள்ளு
ராகு- உளுந்து
கேது- கொள்ளு
 உங்கள் ஜாதகத்தில் எந்த கோள் வலிமையாக இருந்தாலும் வலிமையற்று இருந்தாலும், இந்த தானியங்களை நீங்கள் உண்ணும் பொழுது அந்த கோள்களினால் உங்களுக்கு நன்மையே கிடைக்கும் ....தீமை  குறையும் என்று கூறுகின்றனர்.
 இந்த தானியங்களை அதற்குறிய   நாட்களில் உண்ணுவது இன்னும் சிறப்பான பலன்களை தரும் என்பது என் எண்ணம்.


செவ்வாய், 24 மே, 2011

உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படுமா?


ஜாதகத்தில் உங்களைக் குறிப்பது லக்னாதிபதி. ஆன்மீகத்தில் ஈடுபாட்டை  உண்டாக்கும் சக்தியும் ஞானத்தை அளிக்கவல்ல சக்தியும் கேது பகவானுக்கு உண்டு. 

கேதுவுக்கும் லக்னாதிபதிக்கும் உங்கள் ஜாதகத்தில் தொடர்பு இருந்தால் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்ப்படும். 

லக்னத்தில் அல்லது லக்னாதிபதி அமர்ந்த வீட்டுக்கு அல்லது பத்தாம் அதிபதி அமர்ந்த வீட்டுக்கு  ஒன்று, ஐந்து அல்லது ஒன்பதாம் வீடுகளில் கேது பகவான் இருந்தால் உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு  உண்டாகும். 


லக்னாதிபதி அல்லது பத்துக்குடையவன் அமர்ந்த வீட்டிற்கு இரண்டில் கேது பகவான் இருந்தாலும்  ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டாகும். 

 வக்கிரம் பெற்ற லக்னாதிபதி அல்லது வக்கிரம் பெற்ற பத்தாம் வீட்டுக்காரர் இவர்களுக்கு பன்னிரெண்டில் கேது பகவான் இருந்தாலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும்.
இவற்றை நான் சொல்லவில்லை சப்த ரிஷி நாடி எனும்  புத்தகத்தில் பார்த்தேன் அதை சற்று உல்டா செய்து இங்கே கொடுத்துள்ளேன். இது உண்மை போலத்தான் தோன்றுகிறது.
நன்றி: சப்தரிஷி  நாடி  

இது சம்பந்தமான  மற்றும் ஒரு பதிவிற்கான சுட்டி


சனி, 7 மே, 2011

வாழ்க்கை எப்ப எப்படி இருக்கும் ? 2


சென்ற பதிவில் ஜாதகத்தை மூன்றாக பிரித்து, அது எந்தெந்த பருவத்தை குறிக்கும் என்று சொல்லி அதன் மூலம் எப்படி பலன் காண்பது என்று பார்த்தோம்.

அதில் ஒரு பகுதயில் எந்த கோள்கலுமே இல்லையெனில் என்ன செய்வது? இதற்க்கான விடையை பராசரர் சொல்லவில்லை.

என்னுடைய சிந்தனை ஜோதிடப்படி அந்தப்பகுதியில்தீய கோள்களின் பார்வை அதிகமாக விழுகின்றதா  அல்லது நல்ல கோள்களின் பார்வை அதிகமாக விழுகின்றதா என்று பாருங்கள்.  

தீமை தரும்  கோள்களின் பார்வை அதிகமாக விழுந்தால்  அந்தப்பருவத்தில் தீமைகள்  அதிகமாக இருக்கும்.

நல்ல கோள்களின் பார்வை அதிகமாக  விழுந்தால் நல்லது...அந்தப்பருவம் இன்பம் மிகுந்ததாக இருக்கும்.

தீமை மற்றும் நல்லது செய்யும் கோள்களின்  பார்வை  சரி சமமாக இருப்பின்..இன்பம் துன்பம் இரண்டும் சரி சமமாக இருக்கும்.

(இது வெறும் சிந்தனை ஜோதிடமே...உங்களுக்கு இதுபற்றி ஏதேனும் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்...அனைவருக்கும்  பயனுள்ளதாக இருக்கும்...பாசு உங்களையும் தான் கேட்கிறேன்)

(இந்த கேள்வி எனக்கும் ஏற்பட்டது இருப்பினும் யோகி என்ற பெயரில் உள்ளவர் கேட்டதால்...இது அனைவருக்கும் தெரியட்டும் என்ற எண்ணத்தில் பதிவிட்டுவிட்டேன்...நன்றி யோகி .)




வெள்ளி, 6 மே, 2011

வாழ்க்கை எப்ப எப்படி இருக்கும்?


உங்கள் ஜாதகத்தை மூன்றாக பிரியுங்கள். 1-4 வீடுகள்  ஒரு  பகுதி, 5-8வீடுகள்  ஒரு  பகுதி, 9-12 வீடுகள்  ஒரு  பகுதி என்று. 


1-4 குழந்தை பருவத்தைக் குறிக்கும்
5-8- வாலிப பருவத்தைக் குறிக்கும் 
9-12- முதுமை   பருவத்தைக்  குறிக்கும் . 

இதில் எந்த பகுதியில் நல்ல கோள்களை விட அதிக தீய கோள்கள் உள்ளதோ அந்த பருவத்தில் வாழ்க்கையில் சிக்கல் அதிகமாக இருக்கும், நல்ல கோள்கள் எந்த பகுதியில் தீய கோள்களை விட அதிகமாக  உள்ளதோ அந்த பருவம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தீய கோள்களும் நல்ல கோள்களும் ஒரு பகுதியில் சமமாக இருப்பின்...இன்ப துன்பமும் சமமாக இருக்கும். 

