வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 2 ஏப்ரல், 2014

நீங்கள் ஓட்டு போடும் கட்சி வெற்றி பெறுமா?

பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் பல முனை போட்டி நிலவுகின்றது. இதில் யாருக்கு எவ்வளவு தொகுதி  கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எந்த ஒரு கருத்து கணிப்பும் உண்மையாகாது என்றே தோன்றுகிறது.

அதிமுக அதிக ஒட்டு வங்கியை வைத்துள்ளது. அந்த தைரியத்தில் தான் அது தனியாக களத்தில் இறங்கியுள்ளது.   மோடி அலை அதிமுகவை கொஞ்சம் பாதிக்கவே செய்யும். அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருந்தால் நாற்பதும் இவர்களுக்கே கிடைத்திருக்க கூடும்.

திமுகவும் அதிமுகவிற்கு இணையாக ஒட்டு வங்கி வைத்துள்ளது. அதிமுக அதிருப்தி ஓட்டுக்கள் பிரிவதால் அது நிச்சயமாக திமுகவிற்கு சாதகமாக அமையாது.

பாஜக கூட்டணியை குறைத்து மதிப்பிடுவதற்க்கில்லை. மோடி அலை என்பது நிஜம். ஆனால் அது எத்தனை ஓட்டுக்களை அல்லது தொகுதிகளை கைப்பற்றும் என்பது யாருக்கும் தெரியாது.

காங்,இடதுசாரி, ஆப் அனைத்துக்கும் பெரிய ஆப்புதான்.

இருப்பினும் நீங்கள் ஒட்டு போடும் கட்சி வெல்லுமா இல்லையா என்பதை நீங்களே தெரிந்து கொள்ள ஒரு சிறிய  கருத்து கணிப்பு இங்கே. மேலே வலது பக்கம் உங்களது வாக்கை தவறாமல் செலுத்துங்கள். சில நாட்களில் உங்கள் கட்சியின்  நிலைமை இங்கே உறுதி செய்யப்படலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...