வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வியாழன், 30 ஜூலை, 2015

கலாம் மற்றும் யாக்குபின் வாழ்க்கை நமக்கு சொல்வது என்ன?

இருவருமே பிறப்பால் இசுலாமியர்....
இருவருமே நன்கு கல்வி கற்றவர் ...
இருவருமே குரானை படித்தவர்கள் தான்....
கலாம் அனைத்து மக்களையும் நேசித்தார்....
யாக்குப் மக்களை கொன்றான் ...
கலாம் மதத்ததை கடந்தவர்...யாக்குப் மதத்தால் மரணித்தவன்
மதத்தை கடந்தால் மகானாகலாம் என்று கலாம் வாழ்க்கை சொல்கிறது
மதவெறி பழிவாங்கும் வெறி கொண்டு மக்களை கொன்றால் கொல்லப்படலாம் என்று யாக்குப் வாழ்க்கை சொல்கிறது

கலாமின் வாழ்க்கையும் யாக்குபின் வாழ்க்கையும் நிச்சயம் படிப்பினைதான்...இதை சரியாக புரிந்து கொண்டால் நீங்களும் மகானாகலாம் தவறாக புரிந்து தவறாக நடந்தால் கொல்லப்படலாம்.

கலாமின் மரணம் எனக்கு வருத்தத்தை தரவில்லை .....
அவர் கடைசி மூச்சு உள்ளவரை மக்களுக்காக உழைத்து கொண்டிருந்தார் என்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.வருத்தமும் கொஞ்சம் உண்டு...இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் உயிரோடு இருந்திருக்கலாமே என்று.

யாக்குபின் மரணம் எனக்கு சற்று வருத்தத்தை தந்தது இந்தியா நீதி தவறி விட்டதோ என்று...
--------------------------------------------------

கலாம் பற்றிய சில எதிர்மறை விமர்சனங்களை  படிக்க நேரிட்டது...அவை அர்த்தமற்றவை....அவர்களில் ஒரு சிலர் அடுத்த யாகூபாக கூட மாறலாம் எனபது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
அவர்களுக்கு அவர்கள் வழியிலேயே எனக்கு பதில் சொல்ல தெரியும். என்னுடைய கருத்துக்கள் பிற நல்ல இசுலாமியர்கள் மனதையும் புண்படுத்தும் என்பதால் என்னுடைய  எதிர்வாதத்தை இங்கு தவிர்க்கிறேன்.

 கலாம் கூடங்குளம் குழுவினரை சந்தித்து தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டிருக்கலாம். மற்றபடி அவர் கூடங்குளம்  விடயத்தில் தவறு செய்தார் என்பதற்கில்லை.

யாக்குப் பற்றி சில நேர்மறை விமர்சனங்களை படிக்க நேர்ந்தது...அவற்றில் பாதி அர்த்தமற்றவை....பாதி அர்த்தம் உள்ளவை.
யக்குப் நிரபராதி அல்ல ...அவர் விசாரணைக்கு ஒத்துழைத்தும் மரணதண்டனை அளித்தது என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

இனி ஒரு யாக்குப்  இந்த மண்ணில் பிறக்க கூடாது...யாரும் யாக்குபாக மாறக்கூடாது
இனி பல கலாம்கள் பிறக்க வேண்டும்...பலரும் கலாம்களாக மாற வேண்டும்
அதற்க்கு எல்லாம் வல்ல இறைவன்,கடவுள், இயற்கை துணை நிற்கட்டும்.

என்றும் மனிதத்துடன்
இராச.புரட்சிமணி 

வெள்ளி, 17 ஜூலை, 2015

பாகுபலி படம் மெய்யாலுமே நல்லா இருக்கா?

எல்லோரும் ஆகா ஓகோ என்றதால் இப்படத்திற்கு நேற்று சென்றேன். இல்லாவிட்டாலும் சென்று இருப்பேன் சில நாட்கள் கழித்து. படம் எப்படி இருக்கு என்றால் முதல் பாதியில் பாதி செம மொக்கை என்பேன்.  அதற்க்கு பிறகு கொஞ்சம் பரவாயில்லை. இரண்டாம் பாதி நன்றாகவே உள்ளது. மொத்தத்தில் பார்க்கலாம்.

படம் பார்க்காதவர்கள் இனி படிக்க விரும்பினால் படியுங்கள். 


படத்தின் முதல் காட்சியை இயக்குனர் இப்படி கோட்டை விடுவார் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. பிரம்மாண்டமான அருவி அருமை. சிவகாமி ஆற்றில் அடித்து செல்லப்படுகிறாளா  அல்லது நடக்கிறாளா என்று  தெரியாத மாதிரி ஒரு இயக்கம். ஏன் இப்படி? இந்த காட்சி மனதில் ஒரு படபடப்பை உருவாக்க வேண்டாமா? 

காப்பாற்ற  வருபவர் குழந்தையை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த பெண்ணை காப்பாற்ற முயலாலதும் நன்றாகவே இல்லை.

இருபத்து ஐந்து வரை மலையேறி ஏறி கீழே விழுகிறார் நாயகன். ஆனால் மிகப்பெரும் சிவலிங்கத்தை அசால்ட்டாக தூக்குகிறார். 
பிறந்த குழந்தையாய் இருக்கும் பொழுதே சிவகாமியின் விரலை பலமாக பிடிப்பதால் தான் பாகுபலி என்று பெயர் பெறுகிறார். அவரால் ஏன் இதற்க்கு முன் மலை ஏற முடியவில்லை என்பதற்கு எந்த காரணமும் கூறப்படவில்லை. 
மலை ஏறுவதற்கு உந்து சக்தியாக ஒரு பெண்ணை தேடி நாயகன் செல்வதாக காட்சி படுத்தியுள்ளார்கள்.  இப்படி சிலபல காட்சிகள் சிறுபிள்ளைத்தனமாக சினிமாத்தனமாக உள்ளது.