 இதை சொல்றது நான் இல்லை, பராசர மகரிஷி சொன்னதா சொல்றாங்க...இது
பொருந்துதா இல்லையானு நீங்க தான் சொல்லணும். 
(இன்னைக்கு மூளை சரியா ஒத்துழைக்க வில்லை , அதனால் தான் இந்த குட்டி சூத்திரம்)

வியாழன், 5 மே, 2011

ஆன்மீகத்திற்கு குரு அவசியமா?


குருவருள் இருந்தால் தான் திருவருள் கிடைக்கும் என்று சொல்வார்கள் அது உண்மையா? 

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்கிறார்கள். தாய்  ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து, செத்துப் பிழைத்து குழந்தையை பெற்று,  பாலூட்டி, சீராட்டி, ஈ, எறும்பு கடிக்காமல், நல்ல உணவு ஊட்டி அன்போடு வளர்க்கிறாள். 

தந்தை அக்குழந்தைக்கு பாதுகாப்பாய் இருந்து,  அறிவு புகட்டி வளர்க்கின்றார்.

அடுத்தது குருவானவர் அக்குழந்தைக்கு ஏற்ற சகல கல்வியையும், கலைகளையும் கற்று தருகிறார். குழந்தையின் ஆன்ம வளர்ச்சியை பொறுத்து அவனுக்கு தெய்வத்தை அடையும் வழியையும் காட்டுகின்றார்.(இது அந்த காலத்துல).
இந்த காலத்தில் ஒவ்வொரு கல்விக்கும் அல்லது  பாடத்திற்கும் ஒரு குரு. 
அந்த காலத்தில் அ ஆ கற்று கொடுத்த குருவே ஆன்மீக குருவாக இருந்திருக்கலாம் ஆனால் இந்த காலத்தில் இதற்க்கு என்று தனியாக ஒரு குரு தேவைப்படுகிறார்.

அன்று பெரும்பாலானோர் ஒன்றிரண்டு குருக்களுக்கு மேல் தாண்டாமல் ஆண்டவனை அடையும் பாதையில் சென்றார்கள்.

 இன்றோ தொழில் நுட்ப  வளர்ச்சியாலும், ஆன்மிகம் சம்பந்தமான நூல்கள் சுலபமாக கிடைப்பதாலும் ஒருவன் குரு இல்லாமலே ஆன்மீகத்தில் நுழைந்து விடுகிறான்.

பல புத்தகங்கள் படித்து தானாகவே யோகம் செய்தாலும் அனைவராலும் ஆன்மீகத்தில் தொடர்ந்து பயணிக்க முடியுமா என்று சொல்ல முடியாது.
இதுவே ஒரு நல்ல ஆன்மீக குரு மூலம் காற்றுக்கொண்டால் அவருடன் சேர்ந்தே பிறவிப் பெருங்கடலை சுலபமாக கடந்து விடலாம்.

ஆனால் எல்லோருக்குமே நல்ல குரு அமையும் பாக்கியம்  கிடைப்பதில்லை. ஜோதிட ரீதியாக பார்க்கையில் ஒன்பதாம் வீடு குருவைக் காட்டுகின்றது. யாருக்கு ஒன்பதாம் வீடும், சொந்தக்காரனும் நன்றாக உள்ளனரோ அவர்களுக்கு நல்ல குரு கிடைக்க வாய்ப்புகள் மிக அதிகம் .  
இந்த குரு ஆன்மீக குருவாக இருப்பார் என்று அறுதியிட்டு கூற  முடியாது.

இந்த ஒன்பதாம் வீடு மற்றும் அதிபதிக்கும் யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்ப்படும்? பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள  , குரு, கேது, ஐந்தாம் வீடு மற்றும் புட்டபர்த்தி  சாய் பாபா ஏன்  சந்நியாசி ஆனார் ? என்ற பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள லக்னம்,லக்னாதிபதி இவர்களுக்குள் நல்ல தொடர்பு இருந்தால்  "அந்த ஒன்பதாம் வீட்டு  குரு"  ஒரு  நல்ல ஆன்மீக குருவாக வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

என்னைப்பொருத்த வரை(இன்றைய நிலையில்) ஐந்தாம் வீடு அதன் அதிபதி,கேது, குரு இவர்களே  ஒருவனுக்கு தியானம் அல்லது குண்டலினி மூலம் ஆன்மீக முன்னேற்றத்தை அளிக்கவள்ளவர்கள்.  ஒன்பதாம் வீட்டு குரு இவர்களுடன் சம்பந்தம் கொள்ளவில்லை எனில் அவர் வெறும்  சமயம்  அல்லது - மற்றும் ஆன்ம கோட்பாட்டினை எடுத்துரைக்கும் குருவாக மட்டுமே அமைந்துவிட வாய்புகள் உண்டு. 

மகர கடகத்தில் கேது ராகு இருந்தாலும் ஒருவன் குரு இல்லாமலே ஆன்மீகத்தில் பயணம் செய்வான் என்றும் படித்ததுண்டு. இதுவும் உண்மையாகவே தெரிகிறது. 

ஆன்மீக குரு கிடைக்காததும் ஒரு விதத்தில் நல்லதே. (ஒரு சிலருக்கு மட்டுமே இது பொருந்தும்). யாருக்கு ஆன்மீக குரு கிடப்பதில்லையோ அவர்களே புவியில் பலரது ஆன்ம எழுச்சிக்கு காரணமாய் இருந்திருக்கிறார்கள். 

