வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

லோக்பால் தேவையா? அன்ன ஹசாரே செய்வது சரியா தவறா?

என் சந்தேங்கத்திற்கு விடை தெரிந்தால் தீர்த்து வைப்பீர்களா?

அன்ன ஹசாரே ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டத்தை முன் வைத்துள்ளார். இதற்க்கு மக்களின் ஆதரவு அமோகம். இல்லாமல்  போகுமா, ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று இன்று. நேற்று மாடுத்தீவன ஊழல், பீரங்கி ஊழல். அட ஆயிரக்கணக்கான  ஊழல்கள்.  இது மட்டுமா அரசாங்க அதிகாரிகள் தங்களது வேலையை   செய்யவே  லஞ்சம் கேட்க்கிறார்கள்.

மக்களுக்காக மக்களின் நலனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் சரி அரசாங்க அதிகாரிகளும் சரி ஊழல் செய்வதிலும் லஞ்சம் வாங்குவதிலேயும்  தான் குறியாக உள்ளனர். இவர்களால் தினம் தினம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்...பாதிக்கபடுகின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவும் இவர்கள் மேல் கோபத்தில் உள்ளது என்பதே உண்மை. ஆதலால் தான் மக்களின் ஒரு பகுதி   இன்று போராட்டத்தில் குதித்துள்ளது.

அன்ன ஹசாரே மற்றும் இந்த லோக்பால் மசோதா  மூலம் ஊழலை முற்றிலும்  ஒழித்து விட முடியும்  என ஒரு பகுதி மக்கள் நம்புகின்றனர்.  ஆனால் இது சாத்தியமா என்றால் எனக்கு சந்தேகமாக உள்ளது.
லோக்பால் மசோதாவில் பல நல்ல அம்சங்கள் உள்ளது. எனக்கு அதில் ரொம்ப பிடித்தது ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பது மட்டுமல்லாது  அவர்களது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட  வேண்டும் என்பதுதான்.

எத்தனையோ சிறப்பம்சங்கள் இருப்பினும் லோக்பலின் ஒரு அம்சத்தில் எனக்கு மிகப்பெரிய குறை இருப்பதாக உணர்கிறேன். நான் எந்த அம்சத்தில் குறை இருப்பதாக கருதுகிறேனோ அதுதான் லோக்பாலின் ஆணிவேரே.
அந்த ஒரு குறையினால் லோக்பால் தேவையா? என்ற சந்தேகமே என்னுள் எழுந்துள்ளது. என் சந்தேகத்தை நீங்கள் தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். இந்த சந்தேகங்கள்  சிறுபிள்ளைத்தனமானது  என்று கூட உங்களுக்கு தோன்றலாம். உங்கள் விடைய சரியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கருத்தினை ஏற்று நானும் இந்த போராட்டத்திற்கு என்னால் முடிந்த ஆதரவை தருவேன். (எப்பொழுதும் ஊழலுக்கு எதிராக மானசீக குரல் கொடுப்பவன் தான் நான்)

சரி..எந்த அம்சத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது என்றால் அது  லோக்பாலின் குழுவைபற்றியது தான் அந்த சந்தேகம்.

ஊழல் குற்றச்சாட்டை   விசாரிக்கப்போவது   யார் என்றால் ஒரு குழு. இந்த குழுவில் இருக்க போகிறவர்களும் மனிதர்கள் தான் மகான்கள் அல்ல.
உங்களுக்கே தெரியும் நாட்டில் எத்தனை உத்தமர்கள் உள்ளனர் என்று. இந்தியா முழுவுதும் லோக்பால் மசோதாவை கொண்டுவர எத்தனை உறுப்பினர்கள் வேண்டும் சற்று சிந்தித்து பாருங்கள். எனக்கு தெரிந்து ஒரு மாநிலத்திற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மிக மிக குறைந்த பட்சம் முன்னூற்று  ஐம்பதிற்கு மேற்ப்பட்ட உத்தம உறுப்பினர்கள் தேவை.

இத்தனை உத்தமர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் உத்தமர்கள் மட்டும்  தான் அந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று அறுதியிட்டு கூற முடியுமா?
இந்த உறுப்பினர்களின் சேர்க்கையில் அரசியல்வாதிகளின் மறைமுக தலையீடு இல்லாமல் இருக்கும் என்று கூற முடியுமா?
இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு  சம்பளம் உண்டா எவ்வளவு? இதை யார் கொடுப்பார்கள்? 
இலவசமாக எத்தனை நாள் அவர்கள் கடமையாற்ற  முடியும்?
இந்த உறுப்பினர்களும் ஊழலில் ஈடுபட மாட்டார்கள் என்று எதை வைத்து நம்புவது?

ஏற்க்கனவே சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் லஞ்சம் ஊழல் செய்கிறார்கள். இவர்களை கண்காணிக்க தண்டனை தர லோக்பால் கொண்டு வந்தால் நாளை லோக்பால் உறுப்பினர்களை யார் கண்காணிப்பது தண்டனை தரப்போவது யார்?

