வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 9 மே, 2014

தாலிபானாகிறதா தமிழகம்? இந்து முசுலீம் கலவரம் வெடிக்கும் அபாயம்?


சில இசுலாமிய அமைப்புகளால் தமிழகம் தாலிபானாகி  வருகிறது. எதிர்காலத்தில் இது இந்து முசுலீம் கலவரத்திற்கு வித்துடுமோ என்ற அச்சம் ஏற்ப்படுகிறது.

-----------------------------
தமிழத்தின் வரலாற்றில் இதுவரை இந்து முசுலீம் கலவரம் ஏதும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அப்படி ஒன்று நிகழ்ந்துவிடுமோ என்று அச்சப்பட வேண்டியதாக உள்ளது.  ஒரு சில இசுலாமிய அமைப்புகள் இந்துக்களை கலவரத்திற்கு தயார் செய்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

தமிழகத்தை பொருத்தவரை எந்த ஒரு இந்து மத அமைப்பும் இசுலாமியர்கள் மீது தாக்குதல் தொடுத்ததாக எனக்கு தெரியவில்லை. ஆனால் சில இசுலாமிய அமைப்புகள் குண்டுவெடிப்புகளிலும், இந்து மத அமைப்பு தலைவர்களை கொலை செய்வதுமாக இருந்து வருகிறது.   அம்பு விட்டவர்களை பிடிக்காமல் அம்புகளை மட்டுமே காவல்துறை கைது செய்துள்ளது. ஓட்டுக்களுக்கு பயந்தோ என்னமோ  இந்து மத அமைப்பு தலைவர்களின் கொலைகளுக்கு காரணமாக இருந்தவர்களை  காவல்துறை இன்னும் கைது செய்யவில்லை.
---------------------------------------
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலின்பொழுது சில இசுலாமிய அமைப்புகள்  ஒட்டு கேட்ட வந்தவர்களை தடுத்துள்ளது, தாக்கியுள்ளது.  இதோ எதோ ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. இதன் மூலமாக இசுலாமிய அமைப்புகள் மதத்தை ஒரு பொருட்டாக எண்ணாத  மக்களுக்கு  மதவெறியை ஊட்டுகிறது என்றே சொல்ல வேண்டும்.

பாமக, மதிமுக,தேமுதிக கட்சிய சார்ந்தவர்கள் யாரும் தங்களை இந்துக்களாக அடையாளப்படுத்தவில்லை.  ஒட்டுமொத்த தமிழகமுமே அப்படித்தான்.ஆனால்  ஒட்டு கேட்டு வந்த அக்கட்சி தொண்டர்களுக்கு இசுலாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தது எப்படிப்பட்ட ஒரு விளைவை ஏற்படுத்தும் என்று இசுலாமிய அமைப்புகள் சிந்திக்கவில்லை. வெவ்வேறு ஜாதிகளாக தங்களை அடையாளப் படுத்தி கொள்ளும் தமிழர்களை  இவ்வாறான செய்கைகள் இந்துக்களாக  ஒன்றிணைக்கும் அபாயம் உள்ளது.

-------------------------------
சமீபத்தில் தரமணியில் தங்களுக்கு தனிசுடுகாடு வேண்டும் என  இசுலாமிய அமைப்புகளின் போராட்டத்தால் அப்பகுதியில் பத்தட்டம் நிலவியது
என படித்ததாக ஞாபகம்.
--------------------------------
ராமாநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சில இசுலாமிய கிராமங்களுக்கு வெளியாட்கள் யாரும் வரக்கூடாது என்று பதாகைகள் வைத்ததாக ஒரு செய்தி  வெளியானது. இதற்க்கு மறுப்பு தெரிவித்து ஜவஹருல்லா வெளியிட்டுள்ள கட்டுரையில் "பொதுவழியல்ல இது பெண்கள் நடமாடும் பகுதி" என்று ஒரு இடத்தில் எழுதப்பட்டுள்ளதாக ஒப்புக்கொள்கிறார். பெண்களை சிலர் கிண்டல் செய்வதால் அந்த குறுக்கு தெரு பெண்களுக்கான தெரு என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவ்வாறு எழுதப்பட்டது என்று அவர் கூறுகிறார். தனி பேருந்துகள் இருக்கும்பொழுது தனிதெரு இருக்க கூடாதா  என்று அவர் கேட்கிறார்.