அடிமை கட்டப்பா இருபத்து ஐந்து ஆண்டுகள் தேவசேனாவை காப்பாற்ற முயலாமல் திடீரென் ஒருநாள் விடுவிக்க நினைப்பது எல்லாம் கதையோடு பொருந்தாதவை.

நாயகன் உடைத்து கொண்டு குதிரையில் வருவதும், வில்லன் நாயகனை காணும் பொழுது தீப்பிழம்பு ஏற்படுவதும், மரம் பற்றி எரியும் காட்சியும் இவரின் மகதீரா படத்தை நினைவு படுத்துகிறது.

பல்லனின் சிலை நிறுவும் காட்சியில் உயிர் இல்லாமல் கலைஞர்கள் ஆடுவதும் பாடுவதும் பிறகு பாகுகுபலியின்  பெயரை கேட்டதும் ஆடல் பாடல் களை கட்டுவதும் அருமை. இதை இன்னும் கொஞ்சம் கூட அமர்க்களப்படுத்தி இருக்கலாம்.

அவந்திகாவை நூற்றுக்கணக்கான எதிரிகளிடமிருந்து பனிமலையை சறுக்கி காப்பாற்றுவதும் பிறகு பாறையை ஓடாமாக பிளந்து சறுக்குவதும் கண் கொள்ளா காட்சி. இவ்வாறு சிலபல காட்சிகள் அருமை.

பாகுபலி போரில் கையாளும் உக்திகள்  அருமை. 
நடிப்பை பொருத்தவரை அனைவரும் அருமை. 

நான் படித்த  வரை அருவி காட்சி, படத்திற்கு அமைக்கப்பட்ட செட், போர்க்காட்சிகளை பற்றி பலரும் புகழ்ந்துள்ளனர்.
இவையாவும் அருமை என்றாலும் இதுவரை நாம் காணாதது என்றெல்லாம் கூற முடியாது.  


படத்தின் பலம் காட்சியமைப்புகளும் சண்டைக்காட்சிகளும்.
முதல் பாதி என்னடா இது என்ற முணுக வைத்தாலும் இரண்டாம் பாதி சற்று விறு விறுப்பாக செல்வதால் படம் தப்பிக்கின்றது. 

நடைமுறையில் சாத்தியமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் உலகத்தரம் என்று கொண்டாடி இருக்கலாம். 

திங்கள், 27 அக்டோபர், 2014

அம்மா பால் வருமா?

அம்மா உணவகம், குடிநீர், உப்பு, மருந்தகம்,சிமெண்ட் வரிசையில் அம்மா பால் வருமா என்பது என்னுடைய சந்தேகம்.வரவேண்டும் என்பதே பலரது விருப்பமாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

பால் கொள்முதல் விலையேற்றத்தினால் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். அதேநேரத்தில் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவார்கள். சில நேரங்களில் விலை ஏற்றம் என்பது தவிர்க்க இயலாதது. மேலும் இது காலத்தின் கட்டாயமாகவும் இருக்கின்றது.

கொள்முதல் விலையை ஐந்து ரூபாய்க்கு ஏற்றினால் அதே ஐந்து ரூபாய்க்கு பால் விலையையும் ஏற்றி இருக்க வேண்டும். பத்து ரூபாய் ஏற்றியது ஏன் என்று சிந்தித்தால்...ஊழியர்களின் சம்பளம், எரிபொருள்  மற்ற பிற செலவுகளை கணக்கில் கொண்டு உயர்த்தி இருப்பார்கள் என நினைக்கின்றேன்.

பால் என்பது குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் மிக மிக அத்தியாவசியமான உணவுப்பொருள். இதனால் சிரமப்பப்பட போவது நிச்சயமாக ஏழைகளே. ஏழைகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மட்டும் குறைந்த விலையில் பால் கிடைக்க அரசாங்கம் ஆவன செய்யவேண்டும். அம்மா பால் நிச்சயம் ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும். செய்யுமா அரசு? வருமா அம்மா பால்? அல்லது குறைந்த விலை ஆவின்பால்?

புதன், 8 அக்டோபர், 2014

கர்நாடக நீதிமன்றம் என்பதால் பிணை மறுக்கப்படலாம் என சுப்பிரமணியம் சுவாமி எதிர்பார்த்தது சரியா?

அம்மாவிற்கு பிணை கிடைக்காது என தான் எதிர்பார்த்ததாகவும் அதற்க்கு இரண்டு காரணங்களையும் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

முதல் காரணம்:

//லாலு பிரசாத் யாதவ், சுக்ராம், மதுகோடா, ஓம் பிரகாஷ் சவுதாலா போன்றவர்களின் ஊழல் வழக்கில், எலலாருக்கும் அவ்வளவு எளிதாக ஜாமின் கிடைத்து விடவில்லை. ஊழல் வழக்கை இப்படித்தான்,ரொம்பவும் சீரியஸாகவே கோர்ட் பார்க்கிறது.//

இரண்டாவது காரணம்

//கர்நாடகா உயர் நீதிமன்றமும், அங்கிருப்பவர்களும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருப்பவர்கள் என, பலரும் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். அதனால் தான், ஆரம்பத்தில் இருந்தே ஜெ., ஜாமின் அவ்வளவு எளிதல்ல என, நான் சொல்லி வந்தேன்//

முதல் காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் இரண்டாவது காரணம்?