இருக்கின்ற சட்டங்களையே இன்னும் கடுமை படுத்த முடியாதா? ஒளிவு மறைவற்ற விசரானையை கொண்டுவர முடியாதா? புகார் தருபவர்களுக்கு  தைரியத்தையும்  பாதுகாப்பையும் அளிக்கும் சட்டத்தை கொண்டுவர முடியாதா?

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல பண்பை ஊட்டி வளர்க்க வேண்டும். எப்படியாவது சம்பாதித்தால்  போதும் என்ற மனநிலைதான் இன்று பெரும்பாலான மக்களிடம் உள்ளது. நல்லவனாக இருக்க வேண்டும், உண்மையை பேச வேண்டும். என்று என்னும் மக்கள் அரிதிலும் அரிது.

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையால் தான் அழிவு என்று எத்தனை தடவை சொன்னாலும் கதை என்று சொல்வதிலேய குறியாய் இருந்து கொண்டு கருத்தினை கோட்டை விட்டு விட்டோம். பகுத்தறிவு பேசியவர்கள் பணத்தை சுருட்டியதுதான்  மிச்சம். காவி கட்டியவனும் சளைத்தவன் இல்லை என்று இன்று சுருட்டிக்கொள்கிறான்.
ஒவ்வொரு மனிதனும் நேர்மையாக வாழவேண்டும். உண்மையை பேசவேண்டும்.
புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்
என்றார் வள்ளுவர்.
அதாவது உண்மை பேசினால் தான் உள்ளம் தூயமையாகுமாம். உண்மையும் உயிர்களிடத்தில் அன்பும் என்று வருகின்றதோ அன்றுதான் அனைத்திற்கும் முடிவு பிறக்கும். அதுவரை எந்த பாலும் ஒன்றும் செய்ய முடியாது.

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

சோதனைச்சாலையில் ஆன்மீக அனுபவங்களை பெற முடியுமா?

தியானத்தின் மூலம் மட்டும் தான் ஆன்மீக அனுபவத்தை பெற முடியுமா? வேறு வழிகள் கிடையாதா என்றால்  வேறு வழியும் உண்டு என்பதே பதில்.

உண்மையை சொல்லவேண்டுமானால் தியானத்தால் எதை எதையெல்லாம் சாதிக்க முடியுமோ அதை எல்லாம் வேறு வழிகளிலும் அடையலாம்.
என்னுடைய

மதுவிற்கும் தியானத்திற்கும் சம்பந்தம் உண்டா?


என்ற பதிவில் மதுவின் மூலம் அடையும் சில அனுபவங்களை தியானத்தின் மூலம் பெறலாம் என்று கூறியிருந்தேன்.அதுபோலவே பல ஆன்மீக அனுபவங்களையும்  தியானம் மூலம் மட்டும் அல்லாமல் சோதனை சாலையிலும்  பெறலாம் . ஆனால் அதற்கான இன்றைய அறிவியலின் வளச்சி போதாது.

மது அருந்தினால் எப்படி தீமை உண்டாகிறதோ அவ்வாறே சோதனை சாலை மூலம் அடையும் ஆன்மீக அனுபவங்களும் முதலில் தீமையையே உண்டாக்கும். அது முழுமையான அனுபவமாகவும் இருக்க முடியாது.  அறிவியலால் முழுமையான ஆன்மீகத்தை தர முடியாதா என்றால். தரமுடியலாம் ஆனால் அதற்க்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் நூற்றாண்டுகள் ஆகும் என்பது தெரியவில்லை.

எப்பொழுது அறிவியல் அகத்தவத்தினால் அடையமுடியும் அனுபவங்களை முழுமையாக சோதனைச்சாலையில் அடையவைக்கின்றதோ அதுவே அறிவியலின் உச்சம்.

அந்த உச்ச கட்ட அறிவியலால் ஞானத்தையும், பிறவாமையையும், மரணமில்லா பேரின்ப பெருவாழ்வையும் தர முடியும் என்று நினைக்கின்றேன். உண்மையில் அறிவியல் இதை நோக்கியே பயணிப்பதாக கருதுகின்றேன்.


நேற்று  வெறும்   அகம்  (ஆன்மீகம்). நாளை  அகமும்  புறமும் (ஆன்மீகமும் அறிவியலும்)  இணையலாம் ....இணையும்.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

இந்து, இஸ்லாம், கிருத்துவம் இவற்றிற்குள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?


இன்றைய நிலையில் மிகப்பெரிய மதங்களாக கருத்தப்படுவது இந்து, இஸ்லாம், கிருத்துவம். இவற்றிற்குள் பல ஒற்றுமைகள் உள்ளது. இங்கே நான் சொல்லப்போவது ஒரே ஒரு ஒற்றுமை.

அந்த ஒற்றுமை சொல்வது மிகப்பெரிய மிக சூட்சுமமான உண்மை. இது சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

அது என்ன ஒற்றுமை?
அதுதான் அ உ ம். இது அனைத்து மதங்களிலும் முக்கிய இடம் பெறுகின்றது. இது இல்லையேல் உலகமும் இல்லை உயிரும் இல்லை
என்பது சிலரின் கருத்து. இது இந்து மதத்தில் ஓம் என்று அழைக்கப்படுகின்றது.
இது இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தில் ஆமின் என்றழைக்கபடுகின்றது.