உதாரனத்திற்க்கு வள்ளலார் மற்றும் புத்தர். இவர்களுக்கு நல்ல குரு கிடைத்திருந்தால் அவர்கள் மட்டுமே ஆன்ம எழுச்சி அடைந்திருப்பார். கிடைக்காத காரணத்தினாலே  தான் அவர்கள் பலரது ஆன்ம எழுச்சிக்கு காரணமாய் இருந்திருக்கிறார்கள்.  

 ஆதலால்  ஆன்மீக குருவை தேடிக் கொண்டு இருக்காதீர்கள்.
உங்கள் கண்ணுக்கு பட்டால் அவர் வழியில் செல்லுங்கள் "விழிப்புணர்வுடன்". இது மிக சுலபமான பாதை. (நல்ல பாதையாக மற்றும் நல்ல குருவாக  இருப்பின்).

ஆன்மீக குரு கிடைக்கவில்லையா....நல்லது...நாளை நீங்கள் பலருக்கு வழிகாட்டியாக இருக்கலாம்...சுயமாக முயன்று பாருங்கள். இது மிகவும் கடினமான பதை.

குருவின் மூலமோ அல்லது இல்லாமலோ முயன்று பாருங்கள், முக்தி அடையுங்கள்.

(குறிப்பு: இப்பதிவில் உள்ளது யாவும் என் சொந்த கருத்துக்களே ஆகையால் "எப்பொருள்" எனத் தொடங்கும் குறளை மனதில் வையுங்கள்).


திங்கள், 2 மே, 2011

விவேகானந்தர் ஏன் ஆன்மீகவாதியாகி இளமையில் இறந்தார்?


விவேகானந்தர் காவி உடை அணியாமல் இருந்திருந்தால் அவரை இந்து மத துறவி என்று யாரும் கூற இயலாது. அவரது பெரும்பாலான கருத்துக்கள் அனைத்து மதத்தினராலும் ஏற்றுக்கொளும்படியாக உள்ளது. மதத்தை தாண்டி சீர்திருத்தவாதிகளின் நன் மதிப்பையும் பெற்றவர் அவர்.



"ஒரு  விதைவையின்   கண்ணீரைத்  துடைக்க  முடியாத , ஓர்  அனாதையின்  வயிற்றில்  ஒரு  கவளம்  சோற்றை  இட  முடியாத  கடவுளடித்திலோ,சமயத்திலோ  எனக்குக்  கொஞ்சம்  கூட  நம்பிக்கை  கிடையாது"  என்று  அவர்  கூறியுள்ளார். இதை வைத்து அவர் நாத்திகவாதி என்று கூட சொல்லலாம்.ஆனால்  உண்மையில்  அவர் ஒரு ஆன்மீகவாதியே.

அவரின் ஜாதகம்:  தனுசு லக்னம், லக்னத்தில் சூரியன், இரண்டில் சுக்கிரன் மற்றும் புதன், ஐந்தில் செவ்வாய் ஆட்சி,  ஆறில் கேது, பத்தில் சந்திரன் மற்றும் சனி, பதினொன்றில் குரு.
இவருக்கு ஆன்மீக ஈடுபாடு ஏற்ப்பட, தியானத்தில் மூழ்க காரணம்  பதினொன்றில் இருக்கும் குருபகவான் ஐந்தில் ஆட்சி பெற்று இருக்கும் தியான அதிபதியை பார்ப்பதுதான். அதுமட்டுமல்லாமல் லக்னாதிபதியான குரு ஐந்தாம் அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். .  (இதுவே என் கருத்து).

இவர் ஏன் இளமையில் இறந்தார் ?
இவர் இறக்கவில்லை. இவரே விரும்பித்தான் உடலை விட்டார். அதாவது மகா சமாதி அடைந்தார். 

இவரே நெருங்கியவர்களிடம் நான் நாற்பது வயது வரை வாழ மாட்டேன் என்று கூறியுள்ளதாக சில குறிப்புகள் உள்ளது. (இது அவரின்  தீர்க்க தரிசனத்தை காட்டுகின்றது) அதுபடியே அவர் நாற்ப்பது வயது பூர்த்தியாவதற்கு முன் பூத உடலை நீத்தார். அதாவது மகா சமாதி அடைந்தார் .

ஏன் அவர் நீண்ட காலம் வாழ்ந்திருக்க கூடாது என்ற கேள்வி எழலாம். எனக்கு தெரிந்து பிறவியின் உண்மையை, நோக்கத்தை உணர்ந்த எவரும் இந்த பூமியில் பூத உடலுடன் வாழ விரும்ப மாட்டார். 

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

புட்டபர்த்தி சாய் பாபா ஏன் சந்நியாசி ஆனார்?



(நேயர் விருப்பம்: வாசகி சுந்தரி அவர்கள் புட்டபர்த்தி சாய் பாபா ஏன் சந்நியாசி ஆனார்? என்ற கேள்வி எழுப்பினார், அந்த கேள்விக்கான ஒரு சிறு அலசலே இது.நேற்று தவிர்க்க முடியாத காரனங்களால் பதிவிட முடியவில்லை. நேற்றைய பதிவை எதிர்பார்த்தவர்கள் மன்னிக்கவும்.)
.
சாய் பாபாவின் ஜாதகம்: விருசிக லக்னம், லக்னத்தில் சனி, சுக்கிரன், சூரியன் மற்றும் புதன்.  இரண்டில் கேது, மூன்றில் குரு, ஆறில் செவ்வாய்,எட்டில் ராகு மற்றும் சந்திரன். 

