வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

விஸ்வரூபம் சரி குரானில் திருத்தம் தேவையா? இல்லையா?

விசுவரூபம் படத்திற்கு தடை கோரும், துப்பாக்கி படத்தில் திருத்தம் கேட்ட எனதருமை இசுலாமிய சகோதரர்களே,
ஒரு திரைப்படம்  இசுலாமியர்கள் பற்றி மக்கள் மனதில் தவறான பாதிப்பை ஏற்ப்படுத்தும்,இசுலாமியர்களுக்கும் பிற மக்களுக்கும் பிரச்சனையை   உண்டாக்கும் என்று தடை  கோருகிறீர்களே   உங்கள் நல்லெண்ணத்தை நான் பாராட்டுகிறேன்.
ஆனால் நீங்கள் இறைநூலாக கருதும் குரானிலே பிற மத மக்களை பற்றி தவறான கருத்துக்கள் உள்ளதே. இது பற்றி என்றேனும் நீங்கள் கவலைப்பட்டதுண்டா? இந்த வசனங்களை நீங்கள் படித்ததே இல்லையா?இதில் திருத்தம் வேண்டும் என்று நீங்கள் கேட்டதுண்டா?
உங்களில் சிலர் இது பற்றி படிக்காமல் இருந்திருக்கலாம் அவர்களுக்காக சில வசனங்கள்.

5:82நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.

இந்த வசனத்தில் தெள்ளத்தெளிவாக  யூதர்களையும், இணைவைப்பவர்களையும் அதாவது இந்துக்களையும் பகைவராக பார்க்கும்படி குரான் கூறுகிறது. இது எந்த விதத்தில் நியாயம்? இதை நீங்கள் வரவேற்கிறீர்களா?

அல்லாவை வணங்குபவர்களை எதிரிகளாக பாருங்கள் என்று ஒரு நூலில் எழுதி இருந்தால் நீங்கள் சும்மா விட்டு விடுவீர்களா? பொழுதுபோக்கான திரைப்படத்தில் கூட உங்களை அவமதிக்கும் காட்சிகள் இருக்க கூடாது என்கிறீர்களே  ஆனால் இறைவேதம்  எனப்படும் குரானில் இப்படிப்பட்ட வசனங்கள்  இருக்கலாமா? சிந்தியுங்கள் எனதருமை சகோதரர்களே. 

மேற்கூறிய வசனத்தில் கிருத்துவர்கள் பற்றி நல்லபடியாக இருந்தாலும் பின்வரும் வசனம் அவர்களையும் நம்பவேண்டாம் என்கிறது அதையும் பாருங்கள்.

5:51முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

இதில் யூதர்களும் கிருத்துவர்களும் அநியாயக்காரர்கள் என்கிறது குரான். 

இப்படிப்பட்ட வசனங்களை  படிக்கும் ஒரு முஸ்லிம் மனதில் யூதர்களும்,கிருத்துவர்களும்,இந்துக்களும் முஸ்லிம்களுக்கு பகைவர்கள் என்ற எண்ணம் வருமா?  வராதா? சொல்லுங்கள் சகோதரர்களே.


கற்களை வணங்குபவர்கள்-இந்துக்கள்  சாத்தான்களின் நண்பர்களா?
சகோதரர்கள் நீங்கள் அல்லாவை வணங்குகிறீர்கள் அது உங்கள் விருப்பம். ஆனால் கற்களை வணங்குபவர்களை  சாத்தானின் நண்பர்கள் என்று கூறுவது எந்த விதத்தில் சரி?
அப்படிக்கூறும் இறைவேதம்  குரானின் வசனங்களை படியுங்கள்:
5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
4:76. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில்போர் செய்கிறார்கள்; ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.

சாத்தான்கள் என்று மட்டும் சொல்லவில்லை அவர்களுக்கு  எதிராக போர் புரியுங்கள் என்று வேறு இந்த வசனம்  கூறுகிறது. இதைபடிக்கும் முஸ்லிம் மக்கள் மனதில் இந்துக்களை பற்றி தவறான எண்ணமும் இந்துக்களுக்கு  எதிராக போர் புரியவேண்டும் என்ற எண்ணமும் வருமா? வராதா?  என்று நீங்களே சொல்லுங்கள்  சதோதரர்களே. 

போர் கொலை இது பற்றி கூறும் வசனங்கள்:
ஒரு இறைவேதத்தில்  ஏன் கொலைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என எனக்கு புரியவில்லை.

5:33அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.

9:5(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.


9:29வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

மேலே உள்ள வசனங்கள் அல்லாவை நம்பாதவர்களை கொல்ல சொல்கிறது என்றால் கீழே உள்ள வசனம் உங்கள் உயிர்களையும் கொடுக்க சொல்கிறது.


9:41நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.


முகமது நபி ஏதோதோ சொல்லி போர் புரிய சொன்னாலும் சிலர் மறுக்கின்றனர்.  எனவே அவர்களுக்கு நரக நெருப்புதான் கிடைக்கும் என்று பின்வரும் வசனத்தின் மூலம்  பயமுறுத்துகிறார்.

9:81(தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக(த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); “இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் “நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்).


அடைப்பு குறி என்பது அல்லா போட்டது அல்ல நமது மார்க்க அறிஞர்கள் போட்டதுதான். இதை நான் வரவேற்கிறேன்.ஆனால் பல பதிப்புகளில் 
இந்த பதிப்பில் உள்ளதுபோல தேவையான இடத்தில் அடைப்புக்குறி இல்லை. அடைப்புக்குறி இல்லாமல் படித்தால் தான் பின்வரும் வசனத்தின் வீரியத்தை நீங்கள் உணரமுடியும். 

47:4(முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.

இப்படி கொலை, போர் பற்றி ஒரு இறைவேதத்தில் இருந்தால்...அதை  இறைவேதம் என்று நம்புபவன் இந்தமாதிரி செயல்களில் ஈடுபடமாட்டான் என்று கூற இயலுமா?

பின்வரும் வசனம் பிற சமூகத்தினருடன் நட்புறவு கொள்ள வேண்டாம் என்கிறது.

60:13ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள்; ஏனெனில் மண்ணறை வாசிகளைப் பற்றி (எழுப்பப்பட மாட்டார்கள் என்று) நிராகரிப்போர் நம்பிக்கை இழந்தது போல், மறுமையைப் பற்றி, நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.

ஒரு திரைப்படம் மக்கள் மனதில் தவறான பிம்பத்தை ஏற்ப்படுத்தும் என்றால்.குரான் முஸ்லிம்கள் மனதில் தவறான பிம்பத்தை ஏற்ப்படுத்தாதா?
பல முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக மாற இந்த வசனங்கள் உதவியதா அலல்து வேறு காரணமா என இறைவனுக்கே தெரியும்.

புனிதப்போர்-ஜிஹாத்-அறப்போர்,தீவிரவாதம்   அல்லாவின் வியாபாரமா?

சகோதரர்களே அல்லா உங்களுடன் வியாபாரம் செய்கிறார். அதாவது நீங்கள் உங்கள் உயிர்களையும்,உடமைகளையும் கொண்டு போர் புரிந்தால்  அவர் சுவனம் தருவாராம். இந்த வசனத்தை மனதில் வைத்துத் தான் உலகெங்கிலும் பல இசுலாமியர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனரோ எனக்கு அச்சம்  ஏற்ப்படுகிறது சகோதரர்களே. 

61:10ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

61:11. (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

இந்த வசனங்களின் வீர்யத்தை நீங்கள் உணர்வீர்கள் என நினைக்கின்றேன்.

61:12அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.  
சுவனத்த்தில் என்ன உள்ளது பார்த்தீர்களா ஆறு ஓடுமாம். பாலைவனத்தில் இருப்பவர்கள் ஆற்றின் மேல் ஆசைப்படலாம் 
என்பதில் நியாயம் உள்ளது.சரி ஆற்றின் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு? போதிய குடிநீர் கிடைப்பவர்களுக்கு?

பின்வரும் வசனத்தில் அல்லா தன்னுடைய வியாபாரத்தை உறுதிபடுத்துகிறார். அவர்களுக்காக முஸ்லிம்கள் எதிரிகளை (அதாவது யூதர்கள்,கிருத்துவர்கள்,இந்துக்கள் (இதில் நாத்திகவாதிகளும் அடக்கம்) ) கொன்றால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்கிறார். இதை நினைத்து இசுலாமியர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்  என்கிறது பின்வரும் வசனம்.
9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
இது நியாயமா தர்மமா?  சொல்லுங்கள் எனதருமை சோதரர்களே. இதை படிக்கும்  ஒரு முஸ்லிம் மனதில் பிற மதத்தினரை கொல்வது சரி என்ற  எண்ணம் உண்டாகும் இல்லையா? தற்கொலைப் படைகளை ஊக்குவிப்பது போலவே அல்லவா இந்த வசனங்கள்  உள்ளன.  இது தவறில்லையா எனது சகோதரர்களே. இதை திருத்த வேண்டாமா? 
மேலும் ஒரு வசனம் 
2:191(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
பின்வரும் வசனத்தில் பிற மதத்தவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்கிறது.
4:89(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.
இது எந்த விதத்தில் நியாயம் சகோதரர்களே? இதை நீங்கள் ஏற்க்கிறீர்களா? இதை படிக்கும் ஒரு முஸ்லிம் பிற மதத்தவரை எதிரியாகத்தானே பார்ப்பான்?

ஒருவனுக்கு நல்லது  செய்வதால் உனக்கு சுவனம் கிடைக்கும்,பிறர் மீது அன்பு செலுத்தினால் உனக்கு சுவனம் கிடைக்கும் என்று கூறினால் நியாயம். ஆனால் போர் புரிபவர்களுக்கு மட்டுமே என்று கூறி அனைவரையும் போர் புரிய வைப்பது எந்த விதத்தில் நியாயம் எனதருமை சகோதரர்களே? பின்வரும் வசனத்தை பாருங்கள்.
3:142உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?
இது பற்றி நான் என்ன சொல்ல? :(
எந்த ஒரு மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்ற வசனம் நன்றாகவே உள்ளது. ஆனால் குரான் வசனங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா இல்லையா என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகின்றேன்.  
என் புரிதலில்   சில வசனங்கள்  தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவே உள்ளது. இல்லை இந்த வசனங்களுக்கு வேறு அர்த்தம் என்றால் அந்த அர்த்தம் என்னவென்று நீங்கள் மக்களுக்கு சொல்லவேண்டாமா? ஒவ்வொரு குரானிலும்  விளக்கத்தை தரவேண்டாமா? போதிய திருத்தத்தை செய்யவேண்டாமா ? கூறுங்கள் எனதருமை சகோதரர்களே.
ஒரு திரைப்படத்தினால் பாதிப்பு ஏற்ப்படும் என்பது உண்மையானால்  குரானால் பாதிப்பு ஏற்படுமா இல்லையா? 
குரான் எனபது சாதரான புத்தகம் அல்ல. இதை நீங்கள் இறைவேதமாக நம்புகிறீர்கள். ஒவ்வொரு முறை தொழும்போழுதும் இதிலிருந்து வசனங்கள் படிக்கப்படுகின்றன  என அறிகிறேன்.  ஒவ்வொரு மனிதனும் இதை   இறைவேதமாக ஏற்க்கவேண்டும் என்று உங்களில் பலரும் பிரச்சாரம் கூட செய்கிறீர்கள்.
சமூக நல்லிணக்கத்தை திரைப்படம் கெடுக்கும் என்று தடை கேட்கிறீர்கள். குரான் வசனங்களும் சமூக  நல்லிணக்கத்தை கெடுப்பதாக  உள்ளது எனபதை நீங்கள் உணர்வீர்கள்  என நினைக்கின்றேன்.

இந்த பதிவை படிக்கும்பொழுது நிச்சயம் என் மீது உங்களுக்கு கோபம் வரும். ஆனால் நீங்கள் சிந்தித்து பாருங்கள் நானாக எதையும் கூறவில்லை. குரானில்  இருக்கும் சில வசனங்களைத்தான் எடுத்துக்காட்டியுள்ளேன்.  உங்களுக்கு கோபம் யார் மீது வரவேண்டுமெனில்  இந்த குரான் வசனங்களை தீவிரவாதத்திற்கு பயன்படுத்துபவர்கள் மீது வரவேண்டும்.இதை மேலும் பலர் தவறாக பயன்படுத்தாதவரு நீங்கள் சிந்தித்து செயல்படவேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம் .

போர் பற்றி கூறும் வசனங்களுக்கு என்ன விளக்கங்கள் மார்க்கபந்துகள் கூறுகின்றனர் என அறிவேன்.
போர் என்பது வரலாற்றில் பிற நாட்டின் மீதுதான் எடுக்கப்பட்டுள்ளன். ஆனால் குரான் வசனங்கள் என்ன கூறுகின்றன?
முஸ்லிம் அல்லாதவர்களை அல்லவா வெறுக்க சொல்கிறது, எதிரியாக பார்க்க சொல்கிறது,கொல்ல  சொல்கிறது?
எனவே இது மதத்தை அடிப்படையாக வைத்துத்தான் கூறப்படுகிறதே தவிர நாட்டினை அடிப்படையாக அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள் எனது சகோதரர்களே.(இது என்னுடைய புரிதல் இதற்க்கு சரியான விளக்கத்தை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.)

மற்றும் ஒரு விளக்கம் என்ன கூறலாம் எனில் இவைகள் அந்த காலத்தில் கூறிய வசனங்கள் இந்த காலத்திற்கு பொருந்தாது. அப்படி எனில் ஏன் இந்த வசனங்கள்?  இதை திருத்தலாம் அல்லவா?
குரான் என்பது வாழ்வியல் நூலா வரலாற்று நூலா? 
யூதர்களையும்,கிருத்துவர்களையும்,சிலை வணங்கிகளையும்,இணைவைப்பவர்களையும் எதிரியாக பாருங்கள்    என்ற வசனம் ஒவ்வொரு முறை குரான் படிக்கும் பொழுதும் ஒரு முஸ்லிமை எந்த மனநிலைக்கு உள்ளாக்கும் என்று சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.

உங்களில் சிலர் கேட்கலாம். நான் முஸ்லிம்தான் ஆனால் நான் பிறரை எதிரியாக பார்க்கவில்லையே என்று.
இதற்க்கு காரணம் குரானின் இந்த வசனங்களை நீங்கள் இதுவரை படிக்காமல் இருந்திருக்கலாம். அல்லது இந்த வசனங்களுக்கு சரியான / தவறான   விளக்கங்கள் உங்களுக்கு அளிக்கபபட்டிருக்கலாம் . நமது தமிழ் சமூகத்தில் நிலவும் 
மத சகிப்புத்தன்மை உங்கள் மனதிலும் இருக்கலாம். இது நல்ல விடயமே. ஆனால் எதிர்கலாத்தில் மக்கள் இந்த குரான் வசனங்களை மனதில் கொண்டு பிற மத மக்களை வெறுக்க ஆரமபிக்கலாம்,பிற மத மக்களை கொன்றால்தான் சுவனம் என நம்பி தீவிரவாதத்தில் ஈடுபடலாம் அல்லவா? சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.

இப்படி நடக்க வாய்ப்புண்டா என்று நீங்கள் கேட்கலாம். பல தீவிரவாதிகளின் செயல்கள் இதற்க்கு வாய்ப்பு உண்டு என்றே நம்பசொல்கிறது.

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பேசிக்கொண்டது :
நாம் அல்லாவின் அடிமைகள்,இசுலாமை பரப்புவதற்காக அல்லா நம்மை அனுப்பியுள்ளார். சண்டையில் இறக்கவேண்டும்,இறந்தால் நமக்கு சுவனம். நாம் இறக்கும் விதம் எதிரிகளுக்கு பயத்தை உண்டாக்கவேண்டும் என்று பேசிக்கொண்டுள்ளனர்.
அவர்கள் பேசிக்கொண்டதன் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே:

 My friend, may Allah accept your deed. Balm has been put on the wounds of many people. Do not forget the prayer that we made you learn; wherever you sit recite the prayer three times.

"Tell  my  ‘Salaam’  to  the  rest  of  the  brothers.  Be strong  in your actions; in your actions instill strength.  You have left this world. Paradise is far better than this world. You must fulfil your promises, which are true promises. Pray for us too"


 "God willing, you know, what I mean is at this time the issue is between Islam and heresy. We are the slaves of God whom he has sent for expansion of the true faith. I mean, death as a martyr is a big thing. But the style of martyrdom should be such as to put fright in the
heart of the enemies and that is the style of martyrdom. What I mean is there is nothing to fear, the message of the martyr must be put
forward"

 ''Pray. It is time for prayer and keep your promise to Allah. All right!''

Fight in such a way, they should feel that Allah’s lion is after them.

My brother you have to be strong. Do not be afraid. God willing. If you are hit by a bullet, in that is your success. God is waiting for you.


படித்தீர்களா சகோதரர்களே,
 அல்லா  குரானில் எனக்காக உங்களது உயிர்களை கொடுத்து சண்டையிட்டால் அதில் இறந்தால் உங்களுக்கு சுவனம் என்கிறார். அதைத்தான் இந்த தீவிரவாதிகளும் செய்துள்ளனர்.அப்படித்தான் பேசிக்கொண்டுள்ளனர். எனவே குரான் வசனங்களும் (அதை தவறாக அல்லது புரிந்துகொள்ளுதல்) இதற்க்கு  ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் அல்லாவா? 

இந்த உண்மை உங்களுக்கு கசப்பாகத்தான் இருக்கும். இந்த தீவிரவாதிகளால் உயிரை இழந்தது இந்துக்களும்,யூதர்களும் மட்டுமல்ல இந்தியாவில் இருந்த அப்பாவி முஸ்லிம்களும் தான்.

குர்ஆனில்  இருக்கும் வசனங்களுக்கு ஏற்ப்பத்தான் சிலர் தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றனர் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும் என நினைக்கின்றேன்.

தீவிரவாதத்தால் முஸ்லிம் மக்களும் கொல்லப்படுகின்றனரே என்று நீங்கள் கேட்கலாம்.
உண்மைதான் ஷியா மக்கள் கொல்லப்படுவதற்கு குரானை நான் காரணம் காட்ட மாட்டேன் எனக்கு அதுபற்றி தெரியவில்லை. ஆனால் சூபி மக்கள் கொல்லப்படுவதற்கு சில குரான் வசனங்கள் காரணமாக இருக்கலாம்.
ஏன் எனில் இன்று வாகாபியம்  சூபிக்களின் தர்க்கா வழிபாடும் இணைவைத்தலே என்கிறது.குர்ஆனில்  சில வசனங்கள் இணைவைப்பவர்களை எதிரியாக பார்க்கவும்,கொல்லவும் சொல்கிறது . எனவே சில வசனங்கள் காரணமாக இருக்கலாம்.

குர்ஆனில் பல நல்ல கருத்துக்கள் உள்ளன என்பதை நான் ஏற்கிறேன். அதே நேரத்தில் சில வசனங்களால் மக்கள் மூளைசலவை செய்யப்பட்டு தீவிரவாதிகளாக மாற்றப்படுகிறார்கள் எனில் அந்த வசனத்திற்கு சரியான போதிய விளக்கமோ அல்லது அந்த வசனங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை இடைச்சொருகல் என்று கூறி நீக்குதல் என்பது மக்களை நல்வழிப்படுத்தும் எனபதே என் கருத்து.

இப்பதிவின் நோக்கம் குரானை இழிவுபடுத்தவேண்டும் எனபதல்ல மாறாக குர்ஆனில் உள்ள சில வசனங்கள்  தவறாக புரிந்து கொள்ளும் வகையில்  உள்ளன அதற்க்கு நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியே இந்த பதிவு .

ஒரு திரைப்படம் முஸ்லிம்களை  தீவிரவாதிகளாக காட்டினால் உங்கள் மனம் புண்படுவது போலத்தானே உங்கள் இறைவேதம் யூதர்களையும்,சிலை வணங்கிகளையும்(இந்துக்கள்,கிருத்துவர்கள்), இணை வைப்பவர்களையும் (இந்து,முஸ்லிம் சூபிக்கள்) எதிரிகள்,பகைவர்கள்,சாத்தான்கள் அவர்களை கொல்லுங்கள் என்பதும் அவர்கள் மனதை புண்படுத்தும்?. சிந்தித்து பாருங்கள் எனதருமை சகோதரர்களே. தேவையான திருத்தத்தை,விளக்கத்தை கொண்டுவர முயலுங்கள்.

இந்தப்பதிவு உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும்.இப்பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன். இந்த பதிவிற்கு மறுப்பை பதிவாக தந்தாள் அந்த பதிவை இதே தளத்தில் வெளியிடுகிறேன். என்றும் வாய்மையே வெல்லட்டும்.மனிதமே வெல்லட்டும். எல்லாம்வல்ல இறைவன் நம் அனைவர் மீதும் சாந்தியும்  அமைதியும் உண்மையில் உண்டாக்குவானாக. 


என்றும் அன்புடன் 
இராச.புரட்சிமணி 

180 கருத்துகள்:

  1. Puratchimani,
    Very valid questions.

    You can never expect honest answer from them. They need to be eradicated from our soceity.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hi N,
      There are honest people in their society too.
      //They need to be eradicated from our soceity.//
      Please first you eradicate such things from your mind.
      hatred begets hatred. love begets love. so we need to love everybody.
      We are all humans. We are here to live happily.But we need to educate them that we can live happily in this world itself and not to think about after death happiness.
      Thanks for your comments

      நீக்கு
  2. This is a war. They know that very well. In this world, either we can live or they can live. that is the truth. You will understand that very soon.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. hi N, I have already understood this. after understanding this only i wrote this post.but what i am saying is we need win their heart. we need to educate them why they should not take these quran verses seriously. I know there are many muslims who realized this and they are writing against this.
      if you have time have a look at http://alisina.org in English and few other blogs in tamil for eg.http://iraiyillaislam.blogspot.in/,http://pagaduu.wordpress.com/, http://senkodi.wordpress.com and if you want see the blog of spiritual muslim have a look at onameen.blogspot.com. have faith in truth. only through truth and humane we can win their heart. - thanks for your comment

      நீக்கு
  3. மறுபடியும் முதலிலிருந்தா???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில் கூறியிருந்தால் விளங்கி இருக்கும் . கேள்வி கேட்டா நான் என்ன சொல்ல சகோ.
      தங்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. சகோ புரட்சிமணி,

    நீங்கள் பதிவில் சொன்ன அனைத்து விடயங்களும் 100% உண்மை. இஸ்லாம் என்பது ஒரு அரபிய அரசியல் உலகமயமாக்கல் கொள்கை என்பதும் என் கருத்தே.உலகளாவிய கிலாஃபா அமைத்து ஷரியா அனைவருக்கும் என்பதெ வஹாபியம் ஆகும். மாற்று சிந்த்னைகளுக்கு இடம் இல்லை!!!

