வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 6 ஏப்ரல், 2011

பார்க்காமலே காதலிப்பவர்கள் யார்?

உடனே நமக்கு அஜித், தேவயாணி ஞாபகம் வரலாம். ஆனா நாட்டில் பல பேரு இப்படி இருப்பாங்க. இதுக்கு காரணம் சுக்கிரன்.

சுக்கிரன் பன்னிரெண்டில் இருந்தால் அவர்கள் பார்க்காமலே காதலிப்பார்கள்.
ஓரிருமுறை பார்த்து விட்டு பல காலம் காதலிப்பர். கோள்களின் மற்ற நிலைகளை பொறுத்து அவர்கள் காதல் தோல்வி அடைய வாய்புகள் உண்டு. காதல் சொன்னா தானே வெற்றி பெரும், இவர்கள் சொல்லாமலே கூட விட்டுவிடலாம்.
காதல் மற்றும் "அந்த" மாதிரி கற்பனைகளில் கில்லாடிகள்.
இவர்களுக்கு நகைகள் மேல் அதிக ஆர்வம் இல்லாமல் போகலாம். ஆடம்பர வாழ்விலும் பற்றில்லாமல் போகலாம்.

இவர்களுக்கு சுக்கிலம் மற்று சுரோணிதம் நிறைய விரயமாக வாய்ப்புகள் உண்டு. விரயம் என்பதால் சுயமாகவும் வெளியேற்ற வாய்ப்புகள் உண்டு. அதே நேரத்தில் இவர்கள் அந்த சுகம் அடிக்கடி அனுபவிக்க வாய்புகள் உண்டு. இந்த மாதிரி பெண்கள் அதிகமாக உச்ச நிலையை அடைய வாய்ப்புகள் உண்டு.

மற்ற கோள் நிலைகளைபொருத்து, திசை புத்தியை பொறுத்து இவர்கள்
அந்த மாதிரி செயல்களில் பிறருடன் ஈடுபட வாய்ப்புகள் உண்டு,
துணையை இழக்கவும் நேரிடலாம் அல்லது இவை நடக்காமலும் போகலாம்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

மனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன?


மனிதனால் ஒரு செயல் முடியாது என்றால் உடனே அது கடவுளால் தான் முடியும் என்பான்.

எல்லாமே விதிப்படி தான் நடக்கும் என்பர் சிலர்.
பிறப்பையும் இறப்பையும் மாத்த முடியாது ஆனால் நாம் வாழும் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும் என்பர் சிலர்.

இதில் யார் சொல்வது உண்மை? நான் சொல்கிறேன் (ஏற்கனவே சில சித்தர்கள் சொல்லிவிட்டார்கள்...இங்கே நான் என்பது ஒரு விவாதத்திற்காக மட்டுமே) இரண்டு பேர் சொல்வதும் பொய்.

விவாதத்திற்கு குழந்தை பிறப்பை எடுத்துக்கொள்வோம்.
குழந்தை என்பது ஆண்டவனின் அருளால் தான் பிறக்கின்றது என்பர் பலர். இது உண்மையா?
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்தால் கரு உருவாகலாம் அல்லது உருவாகாமல் போகலாம். கரு உருவானால் எந்த பிரச்சனையும் இல்லை. கரு உருவாக வில்லையெனில், அந்த தம்பதியர் போன ஜென்மத்தில் பாவம் செய்துள்ளனர் ஆதலால் தான் குழந்தை பிறக்கவில்லை என்பர் பலர்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஜோதிட ரீதியாக குழந்தை பிறக்கும் என்று இருந்தாலும் அவர்கள் அதற்கான முயற்சியை எடுக்க வில்லை அல்லது கருத்தடை உபயோகிக்கின்றனர் எனில் அவர்களுக்கு கடவுள் எப்படி குழந்தையை தருவார்?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நான்கு முதல் பத்து குழந்தை வரை பெற்றுக்கொண்டனர். ஆனால் இன்று ஒன்று அல்லது இரண்டு போதும் என்று நிறுத்திக்கொண்டான். இங்கே கடவுளின் பங்கு என்ன?

இதிலிருந்து என்ன தெரிகின்றது மனிதன் நினைத்தால் தான் சில நடக்க வேண்டியவைகள் நடக்கும் இல்லையேல் நடக்காது.
(தொடரும்....)

