புதன், 6 ஏப்ரல், 2011
பார்க்காமலே காதலிப்பவர்கள் யார்?
செவ்வாய், 5 ஏப்ரல், 2011
மனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன?
மனிதனால் ஒரு செயல் முடியாது என்றால் உடனே அது கடவுளால் தான் முடியும் என்பான்.
ஞாயிறு, 3 ஏப்ரல், 2011
கோப்பை வந்தும் முழு மகிழ்ச்சி வரவில்லையே ஏன்?
ஏன் எனில் மட்டைப்பந்து என்பது ஒரு குழுவின் ஆட்டம். அதில் ஒரு தனி நபரே அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக ஆட வேண்டும் என்று எதிர்பார்த்தல் தவறு. மற்ற ஆட்டங்களில் அவர் சிறப்பாக விளையாடினார் மேலும் அவரால் தான் காலிறுதி அரையிறுதி போட்டிகளில் வெல்ல முடிந்தது. மேலும் இந்த உலககோப்பையில் அவர் எடுத்த மொத்த ஓட்டங்கள் அவருக்கு இரண்டாம் இடத்தை பெற்று தந்தது.
ஆதலால் அவரின்றி இந்த உலககோப்பையை வென்று இருப்பதும் கடினமே. இருப்பினும் அவர் இறுதி ஆட்டத்தில் சதம் அடித்திருந்தால் அது இரட்டிப்பு மழிச்சியாக இருந்திருக்கும்.
சனி, 2 ஏப்ரல், 2011
எல்லோருக்கும் ஞானம் கிடைக்குமா? அதை கொடுப்பது யார்?
இந்த ஞானம் பெற யாரும் எதுவும் செய்ய வேண்டாம். அது கிடைக்க வேண்டிய நேரத்துல தானா கிடைக்கும்.
இந்த ஞானம் பெரும்பாலும் துன்பத்தாலும், துரோகத்தாலும், விரக்தியினாலும், அலுப்பினாலும் ஒரு வித அனுபவத்தாலும் வரும் என்று சொல்லலாம். (இங்கே ஞானம் என்பது ஒரு புரிதலை , படிப்பினையை குறிக்கும். உனக்கெல்லாம் பட்டாதான்டா தெரியும் என்று சொல்வார்களே அதையும் குறிக்கும் ).ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு பெரும் பிரச்சனையை குறிக்கலாம்.
ஞான காரகன் கேது எந்த வீட்டில் இருக்கின்றானோ அந்த வீட்டை பொறுத்துதான் பெரும்பாலும் அவனுக்கு ஞானம் கிடைக்கும். அவன் இருக்கும் வீடு சம்பந்தமாகவே பெரும்பாலும் ஞானம் கிடைக்கும். ஆம் ஒன்று முதல் பண்ணிரண்டு வரை அவன் எங்கே இருந்தாலும் ஞானத்தை அளிப்பான். ஒரு வீடு எது எதைக்குறிக்கிறதோ அதில் ஒன்றின் மூலமாக இந்த ஞானம் வரும்)
வெள்ளி, 1 ஏப்ரல், 2011
சூரியனுக்கும் மறுபிறவிக்கும் சம்பந்தம் உண்டா?
வியாழன், 31 மார்ச், 2011
(இ)லக்னம் என்றால் என்ன?
வேண்டும் என்பது என் கருத்து. ஆதலால் தான் லக்னத்தில் இருக்கும் குரு இந்த பிறவியே கடைசி பிறவியாக செய்து, பிறவிப்பிணியிலிருந்து விடுவிப்பான் என்று முந்தைய பதிவில் கூறி இருந்தேன்.(குறைந்த பட்சம் பூமியுடனான தொடர்பையாவது துண்டிக்கனும்) தங்களுடைய கருத்து?
லக்னத்தில் குரு இருப்பது நல்லது என்றாலும் அவர் தனித்து இருத்தலே மிக மிக முக்கியம்.
புதன், 30 மார்ச், 2011
லக்னத்தில் குரு இருப்பது ஏன் நல்லது?
செவ்வாய், 29 மார்ச், 2011
டீ -க்கு தேனீர், காபிக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
திங்கள், 28 மார்ச், 2011
ஆன்மீக பயணத்தில் எல்லாருக்கும் எல்லாமே கிடைக்குமா?
வாழ்கையில் எப்படி எல்லாமே எல்லாருக்கும் கிடைக்காதோ அதேபோல் ஆன்மீக பயணத்திலும் எல்லாருக்கும் எல்லாமே கிடைக்காது.
இருந்ததாலும் சிலது எல்லோர்க்கும் கிடைக்கும் அது செய்யும் யோகா அல்லது சாதனையை பொருத்தது.
சிலருக்கு நினைத்த உடன் மழை பொழிய வைக்க முடியும்
சிலருக்கு நினைத்தவுடன் ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் போக முடியும்
சிலருக்கு கூடு விட்டு கூடு பாய முடியும் அதாவது தனது உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு செல்ல முடியும்
சிலருக்கு பிரபஞ்சத்த சுற்றி வர முடியும்
இது அவர் அவர் செய்யும் சாதனையை பொறுத்தே அமையும்.
பத்து பேர் சாதனை அ வை செய்யும் பொழுது அதில் பலருக்கு ஒரே விதமான அனுபவம் மற்றும் சக்திகள் கிடைக்க வாய்புகள் அதிகம்.
பத்து பேர் சாதனை அல்லது யோகா ஆ வை செய்யும் பொழுது அ சாதனை செய்தவர்கள் பெறாத அனுபவங்களை இவர்கள் பெறலாம். அதே நேரத்தில் இவர்கள் பத்தில் பேரில் பெரும்பாலானோருக்கு ஒரே வித அனுபவம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
இதை இப்படி சொல்லலாம்
திருச்சியிலிருந்தும் சென்னைக்கு வரலாம் திருப்பதியிலிருந்தும் சென்னைக்கு வரலாம்,
அதே போல் அந்த இடங்களில் இருந்து நடந்தும் வரலாம், பறந்தும் வரலாம், மகிழுந்திலும் வரலாம் (காரு),
பேருந்திலும் வரலாம்.
அனைவரும் வந்து சேரும் இடம் ஒன்று தான் ஆனால் அவர்கள் வந்த வழி, முறை, வேகம் வேறு இதைப்பொருத்து அவர்களின் பயண அனுபவமும் வேறுபடும்.
இதைப்போல ஆன்மிக பயணத்திலும் அவர்கள் பின் பற்றும் யோகா முறையை பொறுத்து, ஆன்ம பக்குவத்தை பொறுத்து, வினைப்பயனை பொறுத்து அனுபவம் மற்றும் பயண வேகம் வேறுபடும். போய் சேரும் இடம் ஒன்றா என்றால்.........இல்லை வேறாகவும் இருக்கலாம்.