    பொதுவாக நம் மீது இஸ்லாமிய எதிர்ப்பாளர் என்ற கருத்து இருந்தாலும் நாம் முஸ்லிம்களை சாதிக் கொடுமையால் மதம் மாறியவர்கள், பெரும்பான்மையினருக்கு இஸ்லாம் மதம் பற்றி பல் விடயங்கள் தெரியாது என்பதால் அவர்கள் விழிப்புணர்வு கொள்ளவே விரும்புகிறோம்.

    இதே போன்ற வசனங்களை வேறு மதபுத்தகங்களில் என்னால் காட்ட முடியும். பிற மதத்தினர் மத புத்தகங்களின் உள்ள அனைத்தையும் சரி என்பது இல்லை. பொருந்தும் பொருள்,அல்லது நல்ல விடயங்களை மட்டுமே எடுக்கின்றனர்.

    அது போல் முஸ்லிம்கள் செய்வது இல்லை என்பதே சிக்கல்!!

    எனினும் இஸ்லாமில் பல பிரிவு உண்டு. இதே குரான் வசனங்களுக்கு வெறுவித்மாக பொருள் கொள்கின்றனர். அது சரியா? உண்மையான பொருளை மறைக்கிறார் என்பதை விட மதத்தை சீர்திருத்தும் அவர்களுக்கு ஆதரவு என்பதே நம் நிலை.

    சூஃபிக்க்ள்,குரான் மட்டும் பிரிவு, அகமதிய்யாக்கள் இந்த நிலைக்கு வந்து விட்டார்கள்.இந்த வசனம் அனைத்துமே உருவகம், மன‌தில் ஏற்படும் நன்மை தீமைக்கு எதிரான போரட்டம் என நானே விளக்க முடியும்!!.ஆனால் வஹாபிகள் அப்ப்டி எடுப்பது இல்லை!!

    வஹாபியம் தமிழ்நாட்டில் சவுதிக்கு சென்று மூளைச்சலவை செய்யப்பட்ட சில கோமாளிகளால் மட்டுமே முன் எடுக்கப்படுகிறது. ஆகவே விசுவரூப பிரச்சினையில் நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்போம்.

    வஹாபிகளின் பிரச்சாரங்களை பதிவுலகில் கடுமையாக எதிர்ப்போம்.அதில் பிற பிரிவினரை அரவனைத்து செல்ல வேண்டும் என்பதே நம் கருத்து!!.

    நீங்கள் பதிவில் சொன்ன அனைத்துமே சரி!! அல் கொய்தா ,தலிபானை திரைப்படத்தில் காட்டினால் கோபம் வரும் வஹாபிகளின் செயலை அனைவருமே கண்டிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது!!


    நாம் எதிலும் நல்லதை மட்டுமே எடுப்போம், முஸ்லிம்களிலும மனுஷ்ய புத்திரன்,தோழர் செங்கொடி போன்றோர் உண்டு!

    இப்போது குரானை முற்று முழுதும் விமர்சிக்க வேண்டாமே! நமது வஹாபியல்லாத முஸ்லிம் சகோக்கள் நம்மை புரிந்து கொள்வார்கள் என்னும் நம்பிக்கை நம்க்கு உண்டு!

    குரான் தடை செய்யப்பட வேண்டும் என நீதிமன்ற வழக்கு நடந்த கதையும் உண்டு!!!

    http://en.wikipedia.org/wiki/The_Calcutta_Quran_Petition

    சவுதியில் , எண்ணெய் தீர்ந்து இபின் சவுத் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தால் இவர்கள் வாஹாபிகள் விடுவார்கள்!!

    அதுவரை வஹாபிகளுக்கு ஆதர்வான அரசியல் கட்சிகளைப் புறக்கணிப்போம், பொது சிவில் சட்டம் கொண்டுவருவோம்.

    இதுவே வஹாபிகளை எதிர்கொள்ளும் வழி ஆகும்!!

    உங்கள் பதிவின் கருத்து நம் மன‌தில் எப்போதோ தோன்றினாலும் எழுதவில்லை ஏன் எனில் வஹாபியம் தனக்கான குழியை தானே தோண்டுவதால் சடுதியில் அழியும் என‌ நன்கு அறிவேன்!!

    சரி சகோ பதிவு போட்டாச்சு!!.இப்பதிவுக்கு நம் ஆதரவு உண்டு!!

    நன்றி!!



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ சார்வாகன்,
      //இதே போன்ற வசனங்களை வேறு மதபுத்தகங்களில் என்னால் காட்ட முடியும். பிற மதத்தினர் மத புத்தகங்களின் உள்ள அனைத்தையும் சரி என்பது இல்லை. பொருந்தும் பொருள்,அல்லது நல்ல விடயங்களை மட்டுமே எடுக்கின்றனர்.
      அது போல் முஸ்லிம்கள் செய்வது இல்லை என்பதே சிக்கல்!! //
      இதை நானும் ஏற்கிறேன் சகோ

      //உண்மையான பொருளை மறைக்கிறார் என்பதை விட மதத்தை சீர்திருத்தும் அவர்களுக்கு ஆதரவு என்பதே நம் நிலை.//அதைத்தான் நானும் கூறுகிறேன் சகோ. போதிய விளக்கம் அளிக்கலாம்,அல்லது இடைசொருகல் என்று கூறிவிடலாம் எனபதே என் கருத்தும்.

      //வஹாபிகளின் பிரச்சாரங்களை பதிவுலகில் கடுமையாக எதிர்ப்போம்.அதில் பிற பிரிவினரை அரவனைத்து செல்ல வேண்டும் என்பதே நம் கருத்து!!.//
      நிச்சயமாக சகோ நான் சூபிக்களை விமர்சிப்பதில்லை.உண்மையில் நான் ஒரு சூபி குருவை சந்திக்கவே விரும்புகிறேன். அஹ்மதியாக்களை பற்றியும் எனக்கு ஒன்னும் தெரியாது என்பதால் விமர்சிப்பதில்லை. பதிவுலக சூழலே விமர்சனம் செய்ய நம்மை தூண்டுகின்றன எனபதை நீங்களே அறிவீர்கள்.

      //இப்போது குரானை முற்று முழுதும் விமர்சிக்க வேண்டாமே!//
      நீங்கள் கூறினால் காரணம் இருக்கும்.உங்கள் கருத்தை ஏற்கிறேன். நானும் குரானை முழுவதும் விமர்சிக்கவில்லை எனபதை புரிந்துகொள்வீர்கள் என எண்ணுகிறேன்.

      //நமது வஹாபியல்லாத முஸ்லிம் சகோக்கள் நம்மை புரிந்து கொள்வார்கள் என்னும் நம்பிக்கை நம்க்கு உண்டு!//
      எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு சகோ.
      தவறுகள் இருந்தால் சுட்டி காட்டுங்கள். நம் விமர்சனம் எந்த விதத்திலும் நல்ல முஸ்லிம்களையும்,ஏன் மதப்பிரச்சாரம் செய்யும் முஸ்லிம்களையும் புண்படுத்தக்கூடாது எனபதே என் விருப்பம்.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  5. பதிவுக்கு மிக்க நன்றி நண்பர்.
    இஸ்லாமிய குரான் வசனங்கள் எனது உணர்வுகளை மிகவும் புண்படுத்தியுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப "வேக"மாக போனால் (விழுப்)புண் படுவது இயற்கை நிகழ்வே. குரானை "நிதானமாக" படியுங்கள், மருந்து கிடைக்கும்.

      நீக்கு
    2. சகோ சஹா மருந்து ஹூரிதானே!! ஹூரி மட்டும் கிடைத்தால் காஃபிர்களை கைமா பண்ணி விடலாம் ஆனால் கண்ணில் காட்ட மாட்டேன் என்கிறீர்களே!!
      நன்றி!!

      நீக்கு
    3. வாங்க வேகநரி நண்பா,
      உங்களை மாதிரி பலர் போராட்டம் செய்தால் குரானில் திருத்தம் கொண்டுவருவார்கள் என நினைக்கின்றேன்.

      நீக்கு
    4. வாங்க சகா,
      வேகமாக போனால் தனக்குத்தான் புண் ஏற்ப்படும்.ஆனால் குரானை மெதுவாக படித்தால் பிறருக்கு புண் ஏற்ப்ப்படும்போல தெரிகிறதே..

      நீக்கு
    5. சார்வாகன்,
      ஹூரிக்களை வைத்து கொண்டு வஞ்சனையா செய்கிறார்கள். அப்படி ஒன்னு இருந்தால் தான் காட்டிவிடுவார்களே.
      அதுமட்டுமல்ல ஹூரியை பார்க்கத்தான் தற்கொலைப் படைகளாக வந்து அப்பாவி மக்களையும் கொன்று,
      அவர்களும் இறந்துவிடுகின்றனர். அதற்க்கு பிறகு ஹூரி கிடைக்கும் என நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் கிடைக்கப்போவதோ நரகமே.

      நீக்கு
  6. உங்கள் பதிவிற்குள் செல்ல விரும்பவில்லை. (பல முறை பதில் சொல்லப்பட்ட அதே கேள்விகள்., ஒரே வித்தியாசம், கேட்பவர் மட்டுமே மாறுகிறார். இணைய பெருவெளியில் தேடுங்கள், பதில் கிட்டும். )

    ஆனால் பதிவின் தலைப்பைப்பற்றி ஒரு சிறு விளக்கம்.

    //குரானில் திருத்தம் தேவையா? இல்லையா? //

    ஒரு புத்தகத்தில் திருத்தம் தேவையா, இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு மட்டுமே உண்டு, வாசகர்களுக்கு அல்ல. குரானின் ஆசிரியர் அல்லாஹ். அவனே இதை பாதுகாப்பதாக உறுதி கூறுகிறான். நூலின் ஆசிரியரே இதைப்பற்றி தெளிவாக கூறிவிட்ட பிறகு, இதைவிட தெளிவான பதில் தேவையா?

    குரான் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
    நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். குரான் (15:9)


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ சஹா,
      பிரியாணி செய்ய ஆடாக வந்தமைக்கு மிக்க நன்றி!!
      குரானைப் பற்றி வழக்கு நடக்கும் போது ,குரானின் சான்று ஏற்கப் படாது!!
      கசாப் நான் குற்றவாளி இல்லை என்க் கூறினல் விட்டு விடுவார்களா ஆகவே குரான் 15.9 சாட்சி செல்லாது!!
      எனினும்
      குரான் வசன ஆய்வு நமக்கு மிகவும் பிடிக்கும். குரான் வசனம் பெரும்பாலும் முன்னே 2 பின்னே 2 பார்த்தால் முரண்படும். அவ்வளவுதான் ஏக இறைவன் சரக்கு!!. எனினும் முதலில் 15.9 என்பது சரியான பொருள் ஆக நீங்கள் சொல்வது அடைப்புக்குறி நீக்கி
      நிச்சயமாக இவ்வேதத்தை இறக்கி வைத்தோம், நாம் இதன் பாதுகாவலர்

      நம்க்கு தேவை இந்த வசனம் குரான் என்னும் புத்தகத்தைப் பற்றி ஐயந்திரிபர கூறுகிறதா என்பதே.
      அ) குரான் என்னும் சொல் இந்த 15.9 ல் இல்லை, இருக்கும் சொல் ஆனது
      (15:9:4) l-dhik'ra the Reminder=ஏற்கெனவே சொன்னதை[?] ஞாபகப்படுத்தும்.
      அதாவது முந்தைய வேதங்களான தோரா,பைபிள் ஆகியவற்றின் நினைவூட்டி என் பொருள் கொள்ளலாம் என்றாலும் ,இப்படி மட்டுமே பொருள் கொள்ள முடியும் என இந்த வசனம் மட்டும் கொண்டு 100% முடியாது.
      அதே சொல் இன்னொரு இடத்தில் வருகிறது அப்பொருளையும் பார்ப்போம்
      (15:6:6) l-dhik'ru the Reminder
      Arberry: They say: 'Thou, upon whom the Remembrance is sent down, thou art assuredly possessed!
      15:6. (நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.

      வேதம் என்றோ குரான் என்றோ இந்த 15.9ல் இல்லை என்பதும் நினைவுறுத்தல் செய்தி என எதையும் கொள்ள முடியும்!!.

      இன்னும் இந்த 15.6 ல் நபி(சல்) ஐ [குரேசிகள்] பைத்தியக்காரன் என கூறினர் என்வும் சொல்கிறது. அவன் சொன்னா அதை ஏன் அல்லாஹ் திருப்பி சொல்லனும், குரேசி சொன்னான் என்பதை விட்டால் ,அல்லாஹ் நபி(சல்) பைத்தியம் என சொல்வது போல் இருக்கும் ஹி ஹி இந்த ஒரு சொல்லை மாத்தினால் போதும்!! (15:6:1) waqālū=And they say=கடந்த கால் செயலுக்கு ஏன் நிகழ்கால வினைச்சொல்?
      அரபியில் காலம் சொற்களில் தெரியாது, கடந்த,நிகழ்,எதிர்கால எல்லாம் ஒன்றுதான், அருமையான மொழி ஹி ஹி

      ஆகவே குரானின் மீது அதன் சான்று ஏற்க முடியாது!!

      15.9 குரான் என்னும் முழு வேதம் ஆகு முன் [கடைசி no 110] இறக்கப்பட்டது என்பதால் இது முழுக் குரானையும் குறிக்கவில்லை. ஆகவே கடைசி சூராவின் இறுதி வரியில் முழுமையான இந்த்னை சொற்கள் கொண்ட ,இந்த மொழியில் உள்ள இப்புத்த்கம் மட்டுமே எனது வேதம்,முந்தைய வேதங்கள் அனைத்தும் தவறாகிவிட்டன என்றால் மட்டுமே மூமின்களுக்காவது சரி. ஆனால் அப்படி இல்லை!!!
      இது மெக்காவில் இறங்கிய [கால அளவு வரிசையில் 54]சூரா, ஆகவே பாதிக் குரான் கூட இல்லை

      ஆகவே குரான் என்பது ஏமாற்றுவேலையே!!


      Thank you!!!

      நீக்கு
    2. //சகோ சஹா,
      பிரியாணி செய்ய ஆடாக வந்தமைக்கு மிக்க நன்றி!!//

      ஏற்கனவே கோடங்கி தளத்தில் குரான் தொடர்பாக நீரே பிரியாணியாக ஆனீரே மறந்துவிட்டதா?

      தொடுப்பு:
      http://www.kodangi.com/2013/01/tamil-twitters-campaign-for-kamal-hasans-vishvaroopam.html

      // அடைப்புக்குறி நீக்கி
      நிச்சயமாக இவ்வேதத்தை இறக்கி வைத்தோம், நாம் இதன் பாதுகாவலர்//

      சார்வாள், மொழிகள் பற்றிய உங்க அறிவு புல்லரிக்க வைக்கிறது. குரானின் மூல மொழி அரபியில் அடைப்புக்குறிகளோ, நட்சத்திர அடையாளமிட்ட (* mark) சொற்களோ இல்லை என்பது குரானை முழுக்க ஆய்வு செய்த உங்களுக்கு தெரியுமா ஓய்? மொழிமாற்றம் செய்யும் பொது ஒரு வாக்கியத்திற்கான பொருள் மாறிவிடக்கூடாது என்பதற்காகவே தமிழ் மொழிபெயர்ப்பில் அடைப்புக்குறிகள் இடப்படுகின்றன.

      //இன்னும் இந்த 15.6 ல் நபி(சல்) ஐ [குரேசிகள்] பைத்தியக்காரன் என கூறினர் என்வும் சொல்கிறது. அவன் சொன்னா அதை ஏன் அல்லாஹ் திருப்பி சொல்லனும், குரேசி சொன்னான் என்பதை விட்டால் ,அல்லாஹ் நபி(சல்) பைத்தியம் என சொல்வது போல் இருக்கும் ஹி ஹி இந்த ஒரு சொல்லை மாத்தினால் போதும்!! (15:6:1) waqālū=And they say=கடந்த கால் செயலுக்கு ஏன் நிகழ்கால வினைச்சொல்? அரபியில் காலம் சொற்களில் தெரியாது, கடந்த,நிகழ்,எதிர்கால எல்லாம் ஒன்றுதான், அருமையான மொழி ஹி ஹி. ஆகவே குரானின் மீது அதன் சான்று ஏற்க முடியாது!!//

      ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மை உள்ளனவே, நம் தமிழ் மொழியில் கூட என்னால் சான்றுகள் தரமுடியும். "அவர்கள்" என்ற வார்த்தை ஒருமையா, பன்மையா? ஒருமை எனில் ஒரு கூட்டத்தினரை குறிக்க "அவர்கள்" என்று பயன்டுத்துவது ஏன்? பன்மை எனில் "ஒரு" மரியாதைக்குரிய நபரை குறிக்க (உம.சார்வாள் அவர்கள் ஒரு சிறந்த கற்பனைவாதியாவார்கள்) "அவர்கள்" என்று பயன்படுத்துவது ஏன்? இந்த வார்த்தையை ஆங்கிலத்தில் மொழிபெயத்தால் saarvaal "is" a great imaginative person என்று தான் மொழிபெயர்க்க வேண்டும், saarvaal "are" a great imaginative person"s" என்று அல்ல.

      ஆகவே, ஒருமைக்கு தனியாக ஒரு வார்த்தை இருந்தும் அதனை அந்த இடத்தில் பயன்படுத்தாததால் நம் தமிழ் மொழியின் இலக்கண விதிகள் தவறென்று கூறிட முடியுமோ?

      ஆகவே சார்வாள் அவர்கள் செய்துவருவதே ஏமாற்றுவேலை.

      நீக்கு
    3. சஹா,

      புரட்சிமணி நல்ல பதிவினை இட்டு ,அருமையான கேள்விகளை தொடுத்துள்ளார், முடிந்தால் அதற்கு பதில் அளிக்கவும், அதைவிட்டுவிட்டு ,எல்லாம் ஏற்கனவே கேட்டது சொல்லியாச்சுனு எஸ்கேப் ஆக வேண்டாம்.

      நீங்க சொன்ன தமிழ் பன்மை பற்றி பேசுவோம்,

      // "அவர்கள்" என்ற வார்த்தை ஒருமையா, பன்மையா? ஒருமை எனில் ஒரு கூட்டத்தினரை குறிக்க "அவர்கள்" என்று பயன்டுத்துவது ஏன்? பன்மை எனில் "ஒரு" மரியாதைக்குரிய நபரை குறிக்க (உம.சார்வாள் அவர்கள் ஒரு சிறந்த கற்பனைவாதியாவார்கள்) "அவர்கள்" என்று பயன்படுத்துவது ஏன்?//

      அவன் - ஒருமை

      அவர் - பன்மை.

      ஒரு தனி நபரை மரியாதை கருதி "அவர்" என விளிக்கலாம்.

      "கள்" என்ற விகுதி பலவின்பால் பன்மை விகுதி, தேவைப்படும் இடத்தில் சேர்க்களாம்.

      நீ என ஒருமையில் ஒருவரை சொல்லாமல் நீங்கள் என பன்மையில் சொல்வது உயர்வு கருதியே , எதிரே ஒரு கூட்டமே இருக்கு என சொல்ல அல்ல. ஆங்கிலத்தில் எல்லாமே "you" தான் மரியாதையா சொல்லத்தேவையில்லை,எனவே நேரடியாக ஆங்கில பாணியில் நீ என இங்கே ஒருவரை சொன்னால் மரியாதை இல்லாமல் பேசிட்டானு சொல்லுவார்கள் :-))

      ஆனால் அவர்க் கூட கள் சேர்ப்பது பேச்சு வழக்கில் மிகுதியாக "பன்மை அல்லது உயர்வை காட்ட ஒட்டிக்கொண்டது, தமிழ் இலக்கணப்படி தேவையில்லாத ஒன்று.

      உயர்வு மற்றும் பனமை சேர்த்து பேசுவது பேச்சு வழக்கில் தான், இலக்கணப்படி தேவையான இடத்தில் தான் பன்மை,விகுதி வரும்.

      அப்படி இருக்கும் போது என்னமோ இலக்கணத்தில் அப்படி இருப்பது போல பேச்சு வழக்கினை உதாரணம் காட்டி ,இலக்கணம் தப்புனு சொல்ல கிளம்பிட்டிங்களே.

      அப்போ குரான் முழுக்க பேச்சு மொழியில் கொச்சையாக எழுதப்பட்டதா? அப்படி எனில் நீங்கள் சொல்வது சரி என எடுத்துக்கொள்ளலாம்.

      நீக்கு
    4. வலையில வந்து விழுந்துவிட்டீர்களே வவ்வால் அண்ணே, நம்ம சார்வாள் அண்ணே சொல்றாரு,

      //அரபியில் காலம் சொற்களில் தெரியாது, கடந்த,நிகழ்,எதிர்கால எல்லாம் ஒன்றுதான், அருமையான மொழி ஹி ஹி. ஆகவே குரானின் மீது அதன் சான்று ஏற்க முடியாது..//

      நான் சொன்ன பதிலுக்கு நீங்க சொல்றீங்க
      //ஒரு தனி நபரை மரியாதை கருதி "அவர்" என விளிக்கலாம்.
      "கள்" என்ற விகுதி பலவின்பால் பன்மை விகுதி, தேவைப்படும் இடத்தில் சேர்க்களாம். //

      அதே தான் நானும் சொல்றேன், அந்தந்த மொழிக்கு அதுஅதற்குரிய இலக்கண விதிகள் உண்டு, அரபியில் காலம் சொற்களில் தெரியாது, கடந்த,நிகழ்,எதிர்கால எல்லாம் ஒன்றுதான் என்றால், அது அந்த மொழியின் இயல்பு, ஆனால் அரபு மொழி அறிந்தோர் இதுவிஷயத்தில் குழம்பமாட்டார்கள், அவர்களுக்கு தெரியும், எதை கடந்த காலமாக, நிகழ்காலமாக, எதிர்காலமாக பொருள் கொள்ளவேண்டும் என்று. அதனால் குரானின் மீது அதன் சான்று ஏற்க முடியாது என்று கூறிவிடமுடியுமா? ஆக சார்வாள் அண்ணே சொன்னது தவறுதானே?

