வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 6 நவம்பர், 2012

நமக்கு சங்கம் வேண்டும் என்று இன்னுமா உங்களுக்கு உரைக்கவில்லை?

சின்மயி- ராஜன், கார்த்திக் சிதம்பரம் - ரவி சங்கரன்  இந்த பிரச்சனைகளை
பார்த்தும் நாம் திருந்தவில்லை என்றால்  நாம் கல்வி கற்று என்ன பயன்? எழுதி  என்னத்தை கிழித்து விடப்போகிறோம்?

நமக்கென்று ஒரு சங்கம் இருந்திருந்தால் சின்மயி-ராஜன் மற்றும் பிறர் 
பிரச்சனையை இந்த அளவிற்கு வளர விடாமல் தவிர்த்திருக்கலாம். சங்கத்தின் மூலமாக  சின்மயி -ராஜன் மற்றும் பிறர்கள் மத்தியில்   நாம் சமாதானத்தை ஏற்ப்படுத்தி  இருக்கலாம்.இங்கே இருவரது நலனையும் நம்மால் காப்பாற்றி இருக்க முடியும்.

சங்கம் இல்லாததால் நாம் அதை செய்யவில்லை  அதனால் ராஜன், சரவணன் ஆகியோர் இன்று  சிறையில். சின்மயியும் மன உளைச்சலில்.

சின்மயி பிரபலம் என்பதால் இதற்க்கு முன்பு  புகார் கொடுத்தவர்களுக்காக எந்த  வித நடவடிக்கையையும் எடுக்காமல் இவருக்காக காவல் துறை 
நடவடிக்கை எடுத்துள்ளதாக பலரும் கூறுகின்றனர். சங்கம் இருந்திருந்தால் முன்பு  புகார் கொடுத்தவர்களின் பிரச்சனைகளையும் நம்மால் தீர்த்து வைத்திருக்க  முடியும்.

'ராபர்ட் வதோராவைவிட கார்த்திக் சிதம்பரம் அதிக சொத்து சேர்த்துள்ளதாக  செய்தி  வந்துள்ளது' என்று கூறியதற்காக ரவி சீனிவாசன் என்பவர் கைது
செய்யப்பட்டுள்ளார். ஆங்கிலேயன்  ஆட்சி காலத்தில்  இருந்ததைவிட இன்று நாம் மிக மோசமான நிலையில் இருக்கின்றோம் என்பதையே இவைகள்
காட்டுகின்றன.

நம்மிடம் சங்கம் இருந்தால்  நாம் இவர்களுக்காக போராடலாம். ஏன் சட்டத்தை கூட  நம்மால் திருத்த முடியும்.

நடிகர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம் என்று இருக்கும்பொழுது ஏன் இணைய  எழுத்தாளர்கள்  சங்கம் ஒன்றை ஏற்ப்படுத்த கூடாது?

பிளாக்கர்,டிவிட்டர்,முகநூல் மற்றும் மின்னஞ்சல் இவைகளில்  கருத்து
சுதந்திரத்தை காப்பாற்ற, நாம் சிறைக்கு செல்லாமல் இருக்க சங்கம் தேவை.

சங்கம் என்பது கைது நடவடிக்கைகளுக்காக மட்டுமல்ல, சமூக நலனுக்காகவும் நாம் ஒட்டுமொத்தமாக குரல் கொடுக்க  பயன்படுத்தலாம்.

நமக்கு நாமே சில சட்டங்களை வகுத்துக்கொண்டு ஆபாச வார்த்தைகளை தவிர்க்கலாம், தமிழ் மொழியில் மொழி பெயர்ப்புகளை கொண்டுவரலாம்,
 பதிவர் சந்திப்பு போன்ற நிகழ்சிகளில் நமது நூல்களை வெளியிடலாம்,
நூல் வெளியிட ஆர்வம் இருந்தும்  பதிப்பகத்தை தொடர்பு கொள்ள இயலாவதருக்காக நாம்  வழிகாட்டலாம், விளம்பரங்களை  கூட நாம் பதிவுகளில் இட மொத்தமாக வாங்கலாம் - பலருக்கும்
பங்கிட்டு தரலாம்.

சங்கத்தினால் நாம் நன்மைகளை அடைகிறோமோ இல்லையோ துன்பத்தையாவது அடையாமல்  தவிர்க்கலாம்.


 சங்கத்தை  மனதில் வையுங்கள்.