எனக்கு தெரிந்து இந்தியாவில்  பெண்களுக்கு என்று தனி தெரு இருப்பது இங்கு மட்டுமே என்று நினைக்கின்றேன். தாலிபானில்  கூட இம்மாதிரி உண்டா என தெரியவில்லை.


http://www.dailypioneer.com/todays-newspaper/fatwas-ban-outsiders-entry-into-rameswaram-villages.html
http://twocircles.net/2013dec21/are_muslim_populated_villages_ramanathapuram_district_out_bounds_hindus.html#.U20yVIFdXIZ
---------------------------------------------------------------

இக்கட்டுரையின் மூலம் இசுலாமிய அமைப்புகளிடம் கேட்டுக்கொள்வது என்னவெனில் தயவு செய்து போராட்டங்களை அரசாங்கத்திற்கு எதிராக மட்டுமே நடத்துங்கள்,பொதுமக்களை பாதிக்காமல். உங்கள் நலனுக்கு அரசாங்கம் உள்ளது. உங்கள் குறைகளை அரசாங்கத்த்திடம் கூறி அதை தீர்க்க பாருங்கள். வீணாக மதம் என்ற உணர்வே இல்லாத இந்துக்களுக்கு மத்தியில் உங்கள் எதிர்ப்பை காட்டி அவர்களுக்கு மதவெறியை ஊட்டாதீர்கள். இதன் மூலம் பாதிக்கப்படப்போவது அப்பாவி பொது மக்கள் மட்டுமே. நீங்கள் அல்ல.
 இசுலாமியர்களுக்கு மதவெறியை ஊட்டாமல், மத சகிப்புத்தன்மையை கற்றுக்கொடுங்கள்.


22 கருத்துகள்:

  1. புரச்சி மணி,

    //எனக்கு தெரிந்து இந்தியாவில் பெண்களுக்கு என்று தனி தெரு இருப்பது இங்கு மட்டுமே என்று நினைக்கின்றேன். தாலிபானில் கூட இம்மாதிரி உண்டா என தெரியவில்லை.//

    இப்படிலாம் செய்வது பிரிவினையைத்தான் உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இப்படி செய்வது மதவாத அரசியல் சக்திகள்.இப்படியானவர்கள் எல்லா மதத்திலும் இருக்காங்க,அவர்களை ஆதரிக்க கூடாது.

    # இஸ்லாமியர்கள் மாற்று மதத்தினரைப்பார்த்து செய்றாங்க ,ஆனால் இந்துக்கள் ,இந்துக்களையே இப்படி பிரிச்சு வைக்கிறாங்களே அவ்வ்!

    பலக்கிராமங்களில் "இந்துக்கள் வசிக்கும் தெரு வழியே சில இந்துக்கள்" செல்லக்கூடாதுனு தடை வச்சிருக்காங்க, தடைப்போட்ட இந்துக்கள் யாரு தடுக்கப்பட்ட இந்துக்கள் யாருனு தேடிப்பாருங்க , கூகுள் தான் இருக்குள்ள :-))

    ஆனால் இதெல்லாம் ஏனோ உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டேங்குது அவ்வ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வவ்வால்,
      நீங்கள் கூறுவது உண்மையா?
      இவ்வாறு சமீபத்தில் நடந்ததா?
      இப்படியான செய்திகளை நான் சமீபத்தில் படிக்கவில்லை. இவ்வாறு இருப்பின் இதுவும் கண்டிக்கத்தக்கதுதான்.
      ஏன் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை?