      //அப்போ குரான் முழுக்க பேச்சு மொழியில் கொச்சையாக எழுதப்பட்டதா? அப்படி எனில் நீங்கள் சொல்வது சரி என எடுத்துக்கொள்ளலாம்.//

      குரானின் இலக்கிய தரம் குறித்து விக்கிபிடியா தரும் தகவல்களை பாருங்கள், அதிலும் குறிப்பாக
      மிக உயர்ந்த தரம், முரண்பாடின்மை, படிக்காதவர்களுக்கும் புரியும் ஒரே இலக்கியம், இசை நயம், காலத்தால் முரண்படாதது,
      என்ற தலைப்புகளில் உள்ளனவற்றை படித்து பயன் பெறுங்கள்.

      http://ta.wikipedia.org/s/3t9

      நீக்கு
    5. //அப்போ குரான் முழுக்க பேச்சு மொழியில் கொச்சையாக எழுதப்பட்டதா? அப்படி எனில் நீங்கள் சொல்வது சரி என எடுத்துக்கொள்ளலாம்.//

      கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகம் மூலம் அரபிலக்கியத்தில் புலமைப் பெற்ற மேற்கத்திய அறிஞர் ஆர்தர் ஜே. ஆர்பெர்ரியின் கூற்று:
      “ குர்ஆனுடைய கருத்துகளை வெளிக்கொணர்வதில் முன்னோர்கள் செய்த முயற்சிகளை விட இன்னும் சிறப்பாக செய்ய நாடினேன். ஆனால் அரபு மொழியில் குர்ஆனில் இருக்கும் ஆழத்தையும் நேர்த்தியையும் மிக குறைவாகவே என்னால் கொண்டு வர முடிந்தது. மிகத்துல்லியமாக பின்னிப் பிணைந்து நிற்கும் ஓசைகளை நான் ஆழமாக கவனித்தேன். குர்ஆனில் இருக்கும் கருத்தழகுக்கு சற்றும் குறைந்ததல்ல அதன் இசை நயம் என்பதையுமுணர்ந்தேன். உலக இலக்கியங்களிலேயே குர்ஆனை இவை இணையற்ற ஒன்றாக விளங்கச்செய்கிறன. குர்ஆனின் இந்த வினோதமான அம்சம் அதற்கேயுரிய தனிப் பாணியாகும். பிறரால் முற்றிலும் கையாள முடியாத பாணியாக அது இருக்கிறது. அதனுடைய ஓசை நயமே மக்களின் கண்களை கசியச்செய்கிறது. உள்ளங்களைப் பரவசமடையச்செய்கிறது.

      [Arthur J. Arberry, The Koran Interpreted, London: Oxford University Press, 1964, p. X.]


      மற்றொரு பிரபல ஜெர்மனிய அறிஞர் கொய்தே (Johann Wolfgang von Goethe) இவ்வாறு கூறுகிறார்.
      “ குர்ஆனை எத்தனை முறை பார்த்தாலும் அது முதலில் அன்னியமாக தெரிகிறது; பிறகு புதுமையாக தெரிகிறது; அடுத்து ஒரு தென்றல் போல் மனதை கவர்ந்து செல்கிறது; மதிப்பச்சத்தை ஏற்பத்த்துகிறது- அதனுடைய நடையழகு அதனுடைய கருத்துக்கு ஏற்ப கம்பீரமாகவும் வலுவானதாகவும், அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் அதன் மீது மதிப்புக் கொள்ளச்செய்வதாகவும் உள்ளது. இந்த நூல் இவ்வாறு காலங்காலமாக மக்கள் மீது தன் ஆதிக்கத்தைச் செலுத்தக் கூடியதாக இருக்கின்றது. ”

      [Goethe, quoted in T.P. Hughes' Dictionary of Islam, p. 526.]


      http://ta.wikipedia.org/s/3t9

      இதுவா கொச்சையாக எழுதப்பட்டது என கூறுகிறீர்கள் திருமிகு வவ்வால் அவர்களே?

      நீக்கு
    6. சஹா,

      ஹி...ஹி நம்மக்கிட்டே வலையெல்லாம் வேலைக்காவாது, ஆனால் கடசியில் வலை விரித்தவரே அதில் சிக்குண்டு கிடப்பதை காணலாம் :-))

      நான் சொன்னதை நீங்க சரியாப்புரிஞ்சிக்கலை அல்லது நான் சரியா சொல்லவில்லையோனு கூட வச்சிக்கலாம்.

      "கள்" உயர்திணைக்கு சேர்ப்பது இலக்கணமல்ல, பேச்சு வழக்கில் என சொல்லியிருக்கிறேன், ஒரு வரியை மட்டும் எடுத்துப்போட்டு பார்த்தால் அப்படி தெரிகிறதோ?

      தலைவர் அவர்களே என சொல்வதெல்லாம் மேடைப்பேச்சு நாகரீகம் மட்டுமே ,இலக்கணமல்ல.

      அதனால் தான் கேட்டேன் குரான் பேச்சு மொழியில் எழுதப்பட்டதா என. நீங்கள் விக்கிப்பீடியா சுட்டிய காட்டுறிங்க, நல்லது ,அதே சமயம் நாங்க ஏதேனும் விக்கி சுட்டி காட்டினால் அதெல்லாம் திரிக்கப்பட்டது செல்லாது என மார்க்குகள் சொல்வதேன்?

      ஹி...ஹி உங்களுக்கு தேவைனா விக்கி ஆதாரம் ,இல்லைனா சேதாரமா :-))

      இப்போ அடுத்த தூண்டில்,

      முகமது அய்யாவின் காலத்தில் அரேபியாவில் பேசிய மொழி என்ன்?

      அரபி என்றால் அதற்கு அப்பொழுது எழுத்து வடிவம் இருந்ததா?

      அரபியின் லிபி எம்மொழியின் அடிப்படையில்?

      வாங்க மெதுவா தான் உள்ளே இழுத்து விடணும் :-))

      இன்னும் நிறைய மேட்டர் இருக்கு, இலக்கணம் பேசி தானா வந்து மாட்டினவரை தானே கடைய முடியும் :-))

      நீக்கு
    7. // தலைவர் அவர்களே என சொல்வதெல்லாம் மேடைப்பேச்சு நாகரீகம் மட்டுமே ,இலக்கணமல்ல. //

      நான் சொன்னதை நீங்க சரியாப்புரிஞ்சிக்கலை அல்லது நான் சரியா சொல்லவில்லையோனு கூட வச்சிக்கலாம். தமிழ் மொழிக்கு இலக்கணம் இருப்பது போலவே மற்ற மொழிகளுக்கும் இலக்கணம் இருக்கும் தானே?

      அந்தந்த மொழிக்கு அதுஅதற்குரிய இலக்கண விதிகள் உண்டு, அரபியில் காலம் சொற்களில் தெரியாது, கடந்த,நிகழ்,எதிர்கால எல்லாம் ஒன்றுதான் என்றால், அது அந்த மொழியின் இயல்பு, ஆனால் அரபு மொழி அறிந்தோர் இதுவிஷயத்தில் குழம்பமாட்டார்கள், அவர்களுக்கு தெரியும், எதை கடந்த காலமாக, நிகழ்காலமாக, எதிர்காலமாக பொருள் கொள்ளவேண்டும் என்று. அதனால் குரானின் மீது அதன் சான்று ஏற்க முடியாது என்று கூறிவிடமுடியுமா? ஆக சார்வாள் அண்ணே சொன்னது தவறுதானே?

      இப்ப சொல்லுங்க வலையில சிக்குனவரு யாருண்ணே?

      //முகமது அய்யாவின் காலத்தில் அரேபியாவில் பேசிய மொழி என்ன்?
      அரபி என்றால் அதற்கு அப்பொழுது எழுத்து வடிவம் இருந்ததா? //

      ஹைய்யோ, ஹைய்யோ.. முஹம்மது நபியோட வரலாற எடுத்து படிங்க வவ்வால் .. அப்டியே முதல் மனிதர் ஆதம் வரைக்கும் போங்க. அவர் என்ன மொழி பேசினார்னு கண்டுபுடிங்க.

      நீக்கு
    8. சஹா,

      // தமிழ் மொழிக்கு இலக்கணம் இருப்பது போலவே மற்ற மொழிகளுக்கும் இலக்கணம் இருக்கும் தானே? //

      கண்டிப்பாக மற்ற மொழிகளுக்கும் இலக்கணம் உண்டு, ஆனால் தெளிவான இலக்கண வரையறைகள் இல்லாத , முழு வளர்ச்சியடையாத மொழிகளும் உண்டு ,அவற்றின் இலக்கணப்படி மொழியினை முழுமையாக எழுதி .தெளிவான பொருள் உண்டாக்க முடியாது.

      ஹி...ஹி உதாரணமாக அரபி போல :-))

      இப்போ சார்வாகன் எதை வச்சு கலாய்ச்சார்னு புரிஞ்சிருக்குமே :-))

      எனவே மொழியில் உள்ள ஓட்டையை வச்சு இதான் சொல்லியிருக்குனு காலம் மற்றும் தேவைக்கு ஏற்ப குரானை அர்த்தப்படுத்திக்கொள்வதே மார்க்குகளின் வேலையாப்போச்சு :-))

      //ஹைய்யோ, ஹைய்யோ.. முஹம்மது நபியோட வரலாற எடுத்து படிங்க வவ்வால் .. அப்டியே முதல் மனிதர் ஆதம் வரைக்கும் போங்க. அவர் என்ன மொழி பேசினார்னு கண்டுபுடிங்க.//

      அதைக்கண்டுப்பிடிச்சதால் தான் உங்களை கிண்டிக்கிட்டு இருக்கேன் :-))

      முகமது அய்யா பிறந்த ஆண்டான கி.பி 570 இல் அரேபிய நிலப்பரப்பில் பேச்சு வழக்கில் இருந்த மொழி, எழுத்து வழக்கில் இருந்த மொழி என்னனு தேடிப்படியும், அரபிய எழுத்து வடிவத்தின் மூலம் என்னனு தெரியும்,மேலும் இப்போ இருக்கும் குரான் நடுவில் உருமாறியதும் தெரியும் :-))

      இதில யாரும் கைவைக்காத ஒரே நூல்னு ஒரு பில்ட் அப்பு :-))

      நீக்கு
    9. சகோ சகா,
      //ஒரு புத்தகத்தில் திருத்தம் தேவையா, இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு மட்டுமே உண்டு, வாசகர்களுக்கு அல்ல.//

      வசனம் நல்ல பேசுறிங்க. அதேமாதிரி ஒரு திரைப்படத்தின் இயக்குனருக்குத்தானே திருத்தம் தேவையா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. தணிக்கை குழு அனுமதி கொடுத்தும் எதற்கு பிரச்சனை செய்கிறீர்கள். கமலுக்கு ஒரு நியாயம் அல்லாவுக்கு ஒரு நியாயமா?

      //குரான் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
      நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். குரான் (15:9)//

      அல்லா என்னாத்த பாதுகாத்தார். ஒவ்வொரு குரானும் ஒவ்வொரு மாதிரி இருக்கு அப்புறம் எப்படி அவர் பாதுகாவலன்?
      எத்தனை நாளைக்குத்தான் இப்படி ஏமாருவீர்களோ ,ஏமாற்றுவீர்களோ. சிந்திக்கவே மாட்டீர்களா?

      நீக்கு
    10. வாங்க வவ்வால்,
      //புரட்சிமணி நல்ல பதிவினை இட்டு ,அருமையான கேள்விகளை தொடுத்துள்ளார், முடிந்தால் அதற்கு பதில் அளிக்கவும், அதைவிட்டுவிட்டு ,எல்லாம் ஏற்கனவே கேட்டது சொல்லியாச்சுனு எஸ்கேப் ஆக வேண்டாம்.//
      இந்த மாதிரி குரான் வசனங்கள் பிற மத மக்களை புண்படுத்துகிறது,மேலும் இந்தமாதிரி வசனங்கலால்தான் தீவிரவாதம் ஊக்குவிக்கப்படுகிறது,
      இந்த மாத்ரிரி வசனங்கள் முஸ்லிம்கள் மத்தியில் பிற மதத்தினர் பற்றி தவறான பிம்பத்தை உருவாக்குகிறது
      என்றால் அதற்க்கு பதில் அளிக்காமல் அவர் என்னவோ பதில் அளிக்கிறார்.

      நீக்கு
    11. @வவ்வால் @சார்வாகன் @சகா
      மொழி பிரச்சனை தீர்ந்ததா? :)
      கொஞ்சம் புரியவில்லையென்றாலும் ரசிக்கும்படியாக இருந்தது

      நீக்கு
    12. Dear Brother..ivanunga mudhala thirundhattum appuram Quran pathi pesatum

      நீக்கு
    13. Hi karl marx,
      Thanks for coming and posting your comment.

      நீக்கு
    14. Anbu sago nam thami mozhi ippadiya irundhadhu arambathi.

      நீக்கு
    15. Assalam alaikkum sago neengsl kadavul irukkirar engireera illaya

      நீக்கு
    16. @Dhilip Kumar sago,
      intha ulagil pirantha anaivarumey kadvulaagalaam enpathey enathu nilaippaadu...

      நீக்கு
  7. உங்கள் பதிவிற்கான பதில் இந்த தளத்தில் கிடைக்கக்கூடும். படித்துப்பாருங்கள்.

    http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/kafirai_nanbarakuthal/

    http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/islathil_por_en/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பி.ஜே ஒரு டுபாக்கூர் ஹி ஹி
      அண்ணன் மொழி பெயர்ப்பு குரான் 3.7 பிற மொழிபெயர்ப்பாளர்களிடம் இருந்து மாறுபடுகிறது. அல்லாஹ் குரானில் சில வசங்களில் யாருக்கும் புரியா மறை பொருள் உண்டு என் சொல்ல அண்ணன் அது என்க்குப் புரியும் என இணை அல்லாவுக்கு இணை வைக்கிறார்.

      http://corpus.quran.com/translation.jsp?chapter=3&verse=7
      compare this with pj translation


      http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakkam/alaimran/
      நீங்கள் பி.ஜேவைக் கும்பிடுகிறீர்கள்!!!

      நன்றி

      நீக்கு
    2. சகா,
      http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/kafirai_nanbarakuthal/
      இந்த சுட்டி என்ன கூறுகிறது எனில் அவைகள் அந்த காலத்தில் கூறப்பட்ட கட்டளைகள் என.அதாவது இந்த காலத்திற்கு அதை எடுத்துக்கொள்ளக்கூடாது.
      அதனால்தான் கூறுகிறேன் இந்த காலத்தில் இந்த வசனங்களுக்கான அவசியம் என்ன? அதை நீக்கிவிடலாம் அல்லவா?
      இதை படிக்கும்பொழுது முஸ்லிம்கள் மனதில் பிற மதத்தினர் பற்றி தவறான பிம்பம் ஏற்ப்படுகிறது அல்லவா?. அதைப்போல பிற மதத்தினருக்கும் தவறான பிம்பம் ஏற்ப்படுகிறது அல்லவா?
      இதை நீக்குவதுதானே முறை? சொல்லுங்கள் சகா.

      நீக்கு
    3. சகோ சகா,
      http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/islathil_por_en/

      இந்த சுட்டி என்ன கூறுகிறது எனில் போர் பற்றி கூறும் வசனங்கள் இஸ்லாமிய அரசாங்கத்திற்கு கூறப்பட்டதாம் தனி நபரோ இசுலாமிய குழுக்களோ இதை நடைமுறைப்படுத்தக்கூடாதாம்.


      யூதர்களையும்,கற்சிலைகளை(இந்துக்களை,இந்த காலத்தில் கிருத்துவர்களையும்,புத்த மதத்தினரையும் குறிக்கும்) வணங்குபவர்களையும்
      குரான் எதிரியாக பார்க்க சொல்கிறது. மேலும் இவர்களுடன் தான் போர் புரியவும் சொல்கிறது. தனி மனிதர்கள் போரில் ஈடுபடக்கூடாது என்பதை வரவேற்கிறேன்.
      குரான் படி இசுலாமிய அரசான பாக்கிஸ்தான் சிலைகளை வணங்கும் மக்களை கொண்ட இந்தியாவின் மீது படையெடுக்க இந்த குரான் வசனம்தான் காரணம் என்று அந்த ஆசியரியர் கூறுகிறாரா சகா? சொல்லுங்கள்.


      நீங்கள் கூறிய இரண்டு சுட்டிகளுமே உப்புக்கு சப்பான் விளக்கங்களையே அளித்துள்ளன என்பதை உங்களுக்கு புரியவைத்துள்ளேன் என நினைக்கின்றேன் சகா

      நீக்கு
  8. http://aatralarasau.blogspot.com/2013/01/blog-post_28.html
    சவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன சகோ சார்வாகன், எப்படி செய்துவிட்டீர்கள்,
      இந்த விவாதத்திற்கு யாரும் பதில் அளிக்க வரவில்லை அதற்குள் மற்றுமொரு விவாதமா. இதை முடித்துவிட்டு அங்கு வருகிறேன்.

      @சகா உங்களை நான் மனமார பாராட்டுகிறேன்.தன்னந்தனியா உங்களுடைய மதத்திற்காக விவாதம் செய்கிறீர்கள்.
      உங்களை போன்றவர்கள் மனிதத்திற்காக போராடினால் ஒட்டு மொத்த மனிதசமுதாயமே(இந்து,இஸ்லாம்,கிருத்துவம்,புத்தம்,யூதம்......நாத்திகம்) உங்களுக்கு நன்றியுடையதாய் இருக்கும் சகா.
      நீங்கள் ஏன் மதத்தை கடந்து மனிதகுலத்திற்காக உழைக்ககூடாது? சிந்தியுங்கள் சகா

      நீக்கு
  9. osho on quran

    Mohammed was an absolutely illiterate man, and the Koran, in which his sayings are collected, is ninety-nine percent rubbish. You can just open the book anywhere and read it, and you will be convinced of what I am saying. I am not saying on a certain page — anywhere. You just open the book accidentally, read the page and you will be convinced of what I am saying.

    Whatsoever one percent truth there is here and there in the Koran is not Mohammed's. It is just ordinary, ancient wisdom that uneducated people collect easily — more easily than the educated people, because educated people have far better sources of information — books, libraries, universities, scholars. The uneducated, simply by hearing the old people, collect a few words of wisdom here and there. And those words are significant, because for thousands of years they have been tested and found somehow true. So it is the wisdom of the ages that is scattered here and there; otherwise, it is the most ordinary book possible in the world.

    Muslims have been asking me, "Why don't you speak on the Koran? You have spoken on The Bible, on the Gita, this and that." I could not say to them that it is all rubbish; I simply went on postponing. Even just before I went into silence, a Muslim scholar sent the latest English version of the Koran, praying me to speak on it. But now I have to say that it is all rubbish, that is why I have not spoken on it — because why unnecessarily waste time?

    - From Unconciousness to Consciousness
    Chapter 5 by Osho

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @osho anbu
      HI, thanks for sharing this.recently i read (here and there) osho's book about sufi.
      hope you would have already read it. if not i suggest u 2 read. nice book to read.
      thanks for coming.

      நீக்கு
  10. // Muslims have been asking me, "Why don't you speak on the Koran? You have spoken on The Bible, on the Gita, this and that." I could not say to them that it is all rubbish; I simply went on postponing. Even just before I went into silence, a Muslim scholar sent the latest English version of the Koran, praying me to speak on it. But now I have to say that it is all rubbish, that is why I have not spoken on it — because why unnecessarily waste time? //

    சரக்கு இருந்தால் தானே எதுவும் சொல்லுவதற்கு, அதற்கு பதிலாக இப்படியும் மழுப்பலாம் .

    பதிலளிநீக்கு
  11. //சரக்கு இருந்தால் தானே எதுவும் சொல்லுவதற்கு, அதற்கு பதிலாக இப்படியும் மழுப்பலாம்//

    ஆமாம் குரானில் சரக்கு இருந்தாதானே சொல்வதற்க்கு.குப்பையில் என்ன சரக்கு இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // Mohammed was an absolutely illiterate man, and the Koran, in which his sayings are collected, is ninety-nine percent rubbish..//

      அவரே தொண்ணூற்றி ஒன்பது சதவிகிதம் rubbish என்றும் ஒரு சதவிகிதம் நல்ல கருத்துக்கள் (சரக்கு) இருக்கிறதென்றும் ஒத்துக்கொள்கிறார், உங்களுக்கு அது தெரியவில்லையா வாத்தியாரே? இருந்தாலும் அவுரு அந்த ஒரு சதவிகித நல்ல கருத்துக்களை பற்றியும் பேச மாட்டாராம் (!?) (பேசுனா தான் மாட்டிக்குவாரே.)

      நீக்கு
    2. சகா, இரண்டாவது பத்தியை படித்து பாருங்கள் அந்த ஒரு சதவீதமும் எப்படி வந்தது எனபதை சொல்கிறார். அப்புறம் எங்கே இருந்து அவர் மாட்டுவது?

      நீக்கு
  12. தமிழ் குர்ஆனில் ஒரு வேடிக்கை உண்டு.
    அல்லா சாமி முகமதுவை 'நீர்', 'சொல்வீராக' என்று மரியாதையாகவே பேசுவார். ஆனால் முகமதுவோ அல்லா சாமியை அவன் இவன் என்று ஏக வசனத்தில்தான் பேசுவார். ஒரு சாமி மனிதனுக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டிய அவசியம் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராபினுக்கு இதுவரை "தெரியாத" தகவல். பதில் ஏற்கனவே சொல்லியாச்சு ராபின், சொல்லியாச்சு. படிச்சு பாருங்க.

      http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/iraivanai_avan_enbathu_en/

      நீக்கு
    2. //ராபினுக்கு இதுவரை "தெரியாத" தகவல். பதில் ஏற்கனவே சொல்லியாச்சு ராபின், சொல்லியாச்சு. படிச்சு பாருங்க.// படிச்சு பாத்தாச்சு. முஸ்லிம்கள் அல்லாவை அவன் என்று சொல்வது ஏன் என்பதைத்தான் விளக்கியுள்ளார். அல்லா முகமதுவிடம் மரியாதையாக பேசுவதற்குக் காரணம் என்ன என்பதற்கு எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை.

      நீக்கு
    3. //படிச்சு பாத்தாச்சு. முஸ்லிம்கள் அல்லாவை அவன் என்று சொல்வது ஏன் என்பதைத்தான் விளக்கியுள்ளார். அல்லா முகமதுவிடம் மரியாதையாக பேசுவதற்குக் காரணம் என்ன என்பதற்கு எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை.//

      நல்லா படிச்சீங்க போங்க, நுனிப்புல் மேயாதீங்க, திரும்பவும் படிங்க. அந்த லிங்குலேயே இதற்கான பதிலும் இருக்கு. சும்மா ஒரு ரெடிமேட் பதில குடுக்காதீங்க.

      நீக்கு
    4. நீங்க முதலில் படிச்சுப் பாருங்க பாய். ஏதாவது கேள்வி கேட்டா உடனே பி.ஜெ லிங்கை கொடுக்கவேண்டியது. அவரு ஏதாவது சப்பை கட்டு கட்டியிருப்பார். அங்கு பதில் இல்லை என்றால் அதுதான் இது என்று செந்தில்மாதிரி பேசவேண்டியது.

      நீக்கு
    5. //படிச்சு பாத்தாச்சு. முஸ்லிம்கள் அல்லாவை அவன் என்று சொல்வது ஏன் என்பதைத்தான் விளக்கியுள்ளார். அல்லா முகமதுவிடம் மரியாதையாக பேசுவதற்குக் காரணம் என்ன என்பதற்கு எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை.//

      ஓ, அவுரா நீங்க, மொதல்லையே சொல்லிருக்கக்கூடாது? உங்களுக்கு புரியிற மாதிரி சொல்லிருப்பேனே.