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

கோப்பை வந்தும் முழு மகிழ்ச்சி வரவில்லையே ஏன்?

இந்தியா கிரிக்கெட் எனும் மட்டைப்பந்தாட்டத்தில் உலகக் கோப்பை வென்றும் பெரும்பாலானோருக்கு முழு மகிழ்ச்சி இல்லை. நூறாவது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்த்த சச்சின் அதை அடிக்கவில்லை. இது ஒரு சிறு குறை என்றாலும் அவரை குறை சொல்ல முடியாது.
ஏன் எனில் மட்டைப்பந்து என்பது ஒரு குழுவின் ஆட்டம். அதில் ஒரு தனி நபரே அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக ஆட வேண்டும் என்று எதிர்பார்த்தல் தவறு. மற்ற ஆட்டங்களில் அவர் சிறப்பாக விளையாடினார் மேலும் அவரால் தான் காலிறுதி அரையிறுதி போட்டிகளில் வெல்ல முடிந்தது. மேலும் இந்த உலககோப்பையில் அவர் எடுத்த மொத்த ஓட்டங்கள் அவருக்கு இரண்டாம் இடத்தை பெற்று தந்தது.
ஆதலால் அவரின்றி இந்த உலககோப்பையை வென்று இருப்பதும் கடினமே. இருப்பினும் அவர் இறுதி ஆட்டத்தில் சதம் அடித்திருந்தால் அது இரட்டிப்பு மழிச்சியாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் இந்தியா வென்றது.. அதுவே அவருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சி. சச்சினின் சாதனை தொடர வாழ்த்துக்கள்.

சனி, 2 ஏப்ரல், 2011

எல்லோருக்கும் ஞானம் கிடைக்குமா? அதை கொடுப்பது யார்?

ஆம் இப்புவியில் பல ஆண்டுகள் வாழும் அனைவருக்கும் நிச்சயம் ஞானம் கிடைக்கும்.

இந்த ஞானம் பெற யாரும் எதுவும் செய்ய வேண்டாம். அது கிடைக்க வேண்டிய நேரத்துல தானா கிடைக்கும்.

இந்த ஞானம் பெரும்பாலும் துன்பத்தாலும், துரோகத்தாலும், விரக்தியினாலும், அலுப்பினாலும் ஒரு வித அனுபவத்தாலும் வரும் என்று சொல்லலாம். (இங்கே ஞானம் என்பது ஒரு புரிதலை , படிப்பினையை குறிக்கும். உனக்கெல்லாம் பட்டாதான்டா தெரியும் என்று சொல்வார்களே அதையும் குறிக்கும் ).ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு பெரும் பிரச்சனையை குறிக்கலாம்.
இந்த ஞானத்தை கொடுப்பவன் கேது. யாருக்கு எதனால் ஞானம் வரும் என்பதை ஓரளவுக்கு கணிக்க முடியும்.

ஞான காரகன் கேது எந்த வீட்டில் இருக்கின்றானோ அந்த வீட்டை பொறுத்துதான் பெரும்பாலும் அவனுக்கு ஞானம் கிடைக்கும். அவன் இருக்கும் வீடு சம்பந்தமாகவே பெரும்பாலும் ஞானம் கிடைக்கும். ஆம் ஒன்று முதல் பண்ணிரண்டு வரை அவன் எங்கே இருந்தாலும் ஞானத்தை அளிப்பான். ஒரு வீடு எது எதைக்குறிக்கிறதோ அதில் ஒன்றின் மூலமாக இந்த ஞானம் வரும்)

உதாரணத்திற்கு ஒருவனுக்கு இரண்டில் கேது எனில் அவனுக்கு குடும்பத்தின் மூலமாக ஞானம் கிடைக்கலாம்(சிலருக்கு அளவுக்கு அதிகமாக குடும்பம் பெருகி வரும்- சிலருக்கு குடுபமே இல்லாமல் போய் ஞானம் வரும்), செல்வத்தின் மூலமாக கிடைக்கலாம். ஏழில் கேது எனில் திருமணம் மூலம் -திருமணம் ஆனபின்பு துணையினால் - அல்லது நண்பர்களினால். இப்படி அந்த வீட்டில் சம்பந்தப்பட்ட எதன் மூலமாக வேண்டுமானாலும் ஞான காரகன் கேது ஞானத்தை கொடுப்பான்.