இந்த மதத்தில் ஓம் என்பது எதற்கும் முதிலில் உபயோகப்படுத்தப் படுகின்றது. இதேபோல் கிருத்துவம் மற்றும் இஸ்லாமில் ஆமின் என்பது எதற்கும் முடிவில் உபயோகப்படுத்தபடுகின்றது.

இந்த ஓம் என்பதன் முக்கியத்துவம் இந்து மதத்தில்  உள்ள பலருக்கு தெரியும் என்று நினைக்கிறேன். ஆனால் ஆமின் என்பது எப்படி ஏன் வந்தது என்பது இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தினருக்கு தெரியமா எனபது சந்தேகமே.

கிருத்துவம் மற்றும் இஸ்லாமில் உள்ள மிகப்பெரிய குறை என்னவெனில் அவர்கள் பைபிள் மற்றும் குரானை  தாண்டி சிந்திப்பதே இல்லை. அப்படி சிந்தித்தாலும் அதை தன் மதத்திற்கு மட்டும் எப்படி சாதகமாக்குவதே என்று சிந்திக்கின்றனர். இதை எப்படி மனித சமுதயாத்திற்கு சாதகமாக்குவது என்று சிந்திப்பதே இல்லை.


அ உ ம் என்பது மிகப்பெரிய ரகசியம் பொருந்திய உண்மையான  ஒற்றுமை. இதை ஏன் அனைத்து மதங்களும் பயன் படுத்த வேண்டும்?
அனைத்தின் மூலம் இதுதான் எனபதை அவர்களின் முன்னோர்கள் உணர்ந்திருந்தனர் என்பதையே காட்டுகின்றது.

மூலமே ஒன்றாக இருக்கும் பொழுது
நான் வேறு நீ வேறு என்பது எப்படி சாத்தியம்?
என் கடவுள் வேறு உன் கடவுள் வேறு என்பது மூடத்தனம் அல்லவா?
அனைத்து மக்களும் ஒருவனின் படைப்பே எனும் பொழுது....
என் சமூகம் உனக்கு முன்பாக  செல்லும் எனபது மூடத்தனத்தின் உச்சம் அல்லவா?

சிந்தியுங்கள் மக்களே...சிந்தியுங்கள்.

இது சம்பந்தமான இரு  பதிவுகள் உங்கள் பார்வைக்கு 

எல்லா மொழியின் முதல் எழுத்தும் அ என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்து, இஸ்லாம் இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?

 


திங்கள், 1 ஆகஸ்ட், 2011

இந்து, இஸ்லாம் இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?

இஸ்லாமுக்கும் இந்து மதம் என்று அழைக்கபடுகின்ற மதத்திற்கும் இப்படி ஒரு  மிகப்பெரிய  ஒற்றுமை இருக்கும் என்று யாரும் கனவிலும் நினைத்து பார்த்திருக்க முடியாது என்று நினைக்கின்றேன்.

இது  எத்தனை பேருக்கு தெரியும் என்பதும்  எனக்கு  தெரியாது. இந்த ஒற்றுமை எதை காட்டுகிறது என்றால்,உலகில் தற்போதுள்ள  அனைத்து மதங்களுக்கும் மூலம் பண்டைய இந்தியாவாகத் தான் இருக்கும் என்ற என் என்னத்தை உறுதி செய்வது போலவே உள்ளது.  இந்திய தத்துவங்களின் தாக்கத்திலிருந்து எந்த ஒரு மதமும் தப்பியதாக எனக்கு  தெரியவில்லை.

சரி இசுலாமுக்கும் இந்திய மதத்திற்கும் அப்படி என்ன ஒற்றுமை இருக்கின்றது?

என்னைப்பொருத்த வரை இசுலாமின் ஆணி வேறே இந்து மதம் தான்.
இசுலாமியர்கள் ஐந்து வேலை தொழுகை செய்வார்கள் என்பது பலருக்கும் தெரியும் என நினைக்கின்றேன். இந்த ஐந்து வேலை தொழுகை எனபது இந்து மத கோயில்களில் செய்யப்படும் ஆறு கால பூஜையை ஒட்டியே அமைந்துள்ளது.

அதாவது இந்து கோயில்களில் ஒரு நாளைக்கு ஆறு வேளை பூஜை செய்வார்கள். இப்படி செய்ய காரணம்  ஆறுவேளையும்(அல்லது நாள் முழுவதும் ) இறைவனை நினைக்க வேண்டும் அவன் மேல் பக்தி செலுத்த வேண்டும் என்பதற்காக இருக்கலாம். இதைப்போலத்தான் இசுலாமியர்களும் ஐந்து வேளை தொழுகை செய்கின்றனர்.

இந்த ஐந்து வேளை தொழுகைக்கும் ஆணி வேர் இந்திய கோயில்களில் செய்யப்படும் ஆறுகால பூ செய் ,(பூசை,பூஜை) ஆகத்தான் இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.  இது ஏதேச்சையாக அமைந்ததா அல்லது இந்து மதத்தின் தாக்கம் தான் இதுவா என்பதெல்லாம் எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே வெளிச்சம்.