நாம் உடனடியாக என்ன செய்யவேண்டுமெனில் தகவல் தொழில் நுட்ப சட்டம் 66A வில்  மாற்றங்களை கொண்டு வரவேண்டும் .  அதிகாரம் உள்ளவர்கள்  தவறாக பயன்படுத்தும்  வகையில்  இந்த சட்டம் உள்ளது.
அந்த சட்டம் அப்படி என்ன சொல்கிறது?

------------------------------------------------------------------------------------------------------------------------------


**[ 66A. Punishment for sending offensive messages through communication
service, etc..-* Any person who sends, by means of a computer resource or a
communication device,-

(a) any information that is grossly offensive or has menacing character; or

(b) any information which he knows to be false, but for the purpose of
causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury,
criminal intimidation, enmity, hatred, or ill will, persistently makes by
making use of such computer resource or a communication device,

(c) any electronic mail or electronic mail message for the purpose of
causing annoyance or inconvenience or to deceive or to mislead the
addressee or recipient about the origin of such messages

shall be punishable with imprisonment for a term which may extend to three
years and with fine.


Explanation: For the purposes of this section, terms "Electronic mail" and
"Electronic Mail Message" means a message or information created or
transmitted or received on a computer, computer system, computer resource
or communication device including attachments in text, image, audio, video
and any other electronic record, which may be transmitted with the message.


[* Inserted vide Information Technology Amendment Act, 2008]

 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த சட்டப்படி நம் கருத்தால் பிறர் கோபமடைந்தாள் கூட நம்மீது வழக்கு தொடுக்க  முடியும்.  நாம்  அரசியல் பற்றி எழுத முடியாது. திரை  விமர்சனங்கள் கூட எழுத முடியாது.

அதாவது நாம் எந்த கருத்தையும் சொல்லக்கூடாது என்றே இந்த அதிகாரவர்க்கம் இந்த  மாதிரி ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அவர்கள் நினைத்தால் நம் அனைவரையும்  இன்றே   சிறையில் அடைக்க முடியும்.

டிவிட்டரில் கருத்து சொன்னவர்களே இதுவரை  கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே சங்கத்தை மனதில் வையுங்கள் போராட்டத்தை டிவிட்டரில் இருந்தே தொடங்குவோம்.

அனைத்து  டிவிட்டர் உபயோகிப்பாளர்களும்  #ModifyIndianITAct66A என்று தங்களுடைய பெரும்பாலான டிவிட்டுகளில் பயன்படுத்தவேண்டும்.  நாளை  முதல்  இச்சட்டம் மாற்றியமைக்கப்படும் வரை நாம்   இதை செய்ய வேண்டும். நமக்கு தெரிந்த தெரியாத    பலரையும் இதை நாம் செய்ய
சொல்ல   வேண்டும்.   நமது குரல் நிச்சயம்  மாற்றத்தை  கொண்டு வரும்.
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள.

பதிவுலகிலும் நாம் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரே பதிவை இடலாம் என்ற எண்ணத்தில் உள்ளோம். அதுபற்றி பின்வரும் கட்டுரைகளை படித்து உங்களது கருத்தையும்  ஆதரவையும் தாருங்கள்.
http://dharumi.blogspot.com/2012/11/601-i-t-act-section-66.html

http://anjaasingam.blogspot.com/2012/11/blog-post.html

 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு  நம்மில்   ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும்  சிறையே.

14 கருத்துகள்:

  1. புரட்சிமணி,

    சங்கம் போன்ற அமைப்பு தேவை என்பதில் உடன்படுகிறேன், ஆனால் இப்போ முன்னால் நிற்கும் பலரே கருத்து சுதந்திரத்தினை விரும்பாதவர்கள் ஆயிற்றே, இவங்க எப்படி மற்றப்பதிவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க ஒத்துழைப்பார்கள் என எதிர்ப்பார்க்க முடியும்?

    இப்போது எழும்பிய பிரச்சினைகளுக்கு குரல் கூட கொடுக்காமல் அமைதியாக இருப்பதில் இருந்தே இதனை அறியலாம்.