(குறிப்பு: எப்பொருள் எனத்தொடங்கும் குறளை மனதில் வையுங்கள்)

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

சூரியனுக்கும் மறுபிறவிக்கும் சம்பந்தம் உண்டா?

ஜோதிடத்தில் மறுபிறவி இல்லாமைக்கு சில கோள் நிலைகள் உள்ளன. அது பெரும்பாலும் கேது குரு சம்பந்தப்பட்டது.ஆனால் நான் சூரியன் பற்றி எங்கேயும் படிக்க வில்லை.(படித்ததே கொஞ்சம் தான்...நீங்கள் படித்திருந்தால் சொல்லுங்கள் ).
இது எனக்கு ஆச்சர்யத்தை தருகிறது. ஏன் எனில் சூரியன் ஆன்மாவை குறிக்கின்றது. அவனே உடல் காரகனும் கூட.
மறுபிறவி ஆன்மா மற்றும் உடல் சம்பந்தப்பட்டது. ஆன்மா அழிவது அல்லது இறைவனுடைய ஆன்மாவோடு சேருவது அல்லது இறைவனடி சேர்வது எனபதே மறுபிறவி இன்மையை குறிப்பதாக படித்தடுன்னு. அப்படிப்பட்ட ஆன்மாவைக் குறிக்கும் சூரியன் பற்றி ஏன் எந்த குறிப்பும் இல்லை என்பது வியப்பே.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் சூரியன் பன்னிரெண்டில் இருந்தால் அவனுக்கும் மறுபிறவி இருக்காது எனபதே. ஏன் எனில் இந்த பாவமே மோட்சம் மற்றும் விரயத்தை குறிக்கின்றது. இங்கே இருக்கும் சூரியனானது மறுபிறவியை (குறைந்த பட்சம் பூமியில்) தராது.

வியாழன், 31 மார்ச், 2011

(இ)லக்னம் என்றால் என்ன?


ஆன்மாவுக்கும் அது பூமியில் எடுக்கும் புது பிறவிக்கும் இணைப்பு ஏற்படுகின்ற முதல் தருணமே லக்னம். இதை நான் சொல்லவில்லை...கீழே பாருங்க
Lagna (Sanskrit '', 'ascendant'.) Lagna is the first moment of contact between the soul and its new life on earth in Jyotisha.The Essentials of Vedic Astrology'', by Komilla Sutton, The Wessex Astrologer Ltd, England, 1999, p.96.

(மொழி பெயர்ப்பில் தவறு இருப்பின் தயவு செய்து திருத்துங்கள்.)

இந்த இணைப்பை ஏற்படுத்துபவன் குரு. ஆதலால் தான் அவனை லக்ன காரகன் என்கின்றனர் என்று நினைக்கின்றேன். (அதுமட்டுமல்ல  அவரே புத்திர காரகன் எனப்படுகின்றார். காரணம் அவரால் தான் உயிர்கள் உருவாகின்றது. ஒருவருக்கு குழந்தை பிறக்க வேண்டும் எனில் குரு பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஒரு வேலை இவர் வலிமையுடன் இல்லாவிடில் அணிதாவது அதிபதி அல்லது ஒன்பதாவது அதிபதிஆவது வலிமையுடன் இருக்க வேண்டும்)

இப்பொழுது லக்னத்தில் குரு இருந்தால் "காரகோ பாவ நாஸ்தி" (இப்படி ஏதோ சொல்வாங்களே) விதிப்படி அவன் இந்த இணைப்பை கடைசி இணைப்பாக்க
வேண்டும் என்பது என் கருத்து. ஆதலால் தான் லக்னத்தில் இருக்கும் குரு இந்த பிறவியே கடைசி பிறவியாக செய்து, பிறவிப்பிணியிலிருந்து விடுவிப்பான் என்று முந்தைய பதிவில் கூறி இருந்தேன்.(குறைந்த பட்சம் பூமியுடனான தொடர்பையாவது துண்டிக்கனும்) தங்களுடைய கருத்து?


லக்னத்தில் குரு இருப்பது நல்லது என்றாலும் அவர் தனித்து இருத்தலே மிக மிக முக்கியம்.

