வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

திங்கள், 25 ஏப்ரல், 2011

காற்று வந்ததால் கொடி அசைந்ததா? அல்லது கொடி அசைந்ததால் காற்று வந்ததா?

காற்று வந்ததால் கொடி அசைந்ததா? அல்லது கொடி அசைந்ததால் காற்று வந்ததா?
காலம் காலமாக இந்த கேள்வி இருக்கிறது, இதெற்கென்ன பதில் தெரியுமா?

காற்று வந்ததால் தான் கொடி அசைந்தது.
கொடி அசைவதினாலும் காற்று வரும். ஆனால் காற்றில்லாமல் கொடி அசையாது.

அறிவியல் பூர்வமாகவோ அல்லது ஆன்மீக பூர்வமாகவோ எப்படி பார்த்தாலும் முதலில் தோன்றியது காற்றுதான் மரம் அல்ல. மரம் இருந்தாலும் இல்லையென்றாலும் காற்று இருக்கும். (சரி இத விடுவோம்)

கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக காற்று உருவாகின்றது அல்லவா. இங்கே மரத்திற்கு எந்த வேலையும் இல்லை. அதே போல் மரம் இல்லாத பாலைவனத்திலும் புயல் வரும்.

ஆதலால் தான் சொல்கிறேன் காற்று வந்ததால் தான் கொடி அசைந்தது.
கொடி அசைவதினாலும் காற்று வரும். ஆனால் காற்றில்லாமல் கொடி அசையாது(அப்படித்தான் நினைக்கிறேன்)
என்ன நான் சொல்வது சரிதானே?

1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...