      ஒருவேளை நீங்கள் காலம் காலமாக இருக்கும் பிரச்னையை பற்றி பேசுகிறீர்கள் என்றால்...பொதுவாக ஜாதி பிரச்சனை பற்றி எத்தனயோ பேர் குரல் கொடுத்துள்ளார்கள், கொடுத்துவருகிறார்கள் ...எனக்கு தெரிந்த அபாயமாக தெரியும் பிரச்சனைகளை பற்றியே நான் எழுதுகிறேன். இதில் ஒன்னும் தவறு இல்லையே வௌவால்?

      ஜாதி பிரச்சனை பற்றி தனியாக எழுதிவருகிறேன்....அதில் நீங்கள் கூறுவது பற்றியும் ஆய்ந்து எழதுகிறேன்.
      நன்றி

      நீக்கு
  2. //சமீபத்தில் தரமணியில் தங்களுக்கு தனிசுடுகாடு வேண்டும் என இசுலாமிய அமைப்புகளின் போராட்டத்தால் அப்பகுதியில் பத்தட்டம் நிலவியது
    என படித்ததாக ஞாபகம்.// நமது தமிழ்நாட்டிலல்ல இந்தியநாட்டிலும் ஏன் உலகத்தில் எந்த இடத்திலாவது முஸ்லிம்கள் தனிசுடுகாடு ஒருபோதும் கேட்டதில்லை; அது அவர்களுக்குத் தேவையுமில்லை. எந்த இடத்திலாவது அவர்களின் இடுகாடு மற்ற மதத்தினரது சுடுகாட்டுடன் சேர்ந்து இருக்கின்றதா? இல்லையே! //எனக்கு தெரிந்து இந்தியாவில் பெண்களுக்கு என்று தனி தெரு இருப்பது இங்கு மட்டுமே என்று நினைக்கின்றேன். தாலிபானில் கூட இம்மாதிரி உண்டா என தெரியவில்லை.// அட! தமிழ்நட்டைப்பற்றி அறியாமல் எழுதக்கூடாது. //கூகுள் தான் இருக்குள்ள :-))// தேடிப்பார்த்தால் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வாங்க அன்பரே,
      கட்டுரையின் பிற குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன?
      அதை ஏற்றுக்கொண்டீர்களா? தவறை ஒப்புக்கொள்வதே திருத்திக்கொள்ள வழிவகுக்கும்.
      நன்றி

      நீக்கு
  3. // பாமக, மதிமுக,தேமுதிக கட்சிய சார்ந்தவர்கள் யாரும் தங்களை இந்துக்களாக அடையாளப்படுத்தவில்லை. //

    ஆனால் யாருக்காக ஓட்டு கேட்டு வந்தார்கள், யாருக்கு ஓட்டு போட சொன்னார்கள்? அண்ணன் தம்பியாக பழகும் தமிழகத்தில் ஒரு பிரிவினைவாதியை முன்னிறுத்தி ஓட்டு கேட்பதற்கு அந்த கட்சிகள் சிந்தித்து இருக்க வேண்டாமா? மதசார்பின்மைக்கு அச்சுறுத்தல் குறித்து எண்ணி இருக்க வேண்டாமா?

    ஆனால், இதில் கவனிக்க பட வேண்டியது, சென்ற முறை நடந்து முடிந்த தேர்தல்களில் எல்லாம் இந்த பாஜாக உடன் மற்ற திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளும், ஏன் இதே பாமக, மதிமுக கட்சிகளும் கூட்டணி வைத்து ஒட்டு கேட்டு சென்ற நேரத்தில் இவ்வாறு எதிர்ப்பு எதுவும் வரவில்லையே, ஆரம்பம் எங்கே என்று யாருக்கேனும் புரிகின்றதா?

    பதிலளிநீக்கு
  4. ஆனால், இந்த வைகோ, பெரியார செருப்பால் அடிக்கனும்னு சொன்ன பாஜாக ஹெச்.ராஜா வுக்கு ஒட்டு கேட்டு வந்தாரு பாருங்க, அன்னைக்கி தெரிஞ்சுகிட்டேன், அவரு பதவி வெறிக்காக எதையும் செய்வாருன்னு.