      மரியாதையாக விளிப்பது ஒரு தவறா? உதாரணத்திற்கு, 60 வயதாகும் உங்கள் தந்தை, 35 வயதுடைய உங்களை பற்றி பொது இடத்தில் வைத்து "அவன் எங்கயோ ஊர்சுத்த போயிருக்கான்" என்று சொல்லுவது பண்பா, அல்லது மரிதையாக "அவர் வெளில போயிருக்கார்" என்று சொல்லுவது பண்பா என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

      நீக்கு
    6. நான் என்ன கேட்டேன் என்பதை புரிந்து கொள்ளாமலேயே உதார் விடுகிறீரே. நான் கேட்டது அல்லா எதற்கு ஒரு மனிதனுக்கு மரியாதை கொடுத்து பேசவேண்டும் என்று. நீர் ஒரு மனிதன் எதற்கு இன்னொரு மனிதனுக்கு மரியாதை கொடுப்பாது பற்றி பேசுகிறீர் இதற்கு மேல் உம்மைப்போல புத்திசாலிக்கு எப்படி விளக்கவேண்டும் என்று தெரியவில்லை. பதில் தெரியவில்லை என்றால் சும்மா இருக்கலாம், அதைவிடுத்து காமெடி செய்துகொண்டிருக்கிறீர்.

      நீக்கு
    7. // நான் கேட்டது அல்லா எதற்கு ஒரு மனிதனுக்கு மரியாதை கொடுத்து பேசவேண்டும் என்று. நீர் ஒரு மனிதன் எதற்கு இன்னொரு மனிதனுக்கு மரியாதை கொடுப்பாது பற்றி பேசுகிறீர்//

      மனிதனுக்கே இப்படிப்பட்ட பண்புகள், குணங்கள் தேவைப்படும்போது, மனிதனையும் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்து காக்கும் இறைவனுக்கு எவ்வளவு உயரிய பண்புகள் இருக்ககூடும்? ஆமா, எனக்கு ஒரு டவுட்டு ராபின், உங்க "இது"ல எல்லாரையும் மரியாதை குறைவாகத்தான் பேசுவார்களா?

      நீக்கு
    8. ஒரு முட்டாளிடம் பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

      நீக்கு
    9. //
      நான்:ஆமா, எனக்கு ஒரு டவுட்டு ராபின், உங்க "இது"ல எல்லாரையும் மரியாதை குறைவாகத்தான் பேசுவார்களா?

      Robin : ஒரு முட்டாளிடம் பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.. //

      இப்ப எப் டவுட்டு க்ளியர் ஆஹிடுச்சு ராபின். சட்டியில இருந்தா தானே அகப்பையில வரும்.

      நீக்கு
    10. இப்ப என் டவுட்டு க்ளியர் ஆஹிடுச்சு ராபின். சட்டியில இருந்தா தானே அகப்பையில வரும்.

      நீக்கு
    11. வாங்க ராபின்,
      //தமிழ் குர்ஆனில் ஒரு வேடிக்கை உண்டு.
      அல்லா சாமி முகமதுவை 'நீர்', 'சொல்வீராக' என்று மரியாதையாகவே பேசுவார். ஆனால் முகமதுவோ அல்லா சாமியை அவன் இவன் என்று ஏக வசனத்தில்தான் பேசுவார். ஒரு சாமி மனிதனுக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டிய அவசியம் என்ன?//

      உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லப்போகிறேன்.(உங்களுக்கே அது தெரிந்திருக்கும் இருந்தாலும் ) அதாவது குரான் வசனங்கள் முழுமையும் முகம்மது மக்களை பார்த்து பேசியதுதான்.
      சில இடங்களில் முகமதுவே நீர் கூறும் என்று சும்மா அடித்துவிடுவார்கள்...அடைப்புக்குரிக்குள்ளும் (சிலபல இடங்களில் ) வைப்பார்கள் . உதரனத்திற்க்கு
      //5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; //

      இந்த வசனம் அல்லா நபிக்கு சொல்வது மாதிரி நமக்கு கொடுத்துள்ளார்கள். (சரி இது உண்மையெனில் குரான் மக்களுக்கா? நபிக்கா? :) )
      ஆனால் உண்மையில் அந்த வசனத்தை அடைப்புக்குறியை நீக்கி படித்தால் அதை முகமது மக்களுக்கு கூறியதுதான் என தெரியவரும்.

      நீக்கு
  13. Osho’s interaction with Mohammedans

    In Mohammedanism they went to the very logical end: either you have to be ready to be saved or be ready to die. They don't give you any other choice, because they believe that if you go on living unsaved you may commit sins and you will suffer in hell. By killing you they are at least taking away all the opportunities of falling into hell.
    And to be killed by a savior is almost to be saved. That's what Mohammedans have been saying, that if you kill somebody in order to save him, he is saved; God will look after it. He is saved and you are accumulating more virtue in saving so many people. Mohammedans have killed millions of people in the East. And the strange thing is that they believed they were doing the right thing. And whenever somebody does a wrong thing believing that it is right, then it is more dangerous. You cannot persuade him otherwise, he does not give you a chance to be persuaded. In India I tried in every possible way to approach Mohammedan scholars, but they are unapproachable. They don't want to discuss any religious matter with somebody who is not a Mohammedan.
    They have a word of condemnation for the person who is not a Mohammedan. Just as Christians call him a heretic, Mohammedans call him kaffir—which is even worse than heretic. Kaffir comes from a word, kufr; kufr means sin, a sinner. Kaffir means a sinner: anybody who is not a Mohammedan is a sinner. There are no other categories, only two categories. Either you are a Mohammedan, then you are a saint…. Just by being a Mohammedan you are a saint, you are saved, because you believe in one God, one prophet—Mohammed—and one holy book, the Koran. These three things believed is enough for you to be a saint. And those who are not Mohammedans are all kaffirs, sinners….
    India, although a Hindu country, has the biggest number of Mohammedans. Still it is impossible to communicate. I have tried my best, but if you are not a Mohammedan then how can you understand? There is no question of any dialogue: you are a kaffir

    பதிலளிநீக்கு
  14. …. Just by being a Mohammedan you are a saint, you are saved, because you believe in one God, one prophet—Mohammed—and one holy book, the Koran. These three things believed is enough for you to be a saint. And those who are not Mohammedans are all kaffirs, sinners….

    -Osho-

    பதிலளிநீக்கு
  15. I am not a messiah especially sent by God. In the first place there is no God to send anyone. In the second place, for the argument's sake, if there is a God who can create the whole creation, he need not have these mediocre messiahs to change people. He can do it himself

    -Osho-

    பதிலளிநீக்கு
  16. I cannot take you to paradise because there is none. These are all fictions created to exploit humanity -- the paradise, the hell -- because it is a simple psychology that man can be controlled by two things, fear and greed. For fear there is hell; for greed there is heaven.
    It is very easy to manipulate human beings between these two poles. Nobody wants to be in hell for eternity -- everybody wants to be in heaven and have all the pleasures eternally. Naturally, if you want heaven and you do not want hell, you have to follow these people who are proclaiming themselves to be the only son of God, the only prophet of God.

    -Osho-

    பதிலளிநீக்கு
  17. Humanity has suffered for thousands of years. No prophet, no messiah, no savior has been of any help; on the contrary, they have created every kind of trouble for man.

    ~Osho~

    பதிலளிநீக்கு
  18. நல்ல பதிவு நல்ல கேள்விகள் ஆனால் பதில்...???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரும் சொல்ல வரவில்லை சகோ :( பதில் இருந்தால் தானே வருவார்கள்

      நீக்கு
  19. நல்லா வாய் கிழியே பேசுரங்கே ஆனா ஒருத்தனும் பதில் சொல்ல மாட்டேன்கிறான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க யுவா,
      அவங்களுக்கு வந்தா ரத்தமா நமக்கு வந்தா தக்காளி சட்னியா? என்ன சொல்றது

      நீக்கு
  20. @ Iniyavaniniyavan Iniyavan
    @ YUVA

    //நல்ல பதிவு நல்ல கேள்விகள் ஆனால் பதில்...???//
    //நல்லா வாய் கிழியே பேசுரங்கே ஆனா ஒருத்தனும் பதில் சொல்ல மாட்டேன்கிறான் //

    எலே மக்கா, அல்ரெடி பதில் சொல்லியாச்சுவே, மேல பாருவே. இர்ந்தாலும் மருக்கா சொல்றேன் குறிச்சுக்கவே.

    உங்கள் பதிவிற்கான பதில் இந்த தளத்தில் கிடைக்கக்கூடும். படித்துப்பாருங்கள்.

    http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/kafirai_nanbarakuthal/

    http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/islathil_por_en/

    YUVA, நல்லா நாகரீகமா பேசுறீங்கவே. அங்க ராபின் அண்ணாச்சி என்னன்னா ஏன் அல்லா மரியாத குடுத்து முகமது நபிய சொல்துதாறுன்னு கேக்குறாரு, இங்க நீங்க என்னனா இப்புடி, நீங்கல்லாம், நல்லா வருவீங்கவே, நல்லா வருவீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @சகா,
      உங்கள் ஆசிரியர் கொடுத்த பதில் ஏன் செல்லாது என்று தெளிவாக கூறியுள்ளேன். கேள்விகளும் கேட்டுள்ளேன்.(மேலே)
      நீங்கலாக பதில் சொல்ல மாட்டீர்கள்...ஐயாவிடமாவது கேட்டு சொல்லுங்கள்

      நீக்கு
  21. இசுலா​மோ இசுலாமிய​ரோ சம்பந்தப்பட்டதாக எந்த​வொரு சர்ச்​சை​யோ பிரச்சி​னை​யோ வந்தால் உடனடியாக நம் சமூகம் முழுவதும் இரண்டு அணியாக பிரிந்துவிடுகிறது. இசுலா​மை எதிர்ப்பவர்கள் ஓரணி என்றும் இசுலா​மை ஆதரிப்பவர்கள் ஓரணி என்றும். எதிர்ப்பவர் இசுலா​மே அடிப்ப​டையில் தவறானது ​மோசமானது இசுலாத்தின் ​பெயரால் ந​டை​பெறும் அ​னைத்து சமூக வி​ரோத ​செயல்பாடுகளுக்கும் அடிப்ப​டை இசுலாத்தி​லே​யே உள்ளது என்ற கண்​ணோட்டத்தில் விமர்சிக்கிறார்கள். மாறாக இசுலாத்​தை ஆதரிப்பவர்கள் இந்த உலகின் அ​னைத்து தீ​மைகளுக்கும் இசுலாத்​தை இந்த ஒட்டு​மொத்த உலகமும் தழுவாததுதான் காரணம் என்றும், இந்த உலகின் எல்லா பிரச்சி​னைகளுக்கும் இசுலா​மே தீர்வு என்பதாகவும் விளக்குகிறார்கள்.

    இசுலாம் மட்டுமல்ல, இந்த உலகில் உள்ள ஒவ்​வொரு மதத்திலும் அதன் தத்துவ நூல்களிலும் காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களும், என்​​றென்​றைக்குமான மனிதகுலம் அ​னைத்துக்கும் ​பொருந்தக்கூடிய அம்சங்களும் இருக்க​வே ​செய்கின்றன. தனக்கு மாற்றான மதக் கருத்துக்க​ளையும், நூல்க​ளையும் விமர்சிக்கத் துவங்கினால் அது சார்ந்தவர்களின் மதக்கருத்துக்களுக்கும், நூல்களுக்கும் ​பொருந்தும் தா​னே.

    உண்​மையில் மதக்கருத்துக்களும் மத நம்பிக்​கைகளும் ​வைத்துக் ​கொண்டு மதம் தன்னளவில் ஆபத்தான நி​லைப்பாடுக​ளை எடுப்பதில்​லை, எடுக்கவும் முடியாது. இது ​போன்ற​வை அன்றன்​றைய ஆளும் வர்க்கங்களின் நலன்களிலிருந்துதான் எடுக்கப்படுகின்றன. மதத் தீவிரவாதம் என்பது ஏ​தோ ஒரு பிரிவு ஆளும் வர்க்கங்களின் அரசியல் மற்றும் ​பொருளாதார நலன்களிலிருந்​தே எடுக்கப்படுகின்றன.

    எவ்வாறு இந்துத் தீவிரவாதம் என்பது இந்தியா மற்றும் அ​தைச் சுரண்டத் துடிக்கும் உலக ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவு நலனிலிருந்து பாபர் மசூதி இடிப்​பை அடிப்ப​டையாக ​வைத்து உருவாக்கி வளர்க்கப்பட்ட​தோ, அ​தைப் ​போல​வே சர்வ​தேச அளவில் இசுலாமிய தீவிரவாதம் என்பது உலக ஆளும் வர்க்கங்களின் குறிப்பாக அ​மெரிக்க ஆளும் வர்க்கத்தின் நலனிலிருந்து திட்டமிட்டு உருவாக்கப்பட்டு இன்றளவும் ​போற்றி வளர்க்கப்படுகிறது.

    ​சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அ​மெரிக்காவால் உருவாக்கி வளர்க்கப்பட்ட இசுலாமிய தீவிரவாதமானது, இன்​றைக்கு ஈராக், லிபியா, சிரியா, பாகிஸ்தான் என பல நாடுகளிலும் அ​மெரிக்க நலன்களுக்குச் சாதகமாக ஆயுதங்களும் பணமும் ​கொட்டி திட்டமிட்டு வளர்க்கப்பட்டுக் ​கொண்டிருக்கிறது.

    நம்மில் பலரும் இந்த சர்வ​தேச வ​லைப்பின்ன​லை புரிந்து ​கொள்ளாமல் அது மூட்டும் ​நெருப்புக்கு ​தெரிந்தும் ​தெரியாமலும் ​நெய்யூற்றிக் ​கொண்டிருக்கி​றோம்.

    நமக்கு இன்​றைய உடனடித் ​தே​வை என்பது குரானி​லோ, ​பைபளி​லோ, அல்லது இந்து மத ​வேதங்களி​லோ உள்ள தவறுக​ளையும், காலத்துக் குதவாத கருத்துக்க​ளையும் அம்பலப்படுத்துவ​தோ, சக மனிதர்களுக்கு எதிரான காழ்ப்புணர்வுக​ளையும், ​வெறுப்புக​ளையும் விடாது தூண்டிக் ​கொண்​டே இருப்பதல்ல. மாறாக உனது நம்பிக்​கைகள் உனக்கு, எனது நம்பிக்​கைகள் எனக்கு. நம் தனிப்பட்ட விருப்பு ​வெறுப்புகள் அவரவ​ரோடு, ​சேர்ந்து வாழும் சமூகத்தில் நம் மத நம்பிக்​கைகளுக்கு அப்பாற்பட்டு நம் அ​னைவருக்கும் ​பொதுவான அரசியல் சாசனங்களுக்கும், சட்டங்களுக்கும், ​பொது நீதிக்கும் கட்டுப்பட்டு வாழ்​வோம் என்பதுதான்.

    அக்கருத்​தை நம் எல்​லோரு​டைய விவாதங்களிலும் ​மையமாக்கி, அ​னைவ​ரையும் அதற்கு உடன்படும் ஒரு நி​லை​யை ஏற்படுத்துவதாக அ​மைய ​வேண்டும். இன்​றைக்கு இசுலாமிய தீவிரவாத​மோ, இந்து தீவிரவாத​மோ இ​வை எல்லாவற்றிற்கும் அடிப்ப​டை அ​மெரிக்கா த​லை​மையிலான உலக ஆளும் வர்க்கங்களும் அவர்களின் ​பேரா​சைகளும் தான் என்ற புரித​லை அ​னைவருக்கும் ஏற்படுத்துவதுதான் சரியானதாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Well said..
      Well said..
      Well said....

      உணர்வுடையோர் உணர்ந்தால் சரி.

      நீக்கு
    2. சஹா

      1.குரான் 15.9 ல் நினைவூட்டி என்பது அப்போது முற்றுப் பெறாத குரானைக் குறிக்கிறது என அந்த வ்சனத்தை மட்டும் வைத்து பொருள் கொள்ள முடியுமா?
      நினை வூட்டி என்றால் தோரா,பைபிளுக்கு நினைவூட்டி ஹி ஹி. குரானை விட தோரா பைபிளே முக்கியம் என அல்லாஹ் கூறுகிறார்.

      2. குரானின் இறுதி சூரா,வசனத்தில் முழுமை ஆகி விட்டது பாதுகாப்பேன் என சொல்வதை பாதியில் அல்லாஹ் சொல்லலாமா!!அல்லாஹ் எந்த காலத்தில் தெளிவாக பேசினார்?

      நன்றி!!

      நீக்கு
    3. I am expecting reasonable reply from any honest Muslim. But i believe there must be a proper explanation for all the above. More over that, you can't compare a 7th Century writings to today's life. You must take a only good things from it

      நீக்கு
    4. Saha, ChennaiJanuary 28, 2013 at 4:28 PM

      Well said..
      Well said..
      Well said....

      ஏன் சொல்லமாட்டிங்க Well said.
      குப்பைகளில் கைவைக்காதீர்கள்.
      குப்பைகளை சுத்தம் செய்யாதீர்கள்.
      இப்படியான கருத்துக்கள் உங்களை மகிழ்வித்து மேலும் ஊக்கம் கொடுக்கும் என்பது தெரிந்தது தானே.
      1400 வருடங்களுக்கு முன்பு கூட உதவாத குரான் குப்பை வன்முறை கருத்துக்களை எங்காலத்துக்கும் பொருந்தும் என்று சொல்லி மேலும் குப்பை கொட்டி பிற மக்கள் மீது அஜராகம் செய்வதிற்க்கு ஆதரவான கருத்து தான் மேலே தெரிவிக்கபட்டது.
      இஸ்லாமியர்கள் தவிர உலக பிற மத மக்கள்,நல்ல இஸ்லாமியர்கள் உட்பட ​பொதுவான அரசியல் சாசனங்களுக்கும்,சட்டங்களுக்கும், பொதுவான நீதி நியாயங்களுக்கே கட்டுப்பட்டே வாழ்​கிறார்கள்.இஸ்லாமியர்கள் மட்டுமே மத காட்டுமிராண்டி சட்டங்களை காவி கொண்டு திரிகிறார்கள்.

      நீக்கு
    5. @naatkurippugal
      // இசுலா​மே அடிப்ப​டையில் தவறானது ​மோசமானது இசுலாத்தின் ​பெயரால் ந​டை​பெறும் அ​னைத்து சமூக வி​ரோத ​செயல்பாடுகளுக்கும் அடிப்ப​டை இசுலாத்தி​லே​யே உள்ளது என்ற கண்​ணோட்டத்தில் விமர்சிக்கிறார்கள்//

      //இரத்தத்தின் மீதே அன்றி இஸ்லாம் வளரவில்லை, வெற்றி அல்லது சுவனம் இந்த ஒரே தாரக மந்திரத்தோடு படை தயாரானது .//
      என்று பின்வரும் பதிவு கூறுகிறது. இந்த நிகழ்வு உண்மையா பொய்யா?
      http://samuthayaarangam.blogspot.in/2013/01/abu-rukshan.html#comment-form

      ரஷ்யா ஆப்கான் பிரச்சனை எப்பொழுது வந்தது 1900 பிறகு தானே?
      அதற்க்கு முன்பு ஒன்றுமே நடக்கவில்லையா? வரலாற்றை புரட்டி பாருங்கள்.

      ஒரு சில குண்டுவெடிப்புகளை வைத்து இந்து தீவிரவாதம் என்பது மடமை. அதை சங் தீவிரவாதம் என்பதே சரி.
      இந்துக்கள் யாரும் குண்டுவெடிப்புகளை நியாயப்படுத்தவில்லை.எந்த வன்முறைகளையும் நியாயப்படுத்தவில்லை.
      சங் தீவிரவாதத்தை அம்பலப்படுத்தியது இந்துக்களே. குஜராஜ் கலவரத்திற்கு வழக்கு தொடர்ந்தது ஒரு இந்து பெண்ணே.

      ஆனால் பல முஸ்லிம்கள் ஒசாமாவிர்க்கு தொழுகை செய்ததும், காசபிர்க்கு ஆதரவு அளித்ததும்,தாலிபான்களுக்கு ஆதரவு அளிப்பதும் எந்த விதத்தில் நியாயம் என்று எங்களுக்கு விளக்குவீர்களா?
      ஒவைசி 100 கோடி இந்துக்களை கொல்வேன் என்பதற்கு கண்டனம் தெரிவிக்காதவர்கள், இந்திய இராணுவத்தினரின் தலைகளை வெட்டியதற்கு கண்டனம் தெரிவிக்காதவர்கள், ஷியா மற்றும் சுபி முஸ்லிம்கள் சுன்னி முஸ்லிம்களால் கொல்லப்படும்பொழுது கண்டனம் தெரிவிக்காதவர்கள், துப்பாக்கி,விஸ்வரூபம் படத்திற்கு மட்டும் கண்டனம் தெரிவிப்பது ஏன்?

      துரதிஷ்ட்டவசமாக குரானிலே தீவிரவாதத்தை ஆதரிப்போதுபோல உள்ள வசனத்தை உண்மையாக ஏற்று பல தீவிரவாதிகள் உருவாகியுள்ளனர் எனபதை என் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். எனவேதான் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கவேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். நீக்குவது சாத்தியம் இல்லாத பட்சத்தில் போதிய விளக்கத்தை ஒவ்வொரு குரானிலும் தரவேண்டும் எனபதே என் வேண்டுகோள்.

      //மாறாக உனது நம்பிக்​கைகள் உனக்கு, எனது நம்பிக்​கைகள் எனக்கு.//
      நமது தமிழ் முஸ்லிம்களிடம் நாம் இப்படி இருக்கலாம். ஆனால் ஆப்கான் ,பாக் போன்ற நாடுகளில் நம்பிக்கைகள் தீவிரவாதத்திற்கு வித்திட்டுள்ளதே அதற்க்கு என்ன பதில் கூறப்போகிறீர்கள்?

      சுபி முஸ்லிம்களை நமது வாகாபிய தமிழ் முஸ்லிம்களே நீங்கள் இணை வைக்கிறீர்கள், தர்க்கா வழிபாடு கூடாது. அவற்றை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்கின்றனரே அதற்க்கு தங்கள் பதில் என்ன?

      // இ​வை எல்லாவற்றிற்கும் அடிப்ப​டை அ​மெரிக்கா த​லை​மையிலான உலக ஆளும் வர்க்கங்களும் அவர்களின் ​பேரா​சைகளும் தான் என்ற புரித​லை அ​னைவருக்கும் ஏற்படுத்துவதுதான் சரியானதாகும்.//

      மக்கள் மதத்தை கடந்து மனிதத்தால் ஒன்றிணைய வேண்டும். அதுவே அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு தரும். உலகம் அமைதி பெற வழி செய்யும்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
    6. @Saha
      Well said..
      Well said..
      Well said....

