வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

நம்மை நாமே படைத்துக் கொண்டோமோ? பதிவு 2

பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதில் இருந்து இப்பதிவை தொடங்குவோம்.

சூன்யம்    என்றும்  பரிபூரணம்       என்றும் அழைக்கப்படும்    ஒன்று    முதலில்  இருந்தது என்றும் சொல்லலாம்  அல்லது இல்லாமல் இருந்தது என்றும் சொல்லலாம்.

அந்த ஒன்றும் இல்லாத  அல்லது முழுமையான  ஒன்றுக்கு  ஆசை வருகிறது. அந்த ஆசையின் விளைவாக வானாகி, வாயுவாகி, நெருப்பாகி, நீராகி, மண்ணாகி, மனிதனாகி நிற்கிறோம்.

நாம் எந்த நிலையில் தொடங்கினோமோ    மீண்டும்    அந்த ஒன்றும் இல்லாத அல்லது  முழுமையான நிலையை அடைவதே நமது   இறுதி இலக்கு . நமது பிறப்பின் நோக்கமும் அதுதான். இடையிடையே சில இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றோம்  அவ்வளவே.

இதை புரிந்து கொண்டு பிறப்பறுக்க துணை புரிவதில் ஒன்று இன்று ஆன்மிகம் எனப்படுகிறது. நாளை இது அறிவியல் எனப்படும்.

துன்பப்படுவோம் என்று தெரிந்தே ஒரு செயலை நாம் செய்வோமா என்றால் செய்வோம் என்பது தான் உண்மை. ஏன் எனில் துன்பத்தில் இன்பமும் உண்டு...இன்பத்தில் துன்பமும் உண்டு.

ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொள்ள  விரும்புகிறாள்   , குழந்தை பிறக்கவில்லை என்றால் அதற்காக தவமாய் தவமிருக்கிறாள்...கருத்தரித்த  நாள் முதல் அவளுக்கு இன்பம் மற்றும் துன்பம். குழந்தையை சுமக்கிறாள், பெற்றெடுக்கிறாள்.   உயிரையே பணையம் வைப்பது போல் தான் இது.
பிறகு   அந்த குழந்தை வளர்க்க   எவ்வளவு சிரமப்படுகிறாள். அவளுக்கு இது  எல்லாம்  தெரியாதது  அல்ல  இருப்பினும்  விரும்பியே  இதை செய்கிறாள்.

சிலர் உண்டு ஏற்க்கனவே பார்த்த  படங்களை திரும்பி பார்ப்பார்கள். அது அவர்கள் மனதை பாரமாக்கும் , கண்ணீர் ததும்பும் ஆனால் மீண்டும் அந்த காட்சியை காண்பார்கள். அதிலும் அவர்களுக்கு ஒரு ஆனந்தம்.

அட  அது வெறும் சினிமாதானே இதற்க்கு ஏன் அழ வேண்டும்? அவர்கள் மகிழ்ச்சியாய் இருக்கும் பொழுது ஏன் நாமும் மகிழ்ச்சியாக இருக்க  வேண்டும்?. நகைச்சுவை  ஏற்ப்படுத்தினால்  ஏன் சிரிக்க வேண்டும்?

ஏன் எனில் அந்த சினிமாவோடு நாம் ஒன்றிவிடுகிறோம். சினிமா எனும் மாயையோடு ஐக்கியமாகிவிடுகிறோம்.

அதுபோலத்தான் சக்தி மிகுந்த நாம் பிறப்பெடுத்தாலும் இந்த உலக மாயையில் சிக்குண்டு இன்பப்படுகிறோம் துன்ப்படுகிறோம். நாம் யார் என்பதை  மாயையால் மறந்து விடுகிறோம். நாம் செல்ல வேண்டிய இடத்தை மறந்துவிட்டு  மாயையில், பிறவி சுழற்சியில் மாட்டிக் கொள்கிறோம்.

 நாம் மீண்டும் தொடக்கமான அந்த ஒன்றும் இல்லாத அல்லது முழுமையான் நிலையை அடையவேண்டும்.
எவ்வளவு சீக்கிரம் அடைகிறோமோ அவ்வளவு சீக்கிரம்  மாயையான இன்ப துன்பத்தில் இருந்து விடுதலை. இல்லை எனில் நாம் எதிலிருந்து வந்தோமோ அதுவே ஆட்டத்தை முடித்துக்கொள்வோம் என்று என்னும் வரை மாயை உலகம் உங்களுக்கு இன்பம் என்று நினைத்தால்  அப்படியே  இருந்து விடலாம்  :)

சென்ற பதிவில் நண்பர்கள் சிலர் பதிவு கொஞ்சம் புரிந்து கொஞ்சம் புரியாமல் உள்ளது என்றனர். முழுவதும் குழப்பிவிடலாம் என்று இந்த பதிவு :)

அடுத்த பதிவில் கொலை, கொள்ளை, வன்புணர்வுகளுக்கும்     ஒருவரின்  ஆசைக்கும் என்ன சம்பந்தம்  என்று அலசுவோம்.

பின்குறிப்பு: இந்த பதிவில் இருக்கும் கருத்துக்கள் அத்வைத சித்தாந்தத்தின்  தாக்கத்தாலும் எனது புரிதலாலும் ஏற்ப்பட்டவை.

3 கருத்துகள்:

  1. எனக்குப் புரிகிறது..எந்தக் குழப்பமு்ம் இல்லை

    பதிலளிநீக்கு
  2. //ஒன்றுக்கு ஆசை வருகிறது. அந்த ஆசையின் விளைவாக//

    (அந்த ஒன்றின் இயல்பு ’பெருக்கம்’ அதனால் தள்ளுதல், கவர்ச்சி விசை.. அதன் விளைவாக)

    இப்படி படிச்சுப்பார்த்தால் இன்னும் நிறைய புரிதல்கள் ஏற்படும் :)

    பதிலளிநீக்கு
  3. @கலியபெருமாள் புதுச்சேரி
    @நிகழ்காலத்தில் சிவா
    @கரந்தை ஜெயக்குமார்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...