    பதிலளிநீக்கு
  5. ஆனால், இதில் கவனிக்க பட வேண்டியது, சென்ற முறை நடந்து முடிந்த தேர்தல்களில் எல்லாம் இந்த பாஜாக உடன் மற்ற திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளும், ஏன் இதே பாமக, மதிமுக கட்சிகளும் கூட்டணி வைத்து ஒட்டு கேட்டு சென்ற நேரத்தில் இவ்வாறு எதிர்ப்பு எதுவும் வரவில்லையே, ஆரம்பம் எங்கே என்று யாருக்கேனும் புரிகின்றதா?

    எரியிரத புடுங்குனா புகையிறது தானா அடங்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகா,
      உங்களுக்கு நீங்கள் செய்யும் தவறு என்னவென்று தெரியவில்லை. அதை சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மனமில்லை.
      மோடியுடன் கூட்டணி வைத்தார்கள் என்பதற்காக அவர்களை தாக்குவது நியாயம் என்று சொல்கிறீர்கள். அவர்களும் திருப்பி தாக்கி இருந்தால் என்ன நடந்திருக்கும். கொஞ்சமாவது சிந்தித்து பார்க்க தெரிகிறதா உங்களுக்கு?அதைதான் விரும்புகிறீர்கள் போலும்?

      கலைஞரும் தான் மோடி எனக்கு நல்ல நண்பர் என்றார் அவரை என்ன செய்தீர்கள்? அவர் கூடத்தானே கூட்டணி வைத்தீர்கள்?

      அவனுக்கு மோடி பிடித்திருக்கு கூட்டணி வச்சிருக்கான் புடிச்சா ஒட்டு போடு இல்லைனா விடு ...அதைவிடுத்து அவர்களை தடுப்பதும் தாக்குவதும் உங்கள் மீது வெறுப்பையே உண்டாக்கும்.கொஞ்சம் சிந்தித்து செயல் படவும்.

      அப்படியே குண்டு வைத்ததற்கும் இந்து மத தலைவர்களை கொன்றதுக்கும் ஏதாவது உங்கள் தரப்பு காரணம் இருந்தால் தெரியப்படுத்தவும், தெரிந்துகொள்கிறேன்.
      நன்றி

      நீக்கு
  6. //தமிழகத்தை பொருத்தவரை எந்த ஒரு இந்து மத அமைப்பும் இசுலாமியர்கள் மீது தாக்குதல் தொடுத்ததாக எனக்கு தெரியவில்லை. ஆனால் சில இசுலாமிய அமைப்புகள் குண்டுவெடிப்புகளிலும், இந்து மத அமைப்பு தலைவர்களை கொலை செய்வதுமாக இருந்து வருகிறது. //

    இந்து மத அமைப்பு தலைவர்களை என்றால் யாரை, யாரேனும் மடாதிபதியையா, கோவில் பூசாரியையா? அல்லது யாரேனும் சாமியாரையா? அவ்வாறு எங்கும் நடந்ததாக நான் எதிலும் படிக்கவில்லை.

    யாரை சொல்லுகிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுவெடிப்பு: 1993- ஆம் ஆண்டு, சென்னை சேத்துப்பட்டில் இயங்கி வந்த ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் குண்டு வெடித்தது. ஆகஸ்டு 6-ம் தேதி வெடித்த குண்டில் 11 பேர் பலியானார்கள். பலியானவர்களின் உடலில் இருந்து தெறித்த சதைகள், எதிர்வீட்டு மாடியில் டியூசன் படித்துக் கொண்டிருந்த குழந்தைகளின் மீது விழுந்தது. இந்த வழக்கில் இமாம் அலி, அல் உம்மா இயக்கத்தலைவர் பாஷா, பழனி பாபா, நஜிமுதின் உள்ளிட்ட பலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது இமாம் அலியும் பழனி பாபா இறந்துவிட்டனர். அபுபக்கர் சித்திக் என்பவர் தலைமறைவானர்.