      உணர்வுடையோர் உணர்ந்தால் சரி.///
      இவ்வளவு பெரிய பதிவு போட்டும்...விளக்கம் கொடுத்தும் நீங்கள் உனரவில்லையே சகோ


      நீக்கு
    7. @Bommiah
      You are right bommiah. thanks for your comment

      நீக்கு
  22. நிஜத்தில் நாம் பார்க்கும் இஸ்லாமியர்களைவிட இணையத்தில் வரும் எல்லா இஸ்லாமிய பதிவர்களுமே ஒரே விதமான வஹாபிதனமாக பேசுவது எழுதுவது அதிகரித்துக்கொண்டே வருவது கவலையான விஷயம்.இஸ்லாமியர்கள் எல்லாவற்றையுமே மதம் என்கிற கண்ணோட்டத்துடனே பார்ப்பவர்கள். அவர்கள் அரசியல் சமூகம் தொடர்பாக பொதுவாக எந்த விதமான போராட்டத்தையும் வழிநின்று நடத்துவது கிடையாது.(விதிவிலக்குகள் இருக்கலாம்)ஆனால் அமெரிக்காவில் எதோ ஒரு கிறுக்கன் கால்மணி நேரம் ஓடும் யாரும் பார்க்காத ஒரு படத்துக்கு கூட அதகளம் செய்து தங்கள் மத விசுவாசத்தை காட்டுவார்கள்.(அண்ணாசாலை போராட்டத்தின் போது தொழுகை நேரம் வந்த பொழுது அமைதியாக தொழுகை செய்து விட்டு பின்னர் சரமாரியாக அமெரிக்க எம்பசி மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள்) இந்த தலைமுறையை சேர்ந்த பல இஸ்லாமியர்களுக்கு இதுதான் உண்மையான இஸ்லாம் என்ற எண்ணம் வேரூன்றிவிட்ட படியால் மென்மையான முஸ்லிம்களை ஓரம் கட்டி தங்கள் பிராண்ட் வஹாபி இஸ்லாமை முன் நிறுத்துகிறார்கள். எல்லா மத போதனைகளும் வேறு வேறு விதமாக அர்த்தப்படுத்திக்கொள்ள கூடியைவைகள் தாம். உடனே இதற்கு பீஜே வை லிங்க் காட்டி இதை படி என்று சொல்ல வேண்டாம் இஸ்லாமிய நண்பர்களே. ஐரோப்பாவில் இன்று விவாதிக்கப்பட்டு வரும் ஒரு முக்கியமான விஷயம் இஸ்லாமோபோபியா. நெதர்லாந்து பிரான்ஸ் போன்ற நாடுகளில் இஸ்லாம் பற்றிய விவாதம் தற்போது சூடு பிடித்து வருகிறது. அங்கு கிருஸ்துவ வலதுசாரிகள் பெரும்பான்மையை நோக்கி செல்கிறார்கள். மதத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாத பல ஐரோப்பிய நாடுகளில் இன்று மக்கள் இஸ்லாம் மட்டும் ஏன் இப்படி என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.விஸ்வரூபம் சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் கூட மக்கள் மனதில் இப்படி பட்ட எண்ணம் உருவாகலாம். மதவாதிகள் சகிப்புத்தன்மையோடு இல்லாததினால் பாதிக்கப்படப்போவது அப்பாவிகள்தான்.ஆனால் அதைப்பற்றி அவர்களுக்கு என்ன கவலை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காரிகன்,
      உங்கள் கருத்துக்கள் யாவும் உண்மையை பிரதிபலிக்கின்றன.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  23. சகோ சஹா,
    குரான் முந்தைய வேதங்களின் நினைவூட்டி மட்டுமே என 15.6, 15.9 கூறுகிறது இன்னும் ஒரு வசனம். இது மெதினாவில் ஹிஜ்ரா தொடக்கத்தில் கூறப்பட்டது.

    2:41. இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.

    அப்புறம் பைபிள் ஒரு ஆபாச புத்த்கம் என பி.ஜே அல்லாஹ் வை கேவலப் படுத்தலாமா??

    இல்லை இந்த வசனம் இறக்கிய போது அல்லாஹ் க்கு பைபிள் தெரியாது அப்புறம் யூதர்கள் (ஏ)மாத்திப் புட்டான் என்றால் அல்லாஹ் க்கு ஞாபக மறதியா!!

    இதைப் பாருங்க அப்படித்தான் தெரியுது!!

    2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

    இங்கே மறக்க மாட்டார் முக்மது(சல்) என்கிறது ம்ம்ம்ம்ம்ம்

    87:6. (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-

    என்னங்க இது!!!

    மூமின்கள் இப்படி இருப்பது ஏன் என் அகாஃபிர்கள் சிந்திக்க மாட்டீர்களா!!!!
    ***
    Thank you

    பதிலளிநீக்கு
  24. All of read this
    http://www.answering-islam.org/Responses/Menj/pbuh.htm
    The "Mystery" of PBUH Revealed:

    Allah's Prayers For Muhammad Examined

    பதிலளிநீக்கு
  25. //காரிகன்January 28, 2013 at 7:05 PM
    மதத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாத பல ஐரோப்பிய நாடுகளில் இன்று மக்கள் இஸ்லாம் மட்டும் ஏன் இப்படி என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.//
    உண்மை.நானும் கூட தான் யாராவது என்னை பாக்கிஸ்தானி என்று நினைத்து விடுவார்களோ என்ற பயத்தில் நான் இஸ்லாமியன் கிடையாது என்பதை நிறுவவே முன்நிற்பேன். இது என்னை தீயவன் என்று மற்றவர் நினைக்காதிருக்க வேண்டும் என்ற ஒரு தற்பாதுகாப்பு நடவடிக்கை. ஏன் லண்டனில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களை ரமில்ஸ் என்றும், இன்டியன், சிறிலங்கன் என்றும் தானே அறிமுகபடுத்துகின்றனர். தமிழகத்தில் ஏன் மனித விரோத செயல்பாடுகள் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  26. வேலைப்பளுவினால் விவாதத்தில் நேரத்தில் பங்கு கொள்ளமுடியவில்லை.
    முஸ்லிம்களின் சார்பாக விவாதத்தில் பங்கெடுத்த சகா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடன் விவாதம் செய்த சகோ சார்வாகன், வவ்வாலுக்கும்,ராபினுக்கும்,osho anbu,வேக நரிக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
    பின்னூட்டமிட்ட N,உதயம்,Iniyavaniniyavan Iniyavan,YUVA,naatkurippugal,Bommiah மற்றும் காரிகன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. என்னு​டைய பதிவில் நான் முன்​வைத்த சில அடிப்ப​டையான கருத்துக்க​ளை நீங்கள் கவனப்படுத்தவில்​லை.

    "உண்​மையில் மதக்கருத்துக்களும் மத நம்பிக்​கைகளும் ​வைத்துக் ​கொண்டு மதம் தன்னளவில் ஆபத்தான நி​லைப்பாடுக​ளை எடுப்பதில்​லை, எடுக்கவும் முடியாது. இது ​போன்ற​வை அன்றன்​றைய ஆளும் வர்க்கங்களின் நலன்களிலிருந்துதான் எடுக்கப்படுகின்றன. மதத் தீவிரவாதம் என்பது ஏ​தோ ஒரு பிரிவு ஆளும் வர்க்கங்களின் அரசியல் மற்றும் ​பொருளாதார நலன்களிலிருந்​தே எடுக்கப்படுகின்றன."

    இன்​றைக்கு நடந்து ​கொண்டிருப்ப​வை எதுவும் அடிப்ப​டையில் மத சம்பந்தப்பட்ட பிரச்சி​னை அல்ல. இ​வை அ​னைத்தும் அடிப்ப​டையில் சமூக ​பொருளாதார அரசியல் ​வேர் ​கொண்ட​வை. ​மேலும் நான் 'இந்து தீவிரவாதம்' என்ற ​சொற்​றொட​ரை​யோ அல்லது 'இசுலாம் தீவிரவாதம்' என்ற ​சொற்​றொட​ரை​யோ அந்தந்த மதம் சார்ந்த அ​னைத்து மக்க​ளையும் குறிக்கும் ​சொல்லாக பயன்படுத்தவில்​லை. நீங்கள் ​சொல்வது ​போல சங்பரிவாரத்தின் அரசியல், சமூக, ​பொருளாதார ​பேரா​சைகள் தான் 'இந்துத் தீவிரவாதமாக' முன்​னெடுக்கப்படுகிறது. அது ​போல​வே தான் இசுலாமிய தீவிரவாதமும். நாம் ஏன் இவற்றின் ​தோற்றம் மற்றும் அடிப்ப​டைக​ளை காணத் தவறுகி​றோம்.

    இன்​றைக்கு இசுலாமியத்தின் ​​பேரலான தீவிரவாதம் யாருக்கு பயன்பட்டுக் ​கொண்டிருக்கிறது? யாரால் ஊட்டி வளர்க்கப்பட்டுக் ​கொண்டிருக்கிறது என்ற ​வேர்க​ளை ​நோக்கி ஏன் நம்மால் பயணிக்க முடியவில்​லை? என்ப​வை​யே என் வாதத்தின் ​மையமாக இருக்கிறது.

    உலக ஆதிக்கத்திற்காகவும், உலக நாடுகளின் ​பொருளாதாரம் முழுவ​தையும் தன்னு​டைய நலன்களுக்குச் உட்பட்டதாக மாற்றவும் அ​மெரிக்கா உலக மக்கள் அ​னைவ​ரையும் யுத்த பதட்டத்தில் ஆழ்த்திக் ​கொண்டிருக்கிறது. இது குறித்தும் கூட என் பின்னூட்டத்தில் "இன்​றைக்கு ஈராக், லிபியா, சிரியா, பாகிஸ்தான் என பல நாடுகளிலும் அ​மெரிக்க நலன்களுக்குச் சாதகமாக ஆயுதங்களும் பணமும் ​கொட்டி திட்டமிட்டு வளர்க்கப்பட்டுக் ​கொண்டிருக்கிறது." குறிப்பிட்​டேன். அது குறித்தும் உங்கள் கவனம் குறிக்கப்படவில்​லை.

    உலக வரலாற்றில் தன் ​கையில் மக்களின் இரத்தக் க​றைபடியாத மதம் எது​வென்று ​சொல்லுங்கள்?

    ஒசாமாவற்கு ​தொழு​கை ​செய்த​தைக் குறிப்பிடும் நாம், ​கோட்​சே​வை இன்​றைக்கு வ​ரைக்கும் புனிதப்படுத்தும் ​போக்​கையும் இ​ணைத்​தே புரிந்து ​கொள்ள ​வேண்டியிருக்கிறது.

    //மக்கள் மதத்தை கடந்து மனிதத்தால் ஒன்றிணைய வேண்டும். அதுவே அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு தரும். உலகம் அமைதி பெற வழி செய்யும்.//

    இது​வே என்னு​டைய விருப்பமும். ஆனால் அந்த இலக்​கை அ​டையும் வழிகள் குறித்த பார்​வைகளில்தான் நாம் ஒரு பார்​வை​யை வந்த​டைய ​வேண்டியிருக்கிறது. "நான் மாறிட்​டேன் அப்ப நீங்க?" என்ற விளம்பர வசனங்கள் வாழ்க்​கைக்கு உதவுமா? நம்​முடன் வாழ்பவர்க​ளை​யே நம் கருத்துக்க​ளை ஏற்க ​வைப்பதில் பல ஆயிரம் சிக்கல்கள் இருக்கும் ​பொழுது பல ​கோடி மக்க​ளை நாம் நி​னைத்த மாத்திரத்தில் மாற்றிவிட முடியுமா? உடனடியாக நிகழவில்​லை என்ற ​கோபத்தில் ஆத்திரத்தில் நிதானம் தவறுவது நம் இலக்​கை அ​டைவதில் என்​றென்​றைக்குமான ​தோல்விக்குத்தா​னே வழி வகுக்கும்.

    மீண்டும் நான் ப​ழைய பின்னூட்டத்தில் கூறிய​தைக் கூறிய முடிக்கி​றேன். மதத் தீவிரவாதம் என்பது மதத்தின் ​மீதான மக்களின் நம்பிகைகளிலிருந்​தோ, மதத்​தை பரப்ப ​வேண்டும் என்ற ​நோக்கத்திலிருந்​தோ, மதக் கருத்துக்களில் உள்ள தீய முன்னுதாரணங்களிலிருந்​தோ ​தோன்றுவ​தோ வளர்வ​தோ இல்​லை. அ​வை அன்றன்​றைய ஆளும் வர்க்கங்களின் ​பேரா​சைகளிலிருந்​தே ஊட்டி வளர்க்கப்படுகின்றன.

    நம் காலகட்டத்தில் இசுலாமியத் தீவிரவாதத்தின் ​வேர் அ​மெரிக்கா த​லை​மையிலான உலக வல்லாதிக்க சக்திக​ளே! இசுலாமியத் தீவிரவாதம் என்பது அ​மெரிக்க இராணுவத்தின் மற்​றொரு ப​டைப்பிரி​வே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க naatkurippugal மகேஷ்,

      //மதத் தீவிரவாதம் என்பது ஏ​தோ ஒரு பிரிவு ஆளும் வர்க்கங்களின் அரசியல் மற்றும் ​பொருளாதார நலன்களிலிருந்​தே எடுக்கப்படுகின்றன."//
      இதை நான் ஏற்கிறேன். மேலும் இசுலாம் என்பது வெறும் மதம் மட்டுமல்ல அதில் அரசியலும் உண்டு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

      // மதத் தீவிரவாதம் என்பது மதத்தின் ​மீதான மக்களின் நம்பிகைகளிலிருந்​தோ, மதத்​தை பரப்ப ​வேண்டும் என்ற ​நோக்கத்திலிருந்​தோ, மதக் கருத்துக்களில் உள்ள தீய முன்னுதாரணங்களிலிருந்​தோ ​தோன்றுவ​தோ வளர்வ​தோ இல்​லை. அ​வை அன்றன்​றைய ஆளும் வர்க்கங்களின் ​பேரா​சைகளிலிருந்​தே ஊட்டி வளர்க்கப்படுகின்றன.//
      உண்மைதான் ஆசையே அனைத்திற்கும் காரணம். ஆளும் வர்க்கம் மக்களுக்கும் ஆசையை காட்டி தீவிரவாதத்தை வளர்க்கின்றது. இதனால் பாதிக்கப்படுவது என்னமோ அப்பாவி மக்களே.
      //நம் காலகட்டத்தில் இசுலாமியத் தீவிரவாதத்தின் ​வேர் அ​மெரிக்கா த​லை​மையிலான உலக வல்லாதிக்க சக்திக​ளே! இசுலாமியத் தீவிரவாதம் என்பது அ​மெரிக்க இராணுவத்தின் மற்​றொரு ப​டைப்பிரி​வே.//

      இசுலாமிய தீவிரவாதத்தில் அமெரிக்காவின் பங்கு பற்றி இன்றைய நிலையில் எனக்கு அவ்வளவாக தெரியாது என்பதே உண்மை. இனிமேல் தான் இதுபற்றி நான் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்களும் இசுலாம் பற்றி படித்து பாருங்கள். மற்றொரு நாளில் நாம் நிச்சயம் சந்திப்போம்.

      இருப்பினும் உங்களுக்கு இந்த தீவிரவாதத்தை எப்படி முடிவிற்கு கொண்டுவரலாம் என்ற எண்ணம் இருந்தால் அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
    2. நான் படித்த ஒரு நூ​லை உங்களுக்கு அறிமுகப்படுத்துகி​றேன். யமுனா ரா​ஜேந்திரன் அவர்களின் 'அரசியல் இசுலாம்' என்ற நூ​லை வாசித்துப் பாருங்கள். உயிர்​மை பதிப்பகத்தின் ​வெளியீடாக வந்துள்ள அந்நூல், சர்வ​தேச அளவில் ​கோட்பாட்டுரீதியாக 'அரசியல் இசுலாம்' குறித்த விரிவானதும் ஆழமானதுமான பார்​வை​யை வழங்குகிறது.

      நீக்கு
    3. வாங்க naatkurippugal மகேஷ்,
      நீங்கள் கூறிய புத்தகத்தை படித்துப் பார்க்கிறேன்.
      பரிந்துரைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி :)

      நீக்கு
  28. Interesting post and interesting participants.. Very good. Hope it leads to the good of all human beings. People should understand the difference between good and evil.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hi Bosco Sabu John,
      Hope people will understand. We should aid people for their understanding by creating awareness.
      Thanks for coming and posting your comments.

      நீக்கு
  29. அன்பு சகோ மணி
    உங்கள் மீதும் ஏகனின் சமாதானம் நிலவட்டுமாக!

    குர்-ஆன் குறித்து எதிர்மறை கேள்விகள் ஆக்கம் முழவதும் நிறைந்திருக்கின்றன. மிக நன்று! ஆனால் இந்த ஆக்கத்தில் குர்-ஆன் குறித்த தெளிவான அணுகுமுறை இல்லை என்றே நினைக்கிறேன். சந்தேகம் மற்றும் உங்கள் சுய புரிதல்களாய் பல கேள்விகள் இட்டதால் இன்ஷா அல்லாஹ் அதற்கு பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.

    குர்-ஆனில் உள்ள வசனங்கள் யாவையும் மூன்றீன் கீழாக வைப்படுத்தலாம்.
    1. வரலாற்று தொடர்பான செய்திகள்
    2. நடை முறை வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள்
    3.தேவையின் போது செய்ய வேண்டிய ஏவல்கள் மற்றும் விலக்கல்கள்

    இவை மூன்றே குர்-ஆன் முழுக்க பிரதானமாக சொல்லப்படும் பொதுவான கருத்துகள். இங்கே படிப்பினை பெறுவதற்காக வரலாற்று நிகழ்வுகளும், மன இச்சைப்படி நடவாமல் இருக்க ஒழுக்க பண்புகளும் மனித சமூகத்திற்கு முன்மொழியப்பட்டிருக்கிறது. இறுதி மற்றும் மூணாவதாக, குறிப்பிடப்படும் தேவை நிமித்தமான மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளின் கீழாக தான் நீங்கள் கோடிட்டு ஆக்கம் புனைந்த அந்த வசனங்களும் வருகிறது.

    நேரிடையாக உபதேசிக்கும் தன்மையுள்ளவைகள் தவிர ஏனையவைகளுக்கு அதற்குரிய காலம், இடம், பொருள் போன்ற பின்புலங்கள் ஆராய தக்கவை. இது குர்-ஆனுக்கு மட்டுமல்ல. வேறு எந்த செயலையும், வரலாற்று நிகழ்வுகளையும் உள்ளடக்கி இருக்கும் எல்லா நூல்களுக்கும் பொருந்தும்.

    அதனடிப்படையில் நீங்கள் ஒப்பு நோக்கி இருக்கும் எல்லா வசனங்களுமே போர் காலங்களில் முன்மொழியப்பட்ட கட்டளைகள்.
    சற்று மித புரிதலுடன் இவ்வசனங்களை படிக்கும் எவருக்கும் இஸ்லாம் / குர்-ஆன் போர்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்திருப்பது போல் தோன்றலாம்.
    ஆனால் இஸ்லாமிய வரலாறுகளை ஆழ படித்தவர்களுக்கே நன்கு தெரியும். எந்த பேச்சு வார்த்தைகளுக்கும் உடன்பட மறுக்கும் தருணங்களில் இறுதி முடிவாக போர் தீர்மானிக்கப்படுகிறது. நபிகளார் தொடுத்த போர்கள் அனைத்தும் அப்படியானவை தான்.

    அப்படி குறிப்பிடப்படும் வசனங்களில் காபிர்கள், கிறித்துவர்கள், யூதர்கள் என குறிப்பெயர்கள் குறிப்பிடப்பட்டு கடுமையாக சாடப்பட்டிருப்பதற்கு நீங்கள் வரலாற்றின் மற்றொரு புறத்தையும் பார்க்கவேண்டும். பல வித உடன்படிக்கைகள் செய்தும், பல பேச்சுவார்த்தைகளுக்கு உடன்பட்ட போதிலும் முஸ்லிம்களுக்கு சொல்லோண்ணா துயரையை கொடுத்தார்கள். மக்கத்து காபிர்கள், மதினத்து யூதர்கள். அத்தோடு முஸ்லிம்களுடன் கூடி இருக்கும் போது அவர்களுக்கு ஆதரவாக பேசியும் மறைவில் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சிகளும் செய்தார்கள். (ஹூதைப்பியா உடன்படிக்கை மற்றும் மதீனாவில் யூதர்களுடன் கொண்ட உடன்படிக்கை இதற்கு ஒரு சான்று) ஆயிரம் முறை திருப்திப்படுத்த முயன்றாலும் இப்படி உளம் ஒன்று வைத்து புறம் ஒன்று செய்யும் அத்தகைய நயவஞ்சகர்களுக்கு எதிராக இறக்கியருளப்பட்ட வசனங்கள். வேறு எப்படி இருக்க முடியும்..?

    அப்போதைய நிகழ்வுகளின் பிரதிப்பலிப்பாக வசனங்கள் இறக்கப்படும் போது, ஒரு போர் களத்தில் தன்படைகளுக்கு தளபதி இடும் கட்டளை போன்று தான் இங்கேயும் சொல்லப்பட்டிருக்கிறது - சொல்லப்படவும் வேண்டும். இதில் எங்கே சகோ தீவிரவாத கருத்துக்களை குர்-ஆன் ஆதரிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ குலாம்,

      //அப்போதைய நிகழ்வுகளின் பிரதிப்பலிப்பாக வசனங்கள் இறக்கப்படும் போது, ஒரு போர் களத்தில் தன்படைகளுக்கு தளபதி இடும் கட்டளை போன்று தான் இங்கேயும் சொல்லப்பட்டிருக்கிறது - சொல்லப்படவும் வேண்டும். இதில் எங்கே சகோ தீவிரவாத கருத்துக்களை குர்-ஆன் ஆதரிக்கிறது.//
      சகோ தீவிரவாதிகள் மும்பை தாக்குதலின் போது என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். அவர்களின் இலக்கு இசுலாமை காப்பாற்றுதல் மற்றும் சுவனம்...அதற்க்கு காபிர்களை கொல்லுதல் சரி என்ற மனநிலையில் அவர்கள் இருந்தததை நீங்கள் அறியலாம். குரான் தீவிரவாததத்தை ஆத்ரரிக்கிறதா என்ற கேள்விக்குள் நான் செல்ல விரும்பவில்லை. குரான் கருத்துக்கள் தீவிரவாதத்திற்கு பயன்படுத்தபடுகிறது என்றே நான் கூறுகிறேன். என் கருத்தை நீங்கள் ஏற்ப்பீர்கள் என நம்புகிறேன்.