அவருடைய ஜாதகத்த பார்த்த  உடனே கண்ணுக்கு தெரிவது...அவருடைய லக்னத்தில் நான்கு கோள்கள் உள்ளது.
யாருடைய ஜாதகத்தில் நான்கு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட கோள்கள் ஒரே வீட்டில் உள்ளதோ  அவர்கள் சன்னியாசியாய் ஆவார் என்பது ஒரு விதி. அந்த விதி இவருக்கு சரியாக நடந்துள்ளது. (இவருக்கு மட்டும் அல்ல பெரும்பாலானோருக்கு இந்த விதி பொருந்தியுள்ளது. இந்த அமைப்புள்ளவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டுள்ளனர். .....இந்த அமைப்புள்ள சிலர் திருமணத்திற்கு பிறகு கூட சந்நியாச வாழ்க்கைக்கு மாறிவிடுவர்.)

யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும்? என்ற பதிவில் தியான அனுபவம் யாருக்கு ஏற்படும் என்று குறிப்பிடிருந்தேன்.  

அதில் சொல்லாத ஒரு விடயம் .  லக்னாதிபதியும், லக்னமும் ஐந்தாம் வீடு, ஐந்தாம் அதிபதி, கேது மற்றும் குரு இவர்களுடன் சம்பந்தம் பெற்றாலும் ஒருவருக்கு ஆன்மீக ஈடுபாடு ஏற்படலாம்.

கொஞ்சம் ஆழமாக சென்று பார்த்தால்... ...
விருசிக லக்னத்தில் பிறந்த சாய் பாபாவின் லக்னாதிபதி செவ்வாய்,  மேஷத்தில் கேதுவின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். ஐந்தாம் அதிபதியான  குரு, லக்னாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். இந்த தொடர்பும்  அவருக்கு ஆன்மீக மற்றும் சந்நியாச வாழ்க்கையை  அளித்திருக்கும். தங்கள் கருத்து?

சாய் பாபா பற்றிய மற்றொரு பதிவிற்கான  சுட்டி


வியாழன், 28 ஏப்ரல், 2011

யாருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்கை அமையும்? பகுதி-2

முந்தைய பதிவு முன்னோட்டம்...இது  கொஞ்சம் ஆழம்.
விட்டு கொடுத்து வாழ்வதிலும் சிக்கல் வரலாம். நான் மட்டும் தான் விட்டு கொடுக்கனுமா ஏன் அவள்/அவன் விட்டு கொடுக்க கூடாதா என்ற கேள்வி அடுத்து எழும். இரண்டு பேருமே விட்டு கொடுத்து போக வேண்டும். விட்டு கொடுப்பதிலே போட்டி வருவதுதான் நல்லது. உனக்காக நான் இத கூட செய்யா மாட்டேனா என்று ஒருவர் மாறி ஒருவர் விட்டு கொடுப்பதிலே தான் மகிழ்ச்சியே . 

இங்கே ஒருவர் மட்டும் விட்டு கொடுக்க மற்றவர் இப்படியே அவர் நம் வழிக்கு வந்து விடுவார் என்று நினைப்பது அரக்கத்தனம்.   அவர்களுக்கு எடுத்த சொல்ல வேண்டியது தான் அடுத்த வேலை. மனம் திறந்து பேசுங்கள். புரிய வைக்க முயலுங்கள். பேசினாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.("அதுல" கொஞ்சம் அகிம்சையும் முயற்சி பண்ணி பாக்கலாம்)  நீங்கள் விட்டு கொடுப்பது மற்றவர்க்கு தெரிய வேண்டும் அப்பொழுதுதான் அவர்களும்...நமக்காக இவ்வளவு விட்டு கொடுத்திருக்கார் ஏன் நாமும் விட்டு கொடுத்து போக கூடாது என்ற நல்லெண்ணம் வரும். 


ஜாதக ரீதியாக பார்த்தால் ஏழாம் வீடுதான் திருமணத்திற்கு ரொம்ப முக்கியம்.
ஏழாம் வீட்டில் எந்த கோள்களும் இல்லாமல் இருத்தலே நலம்.(அப்படின்னு தாங்க நினைக்கிறேன்). ஏழாம் வீட்டில் சுப கோள்கள்  இருந்தாலும் அதனாலயும் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. அப்படி கோள்கள் இருக்கிற பட்சத்தில் அது சுப கோள்களா இருந்தா கொஞ்சம் பரவாயில்லை .  சுபர்  பார்வை மிக நல்லது.
பாவிகள் அமர்ந்தால் கொஞ்சம் சிக்கல் அதிகம் தான்.

அதேபோல் ஏழாம் வீட்டு அதிபதியும் சுபராக இருத்தல் நலம். இது மகிழ்ச்சியான மணவாழ்க்கையும், அழகிய  துணையையும் தரும்.

உங்க லக்னத்துக்கு ஏழாம் வீடு பாவி வீடா இருந்தா கொஞ்சம் சிக்கல் தான்.

ஏழாம் வீட்டு அதிபதி சுபரின் நட்சத்திரத்தில் இருத்தல் நல்லது, பாவியின் நட்சத்திரத்தில் இருந்தால் கொஞ்சம் சிக்கல் வரும்...வரலாம்.

அதேபோல் சுக்கிரனும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சுபர் பார்வை நலம், பாவர் பார்வை சிக்கல் தரும். சுபர் சேர்க்கை நலம், பாவர் சேர்க்கை சிக்கல் தரும்.


ஏழாம் வீடு, ஏழாம் அதிபதி, சுக்கிரன் இவர்கள் இரண்டு தீய கோள்களுக்கு நடு வீட்டில் மாட்டினால்  சிக்கல் தான்.