நீங்கள் இப்பொழுது கேட்கலாம் ஏன் இசுலாமியர்கள்  ஐந்து  வேளை மட்டும் தொழுகை செய்கிறார்கள் ஏன் அவர்கள் ஆறாவது வேளை தொழுகை செய்வதில்லை என்று.

ஆறு வேளை தொழுகை செய்வது முக்கியம் என்று நபிக்கும் நன்றாக தெரிந்தே இருக்கின்றது. நபி அவர்களும் அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டும் தினமும் ஆறு வேளை தொழுகை செய்வார்கள். இருப்பினும் அவர் ஏன் அதை அனைத்து இசுலாமிய  மக்களுக்கும் பொதுவாக வைக்க வில்லை  எனபது தெரியவில்லை.

இந்து மதத்திலும் ஆறு கால பூ செய், இசுலாமியத்திலும் ஆறு கால தொழுகை இது பக்தி மார்க்கத்துக்கு மட்டுமா என்று கூட தோன்றலாம். உண்மையில் இது ஆன்மீக, யோக  மார்க்கத்துக்கும் பொருந்தும்.

வடலூர் வள்ளலார் அவர்களும்  ஒருவன் ஆறுவேளை தியானம் செய்யவேண்டும் என்றே குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆறுவேளை என்பது ஒருவேளை சீக்கிரம் ஆன்ம முன்னேற்றத்தை அளிக்கவள்ளதாக இருக்கலாம்.

இப்படி இந்து, இசுலாமிய மதங்கள் மிக ஒற்றுமையான கொள்கைகளை கொண்டுள்ள பொழுது (சில )இசுலாமிய இந்து மக்கள் தங்களுக்குள்  வெறுப்புடன் இருப்பது அறிவீனம் இல்லையா?

இறைவன் ஒருவனே என்று கூறிக்கொண்டு அவன் என் மதத்தை சார்ந்தவன் என்பது எவ்வளவு  மோசமான செயல்?.
இறைவன்  அனைத்து  உயிர்களுக்கும் பொதுவானவன். அவன் என்னுடைய  மதத்தை தழுவினால் மட்டும் தான் நன்மை செய்வான் எனபது சரியா? 

ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்றுணர்ந்த பின்னும்

என் குலமே உயர்ந்தது என்பது எப்படி சரியாகும்?
 
சிந்தியுங்கள் மக்களே..... சிறப்பாக வாழுங்கள்



புதன், 27 ஜூலை, 2011

சிவனுக்கும் இயேசுவின் சிலுவைக்கும் என்ன சம்பந்தம்?

கிருத்துவர்களை ஏன் நீங்கள் சிலுவையை வழிபடுகிறீர்கள் என்று கேட்டால். ஏசு  மக்களின் பாவத்தை கழுவுவதற்காக சிலுவையை ஏற்றுக்கொண்டார். சிலுவையில் அவர் ரத்தம் படிந்ததால் அது புனிதமாயிற்று என்று கூறுவார்கள். (ஒரு சிலர்.) இந்த காரணம் ஒரு விதத்தில் சரியென்றாலும் எனக்கு இதையும் தாண்டி இதில் ஒரு சூட்சுமம் இருப்பதாகவே உணர்கிறேன்.

கிருத்துவர்கள் ஞான ஸ்நானம் எடுக்கும் பொழுதும், பிரத்யேக வழிபாட்டிற்கு  பிறகும் நெற்றியில்  இந்த சிலுவை குறியை பாதிரியார்கள்  மக்களுக்கு இடுவார்கள். அவர் சிலுவையில் அறையப்பட்டார் சரி அதற்க்கு ஏன் நெற்றியில் அந்த சிலுவை குறியை இட வேண்டும்?

 இங்கு தான் சூட்சுமமே உள்ளது. இதை இப்பொழுது அவர்கள் ஒரு சம்பிரதாயமாக உபயோகித்தாலும் இதன் உண்மையான காரணம் சிவனுக்கு மூன்றாவது கண் எனப்படும் நெற்றிக் கண்ணை திறப்பதற்காகவே   இதை செய்கிறார்கள். நெற்றிக்கண்ணின் மூலம் தான் ஒருவன் உண்மயான ஞானத்தை, இறை தரிசனத்தை பெற முடியும்.


ஞான ஸ்நானம் என்பதே ஒருவன்  ஞான பாதைக்கு தயாராகி விட்டான் என்பதை உலகிற்கு உணர்த்த தான். இதில் வேதனை என்னவென்றால் இது ஒரு சம்பிரதாயமாகவே இருக்கிறதே தவிர அவர்களை பாதிரியார்கள் அடுத்த கட்டத்திற்கு  கொண்டு செல்வதில்லை.அதற்க்கு காரணம் அவர்களின் அறியாமை தான்.  அடுத்த கட்டம் எனபது தியானம் செய்வதாகும். இந்த தியானம் யோகம் இவற்றை இந்துக்களுடையது என்று சொல்லி பாதிரியார்கள்  செய்ய அனுமதிப்பதில்லை.

நெற்றிக்கண் திறக்கும்  பொழுதோ அல்லது எப்பொழது மூச்சானது  மூக்கு வழியாக வராமல் நின்று போகிறதோ  அப்பொழுது அந்த உச்ச கட்டடத்தில்  இந்த சிலுவையை நெற்றியில்   காண முடியும்.