      நீக்கு
  30. == 2 ==

    சின்ன நிகழ்வுதாரணம்.. உங்களுக்காக,
    நமக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு போர் வருமென்றால் இங்கே பாரத பிரதமர் நம் படை வீரர்கள் கையில் மலர் வளையமா கொடுத்து அனுப்புவார்.. நமது தேசத்துக்காக எதிர்த்து போரிடவே ஆவேசப்படுத்துவார்..! இப்படி சொல்லும் நம் பிரதமரை மனிதாபிமானமற்றவர் என்றோ, இரக்க குணம் கொள்ளாதவர் என்றோ எவரும் சொல்வதில்லை... சொல்லவும் கூடாது. ஏனெனில் அது தான் போர் களத்தில் பின்பற்றப்படும் முறைமை. அதே பாகிஸ்தான் நாளை சமாதான உடன்படிக்கைக்கு வருமேயானால் நம் பிரதமர் நமக்கு சாதமாக இருக்கும் பட்சத்தில் அவர்களை அரவணைக்க தான் செய்வார். அது தான் முறையானதும் கூட...

    அதை தானே குர்-ஆன் தெளிவாக சொல்கிறது நீங்கள் கோடிட்ட வசனத்திலே... இப்படி சூரா தவ்பா (9) தொடக்க வசனங்களில் போர் புரிபவர்களுடன் நீங்களும் போரிடுங்கள் என்று பிரகடனப்படுத்தி விட்டு

    (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.

    ... உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.

    6 மற்றும் ஏழாவது வசனங்களில் அவர்களுடன் போரிடுவதை தவிர்க்க சொல்கிறான். இன்னும் கூடுதலாக // அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக // இப்படி முஸ்லிம் படைகளுக்கு ஒரு கட்டளையும் விதிக்கிறான். இன்றைய போர் களங்களில் கூட எந்த தளபதியும் கூறி கேட்காத வார்த்தைகள் இவை..

    ஆக, இஸ்லாம் போர்களை தவிர்க்க முடியாத சூழ்நிலைகளிலோ, நிர்பந்தம் ஏற்படும் தருணங்களில் மட்டுமே மேற்கொள்ள சொல்கிறது. இதை உங்கள் மனம் ஏற்க மறுத்தாலும் அது தான் உண்மை. ஏனெனில் இஸ்லாமிய வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றில் கூட மிக பெரும் ஆச்சரியத்தை ஆய்வாளர்களுக்கு "மக்காவெற்றி" ஏற்படுத்தியது. தான் பிறந்து, வளர்ந்து வாழ்ந்து வந்த மண்ணை விட்டு விரட்டியடித்த மக்களிடம் பெரும் வலிமைக்கொண்ட படையுடன் மீண்டும் அந்த மண்ணில் முஹம்மது நபி அவர்கள் நுழைந்த போது அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள். தண்டிப்பதற்குரிய அனைத்து காரணங்களும் நியாயமாய் இருந்தும் கூட அவர்களில் ஒருவருக்கு கூட சிறு கீறல் கூட விழவில்லை.

    மேற்கண்ட வசனங்களை எப்பவும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் குர்-ஆன் சொல்லி இருந்தால் அன்றைய மக்கா முதல் இன்றைக்கு இருக்கும் உலக நிலப்பரப்பில் எங்கிலும் முஸ்லிம்களை தவிர்த்து வேறு எந்த சமூகத்தை சார்ந்தவர்களுக்கும் உயிரோடு இருந்திருப்பார்களா..? கொஞ்சம் பிராக்டிக்கலா யோசிங்க சகோ மணி., அதுமட்டுமில்லை இந்த வசனங்களை படிக்கும் எந்த முஸ்லிம்களுக்கும் மன சஞ்சலமோ, மாற்று மதத்தவர்களை பார்த்து குரோத எண்ணமோ ஏற்படுவதில்லை. ஏனெனில் முஸ்லிம்கள் அந்த அளவிற்கு அறிவீலிகள் இல்லை.

    நீங்களே சொல்லுங்கள் உங்கள் அண்டை வீட்டுக்காரர்களோ அல்லது ஆபிஸில் இருக்கும் முஸ்லிம்களோ இந்த வசனங்களை படித்து விட்டு எத்தனை முறை உங்களை வெட்ட வந்திருக்கிறார்கள்..
    இன்னும் நிதானமாக படித்து பாருங்கள் நீங்கள் மேற்கோள் காட்டும் அனைத்து வசனங்களிலே (அல்லது முன்,பின் வசனங்களிலே) இப்படி கூற காரணமும் தெளிவாக குறிப்பிடப்படுகிறது.

    ஜிஹாத் என்பதற்கு பொருளாக அறப்போர் என்பதை அடைப்புக்குறிக்குள் இருப்பதை அங்கே சுட்டிக்காட்டி அதற்கு மேலாக குர்-ஆன் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது என்று சொன்னால்... எப்படி பொருள் கொள்வது..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. //மேற்கண்ட வசனங்களை எப்பவும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் குர்-ஆன் சொல்லி இருந்தால் அன்றைய மக்கா முதல் இன்றைக்கு இருக்கும் உலக நிலப்பரப்பில் எங்கிலும் முஸ்லிம்களை தவிர்த்து வேறு எந்த சமூகத்தை சார்ந்தவர்களுக்கும் உயிரோடு இருந்திருப்பார்களா..? கொஞ்சம் பிராக்டிக்கலா யோசிங்க சகோ மணி., அதுமட்டுமில்லை இந்த வசனங்களை படிக்கும் எந்த முஸ்லிம்களுக்கும் மன சஞ்சலமோ, மாற்று மதத்தவர்களை பார்த்து குரோத எண்ணமோ ஏற்படுவதில்லை. ஏனெனில் முஸ்லிம்கள் அந்த அளவிற்கு அறிவீலிகள் இல்லை. //

      சகோ நீங்க அறிவிலியில்லாமல் இல்லாமல் இருக்கலாம் ஆனால் பல முஸ்லிம்கள் அறியாமையில் தான் உள்ளனர்.மீண்டும் மும்பை தாக்குதல் உதாரணத்தையே முன் வைக்கிறேன். யூதர்களை எதிரியாக பார்க்க சொல்கிறது குரான். மும்பை தாக்குதலில் யூதர்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இதுவல்லாமல் எது காரணம் என்று தாங்கள் சிநித்டித்து பார்த்தால் நலம். வரலாற்று நெடுகில் முஸ்லிம்கள் காபிர்களை குரான் படி நடத்தியுள்ளனர். நல்லவர் என்று கூறப்படும் திப்பு சுல்தான் கூட இதற்க்கு விதிவிலக்கு அல்ல.(பிறகு அவர் திருந்தினார் என்பது வேறு விடயம்.) பல முஸ்லிம் மன்னர்களை பற்றி படித்து பாருங்கள். நல்லவர்களும் இருந்தார்கள் மதவெறி கொண்டவர்களும் இருந்தார்கள்


      //நீங்களே சொல்லுங்கள் உங்கள் அண்டை வீட்டுக்காரர்களோ அல்லது ஆபிஸில் இருக்கும் முஸ்லிம்களோ இந்த வசனங்களை படித்து விட்டு எத்தனை முறை உங்களை வெட்ட வந்திருக்கிறார்கள்..
      இன்னும் நிதானமாக படித்து பாருங்கள் நீங்கள் மேற்கோள் காட்டும் அனைத்து வசனங்களிலே (அல்லது முன்,பின் வசனங்களிலே) இப்படி கூற காரணமும் தெளிவாக குறிப்பிடப்படுகிறது. //

      என் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் சகோதரர்கள் இதுவரை நல்லவர்கள்தான். ஆனால் என் ஆப்கானிய சகோதரனும் பாக்கிஸ்தானிய சகோதரனும் காபிர்களை கொன்றதை/கொள்வதை தாங்கள் அறியவில்லையா? சகோ.


      //ஜிஹாத் என்பதற்கு பொருளாக அறப்போர் என்பதை அடைப்புக்குறிக்குள் இருப்பதை அங்கே சுட்டிக்காட்டி அதற்கு மேலாக குர்-ஆன் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது என்று சொன்னால்... எப்படி பொருள் கொள்வது..?//

      சகோ, மீண்டும் சொல்கிறேன் குரான் வசனங்கள் தீவிரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன என்றே நான் கூறுகிறேன். தீவிரவாதத்திற்கான காரணத்தை சற்று ஆராய்ந்து பாருங்கள். உண்மை உங்களுக்கு நிச்சயம் விளங்கும்

      நீக்கு
  31. = 3 =

    அடுத்து குர்-ஆன் மாற்றார்களின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ள சொல்வதாக குற்றச்சாட்டை வைத்து இருக்கிறீர்கள் அதையும் பார்ப்போம்.

    குர்-ஆன் முழுக்க ஆராய்ந்தால் அவை இரு சாராரை மையப்படுத்திய வசனங்கள் பேசுவதை உணரலாம்
    1. இறைவனுக்கு கீழ்படியும் - நல்லவர்கள்
    2. இறைவனுக்கு மாறு செய்யும் -தீயவர்கள்

    பொதுவாக முஸ்லிம்களுக்கு சொர்க்கம் போலவும், மாற்றார்களுக்கு நரகம் போலவும் நிரம்ப வசனங்கள் குர்-ஆனில் உண்டு, சரிதான் இங்கே முஸ்லிம்கள் என்று குர்-ஆன் மையப்படுத்துவோரை அறிவது அவசியமான ஒன்று. தாடி வைப்பதோ தொப்பி அணிவதோ, முஸ்லிம் குடும்பத்தில் பிறப்பதோ ஒருவன் முஸ்லிம் என்பதற்கு போதுமானதன்று. இவை முஸ்லிம் என்பதற்கான சமுக குறியீடுகள் தான். மாறாக யாராக இருப்பினும்,, எக்குடும்பத்தில் பிறப்பினும் "ஒரே இறைவனை ஏற்று அவனது இறுதித் தூதரை உண்மைப்படுத்தி இறைவன் கூறிய நேரிய பாதையில் தமது செயல்களை யார் தம் வாழ்வில் அமைத்து கொள்கிறார்களோ அவர்கள் தான் குர்-ஆன் குறிப்பிடும் முஸ்லிம்கள். இவைகளுக்கு மாறுபடும் எவர்களும் முஸ்லிம்கள் எனும் வட்டத்தில் வரமாட்டார்கள்.

    குர்-ஆன் இந்த முஸ்லிம் சமூகத்திற்கு முன்பாக வாழ்ந்த பல சமூகங்களை பற்றியும், அவர்களுக்கு இறை புறத்திலிருந்து வழங்கப்பட்ட ஏராளமான அருட்கொடைகளையும் பற்றி பேசுகிறது. அப்படி இருந்தும் அத்தகைய சமூக மக்கள் இறைவனுக்கு மாறுப்பட்டு தன் மன இச்சைகளின் படி வாழ்வை அமைத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

    இப்படி இறைவனுக்கு மாறுபட்ட இறுதியான இரண்டு சமூகங்களான யூதர்கள் மற்றும் கிறித்தவர்களை குர்-ஆன் குறிப்பிட்டு அவர்கள் இறைவனுக்கு மாறு செய்தும், தன் மனம் போன போக்கில், இறைவன் குறித்தே பல கற்பனையான செய்திகளை கூறி மக்களிடத்தில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டதால் அவர்களுடன் நட்புறவு பாராட்டுவது கூடாது, அவர்களை உற்ற நண்பர்களாக்கிடவும் கூடாது என கட்டளை இடுகிறது. இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். பொதுவாக மாற்று மதத்தவர்களை இறைவன் குறிப்பிடவில்லை. மாறாக அவர்களை குறித்து சொல்லும் போதே

    // 60:13. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள்; //
    அதற்கான காரணத்தையும் சொல்கிறான். ஏனெனில் பொதுவாக கிறித்துவர், காபிர், யூதர் போன்றவர்களை வெறுக்க குர்-ஆன் சொல்வதாக பொருள் கொண்டால், அவர்களையும் ஆதி பிதா பெற்ற மக்கள் என்று எல்லோரையும் ஒரே அளவுகோலில் வைத்து குர்-ஆன் ஏன் குறிப்பிட வேண்டும்..?

    மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (49:13)

    மேலும் பாருங்கள். 2:213, 4:1, 10:19, 39:6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்படி இறைவனுக்கு மாறுபட்ட இறுதியான இரண்டு சமூகங்களான யூதர்கள் மற்றும் கிறித்தவர்களை குர்-ஆன் குறிப்பிட்டு அவர்கள் இறைவனுக்கு மாறு செய்தும், தன் மனம் போன போக்கில், இறைவன் குறித்தே பல கற்பனையான செய்திகளை கூறி மக்களிடத்தில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டதால் அவர்களுடன் நட்புறவு பாராட்டுவது கூடாது, அவர்களை உற்ற நண்பர்களாக்கிடவும் கூடாது என கட்டளை இடுகிறது.//
      உண்மையை நீங்களே ஒத்துக்கொண்டுள்ளீர்கள். பிற சமூக மக்களை எதிரியாக ஒரு இறைவன் பார்க்கசொல்வானா என சிந்தித்து பாருங்கள்.
      யூதர்களின் மீது இன்றளவும் முஸ்லிம் சமூகத்தில் பலர் வெறுப்புடன் இருக்க என்ன காரணம் சகோ?
      இஸ்ரேல் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை.......
      நீங்களே சொல்லுங்கள் அல்லா ஏன் பிற மத மக்கள் மீது போர் தொடுக்க சொல்கிறான்?. பல இறைதூதர்களையும் புத்தகங்களையும் அனுப்புவதற்கு பதிலாக மனிதனின் மனத்தில் ஏன் மாற்றத்தை ஏற்ப்படுத்த அல்லாவால் முடியவில்லை என்பதை தாங்கள் விளக்க முடியுமா சகோ?

      //ஏனெனில் பொதுவாக கிறித்துவர், காபிர், யூதர் போன்றவர்களை வெறுக்க குர்-ஆன் சொல்வதாக பொருள் கொண்டால், அவர்களையும் ஆதி பிதா பெற்ற மக்கள் என்று எல்லோரையும் ஒரே அளவுகோலில் வைத்து குர்-ஆன் ஏன் குறிப்பிட வேண்டும்..?//

      நீங்களே மேலே உண்மையை ஒப்புக்கொண்டுள்ளீர்கள் சகோ.

      நீக்கு
  32. == 4 ==

    ஒட்டு மொத்த மனித சமூகத்தை நோக்கியே இப்படியானதொரு பிரகடனம். பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் இந்த சமூகத்தில் தான் இப்படியான ஒரு வாசகத்தை குர்-ஆன் போதிக்கிறது.
    அதுமட்டுமில்லை., முஸ்லிகளென்று பிரத்தியேகமாக குறிப்பிடாமல் விசுவாசம் கொண்ட மக்களுக்கென்றே எல்லா சமூகத்திற்கும் நன்மாராயம் கூறும் குறிப்பாக யூதர்களையும், கிறித்துவர்களையும் சிலாகித்து கூறும் இறைவசனங்களும் ஏராளம்.. (அல்பகரா முழுக்க படித்து பாருங்கள்) மேலும்
    சூரா 57 வசனம் 28
    சூரா 5 வசனம் 82
    சூரா 4 வசனம் 153-161
    சூரா 5 வசனம் 20-26
    சூரா 28 வசனம் 52-54
    சூரா 29 வசனம் 46
    சூரா 62 வசனம் 5 -8

    இன்னும் ஏராளமான வசனங்கள் மிக தெளிவாக, அல்லாஹ் விலக்கியவற்றை தவிர்த்து வாழ்ந்தால் அது யாராக இருந்தாலும் சொர்க்கம், பாவ மிட்சி உண்டென்ற பணிக்கிறது. ஆக போர்களங்கள் அல்லது போர் காலாங்கள் என்பது அந்தந்த சூழலில் ஏற்படும் தற்காலிக நிலைப்பாடு. அப்படிப்பட்ட நிலைகளில் எதிர்யாக பார்க்கபடும் எவருடனும் யுத்தம் தான் செய்ய முடியும்.. மாறாக அங்கே பூச்செண்டிற்கு வேலை இல்லை. ஆக போர் கள வசனங்களை மட்டும் வைத்துக்கொண்டு குர்-ஆன் மாற்று மதத்தவர்களுக்கு எதிரானது என புனைவு ஏற்படுத்துவது அர்த்தமற்றது, ஏனெனில் இவ்வுலகில் வாழும் காலங்களில் பின்பற்றக்கூடிய நடைமுறை செயல்களும், மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், பின்னர் வழங்கப்பட இருக்கும் சொர்க்கமும், பாவ மீட்சியுமே நிலையானது மற்றும் இவ்வுலக வாழ்க்கைக்கு நிரந்தரமானது, அதில்ல் முஸ்லிமல்லாதவர்களுக்கு குர்-ஆன் பாரப்பட்சம் பார்கிறதென்றால் உங்கள் ஆக்கம் நியாயங்கள் நிறைந்தது. ஆனால்

    குர்-ஆன் மிக தெளிவாக மனித சமூகத்தின் மத்தியில் இப்படியும் ஒரு பிரகடனம் செய்கிறது.
    அல்பகரா (2) வசனம் 62 ல்.

    ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

    இதில் குறிப்பிடப்படும் சமூகத்தவர்கள் யாருங்க சகோ...?
    காபிர்களை கண்ட இடங்களில் வெட்டுங்கள், குத்துங்கள் போன்ற வசனங்களை தேடி எடுத்த உங்களுக்கு இந்த வசனம் கண்ணில் படாதது ஆச்சரியமே!...


    மாற்று கருத்து இருப்பீன் மற்றவை பிற
    உங்கள் சகோதரன்
    குலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முஸ்லிகளென்று பிரத்தியேகமாக குறிப்பிடாமல் விசுவாசம் கொண்ட மக்களுக்கென்றே எல்லா சமூகத்திற்கும் நன்மாராயம் கூறும் குறிப்பாக யூதர்களையும், கிறித்துவர்களையும் சிலாகித்து கூறும் இறைவசனங்களும் ஏராளம்.//
      சகோ குலாம், முகமது நபியின் வாழ்க்கையையும் குரானை இறக்க கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆனது என்பதையும் மனதில் கொண்டு நீங்கள் குரானை படிக்க வேண்டும். முகமதுமுகமது நபி யூதர்களின் ஆதரவில் இருக்கும்பொழுது யூதர்களை பெருமைப்படுத்தும் வசனமும்,கிருத்துவர்களின் ஆதரவில் இருக்கும்பொழுது அவர்களை பெருமைப்படுத்தும் வசனங்களும் இறக்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் சிறு ஆய்வின் மூலம் அறியலாம்.
      முதலில் யூதர்களின் புனித ஆலயத்தை நோக்கித்தான் முஸ்லிம்கள் வழிபடுவார்கள் ஆதற்கான காரணம் யூதர்களின் நன்மதிப்பை பெறுவதற்கே. பிறகு யூதர்களுடன் பிரச்சனை என்ற உடன் தான் மெக்கா நோக்கி தொழுகை செய்ய அறிவுறுத்தப்பட்டது என்பதை தாங்கள் வரலாற்றின் பக்கங்கள் மூலம் அறியலாம், அவர்கள் தொழுகை செய்த திசை மாற்றத்தை, மசூதி கட்டப்பட்ட திசை மாற்றத்தை வைத்தும் தாங்கள் இந்த உண்மையை அறியலாம்..

      //ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

      இதில் குறிப்பிடப்படும் சமூகத்தவர்கள் யாருங்க சகோ...?
      காபிர்களை கண்ட இடங்களில் வெட்டுங்கள், குத்துங்கள் போன்ற வசனங்களை தேடி எடுத்த உங்களுக்கு இந்த வசனம் கண்ணில் படாதது ஆச்சரியமே!.../////////
      பின்வரும் என்னுடைய பதிவில் பாருங்கள்...இந்த வசனத்தை நான் அறிந்துள்ளேனா இல்லையா என்பதை தாங்கள் அறிவீர்கள் சகோ.
      http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2013/01/blog-post_20.html

      சகோ, என்னுடைய கேள்வி மிகவும் சிறியது. விஸ்வரூபம் படத்தை பார்த்து நாங்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று நினைத்துவிடுவோம் என்று திருத்தம் கேட்டவர்களுக்கு குரானின் வசனங்களை பயன்படுத்தி தீவிரவாதம் வளர்க்கப்படுகிறது என்பது தெரியாதா? ஏன் இதில் திருத்தம் செய்யக்கூடாது?

      //இப்படி இறைவனுக்கு மாறுபட்ட இறுதியான இரண்டு சமூகங்களான யூதர்கள் மற்றும் கிறித்தவர்களை குர்-ஆன் குறிப்பிட்டு அவர்கள் இறைவனுக்கு மாறு செய்தும், தன் மனம் போன போக்கில், இறைவன் குறித்தே பல கற்பனையான செய்திகளை கூறி மக்களிடத்தில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டதால் அவர்களுடன் நட்புறவு பாராட்டுவது கூடாது, அவர்களை உற்ற நண்பர்களாக்கிடவும் கூடாது என கட்டளை இடுகிறது//
      என்று நீங்களே உண்மையை ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.
      இதற்க்கு காரணம் குரான் வசனங்கள் தானே?
      பிற மத்தினரை எதிரியாக பார்க்க சொல்வது இறைவனின் செயலாக இருக்க முடியுமா? ஒவ்வொரு சமூகமும் எதிரியாக பார்த்துக்கொண்டால் மனிதகுலம் அழியாதா? சிந்தித்து பாருங்கள் சகோ.
      நான் கேட்பது சிறு திருத்தம்தான். பல ஹதீசுகளை முரணானவை என்று ஒதுக்குவதுபோல இந்த வசனங்களையும் ஒதுக்க வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள். மனிதகுலத்திற்கு எதிரான இந்த கருத்துக்கள் இடைசொருகலாகத்தான் இருக்கும் என்று கூறுவதே இசுலாமிற்கு,மனிதத்திற்கு நல்லது(உண்மை எதுவாகிலும்) அல்லது குறைந்தபட்சம் இதற்க்கான சரியான விளக்கத்தை ஒவ்வொரு குரானிலும் சேர்க்கவேண்டும்.
      என்னுடைய கருத்தில் தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள் சகோ. பதில் அளிக்க முன் வந்த தங்களுக்கு மிக்க நன்றி.
      என்றும் அன்புடன்
      உங்கள் அன்பு சகோதரன்
      இராச.புரட்சிமணி

      நீக்கு
    2. சகோ மணி,
      அருமை!!

      நம் சகோக்கள் ஒரு முஸ்லிம் காஃபிரின் கழுத்தை வெட்டினல் அதற்கு விள்க்கம், காஃபிர் கழுத்தை வைத்து முஸ்லிம் கத்தியை தாக்கினான் என் விள்க்குவர்கள் ஹி ஹி.
      அதுவே மார்க்க சிந்த்னை!!.

      சரியாக போட்டு வாங்கிவிட்டீர்கள்.

      ஒரு குரான் வசனம் அந்த கால சூழ்நிலைக்கு மட்டும் என்றால் அது தேவையில்லையே!!

