சின்மயி- ராஜன், கார்த்திக் சிதம்பரம் - ரவி சங்கரன்  இந்த பிரச்சனைகளை 
பார்த்தும் நாம் திருந்தவில்லை என்றால்  நாம் கல்வி கற்று என்ன பயன்? எழுதி  என்னத்தை கிழித்து விடப்போகிறோம்? 
நமக்கென்று ஒரு சங்கம் இருந்திருந்தால் சின்மயி-ராஜன் மற்றும் பிறர்  
பிரச்சனையை இந்த அளவிற்கு வளர விடாமல் தவிர்த்திருக்கலாம். சங்கத்தின் மூலமாக  சின்மயி -ராஜன் மற்றும் பிறர்கள் மத்தியில்   நாம் சமாதானத்தை ஏற்ப்படுத்தி  இருக்கலாம்.இங்கே இருவரது நலனையும் நம்மால் காப்பாற்றி இருக்க முடியும். 
சங்கம் இல்லாததால் நாம் அதை செய்யவில்லை  அதனால் ராஜன், சரவணன் ஆகியோர் இன்று  சிறையில். சின்மயியும் மன உளைச்சலில்.
சின்மயி பிரபலம் என்பதால் இதற்க்கு முன்பு  புகார் கொடுத்தவர்களுக்காக எந்த  வித நடவடிக்கையையும் எடுக்காமல் இவருக்காக காவல் துறை  
நடவடிக்கை எடுத்துள்ளதாக பலரும் கூறுகின்றனர். சங்கம் இருந்திருந்தால் முன்பு  புகார் கொடுத்தவர்களின் பிரச்சனைகளையும் நம்மால் தீர்த்து வைத்திருக்க  முடியும். 
'ராபர்ட் வதோராவைவிட கார்த்திக் சிதம்பரம் அதிக சொத்து சேர்த்துள்ளதாக  செய்தி  வந்துள்ளது' என்று கூறியதற்காக ரவி சீனிவாசன் என்பவர் கைது 
செய்யப்பட்டுள்ளார். ஆங்கிலேயன்  ஆட்சி காலத்தில்  இருந்ததைவிட இன்று நாம் மிக மோசமான நிலையில் இருக்கின்றோம் என்பதையே இவைகள் 
காட்டுகின்றன. 
நம்மிடம் சங்கம் இருந்தால்  நாம் இவர்களுக்காக போராடலாம். ஏன் சட்டத்தை கூட  நம்மால் திருத்த முடியும்.
நடிகர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம் என்று இருக்கும்பொழுது ஏன் இணைய  எழுத்தாளர்கள்  சங்கம் ஒன்றை ஏற்ப்படுத்த கூடாது?
பிளாக்கர்,டிவிட்டர்,முகநூல் மற்றும் மின்னஞ்சல் இவைகளில்  கருத்து 
சுதந்திரத்தை காப்பாற்ற, நாம் சிறைக்கு செல்லாமல் இருக்க சங்கம் தேவை.
சங்கம் என்பது கைது நடவடிக்கைகளுக்காக மட்டுமல்ல, சமூக நலனுக்காகவும் நாம் ஒட்டுமொத்தமாக குரல் கொடுக்க  பயன்படுத்தலாம். 
நமக்கு நாமே சில சட்டங்களை வகுத்துக்கொண்டு ஆபாச வார்த்தைகளை தவிர்க்கலாம், தமிழ் மொழியில் மொழி பெயர்ப்புகளை கொண்டுவரலாம்,
 பதிவர் சந்திப்பு போன்ற நிகழ்சிகளில் நமது நூல்களை வெளியிடலாம்,
நூல் வெளியிட ஆர்வம் இருந்தும்  பதிப்பகத்தை தொடர்பு கொள்ள இயலாவதருக்காக நாம்  வழிகாட்டலாம், விளம்பரங்களை  கூட நாம் பதிவுகளில் இட மொத்தமாக வாங்கலாம் - பலருக்கும் 
பங்கிட்டு தரலாம். 
சங்கத்தினால் நாம் நன்மைகளை அடைகிறோமோ இல்லையோ துன்பத்தையாவது அடையாமல்  தவிர்க்கலாம்.
 சங்கத்தை  மனதில் வையுங்கள்.
நாம் உடனடியாக என்ன செய்யவேண்டுமெனில் தகவல் தொழில் நுட்ப சட்டம் 66A வில்  மாற்றங்களை கொண்டு வரவேண்டும் .  அதிகாரம் உள்ளவர்கள்  தவறாக பயன்படுத்தும்  வகையில்  இந்த சட்டம் உள்ளது.
அந்த சட்டம் அப்படி என்ன சொல்கிறது?
------------------------------------------------------------------------------------------------------------------------------
**[ 66A. Punishment for sending offensive messages through communication 
service, etc..-* Any person who sends, by means of a computer resource or a 
communication device,-
(a) any information that is grossly offensive or has menacing character; or
(b) any information which he knows to be false, but for the purpose of 
causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury, 
criminal intimidation, enmity, hatred, or ill will, persistently makes by 
making use of such computer resource or a communication device,
(c) any electronic mail or electronic mail message for the purpose of 
causing annoyance or inconvenience or to deceive or to mislead the 
addressee or recipient about the origin of such messages
shall be punishable with imprisonment for a term which may extend to three 
years and with fine.
Explanation: For the purposes of this section, terms "Electronic mail" and 
"Electronic Mail Message" means a message or information created or 
transmitted or received on a computer, computer system, computer resource 
or communication device including attachments in text, image, audio, video 
and any other electronic record, which may be transmitted with the message.
[* Inserted vide Information Technology Amendment Act, 2008]
 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த சட்டப்படி நம் கருத்தால் பிறர் கோபமடைந்தாள் கூட நம்மீது வழக்கு தொடுக்க  முடியும்.  நாம்  அரசியல் பற்றி எழுத முடியாது. திரை  விமர்சனங்கள் கூட எழுத முடியாது. 
அதாவது நாம் எந்த கருத்தையும் சொல்லக்கூடாது என்றே இந்த அதிகாரவர்க்கம் இந்த  மாதிரி ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அவர்கள் நினைத்தால் நம் அனைவரையும்  இன்றே   சிறையில் அடைக்க முடியும். 
டிவிட்டரில் கருத்து சொன்னவர்களே இதுவரை  கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே 
சங்கத்தை மனதில் வையுங்கள் போராட்டத்தை டிவிட்டரில் இருந்தே தொடங்குவோம். 
அனைத்து  டிவிட்டர் உபயோகிப்பாளர்களும்  #ModifyIndianITAct66A என்று 
தங்களுடைய பெரும்பாலான டிவிட்டுகளில் பயன்படுத்தவேண்டும்.  நாளை  முதல்  
இச்சட்டம் மாற்றியமைக்கப்படும் வரை நாம்   இதை செய்ய வேண்டும். நமக்கு 
தெரிந்த தெரியாத    பலரையும் இதை நாம் செய்ய 
சொல்ல   வேண்டும்.   நமது குரல் 
நிச்சயம்  மாற்றத்தை  கொண்டு வரும்.
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள.
பதிவுலகிலும் நாம் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரே பதிவை இடலாம் என்ற 
எண்ணத்தில் உள்ளோம். அதுபற்றி பின்வரும் கட்டுரைகளை படித்து உங்களது 
கருத்தையும்  ஆதரவையும் தாருங்கள்.
http://dharumi.blogspot.com/2012/11/601-i-t-act-section-66.html
http://anjaasingam.blogspot.com/2012/11/blog-post.html
 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு  நம்மில்   ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும்  சிறையே.