 எவன் ஒருவனுக்கு மூக்குக்கு கீழே மூசச்சு வருவதில்லையோ அவனே உண்மையான தீர்க்க தரிசி என்று ஏசு கூறியிருக்கிறார். எப்பொழுது ஒருவனுக்கு மூச்சுக்காற்று  மூக்கு வழியாக  வராது எனில் அது எப்பொழது சுழுமுனை வழியாக செயல்படுகிறதோ அப்பொழுது.

ஏசு ஒரு யோகி என்று சொல்வதற்கு இந்த ஒரு சான்று மட்டுமே போதுமானது.

சிவனுக்குள்ளது  போல் நெற்றிக்கண் திறப்பதற்காகவே நெற்றியில் சிலுவை இடப்படுகிறது எனபதே என் கருத்து.

ஞாயிறு, 24 ஜூலை, 2011

இந்த பொம்பளைங்க திருந்தவே மாட்டாங்களா?

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் குத்துங்க எசமான் குத்துங்க. இப்படி ஒரு வசனம் ஒரு திரைப்படத்தில் வரும்.
அந்த வசனம் பாலியல் ஒழுக்கம்  சம்பந்தப்பட்டது. இங்கே நான் சொல்லப்போவது....................சம்பந்தப்பட்டது.

பெண்கள் ஏன் நகை அணிகிறார்கள். தங்களை  அழகாக காட்ட. உண்மையில்  நகை ஒரு கவர்ச்சி பொருள். நகை அணியும்பொழுது அவர்கள் இன்னும் அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்கள். இதற்காகத்தான் அவர்கள் நகைகள் உபயோகிக்கிறார்கள் என நான் நினைக்கின்றேன். தன்னுடைய வசதியை காட்டுவதற்காகவும் பலர் நகை அணிகின்றனர். நகை அணிவதை ஒரு கௌரவமாகவே பலர் நினைக்கின்றனர்.

நகைகளை அணிவதும் அணியாமல் இருப்பதும் அவர் அவர்களது சொந்த பிரச்னை. இதைப்பற்றி நான் எழுதுகிறேன் என்று நீங்கள் கேட்கலாம்.

இன்று காலையில் ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன் ஒரு பெண்ணின் ஏழரை பவுன் தாலி சங்கிலியை இரு திருடர்கள் பறித்துக்கொண்டு போய்விட்டனர். அதுமட்டுமா பறிக்கும்போது அவரது கழுத்தில் வேறு பயங்கர காயம் ஏற்ப்பட்டு விட்டதாம்.

இதை கேட்டவுடன் முதலில் எனக்கு அந்த திருடர்கள் மீதுதான் கோபம் வந்தது. இப்படிப்பட்டவர்களின் இரு கைகளையும்  துண்டிக்க வேண்டும். சில பகுதிகளில் இன்னும் திருடர்கள் நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இதே பகுதியில் ஒரு நான்கு வருடத்திற்கு முன்பு  இதே போல் ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன். இவையாவும் எனக்கு ஏதோ ஒரு முறையில் தெரிந்தவர்களுக்கு நேர்ந்ததால் எனக்கு தெரிந்த செய்திகள். எனக்கு தெரியாமல் எத்தனை திருட்டு நடந்ததோ தெரியவில்லை.

திருடர்களிடமிருந்து காத்துக்கொள்ள நாம் தானே ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும்.  பெண்கள் அதிகமாக நகை அணிவதால் அவர்கள் உயிருக்கே உலை போன கதைகள் நாம் செய்தித்தாளில் படிக்கிறோம்.

இப்படி இருக்கம் பட்சத்தில்
பெண்கள் நகை அணிந்து தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.
துணையுடன் சென்றாலும் திருட்டு சம்பவம் நடப்பதாக  தெரியும் இடங்களில் இரவு நேரங்களில் உலாவுவதை தவிர்த்தல் நல்லது.
வீட்டிற்குள் எவ்வளவு வேண்டுமானாலும் நகை அணிந்து அழகாய் இருங்கள் அது தவறில்லை.
பொதுவாக நகைகளின் மேல் உள்ள மோகத்தை குறைப்பது நல்லது. மூலதனமாக வேண்டுமானால் அதை அதிகமாக உபயோகியுங்கள்.
நகையினால் வரும்  அற்ப கௌரவம் எதற்கு? நடத்தையால் வரும் கௌரவம் தானே அழகு?


நான் கேள்விப்பட்ட இரண்டு சம்பவங்களும் காலை நேரத்தில் தான் நடந்தது. குற்றம் அதிகமாக நடுக்கும் இடத்தில் நீங்கள் வாசிப்பீர்கள் எனில் அதிகாலை நேரத்திலும் கவனம் தேவை.

இப்படிப்பட்ட இடங்களில் இன்னும் காவலை  அதிப்படுத்துவார்கள் என நம்புகிறேன். இருப்பினும் நம்மை காப்பாற்றி கொள்ள முதல் வேலையே நாம் தான் செய்ய  வேண்டும்.