//கர்நாடகா உயர் நீதிமன்றமும், அங்கிருப்பவர்களும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருப்பவர்கள்// என்று சுவாமி கூறுவதன் மூலம் அவர் இரண்டு செய்தியை மறைமுகமாக தருகிறார்.

ஒன்று. சில  நீதிமன்றங்கள் ஊழலுக்கு  எதிராக இல்லை.
இரண்டாவது: கர்நாடகா நீதிமன்றம் என்பதால்தான் அவருக்கு பிணை மறுக்கப்பட்டது...அல்லது மறுக்கப்படும் என்று அவர் எதிர்பார்த்தார்.


நீதிமன்றம் எங்கு இருந்தாலும் தீர்ப்பு ஒரேமாதிரியாக  வரும் என்றால்தான் நீதித்துறை ஒழுங்காக உள்ளது என அர்த்தம். மாநிலத்திற்கு மாநிலம் தீர்ப்பு வேறுபாடும் என்றால் அது சரியான நீதித்துறை அல்ல.

//கர்நாடகா உயர் நீதிமன்றமும், அங்கிருப்பவர்களும் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருப்பவர்கள்//  என சுப்பிரமணியம் கூறுகிறார்..."இதேபோல கர்நாடகா அரசாங்கமும் , அங்கிருப்பவர்களும் அம்மாவிற்கு  எதிரான நிலைப்பாட்டில் தீர்க்கமாக இருப்பவர்கள்" என்பதை அனைவரும் அறிவர்.

இது  சந்தேகத்தை அதிகப் படுத்துகிறதா அல்லது  இது சுவாமியின் தவறான பேச்சா  அல்லது இது என்னுடைய தவறான புரிதலா எனபதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

அம்மா செய்தது குற்றம் என்றே நானும் நினைக்கின்றேன்.இருப்பினும் தீர்ப்பில் சந்தேகம் உள்ளதை மறுப்பதற்கில்லை. அம்மாவே தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டாள் அவர் அரசியல்வாதிகளுக்கு ஒரு முன் மாதிரியாக திகழ்வார். ஒருவேளை குற்றம் செய்யவில்லை எனில் அதை நிரூபித்தே ஆகவேண்டிய கடமை அவருக்கு உண்டு.

திங்கள், 6 அக்டோபர், 2014

அம்மாவிற்கு இழைக்கப்பட்டது ஏன் அநீதி?


சிந்திக்க தெரிந்த எவரும் அம்மாவிற்கு  நடந்ததை  நீதி என்ற சொல்ல மாட்டார்கள். ஆனால் நம் நாட்டில் மக்கள் சரியாக  சிந்திப்பதே இல்லையே என்ன செய்ய?

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் பகை இருக்கின்றது என்பதை இங்கே பலரும் அறிவர். அப்படி இருக்க வழக்கை  எப்படி அங்கு மாற்றலாம்? இந்த வழக்கை கர்நாடகத்திற்கு மாற்றியது மிகப்பெரும் அநீதி. இரு மாநிலகளுக்குள் பிரச்சனை இருக்கும் பொழுது தொடர்ந்து அங்கேயே வழக்கை நடத்தியது போல முட்டாள்தனம் ஏதுமில்லை.

இந்திய அரசியல்வாதிகளின் வழக்கை பாக்கிஸ்தான் நீதிமன்றம் விசாரிக்கலாமா? அப்படி விசாரிக்கும் பட்சத்தில் நீதியை எதிர்ப்பார்க்க முடியுமா? அம்மாவிற்கு நடந்ததும் இதுவே. நீதி வென்றது என்பதெல்லாம்  சுத்த அபத்தம்.
---------------------------------------------------------------------
அம்மா செய்தது தவறு என்றுதான் மக்கள் அவரை 96 தேர்தலில் தண்டித்தார்கள்.
எனவே அம்மா தவறு செய்யவில்லை என்று  நான்  வாதிடவில்லை. அதேநேரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது என்று ஏற்பதற்கும் இல்லை.
--------------------------------------------------
நீதிபதி குன்கா அவருக்கு எப்படி தண்டனையை அதிகப்படுத்தலாம் என்றுதான் சிந்தித்துள்ளாரே தவிர, தண்டனையை எப்படி குறைக்கலாம் என்று சிந்திக்கவே  இல்லை. நீதிபதியானவர் நீதி வழங்கும்பொழுது தண்டனையை அதிகரிப்பதற்க்கான காரணிகளையும், குறைப்பதற்கான காரணிகளையும் அலசி ஆராய்ந்து நீதி வழங்க வேண்டும். ஆனால் குன்காவின் நீதித் தராசு ஒருபக்கம்  சாய்ந்துள்ளது.
-----
தண்டனை கொடுப்பதின் முக்கிய நோக்கம் குற்றவாளியை திருத்துவதுதான், பழிவாங்குவதல்ல.
96இல் மக்கள் கொடுத்த தண்டனைக்கு பிறகு தன்னை திருத்திக்கொண்டு நல்லாட்சி புரிகிறார். எனவே திருந்திய ஒருவருக்கு அதீத தண்டனை தேவையற்றது. முதலமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவே தெரிகிறது.


அம்மா திருந்தி நல்லாட்சி புரிவதையும், அவரது வயதையும், உடல்நிலையை யும் கருத்தில் கொண்டு அவருக்கு குறைந்தபட்ச தண்டனை  வழங்கவேண்டும். அந்த தண்டனையும் அவரது நல்லாட்சியை பாதிக்காதவாறு இருக்கவேண்டும். இதுவே நேர்மையான தீர்ப்பாக இருக்க முடியும். மாற்று கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

இதுபற்றி நான் ஆங்கிலத்தில் எழுதியது கீழே:

Is Cunhas verdict to Jaya legally wrong?