(லக்னம் அன்றைய தினத்தின் சூரிய உதயத்தையும் ஒருவர் பிறந்த நேரத்தையும்  வைத்து கணக்கிடப்படுகிறது. லக்னம் ஒருவரின் உயிரை, தலையை குறிக்கும்.எந்த வீடு லஞாமாக உள்ளதோ அந்த வீட்டின் அதிபர் வலிமையுடன் இருத்தல் மிக மிக அவசியம்.)

புதன், 30 மார்ச், 2011

லக்னத்தில் குரு இருப்பது ஏன் நல்லது?

குரு லக்னத்தில் இருப்பது நல்லது என்று பலரும் சொல்கிறார்கள் அதற்கு பல காரணங்களும் உண்டு.

குரு லக்னத்திலிருந்து 5,7,9 ம் இடங்களை பார்க்கிறான். குரு பார்வை கோடி நன்மை என்பார்களே அது லக்னத்தில் இருக்கும் பொழுது இன்னும் பொருந்தும். இந்த மூன்று வீடுகளும் ஒரு மனிதனுக்கு மிக மிக முக்கியமானவைகள். இவை பலம் பெறுவதால் இந்த உலக வாழ்கையை சிறப்பாக வாழ குரு வழி வகை செய்கிறான். இப்படி இருக்கும் குரு தனியாக இருப்பது இன்னும் சிறப்பு.

என்னைப்பொருத்த வரை குரு லக்னத்தில் இருப்பதால் மற்றும் ஒரு சிறப்பு உண்டு, அதுவே மிக முக்கியமானதும் கூட, அது என்ன?

லக்னத்தில் இருக்கும் குரு மறுபிறவி இல்லாமல் செய்வான் என எனக்கு தோன்றுகிறது.

காரகன் அதற்குரிய வீட்டில் இருப்பின் அந்த வீட்டின் பலன் பாதிக்கும் என்பது விதி.
குழந்தை காரகன் குரு ஐந்தில் இருந்தால் குழந்தை பிறப்பில் தாமதம், பிரச்னை ஏற்படும் என்று சிலர் சொல்வதுண்டு. அதேபோல் தந்தை காரகன் சூரியன் ஒன்பதில் இருந்தால் தந்தையுடன் உறவு சுமூகமின்மை, மற்றும் சில கெடு பலன்கள் உண்டாகும் . சிலருக்கு அந்த வீட்டுக்குரிய நபர்கள் இல்லாமல் போவதும் உண்டு.

இந்த விதியை நாம் குருவுக்கு எடுத்துக்கொண்டால் லக்னத்தில் இருக்கும் குரு மறுபிறவியை தர மாட்டான், தரக்கூடாது.

ஏன் எனில் குருவே லக்ன காரகன். லக்ன காரகனான குரு லக்னத்தில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் அடுத்தது லக்னமே இல்லாமல் செய்ய வேண்டும். அதாவது அடுத்த பிறவியே இல்லாமல் செய்யவேண்டும்.
(இது உண்மையோ பொய்யோ ஆண்டவனுக்கே வெளிச்சம்....)
எனவே குரு லக்னத்தில் இருப்பது நல்லது என்பதற்கு இதுவே மறைமுகமான முக்கிய காரணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. உங்களுடைய கருத்து?


செவ்வாய், 29 மார்ச், 2011

டீ -க்கு தேனீர், காபிக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

காபிக்கு தற்போது கொட்டை வடி நீர் என்பதே இணையான சொல்லாக கருதப்படுகிறது. ஆனால் "கொட்டை வடி நீர்"-ல் உள்ள முதல் மூன்று எழுத்துக்களை எடுத்துக்கொண்டு "கொவனீர்" என்று காபியை தமிழ் படுத்தலாம்.
தேயிலையிலிருந்து நீர் தயாரிப்பதால் தேனீர்,
கொட்டையை வடிகட்டி நீர் எடுப்பதால் கொவனீர்.
எப்பூடி?

திங்கள், 28 மார்ச், 2011

ஆன்மீக பயணத்தில் எல்லாருக்கும் எல்லாமே கிடைக்குமா?

வாழ்கையில் எப்படி எல்லாமே எல்லாருக்கும் கிடைக்காதோ அதேபோல் ஆன்மீக பயணத்திலும் எல்லாருக்கும் எல்லாமே கிடைக்காது.