அதிபதி மற்றும் சுக்கிரன் சுபர், நட்பு கோள்கள் நட்சத்திரத்தில் இருத்தல் மிக்க நன்று.
  இந்த கோள்கள் நவாம்சத்திலும் நல்ல நிலையில் இருத்த்தல் மிக்க நன்று.
(நடக்கிற தசை புத்திய பொறுத்து, கோள்சாரத்தை பொறுத்து இந்த விதிகள் வேலை செய்யும் அல்லது செய்யாமல் போகலாம்)

எது எப்படி இருந்தாலும் மனம் விட்டு பேசி, கடவுள் மேல பாரத்த போட்டுவிட்டு, விட்டு கொடுத்து யாரு போறாங்களோ அவங்களுக்கு  திருமண   வாழ்க்கை  மகிழ்ச்சியாக    அமையும்.

புதன், 27 ஏப்ரல், 2011

யாருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்கை அமையும்?



இந்த காலத்துல பல பேருக்கு திருமணம் நடக்கிறதே குதிர கொம்பா இருக்கு. அப்படியே நடந்தாலும் அதில் பல பேருக்கு அந்த அளவுக்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை. ஏன் என்றால் திருமணம் எனபதே "அந்த" சுகத்த அனுபவிக்க தான் என்ற மன நிலை பல பேருக்கு இருக்கு. கொஞ்சம் நாள் "அந்த" சுகத்தினால் வண்டி நல்லா ஓடும்.  (சிலருக்கு முதல் நாளே ஏமாற்றம் தான்.."அது" அப்படி இருக்கும் "இது " இப்படி இருக்கும் என்ற அதீத கற்பனைகளால். ஏப்படி இருந்தாலும் பரவாயில்ல அப்படின்னு மனநில இருந்தா தான் எல்லோர்க்கும் நல்லது)

ஆனா அதுவே கொஞ்ச நாளைக்கு அப்புறம் இதுதானா? இவ்வளவு தானா? என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது.
இதே நேரத்தில் இருவருக்கும் உள்ள நல்ல கெட்ட பழக்கங்கள் இருவருக்கும் தெரியவர ஆரம்பிக்கின்றது.
ஒருவருக்கு உள்ள பழக்க வழக்கம் மற்றொருவருக்கு பிடிப்பதில்லை. அவள் தான் நமக்கு தகுந்த மாதிரி மாற வேண்டும் என்று இவனும், அவன் தான் நமக்கு தகுந்த மாதிரி மாற வேண்டும் என்று இவளும்  நினைக்கின்றனர்.

இரண்டு பெரும் விட்டுக்கொடுத்து போனால் தான் வண்டி ஓடும் இல்லாட்டி கொட சாஞ்சிடும். ஜாதகத்த மீறி மனதில் வைக்க வேண்டியது இந்த செய்தி தான். 

ஜாதக ரீதியா
யாருடைய ஜாதகத்தில் ஏழாம் அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெறுகிறானோ அவனுக்கு திருமணத்தின் மூலமும் மனைவி மூலமும் மகிழ்ச்சி பொங்கும். ஏழாம் அதிபதிக்கு சுபர் பார்வை இருத்தல் ரொம்ப நல்லது. அசுபர் பார்வை இருப்பின் கொஞ்சம் பிரச்னை ஏற்படலாம். 

ஏழாம் அதிபதி சுபர் சேர்க்கை, நட்பு ராசியில்  இருத்தல் நலம். ஏழாம் அதிபதி அசுபர் சேர்க்கை, பகை வீட்டில் இருத்தல் கொஞ்சம் சிக்கல் தரலாம். 

இதுவே ஏழாம் அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் மாட்டிக்கொண்டால் மனைவிக்கு  சிக்கல் தான். அது அவர்களின் ஆட்சி உச்ச வீடுகளாக இருந்தால் பரவாயில்லை. 

ஜாதகத்துல ஆயிரெத்தெட்டு விஷயம் இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுத்து வாழ ஆரம்பிசிங்கனா...
பரவாயில்லையே
  இவங்க...இவங்களுக்கு  ஏன் நல்லது செய்ய  கூடாதுன்னு கடவுள் நினைக்கலாம். 
 
யாரு விட்டு கொடுத்து வாழ்கிறார்களோ அவர்களுக்குத் தான் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 
ஹும்
...இது எங்களுக்கு தெரியாதான்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது)

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

புட்டபர்த்தி சாய் பாபாவுக்கு மறு பிறவி உண்டா?

ஆன்மீகத்திற்கு செல்வதன் நோக்கமே மறுபிறவியை இல்லாமல் செய்வதற்குத்தான். பலராலும் தெய்வமாக பாவிக்கப்பட்ட சாய்பாபாவுக்கு மறுபிறவி உண்டா இல்லையா?

ஒருவனது உயிரானது அவனுடைய அனுமதியுடன் பூத உடலை விட்டு வெளியே வருமாயின், அவனுக்கு மறுபிறவி இல்லை என்பது ஒரு சிலரின் கருத்து. இந்த கருத்தின் படி பார்த்தால் இவருக்கு மறுபிறவி உண்டு என்றே தோன்றுகிறது. ஏன் எனில் இங்கே இவர் இறந்துள்ளார்.

ஒருவன் எப்பொழுது இருக்கிறான் என்பதை பொருத்தும் அவனுக்கு மறுபிறவி உண்டா இல்லையா என்று சொல்லலாம்.