      அடிமை முறை இல்லை என்றால், திருமணம் ஆன அடிமைப் பெண்ணுடன் உறவு கொள்ளும் வசனம் ஏன்?? குரான் 4.24

      ஒரு திருமணம் மட்டுமே சரி என்றால் ஒரே சமயத்தில் 4 மனைவி+பாலியல் அடிமைகள் வசனம் ஏன்? குரான் 4.3

      ஜிஸ்யா வரி வசூலிக்க இப்போது முடியாது என்றால் அந்த வசனம் ஏன்?குரான் 9.29

      குரானில் தேவையற்ற வசனங்களும் உள்ளது என்றால் பிரச்சினை தீர்ந்து விடுமே!!


      நன்றி!!

      நீக்கு
    3. வாங்க சகோ,
      மிகவும் சரியாக சொன்னீர்கள்.

      //குரானில் தேவையற்ற வசனங்களும் உள்ளது என்றால் பிரச்சினை தீர்ந்து விடுமே!!//
      இது விரைவில் நடக்கும் சகோ.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      நீக்கு
    4. பின்வரும் பதிவில் நடைபெற்ற விவாதம்
      http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2011/08/blog-post.html?showComment=1360782897752

      ///RiyazyFebruary 7, 2013 at 1:30 AM

      என்ன,கூர்ஆன், காபிர்களை அநியாயமாக கொல்லச்சொல்கிறதா??? ஆதாரம் காட்ட முடியுமா? தேடுவதற்கு முன்
      Does Quran say to kill the kafir (Non Muslims)? Dr Zakir naik

      சற்று யூ-டுயூபில் பார்த்து விடவும்.

      ReplyDelete
      Replies

      R.PuratchimaniFebruary 14, 2013 at 12:44 AM
      வாங்க சகோ riyaazi,
      என்னுடைய இந்த பதிவை படித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.
      http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2013/01/blog-post_27.html

      ஜாகிர் நாயக் கருத்து தவறானது.( அதாவது அவர் அந்த காலத்தில் அந்த சூழலில் கூறப்பட்டது அந்த வசனங்கள் என்கிறார்).ஏன் எனில்.....
      அவர் கூறும் வசனங்கள் மட்டும் அல்ல ஒட்டுமொத்த குரானுமே அந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமே கூறப்பட்டது.....கிட்டத்தட்ட 25 ஆண்டுகள். எனவே ஒட்டுமொத்த குரானின் பயன்படுமே இன்றைய நிலையில் கேள்விக்குள்ளாகிறது என்பதை சிந்தித்து பாருங்கள் சகோ.
      மேலும் குரான் வசனங்கள் யூதர்களையும், கிருத்துவர்களையும்,சிலை வணங்கிகளையும் எதிரியாக பார்க்க சொல்கிறது என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள் என நம்புகிறேன்.
      இவற்றை இடைசொருகல் என்று ஒத்துக்குவதே முறையாக இருக்கும் என்பது எனது புரிதல் சகோ.
      தங்கள் தொடுப்பிற்கு மிக்க நன்றி....அவருக்கான எனது பதிலை விரைவில் அத்தளத்தில் பதிவு செய்கிறேன்.

      ///

      நீக்கு
  33. சகோ புரட்சிமணி அவர்களுக்கு,
    மிக நீண்ண்ண்ண்ட பதிவு,
    குர் ஆனில் இருந்து அதிகமான வசனங்களை சுட்டிக் காட்டி இருக்கின்றீர்கள்.

    முஸ்லிம்கள் தினமும் ஐவேளை தொழனும், ஆரோக்யமுள்ளவர்கள் ஒரு மாதம் நோன்பு வைக்கனும், செல்வந்தர்கள் தருமம் செய்யனும், வாழ்வில் தன்னிறைவு பெற்றவர்கள் ஹஜ் எனும் புனித பயணம் மேற்கொள்ளனும் இவை எல்லாம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய கட்டாய கடமைகள் என இஸ்லாம் வலியுறுத்துவதால் முஸ்லிம்கள் அதன்படி நடக்கிறார்கள்.

    தாங்கள் குறிப்பிட்ட பல வசனங்கள் அக்கால சூழ்நிலைக்கு ஏற்ப அந்த மக்களுக்கு கூறப்பட்டவையாகவே முஸ்லிம்கள் கருதுவதால் தான்....

    அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். அல் குர் ஆன்: 2:191

    முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள். அல் குர் ஆன்: 9:5

    நிராகரிப்பவர்களை நீங்கள் சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள. அல் குர் ஆன்: 47:4

    என்ற வசனங்களை படித்த பின்பும் கோடானு கோடி முஸ்லிம்கள் ...... ஆயுதங்களை தூக்கிக் கொண்டு மாற்று மதத்தவர்களை தேடி அலையாமல், அவர்களுடன் நட்புடன் பழகும் இன்றைய இஸ்லாமியர்களே உள்ளங்கை நெல்லிக் கனி.

    என்றும் அன்புடன்
    அ. ஹாஜாமைதீன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ அ. ஹாஜாமைதீன்,

      //என்ற வசனங்களை படித்த பின்பும் கோடானு கோடி முஸ்லிம்கள் ...... ஆயுதங்களை தூக்கிக் கொண்டு மாற்று மதத்தவர்களை தேடி அலையாமல், அவர்களுடன் நட்புடன் பழகும் இன்றைய இஸ்லாமியர்களே உள்ளங்கை நெல்லிக் கனி.//

      உண்மை இதை நான் ஏற்கிறேன் சகோ. பல முஸ்லிம்கள் நல்லவர்களாகத்தான் உள்ளனர். அந்த வசனங்களை அந்த காலத்திற்கு வழங்கப்பட்டது என்று விட்டுவிடுகின்றனர். இது நல்ல விடயமே.

      ஆனால் சில முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் அந்த வசனங்களை தங்கள் தீவிரவாதத்திற்கு பயன்படுத்துகிறதே அதை எப்படி சகோ நாம் தடுக்கப்போகிறோம்?

      மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அல்லாவிற்க்காகவும்,சுவனத்திற்க்காகவும் தான் ஈடுபட்டுள்ளனர் என்பதை என்னுடைய பதிவில் விளக்கி உள்ளேன். அவர்களின் செயலுக்கு நியாயம் கற்ப்பிக்கும் வசனங்களையும் தந்துள்ளேன். இனி ஒரு மும்பை தாக்குதல் நிகழாமல் இருக்க நாம் என்ன செய்யபோகிறோம் சகோ? சொல்லுங்கள்.
      மும்பை தாக்குதல் மட்டுமல்ல அமெரிக்க இரட்டை கோபுரத்தை இடித்த தீவிரவாதிகளும் இதே எண்ணத்தில்தான் இருந்துள்ளனர். இனி முஸ்லிம்களுக்கு இந்த மாதிரி சிந்தனை வராமல் இருக்க நாம் என்ன செய்யப்போகிறோம் சகோ.?
      நாம் மதங்களை கடந்து மனிதம் கொள்ள வேண்டும் சகோ..இதுவே பல பிரச்சனைகளுக்கு தீர்வு.
      தங்கள் வருகைக்கு நன்றி சகோ...
      என்றும் மனிதத்துடன்
      இராச.புரட்சிமணி

      நீக்கு
  34. சகோ இராச.புரட்சிமணி அவர்களுக்கு,
    // மற்றும் ஒரு விளக்கம் என்ன கூறலாம் எனில் இவைகள் அந்த காலத்தில் கூறிய வசனங்கள் இந்த காலத்திற்கு பொருந்தாது. அப்படி எனில் ஏன் இந்த வசனங்கள்? இதை திருத்தலாம் அல்லவா?//

    அந்த கால மக்களுக்கு கூறப்பட்டவையாக இருந்தாலும், அவை யாவும் இறை வசனங்களே திருத்த வேண்டிய தேவை இல்லை.

    // குரான் என்பது வாழ்வியல் நூலா வரலாற்று நூலா?//

    குர் ஆனில் கடந்த கால வரலாறுகள், குர் ஆனின் நிகழ்கால நிகழ்ச்சிகள், எதிர்கால எச்சரிக்கைகள் என முக்காலத்தையும் பற்றிய, வரலாறும் வாழ்வியலும் இனைந்த அற்புத நூல்.

    என்றும் அன்புடன்
    அ. ஹாஜாமைதீன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வாங்க சகோ அ. ஹாஜாமைதீன்
      //அந்த கால மக்களுக்கு கூறப்பட்டவையாக இருந்தாலும், அவை யாவும் இறை வசனங்களே திருத்த வேண்டிய தேவை இல்லை.//
      நான் இதுபற்றி பேசவேண்டாம் என்று இருந்தேன். குரான் இறைவசனம் என்பது உங்கள் நம்பிக்கை. அது இறைவசனம் இல்லை எனபது எனது நம்பிக்கை.
      இருப்பினும் முஸ்லிம்களின் நம்பிக்கையை /மனதை புண்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில்தான் அதை இடைச்சொருகல் என்று கூறும்படி சொல்கிறேன்(உண்மை எதுவாகினும்).

      சாதாரண ஒரு திரைப்படமே முஸ்லிம்களை தீவிரவாதிகளாக நினைக்கவைக்கும் என்று கூறுகிறீர்கள். இறைவேதம் பிற மதத்ததை எதிரியாக பார்க்கவைக்கின்றது, பிற மத மக்களை கொல்ல சொல்கிறது என்பதாக பலர் புரிந்துகொண்டுள்ளனர் என்பதை ஆதாரத்துடன் தந்துள்ளேன் சகோ. அதற்க்கு உங்கள் பதில் என்ன?

      தயவு செய்து உண்மையை புரிந்துகொள்ள முயலுங்கள்.

      நீக்கு
  35. //யூதர்களையும்,கிருத்துவர்களையும், சிலை வணங்கிகளையும், இணைவைப்பவர்களையும் எதிரியாக பாருங்கள் என்ற வசனம் ஒவ்வொரு முறை குரான் படிக்கும் பொழுதும் ஒரு முஸ்லிமை எந்த மனநிலைக்கு உள்ளாக்கும் என்று சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.//

    தங்களது பதிலையே இங்கு பதிக்கிறேன் சகோ...

    உண்மை இதை நான் ஏற்கிறேன் சகோ. பல முஸ்லிம்கள் நல்லவர்களாகத்தான் உள்ளனர். அந்த வசனங்களை அந்த காலத்திற்கு வழங்கப்பட்டது என்று விட்டுவிடுகின்றனர். இது நல்ல விடயமே.R.Puratchimani February 17, 2013 at 4:50 PM

    எந்த மனநிலைக்கும் உள்ளாக்குவதில்லை என்பதுதான் நிதர்சனம் சகோ.

    என்றும் அன்புடன்
    அ. ஹாஜாமைதீன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. ஹாஜாமைதீன்,
      //எந்த மனநிலைக்கும் உள்ளாக்குவதில்லை என்பதுதான் நிதர்சனம் சகோ.//
      தீவிரவாதிகளின் மனநிலையை உங்களுக்கு இந்த பதிவில் கூறியுள்ளேன். அதுபற்றி தங்கள் கருத்தை நான் எதிர்பார்க்கிறேன்.

      பொதுவில் பல நல்ல முஸ்லிம்கள் இருந்தாலும் கூட இன்று பதிவுலகில் இருக்கும் பல முஸ்லிம்களுக்கு யூத வெறுப்பு இருப்பதை கண்கூடாக பார்க்கமுடிகின்றது. இதற்க்கு என்ன காரணம் என்பதை நீங்களே சிந்தித்து பார்க்கவும்.
      உதாரனத்திற்க்கு
      // யூத,கிருஸ்துவ,இஸ்லாம் என்பன தொடர்புள்ள பிரிவுகள் அவைகளின் வரலாற்று பின்னணியையும் இன்றும் இஸ்லாத்திற்கு எதிரான அவர்களின் தொடர் சூழ்ச்சிகளையும் அறியாமல்/தெரிந்தும் மறைத்து கொண்டு இந்த குர்ஆன் வசனத்தை உங்களால் புரியவே முடியாது// என்று இன்றும் யூதர்களையும் கிருத்துவர்களையும் ஒரு சகோதரர் அறியாமையில்எதிரியாகவே பார்க்கிறார்.

      மீண்டும் நான் கேட்பது ஒன்றுதான் சகோ
      ஒரு மனிதனின் மனதில் மாற்றத்தை ஏற்ப்படுத்தும் சக்தி இறைவேதத்திற்கு அதிகமா? திரைப்படத்திற்கு அதிகமா?
      இறைவேதத்திற்குத் தான் சக்தி அதிகம் என்பது உங்கள் பதில் என்றால் நிச்சயம் குர்ஆனில் திருத்தம் வேண்டும் அல்லவா?
      கொஞ்சம் மனிதத்துடன்,உண்மையுடன்,மதத்தை மறந்து சிந்தித்து பாருங்கள் சகோ என் கூற்றில் உள்ள நியாயம் உங்களுக்கு புரியும்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      நீக்கு
  36. 5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.

    5:83. இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் “எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்.

    5:84. மேலும், “அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தின் மீதும், நாங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) இருக்கின்றது? எங்களுடைய இறைவன் எங்களை நல்லோர் கூட்டத்துடன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை வைக்கிறோம்” (என்றும் அவர்கள் கூறுவர்).

    5:85. அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளை அல்லாஹ் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கின்றான், அவர்கள் அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இன்னும், இதுவே நன்மை செய்பவருக்குரிய நற்கூலியாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 5:86. ஆனால், எவர் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றார்களோ, அ(த்தகைய)வர்கள் நரகவாசிகளேயாவர்கள்.

      why you did not add the above verse Mr.Hakeem?

      நீக்கு
    2. Those are the worlds of almighty we have nothing to comment about it and that is between the disbeliever and god.If god wants to forgive his sins he may or may not.He has all the rights to do what he wants to do to his creation.

      4:48. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.

      4:99. அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்; ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான்.

      4:116. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.

      5:18. யூதர்களும், கிறிஸ்தவர்களும் “நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்; அவனுடைய நேசர்கள்” என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! “நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள் தாம்” என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது; மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.



      நீக்கு
    3. Those are the worlds of almighty we have nothing to comment about it and that is between the disbeliever and god.If god wants to forgive his sins he may or may not.He has all the rights to do what he wants to do to his creation.

      4:48. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.

      4:99. அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்; ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான்.

      4:116. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.

      5:18. யூதர்களும், கிறிஸ்தவர்களும் “நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்; அவனுடைய நேசர்கள்” என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! “நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள் தாம்” என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது; மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.



      நீக்கு
  37. 5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.

    5:83. இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் “எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்.

    5:84. மேலும், “அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தின் மீதும், நாங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) இருக்கின்றது? எங்களுடைய இறைவன் எங்களை நல்லோர் கூட்டத்துடன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை வைக்கிறோம்” (என்றும் அவர்கள் கூறுவர்).

    5:85. அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளை அல்லாஹ் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கின்றான், அவர்கள் அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இன்னும், இதுவே நன்மை செய்பவருக்குரிய நற்கூலியாகும்.

    பதிலளிநீக்கு
  38. As in the quote 5:82 the quran is not instructing you to see the non believers as perfect enemy but it says what you will do.

    Then read all the verses the book is not to take one or two quote from it and just spread hatred.

    If it asks to spread hate why the consecutive quotes are to be there?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mr. Hakeem Bro,
      Pls read verse 5:86. too. Hope now you will understand what consecutive verses says.
      My intention is not to spread hatred. But to tell the truth.
      Pls try to understand that none of the book is given by god.
      I am not saying that quaran was written with the intention of spreading hatred.
      What i say is there are some verses which are misleading my muslim brothers.Which need to be edited.

      Pls read quran from non believers point of view, religious fanatics point of view. then you will understand what is to be edited in the quran.

      I do understand that there are several secular muslims.But nowadays i feel that secular mindset among muslims coming down due to several reasons.
      Thanks for your comment.Pls help our brothers to become more secular more peaceful.

      Thanks


      நீக்கு
    2. I am a believer why i have to read it in a non believer's point of view?

      From your point that "none of the book is written by god" why can't you take an Hindu scripture and post it and comment about it? now it seems that your posts are unilateral.

      நீக்கு
    3. Hi Hakeem Bro,

      //I am a believer why i have to read it in a non believer's point of view?//

      If a religious book says "Allah is a devil/satan and worshipper of allah is also a satan. Dont' take them as friends." Think that some people believes that these are the words of god.

      If you read this what will you think?

      Thanks bro

      நீக்கு
  39. Just i will ignore it and i don't want to read it and waste my time.

    Despite the verse 5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.

    We are not seeing any of the non-believer as perfect enemy but we utterly enemy to those who hurts us.

    If we saw you as enemy in the past then there would not be single Hindu temples in India during Muhals rule. remember mugals ruled India for 800 years.

    Then what do you think about GOD from your point of view.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hakeem bro,

      //Just i will ignore it and i don't want to read it and waste my time.//
      that is what many non-believers doing after reading quran. but there are believers who kills non-believers believes that allah said in quarn to do so...you can read the transcript of terrorists involved in mumbai attack and twin towers attack. what is your opinion about these incidence and quarn verses that lead to such thinking or incident?

      //We are not seeing any of the non-believer as perfect enemy but we utterly enemy to those who hurts us.//

      if you read properly the above verse, it does not say that muslims should see as a enemy only those who hurt. but it is says in general to treat/see all the jews and who worship other gods likes of hindus as enemy.

      //If we saw you as enemy in the past then there would not be single Hindu temples in India during Muhals rule. remember mugals ruled India for 800 years.//

      Many rulers did destroy several temples and killed several lakhs people. Having said that I am not saying all the rulers are bad and all the muslims are interested in killing other religion people. What i am saying is there are some quranic verses which motivates some muslims to become jihad terrorists. We need to either remove those verses or should give some other meanings to those verses. That is one way we can stop some Muslims becoming a jihad terrorist.
      What do yo think bro.

      I do believe that there is something above normal human beings. we can even call that power as god.even we can unite with that ultimate power.

      But i don't believe that religious books are given by god and god asked us to pray him, fight for him. If god/allah is happy he will give girls to enjoy and if he is angry he will send us to hell.

      Thanks

      நீக்கு
    2. //"Many rulers did destroy several temples and killed several lakhs people. Having said that I am not saying all the rulers are bad and all the muslims are interested in killing other religion people. What i am saying is there are some quranic verses which motivates some muslims to become jihad terrorists. We need to either remove those verses or should give some other meanings to those verses. That is one way we can stop some Muslims becoming a jihad terrorist.
      What do yo think bro"//

      Where is the proof?

      //I do believe that there is something above normal human beings. we can even call that power as god.even we can unite with that ultimate power.//

      So you believe that god is there?

      Show me any one be united with god in this world now.

      Will you believe Quran if the scientific things which are reveled very recently by scientists are give by god 1400 years ago?


      நீக்கு
    3. //"Many rulers did destroy several temples and killed several lakhs people. Having said that I am not saying all the rulers are bad and all the muslims are interested in killing other religion people. What i am saying is there are some quranic verses which motivates some muslims to become jihad terrorists. We need to either remove those verses or should give some other meanings to those verses. That is one way we can stop some Muslims becoming a jihad terrorist.
      What do yo think bro"//

      Where is the proof?

      //I do believe that there is something above normal human beings. we can even call that power as god.even we can unite with that ultimate power.//

      So you believe that god is there?

      Show me any one be united with god in this world now.

      Will you believe Quran if the scientific things which are reveled very recently by scientists are give by god 1400 years ago?


      நீக்கு
    4. நீங்கள் எதையும் அறியாதிருந்த நிலையில்
      உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து
      அல்லாஹ் உங்களை வெளியேற்றினான்.
      நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும்,
      பார்வைகளையும், உள்ளங்களையும்
      உங்களுக்கு ஏற்படுத்தினான்.

      திருக்குர்ஆன் 16:78

      நீக்கு
    5. //Many rulers did destroy several temples and killed several lakhs people. Having said that I am not saying all the rulers are bad and all the muslims are interested in killing other religion people. What i am saying is there are some quranic verses which motivates some muslims to become jihad terrorists. We need to either remove those verses or should give some other meanings to those verses. That is one way we can stop some Muslims becoming a jihad terrorist.
      What do yo think bro.//


      Give us proof.


      //I do believe that there is something above normal human beings. we can even call that power as god.even we can unite with that ultimate power.

      But i don't believe that religious books are given by god and god asked us to pray him, fight for him. If god/allah is happy he will give girls to enjoy and if he is angry he will send us to hell.//


      What you need from Quran too prove that it is from God?

      நீக்கு
    6. //that is what many non-believers doing after reading quran. but there are believers who kills non-believers believes that allah said in quarn to do so...you can read the transcript of terrorists involved in mumbai attack and twin towers attack. what is your opinion about these incidence and quarn verses that lead to such thinking or incident//

      To how many nonbelievers you asked about?
      Do you think the twin tower attack is done by Muslims?
      Then give me the reason why you believe it is done by muslims.

      Do you believe that the mumbai attack is done by muslims?

      Then give me the reason how you concluded that it is done by muslims.

      I am asking you

      Who rmoved the bullets from Martyr karkare's rifles?
      How he get isolated from his companions in the combat?
      His wife Mrs karkare demanded just full investigation
      on the demise of her husband. Why not the Justice(?)?

      நீக்கு
    7. Hi Hakeem,
      Apologies for the delay in replying to you.
      For most of your questions answers are in internet. so just take your time to google and read it with the intention of knowing the truth.

      //What you need from Quran too prove that it is from God?//

      what you need from my blog to prove that it is from god?

      It is your belif that quran is given by god. and there are people who belives
      vedas,gita, bible given by god. there are people belives even buddha is incarnation of god. i dont belive in any of these.

      //So you believe that god is there?//
      i belive there is something above my control. some call it nature. some call it god


      //Show me any one be united with god in this world now.//
      Budhdha, mahavir. I belive everyone in this world will unite with god/nature one day. may it christ, may it mohamed, may it hakeem, may it puratchi.




      //Do you believe that the mumbai attack is done by muslims?//
      pls read this judgement

      http://supremecourtofindia.nic.in/outtoday/39511.pdf

      Again and again i am saying i am not blaming all muslims. i am blaming terrorists who uses quran to kill innocent peoples inlcuding muslims.

      Dont say all muslims are good. there are muslims who are bad.
      At the same time i admit there are bad hindus,christians, buddhists.
      The problem is you are not admitting the truth.
      Try to understand the truth.
      Thanks




      நீக்கு
    8. you are saying that it is done by Muslims and you have to prove it

      நீக்கு
    9. http://www.youtube.com/watch?v=-neiHjBeOpw

      http://www.youtube.com/watch?v=fXKM3mYV98g

      http://www.youtube.com/watch?v=xEU61Cw7VCo

      http://www.youtube.com/watch?v=TeWYL7OzgsE

      http://www.youtube.com/watch?v=f2SLq08HMb4

      http://www.youtube.com/watch?v=nepltCs3D-Q

      http://www.youtube.com/watch?v=uWeIgj8yRio

      http://www.youtube.com/watch?v=uWeIgj8yRio

      http://www.youtube.com/watch?v=bFGhMBUORx8


      As you said it is taken from internet

      You will find it quite logic

      நீக்கு
    10. http://www.youtube.com/watch?v=mMpo0yqtjeM

      Must watch this if you really speak truth

      Bloody bullshits alongside speaks trying to make him scared by saying that he is on air

      நீக்கு
    11. http://www.youtube.com/watch?v=Qcd--IfDlRw

      http://www.youtube.com/watch?v=qgG7VagHQPE

      http://www.youtube.com/watch?v=it_dvB_EuzA

      நீக்கு
    12. we can prove that all the other scriptures are corrupted and the holly Quran is the only scripture to be pure and forever

      நீக்கு

    13. Hi Hakeem,

      //hakeem hakeemJune 22, 2013 at 7:30 PM
      you are saying that it is done by Muslims and you have to prove it//

      http://supremecourtofindia.nic.in/outtoday/39511.pdf

      Have you read this judgement? who are they?