திருடர்களை திட்டாமல் பெண்களை குறை சொல்வதை சிலர் கையாலாகாத தனமாக கூட நினைக்கலாம்.
திருடர்களை களைய  வேண்டும் அதுதான் முக்கியம். அதே நேரத்தில் திருட நாம் அவர்களுக்கு வாய்ப்பும் தந்துவிட கூடாது. இது ரொம்ப முக்கியம்.

பெண்களே புன்னகை இருக்க
பொன் நகை ஏன்?
பொன் நகை போனால்
புன்னகையும் சேர்ந்தல்லவோ  போய்விடுகிறது?


சிந்தியுங்கள்....சிறப்பாக வாழுங்கள்






வியாழன், 21 ஜூலை, 2011

ஆண் பெண் நாகரீகம் எங்கே போகும்?

முப்பது வயதிற்கு கீழ் உள்ளவர்களும் இளகிய மனம் உள்ள ஆண்களும் பெண்களும் இதை படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

முதலில் ஆணும் பெண்ணும் பார்த்துக்கொள்வதால்  என்ன தவறு என்றனர்.

பிறகு ஆணும் பெண்ணும் ஒன்றாக படிப்பதால்  என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வதால் என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும் நட்பாக இருந்தால் என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும் ஒன்றாக வெளியில் சென்று வந்தால் என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும்  தொட்டுக்கொண்டு பேசுவதால் என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும்  உரசிக்கொண்டு பேசுவதால் என்ன தவறு என்றனர்

பிறகு  ஆணும் பெண்ணும் காதலித்தால் என்ன தவறு என்கின்றனர்

பிறகு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்   உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்(என்கின்றனர்)

பிறகு ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் உடல் உறவு கொள்வதால் என்ன  தவறு  என்பர் (என்கின்றனர்)

பிறகு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு பின் வேறு ஒருவருடன்  உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்

பிறகு ஆணும் பெண்ணும்  யார் யாருடன்   உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்

பிறகு ஆணும் பெண்ணும் எது எதனுடன் உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்

இப்படித்தான் போகப்போகிறது ஆண் பெண் நாகரீக கலாச்சாரம்.

திங்கள், 18 ஜூலை, 2011

ஆன்மீகத்திற்கு திருமணம் தடையா?

எனக்கு தெரிந்து சிறந்த ஆன்மீகவாதிகளாக கருதப்படும் யாரும் திருமண பந்தத்தில்  இருந்துகொண்டு ஆன்மீக முன்னேற்றம் அடைந்ததாக தெரியவில்லை.

இங்கே நான் ஆன்மீகம் என்பது அகத்தவம் அல்லது அகத்தாய்வு செய்து தான் யார் என்ற இரகசியத்தை உணர்ந்து யோகத்தின் மூலம்   இறையடி சேர்தலாகும்.

அதேபோல் திருமணம் புரியாமல் அகத்தவம் செய்தவர்கள் அனைவரும் இறையடி சேர்ந்தார்கள் என்றும் சொல்வதற்கில்லை.

புத்தர் திருமண வாழ்வை உதறி தள்ளியவர்.
ஏசுநாதர் திருமணம்  செய்து கொண்டு வாழ்ந்ததாக  தெரியவில்லை.
வள்ளலார், ராகவேந்திரர் இவர்கள் திருமண பந்தத்தில் நீடிக்கவில்லை.

இப்படி ஏராளமான உதாரணங்கள் சொல்லலாம்.
நான் இவர்கள் மட்டும் தான் உண்மையான ஆன்மீகவாதிகள்  என்று சொல்லவில்லை. இதை ஒரு உதாரணத்திற்காக மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.
இவர்கள் நமக்கு ஆன்மீக வாதிகளாக அறிமுகப்படுத்தப்படுள்ளனர் அல்லது சந்தைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சொல்லலாம். சந்தைப்படுத்தபடாத எண்ணற்ற ஆன்மீகவாதிகள் இவர்களை விட சிறந்த சிந்தனைகளை வாழ்வியலை கொண்டவர்களாக கூட இருந்திருக்கலாம்.

சில சித்தர்கள் சிற்றின்பத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களும் நிலையான திருமண வாழ்வை கொண்டிருக்கவில்லை.

சில ரிஷிகள் திருமண பந்தத்தில் இருந்துள்ளனர் என்று சில செய்திகள் கிடைத்தாலும் அவர்களுக்குள்ளான உறவுமுறை எப்படி  இருந்தது, அவர்கள் யோகத்தின் மூலம் இறையடி சேர்ந்தார்களா என்று (எனக்கு) தெரியவில்லை.

திருமணம் ஏன்  அகத்தவம் புரிய  தடையாக உள்ளது?

அகத்தவம் எனக்கு தெரிந்து கடுமையான (ஒரு விதத்தில் இனிமையான) பாதை. எப்படி ஒருவன் காதலிக்கும் பொழுது அந்த பெண்ணின் நினைப்பாகவே பித்துப் பிடித்தவன் போல் இருக்கின்றானோ அதைப்போலவே அகத்தவம் புரிபவனும் இறை சிந்தனை  மட்டுமே கொண்டவனாக இருப்பான். 