In any case a judge hast to see two things before awarding punishment.
One is aggravating circumstances/factors and another one is mitigating circumstances or factors.Aggravating circumstances/factors gives reason for severe punishment. Mitigating circumstances or factors gives reason for leniency or why punishment to be reduced.
The judgment by Cunha clearly shows he has given more importance to aggravating factors and null importance to mitigating circumstances/factors.
According to Cunha the following are Aggravating factors:
1*  Corruption is a serious crime
2*     The manner in which assets accumulated ( According to sinha “these firms were constituted only to siphon off the unlawful resources accumulated by A-1” (A-1:Jayalalitha)
3*     A-1 is occupying a high position in the Government of State of Tamil Nadu.
By considering Serving CM is an aggravating factor Judge Cunha gives us reason to think that “Nobody is equal in front of Law” and not “All are equal before the eyes of law”.
Why no mitigating factors considered?

Good Conduct:
In this Judgement Cunha rejected an important mitigating factor. He says “The good conduct of the accused also may not be a circumstance mitigating the gravity of the offence".  All over the world good conduct of accused is considered as a mitigating factor in all the cases. Even in this case her good conduct should have been considered by Cunha as a mitigating factor. The very purpose of punishment is to reform the accused. In this case Jayalalitha has already reformed herself.  She did not do anything bad after 1996 and her conduct is good. She was also administrating well and brought several schemes for the well being of the poor.
When occupying high position in government can be considered as an aggravating factor, why good conduct while occupying high position in government cannot be considered as a mitigating factor?

Age:  
Age is another mitigating factor considered before awarding sentence. In this case Cunha failed to consider Jayalalitha’s age which is 66 now.
One of the reason why Cunha did not consider mitigating factors is he and current judges thinks corruption is a serious crime. Corruption is a serious crime no doubt about that. But this should not be a sole reason to avoid mitigating factors in providing verdict.
Keeping in mind Jayalalitha’s good conduct, age, welfare schemes she brought to the well being of the poor Judges should show leniency towards her.

I would like to reiterate again that the purpose of sentence/punishment is to reform the person. In this case Jayalalitha has already reformed herself and shows good conduct for the past 18 years. Given all these factors in mind Judges should reduce her punishment in a way which will not affect her political career and people of the state,who democratically elected her as CM. .
http://puratchimani.blogspot.in/2014/10/is-cunhas-verdict-to-jaya-is-legally.html

வியாழன், 11 செப்டம்பர், 2014

திருமந்திர விநாயகர் காப்பை ஆறு சமயங்களை ஏற்ப்பதில் என்ன குழப்பம்?


சென்ற பதிவில் திருமந்திரத்தில் ஆறு சமயம் என்ற வரிகள் விநாயகரின் சமயத்தை உள்ளடக்கியது என்று எழுதி இருந்தேன். நண்பர் கோடாங்கி அது தவறானது  திருமந்திரம் கூறும் ஆறு சமயங்கள்  சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம், பூர்வ மீமாம்சம், வேதாந்தம் என்று கூறி உள்ளார்.

திருமந்திரம் கூறும் ஆறு சமயங்கள் எவை?
நண்பர் கூறுவது போல சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம், பூர்வ மீமாம்சம், வேதாந்தம் தான் திருமந்திரம் ஆறு சமயங்களா என்றால் அதற்க்கு என்னுடைய பதில் இல்லை என்பதே.

திருமூலர் உட்சமயம் என்பதில் ஆறு சமயங்களும் புறச்சமயம் என்பதில் ஆறு சமயங்களும் கூறுகிறார். நண்பர் கூறும் ஆறு சமயங்கள் புற சமயங்களில் சிலவாக இருக்கலாம்.

 சரி அந்த ஆறு புற சமயங்கள் எவை என்று கேள்வி எழுகிறது. 

வைணவம், சமணம், பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம், உலகாயதம், சூனியவாதம் என்று ஒரு உரையாசிரியர் கூறுகிறார்.  இல்லை பைரவம், சமணம், பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம், உலகாயதம், சூனிய வாதம் அந்த ஆறு சமயங்கள் என்போரும் உளர்.

எனக்கு இவர்கள் கூறியதோடு உடன்பாடு இல்லை.இவைகள் முழுமையான உண்மை இல்லை.
ஏன் எனில் பைரவம் என்பதும் ஒரு வகையில் சிவ வழிபாடே. 

மேலும் வைணவம்,பாஞ்சராத்திரம் சமயங்களும் புறச்சமயங்கள் ஆகா என்றே நினைக்கின்றேன்.என்னைப்பொருத்த வரை சமணம், பௌத்தம் மற்றும் சில சமயங்களை புறச்சமயங்களாக திருமூலர் கூறி இருக்க  வேண்டும். அவை எவை என்பதை மேலும் தேடினால் தான் கண்டறிய முடியும்.

----------------------------------------------------------------------------------------------
திருமந்திரம் கூறும் உட்சமயங்கள் அல்லது அகச் சமயங்கள் எவை?

திருமந்திரம் கூறும் உட்சமயங்களாக  சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம், பூர்வ மீமாம்சம், வேதாந்தம் ஆகியவை இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. 

திருமூலர் உட்சமயம் என்ற அத்தியாயத்தில் ஆறு   சமயங்களை பற்றி கூறுகிறார். இச்சமயங்களை ஒன்றோடொன்று தொடர்புடைய சமயங்களாக, சிவனோடு தொடர்புடைய சமயங்களாக  கூறுகிறார். இவற்றை அவர் அங்கீகரித்து உட்சமயம் என்கிறார்.  

"இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட
அமையம் குழல் கின்ற ஆதி பிரானே"

மேலும் இந்த ஆறு  சமயங்களும்  ஒரே ஊருக்குத்தான் வழி காட்டுகிறது எனவே இந்த ஆறு சம்யங்களுக்குள் இது நல்லது இது  கெட்டது என்று சண்டை வேண்டாம் அவ்வாறு சண்டை இடுவது  நாய் குரைப்பதற்கு சமம்   என்று பின்வரும் பாட்டில் கூறுகிறார்.

ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள
என்றது போல இரு முச் சமயமும்
நன்று இது தீது இது என்று உரையாளர்கள்
குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே.

இதன் மூலம் ஆறு உட்சம்யங்களுக்குள் பூசல் இருந்ததை அறிய முடிகிறது. சாங்கியம், யோகம், நியாயம், வைசேசிகம், பூர்வ மீமாம்சம், வேதாந்தம் ஆகிய சம்யங்களுக்குள் பூசல்  இருந்ததா என தெரியவில்லை.  

மேலும் இவைகள் சமயங்கள் தானா என்ற சந்தேகமும் எனக்கு  எழுகிறது. இவையாவும் தத்துவங்களாக தெரிகிறதே தவிர சமயங்களாக அல்ல. சமயம் என்றால் ஒருவரை வணங்குவார்கள், அவர்களுக்கு கோயில் இருக்கும். யோகத்தை தந்த பதஞ்சலியை இன்றளவும் வணங்கும் வழக்கம் உண்டு. ஆனால் பிற தத்துவங்களை தந்தவர்களை வணங்கும் பழக்கம் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. மேலும் இவைகளை பெரும்பாலான மக்கள் சமயங்களாக பின்பற்றியதாகவும் தெரியவில்லை.


"இமையங்களாய் நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர்"

என்று திருமூலர் கூறுகிறார். இந்த ஆறு தேவர்கள் மேற்கூறிய தத்துவத்தை தந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அதற்க்கு வாய்ப்பு மிக குறைவாக உள்ளது. முற்றிலும் மறுப்பதற்கில்லை.

இந்த தேவர்கள் என்போர் ருத்ரன்,திருமால்,முருகன், கணபதி,சக்தி, ஐயப்பனாக  இருக்கவே வாய்ப்புகள் உண்டு. ஏன் எனில் இவர்களை வணங்கும் சமயங்கள் சிவனை ஏற்றுக்கொள்கின்றன. இவர்கள் சிவனோடு தொடர்புடையவர்கள்.இவர்களை வணங்குபவர்கள் முன்பு இவர் தான் பெரியவர் அவர் தான் பெரியவர் என்று சண்டையிட்டதுமுண்டு.


திருமந்திரம் கூறும் ஆறு அகச்சமயங்கள்
பாசுபதம், மாவிரதம், வைரவம்,சாத்தம். காணாபதீயம், கௌமாரம் என்று சிலரும் 

சைவம், வைணவம், சாத்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்` என்று சிலரும்

வைணவம், சாத்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்,சௌமியம் என்று சிலரும் கூறுகின்றனர். 

ஆதிப் பிரான் உலகு ஏழும் அளந்தவன்
ஓதக் கடலும் உயிர்களும் ஆய் நிற்கும்
பேதிப்பு இலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக் கண் தெய்வமும் அந்தமும் ஆமே.

என்ற உட்சமய  பாடலின் மூலம் ஹரியையும், சக்தியையும் அங்கீகரிக்கிறார் என்பது புரியும். இதன் மூலம் வைணவமும், சாக்தமும் நிச்சயமாக உட்சமயங்கள் என்ற முடிவிற்கு வரலாம்.

இவற்றோடு தொடர்புடைய பிற சமயங்கள் எவை எனும் பொழுதுதான் கௌமாரம்- கந்தன், காணாபத்தியம்-கணபதி, சௌரம்- சூரியன், சௌமியம்- ஐயப்பன்  என்பவைகளாக இருக்க கூடும் என்ற முடிவிற்கு வரமுடிகிறது.
-----------------------------------------------------------------------------------------------------
சரி விநாயகரை வணங்கும் பழக்கம் தமிழகத்தில் திருமந்திர காலத்தில் இருந்ததா என்றால் இல்லை என்பதற்கு வலுவான கரணங்கள் இல்லை.   ஆறு சமயங்களில் விநாயகருடையதும்  நிச்சயமாக ஒன்றா என்றால் வாய்புகள் நிறைய உண்டு.இருக்கு என்பதற்கு நான் ஆறு சமயங்களை உதாரணமாக காட்டியுள்ளேன்.

மேலும் திருமந்திரமானது 

விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.

என்ற பாடலை முதலில் கொண்டு துவங்குகிறது. சிலர் இப்பாடலை இடைச்சொருகல் எனலாம். இடைச்சொருகல் என்பதற்கு தகுந்த ஆதாரம் என்ன?


திருமந்திர காலத்தில் விநாயகர் வழிபாடு தமிழத்தில் இருக்கவில்லை என்று கூறுவோர்கள் 

1. விநாயகர் காப்பு இடைச்சொருகல் என்று நிரூபிக்க வேண்டும்.
2. ஆறு சமயங்களுள் விநாயகர் இல்லை என்றும் நிரூபிக்க வேண்டும். செய்வார்களா?

இது இரண்டிற்கும் விடை கிடைக்காதவரை திருமந்திர காலத்தில் விநாயகர் வழிபாடு இருந்தது என்று கூறி இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

மாற்றுக்கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.
-----------------------------------------------------

கொசுறு1:அகத்தியர் தன்னுடைய "அகத்திய வாத சௌமியம்" என்ற நூலில் கணபதியை பற்றி குறிப்பிடுகிறார்.இவர் எக்கால அகத்தியர் என்று அறிய வேண்டும்.