உத்திராயனத்தில் இறப்பவர்கள் என்னை வந்து அடைவர் என கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார். சித்திரை மாதம் உத்திராயனத்தை சேர்ந்த்தது. இந்த விதிப்படி பார்த்தல் இவருக்கு மறுபிறவி கிடையாது.

எவன் ஒருவன் சனி திசை முழுவதும் வாழ்கிறானோ அவனுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஒரு விதி.
இந்த விதிப்படியும் அவருக்கு மறுபிறவி கிடையாது.

ஒருவன் இறக்கும் பொழுது விழிப்புணர்வுடன் இருந்தாலும் அவனுக்கு மறுபிறவி இல்லை என்பது சிலர் கருத்து. இவர் எந்த நிலையில் இறந்தார் என்பது இறைவனுக்கே தெரியும்.


சாய் பாபா பிறந்தது விருசிக லக்னம். பன்னிரெண்டாம் வீட்டுக்கு சுக்கிரன் அதிபதி. அவர் இறந்த லக்னம் ரிஷபம். இதற்க்கு அதிபதியும் சுக்கிரனே. இவர் இறந்ததின் கூட்டு தேதி ஆறு இதுவும் சுக்கிரனுக்கு உரியதே.
இவர் சுக்கிரன் கோளுக்கு சென்று இருப்பாரோ என்று எனக்கு ஒரு எண்ணம்.

இவருக்கு மறுபிறவி இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம் அது அவர் செய்த பாவ புண்ணியத்தை வைத்தும் முடிவாகலாம்.
எல்லாம் இறைவனுக்கே வெளிச்சம்.

சனி, 23 ஏப்ரல், 2011

யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும் ?

இன்றைய நிலையில் பல பேர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டுள்ளனர். அனைவருக்கும் ஆன்மீக அனுபவம் ஏற்படுமா?.யாருக்கு ஏற்படும் என்று சுட்டிக்காட்டுவதே இந்த பதிவின் நோக்கம்.


முதலில் யாரால் ஆன்மீக அனுபவம் ஏற்ப்படும் என்று பார்ப்போம்.

ஒன்று. ஆன்மீகத்திற்கு முக்கியமான கோள் கேது - ஏன் எனில் இவனே குண்டலினிக்கு காரகன்.

இரண்டு. ஐந்தாம் வீடு.- ஏன் எனில் இந்த வீடே தியானத்தை குறிக்கும்.
மூன்று. ஐந்தாம் வீட்டின் அதிபதி.
நான்கு. குரு - இவன் சிவனை குறிப்பவன். ஆன்மீகத்திற்கு முக்கியமானவன்.(சிவனின்றி ஏது தியானம்)
ஐந்து - ஐந்தாம் வீட்டில் அமர்ந்த கோள்கள் மற்றும் அதிபதியுடன் சேர்ந்த கோள்கள்.

இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம்.
ஆன்மீகத்திற்கு உகந்த சில முக்கிய கோள் நிலைகள் கீழே:

௧.லக்னத்தில் குரு இருப்பத்து மிக சிறப்பு. ஏன் எனில் இங்கே இருக்கும் குரு ஐந்தாம் வீட்டை பார்க்கிறான் மற்றும் குருவிற்குரிய ஒன்பதாம் வீட்டை பார்கிறான். அதுமட்டுமல்ல அவன் ஐந்து, ஒன்பது மற்றும் பதினொன்றாம் வீடுகளில் இருப்பதும் சிறப்பே ஆகும். ஏன் எனில் இங்கிருந்தும் அவன் ஐந்தாம் வீட்டை பார்க்கிறான். இங்கே இருக்கும் குரு கேது மற்றும் ஐந்தாம் வீட்டு அதிபதியை பார்த்தல் இன்னும் நலம்.

௨. கேது ஐந்தாம் வீட்டில் இருத்தல், ஐந்தாம் வீட்டு அதிபதியின் நட்சத்திரத்தில் இருத்தல் அல்லது குருவின் நட்சத்திரத்தில் இருத்தல், ஐந்தாம் வீடு அதிபதியுடன் இணைந்த்திருத்தல், குருவின் பார்வை பெற்றிருத்தல்.

௩. ஐந்தாம் அதிபதி- குரு, கேது ஆகியவைகளுடன், சேர்க்கை அல்லது பார்வை அல்லது நட்சத்திர தொடர்பு கொண்டிருத்தல்.
(இன்னும் நிறைய சொல்லலாம்)

சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில்
யாருடைய ஜாதகத்தில் கேது,ஐந்தாம் வீடு, ஐந்தாம் வீட்டின் அதிபதி மற்றும் குரு - இவர்களுக்குள் சம்பந்தம் இருக்கிறதோ இவர்களுக்கு "தியான"ஆன்மீக அனுபவம் ஏற்ப்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
இங்கே சம்பந்தம் என்பது இணைவு, பார்வை, நட்சத்திர அமர்வு ஆகியவற்றை குறிக்கும். (பரிவர்த்தனை கூட இருக்கலாம்...வேறு ஏதேனும் சம்பந்தம் இருந்தாலும் சேர்த்துக்குங்க)

இதுவே என்னுடைய "குட்டி" ஆய்வின் முடிவு.

புதன், 6 ஏப்ரல், 2011

பார்க்காமலே காதலிப்பவர்கள் யார்?

உடனே நமக்கு அஜித், தேவயாணி ஞாபகம் வரலாம். ஆனா நாட்டில் பல பேரு இப்படி இருப்பாங்க. இதுக்கு காரணம் சுக்கிரன்.

