வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

புட்டபர்த்தி சாய் பாபா ஏன் சந்நியாசி ஆனார்?



(நேயர் விருப்பம்: வாசகி சுந்தரி அவர்கள் புட்டபர்த்தி சாய் பாபா ஏன் சந்நியாசி ஆனார்? என்ற கேள்வி எழுப்பினார், அந்த கேள்விக்கான ஒரு சிறு அலசலே இது.நேற்று தவிர்க்க முடியாத காரனங்களால் பதிவிட முடியவில்லை. நேற்றைய பதிவை எதிர்பார்த்தவர்கள் மன்னிக்கவும்.)
.
சாய் பாபாவின் ஜாதகம்: விருசிக லக்னம், லக்னத்தில் சனி, சுக்கிரன், சூரியன் மற்றும் புதன்.  இரண்டில் கேது, மூன்றில் குரு, ஆறில் செவ்வாய்,எட்டில் ராகு மற்றும் சந்திரன். 

அவருடைய ஜாதகத்த பார்த்த  உடனே கண்ணுக்கு தெரிவது...அவருடைய லக்னத்தில் நான்கு கோள்கள் உள்ளது.
யாருடைய ஜாதகத்தில் நான்கு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட கோள்கள் ஒரே வீட்டில் உள்ளதோ  அவர்கள் சன்னியாசியாய் ஆவார் என்பது ஒரு விதி. அந்த விதி இவருக்கு சரியாக நடந்துள்ளது. (இவருக்கு மட்டும் அல்ல பெரும்பாலானோருக்கு இந்த விதி பொருந்தியுள்ளது. இந்த அமைப்புள்ளவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டுள்ளனர். .....இந்த அமைப்புள்ள சிலர் திருமணத்திற்கு பிறகு கூட சந்நியாச வாழ்க்கைக்கு மாறிவிடுவர்.)

யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும்? என்ற பதிவில் தியான அனுபவம் யாருக்கு ஏற்படும் என்று குறிப்பிடிருந்தேன்.  

அதில் சொல்லாத ஒரு விடயம் .  லக்னாதிபதியும், லக்னமும் ஐந்தாம் வீடு, ஐந்தாம் அதிபதி, கேது மற்றும் குரு இவர்களுடன் சம்பந்தம் பெற்றாலும் ஒருவருக்கு ஆன்மீக ஈடுபாடு ஏற்படலாம்.

கொஞ்சம் ஆழமாக சென்று பார்த்தால்... ...
விருசிக லக்னத்தில் பிறந்த சாய் பாபாவின் லக்னாதிபதி செவ்வாய்,  மேஷத்தில் கேதுவின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். ஐந்தாம் அதிபதியான  குரு, லக்னாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். இந்த தொடர்பும்  அவருக்கு ஆன்மீக மற்றும் சந்நியாச வாழ்க்கையை  அளித்திருக்கும். தங்கள் கருத்து?

சாய் பாபா பற்றிய மற்றொரு பதிவிற்கான  சுட்டி


17 கருத்துகள்:

  1. வணக்கம் புரட்சி மணி சார்,
    ரொம்பு நன்றி நான் கேட்ட கேள்விக்கு ஒரு பதிவே தந்திங்க பாவம் பாபா ரொம்ப நல்லவர் தன்னலமற்ற தொண்டு சின்னஞ்சிறு வயதிலேயே அந்த மாதரி ந்ம்மல்லாயிருக்கமுடியாது.

    பதிலளிநீக்கு
  2. //தொடர்ந்து ஆன்மிகம் சம்பந்தமான பொதுவான கேள்விகள் இருந்தா கேளுங்க, நீங்க கேள்வி கேட்டா எனக்கும் அறிவு வளரலாம். இந்த சார் போடறத கொஞ்சம் தவிர்க்கலாமே...//

    தொடர்ந்து ஆன்மிகம் சம்பந்தமான பொதுவான கேள்விகள் இருந்தா கேளுங்க, நீங்க கேள்வி கேட்டா எனக்கும் அறிவு வளரலாம். இந்த சார் போடறத கொஞ்சம் தவிர்க்கலாமே...

    பதிலளிநீக்கு
  3. எனக்கும் விருச்சிக லக்னத்துல செவ்,சூரியன்,புதன்,ராகு 4பெர் இருக்காஙக‌
    4இல் குரு சன்னியாசியா ஆகவேன்டியது வருமோ?

    பதிலளிநீக்கு
  4. yoghi sir

    what planet in 2nd house 2nd owner guru sitting in kendra donotworry u will get family how many astavargam in 2nd house what planet in 7th house then 7th owner sukuran where is sitting then navamsa also we will check ok first go and show ur horoscope to good astrologer

    பதிலளிநீக்கு
  5. lagana owner mars sitting in lagana then that mars vision falling in 7th house 7th house is beloging to wife/husband u will get good life partner he/she made for each other this is good luck ur puniyavaan

    பதிலளிநீக்கு
  6. //yoghi said...

    எனக்கும் விருச்சிக லக்னத்துல செவ்,சூரியன்,புதன்,ராகு 4பெர் இருக்காஙக‌
    4இல் குரு சன்னியாசியா ஆகவேன்டியது வருமோ?
    //

    யோகி,பயப்படாதிங்க ராகு என்பது நிழல் அதை கோளாக கொள்ளக்கூடாது என்றும் சொல்கிறார்கள். அப்படிப் பார்க்கும் பொது. நீங்க தப்பிச்சிங்க. கேதுவும் லக்னாதிபதியும் பார்த்துக் கொள்வதால், ஆன்மீக ஈடுபாடு ஏற்படலாம். ஏதுக்கும் நட்சத்திரத்த கொஞ்சம் பாத்துக்குங்க.