கொசுறு2:சேயோன்-முருகன், மாயோன்-திருமால் என்ற தமிழ் பெயர்களை ஒரு பெருத்த சந்தேகத்தினால்  ஆறு சமயங்களோடு வேண்டும் என்றே நான் இணைக்கவில்லை.   

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

விநாயகர் பற்றி திருமந்திரத்தில் உள்ளது ஆதாரம் வேண்டுமா?


சில நாட்களாக   சில பதிவர்கள் விநாயகர் பற்றி சங்க இலக்கியங்களில் இல்லை அதனால் அவர் தமிழர்களின் கடவுள் அல்ல என்று கூறினர். சங்க இலக்கியங்களில் விநாயகர் இருக்கிறா இல்லையா என்பது எனக்கும் தெரியாது.

அந்த பதிவர்கள்  திருமந்திரத்தில்  விநாயகர் பற்றி எந்த குறிப்பும் இல்லை என்றனர். திருமந்திரத்தின் காலம் சர்ச்சைக்குரியது. ஆனால் அதில் விநாயகர் பற்றி எந்த குறிப்பும் இல்லை என்பது அவர்களின் அறியாமை எனலாம். எல்லோரும் எல்லாமும் கற்க இயலாது. கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு. அதனால் நான்  அவர்களை குறை கூறவில்லை. தவறான செய்தி நிலைநிறுத்தப்படக் கூடாது. வாய்மையே வெல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.

சரி திருமந்திரத்தில் விநாயகர் பற்றி எங்கே உள்ளது?
உண்மையில் விநாயகர் பற்றி திருமந்திரத்தில் பாடல்கள் உண்டா இல்லையா என்பது எனக்கும் தெரியாது :)

பின்பு ஏன் இந்த பதிவு எனலாம்...சற்று பொறுங்கள்...


விநாயகர் பற்றி நேரடியாக  திருமந்திரத்தில் உள்ளதா இல்லையா என்பது எனக்கும் தெரியாது.
ஆனால் விநாயகரின் சமயம் பற்றி திருமந்திரம் கூறுகிறது என்றே நான் நினைக்கின்றேன்.

சில  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆறு  முக்கிய சமயங்கள் இந்தியாவில் இருந்ததாக செய்திகள் உள்ளன. திருமந்திரப் பாடல்கள் சில இந்த ஆறு சமயங்களை தொட்டு செல்கிறது.அந்த ஆறு சமயங்களில் ஒன்று விநயாகரை அல்லது கணபதியை  தெய்வமாக கொண்ட காணபத்தியம் என்பர்.

பின்வரும் பாடல் வரிகளை காண்க

"சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட"
"ஆம் ஆறு உரைக்கும் அறு சமய ஆதிக்குப்"

என்ற இப்பாடல்கள் மூலம்......திருமந்திர காலத்திற்கு முன்பு ஆறு முக்கிய சமயங்கள்இருந்துள்ளது என்பது தெரியவருகிறது. ஆறு சமயங்களில் ஒன்று  விநயாகரை வணங்கும்  சமயம் என்று பிற நூல்கள் மூலம் தெரியவருகிறது. எனவே விநயாகரை வணங்கும் வழக்கம் திருமந்திர காலத்திற்கு முன்பே தமிழகத்தில் இருந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்பர் என்றே நம்புகிறேன். மாற்று கருத்து  உள்ளவர்கள் தெரிவிக்கவும்.


விநாயகர் சங்க இலக்கியங்களில் இருக்கலாம் அது நமக்கு தெரியாமால் இருக்கலாம். விநாயகர் சங்க இலக்கியங்களில் இல்லை  என்பதால் அவர் தமிழர் கடவுள் இல்லை என்று ஏளனம் செய்ய வேண்டாம்.

இந்திரன் பற்றி சங்க காலத்து சிலப்பதிகாரத்தில்  உண்டு என்பதால் அவரை தமிழர்  கடவுள் என்று இவர்கள் ஏற்ப்பார்களா என எனக்கு தெரியவில்லை.


என்னைப்பொருத்த வரை உலகில் யார் எந்த கடவுளை வணங்கினாலும் அவர்களது உரிமையை மதிக்க வேண்டும்.ஏளனம் செய்யக்கூடாது. தமிழர் கடவுள் எனபதற்கு எந்த ஒரு இலக்கணமும் இல்லை."தமிழர்  வணங்கும் எந்த கடவுளும் தமிழர் கடவுளே" என்று நாம்   இலக்கணம்  வகுத்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். இவ்விலக்கனத்தின் படி ஏசுவும் அல்லாவும் கூட தமிழர் கடவுள்களே.


தமிழ் வளர்த்ததால் முருகனை தமிழ் கடவுள் என்கிறோம் தவறில்லை. (சிவனும் தமிழ் வளர்த்ததாக கூறுகின்றனர்.)

தமிழ் கடவுள் வேறு தமிழர் கடவுள் வேறு இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

புதன், 13 ஆகஸ்ட், 2014

ஜிகர்தண்டா செம தண்டம்?

 நான் ஒரு சாதாரண ரசிகன். படங்களுக்கு நான் செல்ல இரண்டு  காரணங்கள். ஒன்று பொழுது போக்கு, இரண்டாவது ஏதாவது கற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில். நான் திரைப்படங்களை இந்த இரண்டு அளவுகோலின்படிதான் மதிப்பீடு செய்வேன். கூடவே சமுதாய அக்கறையும் சேர்ந்துகொள்ளும்.