      Tell me now.

      நீக்கு
    14. The government is not justfull they can say anything, then why they killed kasab secretly?

      நீக்கு
    15. //So you believe that god is there?//
      //i belive there is something above my control. some call it nature. some call it god//

      நான் கேட்கிறேன்,நீங்கள் என்னவென்று நினைக்கிறீர்கள்?

      நீக்கு
    16. இறைவன்,இயற்க்கை,சிவம்,அல்லா, கர்த்தர்,ஹக்கீம், புரட்சி மண்ணு,மட்டை எல்லாம் வார்த்தை ஜாலங்கள். நாம் வைத்த பெயர்கள் அவ்வளவே

      நீக்கு
  40. http://m.thelocal.fr/20130618/muslim-woman-miscarries-after-veil-attack


    யார் தீவிரவாதி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. may that baby rest in peace.
      I have already said bad people are in every religion,everywhere. But you are trying to say everybody is bad except muslims. Problem is with you. try to understand hakeem.

      நீக்கு
  41. Hi Hakeem,
    As I am running out of data i cannot watch the videos. not sure whether i will be able to watch even in the futre due to time and other constraints.

    //hakeem hakeemJune 22, 2013 at 8:47 PM
    we can prove that all the other scriptures are corrupted and the holly Quran is the only scripture to be pure and forever //

    Pls first prove my post is wrong. then you can prove other things.
    Thanks

    பதிலளிநீக்கு
  42. பதில்கள்
    1. What have proved? you have proved nothing. No one till now proved my post is wrong. And no one ever. Because i am speaking truth.

      நீக்கு
    2. இந்த உரையாடலை பார்த்தவர்கள் கமென்ட் கொடுக்கட்டுமே.

      நீக்கு
  43. இந்த வசனங்களில் இருந்து உங்கள் கண் குருடாக போனதில் இருந்து உங்கள் மீது எனக்கு அனுதாபம் தான் வருகிறது!!!


    2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

    2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.

    2:192. எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்); நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

    2:193. ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.

    எவரும் தேடி சென்று அந்த வசனத்தை படிக்க போவது இல்லை அப்படிபபடித்தாலும் மேலும் கீழும் உள்ள எல்லா வசனங்களையும் சேர்த்துதான் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. hakeem hakeem bro,
      விலாவாரியாக குரான் வசனங்களை தந்து, அதை எவ்வாறு தீவிரவாதிகள் புரிந்து கொண்டு அப்பாவி மக்களை கொல்கின்றனர் என்பதை இந்திய உச்ச நீதிமன்ற ஆவணத்தின் மூலம் விளக்கியுள்ளேன். இதை நீங்கள் படித்தீர்களா? அல்லது படிக்காதது போல நடிக்கிறீர்களா?

      நீக்கு
    2. நீங்கள் கொடுத்திருக்கும் வசனங்களின் முன் உள்ள 5 வசனங்களையும் பின் உள்ள 5 வசனங்களையும் வரிசையாக போடுங்கள் பார்போம், உங்களின் இந்த பதிவை நீக்க வேண்டாம் இந்த பதிவில் நான் மேற் சொன்னவாறு மாற்றங்கள் செய்து போடுங்கள் பார்போம்.

      நீக்கு
    3. இந்திய நீதி? மன்றங்கள் ஒன்றும் நீதிமிக்க மன்றங்கள் இல்லையே பிறகு எப்படி அவர்களை நம்புவது?. நீதியான அரசு இருந்தால் நிரபராதி என்று நீதி மன்றம் கண்துடைப்புக்கு தீர்ப்பு வழங்கி விட்டு அப்துல் நாசர் மதனியை எதற்கு இன்னும் சிறையில் அடைக்க வேண்டும்? முடிந்தால் உச்ச நீதி மன்ற நீதிபதியை கேட்டு சொல்லுங்களேன். மாலேகான் குண்டு வெடிப்பு யார் செய்தது? கோத்ரா ரயில் எரிப்பு யார் செய்தது ? சஞ்சய் தத்துக்கு தண்டனை கொடுத்தது பற்றி பாலிவூட், கொல்லிவூட்,டோலிவூட் என்று எல்லாம் கூவுகிறார்களே அவர்கள் எல்லாம் அப்படியே சிறைகாளில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய சொல்லி பேச சொல்லுங்கள் பார்போம்.

      நீக்கு
    4. Malegaon: On the third anniversary of the 2008 blast carried allegedly by the terrorists associated with the right wing Hindutva organisations, Malegaon reiterates its demand for fair and impartial probe into the heinous incident.

      "Thorough investigations into the 2008 Malegaon blast carried during the holy month of Ramadan is necessary because following the confession of Swami Aseemanand it becomes clear that the Hindutva terror network is also involved in the 2006 Malegaon blast carried on the day of Shab-e-Barat – another Muslim holy occasion", Malegaon's Kul Jamaati Tanzeem leaders including Maulana Abdul Hameed Azhari, Sufi Ghulam Rasool, Shakeel Faizee, Feroz Azami, Arif Turabi and others said in a joint statement.

      On 29th Ramadan in 2008, exactly three years from today, Malegaon was attacked by the terrorists allegedly associated with Hindutva organisations killing six people and injuring scores other. The attack – a clear attempt to target Muslims, was a repeat of what the town had seen on Shab-e-Barat day in 2006 when a series of bomb blasts had killed 32 people and injured more than 300.

      http://www.ummid.com/news/2011/August/29.08.2011/2008_blast_three_years_on.htm

      நீக்கு
    5. RTI And A Brave Woman's Right To Know The Truth.


      Vinita Kamte is the wife of late additional commissioner of police, Ashok Kamte, who was one of the three police officers slain near the Cama and Albless Hospital in Mumbai when the terrorist attack took place on 26 November 2008. The other two were anti terrorist squad chief of Mumbai police, Hemant Karkare, and senior inspector, Vijay Salaskar. Karkare was closing down on the perpetrators of an earlier terrorist incidence- The Malegaon Bomb blasts, where evidence was pointing to the involvement of Hindus and Hindu organizations. Since then, the accused his investigations unearthed are charged and trial has commenced. Soon after the attacks, a state Congress Minister of industry, Natayan Rane, had claimed, that some state politicians had provided help to terrorists in the November 26 attacks. Union minority affairs minister and former chief minister of Maharashtra, Abdul Rehman Antulay, had said the needle of suspicion in the slaying of Karkare and others points elsewhere because of Karkare's role in finding the "real culprits" behind Malegaon blasts. Later on, more preposterous conspiracy stories emerged, such as the one from Canada's Global Research, which tended to pass off wild speculation for serious analysis. On the other hand, the report handed out by a retired very senior government servant, Ram Pradhan, who was tasked to delve in detail on the role of Mumbai police during the attack, did a hash of an important job assigned to him. Between these two extremes, the official narrative and the wild conspiracy theories, there are many crucial questions and subtexts that have been in peppered with or not satisfactorily answered.

      This is where the role of this persevering lady, Vinita Kamte, to unearth the truth about the slaying of her husband and his two colleagues assumes place of pride. She even had the sagacity to put her personal trauma and her crusade to reach the truth on pause until Kasab's trial had reached its legal-end in his hanging. She was wise enough to realise that in the charged-up atmosphere leading up to the conclusion of the trial, her pleas to know the truth would lead nowhere, or worse be deliberately misinterpreted. Once Kasab was hanged, she resumed her drive. In response to her RTI queries, the Mumbai police handed over to her two certified copies of the same Call Log records in November 2009 and in February 2010. Later she also obtained a copy of the same Call Log records that was appended to the charge sheet filed by Mumbai police in Cama and Albless hospital case. Now, these 3 sets of copies are not "manually prepared transcripts" of the original - nobody does that anymore in the age of photocopiers, scanners and printers- but photocopies of the original. Since all the three are photocopies of the same original call records, aren't they expected to be Identical? Yes? The answer to the grave embarrassment of Mumbai police turns out to be "No!". Here definitely are the seeds of conspiracy and human agency at work, because no one in his right mind would trust a photocopier or even different photocopiers to churn out different copies of the same original. Recognising this crucial lapse, State Chief Information Commissioner, Ratnakar Gaikwad, had to issue stern warning to Additional Secretary Home to conduct a probe and nail those responsible for this undesirable miracle. Following is the story by Vinita Deshmukh, in MoneyLife.

      There are three sets of records of the same call log from the police control room, reveals RTI filed by Vinita Kamte. This prompted the state CIC to direct the Additional Home Secretary to conduct a probe, pinpoint individuals responsible and submit a report by 10th June on the alleged tampering into call log records during the 26/11 Mumbai terror attack

      http://searchlight-is-on.blogspot.ae/2013/05/rti-and-brave-womans-right-to-know-truth.html

      நீக்கு
    6. Targeted Assassination Of Hemant Karkare Suggests Hidden Motive Behind The Mumbai Attacks
      GregoryFegel / Blog / 5 yrs ago / 8AA+A++


      Targeted Assassination of Hemant Karkare Suggests Hidden Motive Behind the Mumbai Attacks

      Mumbai ATS chief Hemant Karkare was a preselected target of the Mumbai attackers, and Karkare was assassinated early in the attacks.

      Karkare had discovered that the recent Malegaon blasts were the work of Indian Army officers and Hindu extremists. The targeted death of Karkare raises serious questions about the actual motivations of the Mumbai attacks. Since the Malegaon bombing investigation had revealed that the culprits were Hindus, there was no motive for the Moslem Terrorists to target Karkare.

      Last week's Mumbai attacks, the recent series of market bombings in India, the bombing of the Marriot in Pakistan, and the murder of Benazir Bhutto are very likely the work of agents and agencies acting in the service of nation States outside of India and Pakistan.

      The USA, Britain, and Israel have geopolitical goals that do not respect the sovereignty or the well-being of Pakistan or India. A conflict between Pakistan and India could benefit the USA, Britain, and Israel, and those nations may be involved in much of the Terrorism that is now taking place in India and Pakistan.

      The USA, Britain, and Israel all have a long and well-documented history of 'false flag' Terrorist attacks which those nations blame on their enemies in order to justify aggression. The USA has often staged attacks on its own citizens which were blamed on US enemies.

      Since 9/11/2001, thousands of Moslems have been arrested and held on charges of Terrorism by the US and the UK, but there have been only a tiny number of convictions. The evidence against most of the prisoners is simply too flimsy to stand up in court, and yet the prisoners remain in custody for political purposes in a 'War on Terrorism' that has been manufactured by the governments of the USA, the UK, and Israel.

      http://creative.sulekha.com/targeted-assassination-of-hemant-karkare-suggests-hidden-motive-behind-the-mumbai-attacks_380778_blog

      நீக்கு
    7. //hakeem hakeemJune 26, 2013 at 9:47 PM
      நீங்கள் கொடுத்திருக்கும் வசனங்களின் முன் உள்ள 5 வசனங்களையும் பின் உள்ள 5 வசனங்களையும் வரிசையாக போடுங்கள் பார்போம், உங்களின் இந்த பதிவை நீக்க வேண்டாம் இந்த பதிவில் நான் மேற் சொன்னவாறு மாற்றங்கள் செய்து போடுங்கள் பார்போம்.//


      இந்த பதிவிற்கு மறுப்பை பதிவாக தந்தாள் அந்த பதிவை இதே தளத்தில் வெளியிடுகிறேன் என்று பதிவிலேயே கூறியுள்ளேன். நீங்கள் பதிவை தயார் செய்து தந்தாள் நிச்சயம் இங்கு பதிவிடுவேன்

      நீக்கு
    8. Hakeem,
      I have already told you that problem is with you. In your point of view everybody in this world are bad except muslims. In your point of view all the muslims are innocent. You are not in a position to admit the mistakes done my muslims. So you cannot see the truth unless you change your attitude.

      நீக்கு
  44. 5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.

    நீங்கள் தான் நாத்திகவதி ஆச்சே பிறகு எதற்கு இந்த வசனத்தை போட்டீர்கள் ?

    இதையே தான் இந்து மதமும் சொல்கிறது. கிறிஸ்தவ மதமும் சொல்கிறது அதையும் சேர்த்து போடவேண்டியது தானே?

    பதிலளிநீக்கு
  45. பதில்கள்
    1. iraivanai nambuvathu endraal enna? puriyavillai

      iriavan suvanaththil pala pengal, mathu koduppaan endra nambikkai ellaam illai.

      நீக்கு
    2. எதற்காக கொடுப்பார் என்று சொல்லுங்கள்.

      நீக்கு
  46. Hakeem,
    I am saying again that problem is with you. This may be due to your blind love towards Islam and Muslims. Loving your religion and community is not bad. At the same time you should not be a fanatic.

    When a Muslim is acquitted you consider that as a right judgment. But when a Muslim is convicted you consider that judgment as wrong and generalizing that it is against all Muslims.

    Don't you think this is a problem with you and other Muslim leaders? Don’t generalize a judgement for all Muslims or Islam.

    By supporting bad Muslims you are doing disservice to Islam and Muslims. Grow beyond your religion; religious books... love entire humanity. It may take some time for you..Take your time...relax...think...which is good for the humanity.
    Thanks
    Puratchi

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. You are not a justful person and you are a saffron terrorist and you are not for peace here but to mock Islam!!!

      You said the Mumbai attack is done by Muslim give me proof. Read the news website and come to debate here.There are more and more masters in this world as just as martyr Hemant Karkare. The judge who gave the judgement is nothing but a RSS and VHP driven sheep.

      You said the 9/11 is done by Muslims then to know the truth watch those videos and come to debate here.Are you dare to debate with scientists and the architect who designed and constructed twin tower.Why one of the engineer of the twin tower has been assassinated in a doubtful way?

      You post is nothing but a BULLSHIT!!!

      நீக்கு
    2. Hi Hakkeem
      This post was written when some muslim organisation asking for
      ban or correction on viswaroopam (kamal movie), Claiming that this movie or certain scenes on this movie will create bad impression about Muslims or Islam.

      1.So I have written this post stating the verses from quran which
      would create bad impression about other religion/religious people
      among muslims.

      2. I also proved that some muslims are really misguided by quranic
      verses and they think that killing other religious people would help them to go heaven, based on the transcript given by supreme court of India.


      I am ready to debate with you.

      First prove that quranic verses i have quoted do not create bad impression.


      Next we will debate about other things.

      Regards,
      Puratchi

      நீக்கு
    3. I am saying the Mumbai attack is conspired by saffron terrorists. search about the conspiracy and killing of Hemanth Karkare

      நீக்கு
  47. https://www.facebook.com/photo.php?fbid=623647847646774&set=a.177107642300799.42991.177040222307541&type=1&theater

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Though I do criticise some judgement, I trust Indian Judicial system.
      Culprit will be punished. I welcome this.

      When a Muslim convicted you will say the judge is a saffron terrorist but when a Muslim is acquitted you will say it is a good judgement.

      The problem is with you dear.

      நீக்கு
  48. Islam is also says to kill the person who killed a human unjustly. Ask your trusted Judicial system to hang Modi for his crime in Gujarat riots.

    பதிலளிநீக்கு
  49. http://dinamani.com/latest_news/2013/07/04/இஷ்ரத்-ஜஹான்-கொலை-விதிப்படி-/article1667417.ece

    http://dinamani.com/latest_news/2013/07/04/இஷ்ரத்-ஜஹான்-கொலையில்-தொடர்/article1667088.ece

    http://www.inneram.com/news/india/764-ishrat-jahan-fake-encounter-case.html

    http://timesofindia.indiatimes.com/india/Ishrat-Jahan-case-Senior-Gujarat-IPS-officer-declared-absconder/articleshow/20705004.cms

    http://timesofindia.indiatimes.com/india/Ishrat-Jahan-case-Senior-Gujarat-IPS-officer-declared-absconder/articleshow/20705004.cms

    http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Accused-IPS-officer-taped-bid-to-derail-Ishrat-probe-Tehelka/articleshow/20691517.cms

    http://timesofindia.indiatimes.com/india/First-intelligence-officer-set-to-be-arrested-in-Ishrat-case/articleshow/20549724.cms


    Same things are happened in Mumbai attack also

    பதிலளிநீக்கு
  50. http://www.maalaimalar.com/2013/06/28193636/arakonam-rail-way-station-Dett.html

    சென்னை, ஜூன் 28-

    அரக்கோணம் ரெயில் நிலைய பகுதியில் இன்று ரெயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்தார்.

    அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 11 டெட்டனேட்டர்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த டெட்டனேட்டர்களை கைப்பற்றினர். விசாரணையில் அவர் திருத்தணியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.

    தடை செய்யப்பட்ட பகுதிக்கு டெட்டனேட்டர் கொண்டு வந்ததன் பின்னணி குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    http://www.maalaimalar.com/2013/06/28193636/arakonam-rail-way-station-Dett.html

    பதிலளிநீக்கு
  51. enna poratchi mani,

    onga poratchi ellam ammbuttu thana? nan poatta rendu moonu comment ellam enga? islamiyargalai oru naalum vella mudiyadhu in sha allah

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. konjam busy hakeem, ippa unga comments irukkaanu paarththu sollunga.

      quran paththi ezhuthuna idaththula sampantham illaama pala link kodukkireenga... ippa athai naan veliyittathaala islamiyargalai naan vendrathaaga aagividumaa? nallaa comedy pandreenga :)

      நீக்கு
  52. Neenga dhaan qurana pathi eludhuraennu sollittu mumbai atttack twin tower attacknu solli sambantham illama eludhureenga? unga comedy periya comediya illa irukku :D :D :D

    பதிலளிநீக்கு
  53. https://www.facebook.com/photo.php?fbid=522463924467660&set=a.153507401363316.26435.100001121728894&type=1&theater

    பதிலளிநீக்கு
  54. https://www.facebook.com/photo.php?fbid=522463924467660&set=a.153507401363316.26435.100001121728894&type=1&theater

    பதிலளிநீக்கு
  55. https://www.facebook.com/photo.php?fbid=199624413530348&set=a.132264296933027.28585.132027006956756&type=1&theater

    பதிலளிநீக்கு
  56. https://www.facebook.com/photo.php?fbid=10200879094912263&set=a.4216126754046.2156264.1011415831&type=1&theater

    பதிலளிநீக்கு
  57. former ulthurai amaichar sonnadhu ennanu theriumla?
    mumbai attack indian government thaan pannuanadhamla.:D :D :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Hakeem,

      Not "former ulthurai amaichar"...former home ministry officer..

      he did not say that Indian government did this...but he says Indian govt hiding something.
      //He opined the Indian government might not have been involved in the attack but there was something suspicious. //

      http://www.thenews.com.pk/Todays-News-2-191329-Sethi-slams-India-for-concealing-facts-of-parliament-attack

      Hope you know the difference...

      Earlier even digvijay said batla house encounter was fake...but later it is proved that it is real and they were suspected to be Indian Mujahideens.

      http://ibnlive.in.com/news/batla-house-encounter-court-to-pronounce-sentence-tomorrow/409979-3-242.html

      don't just carried away by what someone suspects.

      நீக்கு
    2. twoooh your stupidity is ultimate and i am just wasting my time. hell be on you for false propagation.

      நீக்கு
  58. என் பெயர் முர்ஸித் ஹர்லாவி ....!

    பதிலளிநீக்கு
  59. அலவற்ற அருலாளன் நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன் ....! இஸ்லாமிர்கள் செயல்கலோ , பேச்சுக்களோ , பார்வையோ உங்களை காயப்படுத்திருந்தால் மண்ணிப்புக் கேட்டுக்கொள்கிறேன் .....!
    ஒரு வேதத்தை பற்றி த் தெரிந்து கொள்ள நாம் அதனுடைய வேதநூலை ப்படித்து புரிந்து கொள்ளவேண்டும் ..! வாழ்த்துக்கள் , நீங்கள் சகோதரர் கமல்ஹாசன் செய்த தவரை செய்யவில்லை மாறாக வேதநூலை ப்படித்திருக்கிறீர் ....! ஆனால் புரிந்து கொள்ளமுடியவில்லை , இறைவன் உங்களுக்கு வழிவகுப்பான்..”ஆமின்..”

    சகோதரரே ..! குர்ஆன் உலகில் மிகச்சிறந்த வேதநூல் மட்டுமல்ல , இணையில்லாத சேர்ச் இஞ்சின் ....! இதில் நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அது கிடைத்தே தீரும் , நீங்கள் உங்கள் உள்ளத்தை தொட்டுக் கேளுங்கள் .... நீங்கள் குர்ஆனின் எப்படியாவது பிழை கண்டுபிடிக்க வேண்டும் என்றே குர்ஆனைத் திறந்தீர்...? வாழ்த்துக்கள் உள்ளங்கையால் சூரியனை மறைத்து விட்டீர்...! ஆனால் நீர் மறைத்தது உமது கண்ணை என்பது உங்களுக்கு த்தெரியாது. மறுப்பு பேசத்தேவையில்லை.. அது உமக்கு த்தெரியாது...!

    சகோதரரே ! ஒரு வேலை நீங்கள் நான் மேலே குறிப்பிட்டதன் பிறகாரம் ”நீர் உள்ளங்கையால் சூரியனை மறைத்து விட்டீர்” என்பதை நான் உங்களை வாழ்த்துவதாக க்கூறி சந்தோசத்தில் துள்ளிக் குதித்தாலும் குதிப்பீர்...! ஏன் சொல்லுகிறேன் என்றால் நீங்கள் படித்த குர்ஆன் வசனங்களும் , படித்த முறையும் அப்படித்தான் உள்ளது.....!

    குர்ஆன் வசனங்கள் காலத்துக்கு ஏற்றாற் போல இறக்கப்பட்டது...! அது ஒவ்வொன்றும் இறங்கியதற்கு ஒவ்வொரு சந்தர்ப்பங்கள் உள்ளன...! அது உங்களுக்கு த்தெரியுமா ? தெரிந்து கொள்ளுங்கள் . ஆனால் குர்ஆனை ப்படிக்கும் போது உள்ளத்தை தேடல் ஆர்வத்தோடு வைத்துக் கொள்ளுங்கள்..! ஆனால் நீர் இதை ப்படித்துக் கொண்டிருக்கும் போது கூட உங்கள் மனம் என்னை பொய்யாக்க த்துடிக்கும் ஓசை என் காதைக்கிழிக்கிறது....!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...