      கோவை குண்டுவெடிப்புச் சம்பவம்: 1997-ம் ஆண்டு, மோட்டர் சைக்கிளில் மூன்று பேராக அமர்ந்து சென்ற அல் உம்மா இளைஞர்களை, போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் தடுத்து நிறுத்தினார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்னை சற்று கடுமையானது. இந்த நேரத்தில், நவம்பர் 29-ம் தேதி போக்குவரத்துறை காவலர் செல்வராஜை சிலர் வெட்டிக் கொன்றனர். இந்தப் படுகொலைக்கு காரணம் அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது தெரியவந்து, அவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்களை பின்னணியாக வைத்து கோவையில், இந்து- முஸ்லீம் கலவரம் வெடித்தது. இரண்டு தரப்பிலும் ரத்தப்பலிகள், பெண்கள் அவமானப்படுத்தப்படுதல் என்று சம்பவங்கள் தொடர்ந்தன. பிறகு சற்று அடங்கியதுபோல் வெளியில் தெரிந்தாலும், உள்ளுக்குள் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்தது. அந்த சூழ்நிலையில், பா.ஜ.க. தலைவர் அத்வானி கோவைக்கு ரதயாத்திரை வருவதாக அறிவிக்கப்பட்டது.

      இதையடுத்து, 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி கோவையில் வெடிக்கத் தொடங்கிய குண்டுகள் 17ம் தேதி வரை மூலைமுடுக்கில் எல்லாம் வெடித்தன. 50க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பல நூறு கோடி ரூபாய் சொத்துக்கள் நாசமடைந்தன. இந்தத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கேரள ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி, அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் போனது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் கோவை சிறப்பு நீதிமன்றம், 43 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அதுபோல், 83 பேருக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.

      எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு: 1997-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி, காலையில் தூக்கம் கலைந்து செய்திகளைப் பார்த்தவர்களுக்கு பெரும் துக்கம் காத்திருந்தது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர்-6ம் நாளை கருப்பு நாளாக அனைவரும் உணர வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட சதியால், சென்னையில் இருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை 4.55 மணிக்கு குண்டு வெடித்தது. அந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்தில் நின்றபோது இது நடந்தது. நான்கு பேர் பலியானார்கள்.

      அடுத்த 15 நிமிடத்தில் ஈரோடு ரயில் நிலையத்தில், சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. 2 பேர் பலியானார்கள். இரண்டு மணிநேரம் கழித்து சென்னையில் இருந்து ஆலப்புழா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. திரிச்சூர் ரயில் நிலையத்தில் அது நிகழ்ந்தது. 4 பேர் பலியானார்கள். 57 பேர் படுகாயமடைந்தனர். இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜுகாத் கமிட்டித் தலைவர் குணங்குடி ஹனீபா, ஏர்வாடி காசிம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
      http://www.kodangi.net/2014/05/chennai-central-bomb-blast.html
      இதையும் நியாயம் என்பீர்கள் என்றே நினைக்கின்றேன்...உங்கள் நியாயத்தை கேட்க நான் தயார்

      நீக்கு
    2. ஆமா, நீங்க மேல சொல்லிய குண்டுவெடிப்பில் இறந்தவர்கள், இந்து மத தலைவர்களா? சும்மா போகிற போக்கில் பிறருக்கு வெறுப்புணர்வை தூண்டிவிடாதீர்கள்.


      // சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுவெடிப்பு: 1993- ஆம் ஆண்டு, சென்னை சேத்துப்பட்டில் இயங்கி வந்த ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் குண்டு வெடித்தது. ஆகஸ்டு 6-ம் தேதி வெடித்த குண்டில் 11 பேர் பலியானார்கள். பலியானவர்களின் உடலில் இருந்து தெறித்த சதைகள், எதிர்வீட்டு மாடியில் டியூசன் படித்துக் கொண்டிருந்த குழந்தைகளின் மீது விழுந்தது. //

      சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு-1, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு-2, தானே குண்டுவெடிப்பு, ஆகஸ்ட் 2008 கான்பூர்,நந்தித் குண்டுவெடிப்பு முயற்சிகள், இன்னும் ஏராளமான குண்டுவெடிப்புகள் யாரால் நடத்தப்பட்டது என்று உங்களுக்கு தெரியும் தானே. அங்கெல்லாம் வெடித்த குண்டுகளால் பலியானவர்களின் உடலில் இருந்து தெறித்த சதைகள், எதிர்வீட்டு மாடியில் டியூசன் படித்துக் கொண்டிருந்த குழந்தைகளின் மீது விழவில்லையா?

      கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவுன்னு கேள்விபட்டிருக்கீங்களா?

      குண்டுவெடிப்புகள் பற்றி நாம் ஏற்கனவே நிறைய விவாதம் செய்திருக்கிறோம். நீங்க திரும்பவும் ஆரம்பிச்சா, சுதந்திர இந்தியாவுல இந்திய தேச தந்தை மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதி நாதுராம் கோட்சே சுட்டு கொன்றுவிட்டு, இஸ்மாயில்னு கையில பச்சைகுத்திக்கொண்டு, நான் ஒரு முஸ்லிம், நான் தான் காந்தியை கொன்றேன் என்று கொன்ற இடத்திலேயே நின்ற காரணத்தை சொல்லிவிட்டு பிறகு ஆரம்பியுங்கள். (அந்த தேச துரோகி கோட்செவையும் நாயகனாக, வீரனாக உருவகப்படுத்தி பதிவெழுதிய ஒரு மேன்மைமிகு பக்கியும் இந்த பதிவுலகில் தான் உலவுகிறது, அது வேற விஷயம்.)

      நீக்கு
  7. // தமிழகத்தை பொருத்தவரை எந்த ஒரு இந்து மத அமைப்பும் இசுலாமியர்கள் மீது தாக்குதல் தொடுத்ததாக எனக்கு தெரியவில்லை. //

    கோவை கலவரம், அதை மறந்து விட்டேர்களே?

    தன் வீட்டுக்கு தானே குண்டு வைத்து மத கலவரம் தூண்ட முயன்ற பாஜாக பிரமுகரையும், நெல்லையில் அதே போன்று தானே பாஜாக கட்சி அலுவலகத்தில் குண்டு வைத்து மத கலவரம் தூண்ட முயன்றவர்களையும் மறந்துவிட்டீர்களே?

    முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தது கொண்டு தான் இருக்கிறது, இன்னும் முழுமையாக அவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
  8. சகா,
    "இசுலாமிய அமைப்புகளால் தமிழகத்தில் எந்த ஒரு குண்டுவெடிப்போ, கொலையோ நடக்கவில்லை. முசுலீம்கள் மீது பழிபோடுவதற்க்காக இந்துக்களே குண்டுவைத்து, கொலை செய்கின்றனர்." என்றுதானே சொல்லவருகிறீர்கள்? :)
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முசுலீம்கள் மீது பழிபோடுவதற்க்காக இந்துக்களே குண்டுவைத்து, கொலை செய்கின்றனர்."//

      கருத்து திரிபு செய்யாதீர்கள். திருத்திக்கொள்ளுங்கள், இந்துக்கள் அல்ல, ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள்.

      சரி, இல்லையெனவே கொள்வோம். பிறகு, ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் தன் வீட்டுக்கு தானே குண்டு வைத்ததும், நெல்லையில் பாஜாக கட்சி அலுவலகத்தில் தாங்களே குண்டு வெடிக்க செய்ததும், மேலும் கர்நாடக தாசில்தார் அலுவலகம் ஒன்றில் பாக்கிஸ்தான் கொடியை அந்த கயவர்கள் ஏற்றி அதன் பழியை இஸ்லாமியர்களின் மேல் பட்டாதும், ஆந்திராவில் கோவில் ஒன்றில் மாட்டிறைச்சியை வீசிவிட்டு, இஸ்லாமிய அடையாளங்களை போட்டது குறித்தும், இன்ன பிற இதை போன்ற வகையாராக்கள் அனைத்தையும் உங்களால் மறுக்க முடியுமா? இது குறித்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

      நீக்கு
    2. இப்பதிவில் நான் தமிழகம் பற்றி மட்டுமே பேசியுள்ளேன்.