படம் ஆரம்பித்த கொஞ்ச  நேரத்தில்  படம் மரண மொக்கையாக இருக்குமோ என்று தோன்றியது. ஆங்காங்கே நகைச்சுவையோடும், மிரட்டலோடும், திருப்பங்களோடும் படம் செல்கிறது.ஒரு சில இடங்களில் நிச்சயமாக அட! போட  வைத்துள்ளார். படம் இடையில் கொஞ்சம் என்னடா இது :( என்றும் சொல்ல வைக்கிறது. இறுதியில்  சுபமாக முடிகிறது.

ஜிகர்தண்டா  ஒரு நல்ல பொழுதுபோக்கு படமா என்றால் சுமார் என்றுதான் சொல்வேன்.
ஜிகர்தண்டா  ஒரு வித்திய்சாமான முயற்சியா என்றால் எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை.

சித்தார்த்- தவிர்த்திருக்க வேண்டிய படம்.
பாபி சிம்மா - இயக்குனருக்கு நிச்சயம் கடமைப்பட்டுள்ளார். இப்படத்தின் நாயகன் இவர்தான். இவரை திரையில் பார்த்த உடன் சிரிப்பு தான் வந்தது. இறுதியிலும் அவ்வாறே முடிந்தது.

விஜய் சேதுபதி - இந்த படத்தின் நடுவே ஏன் இவரை காட்டுகிறார் கள்  என்று புரியவில்லை. விளம்பரங்களிலும் இவருக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? என்ன அரசியலோ...ஏற்றுகொள்ளும்படி இல்லை.

 கார்த்திக் சுப்புராஜ் - இப்படத்தின் இயக்குனர். பிட்சா என்ற  படத்தை தந்தவர். இப்படத்திலும் பிட்சா போலவே  சில திருப்பங்கள் ரசிக்கும்படியாக உள்ளது.

ஜிகர்தண்டா  - கொஞ்சம் சுவை, கொஞ்சம் சலிப்பு.  

சனி, 26 ஜூலை, 2014

வேலையில்லா பட்டதாரியா? பொறுக்கியா?


திரையுலகில் பொறுக்கித்தனம் இன்று நாயகத்தனமாக(heroism) பார்க்கப்படுகிறது. திரையுலகம் நடைமுறையின் பிரதிபலிப்பா  அல்லது  நடைமுறை திரையுலகை பிரதிபலிக்கிறதா என்று சிந்தித்தால்  இரண்டுமே நடக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும். 

இருப்பினும் ஆங்காங்கே நடக்கும் சில தீயசெயல்களை நாயகத்தனமாக காட்டும்பொழுது அது பெரும்பாலான மக்களின் மனதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்ப்பபடுத்துகிறது . திரைப்படங்கள் வெறும் பொழுது போக்காகவோ, நேர்மறை எண்ணங்களை விதைப்பதாகவோ இருந்தால் பரவாயில்லை ஆனால் இன்று  சிலபல திரைப்படங்கள் எதிர்மறை எண்ணங்களை விதைப்பதாகவே உள்ளது. பொறிக்கத்தனம் செய்பவன் நாயகனாகவும் அவனின் பொறிக்கத்தனங்கள் நாயகத்தனமாகவும் மக்களுக்கு காண்பிக்கப்படுகிறது, கற்ப்பிக்கப்படுகிறது. இது நமது சமுதாயத்திற்கு நல்லதல்ல. 


திரைப்படங்கள் பல காலாமக மக்கள் மனதில் விடத்தை விதைத்து வருகிறது. நல்ல படங்கலே வரவில்லை என்று நான் கூறவில்லை.சிலபல படங்கள் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் பல படங்கள் தீயசெயல்களை நற்செயல்போல மக்கள் மனதில் விதைத்து விடுகிறது. 

ஒரு படத்தில் நாயகன் பள்ளிக்கு செல்லும்  பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறான். 

ஒரு படத்தில் நாயகன் பள்ளிக்கு செல்லும் பெண்ணிற்கு திருமணம் செய்யும் பொழுது அதை தடுத்து நிறுத்துகிறான். நல்ல விடயம். பிறகு அவனே அந்த பெண்ணை காதலிக்கிறான். பள்ளிக்கு செல்லும் பெண்ணுக்கு  கல்யாணம் பண்ணகூடாது ஆனா காதல் என்ற பெயரில் அங்கங்கே அழைத்து சென்று கசமுசா செய்யலாம் என்று கூறுகிறார்களோ?

ஒரு படத்தில் நாயகன் பேருந்தில் பெண்களை உரசி உல்லாசம் கொள்கிறான்.
ஒரு படத்தில் நாயகர்கள் கடைத்தெருக்களில் பெண்களை உரசி உல்லாசம் கொள்கின்றனர்.

 பல படங்களில் இளைங்கர்கள் புகைபிடிப்பதாகவும், மது அருந்துவதாகவும், பெண்கள் பின்னே சுற்றுவதாகவும் காண்பிக்கப்படுகிறது.

இவ்வாறு ஒரு சில இளைங்கர்கள் இருக்கலாம் மறுக்கவில்லை. ஆனால் இவற்றை  நாயகத்தனமாக காட்டும்பொழுது பல இளைங்கர்களும் இவ்வாறன செயல்கள் சரி என்று எண்ணி இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவார்கள்...ஈடுபடுகின்றனர் என்பதுதான் உண்மை.

பல துறைகளில் பல ஒழுக்ககேடுகள்  உள்ளன. அவ்வாறுதான் திரைத்துறையிலும் சில ஒழுக்ககேடுகள் இருக்கின்றது..இருக்கலாம்...இதை நம்மால் என்ன செய்ய இயலும்? இருப்பினும் சமுதாய அக்கறையோடு இருக்க வேண்டும் என்று குரல் எழுப்ப முடியும். அதைத்தான் இங்கே  செய்கிறேன். 