    அதிகாரவர்க்கத்தினை விட கட்டுப்பெட்டியான பழமைவாதிகள் சங்கத்தினை உருவாக்கினால் ,அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறையை விட இவர்களின் அடக்குமுறை அதிகமாகிவிடும் :-))
    -----------

    பாரபட்சமற்ற கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம்,நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றத்தை ஏற்க்க நாளாகும் மற்றபடி மக்கள் மாறுவர். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி வவ்வால்

      நீக்கு
  2. அருமையான பதிவு .....நாம் ஒன்றிணைந்தால் மிக பெரிய பலம் பெறுவோம் ..........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக... அதற்க்கான நேரம் நெருங்கி விட்டது

      நீக்கு
  3. நண்பர்களே ,
    நன்றே செய்
    நன்றும் இன்றே செய்
    இன்றும்
    இப்பொழுதே செய்
    எனும் பழமொழிக்கேற்ப

    Pls add #ModifyIndianITAct66A in some of your tweets to regain the freedom of speech given under Article 19(1)(a)till Govt says S

    என்று டிவிட்டரில் சிலரிடம் செய்தி அனுப்பி உள்ளேன். இது சரி என்றால் நீங்களும் இதை செய்யுங்கள். தவறாக இருந்தால் திருத்துங்கள்.
    நன்றி

    பதிலளிநீக்கு

  4. அன்பரே!நான், தம்பி கசாலி எழுதிய பதிவிற்கு இட்ட மறுமொழி யை இங்கும் அப்படியே இடுகிறேன்

    நண்பரே! அடக்கு முறை தொடங்கும் அறிகுறியின் ஆரம்பம்தான் இது! கடந்த ஓராண்டு காலமாக இதைத்தான் நான் சொல்லியும், நமக்கொரு பாதுகாப்பு வேண்டாமா என எழுதியும் வருகிறேன், நமக்கொரு சங்கம் தேவை!சில சட்டதிட்டங்கள் தேவை! நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளவும், நம்மைக் கட்டுப்படுத்த முனையும் அதிகார வர்கத்தின் அடக்குமுறையை எதிர்க்க, நாம் அனைவரும் ஒன்று பட்ட அமைப்பை உடனே உருவாக்கி பதிவு செய்ய வேண்டும்

    உங்களைப் போன்ற இளைஞர்கள் திரண்டு பதிவர் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தியதுபோல, இப்பணியையும் சூழ்நிலையின் அவசியம் கருதி ஆவன செய்ய நான் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்.

    வயதின் காரணமாக என்னால் முன்னின்று செய்ய இயலாது என்றாலும் பின்னின்று வேண்டிய உதவிகளைச் செய்யக் காத்திருக்கிறேன நன்றி!

    இக்கருத்தை தாங்களும் ஏற்று ஆவன செய்ய வேண்டுகிறேன் முன்பே சங்கம் உருவாக்கி பதிவு செய்திருந்தால் அதன் மூலம் வழக்கு தொடுத்திருக்கலாம்

    பதிலளிநீக்கு
  5. ஐயா,
    தங்கள் கருத்தோடு நான் உடன்படுகிறேன்.
    இதுபற்றி நாம் நாம் மேலும் உரையாடி சங்கத்தை ஏற்ப்படுத்துவோம்.
    முதலில் நாம் IT ACT sec 66A வில் மாற்றத்தை கொண்டு வர முயலுவோம்
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  6. உங்களுடன் இணைந்து செயல்படவும் என்னாலானதைச் செய்யவும் நானும் காத்திருக்கிறேன் நண்பா. அனைவரும் ஒருங்கிணைந்து பலத்தைக் காட்ட வேண்டிய வேளை இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக நண்பா.....ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் சிறையே.

      நீக்கு
  7. மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    தினபதிவு திரட்டி

    பதிலளிநீக்கு
  8. சங்கம் பற்றிய அடுத்தகட்ட முடிவெடுக்க நாம் கலந்து பேசலாம். சனிக்கிழமை இரு இடம் முடிவு பண்ணி அரும் பதிவர்கள் வைத்து ஆலோசனை நடத்தலாம். இராமாநுஜம் ஐயா, பாலகணேஷ் அண்ணன் & மதுமதி கூடி இடம் முடிவு பண்ணுங்க. என்னால் முடியும் அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன். பதிவுலக நண்பர்களும் இதற்கு உதவ ஆவலோடுதான் இருக்கிறார்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு

  9. தகவலுக்கு மிக்க நன்றி நண்பா.சனிக்கிழமை நிச்சயம் சந்திப்போம்.......இடத்தையும் நேரத்தையும் முடிவு செய்து தெரிவியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  10. சட்டப்படி அடக்குமுறையை எதிர்பதற்கு கண்டிப்பாக ஒரு அமைப்பு தேவை , அதன் மூலமே அனைவரையும் ஒன்று திரட்ட முடியும் என்பதில் மாற்று கருத்து எதுவும் இல்லை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...