இருந்ததாலும் சிலது எல்லோர்க்கும் கிடைக்கும் அது செய்யும் யோகா அல்லது சாதனையை பொருத்தது.

சிலருக்கு ஒரு ஆள பார்த்தவுடனே அவனின் என்ன ஓட்டங்களை அறிய முடியும்,

சிலருக்கு நினைத்த உடன் மழை பொழிய வைக்க முடியும்

சிலருக்கு நினைத்தவுடன் ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் போக முடியும்

சிலருக்கு கூடு விட்டு கூடு பாய முடியும் அதாவது தனது உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு செல்ல முடியும்

சிலருக்கு பிரபஞ்சத்த சுற்றி வர முடியும்

இது அவர் அவர் செய்யும் சாதனையை பொறுத்தே அமையும்.

பத்து பேர் சாதனை அ வை செய்யும் பொழுது அதில் பலருக்கு ஒரே விதமான அனுபவம் மற்றும் சக்திகள் கிடைக்க வாய்புகள் அதிகம்.

பத்து பேர் சாதனை அல்லது யோகா ஆ வை செய்யும் பொழுது அ சாதனை செய்தவர்கள் பெறாத அனுபவங்களை இவர்கள் பெறலாம். அதே நேரத்தில் இவர்கள் பத்தில் பேரில் பெரும்பாலானோருக்கு ஒரே வித அனுபவம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

இதை இப்படி சொல்லலாம்

திருச்சியிலிருந்தும் சென்னைக்கு வரலாம் திருப்பதியிலிருந்தும் சென்னைக்கு வரலாம்,

அதே போல் அந்த இடங்களில் இருந்து நடந்தும் வரலாம், பறந்தும் வரலாம், மகிழுந்திலும் வரலாம் (காரு),

பேருந்திலும் வரலாம்.

அனைவரும் வந்து சேரும் இடம் ஒன்று தான் ஆனால் அவர்கள் வந்த வழி, முறை, வேகம் வேறு இதைப்பொருத்து அவர்களின் பயண அனுபவமும் வேறுபடும்.

இதைப்போல ஆன்மிக பயணத்திலும் அவர்கள் பின் பற்றும் யோகா முறையை பொறுத்து, ஆன்ம பக்குவத்தை பொறுத்து, வினைப்பயனை பொறுத்து அனுபவம் மற்றும் பயண வேகம் வேறுபடும். போய் சேரும் இடம் ஒன்றா என்றால்.........இல்லை வேறாகவும் இருக்கலாம்.


ஞாயிறு, 27 மார்ச், 2011

சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்க்கும் என்ன தொடர்பு? வேறுபாடு?


சிற்றின்பத்திலும் ஐம்பொறிகளுக்கும் இன்பம் (அதான் கண்ணு, காது, வாய், மூக்கு, மெய்) பேரின்பத்திலும் ஐம்பொறிகளுக்கும் இன்பம்.

சிற்றின்பத்திலும் காணலாம்,தொடலாம்(தொடு உணர்ச்சி), முகரலாம், கேட்கலாம், உண்ணலாம் பேரின்பத்திலும் இவை நடைபெறும்.

என்ன வேறுபாடு?

சிற்றின்பத்தில் ஒவ்வொரு தடவையும் கடைசியில் சுக்கிலம் வெளிப்படும்.... பேரின்பத்தில் ஒரே ஒரு தடவை முதலில் வெளிப்படும்.

சிற்றின்பம் சில மணித்துளிகள் அல்லது நேரங்கள் .....பேரின்பத்தில் பல மணி நேரங்களும், நாட்களும், மாதங்களும், ஏன் வருடங்களும் சாத்தியமாகலாம்.

சிற்றின்பத்தில் இருவர் ஒருவராக முயற்சி பேரின்பத்தில் ....ஒருவன் ஒன்னும் இல்லாமல் போக முயற்சி.(அதான்பா இறையாதல் )

சிற்றின்பம் அளவுக்கு மிஞ்சினால் வெளியில சங்கு வான வேடிக்கை....பேரின்ப பயணத்தில் உள்ளுக்குள்ள சங்கு வான வேடிக்கை.
சிற்றின்பம் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு...பேரின்பம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம்.

அமிர்தம் கிடைத்தால் பிறகு என்ன? மரணம் இல்லா பெருவாழ்வுதான்.


Related Posts Plugin for WordPress, Blogger...