ஒரு பெண், குடும்பம்  தரும் இன்பத்தை விட இறைசிந்தனை அல்லது அந்த பயணம் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதால் அவன் மற்றவற்றை துச்சமாக மதிக்க ஆரம்பித்து விடுவான்.

திருமணத்தின்  மூலம் பற்று ஏற்ப்படுகிறது. மனைவி மீது பற்று, குழந்தைகள் மீது பற்று பிறகு பேரகுழந்தைகள் மீது பற்று.

மனைவி  என்று வந்தவுடனே சில கடமைகளும் கூடவே வந்துவிடுகிறது. அவளுக்கென்று நேரம் ஒதுக்க வேண்டும். பிறகு அவளுக்கென்று  சம்பாதிக்க வேண்டும். இந்த இரண்டு கடமைகள் செய்வதற்கே ஒருவனின் நேரம் போதுமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். பிறகு எங்கே  அகத்தவம் புரிவது?

அந்த பெண்ணை விட்டு விட்டு இவன் மட்டும் அகத்தவம் புரிகிறேன் என்று எந்நேரமும் கண்ணை மூடிக்கொண்டு இருந்தால் அந்த பெண்ணின் நிலை?

சரி மனைவியையும் அகத்தாய்வு  புரிய வைத்தால் என்ன என்று தோன்றலாம். ஆனால் அப்படிப்பட்ட மனைவி கிடைப்பதற்கு  வரம் வாங்கி வந்திருந்தாள் மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது.

அப்படியும் ஒருவனுக்கு அகத்தவம் செய்வதற்கு ஏற்றார் போல மனைவி அமைந்து விட்டால் அவன் கொடுத்து வைத்தவன் தான். இருப்பினும் அவர்கள் பிள்ளை பெற்றுக்கொண்டு அகத்தாய்வை  தொடர முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.

 சரி பிள்ளையே பெறாமல் இருந்தால் என்ன என்று தோன்றினாலும் அவர்கள் சமுதாயத்தின் ஏளனமான பேச்சுக்கும், பார்வைக்கும் ஆளாக நேரிடும். இதனாலோ என்னவோ அன்று திருமணம் செய்து கொண்ட ரிஷிகள் கூட காட்டிலே தான் வாழ்ந்துள்ளனர். அவர்கள் சமூகத்தோடு வாழ்ந்ததாக தெரியவில்லை.

இதை அனைத்தும் சமாளிக்கும் திறன் கொண்ட தம்பதிகளால் மட்டுமே அகத்தவத்தின்  மூலம் இறையடி சேர முடியும்.

ஆக ஆன்மீக பயணத்திற்கு திருமண வாழ்வு தடையா என்றால் பொதுவாக பார்க்கும் பொழுது தடை என்று தான் தோன்றுகிறது. அரிதினும் அரிதாக சில தம்பதிகளுக்கு மட்டும் திருமணம் தடையாகாமல் வரமாகலாம்.
தடையை வரமாக்கி அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன்.

புதன், 6 ஜூலை, 2011

மதுவிற்கும் தியானத்திற்கும் சம்பந்தம் உண்டா?

மது அருந்தியவர்கள் எங்கோ பறப்பதுபோல் உள்ளது என்று கூறுவதை  கேள்வி பட்டிருப்பீர்கள். அதுபோல் தியானம் செய்பவர்களும் உணர்ந்திருப்பார்கள். மதுவினால் அடையும் இந்த அளவான உற்சாகத்தை தான் ராஜ போதை என்பர்.

உண்மையில் தியானம் மூலம் அடையும் உற்சாக அமைதி  நிலையை ஓரளவிற்கு மதுவினாலும் அடையலாம்.  மதுவிற்கும் தியானத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால் அளவோடு இருக்கும் வரை தான் மது ஓரளவிற்கு உற்சாக அமைதி நிலையை தரும் அளவுக்கு மிஞ்சினால் அது தன்னிலை மறக்க செய்து கெடுத்து விடும்.

மேலும் மதுவானது உடலில் தீங்கையே வரவழைக்கும் ஆனால் தியானமோ நன்மையை வாரி வழங்கும்.

மது நரம்பு தளர்ச்சியை  வரவைக்கும், ஆண்மை குறைவை ஏற்படுத்தும், மூளையை  மழுங்கச்செய்யும் ஆனால் தியானமோ உடலையும் உள்ளத்தையும் மகிழ்ச்சியாக  வைத்திருக்க உதவும். அறிவை விசாலமாக்கும்.  ஆண்மையை அதிகப்படுத்தும் தியானங்களும் உண்டு.

ஆதலால் உடலை சீரழிக்கும் மதுவை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டு(அல்லது அளவோடு வைத்துக்கொண்டு) தியானம் செய்யுங்கள். தியானத்திற்கு நீங்கள் அதிகம் செலவு செய்ய தேவை இல்லை, சைடிஷ் தேவை இல்லை. நினைத்த நேரத்திற்க்கெல்லாம் இன்பம் அனுபவிக்கலாம்.
 ஆதலால் தியானம் செய்வீர் திறம்பட வாழ்வீர். வாழ்க வளமுடன் நலமுடன்.