      எனக்கு ஒரு சந்தேகம்
      ஆர்.எஸ்.எஸ்,பாஜக ஏன் தங்களுக்கு மட்டுமே குண்டு வைத்து கொள்கிறார்கள்? ஏன் அவர்கள் பொதுமக்களை குண்டு வைத்து கொல்லவில்லை? ஏன் அவர்கள் தமிழகத்தில் எந்த இசுலாமிய தலைவரையும் கொல்லவில்லை.?
      தவறு செய்திருந்தால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. ஆனால் நீங்கள் கூறுவது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

      உங்களிடம் ஒரு கேள்வி இசுலாமிய அமைப்புகள் தமிழகத்தில் தவறே செய்யவில்லையா?

      கோடங்கி தளத்திலிருந்து சில குண்டுவெடிப்புகள் பற்றி கூறியுள்ளேன். அவையும் ஆர்.எஸ் எஸ், பாஜ க செய்ததா?

      உங்களை நினைத்தால் எனக்கு வேதனைதான் வருகிறது. எப்படி இப்படி கண் மூடித்தனமாக உங்களால் இருக்க முடிகிறது.வருத்தமாக உள்ளது சகா.

      நீக்கு

  9. ஒரு வேட்பாளரை எங்கள் தொகுதிக்கு வாக்கு கேட்டு வர கூடாது என தடுப்பது இந்தியாவிலேயே இது தான் முதல் முறையா ?அல்லது தமிழ்நாட்டிலேயே இது தான் முதல் முறையா ? வேறு எங்கும் இதே போல் நடந்தது இல்லையா ?

    ஒரு முன்னால் முதல்வரை (அரவிந்த் கேஜ்ரிவால் )வாக்கு கேட்டு வரும் போது
    பல முறை தாக்குகின்றார்கள் ..அதுவும் ஒரு குறிப்பிட்ட கட்சியினர் தொடர்ந்து செய்தார்கள் .இந்த கேடு கெட்ட மீடியாக்கள் அதை ஒரு நகைச்சுவை செய்தியாக வெளியிட்டது .கேஜ்ரிவால் எங்கு சென்றாலும் அடி வாங்கி கொண்டு வருகிறார் என்று ....

    ஒரு ரவுடியை ( B.J.P யை சேர்ந்த முருகானந்தம் இவர் பிரபல ரவுடி ..இவர் மீது வழக்குகள் நிலவில் உள்ளன .)
    எங்கள் பகுதிக்கு நீங்கள் வர கூடாது என அந்த மக்கள் தடுக்கும் போது ....இந்த மீடியாக்களும் ..நடுநிலை வேடம் போடும் சில ஆட்களும் கூப்பாடு போடுகிறார்கள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sketch Sahul,
      தனிப்பட்ட முறையில் ஒரு சிலர் வேட்பாளர்களை தாக்குவதும், (கேஜ்ரிவளை ஒரு இந்துவும், ஒரு முஸ்லீமும் டெல்லியில் தாக்கினார்கள்)
      மத ரீதியாக இசுலாமியர்கள் தடுப்பதற்கும் தாக்குவதற்கும் வித்தியாசம் இல்லையா? அல்லாவின் மீது ஆணையாக சொல்லுங்கள் .