சுக்கிரன் பன்னிரெண்டில் இருந்தால் அவர்கள் பார்க்காமலே காதலிப்பார்கள்.
ஓரிருமுறை பார்த்து விட்டு பல காலம் காதலிப்பர். கோள்களின் மற்ற நிலைகளை பொறுத்து அவர்கள் காதல் தோல்வி அடைய வாய்புகள் உண்டு. காதல் சொன்னா தானே வெற்றி பெரும், இவர்கள் சொல்லாமலே கூட விட்டுவிடலாம்.
காதல் மற்றும் "அந்த" மாதிரி கற்பனைகளில் கில்லாடிகள்.
இவர்களுக்கு நகைகள் மேல் அதிக ஆர்வம் இல்லாமல் போகலாம். ஆடம்பர வாழ்விலும் பற்றில்லாமல் போகலாம்.

இவர்களுக்கு சுக்கிலம் மற்று சுரோணிதம் நிறைய விரயமாக வாய்ப்புகள் உண்டு. விரயம் என்பதால் சுயமாகவும் வெளியேற்ற வாய்ப்புகள் உண்டு. அதே நேரத்தில் இவர்கள் அந்த சுகம் அடிக்கடி அனுபவிக்க வாய்புகள் உண்டு. இந்த மாதிரி பெண்கள் அதிகமாக உச்ச நிலையை அடைய வாய்ப்புகள் உண்டு.

மற்ற கோள் நிலைகளைபொருத்து, திசை புத்தியை பொறுத்து இவர்கள்
அந்த மாதிரி செயல்களில் பிறருடன் ஈடுபட வாய்ப்புகள் உண்டு,
துணையை இழக்கவும் நேரிடலாம் அல்லது இவை நடக்காமலும் போகலாம்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

மனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன?


மனிதனால் ஒரு செயல் முடியாது என்றால் உடனே அது கடவுளால் தான் முடியும் என்பான்.

எல்லாமே விதிப்படி தான் நடக்கும் என்பர் சிலர்.
பிறப்பையும் இறப்பையும் மாத்த முடியாது ஆனால் நாம் வாழும் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும் என்பர் சிலர்.

இதில் யார் சொல்வது உண்மை? நான் சொல்கிறேன் (ஏற்கனவே சில சித்தர்கள் சொல்லிவிட்டார்கள்...இங்கே நான் என்பது ஒரு விவாதத்திற்காக மட்டுமே) இரண்டு பேர் சொல்வதும் பொய்.

விவாதத்திற்கு குழந்தை பிறப்பை எடுத்துக்கொள்வோம்.
குழந்தை என்பது ஆண்டவனின் அருளால் தான் பிறக்கின்றது என்பர் பலர். இது உண்மையா?
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்தால் கரு உருவாகலாம் அல்லது உருவாகாமல் போகலாம். கரு உருவானால் எந்த பிரச்சனையும் இல்லை. கரு உருவாக வில்லையெனில், அந்த தம்பதியர் போன ஜென்மத்தில் பாவம் செய்துள்ளனர் ஆதலால் தான் குழந்தை பிறக்கவில்லை என்பர் பலர்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஜோதிட ரீதியாக குழந்தை பிறக்கும் என்று இருந்தாலும் அவர்கள் அதற்கான முயற்சியை எடுக்க வில்லை அல்லது கருத்தடை உபயோகிக்கின்றனர் எனில் அவர்களுக்கு கடவுள் எப்படி குழந்தையை தருவார்?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நான்கு முதல் பத்து குழந்தை வரை பெற்றுக்கொண்டனர். ஆனால் இன்று ஒன்று அல்லது இரண்டு போதும் என்று நிறுத்திக்கொண்டான். இங்கே கடவுளின் பங்கு என்ன?

இதிலிருந்து என்ன தெரிகின்றது மனிதன் நினைத்தால் தான் சில நடக்க வேண்டியவைகள் நடக்கும் இல்லையேல் நடக்காது.
(தொடரும்....)

சனி, 2 ஏப்ரல், 2011

எல்லோருக்கும் ஞானம் கிடைக்குமா? அதை கொடுப்பது யார்?

ஆம் இப்புவியில் பல ஆண்டுகள் வாழும் அனைவருக்கும் நிச்சயம் ஞானம் கிடைக்கும்.

இந்த ஞானம் பெற யாரும் எதுவும் செய்ய வேண்டாம். அது கிடைக்க வேண்டிய நேரத்துல தானா கிடைக்கும்.

இந்த ஞானம் பெரும்பாலும் துன்பத்தாலும், துரோகத்தாலும், விரக்தியினாலும், அலுப்பினாலும் ஒரு வித அனுபவத்தாலும் வரும் என்று சொல்லலாம். (இங்கே ஞானம் என்பது ஒரு புரிதலை , படிப்பினையை குறிக்கும். உனக்கெல்லாம் பட்டாதான்டா தெரியும் என்று சொல்வார்களே அதையும் குறிக்கும் ).ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு பெரும் பிரச்சனையை குறிக்கலாம்.
இந்த ஞானத்தை கொடுப்பவன் கேது. யாருக்கு எதனால் ஞானம் வரும் என்பதை ஓரளவுக்கு கணிக்க முடியும்.