வேலையில்லா பட்டதாரி படத்திற்கு எதிர்பார்ப்புடன் சென்றேன். இளைங்கர்களுக்கு நல்ல கருத்தை முன்மொழிவார்கள் என்று எண்ணினேன். பெருத்த ஏமாற்றாம்.

இப்படத்தில் வேலையில்லா பட்டதாரி நாயகன் என்ன செய்கிறான்..... 
வீட்டிலே புகை பிடிக்கிறான் 
வீட்டிலே மொட்டை மாடியில் மது அருந்துகிறான் 
அடுத்த வீட்டு பெண்ணின் படுக்கைஅறைய பார்க்கிறான் 
தனது தம்பியை தெரியாமல் தாக்குவதுபோல வேண்டும் என்றே தாக்குகிறான்..வேண்டும் என்றே மதுவை கலந்து கொடுக்கிறான்  
இப்படத்தை பார்க்கும்  இளைங்கர்களுக்கு இவர்கள் இதைத்தான் கற்றுக்கொடுக்க விரும்புகிறார்களா?
அல்லது இப்படித்தான் இன்றைய வேலையில்லா பட்டதாரிகள் உள்ளனரா?

வேலையில்லா பட்டதாரிக்கு அவன் தாய் இறந்ததால் தான் வேலை கிடைக்கிறது....அவன் திறமையால் அல்ல.

இப்படத்தில் நாயகனின் இரண்டு பண்புகளை நான் வரவேற்கிறேன்.
ஒன்று....சட்டத்துக்கு புறம்பாக மேல்தளங்களை வடிவமைக்கும்படி வேலை தருபவர் கேட்டாலும்  வேலை  கிடைக்காவிட்டாளும்  சட்டத்துக்கு புறம்பாக நடக்க கூடாது என்று இருக்கும் பண்பு

 இரண்டு...தன் தாயின் உறுப்பை தானம் பெற்ற பெண்ணை தாய் போன்றே எண்ணும் பண்பு
இன்னும் ஒன்று இரண்டு நல்ல பண்புகளை கூட சொல்லலாம். ஆனால் படத்தில் நாயகனின் பல தீய பண்புகளே ஆங்காங்கே தெரிகிறது.

எங்க அம்மா புகை பிடிக்க கூடாது என்று சொல்லி கண்ணீர் விடும் நாயகன்....திருந்தாம  தொடர்ந்து புகைபிடிக்கிறார்.

நாயகனுக்கு வேலை கிடைத்த பிறகு வேலையில்லா  பட்டதாரி என்று பாட்டு வேற ...வேலை கிடைத்த பிறகு எப்படிடா அவன் வேலையில்லா பட்டதாரி?

படத்தின் இறுதியில் இது வேலையில்லா பட்டதாரிகளுக்கு சமர்ப்பணம் என்று போடுகிறார்கள். வேலையில்லா பட்டதாரிகளே  எங்களை மன்னியுங்கள் என்றுதான் போட்டிருக்க வேண்டும். ஏன் இனில் வேலையில்லா பட்டதாரிகளை இதற்க்கு மேல் அசிங்கப்படுத்த முடியாது.

இப்படத்திற்கு எந்த ஒரு தலைப்பு வைத்திருந்தாலும் பத்தோடு பதினொன்று அதோடு இது ஒன்று என்று விட்டிருக்கலாம்.  வேலையில்லா பட்டதாரி என்று பெயர் வைத்ததால்தான் இந்த விமர்சனம்.

திரைத்துறையினர்  கொஞ்சமாவது சமூக அக்கறையுடன் படம் எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.பொறுக்கித்தனத்தை நாயகத்தனமாக  காட்டுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.

புதன், 11 ஜூன், 2014

அம்மா உப்பில் உப்புக்கு சப்பான் கூட தமிழ் இல்லையா?

தமிழக அரசே தமிழை புறக்கணித்துவிட்டு தமிழன்னைக்கு கோயில் கட்டுவதால் என்ன பயன்?

தமிழகத்தில் விற்கும் பொருட்களில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பெயர் இருந்தாலும் உப்புக்கு சப்பானுக்கு தமிழிலும் பெயர் எழுதுவார்கள். ஆனால் அம்மா உப்பில் உப்புக்கு சப்பான் கூட தமிழ் இருக்கின்றதா என தெரியவில்லை.

அரசு வெளியுட்டுள்ள விளம்பரத்தில் உப்பு பொட்டலங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் தெரிகிறது. ஒருவேளை மறுபுறம் தமிழ் இருக்கின்றதா என தெரியவில்லை. அப்படி தமிழில் பெயர் இருப்பின் அதை முன்னிருத்திதான் புகைப்படங்களை வெளியிடவேண்டுமே தவிர ஆங்கிலத்தை முன்னிறுத்தி அல்ல. தமிழை தமிழக அரசே புறக்கணிப்பதை எக்காலும் ஏற்க்க இயலாது. அரசு இத்தவறை உடனே  சரி செய்து கொள்ளவேண்டும்.

அம்மாவின் மலிவு விலை திட்டங்கள் மக்களுக்கு பயனளித்தாலும் தனியார் நிறுவனங்களே  மலிவு விலையில் தரமான பொருட்கள் தரும்படி ஊக்கமும் உறுதுணையும் அளித்தால் தொழில் வளம் பெருகும், மக்களும் பயன் பெறுவர். மலிவு விலை  திட்டங்கள் மூலமும் அரசு இலாபம் ஈட்டினால் அது அருமை. இருப்பினும் அம்மா உப்பு மக்களுக்கு பயன்  தருமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...