      நீக்கு
  10. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா9 மே, 2014 அன்று PM 9:10

    தமிழகத்தில் மதப் பிணக்கைத் தூண்டுவதில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகளின் பங்கு கால் பங்காகத் தான் இருக்கும் என நான் கருதுகின்றேன். இஸ்லாமிய மதவாதக் கட்சிகள் மட்டுமின்றி இந்து அடிப்படைவாத மதவாதக் கட்சிகள், அவர்களுக்கு ஜிங்கியடிக்கும் இந்து சாதிக் கட்சிகள், தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் என ஆள் ஆளாகுக்கு மக்களைக் கூறுப் போட்டுக் கொண்டு தான் இருக்கின்றார்கள். என்னைக் கேட்டால் ஒட்டு மொத்தமாக சாதி, மதக் கட்சிகளை தடை செய்துவிட வேண்டும், ஆனால் இந்தியாவில் இது நடக்குமா என்ன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோடங்கிச் செல்வன்,

      உங்கள் கருத்தோடு நான் வேறுபடுகிறேன். தமிழ் அமைப்புகளோ,சாதி கட்சிகளோ மத ரீதியாக மக்களை திரட்டவில்லை, பேசவில்லை,செயல்படவில்லை,வன்முறையில் ஈடுபடவில்லை.
      பிற மாநில பாஜக,ஆர் எஸ் எஸ் செயல்கள் இசுலாமிய அமைப்புகளை தவறு செய்ய தூண்டி உள்ளது உண்மை. ஆனால் அது தமிழகத்தில் தவிர்த்திருக்கப்படவேண்டும்.
      தமிழக இசுலாமிய அமைப்புகள் தமிழர்களை மதரீதியாக சிந்திக்க வைக்கிறது என்பதே உண்மை. இது எதிர்காலத்தில் பேராபத்தில் முடியும் என்பதே எனது கவலை.
      ஜாதி மத கட்சிகளை தடை செய்யவேண்டும் என்ற உங்கள் கருத்தை வழிமொழிகிறேன். இதுபற்றி என்னுடைய பதிவிலும் பதிவு செய்துள்ளேன். ஆனால் நீங்கள் சொல்வது போல அது சாத்தியம் அல்ல.....தற்போது.இருப்பினும் அதற்க்கான முயற்சியை நாம் கைவிட்டுவிடக்கூடாது.

      நீக்கு
  12. பெயரில்லா10 மே, 2014 அன்று AM 7:35

    Solvathellam unmai. Thavaru seibavargal thiruntha vendum.

    பதிலளிநீக்கு
  13. இந்தியாவில் வாழும் அரேபியர்கள்தாம் முஸ்லீம்கள். அவர்களுக்கு எண்ணத்தால் பழக்கவழ்க்கத்தால் கொள்கையால் உடையால் திருமண முறையால் உணவு பழக்கத்தால் சொத்து பங்குவைக்கும் முறையால் இலக்கியங்களால் முன் உதாரண தலைவல்களால் வீரா்களால் எந்த வகையிலும் இந்திய மண்ணோட ஒட்டோ உறவோ இல்லை. இந்தியா காட்டுமிராண்டி நாடு -ஜகிலியா என்று ஒவ்வொரு மசுதியிலும் பத்திரிகையிலும் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.காபீர் களைக் கொன்று ஒழிதது விடுங்கள் என்று பக்கத்துக்கு பகக்ம் குரான் குரைக்கின்றது. குரான் ஒரு சகோதரக்துவம் போதிக்கும் நூல் என இந்துக்கள் சிலர் முழங்குகின்றனர். எப்படி முஸலீம்கள் இந்துக்களை நேசிப்பார்கள.
    இந்திய பண்பாட்டின் தமிழ பண்பாட்டின் மிகச்சிறந்த சாதனையாக தஞ்சை பிரதீஸ்வரா் ஆலயத்தை இந்து நாத்திகர்கள் கூட மதிக்கின்றனர்.ஆனால் அரேபியமதவாததமிழர்களைப் பொறுத்த மட்டில் அது உடைத்து நொறுக்க வேண்டிய இடம்.பாவச்சின்னம். சாத்தானின் மாளிகை. எப்படி ஐயா முஜ்லீம்களை நம்புகின்றீர்க்ள் ? முஸ்லீம்கள் போன்றுவது பாபரை ஔரங்கசீப்வை மாலிக்காபுரை ................ எப்படியைா இந்துக்களை அவன் நேசிப்பான் ?

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...