திங்கள், 4 ஜூலை, 2011

பிரபஞ்சம் உருவானது எப்படி? கடவுளாளா? பகுதி 2

'எங்கு  தொடங்கி  எங்கு முடிக்க' என்று சிற்றின்பத்தை பற்றி ஒரு பாடல் உண்டு. அதுபோல் இந்த கட்டுரையை எங்க ஆரம்பித்து எப்படி முடிப்பது என்றே எனக்கு தெரியவில்லை.
சென்ற பதிவில் ஆன்மிகம் என்ற அகத்தாய்வு  எனபது நேற்றைய அறிவியல், இன்றைய அறிவியலுக்கும் நேற்றைய அறிவியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, அறிவியல்  புறத்தை  பார்க்கின்றது , ஆன்மிகம்  என்கிற அகத்தாய்வு அகத்தை பார்க்கின்றது  என்று பார்த்தோம். சென்ற பதிவிற்கான  வழிகாட்டி.

அன்றைய அறிவியலான அகத்தாய்வில் கண்டறியப்பட்ட பிரபஞ்ச ரகசியங்களில் சில வேதங்களிலும், புராணங்களிலும் ,யோக நூல்களிலும் மற்றும் வேறு   சில நூல்களிலும் ஆங்காங்கே உள்ளதை காண முடிகின்றது.

இன்றைய அறிவியல் வளர வளர சிலர் இப்படிப்பட்ட பண்டைய நூல்களுடன் அறிவியலை சம்பந்த்தப்படுத்தி அறிவியல் வேறு விதமாக உள்ளது இந்த நூல்களில்  சொல்வது வேறு விதமாக உள்ளது என்று கேள்வி    எழுப்புகின்றனர்.

உண்மையில்  இந்த அறிவியலாளர்கள்  அபிரகாமிய மதங்களுடன்  (அதாவது  இஸ்லாம்  மற்றும் கிறிஸ்த்துவம் ) மட்டுமே    அறிவியல்  ஆய்வுகளை  ஒப்பிட்டு பார்த்து  இந்த முடிவுக்கு  வருகின்றனர். (ஆபிரகாமிய மதங்கள் தவறு என்ற கூறவில்லை அவைகளும் இந்தியாவிலிருந்தே சென்றிருக்கும் என்பதற்கான சாத்திய கூறுகள் நிறைய உள்ளன. என்ன அங்கே அகத்தாய்வு உண்மைகள் மிக சொற்ப அளவே உள்ளதாக நினைக்கின்றேன்.இந்திய புராணங்களிலும் அறிவியலுக்கு முரணான செய்திகள் சில உள்ளது என்பதை  மறுக்க இயலாது.)

ஆனால்  அவர்களுக்கு  இந்திய நூல்களில் உள்ள பிரபஞ்ச ரகசியத்தை  பற்றி தெரியவில்லை. வெகு சில அறிவியலாளர்களே பண்டைய இந்திய  நூல்களை பற்றி "கொஞ்சம்" ஆய்வு செய்து அறிவியல் உண்மைகளோடு ஒப்பிட்டு பார்த்துள்ளனர். ஒப்பிட்டு பார்த்த அவர்கள் திகைத்து போய்விட்டனர். ஏன் எனில் இன்றைய அறிவியல் சிந்தித்து கூட பார்க்க முடியாத அளவில் இந்திய நூல்களில்  கால அளவுகள் உள்ளது.

பிரபஞ்சம் உருவாகி 13.7 பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன என்பது இன்றைய அறிவியலாளர்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று . இந்திய புராணத்தில் இந்த 13.7 பில்லியன் ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட    பிரம்மனின்   வெறும்  ஒன்றரை   நாட்கள்  தான். 

பிரம்மனின் ஒரு பகல்  பொழுது  4.32  பில்லியன் ஆண்டுகளுக்கு   சமம் (இதை  ஒரு கல்பம்  என்று சொல்வார்கள் ). இரவு  பொழுது மற்றும்  ஒரு 4.32  பில்லியன் ஆண்டுகள். ஆக   பிரம்மனின் ஒரு நாள்  என்பது 8.64 பில்லியன் ஆண்டுகளுக்கு   சமம். (இங்கே பிரம்மன்  உண்மையா பொய்யா என்ற சர்ச்சை தேவை இல்லை).

இதேபோல்  இந்தியர்கள்  311,040 பில்லியன் ஆண்டுகள்  அதாவது 311 ட்ரில்லியன்   ஆண்டுள்  பற்றி பேசியுள்ளதாக  அறிவியல் அறிஞர்கள்  ஒப்புக்கொண்டுள்ளனர். அது  மட்டுமல்ல    1/1,000,0000 நொடிகள்     பற்றியும்  பேசியுள்ளதாக கூறுகின்றனர்.

இவை  அனைத்தையும்  அவர்கள் அந்த  காலத்தில்  அகத்தாய்வு செய்தே  கணக்கிட்டுள்ளதாக   தெரிகிறது.

 புறத்தாய்வு செய்திருக்க  வாய்ப்புகள்  உள்ளது என்று சொல்லும்  அளவுக்கு  எந்த  ஒரு குறிப்புகளும்  இதுவரை  கிடைக்க  வில்லை.

தொடரும்................


Related Posts Plugin for WordPress, Blogger...