    பதிலளிநீக்கு
  7. //sundari said...

    lagana owner mars sitting in lagana then that mars vision falling in 7th house 7th house is beloging to wife/husband u will get good life partner he/she made for each other this is good luck ur puniyavaan//

    சுந்தரி, நீங்க எனக்கும் பலன் சொல்வீங்களா?

    பதிலளிநீக்கு
  8. 7இல் கேது தனியா இருக்காரு இதுக்கு வகுப்பரை வாத்தியார் என்ன சொல்ரார்னா\\\\ஜாதகனுக்கு, அவனுடைய மனைவியால் மகிழ்ச்சி கிடைக்காது. நடத்தை சரியில்லாத
    பெண்களுடன் ஜாதகனுக்கு நட்பு அல்லது உறவு இருக்கும். அவர்களுக்காக
    ஜாதகன் உருகக்கூடியவன். .
    மன அழுத்தங்களை உடையவன்.பயணிப்பதில் ஆர்வமுள்ளவன்.
    அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கக்கூடியவன்
    இந்த அமைப்பை உடைய சில ஜாதகர்களுக்கு நோய்வாய்ப்பட்ட மனைவி அல்லது
    கணவன் அமையக்கூடும்\\\\\
    ஏரக்குரைய சரியாதான் சொல்லிருக்கார்

    இருந்தாலும் நீங்க சொன்ன பலனும் சரிதான் (வேன்டாம் என்ரு வெருக்கும் மனைவிய தக்கவைக்க லக்கினாதிபதி பெரும்பாடு பட்டுகிட்டு இருக்கார்)

    ஆட்ச்சி பெற்ற லக்கினாதிபதி ஜெயிப்பாரா இல்ல7ம் இடத்து கேது ஜெயிப்பாரானு தெரியாம நானும் குழம்பிகிட்டு இருக்கென்

    புரட்ச்சிமனிக்கு புரிந்தால் இதபத்தி பலன் சொல்லுங்க‌

    பதிலளிநீக்கு
  9. 2இல் சந்திரனும் சுக்கிரனும் 2ம்வீடு26 7ம்வீடு22

    11ம் வீடு மட்டும் 42 பரல் (இதபத்திமட்டும் நம்ம முருகெசன் சார் மூச்சு விடமாட்டென்ரார்)

    பதிலளிநீக்கு
  10. லக்கினாதிபதி சனியின் (சந்திரனும் சுக்கிரனும் கேதுவின் )குரு ராகுவின் நட்ச்சத்திரதிலு இருக்கின்ரனர்

    பதிலளிநீக்கு
  11. யோகி,உங்கள் மனைவிக்கு ராகு கேது தோஷம் இல்லைன்னு நினைக்கிறேன். சரி அத விடுங்க.ஜோதிட ரீதியா என்ன சொல்வாங்கன்னு உங்களுக்கே தெரியும்...எனக்கு தெரிஞ்சதும் காளஹச்தி,திருநாகேஸ்வரம் தான். வரப்போற திசை, புத்திய வைத்து நல்லது நடக்கலாம்...
    உளவியல் ரீதியா....
    உங்கள் மனைவியின் வெறுப்புக்கு காரணம் என்னவென்று கண்டுபிடியுங்கள். அதவிட மனசு விட்டு பேசிடுங்க.
    அப்ப அவங்களின் வெறுப்புக்கு காரணம் என்னவென்று தெரிய வரும். அடுத்து செய்ய வேண்டியது அவர்கள் வெறுப்புகளை விருப்பங்களாக மாற்ற முயலுங்கள்...மாற்றுங்கள்.(முயன்றால் முடியாதது ஏதும் இல்லை). உங்கள் தவறுகள்,குறைகள் உங்களுக்கும் தெரியும் அதையும் திரித்துக் கொள்ளுங்கள், இத நீங்க செஞ்சா உங்கள் பிரச்சனை கண்டிப்பாக தீரும்.
    கவலையை விடுங்கள், கடமையை செய்யுங்கள், நல்ல பலன் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  12. புரட்சி ம்ணி சார்,
    உங்க ஜாதகததை பார்த்து எனக்கு தெரிஞ்சதைச் சொல்லுவேன் நிச்சயம்மா
    யோகி சார் ரொம்பகவலைப்பாடாதிங்க கேது நிச்சமாகிடுச்சி அதை ஆட்சி பெற்ற‌
    செவ்வாய் பார்க்கிறார் சனி லக்கனத்திலிருந்தால் சசாயோகம் புதன் லாபதிபதி 11ல் இருக்கிறார் அவரு 7 பார்க்கிறார் லக்கனத்தில் புதனிருந்த ரொம்ப பலம்
    அப்புறம் கேது செவ்வாய்க்கு கட்டு படும் பொதுவா கேது செவ்வார்ய் போலவே செயல்ப்டுவார் ராகு சனி போலவே செயல்ப்டுவார் pl give me ur dob time of birth place of birth so on
    i will see ur horoscope ok if u like only yogi sir

    பதிலளிநீக்கு
  13. புரட்ச்சிமனி & சுந்தரிப்ரவீன் ரென்டு பெருக்கும் ரொம்ப நன்ரி

    புரட்ச்சிமனி பிரச்சனைய ப்ரக்டிகலா அனுகச்சொல்ரார் நல்ல யொசனை சொல்லிருக்கார்

    ச்ுந்தரிப்ரவீன் ஜோதிடரீதியில் பரிசீலனை பன்னி சொல்லுங்க‌
    d.o.b 14/12/1974 5:40 am saterday

    பதிலளிநீக்கு
  14. ok yogi give me ur mail id
    i will tell u personal
    so many people will haveto study ur problem i donot like it

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...