ஞான காரகன் கேது எந்த வீட்டில் இருக்கின்றானோ அந்த வீட்டை பொறுத்துதான் பெரும்பாலும் அவனுக்கு ஞானம் கிடைக்கும். அவன் இருக்கும் வீடு சம்பந்தமாகவே பெரும்பாலும் ஞானம் கிடைக்கும். ஆம் ஒன்று முதல் பண்ணிரண்டு வரை அவன் எங்கே இருந்தாலும் ஞானத்தை அளிப்பான். ஒரு வீடு எது எதைக்குறிக்கிறதோ அதில் ஒன்றின் மூலமாக இந்த ஞானம் வரும்)

உதாரணத்திற்கு ஒருவனுக்கு இரண்டில் கேது எனில் அவனுக்கு குடும்பத்தின் மூலமாக ஞானம் கிடைக்கலாம்(சிலருக்கு அளவுக்கு அதிகமாக குடும்பம் பெருகி வரும்- சிலருக்கு குடுபமே இல்லாமல் போய் ஞானம் வரும்), செல்வத்தின் மூலமாக கிடைக்கலாம். ஏழில் கேது எனில் திருமணம் மூலம் -திருமணம் ஆனபின்பு துணையினால் - அல்லது நண்பர்களினால். இப்படி அந்த வீட்டில் சம்பந்தப்பட்ட எதன் மூலமாக வேண்டுமானாலும் ஞான காரகன் கேது ஞானத்தை கொடுப்பான்.

(குறிப்பு: எப்பொருள் எனத்தொடங்கும் குறளை மனதில் வையுங்கள்)

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

சூரியனுக்கும் மறுபிறவிக்கும் சம்பந்தம் உண்டா?

ஜோதிடத்தில் மறுபிறவி இல்லாமைக்கு சில கோள் நிலைகள் உள்ளன. அது பெரும்பாலும் கேது குரு சம்பந்தப்பட்டது.ஆனால் நான் சூரியன் பற்றி எங்கேயும் படிக்க வில்லை.(படித்ததே கொஞ்சம் தான்...நீங்கள் படித்திருந்தால் சொல்லுங்கள் ).
இது எனக்கு ஆச்சர்யத்தை தருகிறது. ஏன் எனில் சூரியன் ஆன்மாவை குறிக்கின்றது. அவனே உடல் காரகனும் கூட.
மறுபிறவி ஆன்மா மற்றும் உடல் சம்பந்தப்பட்டது. ஆன்மா அழிவது அல்லது இறைவனுடைய ஆன்மாவோடு சேருவது அல்லது இறைவனடி சேர்வது எனபதே மறுபிறவி இன்மையை குறிப்பதாக படித்தடுன்னு. அப்படிப்பட்ட ஆன்மாவைக் குறிக்கும் சூரியன் பற்றி ஏன் எந்த குறிப்பும் இல்லை என்பது வியப்பே.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் சூரியன் பன்னிரெண்டில் இருந்தால் அவனுக்கும் மறுபிறவி இருக்காது எனபதே. ஏன் எனில் இந்த பாவமே மோட்சம் மற்றும் விரயத்தை குறிக்கின்றது. இங்கே இருக்கும் சூரியனானது மறுபிறவியை (குறைந்த பட்சம் பூமியில்) தராது.

வியாழன், 31 மார்ச், 2011

(இ)லக்னம் என்றால் என்ன?


ஆன்மாவுக்கும் அது பூமியில் எடுக்கும் புது பிறவிக்கும் இணைப்பு ஏற்படுகின்ற முதல் தருணமே லக்னம். இதை நான் சொல்லவில்லை...கீழே பாருங்க
Lagna (Sanskrit '', 'ascendant'.) Lagna is the first moment of contact between the soul and its new life on earth in Jyotisha.The Essentials of Vedic Astrology'', by Komilla Sutton, The Wessex Astrologer Ltd, England, 1999, p.96.

(மொழி பெயர்ப்பில் தவறு இருப்பின் தயவு செய்து திருத்துங்கள்.)

இந்த இணைப்பை ஏற்படுத்துபவன் குரு. ஆதலால் தான் அவனை லக்ன காரகன் என்கின்றனர் என்று நினைக்கின்றேன். (அதுமட்டுமல்ல  அவரே புத்திர காரகன் எனப்படுகின்றார். காரணம் அவரால் தான் உயிர்கள் உருவாகின்றது. ஒருவருக்கு குழந்தை பிறக்க வேண்டும் எனில் குரு பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஒரு வேலை இவர் வலிமையுடன் இல்லாவிடில் அணிதாவது அதிபதி அல்லது ஒன்பதாவது அதிபதிஆவது வலிமையுடன் இருக்க வேண்டும்)

இப்பொழுது லக்னத்தில் குரு இருந்தால் "காரகோ பாவ நாஸ்தி" (இப்படி ஏதோ சொல்வாங்களே) விதிப்படி அவன் இந்த இணைப்பை கடைசி இணைப்பாக்க
வேண்டும் என்பது என் கருத்து. ஆதலால் தான் லக்னத்தில் இருக்கும் குரு இந்த பிறவியே கடைசி பிறவியாக செய்து, பிறவிப்பிணியிலிருந்து விடுவிப்பான் என்று முந்தைய பதிவில் கூறி இருந்தேன்.(குறைந்த பட்சம் பூமியுடனான தொடர்பையாவது துண்டிக்கனும்) தங்களுடைய கருத்து?


லக்னத்தில் குரு இருப்பது நல்லது என்றாலும் அவர் தனித்து இருத்தலே மிக மிக முக்கியம்.

(லக்னம் அன்றைய தினத்தின் சூரிய உதயத்தையும் ஒருவர் பிறந்த நேரத்தையும்  வைத்து கணக்கிடப்படுகிறது. லக்னம் ஒருவரின் உயிரை, தலையை குறிக்கும்.எந்த வீடு லஞாமாக உள்ளதோ அந்த வீட்டின் அதிபர் வலிமையுடன் இருத்தல் மிக மிக அவசியம்.)
Related Posts Plugin for WordPress, Blogger...